Friday, December 22, 2023

நத்தாரின் நாயகர்கள்- செக்கரியா மற்றும் அன்னை மரியா. ஒரு திறனாய்வூ

ம.பிரான்சிஸ்க்-ஆசிரியர் தொடர்பாடலும் ஊடகக்கற்கை மற்றும் கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

உலகினைப் படைத்த கடவூள் நமக்காக நம்மைத்தேடிப் காசினிக்கு வந்தார். பைபிளில் உள்ள ஒரு புத்தகத்தின் ஆசிரியர் புனித லூக்கா தனது நற்செய்தியை இந்த இரண்டு நாயகர்களின் கதையூடன் ஆரம்பித்து வைக்கின்றார்: குரு செக்கரியா மற்றும் இயேசுவின் தாயாக வரவிருக்கும் அன்னை மரியா:- 'யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில்இ அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார்". 'ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவூள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா". (லூக்கா 1:5,26-27).

நத்தார் கதையில், இயேசுவூக்கு வழியை ஆயத்தம் செய்யவரும் திருமுழுக்கு யோவானின் தந்தையாக முக்கியப்பங்கு வகித்தார் செக்கரியா. கடவூளின் தாயாக முக்கிய பங்கு வகிக்கின்றார் மரியா. இறைவனின் வார்த்தைகள் குறித்து சந்தேகம் அடைந்த செக்கரியா, மற்றும், இறைவார்த் தையை முழுமையாக நம்பிய அன்னை மரியா என இருவருக்கும் இடையேயான வேறுபாடுகளை நோக்குவோம்:- செக்கரியா வயதான ஒரு குரு. மரியா ஓர் இளம் கன்னிப்பெண். இருவரும் சமூகத்தில் நேர்மையானவர்கள், உயர்ந்தவர்கள். குறிப்பாக இதில் செக்கரியா அன்று முதன்மை யானவர். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் பரிசுத்த தலத்தில் கடவூளுக்கு ஊழியம் செய்யூம் ஓர் உன்னத குரு. மேலும் ஒரு சிலர் மட்டுமே காணும் பரிசுத்த நிகழ்வூகளைப் பார்த்த பாக்கியத்தை அடைந்த ஒரு குரு.

இந்த வேளையில் மெசியா வருவார் என ஆவலுடன் இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காத்திருத்த தருணத்தில் வானதுhதர் கபிரியேல் இந்த இரண்டு நாயகர்களிடம் கடவூளின் செய்தியூடன் வருகிறார். இருவரும் மிகவூம் அச்சமும் கலக்கமும் அடைந்தனர். 'அஞ்சாதீர்" என்று கடவூளின் தூதர் அவர்களைச் சமாதானப்படுத்துகிறார்.

செக்கரியாவிடம், வானதூதர்கபிரியேல்,'செக்கரியா, அஞ்சாதீர், உமதுமன்றாட்டுக் கேட்கப்பட்டது. உம் வயதான மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர். நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர். அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்;. அவர், இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவூளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.

மரியாவிடம், வானதூதர் கபிரியேல், கடவூளின் அருளைக் கண்டடைந்துள்ளீர் இதோ, கருவூற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவூளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவூள் அவருக்கு அளிப்பார்.

இந்த இரண்டு நாயகர்களும் ஒரு முக்கியமான செய்தியைப் பெறுகின்றன, ஆனால் அவர்களின் பதில்கள் மாறுபடுகின்றன்:- 

செக்கரியா வானதூதரிடம் கேள்வி எழுப்புகிறார்: 'இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியூம்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியூம் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார். என் மனைவி குழந்தையைப் பெற்றடுக்கும் வல்லமை அற்றவள்இ நாங்கள் குழந்தைகளைப் பெறமுடியாத அளவூக்கு வயதாகிவிட்டோம். செக்கரியாவின் நம்பிக்கையின்மை வெளிப்படுவதை நாம் கூர்ந்து கவனிக்கலாம்.

மரியாவின் மறுமொழியை நோக்குவோம்: அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார். இப்பதில் மேலோட்டமாகத் தெரிகிறது: 'நான் கன்னியாக இருப்பதால் இது எப்படி இருக்கும்?" இருப்பினும், மரியாவின் வார்த்தைகளைக் கருத்தில் கொள்ளும்போது, அவை நம்பிக்கையின்மையை பிரதிபலிக்கவில்லை என்பதை நன்றாகப்; புரிந்து கொள்ளமுடியூம். அவர் விளக்கம் தேடுகிறார். மனித வழியால் அல்ல, பரிசுத்த ஆவியினால் இவைநிகழும் என்று வானதூதர் விளக்குகிறார். மேலும் உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவூற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம் என விளக்குகின்றார்

இதைக் கேட்டதும் மரியாவன் பதில் ஆச்சரியமாக-அற்புதமாக இருக்கிறது. 'நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். மரியா தன்னை கடவூளுடைய சீடராகப் பார்க்கிறாள். இந்த வழியில் கடவூள் தன்னை பணிசெய்ய அழைக்கின்றார் என உணர்ந்து உடநடியாக அவர் தயாராகுகின்றார். மரியா 12 வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை, உளவயது போதாத ஒரு சிறுமி. அவள் எப்படி தனது வாழ்க்கையை மாற்றும் ஒரு முடிவை எடுக்க முடியூம்? என்பது ஒரு பெரும் கேள்வி. அவள் அதனுடைய எல்லா தாக்கங்களையூம் விளைவூகளையூம் புரிந்து கொள்ளமுடியாத வாழ்வின் பருவத்தில் உள்ளார். இதெல்லாம் எப்படி அறிவியல் பூர்வமாக இருக்கமுடியூம்? அவளின் கர்ப்பத்தினால், தன் சொந்த ஊரில் உருவாகும் அவதூறு, நிராகரிப்பு, அவமானம், அவள் குடும்பம் மற்றும் அவளுடைய வருங்கால கணவர் யோசேப்பு மீது எற்படுத்தும் தாக்கம் என்ன? இதெல்லாம் அவளால் அந்த வயதில் அறியமுடியாது. அவள் இந்த எல்லா காரணிகளையூம் கருத்தில் கொள்ளமுடியாதவள். எனவே அவளுடைய பதில் ஓர் எளிய மனிதராகிய வருடைய பதிலாக அமைகின்றது. நாம் மரியாவை ஓர் எளிய பெண்ணாகப் பார்ப்பதற்குப் பதிலாக, கடவூளை நம்பும் ஒரு இளம் கன்னிப் பெண்ணாக பார்க்கவேண்டும் என்பது அவரது பதில் எமக்குப் புகட்டும் பாடமாகும். 

  அதன்பின்பு தன் மகனின் பிறப்புக்காக தன்னை தயாரிக்கும் விதத்தில் தன் வீட்டிலேயே தங்க வேண்டிய அன்னை மரியாஇ தன் வயது முதிர்ந்த உறவினருக்கு உதவிச் செய்ய சென்ற செயல், தன் கருவில் வளரும் இறைமகனின் சீடராக மாறிவிட்டார் என்பதை காண்பிக்கின்றது. இறையன்பின் கனியாகப் பிறரன்பு இருக்க வேண்டும். அங்கு 'நான்" என்பதல்ல, மாறாக, தேவையிலிருப்போரே மையமாக இருக்கவேண்டும் என்பதைக் கன்னி மரியா காட்டிநிற்கின்றார். இங்கு பனிப் பூத்த மங்குலிலே மடி தாங்கிய மனுமகனைக் கொண்டு தங்கிட, இடமின்றித் தவித்த அன்னையை நினைத்துப் பார்க்கவேண்டும். நாகரிகங்கள் தோன்றிய காலத்திலும், இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து, இதோ, இறைவனின் அடிமை! என்று தாழ்பணிந்த அன்னையை நாம் முன்மாதிரியாக எண்ணிப் பார்த்தாலேபோதும் பெண்கள் தேடும் விடியலின் முன்னுரை நம் தாய் மரி என்று. சினிமா நடிகையின் பின்னே நசுங்கிச் சின்னாபின்னமாவதை விட்டு விட்டு அன்னை மரியின் காலடி நடந்தாலே நம் இல்லத்தில் இணையில்லாக் கிறிஸ்து பிறப்பினை தினம் தினம் கொண்டாடலாம் என்பது கத்தோலிக்கர்க ளுக்குப் புரியூம்.

செக்கரியா மற்றும் மரியா இருவரும் கிறிஸ்துமஸ் கதையின் மையமாக இருந்தாலும்இ கடவூள் தனது தெய்வீகத் திட்டத்தில் வெவ்வேறு நபர்கள் மூலம் இலகுவில் புரியமுடியாத மர்மமான வழிகளில் செயற்படுவார் என்பது எமக்கு எடுத்துக்காட்டுகிறது. எனவே இந்த நத்தார் காலத்தில் செக்கரியாவூம் அன்னை மரியாவூம் சவாலான மாறுபட்ட விடயங்களை நமக்கு வழங்குகிறார்கள். இந்த இரண்டு நாயகர்களுள் யாருடன் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளப் போகின்றௌம். நாம் யாராக இருக்க விரும்புகின்றௌம்?

Tuesday, October 26, 2021

எமக்குள் வளரும் சிறிய 'லூசிபரை அடியோடு அழிப்போம்.

 ஆக்கம் ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

'லூசிபர்" என்ற பெயரை கத்தோலிக்கர்கள்-கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தாலும் 'லூசிபர்"என்ற பெயர் நம்முடைய கத்தோலிக்க தமிழ் பைபிளில் காணப்படவில்லை. அதிதூதரான புனித மிக்கேலே விண்ணுலகில் வான்தூதர்களின் தலைவர்; ஆவார். லூசிபர் என்னும் அதிதூதர், வானமும் பூமியும் படைக்கப்படும் முன்னர் வான்தூதர்களின் விடிவெள்ளி என அழைக்கப்பட்டவர். தாவீதுக்கு கடவுள் ஒரு வாக்குக் கொடத்தார். 'நீ உன் மூதாதையரோடு துயில் கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்…. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். 'என்முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றும் நிலைத்திருக்கும்" 2சாமுவேல்7:12,16. 'அந்த அரசர்களின் காலத்தில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்;@ அது என்றுமே அழியாது@ அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்;@ அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும்…. நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்காலத்தில் நிகழப்போவதை மாபெரும் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவும் உண்மையானது அதன் உட்பொருள் நிறைவேறுவதும் உறுதி.(தானி2:44-45) வாக்குப்பிறளாத வல்லமையுள்ள கடவுள் உலகிற்கு மீட்பர் ஒருவரை அனுப்பத் திருவுளம் கொண்டார். உலஇரட்சகர்-அரசர் தேவைப்பட்டார். அந்த மீட்பரை-அரசரை தாம் தாவீதுக்கு முன்னுரைத்ததன்படி தாவீதின் விழித்தேன்றலில் தெரிவுசெய்தார். என்றும் நிலைத்திருக்கும் கடவுளரசை கட்டியெழுப்ப கடவுள் தனது மகன் இயேசுவை தாவீதின் வழித்தோன்றலில் வந்த அன்னை மரிய-யோசேப்பின் ஊடாக தெரிந்துகொண்டு தாவீதின் அரியணையில் -கடவுளின் அரியணையில் அமர்த்த திருவுளம் கொண்டார். ஆனால் லூசிபர், அதிதூதராகத் தான் இருக்கும்போது மனித உடல் எடுக்கும் மீட்பரை ஆராதிக்கமாட்டேன் என்று இறுமாப்புக் கொண்டான். அகங்காரம் கொண்ட அவர் ஆணவத்தால் இறைவனை எதிர்த்து நின்றான் என்று நாம் அறியமுடிகின்றது. 

அச்சந்தர்ப்பத்தில் புனித மிக்கேல் அதிதூதர் லூசிபருக்கு நல்வழிகளைக் காட்டினார். லூசிபர் அவரின் நல்லுரைகளை உதறித்தள்ளினான்;. லூசிபர், 'விண்ணுலகில் இறைவனுக்குப் பணிவதை விட, நரகத்தில் ஆட்சிபுரிவதே மேல்" என்று தனக்குள் கூறிக்கொண்டான் என மரபுவழிகளில் இருந்து அறியமுடிகின்றது. புனித மிக்கேல் அதிதூதர் இறைவனுக்கு நிகரானவன் யார்? என வீரமுழக்கமிட்டு போராடி லூசிபரையும் அவன் சகாக்களையும் எரிநரகில் வீழ்த்தினார்;. இதனால்தான் தூய மிக்கேல் அதிதூதரின் சுரூபத்தில், அவர் பாதத்தின்கீழ் பசாசு மிதிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பசாசுக்கு அதிதூதர் மிக்கேல் என்றாலே நடுக்கம். அவரிடம் போரிட்டு வெற்றி கொள்ள அதனால் இயலாது. அதிதூதர் மிக்கேல் வல்லமை மிக்கவர். ஆயினும் தாழ்ச்சியுடையவர். 

இந்நிகழ்வை பைபிளின் கீழ்வரும் இறைவார்த்தைப்பகுதிகள் எமக்கு தெளிவாக விளக்குகின்றன: 'பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்;;@ அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது. அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்."(திவெ:12:7-9) 'வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே! ஷநான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்; இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்;@ வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன். மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்| என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே! ஆனால் நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்;@ படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே!"என உவமையாக பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.(எசா14:12-15). இந்த உவமையைப் பின்வரும் பைபிள் பகுதியிலும் காணமுடியும். (எசேக்.28:12-19).

ஆதாமைப் போன்று லூசிபருக்கும் தெரிவு ஒன்று இருந்தது: கடவுளைக் கடவுளாக லூசிபர் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அவர் தனக்குத்தானே கடவுளாக இருப்பதை முடிவு செய்யலாம். அவர் கடவுளை மீறி தன்னை 'மிக உயர்ந்தவர்" என்று அறிவித்ததை மீண்டும் மீண்டும் அவரது 'ஆணவம்- (ஐ றுடைடள)" காட்டுகிறது. இதனால் ஏற்பட்ட லூசிபரின் வீழ்ச்சியை பைபிளில் எசேக்கியலில் புத்தகத்தில் உள்ள ஒரு பகுதி கோடிட்டுக் காட்டுகின்றது: (எசேக் 28:12-19).

வீழ்த்தப்பட்ட சாத்தானுக்கு எபிரேய பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள பெயர் 'ஹெலேல்"ஆகும். ஆங்கில பைபிளில் கே.ஜே.வி(முதுஏ) மொழிபெயர்ப்பில் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்தான் 'லூசிபர்." கே.ஜே.வி பைபிளில் ஏசாயா புத்தகத்தில்14:12-13 என்னும் இறைவார்தையை படிக்கும்போது இதனை நோக்கலாம். (ஐளயiயா 14:12-13 முiபெ துயஅநள ஏநசளழைn- 12 ர்ழற யசவ வாழர கயடடநn கசழஅ hநயஎநnஇ ழு டுரஉகைநசஇ ளழn ழக வாந அழசniபெ! hழற யசவ வாழர உரவ னழறn வழ வாந பசழரனெஇ றாiஉh னனைளவ றநயமநn வாந யெவழைளெ!). கத்தோலிக்க பைபிளில் லூசிபர் என்னும் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லையாயினும்;, 'வைகறைப் புதல்வனே, விடிவெள்ளியே, என எசாயா நூலில் 14:12-13 பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இலத்தீன் மொழியின் பொருள் விளக்கத்தின்படி லூசிபர் என்பதாகும்.“ர்ழற லழர யசந கயடடநn கசழஅ hநயஎநnஇ  ழு னுயல ளுவயசஇ ளழn ழக னுயறn!

'லூசிபர்" மற்றும் 'அசுமதேயு" யார் இவர்கள் 

விழுந்து போன வானதூதர்களை: பிசாசின் தூதர்கள், அசுத்த ஆவிகள், தீய ஆவிகள், அசுத்த அரூபிகள், வஞ்சிக்கிற ஆவிகள், ஏமாற்றும் பேய்கள், சாத்தான், பொல்லாத ஆவிகள், பிசாசு, ஆதிமேன்மையை காத்துக்கொள்ளாத தூதர்கள், பெயல்செபூல், அலகை, அசுமதேயு, இலேகியோன் (6000பேய்களின் பெயர்) பெய்களின் தந்தை, என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள்.(மத் 4:24, மத்10:1, மத்12:25, மத்25:41, மாற்3:22, மாற்5:15, திவெ12:9, தோபி:3:17, 1தீமோ4:1, லூக்11:26, எசா37:19.) விழுந்துபோன வானதூதர்களில் ஒரு பங்கு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளது, மற்றவர்கள் அப்படியே விடப்பட்டுள்ளனர்.(2பேது2:4, சங் 78:49, எபே6:12, திவெ12:7-9). 

திருவெளிப்பாடு நூலில் புனித மிக்கேல் அலகையோடு போரிட்டு வெல்வதைக் குறித்து நாம் மேலே வாசிக்கின்றோம். அந்தப் போரில் அரக்கப்பாம்பும் என வர்ணிக்கப்பட்டவன்தான் இந்த லூசிபர். அவனுக்கு விண்ணகத்தில் இடம் இல்லாது போனது. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது. பாவம் செய்த வானதூதர்களைக் கடவுள் தண்டிக்காமல் விடவில்லை. விலங்கிட்டுக் காரிருள் நகரில் தள்ளித் தீர்ப்புக்காக அவர்களை அவர் அடைத்து வைத்திருக்கிறார்.(2பேது2:4)

புனித மிக்கேல் குறித்து பைபிளில் இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும் யூதா புத்தகத்திலும், திருவெளிப்பாடு நூலிலும் வாசிக்கின்றோம். தானியேல் புத்தகத்தில் 'மிக்கேல் இஸ்ரயேல் மக்களின் தலைவராக இருந்து, எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுகிறார்."(தானி10:13,12:1),தூய யூதா புத்த கத்தில்,'மிக்கேல் சாத்தானோடு மோசேயின் இறந்த உடலைக்குறித்து வாதிடுவதையும், அப்போதும் சாத்தான் மோசேயின் உடலை புதைக்கவேண்டும்" என்று சொல்ல, மிக்கேல் அதனைக் கடிந்துகொள்வதையும் குறித்து வாசிக்கின்றோம்(யூதா1:8-9). 

கடவுள் பிரசன்னத்திற்குள்ளும் இவன் நுழைந்துவிடுவான். ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான். ஆண்டவர் சாத்தானிடம்,'எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் 'உலகைச் சுற்றி உலவி வருகிறேன்" என்றான்…. ஆண்டவர் சாத்தானிடம், 'இதோ! அவனுக்குரியவை யெல்லாம் உன் கையிலே@ அவன்மீது மட்டும் கை வைக்காதே" என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான். (யோபு 1:6-12) அவனது உள்ளார்ந்த நோக்கம் கடவுளின் ஊழியன் யோபுவை அழிப்பதே ஆகும். யோபு மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை" என்று கடவுள் கூறும்படி நடப்பவர் ஆவர். எனவே நாம் எம்மாத்திரம். நாம் கடவுளை விட்டு விலகிவிட்டோம் என்றால் நிச்சயமாக எங்களுக்குள் வந்து எங்களை அழித்தேவிடுவான். 

இந்த விழுந்த லூசிபர் பற்றி இயேசு பைபிளில் லூக்கா10:1,17-18 குறிப்பிடுவதை இங்கு நோக்குவோம்: இயேசு தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்பாக 72 சீடர்களை இருவர் இருவராக அனுப்பினார். அந்த 72 சீடர்களும் மகிழ்வுடன் திரும்பி வந்து கூறிய வார்த்தைகள்: 'ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால், பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன." 

பேய்கள்கூட தங்களுக்கு அடிபணிகின்றதைப்பார்த்து அந்த 72 சீடர்களும் மிகவும் அதிர்ச்சியடைந்தனர், ஏனெனில் அவர்கள் அதுவரை, யூத மூலங்களை மட்டுமே கண்டிருந்தனர், யூதர்கள் பேயோட்டுதலுக்கு நீண்ட ஒரு செயல்முறையைப் பயன்படுத்தினர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது வெற்றிகரமாக அமைய வில்லை. இன்னும் பல சந்தர்ப்பங்களில் அந்த தீயஆவியை ஓட்டுபவர்களை- அந்த தீய ஆவிகள் தாக்கி அனைவரையும் திணறடித்து, காயப்படிடுத்தி, ஆடையற்றவர்களாகத் துரத்திவிடுகின்றது. இதனை பைபிளில் திப19:14-16 பகுதியில் காணமுடியும். 

ஆனால் இந்த 72 பேரும் சாதாரண மீனவர்கள், சாதாரண மக்கள், இவர்கள் கையில் எதுவும் இல்லை: எந்த ஆயுதங்களும் இல்லை, சிறப்புப் புத்தகங்கள் இல்லை, சிறப்பு மேற்கோள்கள் இல்லை, வாளோ? எதுவும் அவர்களுடைய கையில் இல்லை. ஆனால் அவர்கள் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தினார்கள், உடனடியாகத் தீய ஆவியிலிருந்து விடுவிப்பு நடைபெற்றது. அந்த பேய்கள் கீழ்ப்படிந்தன. இவற்றைப் பார்த்து, அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். இங்கு கூர்ந்துகவனிக்க வேண்டிய உண்மை, இயேசு அந்த 72பேரையும் அனுப்பியபோது, தீயஆவிகளை ஓட்டுவதற்கு எந்த அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. தீயஆவிகளை ஓட்டுவதற்கான அதிகாரம் 12 அப்போஸ்தலர்களுக்கு வழங்கப்பட்டதாகத்தான் பைபிள் கூறுகின்றது.(மத்10:1-4). 

ஆயினும் இந்த 72பேரும் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தும்போது பேய்கள் அவர்களுக்கு அடிபணிந்தன. அடிபணிவது-கட்டுப்படுவது என்பது வெளியேற்றுவது என்பதிலிருந்து அடிப்படையில் வேறுபடு கின்றது. வெளியேற்றுவது பேய்களை நீக்குவது என்று பொருள். ஆனால் அடிபணிவது என்பது ஒருவருக்கு கீழ்ப்படிவது ஆகும். எனவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் சாத்தானைக் கட்டுப்படுத்தும் திறன், அதிகாரம் பெற்றிருக்கின்றோம். இயேசு இந்த அதிகாரத்தை எமக்குத் தந்திருக்கின்றார். அதாவது நாங்கள் பேயைப்  பார்த்து இயேசுவின் பெயரால் நகரும் என்று சொன்னால், அது நகரும்;, என்னைத் தொடாதே என்றால் தீய ஆவிகள் தொடாது. ஏனெனில் பேய்கள் வானுலகிலிருந்து விழுத்தப்பட்டவர்கள் தீய ஆவிகள் அதிதாரம் அற்றவர்கள். இயேசு கூறுகின்றார்: 'வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்பேல விழக்கண்டேன்." ~நான் பார்த்தேன். நான் அங்கு இருந்தேன். நான் அதை பார்த்துக்கொண்டிருந்தேன்.| எனவே இங்கு இயேசு லூசிபரை சாத்தன் என்று கூறுகின்றார் என அறிய முடிகின்றது. இயேசு லூசிபரின் வீழ்ச்சியைப் பற்றி இங்கு குறிப்பிடுகின்றார். (லூக்.10:17-18) 

எனவே சாத்தனுக்கு மனிதர்கள்மீது அதிகாரம் இல்லை. மாறாக சாத்தான்மீது எங்களுக்குத்தான் அதிகாரம் உள்ளது. இந்த சாத்தான் எங்களின் அதிகாரத்திக்கு உட்பட்டவன். ஏனென்றால் சாத்தானுக்கு விண்ணகத்தில் இடம் இல்லை. சாத்தான் வானத்திலிருந்து விழுத்தப்பட்டுவிட்டான். நாங்கள் விண்ணுலகின் ஒரு பகுதியாக இருப்பதால் எதுவும் எங்களை காயப்படுத்தாது. இந்த சாத்தான் எங்களின் அதிகாரத்திக்கு உட்பட்டவன். 'பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கின்றேன்." என இயேசு தெளிவாகக் கூறிவிட்டார். (லூக்.10:19)  

கடவுள் வானதூதர்களுக்கும் ஆன்மீக உடலைக் கொடுத்துள்ளார். அவர்கள் தெய்வப் புதல்வர்கள். ஒவ்வொரு வானதூதர்களுக்கும் புத்தி இருக்கிறது. ஒவ்வொரு வானதூதர்களுக்கும் முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது. ஒவ்வொரு வானதூதருக்கும் விருப்பத் தெரிவிருக்கின்றது. தெரிவுச் சுதந்திரத்தைக் கடவுள் கொடுத்துள்ளார். தெரிவுச் சுதந்திரத்தின் பிரகாரம் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது கடவுளுக்குக் கீழ்ப்படியக்கூடாது என முழுமையாகவும் தேர்வு செய்யலாம். அவர்கள் கடவுளின் படைப்புக்கள். ஆயினும் வானதூதர்களால் முழு யதார்த்தத்தையும் உண்மையையும் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியாது. அவர்கள் முழுமையான- Pநசகநஉவ படைப்புக்கள் அல்ல. ஏனென்றால் அவர்கள் கடவுளால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள். அவர்களிடம் இருக்கும் இந்த சிறிய குறைபாடுதான், அவர்கள் சாத்தானாக வானுலகிலிருந்து கீழே விழுவதற்கு ஒரு காரணமாயிற்று.

வீழ்த்தப்பட்ட லூசிபர், சாத்தான் மற்றும் தீயசக்திகள் அனைத்தையும் ஏன் நாம் புரிந்து கொள்ள வேண்டும்? என்பது மிக முக்கிய விடைதேடிவேண்டிய வினாவாகும். முதலில் நாம் சாத்தானை அறியாதிருந்தால்- அவர்களின் தந்திரோபாயங்கள், குணாதிசயங்கள், இயல்புகள் நமக்குத் தெரியாவிட்டால்- நாம் அவர்களைப்பார்த்து பயப்படவேண்டும். சாத்தானின் வஞ்சகத் தந்திரோபாயங்களை நாம் அறிந்து கொண்ட பின்புதான் அவனை வெல்லமுடியும். அப்போதுதான் நாம் அவரைக் கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் நாம் அவரை பார்த்துப் பயப்படுவோம். இதை பைபிளில் 2கொரி2:11மிக தெளிவாக அறியமுடியும்: 'இவ்வாறு சாத்தான் நம்மை வஞ்சிக்க இடம் கொடுக்க மாட்டோம். அவனது சதித்திட்டம் நமக்குத் தெரியாதது அல்ல." புனித பவுல் கூறுகிறார், நாம் சாத்தானால் வெல்லப்படக்கூடாது. நாம் சாத்தானை வெல்லவேண்டும். நாம் பிசாசின் சதித்திட்டங்கள், தந்திரங்களை அறிந்தவுடன் நாம் சாத்தானால் வஞ்சிக்கப்படமாட்டோம், வெல்லப்படமாட்டோம். சாத்தான் எம்முடன் விளையாட முடியாது. சாத்தான் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் சாத்தான் பற்றி நாம் நன்கு அறிவோம். 

சாத்தான் எப்படிப்பட்டவர், எங்கு மறைந்திருக்கின்றார், எங்கு மறைகின்றார்;, எப்படி வருகிறார், எப்போது வருகிறார், எங்கே வருகிறார், அல்லது எத்தனை முறை வருகிறார், அடிக்கடி வருகின்றாரா? என்று நாங்கள் கருத்தாய் ஆய்ந்து நாங்கள் தெரிந்துகொண்டால் எங்களால் சாத்தனைக் கட்டுப்படுத்த முடியும். நாங்கள் சாத்தானால் கட்டுப்படுத்தப் படமாட்டோம். 

இங்கு பைபிளில் சீராக் புத்தகம்12:13-18கூறும் பகுதிகளை 'பாம்பாட்டியைப் பாம்பு கடித்துவிட்டால் யாரே அவருக்கு இரங்குவர்? அவ்வாறே, பாவிகளோடு சேர்ந்து பழகி, அவர்களுடைய பாவங்களிலும் ஈடுபாடு காட்டுவோர்மீது யாரே இரக்கம் காட்டுவர்? சிறிது நேரம் அவர்கள் உன்னுடன் உறவாடுவார்கள்;@நீ தடுமாற நேர்ந்தால் உன்னைத் தாங்கிக்கொள்ளமாட்டார்கள். பகைவர் உதட்டில் தேன் ஒழுகப்பேசுவர்;@ உள்ளத்திலோ உனக்குக் குழி பறிக்கத் திட்டமிடுவர்;. உனக்கு முன் கண்ணீர் சிந்துவர்;@ வாய்ப்புக் கிடைக்கும்போது அவர்களது கொலை வெறி அடங்காது. உனக்குத் துன்பம் நேர்ந்தால் அங்கே உனக்குமுன் அவர்களைக் காண்பாய்;@ உனக்கு உதவி செய்வதுபோல் உன் காலை இடறிவிடுவர்@ அவர்கள் தங்களது முகப்பொலிவை மாற்றிக்கொண்டு எள்ளி நகையாடும்படி தலையாட்டுவர்;@ கை கொட்டுவர்; புரளிகளைப் பரப்புவர்." என்னும் சாத்தானின் செயல்கள் என கருதப்படக்கூடிய பைபிளில் சீராக் புத்தகம்12:13-18கூறும் பகுதிகளை பற்றிய கருத்தைக் கருத்தாய் ஆய்ந்து செயற்படுவோம்.

  சாத்தானை எங்களுக்குத் தெரிந்தால், அவனது செயல்கள் எங்களுக்குத் தெரிந்தால், நாங்கள் அவனைப் பற்றி ஒருபோதும் பயப்படத்தேவையே இல்லை. பயப்படமாட்டோம். நாங்;கள் சாத்தானைக் கட்டுப்படுத்தி அவனைத் துரத்தமுடியும். அதனால்தான் பேயோட்டுவோர் ஒவ்வொரு முறையும் வெளியேற் றும்போது முதல் கேட்கும் விடயம் உம்; பெயர் என்ன? சாத்தான் தனது பெயரை வெளிப்படுத்தினால், நாங்கள் அவனை கண்டுபிடித்துவிட்டோம் என்று அர்த்தம். அவன் தனது பெயரை வெளிப்படுத்தினால், அவன் தனது அடையாளத்தை வெளிப்படுத்திவிட்டார் என்று அர்த்தம். நாம் அவனது அடையாளத்தை அறிந்த விட்டவுடன் அவன் சரணடைந்து விடுகிறான் என்று அர்த்தம், சாத்தான் தன்னை முழுமையாக ஒப்படைத்தார் எனப்பொருள். இதனை நாம் பைபிளில் மாற்கு புத்தகத்தில் 5:9-13 பகுதியில் காணமுடியும். அதனால்தான் சாத்தான் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமலிருக்க தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறது. ஆனால் ஒன்றுமே செய்ய முடியாத சங்கடமான  வேளைகளில் சாத்தான் வேறு வழியில்லாமல்; தனது அடையாளத்தை வெளிப்படுததுகின்றது. அவ்வாறு வெளிப்படுத்தியவுடன் சாத்தான் வெளியேறுகின்றான் என்று அர்த்தம். சாத்தான் தனது சத்தியை விட்டு, அந்த உடலை விட்டு வெளியேறுகிறார். 

அதனால்தான் சாத்தான்கூட இயேசுவுக்கு எதிராக அதே தந்திரத்தை பயன்படுத்துகிறான். கப்பர்நாகும் தொழுகைக் கூடத்தில் தீயஆவியான பேய்பிடத்த ஒருவர் இருந்தார். அங்கு இயேசு கற்பித்துவந்தபோது, அந்த மனிதனைப் பிடித்திருந்த தீய ஆவி இயேசுவுக்கு முன்னால் வந்து இயேசுவின் முன் மண்டியிட்டு, 'ஐயா! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேவை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர். நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்." நீ உன்னத கடவுளின் மகன், எனக்கு உன்னை தெரியும் என்று கத்தியது. இதன் பொருளை நாம் நோக்கினால்: சாத்தான் இயேசுவிடம் சொன்னான், நான் உன்னை அறிவேன், எனவே நீ எனக்கு அடிபணிவது நல்லது. இயேசு பின்னர்,'அமைதியாக இரு - வாயை மூடு- இவரைவிட்டு வெளியே போ" என்று அதட்டினார். உடனே சாத்தான் அவனைவிட்டு வெளியேறினான். (லூக்.4:31-37). இவ்வாறு நாம் சாத்தானை கட்டுப்படுத்தலாம். எனவே சாத்தானை கட்டுப்படுத்த, சாத்தானின் தந்திரங்களை நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.  

ஒருவருக்குள் சாத்தான் எப்படி வளர்கிறது, சாத்தான் அவருள் எங்கே இருக்கிறார், சாத்தானின் வசீகர சத்திக்குள்ப்பட்டுள்ளாரா இல்லையா? இறைவார்த்தை வாசிப்பதில் ஆர்வம் காட்டுகின்றாரா இல்லையா? தொடர்ந்தும் சுறுசுறுப்பற்று சோம்பியவாறு இருக்கின்றாரா? இல்லையா? என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். சிறிய சாத்தான் அல்லது சிறிய லூசிபர் ஒன்று எமக்குள்ளே வளர்கிறதா இல்லையா எனவும் அறிந்து கொள்ளவேண்டும். ஆகையால், நாம் பைபிளில் 1யோவான்3:8 படிக்கும்போது இதனை அறிந்து கொள்ள முடியும்: 'பாவம் செய்துவருகிறவர் அலகையைச் சார்ந்தவர்;@ ஏனெனில் தொடக்கத்திலி ருந்தே அலகை பாவம் செய்து வருகிறது. ஆகவே அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார்." அலகையின் செயல்களை அழிக்க இயேசு வந்தார். பாவம் செய்யும் எவரும் அலகையின் பிள்ளை-குழந்தை. நன்மை செய்யும் எவரும் கடவுளின் பிள்ளை. இவ்வாறே கடவுளின் பிள்ளைகள் யாரென்றும், அலகையின் பிள்ளைகள் யாரென்றும் நாம் கண்டறிகின்றோம். 

நாம் இதனை பைபிளில் யோவான்10:10 படிக்கும்போது இன்னும் ஆழமாக விளங்கமுடியும்: 'திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்." அலகை  மனிதனை வெறுக்கிறான் என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். ஏனெனில் மனிதர்கள் கடவுளின் குழந்தைகள் என அலகைக்குத் தெரியும். எனவே அலகை கடவுளின் குழந்தைகளை அழிக்க விரும்புகிறார். அலகையின் உள்ளார்ந்த நோக்கம் எங்களுக்கு செழிப்பைத் தருவது அல்ல. ஒருவேளை ஓரிரு நாள்கள், அல்லது சில காலங்களுக்குச் செழிப்பைத் தரலாம், ஆனால் இறுதியில், எங்களை அழிப்பதே அலகை திட்டமாகும். 

அலகை கடவுளின் மீது கோபமாக கடவுளை வெறுக்கிறான். எனவே, கடவுள் விரும்பும் ஒவ்வொருவரையும் அவன் வெறுக்கிறான். ஆலகை, வானதூதர் ஒருவரின் ஒளியைப்போல வரலாம். சிறந்த ஒரு நண்பர்; போல வரலாம். எங்கள் உடல், மனம் மற்றும் எல்லாவற்றிற்கும் நிறைந்த மகிழ்ச்சிகளைத் சிறிது நாள்கள் தருகிறது. ஆனால் இறுதியில் அலகையின் நோக்கம் முழுமையான அழிவைத் தருவதே. ஏனெனில் அலகை கடவுளை வெறுப்பதால், கடவுள் விரும்பும் அனைத்தையும் அலகை வெறுக்கிறார். எனவே அனைத்து மனிதர்களும் அலகையுடன் நட்பு கொள்ளாதீர்கள். அலகையின் நோக்கம் வெறுப்பும், எங்களை அழிப்பதுமே. அலகையின் தாரகமந்திரமே முதலில் வந்து திருடுவான், பின்னர் கொல்வான் அதன் பின்னர் எங்களை அழித்துவிடுவான். (ளுவநயட –முடைட யனெ னுநளவசழல). முதலில் வந்து எமது மகிழ்சிகளைத் மெதுவாகத் திருடுவான். பின்பு எமது உணர்வுகளைக் கொலைசெய்வான். பின்பு முழுவதுமாக குடும்பம் முழுவதையும் சின்னாபின்னமாக அழித்துவிடுவான். இச்செயற்பாட்டை நாம் இயேசுவின் துணைகொண்டு கருத்தாய் ஆராய்ந்து வெற்றிகொள்ளவேண்டும். இல்லையேல் ஆபத்து பயங்கரமானது.

கடவுள் மனிதனை மிகவும் நேசிக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் எங்களுக்காக வந்து இறந்தார். எனவே, அலகை மனிதகுலத்தை வெறுக்கிறது. மனிதகுலத்தை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் வெறுக்கிறது. அதனால்தான் அவர் முழு பிரபஞ்சத்தையும் கெடுக்கின்றான். அக்கிரமத்தின் மூலம் இவற்றை  இரட்டிப்பாக்கிறார். உதாரணமாக, மனிதனின் பேராசை காரணமாக காலநிலை மாற்றங்கள், புற்றுநோய் மற்றும் பல்வேறு வகையான நோய்கள் வெளிவருகின்றன. பேராசை,தற்பெருமை, கர்வம் மற்றும் சுயநலம், இவையனைத்தும் எங்கிருந்து வருகின்றன? இவை அலகையிடமிருந்தே வருகின்றன. இந்த இழிச்செயல்களை விதைப்பதன்மூலம் அலகை இந்த அழகான சொர்க்கத்தை அழிக்க விரும்புகிறார்.

விழுந்த லூசிபர் மற்றும் அசுத்த அரூபிகள் பற்றி நாங்கள் அறிவோம். கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார் அது நல்லதாகவே கடவுள் கண்டார். அந்த படைப்பில் வானதூதர்களும் மனிதர்களும் சிறந்தவையாகவே இருந்தன. அதன் பிறகு தனக்குள் பேராசை, தற்பெருமை, கர்வம் சுயநலம் கொண்ட லூசிபர் மற்றும் அசுத்த அரூபிகள் பூமிக்குள் விழுத்தப்பட்டனர். அவர்கள் பூமியை சிதைத்தார்கள். அழகான சொர்க்கத்தை அலகை அழிக்கவே முயற்சிக்கின்றான். ஆனால் கடவுளே அதை மீண்டும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். 

திவெ12:7-9 என்னும் பைபிள் பகுதியைப் படிக்கும்போது அறிய முடியும்: இந்த விழுந்த தேவதைகளைப் பற்றி ஒரு குறிப்பு உள்ளது. லூசிபர் மற்றும் அதிதூதர் மைக்கேல் இடையே விண்ணகத்தில் நடந்தபோரில் மைக்கேலும் அவரது வானதூதர்களும் லூசிபரையும் அதன் அசுத்த அரூபிகளையும் தோற்கடித்தனர். அவர்களுக்கு விண்ணகத்தில்; இனி இடமே இல்லாமல் போயிற்று. லூசிபர், மற்றும் அவருடன் அவரது தேவதைகள் தூக்கி எறியப்பட்டனர். இதுவே அவர்களின் வீழ்ச்சி. இங்கு இதையே இயேசு குறிப்பிடுவதை நாம் நோக்கலாம்: சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து கீழே வீசப்பட்டதை நான் பார்த்தேன். இயேசு சொன்னார் நான் பார்த்தேன். (லூக்கா10:17-18). ஏனென்றால் தொடக்கத்திலிருந்தே இயேசு இருந்தார். நான் அல்பா மற்றும் ஒமேகா.

அதனால் தான் இயேசு சொன்னார், தோல்வியடைந்தவர் கீழே விழுந்ததை நான் பார்த்தேன். எனவே நினைவில் கொள்ளுங்கள், நான், 'பாம்புகளையும் மற்றும் தேள்களையும் மிதிக்கவும் பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கின்றேன். உங்களுக்கு எதுவுமே தீங்குவிளையிக்காது." உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்த அலகையைப்பற்றி ஓர் இரகசியம் இருக்கிறது: அவர் ஒரு தோல்வியடைந்தவர். அவர் ஆரம்பத்திலிருந்தே தோல்வியுற்றவர். அந்த தோல்வி யுற்றவர் எங்களுக்கு முன்னால் தன்னை விளப்பரப்படுத்திக்காட்ட முயற்சிக்கிறார். நாம் அவரை ஒரு தோல்வியுற்றவராகவே கருத வேண்டும். எனவே எங்கள் பயத்தால் அவரை உயர்த்தக்கூடாது. 1பேது5:8 பகுதியை படிக்கும்போது விளங்கமுடியும்: 'அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித்திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்." நாம் அலகையின் தாக்குதலிலிருந்து எங்களைப்பாதுகாத்துக் கொள்ள விரும்பினால்? அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருப்பதே ஒரே ஒரு வழியாகும். எங்கள் ஆன்மீக வாழ்க்கையிலும்,(ஆன்மீக வாழ்க்கையை ஆழப்படுத்த குருக்களின் உதவியை நாடுவதும் சிறந்தது.) தனிப்பட்ட வாழ்க்கையிலும் எல்லா இடங்களிலும் இந்த அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருக்க வேண்டும்.

லூசிபர் ஏன் கீழே விழுந்தார்.

லூசிபர் ஏன் கீழே விழுந்தார் என நோக்குவோம்: லூசிபர் சேராபீமில் ஒருவர், ஒருவேளை சேராபீன்களின் தலைவராக இருக்கக் கூடும். அல்லது வானதூதர்களின் அரசராக இருக்கக்கூடும். கடவுளைச் சுற்றி நின்று, 24 மணிநேரமும், 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது" என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருப்பவர். சேராபீன்கள், அனைத்து வானதூதர்களிலும் மிக உயர்ந்த வடிவமாகும். இந்த சேராபீன்களுக்குள் லூசிபர் மிக உயர்ந்த வானதூதர் ஆவார். இந்த லூசிபருக்கு கடவுளுக்கு முன்னால் சிறப்பு இடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கடவுளால், கடவுளுக்கு அடுத்தபடியாக அவருக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. லூசிபர் கடவுளின் மலைமீது இருந்தார். கடவுளின் மலையாக இருந்தார்- (வுhந அழரவெ ழக புழன).(ஆனால் இப்போது மரியன்னையே கடவுளின் மலையாக உள்ளார். வானதூதர்களின் அரசராக இருப்பவர் அன்னை மரியா.) ஆனால் அந்நாள்களில், லூசிபருக்குக் கொடுக்கப்பட்ட இடம்தான் அல்லது பதவிதான் கடவுளின் மலை. இவ்வாறு லூசிபர் அறியப்பட்டார். லூசிபர் அறியப்பட்ட அந்த அவரது நிலைப்பாட்டை அவர் பயன்படுத்தினார். 

ஆனால் பைபிளில் எசாயா 14:12 இறைவார்த்தைப் பகுதியை வாசிக்கும்போது இந்த விழுந்த லூசிபர் பற்றி அறிய முடியும். 'வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே! 'நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்;. இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்;. வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன். மேகத்திரள்மேல் ஏறி, உன்னதற்கு ஒப்பாவேன்" என்று உன் உள்ளத்தில் உரைத்தாயே! ஆனால் 'நீ பாதாளம் வரை தாழ்த்தப்பட்டாய்;. படுகுழியின் அடிமட்டத்திற்குள் தள்ளப்பட்டாயே! உன்னைக் காண்போர், உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து, 'மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும், அரசுகளை நிலைகுலையச் செய்தவனும், பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி, அதன் நகரங்களை அழித்தவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை அளிக்காதிருப்பவனும் இவன் தானோ?" என்பர். மக்களின மன்னர்கள் அனைவரும் அவரவர் உறைவிடங்களில் மாட்சியுடன் படுத்திருக்கின்றனர். நீயோ, அருவருப்பான அழுகிய இலைபோல, உன் கல்லறையிலிருந்து வெளியே வீசப்பட்டிருக்கிறாய்;. வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு, நாற்றமெடுத்த பிணம்போலக் கிடக்கின்றாய் எனக் கூறப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளமுடியும்.

வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே என்பதற்குரிய இலத்தீன் வார்த்தையாக லூசிபர் ஒப்பிடப்படுகின்றது-அழைக்கப்படுகிறது. அப்படித்தான் லூசிபர் என்ற வார்த்தை உருவானது. லூசிபர் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். லூசிபர் காலை நட்சத்திரம் ஒன்றைப்போல இருந்தார். ஆனால் தற்போது காலை நட்சத்திரம் என்ற பட்டத்தை இழந்துவிட்டார். இப்போது, அன்னை மரியா அந்த பட்டத்தை பெற்றுள்ளார். வீழ்வதற்கு முன்பு மிக உயர்ந்த நிலையில் இருந்த லூசிபருக்குக் கொடுக்கப்பட்ட அனைத்தும் வல்லமைகளும் அவருடைய வீழ்ச்சிக்கு பின்பு அன்னை மரியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன. அதனால்தான் லூசிபர் பெண்கள்மீது மிகவும் கோபமாக இருக்கிறார். லூசிபர் தற்பெருமையால் எல்லாவற் றையும் இழந்தார். அன்னை மரியா தாழ்சியினால் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டாள். லூசிபர் எல்லாவற் றையும் இழந்ததன் காரணம் என்ன? அவர் கடவுளின் முன்னிலையில் கடவுளுக்குக் கீழே இருந்தபோது, அவர் தனது இதயத்தில்,'நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்;. இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்;…. அதாவது தான் கடவுளுக்கு மேலே அமர்ந்திருப்பேன். என்று தன் உள்ளத்தில் உரைத்ததேயாகும்! உள்ளத்து எண்ணங்களை ஊடுருவிப்பாப்பவர் கடவுள் அல்லரோ?

லூசிபர் பதவியின் முதன்மைநிலையை, எல்லாப் புகழையும் பெயரையும் விரும்பினார். அவர் எல்லா பாராட்டுக்களையும் எல்லா உயர்வையும் அவரது உள்ளத்தில் விரும்பினார். அவர் ஏன் அதை செய்தார்? விண்ணுலகம் என்பது அப்படி ஒரு புனித இடமாகும். அப்படியிருக்க அவருக்கு இந்த கெட்ட எண்ணம் எப்படி வந்தது? ஒவ்வொரு படைப்புக்களும் முழுமையான படைப்பல்ல. படைப்புக்கள் எல்லாம் குறைபாடுகளுடன் தான் படைக்கப்பட்டன. இந்த குறைபாடுகள் பற்றி நாம் கவனமாக இல்லாவிட்டால், இவற்றினூடாக தீமையான விடயங்கள் உள்நுழைந்து விடுகின்றன. தேவையற்ற தீய விடயங்கள் நமக்குள் வரலாம். உ-ம்: ஓர் அறையில் வெளிச்சம் இருக்கும்போது இருள் தெரிவதில்லை. ஆனால் உண்மையில், அந்த அறையில் ஏற்கனவே இருள் இருக்கிறது. நாம், ஒளியின் காரணமாக அந்த அறையினுள் எந்த இருளையும் காண்பதில்லை. ஆனால் நாங்கள் ஒளியை அணைத்தால், உடனே இருள் தெரிகிறது. இருளை கொண்டு வருவதற்காக நாங்கள் எந்த இருண்ட ஒளிக்குழிளையும் அங்கு இயக்குவதில்லை. அதே வழியில்தான் ஒருவருக்குள் ஏற்கனவே தீய எண்ணங்கள் உள்ளன. ஏற்கனவே எதிர்மறை எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் கடவுளின் ஒளியில் இருக்கும்வரை யாரும் தீய எண்ணங்களை,இருளை பார்ப்பதில்லை. ஆனால் அவர்கள் ஒளியிலிருந்து விலகி தூரத்தில் இருக்க விரும்பிய தருணம் இருள் வந்துவிடும். நாம் அதை உருவாக்க தேவையில்லை. சுதந்திர விருப்பத்தின் காரணமாக இது வருகிறது. ஏனெனில் கடவுள் லூசிபர், வானதூதர்கள் ஒவ்வொருவருக்கும் சுதந்திர விருப்பத்தை  வழங்கியுள்ளார். 

நாங்கள் கடவுளின் முன்னிலையில் இருந்தாலும், இந்த தீய எண்ணங்கள் உள்ளே வருகிறது. அதனால்தான் மிக உயர்ந்த புனித இடத்தில் அலகை இருப்பதைக் காணமுடிகின்றது. யோபு 2:1-2  'ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தானும் அவர்கள் நடுவே வந்து, ஆண்டவர்முன் நின்றான்." இதற்கு பொருள் என்ன? நாங்கள் கடவுளுக்கு மிக நெருக்கமாக இருந்தாலும், அலகை உள்ளே வந்து எங்களிடம் பேசுவார். ஏனெனில் நாம் அனைவரும் குறைபாடுகள் உள்ள படைப்புக்கள். கடவுள் மட்டுமே பரிபூரணமாக இருக்கிறார், அவருள் இருள் இல்லை, தீய எண்ணங்கள் இல்லை. தீமை எதுவும் இல்லை, அகந்தை இல்லை. 

லூசிபர் தனது இதயத்தில் தனக்கு உயர்ந்த பதவி வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். எல்லோரும் கடவுளைப் புகழ்வதை நான் காண்கிறேன், ஆனால் நான் அதை விரும்புகிறேன். லூசிபரின் மிகப்பெரிய பிரச்சனை பெருமை-அகந்தை மற்றும் அதிருப்தியே ஆகும். மற்றும் அதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்வதே ஆகும். யாரவது தங்கள் இதயத்தில் தாங்கள் இருக்கின்றவாறு தங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என எண்ணினால், எங்களுக்குள் சக்திவாய்ந்த சிறிய லூசிபர் ஒருவர் வளர்ந்து வருகின்றார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 

முதலில் இங்கு பெருமை என்றால் என்ன என நோக்குவோம்: எனக்கு உயர்ந்த பதவி வேண்டும், எனக்கு அனைவரும் கட்டுப்படவேண்டும், எனக்கு எல்லாப் புகழும் வேண்டும். எல்லோரும் என்னைப் பாராட்டவேண்டும் என்று விரும்புவது.

இரண்டாவது அதிருப்தி: ஒருவர் எங்கே இருக்கிறார் என்பதில் திருப்தியற்றநிலை. ஒருவர் ஒரு பெரியவராக இருப்பதில் மகிழ்ச்சியடையாநிலை. ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட அனைத்திலும் மகிழ்ச்சி அடையாநிலை.

நாமும் எமக்கு வழங்கப்பட்டதில் அனைத்திலும் மகிழ்ச்சி அடையவில்லை என்றால். எல்லாவற்றிலும் உயர்ந்த இடத்தை விரும்பினால், அதற்காகத் தாகமாக இருந்தால் இந்த அதிருப்தி ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கடவுள் எங்களுக்குக் கொடுத்துள்ளவற்றுடன் திருப்பிகொள்ள வேண்டும். இயேசுவைப் பாருங்கள். இயேசுவின் அணுகுமுறை என்னவாக இருந்தது. அவர் முழு பிரபஞ்சத்தின் ஆட்சியாளராக இருந்தாலும், அவர்  ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். அவர்தான் இந்த உலகில் உள்ள அனைத்தையும் உருவாக்கியவர். ஆனால் அவருடைய புனித குடும்பம் ஓர் ஏழைக் குடும்பம். இயேசுவிற்குத் தலை சாய்க்கவோ இடம்; இல்லை. 'நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை."(லூக்9:58)ஆனால் இயேசுவிற்கு தங்குவதற்குக்கூட இடம் இல்லை. அதனால் அவர் மிகவும் ஏழை. மேலும் அவர் படுப்ததற்கு ஒரே ஓர் இடம்தான் கிடைத்தது. அதுதான் சிலுவை. அவர் தன்னைத் தாழ்த்தினார். எனவே கடவுள் அவரை உயர்த்தினார், லூசிபர் தன்னை உயர்த்தினார். அவர் எங்கே இருக்கிறார் என்பதில் திருப்தி இல்லை. அவர் ஒரு பெரியவராக இருப்பதில் மகிழ்ச்சியடையவில்லை. அவர் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கவிரும்பினார். அதனால் கடவுள் லூசிபரை தாழ்த்தினார்.

தன்னை தனக்குள்ளே உயர்த்திக்கொள்ளும் எவரும் இன்று அல்லது நாளை தாழ்த்தப்படுவார்கள். பதவிகள் மற்றும் அதிகாரிகளைத் தேடும் எவரும், நாளை தாழ்த்தப்படுவார்கள். தாழ்மையுடன் இருக்கத்த யாராக இருக்கும் எவரையும்- இருக்கத் தயாராக இருந்தால்- கடவுள் அவர்களை உயர்த்துவார்.

எனவே, எமக்கு உள்ளே ஒரு சிறிய லூசிபர் வளர்கிறேனா என்று எப்படி அறியமுடியும்? எங்களிடம் என்ன இருக்கிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? நாங்கள் உயர்ந்த இடத்தைத் தேடிக்கொண்டே அதில் தாகமாக இருக்கின்றோம் எனின், நாங்கள் மேலும் மேலும் எங்களைப் பிரபலமாக்க விரும்புகின்றோம் எனின், எங்களுக்குள் ஒரு சிறிய லூசிபர் வளர்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நாங்கள் அந்த லூசிபரை அழிக்கவில்லை என்றால், அவரை விடுவிக்கவில்லை என்றால் ஆபத்தானது. இன்று அல்லது நாளை நாங்கள் கீழே விழுத்தப்படுவோம். எங்களுக்கு அது மிகபெரிய வீழ்ச்சியாகும். அந்த வீழ்ச்சி மிகமிக ஆபத்தானது.

இன்று பலர் பதவி மரியாதைக்காக தாகம் கொண்டுள்ளார்கள். மற்றவர்களிடமிருந்து பாராட்டுப் பெற வேண்டும் என்று அவாவில் உள்ளார்கள். அவர்கள் புகழ், புகழ் என்று அதை பெற விரும்பி அலைகின்றார்கள். அதற்காக அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். மக்களை ஈர்க்கும் சர்ச்சைக்குரிய விடயங்களை மற்றும் பல உடலியல் ஆசைகளைத் தூன்டும் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றார்கள். இதன்மூலம் அவர்கள் புகழ்நாமம் பெற முனைகின்றார்கள். ஒழுக்கக்கேடான வழிகளில் கீர்த்தி நாமம் பெறமுனை கின்றார்கள். மேலும் பல விடயங்களை செய்து புகழ் பெற பல மெம்மைநிகழ்ச்சி வழிகளை முன்வைக்கின்றார்கள். ஏனென்றால் அவர்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை அவர்களுக்குள் இருக்கிறது. இவை மிக உயர்ந்த பெயரின் புகழை அடைவதற்கான வெளிப்பாடே. இந்த அவா ஒரு சிறிய லூசிபர் எங்களுக்குள் வளர்ந்து வருகிறது என்பதனை தெளிவாகக் காட்டும் ஓர் அறிகுறியேயாகும்.

  லூசிபரின் இந்த வெவ்வேறு குணாதிசயங்களை பைபிளில் இருந்து தெளிவாகப் படிக்கமுடியும்.  லூசிபர் எங்களுக்குள் வளர்கின்றாரா என்பதை நாங்கள் சோதித்து அறியவிரும்பினால், அவருடைய குணாதிசயங்கள், அவருடைய இயல்புகள் உள்ளனவா என அதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் பைபிளில் எசேக்கியேல் 28:1 இறைவார்தைமுதல் படித்தால் புரியும். இங்கு பைபிள் ஒரு மன்னன் பற்றி கூறுகின்றது. அவன், தீயஆவி அவனுள் இருக்கும் அரசன் ஒருவன். அதாவது அலகை-லூசிபர் அவனுக்குள் இருக்கும் அரசன் ஒருவன். 

(அவரை தீர் நகரின் மன்னன் என அறிமுகஞ் செய்து, (இங்கு தீர் நகரின் மன்னன் என்பதை தீய ஆவிக்கு உள்ளிருக்கும் இளவரசருக்கு ஒப்பிட்டு பேசப்படுகின்றது.) ஆண்டவரின் வாக்கு எசேக்கியேல் வழியாக எடுத்துரைக்கப்படுகின்றது:  தீர் நகரின் மன்னரே 'உன் இதயத்தின் செருக்கில், நானே கடவுள்;@ நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்" என்று சொல்கின்றாய், ஆனால் நீ கடவுளைப்போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல@ மனிதனே! தானியேலை விட நீ அறிவாளிதான்! மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை! உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்;@ உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய். உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்;@ உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது. ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்;: கடவுளைப்போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால், மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்;@ அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்;@ உன் பெருமையைக் குலைப்பர். படுகுழியில் தள்ளுவர் உன்னை@ கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே! அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் 'நானே கடவுள்" என்று சொல்வாயே? உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய். விருத்தசேதனம் செய்யப் படாதவனைப்போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.)  

நான் இந்த நாட்டின் கடவுள்; என இதயத்தில் எண்ணினார். அவர் தன்னை அந்த நாட்டின் கடவுளாக்கினார். குடிமக்கள் அனைவரும் அவரை வணங்கவேண்டும் என்று அவர் விரும்பினார். எனவே, இந்த அரசரை எதிர்கொள்ள கடவுள் தனது தீர்க்கதரிசியை அனுப்பி, இளவரசரிடம் இஸ்ரேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார், உம் இதயம் தற்பெருமை கொள்கின்றது. நீ ஒரு கடவுள் என்று நினைக்கிறீர், நீர் கடவுளின் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்-நீர் கடல்களின் இதயத்தில் கடவுளின் இருக்கையில் அமர்ந்திருப்பதாக நினைக்கிறீர், ஆனால் உம் மனதை கடவுளின் மனதோடு ஒப்பிட்டாலும் நீர் ஓர் உயிரினம், நீர் ஒரு மனிதன் மட்டுமே, கடவுள் அல்ல. உம் மனதில், எல்லாம் சாத்தியம் என்று நீர் நினைக்கிறீர். உம் மனதில், நீர் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறீர். உம் மனதில், நீர் அனைவரையும் கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர். உமக்குக் கடவுள் தேவையில்லை என நினைக்கிறீர். இது லூசிபரின் வேலையாகும்.

தங்கள் இதயத்தில் தங்களுக்குக் கடவுள் தேவையில்லை என நினைக்கும் எவரும், நினைவில் வைத்து கொள்ளவேண்டியது: இந்த லூசிபர் தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்குள் இருக்கிறார் என்பது. என்னிடம் நல்ல சத்தி, பணம் இருக்கிறது. மேலும் என் தந்தை மிகவும் பணக்காரர். எனக்கு நல்ல சம்பளம், நல்ல குடும்பம் கிடைத்துள்ளது. எனக்கு கடவுள் தேவையில்லை. நான் ஏன் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குச் செல்லவேண்டும், ஒவ்வொரு நாளும் செபமாலை சொல்வதில் எனது நேரத்தை ஏன்  வீணாக்கவேண்டும். நானே எனக்கு மிகவும் போதும் என நினைக்கும்போது, எங்களுள் ஒரு லூசிபர் வளர்கிறார். எனக்கு கடவுள் தேவையில்லை. நானே எனக்கு போதும் என நினைக்கும் போதெல்லாம் அது மிகவும் ஆபத்தானது என நினைவில் கொள்ளவேண்டும்.

ஒன்றை நாம் இப்போது கூர்ந்து கவனித்தால்: உலகளாவிய கோரோனா தொற்றுநோயின் இந்த தருணத்தில் உலகின் சனாதிபதிகள், இன்றைய அமெரிக்க சனாதிபதி உட்பட, 'தயவுசெய்து கடவுளிடம் மன்றாடுங்கள்" என்று மக்களிடம் கூறுவதைக் காணமுடியும். தொற்றுநோயின் இந்தத் தருணத்தில் கடவுள் மட்டுமே நமக்கு உதவ முடியும், ஏனென்றால் உலகம் முழுவதும் தம்மால் எதுவும் செய்யமுடியாது என்று நம் தலைவர்கள் நன்றாக அறிவுத்தெளிவு பெற்றுவிட்டார்கள். 'என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவர்களும் உம்மைத்தவிர வேறு துணையற்றவர்களுமாகிய எமக்கு உதவி செய்யும்@ உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும். ஏனெனில் நாம் எம் உயிரைப் பணயம் வைத்துள்ளோம்." (எஸ்தர்(கி)4:17ட,17வ) என்னும் இறைவார்தைபகுதியில் காணலாம்) தாங்கள் ஆதரவற்றவர்கள். 'அனைத்தின் மேலும் அதிகாரம் செலுத்தும் கடவுளே, நம்பிக்கை இழந்த எங்களது குரலுக்குச் செவிசாயும். தீயோரின் கைகளினின்று எங்களைக் காப்பாற்றும்;, அச்சத்தினின்று என்னை விடுவியும்." (எஸ்தர்(கி)4:17ண)என்று மன்றாடுவதை நாம் காணமுடியும். இந்த சூழ்நிலையில், நாம் எப்படி எமக்கு கடவுள் தேவையில்லை என்று சொல்ல முடியும்.

தீர் மன்னனைக் குறித்து இரங்கற்பா ஒன்று பாடும்படி எசேக்கியலிடம் ஆண்டவர் கேட்டுக்கொண்டார்: 'ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! தீர் நகரின் மன்னனைக் குறித்து, இரங்கற்பா ஒன்று பாடு. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே 'நீ நிறைவின் மாதிரியாகவும் ஞானத்தின் நிறைவாகவும் அழகின் முழுமையாகவும் இருந்தாய். கடவுளின் தோட்டமாகிய ஏதேனில் இருந்தாய். விலையுயர்ந்த கற்கள் உன்னை அழகுபடுத்தின! பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், படிகச் பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்திருந்தாய். பொன்னாடை உன் அழகை வெளிக்காட்டிற்று. நீ பிறந்த அன்றே இவை படைக்கப்பட்டுத் தயாரிக்கப்பெற்றன. காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்;. கடவுளின் தூய மலையில் நீ இருந்தாய்;@ ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய். நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய். எசேக்கியேல் 28:11 இப்பகுதியில் இதை நாம் காணமுடியும். 

நீ விண்ணுலகில் இருக்கும்போது நீ முழுமையின் அடையாளமாக இருந்தாய். ஏனென்றால் அனைத்தும் உமக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஞானம் நிறைந்தவர். அழகு மிகுநிறைந்தவர். நீ பரிபூரணத்தின் அடையாளம். லூசிபர் கடவுளின் முன்னிலையில் இருந்தபோது இவை அனைத்தும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. லூசிபர் பரிபூரணத்தின் அடையாளம், ஞானம் நிறைந்தவர், அழகில் மிகுநிறைந்தவர். லூசிபர் கடவுளுக்குக் கீழே இருந்தார். (நாம் தற்போது நினைவில் கொள்ளவேண்டிய விடயம் முழுமையின் அடையாளம், ஞானம் நிறைந்தவர். மற்றும் அழகு மிகுநிறைந்தவர். மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் குணாம்சங்களும் தற்போது லூசிபரிடம் இல்லை. எமது அன்னை மரியாவுக்குக் அவை அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன: முழுமை, ஞானம், அழகு நிறைந்தவள்…) நீ கடவுளின் தோட்டமான ஏதேனில் இருந்தீர். நீ அழகான ஏதேனில் தோட்டத்தில் கடவுளின் முன்னிலையில் இருந்தீர். ஒவ்வொரு விலையுயர்ந்த கற்களும் உன்னை அழகுபடுத்தின. விலையுயர்ந்த கற்கள் பரிசுத்த ஆவியின் கொடைகளின் அடையாளமாகும். உனக்கு பரிசுத்த ஆவியின் இந்தக் கொடைகள் வழங்கப்பட்டிருந்தன: பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், படிகச் பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்திருந்தாய். பொன்னாடை உன் அழகை வெளிக்காட்டிற்று. நீ பயன்படுத்தும் இசைக்கருவிகள் அனைத்தும் தங்கத்திலான கலைவேலைப் பாடுகள் நிறைந்திருந்தன. இதன் கருத்து கடவுள் உன்னை பல ஆசீர்வாதங்களைக் கொடுத்து மேன்மைப்படுத்தியிருந்தார். ஏனென்றால் நீ கடவுளுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் வானதூதர்க ளிடையே விண்ணில்; மிக உயர்ந்த நிலையில் இருந்தாய். ஏனென்றால் காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்து கடவுளின் தூய மலையில் உன்னை வைத்திருந்தார். ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய். நீ பிறந்த அன்றே இவை அனைத்தும் படைக்கப்பட்டு உனக்கு வழங்கப்பட்டன. இதன் பொருள். பரிபூரணத்தின் அடையாளம், ஞானம் நிறைந்தவர், அழகில் மிகுநிறைந்தவர் ஆனால் நீ ஓர் உயிரினம, கடவுளால் உருவாக்கப்பட்ட ஓர் உயிரினம். திருப்பொழிவு செய்யப்பட்ட கெருபைப் போல இருந்தீர். உமக்கு மெய்க்காப்பாளர்களையும் நான் ஏற்படுத்தியிருந்தேன். 

லூசிபர் அருள்பொழிவு செய்யப்பட்ட பல கெருபீன்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தார். நீ கடவுளின் புனித மலையில் இருந்தீர், கடவுளின் புனித மலையில் இப்போது அன்னை மரியா இருப்பதை நாம் அறியலாம். நீ ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய். நீ விண்ணக பரிசுத்த ஆவியின் முன்னிலையில் இருந்தீர். நீ விண்ணகத்தில் தெய்வப்புதல்வர்கள் நடுவில் இருந்தீர். நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய். நீ குற்றமற்றவர். உன் வழிகளில் எந்த தவறும் இல்லாமல் எந்த பாவமும் இல்லாமல். இந்தக் குணதிசயங்கள் அனைத்தும் லூசிபர்ருக்கு கயமை-அக்கிரமம் காணப்படும்வரை. கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த கயமை இன்று நம் வாழ்வில் காணப்படலாம்;. கடவுள் எங்களுக்கு எல்லாவகையான  ஆசீர்வாதங்களையும் தந்திருக்கின்றார்: நல்ல குடும்பம், வடிவழகு, தைரியம், வலிமை, ஆரோக்கியம், சமூகநிலை, புகழ்-பெயர், நல்ல கணவர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், மிக நல்லவைகள் மற்றும் நல்லவை அனைத்தும் உட்பட அனைத்து ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளார். 

ஆனால் இவை அனைத்தையும் மீறி, கடவுளுக்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக, நான் மகிழ்ச்சியாக இல்லை, எனக்கு நன்றாக வேண்டும், எனக்கு சிறந்த மனைவி வேண்டும், எனக்கு சிறந்த கணவர் வேண்டும், எனக்கு நல்ல குழந்தைகள் வேண்டும், எனக்கு நல்ல வீடு வேண்டும், எனக்கு எல்லாம் நல்லது வேண்டும் என்கின்றோம். கடவுள் எங்களுக்குக் கொடுத்ததற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்லவில்லை. கடவுள் செய்த நல்ல காரியங்களுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லாமல் பலர் இன்றும்கூட இருக்கின்றோம். வேலை கிடைக்கும்போது கடவுளுக்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக, இன்னும் சிறந்த ஒன்றைப் பெற நினைக்கின்றோம்.

முதலில் எங்களுக்கு சிறிய ஏதாவது ஒன்று கிடைத்தாலும் கடவுளுக்கு நன்றி தெரிவிப்போம்.  இறைவனுடன் இருப்போம். நாம் இவ்வாறு இருப்பதற்குக்-நாம் இப்படி இருப்பதற்குக் கடவுளுக்கு நன்றி சொல்வோம். இறைவன் எங்களுக்கு வழங்குவதில் அப்பொழுது மிகவும் மகிழ்ச்சியடைகிறார். நாங்கள் நன்றியுள்ள இதயத்துடன் இருப்போம். நன்றியுள்ள இதயம் ஒன்றைக் கடவுள் விரும்புகின்றார். தாழ்மையுள்ள இதயம் ஒன்றைக் கடவுள் தேடுகின்றார். மாறாக அகந்;தை உள்ள இதயம் ஒன்றைக் கடவுள் விரும்பவில்லை. பெருமை உள்ள இதயம் ஒன்று, எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். கடவுள் எமக்கு கொடுத்த அனைத்து ஆசீர்வாதங்களுக்கும்: எங்கள் கணவர், எங்கள் மனைவி, எங்கள் குழந்தைகள் மற்றும் எங்கள் குடும்பம். எங்கள் ஆன்மீக வழிகாட்டும் குருக்கள், எங்கள் ஆன்மீக வாழ்க்கை, பரிசுத்தஆவியின் பரிசுகள், எங்களுக்குக் கிடைத்த எல்லாவற்றிற்கும், கடவுளுக்கு நன்றிசெலுத்தும்போது கடவுள் இன்னும் அதிகம் அதிகம் தருவதில் மகிழ்வடைவார்.  

பைபிள் கூறுகிறது, கடவுள் தனக்குக் கொடுத்த அனைத்துக்குமாகக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக லூசிபர் ஒரு மனப்போக்கை கொண்டிருந்தார். வேறுஎந்த வானதூதர்களுக்கும் கொடுத்ததை விட கடவுள் லூசிபருக்குக் நிறையவே கொடுத்திருந்தார். லூசிபர் மட்டுமே இந்த அனைத்து வளங்களையும் பெற்றிருந்தர். மற்ற எந்த வானதூதர்களும் லூசிபரைப்போல் பெற்றிருக்கவில்லை. ஆனால் நன்றி செலுத்துவதற்கும், சர்வவல்லமையுள்ள கடவுளைப் புகழ்வதற்குப் பதிலாக, லூசிபர் கடவுளைப் புகழ்வதை நிறுத்தினார். மேலும் அவர் அனைத்து புகழும் தமக்கு வேண்டும் என ஆசைப்பட்டார். லூசிபர் எல்லோரும் தம்மைப் புகழ வேண்டும் என்று விரும்பினார். அவர் இவ்வாறு தம்முடன் சில தூதர்களைச் சேகரிக்க முடிந்தது. 

யாராவது உயர்வு, உயர் பதவிகள் மற்றும் அதிகாரங்கள் வேண்டும் என நினைத்து அதன்பின்னால் ஓடி கடவுளைப் போற்றுவதைக், கடவுளைப் புகழ்வதை, நன்றி சொல்வதை நிறுத்திவிட்டால். உடனடியாகத் தன்னுணர்வு பெற்றவராய்-அறிவு தெளிந்தவராய் லூசிபர் ஒருவர் தங்கள் இதயத்திற்குள் வளர்ந்து வருகிறார், ஆம், ஒருவேளை மிக வேகமாக வளர்ந்து வருகிறர் என்பதை நன்குணரவேண்டும். மிகவிரைவாக அவரை கட்டுப்படுத்தவேண்டும். அவரை அடக்கவேண்டும்.  இல்லையெனில் அது மிகவும் ஆபத்தானது. நாங்கள் பாதாழத்தை நோக்கி வீழ்ச்சியடைவோம்.  

லூசிபரின் மேலும்சில தவறுகள்

லூசிபரின் மேலும்சில தவறுகள் பற்றி நோக்குகையில்: பரந்த உன் வாணிபத்தால் வன்முறை நிறைந்தது உன்னில்;@ பாவம் செய்தாய் நீயே! பலவற்றைப்பற்றி தலையிடுகின்றாய். அதனுள் முழ்கியிருக் கின்றாய். எனவே வன்முறை உன்னுள் உருவாகியது. வன்முறையே லூசிபரின் இயல்பாக மாறியது.

நாங்கள் பலவற்றில் மிகவும் தலையிடுவோமாயின் மிக விரைவாக கோபப்படுவோம். எரிச்சலை மிக விரைவாக அடைவோம். தொந்தரவுக்குள் மிக விரைவாக விழுந்துவிடுவோம். நாங்கள், இரக்கம், கருணை மற்றும் இவை அனைத்தையும் புறக்கணிப்போம். நாங்கள் இந்த விடயங்களைப் பற்றி கவலைப்படமாட்டோம். எங்கள் மனைவிக்கு என்ன நடக்கிறது என்று நாங்கள் கவலைப்பட மாட்டோம். எங்கள் கணவருக்கு என்ன நடக்கிறது? எங்கள் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று நாங்கள் கவலைப்படமாட்டோம். எங்கள் கணவருக்கு ஆறுதல் தேவைப்படுவதை நாங்கள் காணமாட்டோம். எங்கள் மனைவிக்கு ஒத்துழைப்பு தேவையென நாங்கள் காணமாட்டோம். எங்கள் குழந்தைகளுக்குப் பாசம், ஆதரவு தேவை என நாங்கள் உணரமாட்டோம். ஏனென்றால் நாங்கள் பல்வோறு விடயங்களில் மூழ்கியிருப்போம். இந்த வன்முறையால் நாங்கள் பாவம் செய்தோம். 

எனவே, வெறுப்புடன் உன்னைக் கடவுளின் மலையினின்று வெளியேற்றினேன்; ஓ! காவல்காக்கும் கெருபே! உன்னை ஒளிவீசும் கற்கள் நடுவினின்று வெளியே தள்ளினேன். உன்னுடைய சொந்தப் பாதுகாவலர்-காவல்காக்கும் கெருபே உன்னை வெளியே நெருப்புக் கற்களுக்கு மத்தியில் தள்ளிவிட்டது. பைபிளில் யூதாப் புத்தகத்தில் 1:6 இறைவார்த்தைப்பகுதியை வாசிக்கும்போது நாம் இதை நன்கு அறிவது கொள்ளமுடியும்: 'சில வானதூதர்கள் தங்கள் ஆளும் அதிகாரத்தைக் காத்துக்கொள்ளாமல், தங்கள் உறைவிடத்தைத் துறந்துவிட்டார்கள். என்றும் கட்டப்பட்டவர்களாய் அவர்களைக் கடவுள் மாபெரும் தீர்ப்புநாளுக்காகக் காரிருளில் வைத்திருக்கிறாரர்."இந்த இறைவார்த்தைப் பகுதிகளை தொடக்கநூல் 1:1-2 இல் இருந்தும் அறிந்துணரவும் முடியும்: ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. இந்த வானதூதர்கள் தங்களுக்கு கிடைந்துள்ள இந்த மேன்மையான நிலையை காத்துக் கொள்ளவில்லை. தங்களுக்கு கிடைந்துள்ள மேன்மையான நிலையைப் பற்றி மகிழ்ச்சியாகவில்லை. அவர்கள் இன்னும் தங்களுக்கு உன்னதமான இடம் வேண்டும் என்று அவாவில் அலைந்தனர். இதனால் தங்கள் உறைவிடத்தை விட்டு தூரமாகத் துரத்தப்பட்டார்கள். பின்னர் கடவுள் அவர்களை மாபெரும் தீர்ப்புநாளுக்காகக் காரிருளில் சங்கிலிகளில் வைத்திருக்கிறார். 2பேது2:4 இறைவார்த்தைப்பகுதியிலும் காணமுடியும் 

பைபிளில் 1பேதுரு3:3 இறைவார்த்தைப்பகுதியை வாசிக்கும்போதும் காணும் வரிகளை ஆய்வுசெய்தால்: 'முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், (நேர்த்தியான) ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல. இவைகளினால் எமது தோற்றத்தை அழகுபடுத்த அதிகமாக அக்கறையாக இருந்தால் அது மிகவும் ஆபத்தானது. மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது." 

நாம் பைபிளில் எசேக்கியோல் புத்தகத்தில் 28:17 படித்து, லூசிபர் பற்றிய இந்த தொடர்பை, மேலுள்ள பகுதியுடன் தொடர்புபடுத்தி விளங்கிக் கொள்ளமுடியும். 'உன் அழகின் காரணமாய் உன் இதயம் செருக்குற்றது@ எங்கள் அழகைப் பற்றி பெருமையாக இருக்கும்போது, எங்கள் தோற்றத்தைப் பற்றி நாங்கள் மிகவும் அக்கறையாக இருக்கும்போது, எங்கள் தோற்றத்தில் நாங்கள் மிகவும் பெருமைப்படும்போது, பெருமளவு பணம் அழகுபடுத்தலுக்காக செலவிடுகின்றோம். நாங்கள் நிறைய நேரத்தை கண்ணாடி முன் செலவிடுகின்றோம். நாங்கள் யார்? எதற்காக உள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, எங்கள் தோற்றத்தைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகின்றோம். கடவுள் எங்களை நேசிப்பது நாங்கள் கடவுளை நேசிப்பதால் அல்ல. இதை நாம் நன்றாக நினைவில் கொள்ளவேண்டும். எம் உடலுக்கு சிலவேளைகளில் சில அலங்காரங்கள் மற்றும் கூடுதல் பொருத்துதல்கள் தேவைப்படலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சிலர் மிகவும் அதிகமாக அதே எண்ணத்துடன் இருக்கின்றார்கள். (அந்த எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்தவண்ணம் உள்ளன.)அவர்கள் இதற்காக நிறையப் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறார்கள். வெவ்வேறு வகையான வாசனைத்திரவியங்களை வாங்குகின்றார்கள். ஆனால் எதுவும் பயன்படுவாதாக இல்லை. மாறாக ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு மட்டுமே அவை பயன்படுகின்றன. ஆதனால் திருப்தி இல்லை, இந்த அழகு சாதனங்கள் எல்லாம்கூட வரம்புகளுக்கு உட்பட்டவை என ஒருநாள் அவர்கள் தெரிந்து கொள்வார்கள். நாங்கள் எங்கள் வடிவழகுக்காக எங்கள் இதயத்தில் மிகவும் பெருமைப்படுகின்றோம்.  

கடவுள் லூசிபரைக் குறித்துக் கூறும் பகுதியை இங்கு நோக்குவோம்: 'உன் மாட்சியின் காரணமாய் உன் ஞானத்தைக் கெடுத்துக் கொண்டாய்;@ (உன் அறிவினை நல்ல விடயங்களுக்குப் பயன்படுத்தவில்லை மாறாக தீயவிடயங்களுக்குப் பயன்படுத்தினாய்.) எனவே நான் உன்னைத் தரையில் தள்ளிவிட்டேன்;@ மன்னர்கள் முன்னே உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்." 

யாராவது இவ்வாறு தீயவிடயங்களை இரகசியமாகப் பார்த்து வந்தால், அவர்கள் ஒரு நாள்; வெளிப்படையாகக் காட்சிப் பொருளாக்கப்படுவார்கள். எந்த இரகசியமான பாவமோ, எந்த இரகசியமான பெருமையோ அல்லது நாம் மறைத்து வைத்திருக்கும் எந்த தீயஎண்ணங்களோ இன்று அல்லது நாளையோ ஒரு நாள் வெளிப்படும்- வெளிப்படுத்தும். நாங்களே எமக்குத் தெரியாது வெளிப்படுவோம். லூசிபர் எங்கும் மறைந்திருக்க முடியாது. அவர் வெளிப்படுத்தப்பட்டே ஆகவேண்டும். ஒருவேளை விண்ணகத்திலாவது அவர் வெளிப்படுவார். லூசிபர் கடவுளோடு இருக்கும்போது விண்ணகத்தில் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார், வானதூதர்களுடைய முழு அதிகாரத்தையும் கொண்டிருந்தார். ஆனாலும் அவர் அங்கே அம்பலமாகிவிட்டார். எனவே, இங்கே மண்ணுலகில் எளிதில் வெளிப்படுவார்.

கடவுள் இன்னும் லூசிபரைக் குறித்துக் கூறும் பகுதி: 'உன் மிகுதியான பாவங்களாலும் நேர்மையற்ற வாணிபத்தாலும் உன் திருத்தலங்களைத் தீட்டுப்படுத்தினாய்; எனவே உன் நடுவினின்று நெருப்பு வரச்செய்தேன்." ஒன்று அல்லது இரண்டு பாவங்களினால் அல்ல இரகசியமான அக்கிரமங்களின் பெருக்கத்தால் லூசிபர் தனது புனித இடத்தை, கடவுளின் புனித இடத்தை- திருத்தலங்களைத் தீட்டுப்படுத்தினார்;.  எனவே, கடவுள்  வெளியே கரிருளினுள் தள்ளினார். 

(எங்களுக்குள் இருக்கும் இதேபோன்ற பெருமை, அகங்காரம், சுயநலம காரணமாக, நாம் தங்கியிருக்கும் இடத்தைத் தீட்டுப்படுத்துகின்றோம் (தேவநிந்தனை). எங்கள் வீடு இழிவுபடுத்தப்படும். நாங்கள் எங்கிருந்தாலும் அந்த இடமும் தீட்டுப்படுத்தப்படும். அது ஒரு புனித இடமாக-சரணாலயமாக இருந்தாலும் எங்களால்  தீட்டுப்படுத்தப்படும்;.) 

அதனால் நான் உனக்குளிருந்து நெருப்பை வெளியே கொண்டு வந்தேன்." நான் உள்ளே இருந்து நெருப்பை வெளியே கொண்டு வந்தேன்" என்பதன் பொருள்: உனக்குள் இருந்து பரிசுத்த ஆவி வெளியே சென்று விட்டார். மன்னர் சவுல் பாவம் செய்தபோது கடவுளின் ஆவி அவரிடமிருந்து விலகி தீயஆவி அவருள் வந்ததுபோலவே. (1சாமுவேல்16:15, 23@ 18:10 மற்றும் 19:9). எனவே உமக்குள் ஒளியற்றுப்போய் இருள் சூழ்ந்து கொண்டது. அந்த இருள் உன்னை நுகர்ந்துகொண்டது. நான், உன்னைப் பார்த்தோர் கண்முன்னே முற்றிலும் உன்னைத் தரையில் சாம்பலாக்கினேன். உனக்குள் ஒளி இல்லை, உனக்குள் இருள் மட்டுமே உள்ளது. பயம் மட்டுமே உனக்குள் உள்ளது. சாத்தான் பயத்தின் மீகுதியால் உள்ளான். பயப்படுபவர்கள் மட்டுமே தாக்குவார்கள். யாராவது ஒருவர் யாருக்காவது பயப்பட்டுவிட்டால், அவரை நீக்கிவிடுவது பற்றி என்றுமே எண்ணிக்கொண்டே இருப்பார். நாங்கள் ஒருவரைப்பற்றியும் பயப்படவில்லை என்றால், ஏன் நாம் அவரை நீக்குவது பற்றி எண்ணவேண்டும். 

பலர் கடவுள் ஏன் சாத்தானை அழிக்க வேண்டும். கடவுளுக்குப் பயமா? என்கின்றார்கள். அதாவது, அவர் கடவுளுக்கு அச்சுறுத்தல் இல்லை. கடவுளுக்கு, யாரும் அச்சுறுத்தலாக இல்லை. கடவுள் சர்வவல்லமையுள்ளவர், எங்கும் நிறைந்தவர். எல்லாம் அறிந்தவர், எனவே அவர் யாருக்கும் பயப்படவில்லை. 

'உன்னைத் தெரிந்த எல்லா நாடுகளும் உன்னைக் கண்டு மருண்டு திகிலுறுகின்றன. நடுங்கற்குரிய முடிவுக்கு வந்து விட்டாய் நீ@ இனிமேல் நீ இருக்கமாட்டாய்." கடவுள் கூறுகின்றார்: ஷநீ இனி ஒன்றுமே இல்லை|. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: 'சீதோனே, நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்;. உன் நடுவில் என் மாட்சியை வெளிப்படுத்தும்போது, நான் உன்மீது தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றும்போது, உன் நடுவில் என் தூய்மையைக் காண்பிக்கும்போது, ஷநானே ஆண்டவர்| என உன்னிலுள்ளோர் அறிந்து கொள்வர்." 1கொரி1:19 இறைவார்த்தையைப் படிக்கையில், ஏனெனில், 'ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமை யாக்குவேன்" என்று கடவுள் கூறுவதைத் தெரிந்துகொள்ளமுடியும்.  சாத்தான் ஞானம் நிறைந்தவனாக இருந்தான். அதில் அவர் பெருமிதம் கொண்டார். லூசிபர் ஞானத்தை தவறான விடயங்களுக்குப் பயன்படுத்தினார். அதனால் கடவுள் லூசிபரை அழித்தார். 

சாத்தான் பலவற்றுக்குள் தலையிட்டுப் பெரும்சுமைகளைக் கொடுக்கின்றான். சுமைகளைத் தந்து சுகங்களை சுக்குநூறக்குவதே லூசிபரின் இயல்பாகும். எனவே இதனை இலகுவாக வெல்ல இயேசுவை நாடினால், 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது@ என் சுமை எளிதாயுள்ளது" என தேற்றுவதை காணலாம். (மத்தேயு11:28-30)

மத்தேயு 6:33 நாங்கள் படிக்கிறோம்: 'ஆகவே முதலாவதாக அனைத்திற்கும் மேலாக அவரது (கடவுளது) ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்." நாம் உயர் நிலையை அடைய முய்ற்சிக்க வேண்டியதில்லை. உயர்ந்த பதவிநிலையை, அதிக பணத்தை, தேட முயற்சிக்கவேண்டியதில்லை நாங்கள் பணத்திற்குப்பின் ஓடினால், பணம் எங்களிடமிருந்து ஓடிவிடும். நாங்கள் உயர்பதவநிலையைத் தேடி ஓடினால். பதவி நிலை எங்களுக்கு ஒருபோதும் வராது. நாங்கள் அழகுக்குப் பின்னால் ஒடினால், அழகு எங்களைவிட்டு புறப்பட்டுவிடும். நாங்கள் எதற்கும் பின்னும் ஓடிக்கொண்டிருந்தால், அவைகள் எங்களை விட்டுவிலகிச் சென்றுகொண்டே இருக்கும். ஆனால் முதலாவதாக அனைத்திற்கும் மேலாக கடவுளது ஆட்சியையும், கடவுளுக்கு ஏற்புடையவற்றையும் நாடும்போது இவையனைத்தும் எங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். பெருஞ்சுமையை நாம் சுமக்க வேண்டியதே இல்லை.

எனவே எங்களுக்குள் ஏதாவது திருப்தியற்றநிலை: முணுமுணுப்புக்குள், கோபத்தேடு-மனக்குறைபாடுடன் முனகுதல், வாழ்க்கையில் மகிழ்ச்சியற்றநிலை, எங்கள் கணவரைப்பற்றி மகிழ்ச்சியற்றநிலை, எங்கள் மணைவியர்பற்றி மகிழ்ச்சியற்றநிலை, குழந்தைகளைப்பற்றி மகிழ்ச்சியற்றநிலை, எங்கள் வீடுகள்பற்றி மகிழ்ச்சியற்றநிலை, நாங்கள் எங்கள் சூழ்நிலை பற்றி எப்போதும் முணுமுணுக்கின்றோம், புகார் செய்கின்றோம். கோபத்தேடு உறுமுகின்றோம் எனின், ஒரு லூசிபர்-சாத்தான் எங்களுக்குள் வளர்கிறார் என நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

யாராவது அதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்தால், சாத்தான் கலகக்காரன். தன்னுள் கலகங்களை வைத்திருக்கின்றான் என நினைவில் கொள்ளவேண்டும். லூசிபரின் போக்கு என்ன என நோக்குகையில், அதிகாரமுள்ள கடவுளுக்கு எதிராக கலகம் செய்தலே என்பது தெரியவரும். நாங்கள் யாராவது அதிகாரமுள்ள மேலதிகாரிகள், தலைவர்கள், எங்கள் ஆன்மீக தந்தையர்கள்-குருக்கள் போன்றோர்களுக்கு எதிராகப்பேசும் போக்கு எங்களுக்கு இருந்தால். அவர்களை விமர்சித்து, முகநூலில், புலனத்தில், கட்டசெவி அஞ்சலில்- கீச்சகத்தில் செய்திகளை அனுப்புதல் மற்றும் கடவுள் நிறுவிய இந்த அதிகாரிகளை எல்லா இடங்களிலும் அவமதித்தால், அதாவது எங்களுக்குள் ஒரு சிறிய லூசிபர் வளர்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.  

தற்போது ஒருவருடைய முகநூல் பக்கங்களைப் பார்த்தால், அவருக்குள் எத்தனை லூசிபர் வளர்கின்றார் என்பது தெரியவரும். அவருடைய விமர்சிக்கும் தன்மையைப் பார்த்தால் எவ்வளவு சக்தி வாய்ந்த லூசிபர் வளர்கின்றார் என்பது தெரியவரும். இது மிகவும் அவருக்கு ஆபத்தானது.(லூக்11:24-26) 'ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீயஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன் எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்." எனவே இயேசு பின்வருமாறு கூறினார்;:'என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்."(யோவா.14:23)

எமக்குள் சாத்தானின் இயல்புகள் உள்ளன என காணப்பட்டுவுடனே அதனை நிறுத்தவேண்டும். அல்லது அழிவு பெரிதானதாகத்தான் இருக்கும். இங்கு இந்த இறைவார்தையை நோக்குவோம்:பேதுருவுக்குள் சாத்தனின் இயல்புகளைக் கண்ட இயேசு,'பேதுருவே தயவு செய்து இப்படி சொல்லவேண்டாம், அமைதியாய் இரும். அமைதியாய் இரும். நான் உனக்கு சிலவற்றைச் சொல்லுகின்றேன் என அன்பு ததும்ப தாம் மிகுந்த அன்புகொண்ட பேதுருவுடம் சொல்லவில்லை. இயேசு அதை சகித்துக்கொண்டாரா? விட்டுக்கொடுத்து சமாதான உடன்படிக்கை செய்துகொண்டாரா? இல்லவே இல்லை அக்கணமே கோபத்துடன் பேதுருவைத் திரும்பிப் பார்த்து, 'என் கண்முன் நில்லாதே சாத்தானே- என் பின்னாலே போ- நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்றார்.(மத்16:23). எனவே சாத்தனின் இயல்புகளை உடனடியாக உதறித்தள்ளுவோம். லூசிபரிடம் கேட்போம், அவர் மனம் நோகவிட்டால் பின்பு அதனை விட்டுவிடுவோம் என சமரசம் செய்வேமா?  இல்லவே இல்லை. மறுகணமே நாமே விட்டுவிடுவோம். இறைவார்த்தை கூறுவதைக் நாழிகையும் கோட்போம். செயற்படுத்துவோம். எம்மை விட்டு வெளியேறி தீய ஆவி அப்போது வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் கண்டுபிடிக்கும்.  

பைபிளில் எபிரேயர் 12:15'உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்துவிடாமலிருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள். கசப்பான நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காத படியும் அதனால் பலர் கெட்டுப்போகாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள். யாராவது நீங்கள் கெட்டுப்போய் விட்டீர்கள்-தூய்மையற்றவர்களாகிவிட்டீர்கள்- என்றால் மற்றவர்களையும் கெட்டுப்போகிறவர்களாக மாற்றக் கூடிய  இயல்புநிலைக்கு ஆளாக்குவீர்கள். நாம் எம் நினைவை மீட்டினால், லூசிபர் தீட்டுப்பட்டபோது-கெட்டுப்போய் விட்டபோது, மூன்றில் ஒருபகுதி வானதூதர்களையும் தீட்டுப்படுத்தி தூய்மையற்றவர்களாக்கிவிட்டான். ஒரு தீமை இருந்தால். அந்த தீமை மற்ற தீயவர்களையும் ஈர்க்கும் என்பது உறுதி. பைபிளில் திவெ12:4'அது தன்வாலால் விண்மீன்களின் (வானதூதர்கள்) மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப்போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது." 

(திவெ12:7பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது. அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்;.)

பாவம் புரிந்த வானதூர்களை கடவுள் விண்ணுலகில் வைத்திருக்கவில்லை.அவர்கள் வெளியேற்றப் பட்டார்கள். நமக்குள் ஏதேனும் கலகத்தனமான செயற்பாடுகள் இரகசியமாக வளர்ந்துவந்தால் இந்த கலகச்செயல்களைப் பற்றி மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் ஒரு லூசிபர் எமக்குள் வளர்கின்றார் என்பதற்கான ஒரு தெளிவான அறிகுறி இதுவாகும். 

பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது." 'இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன்- (என்பது இங்கு சாத்தானின் மறுபெயர்), நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள்மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். (திவெ.12:10)

லூசிபர்-தீயஆவி உள்ளே இருப்பவர்கள் ஒரே புகார்செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களிடம் பாதுகாப்பு இல்லை, நியாயம் இல்லை, குறைகளே இருக்கும். அவர்கள் கடவுளுக்கு முன் இருளில் இருக்கிறார்கள். நல்லது எடுத்துச் சொன்னாலும்-செய்துகாட்டினாலும் அதிலும் குற்றம் சாட்டுகிறார்கள். இவ்வாறு குற்றச்சாட்டுகளில் மட்டுமே மூழ்கியிருப்;பவர்கள் எம் மத்தியிலும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களும் தங்களைப்பற்றி கவனமாக இருக்கவேண்டும்.  ஏனென்றால் அப்படிப்பட்வர்களுக்குள் ஒரு லூசிபர் வளர்கின்றார்.

உள்ளத்தின் எண்ணங்களை ஊடுரிவிப் பார்க்கக்கூடியவர் கடவுள் ஒருவரே. அவர் முன் நாம் வெளிப்படையாக இருப்போம். நாம் கண்களை மூடிக்கொண்டு அகக் கண்களைத் திறப்போம். நம் மனசாட்சியை ஆராய்வோம். நமக்குள் எங்காவது லூசிபர் இருப்பதற்கான அறிகுறிகள் எங்களிடம் உள்ளதா என எம் மனசாட்சியின்படி தன்னுணர்வு வெறுவோம். லூசிபர் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா என அறிவுத்தெளிவு பெறுவோம். இயேசு தன்னைத் தாழ்த்தியதுபோல், அன்னைமேரிமாதா தன்னைத் தாழ்த்திக் கொண்டதுபோல, நம்மைநாமே தாழ்த்துவோம். அன்னைமேரிமாதா தன்னைத் தாழ்த்தினார். அதனால் கடவுள் அவரை உயர்த்தினார். அன்னையை விண்ணகத்தில்; உயர்ந்த பதவியில் உயர்தினார். எனவே நாம் இதில் அறிந்துகொண்ட எல்லாவற்றிற்கும் ஆண்டவருக்கு உளமார நன்றி கூறுவோம். 

காணாமற்போன மகன் அறிவு தெளிந்தவராய் தந்தையிடம் திரும்பிவந்துபோல, (லூக்.15:17-20) அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ~அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்;@ இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்;@ உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்" என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித்தழுவி முத்தமிட்டார்." மனம் மாறுவோம். விழுந் தடிபணிவோம். பழுதுளப் பாவப்படுகுழி இனியும் விழுந்திடாது எம்மை காக்கும்பட இயேசுவிடம் மன்றாடுவோம். இயேசு ஆண்டவர் ஓடேடிவருவார். நம்மையும் கட்டி அணைத்து தழுவி முத்தமிடுவார். விண்ணுலகில் எம்மைக்குறித்து அப்போது மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்.(லூக்.15:7). இயேசுவைக் கண்டதும் லூசிபர் கத்திக்கொண்டு இயேசுவின் முன் விழுந்து பணிந்து பேய்விடும். (லூக்.8:26-39) 

ஒவ்வொரு நாளும் தவறாமல் இறைவனிடம் வேண்டும்போது இவ்வாறு அவரிடம் கேட்டுக்கொள்வோம்: இயேசுவே, நாங்கள் முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக் கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடைய எங்களுக்கு அருள்புரியும். நாங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவர்களாய் நடந்து கொள்ள எங்களுக்கு அருள்புரியும்;. நாங்கள் பயன்தரும் நற்செயல்கள் அனைத்தும் செய்து கடவுளைப்பற்றிய அறிவில் வளர எங்களுக்கு அருள்புரியும்;. நாங்கள் முழு மனஉறுதியோடும் பொறுமையோடும் இருக்குமாறு தம் மாட்சிமிகு ஆற்றலுக்கேற்பத் தம் வல்லமையால் அவர் எங்களுக்கு வலுவூட்ட அருள்புரியும்;. மகிழ்ச்சியோடு, தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்த எங்களுக்கு அருள்புரியும்;. அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்குபெற எங்களைத் தகுதியுள்ளவர்களாக்க எங்களுக்கு அருள்புரியும்;. அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்த எங்களுக்கு அருள்புரியும்;. அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் அடைய எங்களுக்கு அருள்புரியும்;. (பார்க்க கொலோ. 1:9-14) நின்ற இடம்தெரியாது லூசிபர் ஓடிவிடுவார்இ

தீயோனை- இருளின் அதிகாரத்தை விரட்ட நாம் தூயஆவியால் நிரப்பப்படவேண்டும். எனவே தாவீதின் கடவுளிடம் தாவீதோடு சேர்ந்து உரத்த குரலில் வேண்டுவோம். 'கடவுளே,என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்;@ என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்;@ உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்;. உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்;. தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்."(திபா.51:9-12) கடவுள் எம் தீவினை முற்றிலும் நீங்கும்படி அப்போது எம்மைக் கழுவுவார். எம் பாவம் அற்றுப்போகும்படி எம்மை தூய்மைப்படுத்துவார். ஈசோப்பினால் எம்மைக் கழுவுவார். நாம் தூமையாகுவோம். உறைபனியிலும் வெண்மையாகுவோம். மகிழ்வொலியும் களிப்போசையும் நாம் ஒவ்வொரு நாழிகையும் கேட்கும்படி செய்வார். 'நாங்கள் வலப்புறமோ, இடப்புறமோ, எப்பக்கம் சென்றாலும், ஷஇதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்| என்னும் இறைவார்த்தை பின்னிருந்து எங்கள் செவிகளில் ஒலிக்கச்செய்வார்."(எசா.30:21)  எனவே இயேசு கூறுவதை கருத்தாய் கோட்டு: 'என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்." அதனைச் செயற்படுத்துவோம். அப்போது தீயோன் தான் பயன்படுத்திய அனைத்துத் தந்திரோபாயங்களும் செயலற்றுப்போய்விட்டதே என்று அறிந்து அவர்கள் கடவுளின் பிள்ளைகளாகிவிட்டார்கள். அவர்கள் சார்பாக மூவொரு கடவுளும் எனக்கெதிராகப் போரிடப்போகிறர்கள், என்னை தொலைக்கப் போகின்றார்கள் என்று எண்ணி செய்வதறியாது திகைத்து அலகை அச்சமடையும். எம்மை விட்டு வெளியேறி தீயஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் கண்டுபிடிக்கும். இருளின் அதிகாரம் எங்களைவிட்டு விலகிபோகும். மூவொரு இறைவனும் எமது அன்னை மரியாவும் எங்கள் வீட்டில் வந்து எங்களுடன் குடிகொள்வார்கள்."ஆண்டவரை எங்கள் வீட்டுக்குக் கொண்டுவருவோம். கடவுளுக்கு ஏற்றவை பற்றி எப்போதும் எண்ணுவோம். அலகை அடிபணிந்து அகன்றேபோகும்.

உசாத்துணைநூல்கள்:

1. திருவிவிலியம்,(இணைத் திருமுறையுடன்) பொதுமொழிபெயர்ப்பு,22ஆவது பதிப்பு 2009,TNBCLC.

1.Bible, New Revised Standard Verson.

2. Bible, King James Verson.d

3. Bible,Good News Translation (GNT) -Version.

4. https://www.youtube.com/watch?v=uX5_u31qwYk&t=461s, viewd on 24.09.2021 @8:86 P.M.

5. https://www.youtube.com/watch?v=BgghzRisdaM, viewd on 24.10.2021 @01.23 P.M.

Friday, October 15, 2021

அன்னை மரியாவைப்பற்றியும் இயேசுவைப் பற்றியும் முஸ்லீம் பெண்ணினுடைய வலிமைமிக்க சாட்சியம்.

POWERFUL TESTIMONY OF A YOUNG MUSLIM LADY WHO ENCOUNTERED JESUS THROUGH MARY

https://www.youtube.com/watch?v=eiRZhQ-n3FY

https://www.nikkikingsley.com/

https://www.youtube.com/watch?v=0JTOmEa1LaI


Tuesday, June 23, 2020

மாணவர்களுக்கான தரம் 1 முதல் உயர்தரம் வரை வினாக்கள் அடிங்கிய இணையத்தளம்


செய்தி மதிப்புகளுக்கும்- (பெறுமதி சேர்க்கும் காரணிகள்) மற்றும் செய்தி கூறுகளுக்கும் (அளவுகோல்கள்) உள்ள வேறுபாடுகள்

Difference between New Values & Elements of News:
ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, 
யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை


News Value:: செய்தி மதிப்புகள் - பெறுமதி சேர்க்கும் காரணிகள் : செய்திக்கு வழங்கப்பட்ட பல்வேறு வரையறைகளை நாம் சந்தித்திருக்கிறோம். அவை எமது கவனத்தையும் ஈர்த்துள்ளன. ஒரு நிகழ்வு செய்திகதான என தெரிந்தெடுப்பதற்கு அவை பெரும் உதவிபுரிந்துள்ளன. சில பொதுவான காரணிகள் தமக்குள் சிறிய மற்றும் பெரிய அளவில் சில பண்புகளை மற்றொன்றுடன் பகிர்ந்து கொள்ளுகின்றன.

செய்தி என்பதற்கு கொடுக்கப்பட்ட பல்வேறுபட்ட  வரையறைகளிலிருந்து எடுக்கப்பட்ட பொதுவான சில அம்சங்களை செய்தி மதிப்புகள்–பெறுமதி சேர்க்கும் காரணிகள்– என கூறுகின்றோம்.  இந்த பெறுமதி சேர்க்கும் காரணிகளே ஒரு பொதுவான சம்பவத்திற்கு, நிகழ்வுக்கு, அறிக்கைக்கு, கருத்துக்கு செய்திப் பெறுமானத்தை–மதிப்பை  கொடுக்கின்றன. செய்திக்காக கொடுக்கப்பட்ட பலவேறுபட்ட வரைவிலக்கணங்களிலிருந்த வடிகட்டி எடுக்கப்பட்ட பொதுவான அம்சங்களே செய்தயின் மதிப்புகள் எனப்படுகின்றன. இந்த செய்தி மதிப்புகளை அளவுகோலாக வைத்து ஒரு பொதுச்சம்பவம், நிகழ்வு, வாக்குறுதி, கருத்துக்கள் செய்திசார் பெறுமானத்தை பெறுகின்றன எனலாம். ஒரு செய்திப் பொறுமானத்தின் அளவுகோலுக்கு எதிராக ஒரு நிகழ்வை மதிப்பீடு செய்தலின் முதல் நிலை –கட்டம்– இதுவே ஆகும் 


News Elements: செய்தியின் கூறுகள்ஃஅளவுகோல்கள்: குறிப்பிடப்பட்ட ஒரு நிகழ்வு செய்தியாக வடிவமைக்கப்பட -கருதப்பட- தகுதியானது என முடிவு எடுக்கப்பட்ட உடன் அல்லது பின்னர் அடுத்த கட்டமாக அதனை ஒரு செய்தி ஊடகத்திற்கு அல்லது ஒரு செய்திப் பத்திரிகைக்கு எழுதுகின்றோம். இப்போது அந்த நிகழ்வை நியாயமாக எழுத தேவையான நிபுணத்துவம், துல்லியாமாக எழுத தேவையான துணிவு, தெளிவாக தெரிவிக்க தேவையான திறமை, தொடராக ஒழுங்குபடுத்தும் ஆற்றல், சுற்றிவளைக்காது சுருக்கமாக படைக்கும் ஆற்றல். அழகுற அனைத் தையும் அடக்கும் ஆற்றல், அற்புதமாக அர்த்தம் நிறைந்ததாக்கும் ஆற்றல், சுவாரிசமாக சமர்ப்பிக்கும் பாணி, பக்கம் சாராது சொற்குறைப்பும் பொருள் செறிவும் கொண்டு எழுதும் ஆற்றல். பொருத்தமான சொற்களை, அனைவருக்கும் தெரிந்த பொதுவான மொழியில் எழுதும் ஆற்றல்  போன்றவை மிக முக்கியமாவை. ஒரு செய்தி எழுத்தாளர் செய்தியை எழுதும்போது பயன்படுத்தும் இந்த நிபுணத்துவமே செய்தியின்;கூறுகள்  எனப்படும். 

உசாத்துணை நின்றவை:-
  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம் முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001இ புனித வளன் கத்தோலிக்க அச்சகம்இ யாழ்ப்பணம்.

Friday, June 19, 2020

செய்தியின் கூறுகள் -அளவுகோல்கள் - News Elements


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, 
யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




ஓர் ஊடகவியலாளர், தமக்குக் கிடைக்கக்கூடிய வளங்களைப் பயன்படுத்தி தரமான ஒரு செய்தியை எழுதவேண்டும். ஒரு செய்தி நிருபர் தனது செய்தியினைச் சமூகவியல் வெளிப்பாடுகள், பிரசாரம் மற்றும் மனித நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்தி எழுதலாம். செய்திகள் தயாரிக்கப்படும் உண்மைப் விடயங்கள் மிகவும் மென்மையானவை. அவைகள் வாசகர்கள், இரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து உடனடிபிரதிபலிப்பைப் பெறுகின்றன. பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள செய்தி எழுத்து நடை மற்றும் வடிவத்தை அமைப்பதற்கு செய்தி உறுதிப்படுத்து கின்றது.

செய்திக்கு மதிப்பையும் பெறுமானத்தையும் தகமையையும் வரவேற்பையும் வழங்கும் விதத்தில் எழுதும்போது -தயாரிக்கும்போது- வடிவமைக்கும்போது கருத்தில் கொள்ளவேண்டிய செய்திக் கூறுகள் பற்றி நோக்கவோம்:- 

1. Accuracy – துல்லியம் 
2. Balance and Fairness  – சமநிலையும் நியாயமும் 
3. Objectivity– குறித்தவிடயம்
4. Clarity– தெளிவு
5. Conciseness -Brevity– சுருக்கம் 
6. Credibility: நம்பகத்தன்மை- Factual – உண்மைதன்மை 
7. Meaningful- கருத்தாளம் - அர்த்தம் நிறைந்தது
8. Interesting– கவனத்தை கவருதல் ஃ சுவாரிசம்
9. Comprehensiveness  – அனைத்துவிடயங்களையும் உள்ளடக்கியமை
10. Cohesiveness / Order– இணக்கத்தன்மை / தொடர்தன்மை / ஒழுங்குமுறை 
11. Current – நடப்புநிலை 


1. துல்லியம் : உண்மையற்ற செய்தி உயிரற்ற செய்தியாகும். அரைகுறை ஆதாரங்களோடு, சொந்த எண்ணங்கள், கருத்துக்களோடு மெய்பொருள் காணாமல் அறிக்கையிடுவது உண்மைத் தன்மைக்கு ஆப்பு வைப்பதைப் போன்றது. உண்மைகளைச் சரிபார்க்க நேரம் போதுமானதாக இல்லை என்ற காரணத்தைக்காட்டி ஊடகவியலாளர்கள் தப்பித்துக்கொள்ளகூடாது. அசட்டுத் தனத்தாலோ, அறியாமையாலோ வேண்டுமென்றோ, சொந்தக்காரணங்களுக் காகவோ பிழையான தகவல்களை வழங்கக்கூடாது. இங்கு தமிழில் உள்ள ஒரு பழமொழியை நோக்குவது இதற்கு துணைபுரியும்: 'எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு." 

இங்கு 'நன்றாக இருக்கிறது. நன்றாக வளரும், ஏசுவார்கள் எரிப்பார்கள் அஞ்சவேண்டாம். உண்மையை எழுதுங்கள். உண்மையாக எழுதுங்கள்." என்று 1959.02.19அன்று கொழும்புத்துறை யோகர் சுவாமிகள் ஈழநாடு முதல் இதழைப் பார்வையிட்டபின்பு அருளிய ஆசீர், பத்திரிகைத்துறையில் நோக்கப்பட வேண்டியது. (யாழ் நகரின் நீண்டகாலம் ஒரே பத்திரிகையாக வலம்வந்த இந்த பத்திரிகைக் காரியலயம் பலதடவை எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) 

தகவல்கள் உண்மையானதா என ஐயப்பாட்டினை எழுப்பும்போது பிழையாக வெளியிடுவதை தவிர்த்து அந்த செய்தியை பிரசுரிக்கமால் விடுவதே சாலச்சிறந்தது. சந்தேகம் எழும்போது நீக்கி விடுக- Where/when in doubt, Leave it out என்ற ஊடகவியலாளரக்குரிய பொன்மொழியை இங்கு ஞாபகப்ப டுத்துவது மிகவும் பொருத்தமானது. ஆதாரமற்ற செய்திகள் ஆபத்தான செய்திகளாக முடியும் என்பதை எப்போதும் ஊடகங்கள் நினைவில் நிறுத்தவேண்டும். 

நாம் துல்லியம் என குறிப்பிடும் போது தகவலின் ஒவ்வொரு சிறு துண்டும்- every crumb of its details மிகவும் சரியக உறுதிப்படுத்தப்பட்ட துல்லியத்துடன் இருக்கவேண்டும்:-

  • செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள், பதவிகள் கட்டயம் சரியான துல்லியத்துடன்  இருக்க வேண்டும்.
  • செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம் கட்டயம் சரியான துல்லியத்துடன் இருக்க வேண்டும்.
  • செய்தியில் மனிதர்களின் வயதுகள் கொடுக்கப்பட வேண்டுமாயின் கட்டயம் சரியான துல்லியத்துடன் இருக்க வேண்டும்.
  • நிகழ்வு (சம்பவம், பெரியார்களின் உரைகள், விபத்துக்கள்) செய்தியாக வெளியிடப் படவேண்டுமாயின் திகதிகள், நாள்கள், நேரங்கள், விபத்துக்களில் பாதிக்கப்பட்வர்கள் விபரங்கள் கட்டயம் சரியான துல்லியத்துடன் இருக்க வேண்டும்.
  • மொழிசார்ந்த - உச்சரிப்பு, வார்த்தைகள், இலக்கணத்தின் கட்டமைப் புக்கள்  சரியான துல்லியத்துடன் இருக்கவேண்டும்.
  • மக்களின் கருத்துகள்ஃவெளியிடப்பட்ட அறிக்கைகள் சரியான துல்லியத்துடன் இருக்க வேண்டும். செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ள மேற்கோள்கள்,சூழமைவும் சரியானதுல்லியத்துடன் இருக்க வேண்டும். இது இன்னுமொரு அர்த்தத்தை–பொருளைக் குறிக்கும் வகையில் தவறாகக் மொழி பெயர்க்கப்படக்கூடாது.
  • விஞ்ஞானம் சார்ந்த தகவலாக இருந்தால் விஞ்ஞான ரீதியாக சரியாக எழுதப்பட்டு விளங்கப்படுத்தப்பட்டுள்ளதா? எனபதை சரியான துல்லியத்துடன் உறுதிப்படுத்த வேண்டும். 
  • விளையாட்டுடன் சார்ந்த தகவலாக இருந்தால் நிலை நாட்டப்பட்ட சாதனைகள், எடுக்கப்பட்ட ஓட்டங்கள், பெறப்பட்ட கோல்கள் போன்ற வை சரியான துல்லியத்துடன் உறுதிப்படுத்த வேண்டும்.
  • நீதிமன்றத்துடன் தொடர்புடைய தகவலாக இருந்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை திரிபு படுத்தாமல் சரியான துல்லியத்துடன் உறுதிப்படுத்த வேண்டும்.
ஊடகங்களில் தோன்றியதை பெறுநர்கள் ஒருபோதும் நம்பவில்லை என்று சொல்வதற்கு ஒருபோதும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதற்கு ஊடகவியலாளர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். செய்தியில் வழங்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் வாசகர்கள் கேள்விகள் எதுமின்றி ஏற்றுக்கொள்ள தக்கவகையில் செய்தி எழுதப்படவேண்டும். துல்லி யம் என்பது சரியானது. அந்த சரி சாதாரணமான பொதுவான தோற்றத்தில் மட்டுமல்ல, மாறாக  விவரங்களிலும் கூட சரியாக அமையவேண்டும். ஒரு செய்தித்தாளுக்கு அல்லது ஊடகத்திற்கு  துல்லியமானது என்பது ஒரு பெண்ணுக்கு என்ன நல்லொழுக்கம் போன்றதை ஒத்ததாகும்.


2. நடுநிலையும் நியாசமும் (பாரபட்சமற்ற நிலை);: நாணயத்திற்கு இருபக்கங்கள் இருப்பதுபோல செய்திக்கும் இருபக்கங்கள் உண்டு என்பதை நாம் கற்றறிந்து எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு விடயத்தினை விளக்கும் போது அதன் இருபக்கங்களையும் அப்படியே படம் பிடித்து காட்டுவது சாலச்சிறந்தது. எந்த செய்தியும் பக்கம் சாராமல் வெளியிடப்படும்போது மதிப்புடையதாகிறது. பக்கம் சார்ந்து, பகுதிக் கருத்து க்களை பிரதிபலித்து, ஒரு தரப்பின் விருப்பு வெறுப்புக்களுக்கு மட்டும் இடம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகள் சமநிலை பேணுவதில்லை. 

உ-ம்:பல்கலைக்கழகத்தில் போராட்டம் ஏற்ப்பட்டிருப்பின் அதுதொடர்பாக துணைவேந்தரினதும் அவரது குழுவினரதும் அறிக்கைகளை வெளியிடும் போது மாணவர்களின் குரல்களையும் கருத்துக்களையும் வெளியிடுவது சமநிலையை பேணுதலுக்கு எடுத்துக்காட்டாகும். தீர்ப்பு வழங்கப்பபடும் வரை குற்றம் சுமத்தப்பட்டவர் என குறிப்பிடுவது சாலப் பொருத்தம். இலங்கையில் நடந்து முடிந்த 56,58,77,82,83 இனக்கலவரங்களுக்கு ஊடகங்களின் சமநிலை பேணப்படாத- பொறுப்பற்ற செயற்பாடுமே ஒரு காரணம் என கூறலாம்.

நியாயத்தன்மை என கருதும் போது ஊடகவியலாளர்கள் தமது சொந்தக் கருத்துக்களை- ஆலாசனைகளை- நோக்கங்களை சேர்க்கக் கூடாது. வெளியி டப்படும் செய்திகளை ஆயிரம் ஆயிரம் மக்கள் படிக்கப் போகிறார்களை. அதிகமான வார்த்தைப் (சிலேடைசொல்;) பிரையோகங்கள் வெளியிடுவ தானால் அவர்களின் சிந்தனாசக்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடக்கூடாது. நடுநிலை வார்த்தைகளைப் பயன்படுத்துவது எப்போதும் சிறந்தது.

ஒவ்வொரு விடயத்திலும் செய்திகளை சமநிலையாக எழுதுவது என்பது எளிதான காரியமல்ல என்றாலும் செய்திகள் சமநிலையாக எழுதப்பட வேண்டும், எந்தவொரு நிகழ்வினையும் மிகச்சிறந்த முறையில் சமநிலை யுடன் வழங்க ஓர் ஊடகவியலாளர் கடுமையான முயற்சி எடுக்க வேண்டும். ஊடகவியலாளர் குறிப்பிட்ட அனைத்து உண்மைகளையும் சரியாகவும் நியாய மாகவும், துல்லியமாகவும், புறநிலைத்தன்மையாகவும்-குறிக்கோளுக்கமை வாக எழுத வேண்டும். அவர் தனது செய்தி அறிக்கை சரியான உண்மை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து உண்மைகளையும் ஒன்றாக இணைத்து எழுதவேண்டும். அவர் நிகழ்வு நடைபெற்றமாதிரியே அந்த நிகழ்வின் நியாயத்தை படம்பிடித்துப் பெறுநருக்கு காட்டவேண்டும். செய்தி உள்ளடக்கம் மற்றும் அர்த்தத்தில் சமநிலையில் இருப்பது அவசியம். ஒரு நிருபர் முழு சூழ்நிலையையும் ஒரு சீரான பார்வையை அளிக்க உண்மைக ளைத் தேர்ந்தெடுத்து ஒழுங்கு ஏற்பாடு செய்து எழுதவேண்டும்.



3. குறிக்கோள்: செய்தி என்பது ஒரு நிகழ்வு நிகழ்ந்ததைப் பற்றிய ஓர் உண்மை அறிக்கை ஆகும். செய்தியானது குறித்த ஒரு விடையத்தை நோக்கமாக-மையமாகக் கொண்டிருக்க வேண்டும். செய்தியைவெளியிடும் ஊடகம் ஒருபக்கம் சாய்ந்து செயற்படக்கூடாது. செய்திகளில் ஊடகங்களின் தனிப்பட்ட சார்புகள், விருப்பு வெறுப்பக்கள் பிரதிபலிக்கக்கூடாது. ஒரு செய்திக்கு இருபக் கங்கள் இருக்குமாயின் இரண்டு பக்கங்களுக்கும் முழுமையான தழுவுதல்கள்- (coverage)- கொடுக்கப்பட வேண்டும். இன்னொரு வார்த்தையில் கூறுவதையின் செய்தியானது சமநிலை வாய்ந்ததாக இருக்கவேண்டும். 

செய்தியில் உண்மைகள் நிகழ்ந்தபடியே பக்கச்சார்பற்ற முறையில் தெரிவிக் கப்பட வேண்டும். செய்திகளில் உள்ள குறிக்கோள் - புறநிலைத் தன்மை நவீன பத்திரிகையியலில் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றாகும். இதன் கருத்து எந்தவொரு தனிப்பட்ட சார்பு அல்லது எந்தவொரு வெளிப்புற செல்வா க்குமின்றி தெரிவிக்கப்பகிறது என்பதாகும். செய்தி தவிர்க்க முடியாதது. ஒரு நிழலும் இல்லாமல் செய்திகளை வழங்கவேண்டும். பளபளப்பாக வண்ணங் களாக்கப்பட் வடிவமாக நிகழ்வுகளை-செய்திகளை ஒரு ஊடகவியலாளர் பார்க் கக்கூடாது. முழுக்க முழுக்க பக்கச்சார்பற்ற முறையில்; செய்திகள் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு விடயத்திலும் நேர்மையான அவதானிப்பு அவசியம். குறிக்கோள்- புறநிலைத் தன்மை; செய்தி எழுதும் போது அவசியம் ஏனென்றால் பெறுநர் தங்கள் கருத்துக்களை செய்திகளின் அடிப்படையில் உருவாக்குவதனால் தூய்மையான செய்திகளால் மட்டுமே பெறுநர்களுக்கு நம்பிக்கையைத் கொடுக்க முடியும். எனவே செய்தியில் எல்லா நடையிலும் புறநிலைத்தன்மை; -குறிக்கோள் இருக்க வேண்டியது அவசியம்.

4. தெளிவு: சமூகத்தில் பலதரப்பட்டவர்கள் செய்திகளை பெறுகின்ற பெறுநர் களாக உள்ளனர். எனவே சாதாரண சராசரி வாசகர்களைக் கவனத் தில் கொண்டு எப்போதும் செய்திகள் வெளியிடப்படவேண்டும். செய்திகள் எப்போதும் இலகு மொழியில் அழகுநடையில் தெளிவு சாரலில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பலபொருள் கொடுக்கும் சொற்களை-ambiguous சிக்கல் கொடுக்கும் மொழிநடை யை தவிர்க்க வேண்டும். சரியான தெளிவு டன் இலக்கணக் குறிகளை சரியாக, சரியான இடத்தில் பாவிக்க வேண்டும். (பொலிஸ், வாகனத்திற்கு கல்வீச்சு) (09.06.2017 வலப்புரி பத்திரிகை 12 பக்கம் குழப்பத்துடன் வந்த தலையங்கம் ஒன்றை நோக்குவோம். நீதிபதி கர்ணனுக்கு விதித்த தண்டனையை ஒரு போதும் இரத்துச் செய்ய முடியாது) செய்தி வெளியிடுவதன் பிரதான நோக்கம் வாசகரை சுற்றி என்ன நடக்கிறது என்ற விம்பதத்திற்குள் அவர்களை வைத்திருப்பதாகும். எனவே செய்திகளை வாசகர்களின் அறியவேண்டும் என்ற ஆவலை the reader’s inquisitiveness திருப்திப டுத்துவதாக அமையவேண்டும். வாசார்களுக்கு தெளிவு இல்லை என்ற தகவல்கள் தவிர்க்கப்படவேண்டும்.    It is said that a reporter, when is in doubt, he should leave it out. 
தெளிவாகவும் குழப்பமின்றியும் திட்டவட்டமாகவும் செய்திகள் வெளியி டப்படவேண்டும். ஊடகங்கள் என்ன சொல்கின்றன என பெறுநர்கள் யோசிக்குமளவிற்கு செய்திகளில் வாசகர்கள் குழப்பமடையக்கூடாது. சொல் சிக்கனமும் பொருள் செறிவும் மிக்க சிறிய வாசனங்களே எப்போதும் சிறந்தது. பொருத்தமான சொற்களை பொருள் விளங்கி பாவிக்கவேண்டும். எல்லோ ருக்கும் தெரிந்த சொற்களை எப்போதும் பாவிக்கவேண்டும். புதிய சொற்க ளாயின் விளக்கங்கள் கொடுக்கப்படவேண்டும். தெளிவற்ற செய்தி கள் தேவை யற்ற பிரச்சினைகளை உருவாக்கலாம்.

உ-ம் நாவாப் என்பவரின் உயிர் ஊசலாடுகிறது. இரவு 11மணிக்கு வைத்திய சாலைக்கு கொண்டு சென்றபோது 12.45 மணிக்கு பின்னிரவு தாண்டமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது கல்கத்தா சண்டே பத்திரிகையின் சென்னை செய்தியாளர், நாவாப் இறந்துவிட்டாக செய்தி யை வெளியிட்டார். ஆனால் அவர் இறக்கவில்லை. பத்திரிகை வெளிவந்து 5 மணித்தியாலங்கள் கழித்தே இறந்தார். அடுத்த நாள் மற்றய ஊடகங்கள் நாவாப் அவர்கள் இறந்து விட்டார் என தெரிவிக்க, குறிப்பிடப்பட்ட அந்த ஊடகம் நாவாப் அவர்கள் உண்மையாகவே இறந்து விட்டார் Nawab is really read  என செய்திவெளியிட்டது.

பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட செய்தி வடிவத்தை செய்திகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். செய்தி ஒத்திசைவாக, சுருக்கமாக, தெளிவாக மற்றும் எளிமையானதாக கட்டாயம் இருக்க வேண்டும். செய்தியானது அங்கும் இங்கும் பாய்ந்துகொண்டு சீரற்றதாக இருக்கக்கூடாது. It must not be jumpy and uneven=சீரற்ற. சீரற்றறுகண்டபாட்டிற்கு பரவியுள்ள, ஒழுங்கற்ற மற்றும் அர்த்தத் தில் தெளிவற்ற ஒரு செய்தி, செய்திகளின் சிறப்பியல்பு கொண்டிருப்பதில் லை. அர்த்தம்; முற்றிலும் தெளிவாக இருக்கும் வகையில் செய்தி மிகவும் தெளிவாக ஒருங்கிணைத்து எளிமை யாக எழுதப்பட்ட வேண்டும்.


5. நம்பகத்தன்மை: செய்திகள் எப்போதும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும். வெளியிடப்படுவதற்கு முன்னர் உண்மைகள், தகவல்கள், புள்ளிவிபரங்கள் சரியானதா என பலதடவைகள் பரிசோதிக்கப்பட வேண்டும். செய்திகளை விரைவாக வெளியிட வேண்டும் என்ற அவசரச் செயற்பாடு தவறுகள் அச்செய்திக்குள் நுழைவதற்கு வாய்பளித்த விடும். எனவே செய்திகளை, செய்தி வெளியிட்டு ஆசிரியருக்கு அனுப்புவதற்கு முன்பே நகலை திரும்பப்பார்த்து திருத்திக்கொள்வது சாலச்சிறந்ததாகும். செய்தியா னது இன்னும் திருத்தப்பட வேண்டும் என்றால் திருப்பி எழுதுவதே பொருத்த மான தாகும். செய்திகள் ஆதாரபூர்வமாக சேகரிக்கப்படவும் வெளியிடப் படவும் வேண்டும். 

எந்த செய்தியும் அது தரப்படும் நிலையத்தின் நம்பகத்தன்மையிலேயே பெரிதும் தங்கியுள்ளது. பெரும்பாலான வாசகர்கள் எந்தெந்த செய்தி நிறுவனங்கள் நம்பகத்தன்மை வாய்தவை என தெரிந்து வைத்திருக்கிறார் கள். 

உ-ம்: பி.பி.சியை நம்பகத்தின் நடுநிலையமாக தெரிந்து வைத்திருக்கி றார்கள். லங்காபுவத் என்ற செய்தி நிறுவனத்தை லங்கா புழுகு என்றும். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை இலங்கை ஒளிப்பு மறைப்பு கூட்டுத்தாபனம் என்றும் பெறுநர்கள், நேயர்கள் தமக்குள் கதைப்பதை கேட்கும்போது இதனை நம்பகத்தன்மை அற்ற நிகழ்விற்காக இங்கு குறிப்பிடலாம். 

a உண்மைதன்மை / நம்பகத்தன்மை: செய்தியானது உண்மையாக நடந்த நிகழ்வின் தகவல் அல்லது அறிக்கை, சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியிடப்படவேண்டும். நாம் வாழும் இந்த ஊடக சகாப்பத்தில் செய்தியினை படிக்கும் ஊடகத் தெரிவுகள் பரவலாகவும் பரந்ததாகவும் உலகளவியதுமாக இருக்கின்றன. ஓர் ஊடகத்தில் வெளியான செய்தியானது உடனடியாகவே வேறு ஓர் ஊடகத்தில் பரிசீலித்து சரிபார்க்கக் கூடியநிலை காணப்படுகிறது. வறட்டுதையிரியத்தை எடுத்துகொண்டு செய்திகளை சோடித்தும், கற்பனை களை இடைச்செருகியும்- fabricated or concocted வெளியிடுவது ஊடகத்தின் நற் பெயருக்கும் நம்பகத்தன்மைக்கும் குந்தகம் விழைவிக்கும் செயலாக அமைந்துவிடும். எனவே சரியான தகவல்களையும் உண்மை களையும் வெளியிடுவது ஊடகங்களின் தலையாயக் கடமைகளாகும். 

மேற்கூறப்பட்ட துல்லியம், நடுநிலை, தெளிவு ஆகியன ஒன்று சேரும்போது அந்தகவல் மீது நம்பகத்தன்மை ஒன்று கட்டயெழுப்பப்படுகிறது. செய்தி ஒன்றில் நம்பகத்தன்மை உருவாக்கப்படுகிற விதம் பற்றி எளிய சமன்பாடு ஒன்றினை யுனெஸ்கோ தொடர்பாடல் நிபுணர் போல் டி மெசுனியர்( Paul De Mesuniyar - Measeneer) எடுத்துக் காட்டுகிறார்: 

A         +               B        +           C                =              C
Accuracy               Balance           Clarity                         Credibility

6. கருத்தாளம் / அர்த்தம் நிறைந்தது: செய்திகள் அர்த்தம் முள்ளவையா கவும் கருத்தாளம் மிக்கவையாகவும் இருக்கவேண்டும். சொற்குறைப்பும் பொருள் செறிவும் கொண்டதாக அமைக்கப்படவேண்டும். நாம் கற்றுக் கொள்ளும் செய்தி பெறுமானங்களை தாங்கியவையாக இருக்க வேண்டும்.  

7. கவனத்தை கவருதல் / சுவாரிசம்: செய்திகள் வெளியிடப்படும்போது வாசகர்கள் அந்த செய்தியை படிக்கும்போது சலிப்படையாது ஆர்வத்துடன் அறிய துடிக்கவேண்டும். அழகுமொழியில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட -கட்டமைக்கப்பட்ட செய்தி வாசகர்களில் ஆர்வத்ததை தூண்டி சலிப்புத்தன் மையை நீக்கிவடும் எனலாம். 

8. சுருக்கம்:  செய்திகள் சுருக்கமாகவும் சுவையானதாகவும் அமைகின்ற போது அதன் மதிப்பு அதிகரிக்கின்றது. அதனை அறிவோர் மகிழ்ச்சி அடைவர். செய்திகள் தேவையற்று நீண்டு செல்லக்கூடாது. தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் மீண்டும் மீண்டும் பாவிப்பதை தவிர்க்க வேண்டும். குற்ற செயல்களான செய்திகளாயின் அவற்ரை செய்தியாக மட்டும் பிரசுரிக்க வேண்டும். அதை விடுத்து ஏன் இந்த செயல்கள் நிகழ்கின்றன. இன்று பரவலாக இச்செயல்கள் எங்கும் நிகழ்கின்றன. என்று எழுத முற்படக்கூடாது. அவ்வாறு முற்படுவது இந்த விடயம் குற்றசெயல்கள் என்ற அல்லது விபரணக் கட்டுரையை ஊடகத்தில் எழுதுவதங்கு பொருத்தமான தலைப் பாகும். ஆனால் செய்தி அறிக்கையிடலுக்குப் செய்திக்குப் பொருத்தமானதல்ல. செய்திகளை சுற்றிவளைத்து வெளியிடும்போது வாசகர்களும் ஏன் செய்தியாளரும் குழப்பமடைந்து விடுகின்றனர். ஆங்கிலத்தில் ஒரு காலத்தில் ஒரு வசனத்தில் பாவிக்கப்பட்ட வார்த்தைகள் காலத்திற்கு காலம் குறைந்து வருகிறன. 17நூ- 45 சொற்கள், 19நூ-30 சொற்கள், இன்று 20 சொற்களுக்கு குறைவாகப் பயன்படுத்தப்படுகிறன.

சுருக்கம் என்னும்போது குறிகியதாக எழுதுவதல்ல. மாறாக குறுகிய சொற்களில், குறுகிய வசனங்களில், சிறிய பந்திகளில் எழுதுவதாகும். சிறிய சிறிய பந்திகளாக ஒரு கருத்தை அச்செய்திக்குள் எழுதும்போது அச்செய்தி சுவைநிறைந்ததாக அமைந்துவிடும். இன்றைய வாசகர்கள் அவசரமாக உள்ளார்கள். நீண்ட செய்திகளைப் படிக்க விரும்பமாட்டார்கள். சிறிய பந்தி களில் செய்தியை வடிவமைக்கும்போது பார்வைக்கு இலகுவாகவும் கண்க ளுக்கு இதமாகவும் அவர்களுக்கு அமைந்து விடுகிறது. உ-ம் உலகப்புகழ் பெற்ற பத்திரிகையாளர் புலிட்சர் சுருக்கமாக எப்படி எழுதுவது…? சொல்லவேண்டிய எல்லாத்தையும் எழுது. அதை அவுஸ்ரேலி யாவுக்கு சொந்த செலவில் தந்தி அனுப்புவதாக எண்ணிகொள்ளும் சுருக்கம் தானாக வந்தவிடும் என கூறுகின்றதை இங்கு நினைவுபடுத்துவது நன்று.

9. அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியமை/பூரணத்தன்மை: இதனைக் நோக்கும்போது எல்லா விடயங்கள், அம்சங்கள் உள்ளடக்கப் படவேண்டும் என்பதாகும். ஒரு செய்தியை படிக்கின்ற வாசகர் மனதில் நியாயமாக எழக்கூடய எல்லாக் கோள்விகளுக்கும் அச்செய்தி அழகுற விடைகொடுக் குமாக இருந்தால் அனைத்து விடயங் களையும் உள்ளடக் கியமை என்பது பூரணமாகிறது. பொதுவாக செய்தியானது '5-எ" வினாக்க ளுக்கும் ஒர் 'ஏ" வினாவிற்கும்: என்ன?, ஏன்? எங்கே?, எவர்?, எப்பொழுது?, எப்படி?, - (05 Ws+ 01 H: What?, Why?, Where?, Who?,  When?  How?) விடைகளை கொடுத்துவிட்டால் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியமைக்குள் வந்துவிடும் எனலாம். ஒரு செய்தியைப் படிக்கும்போது வாசகர் மனதில் நியாயமாக எழக்கூடிய எந்தக்கேள்வியும் இந் கேள்விகளுக்கள் அடங்கி விடுகின்றன.  

உ-ம் ஒரு சம்பவம் நடந்து விட்டால்:  என்ன நடந்தது?, ஏன் நடந்தது?, எங்கே நடந்தது?, எவர் நடத்தினார்?, எப்பொழுது நடந்தது?, எப்படி நடந்தது?, What happened?, Why happened? Where happened?, Who did it?,  When happened?  How did it happen?)  என்ற வினாக்களுக்கு பதில் கொடுத்துவிட்டால் அது ஒரு பூரண செய்தியாகும். இதற்கு இன்று சில சந்தர்ப்பங்களில் 6ஆவது “எ” –“W= for Whom” க்கு விடைகொடுக்கவேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. அதாவது எவருக்காக நடத்தப்பட்டது? என்ற வினாவிற்கான விடையும் விளங்கப் படுத்துவது கட்டயமாகிறது. இன்று நம்மை சுற்றி நடத்தப்படும் வாள்வெட் டுக்கள் இதற்கு உதாரணமாக லாம். எவருக்காக இந்த குற்றச்செயல்கள் நடத்தப்படுகிறது. உண்மையில் இவர்களை பயன்படுத்துபவர்கள் எவர்கள். அவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டியது கட்டயமாகிறது.


10. இணக்கத்தன்மை / தொடர்தன்மை ஃ ஒழுங்குமுறை - வரிசை: செய்திகள் எழுதப்படும்போது ஒரு தொடர் ஒழுங்கு காணப்படவேண்டும். அதாவது பாகங்களின் பொருத்தம்-Symmetryஒத்ததன்மை காணப்படவேண்டும். சரியாக திட்டமிடப்பட்டதாக, ஒழுங்கு படுத்தப்பட்டதாக, பின்னப்பட்டதாக இருக்கவேண்டும். செய்தியின் கடைசிப்பந்தியில் செய்தி யின் முடிவு அமையவேண்டும். சரியாக பொருந்தப்படாத பாகங்களை கொண்ட செய்தி கள் அதன் அழகை கெடுத்துவிடுகின்றன. இதனால் வாசகர் கள் சரியான ஒழுங்கில் படிப்பதற்கு குந்தகம் விளைவித்துவிடுகிறது. Symmetry mars the  beauty  and the listener does not go on with the bulletin smoothly and comfortably. செய்தியானது அங்கும் இங்கும் பாய்ந்துகொண்டு சீரற்றதாக இருக்கக்கூடாது. It must not be jumpy and uneven.

Attribution– பண்புக்கூறுகள் ஃ மூலக்கூறுகள்: இந்த மூலக்கூறு இன்று மிகவும் முக்கியமானது. செய்தியின் தகவல் மூலம் எங்கிருந்து வருகிறது என்பத னை குறிக்கின்றது. இச்செய்தியானது எங்கிருந்து வருகிறது? ஒரு நேர்கா ணலில் இருந்து வருகிறதா? ஒரு நிறுவனம் ஊடகத்திற்காக வெளியிடப்பட்ட அறிக்கை யிலிருந்து வருகிறதா? ஓர் உரையிலிருந்து வருகிறதா? ஒரு நீதிமன்ற தீர்ப்பி லிருந்து வருகிறாதா? அல்லது வேறு ஓர் ஊடகத்தில் வெளி யிடப்பட்ட செய்தியி லிருந்து எடுக்கப்பட்டதா? என்பதை குறிப்பதாகும். இதனைக் கொண்டு வாசகர்கள் செய்தியின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வர். 

11. நடப்புநிலை : ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பெறுநருக்காக உண்மைகள் அல்லது கருத்துகள் மீது ஆர்வத்தை மற்றும்  முக்கியத்துவத்தை வைத்திருக்கும் சரியான நேரத்து அறிக்கையே செய்தி எனலாம். நடப்புக் காலதோடு இசைதல்-ஒத்ததாக செய்தி அமையவில்லை யாயின் அல்லர் அதற்கு முக்கிய கவனம் செலுத்தப்படாவிட்டால் செய்தி களின் வரைவிலக் கணம் முழுமையடையாது போய்விடும். காலதோடுஇசைதல் என்பது செய்திகளின் சாராம்சம். விடயங்கள் எப்போதுமே மாறிக்கொண்டே இருக்கும் என்பது நாம் அறிந்ததே. இதனால் செய்தியின் காலம் முக்கியமானது. காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் செய்தியில் குழப்பம் ஏற்படலாம்.  மேலும் செய்திப்பெறுநர்கள் தங்களுக்கு அக்கறை யுள்ள அல்லது ஆர்வமுள்ள விடயங்களில் மிக சமீபத்திய தகவல்களை விரும்புகிறார்கள். தற்போதைய சூழ்நிலைகளில் செய்தி விரைவாக மாற்றத்திற்கு உள்ளாகக்கூடும். காலையில் நிகழும் நிகழ்வுகள் முற்றிலும் மாலையில் காலாவதியாகலாம் அல்லது குழப்பத்தை உருவாக்கலாம். பெரும்பாலான செய்திகள் இன்றைய| என்று பெயரிடப்பட்டுள்ளன அல்லது மிகமிக அண்மையில், நேற்றிரவு என குறிப்பிட்டு எழுதப்படுகின்றன. செய்தி ஊடகங்கள் நேரம் குறித்து தனித்து வத்தை பேணுகின்றன. செய்தி சமீபத்தியது மட்டுமல்ல, உண்மையி லேயே இந்த விடயத்தில் அதுகடைசி வார்த்தையாகும் என்று ஊடகங்கள் பெறுநருக்கு கூறுகிறார்கள்.

ஓர் ஊடகவியலாளனது வேலை தெரிவிப்பதேதவிர, சம்மதிக்க வைப்ப தில்லை." ஆனால் ஊடகங்கள் இன்று இந்த அடிப்படையிலிருந்த எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளது என எண்ணும்போது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.


உசாத்துணை நின்றவை:-
  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம்இ முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001இ புனித வளன் கத்தோலிக்க அச்சகம்இ யாழ்ப்பணம்.
  2. தொடர்பாடலும் ஊடகவியற்கற்கையும், தரம் 11, இரண்டாம் பதிப்பு 2016, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 
  3. http://studylecturenotes.com/characteristics-of-news-are-accuracy-balance-concise-clear-current/, accessed on 10.06.2020

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff