Thursday, November 14, 2013

விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படும்போது என்ன பதில் அளிப்பது.

17.11.2013
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நமக்குத்தரப்படும் பைபிள் பகுதியின் ஆரம்பவரிகள்:கோவிலைப் பற்றிச் சிலர் கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று பேசிக்கொண்டிருந்தபோது இயேசு, இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒருகாலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் என கூறுகின்றார்.

ஆரம்ப வரிகளில் இயேசு கோவிலின் அழிவு பற்றி பேசி, அதன் பின் உலகில் நிகழப்போகும் அழிவுகளைப் பற்றி கூறுகிறார். அவர் பட்டியலிட்டுக் கூறும் அவலங்களை அலசினால், இயேசு ஏதோ நாம் வாழும் இக்காலத்து நிகழ்வுகளை கூறுகிறார் போல் தெரிகிறது. இயேசு கூறும் அந்த அவலங்கள் இவை: கடவுளின் பெயரால் உலகம் அழியப்போகிறது. மக்களை வழிமாறிப் போகச் செய்யும் நடவடிக்கைகள். போர் முழக்கங்கள், குழப்பங்கள், நாடுகள் ஒன்றை ஒன்று எதிர்த்து எழுதல்;. பெரிய நிலநடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய். அச்சுறுத்தும் அடையாளங்கள் வானில் தோன்றுதல். இவை அனைத்தும் நாம் வாழும் இன்றைய நாட்களில் நம்மைச் சுற்றி நடப்பதை நாம் பார்க்கின்றோம். இந்த அவலங்களுக்கு, அழிவுகளுக்கு மத்தியில் கலங்காமல் இருங்கள் என்றும் இயேசு உறுதி சொல்கிறார்.

இயற்கையில், பொது வாழ்வில், நடக்கும் இந்த பயங்கரங்களைக் கூறிவிட்டு, பின்னர் நமது தனிப்பட்ட வாழ்வை, குறிப்பாக, தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் இயேசு. அங்கும் அவர் சொல்பவை அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒரு பட்டியல்தான்: நீங்கள் விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்;. உங்கள் குடும்பத்தினரே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்;. உங்களுக்கு எதிராக சான்று பகர்வார்கள்;. உங்களுள் சிலரைக் கொல்வார்கள்;. என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள் என்று இயேசுவும் இந்த உலகத்தைப் பற்றிய கசப்பான உண்மைகளைச் சொல்கிறார்.

முக்கியமாக, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரவிருக்கும் சவால்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக்குகிறார் இயேசு. தனக்குச் சீடர்கள் வேண்டும், தன்னைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், கசப்பான உண்மைகளைச் சொல்லத் தேவையில்லை. தொண்டர்களைத் தவறான வழிநடத்தும் தலைவர்கள், எதிர்வரும் ஆபத்துக்களைச் சொல்லத் தயங்குவார்கள். அப்படியே ஆபத்துக்கள் வரும் போதும், உண்மைப் பிரச்சனைகளிலிருந்து அவர்களைத் திசைத் திருப்பி, வெறியூட்டும் பாகுபாட்டு உணர்வுகளை வளர்த்து, தேவையில்லாமல்உயிர்களைப் பறிக்கும் வழிகளைத் தான் காட்டுவார்கள். உறவகளை பிரிப்பார்கள். இந்தப் போலித் தலைவர்கள். இயேசுவின் வழி மாறுபட்ட வழி.

இன்று தரப்படும் பைபிள் பகுதியின் இறுதியிவரிகளில்  இயேசு அறுதல் தரும் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறார். என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது". இன்று நாம் முழு மனித வாழ்கை வாழ்வதில் பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம். மனித நேயத்தோடு வாழும்போது பல இழப்புக்களை சந்திக்கின்றோம். நற்செய்தி விழுமியங்களை முதன்மைப்படுத்தி வாழ்ந்தால் ஏராளம் தொல்லைகள் எமக்கு வருகின்றன. ஒதுங்கி வாழ்ந்தாலும் வாழ முடியாத நிலை. பின் வாங்கி வாழ்ந்தால் சூழ்ச்சி செய்கிறார்கள். இயேசுவை நம்பி வாழ்கிற மனிதனுக்கு துன்பங்கள் இழப்பகள் அதிகம். அவமானங்கள் ஏராளம். இயேசுவிற்காக வாழும்போது பலர் எம்மை தூற்றலாம். உறவுகள் நம்மைப் புறக்கணிக்கலாம். குடும்பமே எம்மை காட்டிக்கொடுக்கலாம். நாம் சலுகைகளை இழக்கலாம். எமக்குபதவிகள் இல்லாமல் போகலாம். காவல் நிலையமும் நீதி மன்றமும் இழுக்கப்படலாம். சிறையில் அடைக்கப்படலாம்; துன்புறுத்தப்படலாம். என்; பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் விசாரணைக்காக இழுத்துச் செல்லப்படலாம்;. 

எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  அஞ்சவேண்டாம். கலங்க வேண்டாம். பயப்பட வேண்டாம். உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது என்கிறார் இயேசு. எனவே நமக்குத் தேவை மன உறுதி, கடவுள் நம்பிக்கை. துணிந்து செயல்படுவோம் இயேசு நம் வாழ்வை காத்துக்கொள்வார் என வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம். விசாரணைகள் விலகிப்போகும். வெற்றி உறுதி.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff