Thursday, September 27, 2012

“மற்றவருக்கு வெட்டும்”-தினமும் தினத்தாளில் இடம்பிடிக்கும் இந்த செய்தியை இனிநாமகற்றுவோம்

30.09.2012.
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசுவின் உளவியல் முதிர்ச்சியையும், பரந்த மனநிலையையும் இன்று நற்செய்தி நம்மை வியக்கவைக்கின்றது. இயேசுவை சாந்திராத, சீடர் என வரையறுக்கப்படாத ஒருவர் இயேசுவின் பெயரால் பேய்கள் ஓட்டினார் என்பதே மிகவும் வியப்பான ஒரு செய்திதான். இயேசுவின் பெயருக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறது என்பதற்கு இது சிறந்த சான்று. அவரைத் தடுக்கப் பார்த்தோம் என்று சீடர்கள் சொன்னபோது இயேசுவின் நம்பிக்கை பதில் எல்லாரையும்; வியக்க வைக்கிறது. தடுக்க வேண்டாம். என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார்.

இயேசு இத்தகு பொறாமையை நிராகரிக்கிறார். “நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்”. இயேசுவின் செய்திக்குத் தாங்கள் மட்டுமே உரிமையாளர்கள் என்னும் சீடர்களின் உணர்வுக்கு இந்த அகன்ற அடிப்படைத் தத்துவம் ஒரு சவாலாக அமைந்துள்ளது. இயேசுவைத் தாங்கள் மட்டுமே பின்பற்றவேண்டும் என்று சீடர்கள் பேராசைப்படுவது ஒரு தடைக்கல்லாகும். அது இயேசுவை தூரத்தில் இருந்து பின்பற்றுவேரை துரத்திவிடும். நற்செய்திக்கு விளக்கமளிக்கத் தங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு என எண்ணும் உட்கட்சியினரை இயேசு கண்டிக்கின்றார். குறுகிய மனம், பொறாமை, தன்னம்பிக்கையின்மை, இவற்றை அடித்து நொறுக்கிவிட்டு, நன்மையை ஏற்பிசைவு செய்யும் பரந்த மனதையும், தன்னம்பிக்கையையும் இயேசு வெளிப்படுத்துகிறார். நமது திறமைகளை, கொடைகளைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளத் தயங்கும் நமக்கு இயேசு பாடம் கற்றுத் தருகிறார். பிறரும் நம்மைப் போல நல்ல பணிகள் ஆற்றட்டும், நற்பெயர் வாங்கட்டும் என்று நினைப்பவரெல்லாம் இயேசுவின் நல்ல சீடர்கள் ஆகின்றனரே.

இன்றைய சிந்தனைளை இன்ஒரு பார்வையில் நோக்கினால் இன்றைய நற்செய்தியை “நற்செய்தி” என்று சொல்வதற்கே கொஞ்சம் பயமாயிருக்கின்றது என்றும் கூறலாம்.  ஏனெனில், இயேசு கையை, காலை வெட்டி கண்ணை பிடுங்கி எறிந்து விடுங்கள் என் கடுமையாப் பேசியிருக்கார். ஆனால் இங்கு நல்லவேளை, இயேசு ஒருவர் தம்முடைய கண்ணையோ, கையையோ, காலையோ வெட்டச்செல்கிறாரே தவிர மற்றவர்களுடையதையல்ல. ஆனால் இன்று நாம்வாழும் இந்த மண்ணிலே மற்றவர்களை வெட்டும் செய்தி தினமும் தினத்தாளில் இடம்பிடிக்கும் செய்தியாகின்றது.

இன்றுபோல் இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சமுதாயம் எளிதாக கையை, காலை வெட்டுகின்ற சமுதாயம். பழிக்குப் பழி வாங்குவதில் அதிகத் தீவிரமாய் இருந்தவர்கள் யூதர்கள். இதனால்தான், இயேசுவே அவர்களைப் பார்த்து “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வலது கன்னத்தில் அறைபவனுக்கு இடது கன்னத்தைக் காட்டு". என்று முற்றிலும் மாறுபட்ட பாடங்களைச் கற்பிக்க ஆரம்பித்தார்.

இப்படி சொல்லும் இயேசுவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் யூதர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கோபமாக, கடுமையாகப் பேசும் இயேசுவைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான். சாட்டையடிபட்டு சிலுவையில் தொங்கும் இயேசுவைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு, கோவிலிலிருந்து வியாபாரிகளை விரட்டினாரே, அப்போது இயேசுவைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான். அப்படி ஒரு சவாலை இன்றைய நற்செய்தி தருகிறது. இயேசுவைப் புரிந்து கொள்ள, அவர் சொல்லும் வார்த்தைகள் எந்த பின்னணியிலிருந் சொல்லுகின்றார் என உணர்வது அவசியமாகிறது.  ஒருகன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கூறும் இயேசு, தலைமை குருவின் ஊழியன் அவரை அறையும் போது, மறு கன்னத்தைக் காட்டவில்லையே. மாறாக, அவனிடம், என்னை ஏன் அறைகிறாய் என்று கேள்வி கேட்டார். சூழ்நிலை, பின்னணி இவற்றோடு இயேசுவின் வாழ்க்கையையும், அவரது கூற்றுக்களையும் பார்ப்பது பயனளிக்கும்.

இன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகளுக்குப் பின்னணி என்ன?  சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அங்கம் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும். அப்படி மாற்றுவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்க வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கண்ணைப் பிடுங்கி விடுங்கள், கை, கால்லை வெட்டி போடுங்கள் என்று கோபமாகச் சொல்வது போல் தெரிகிறது.

எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக வாழும் போது, மருத்துவ மனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். பழக்கங்களை மாற்றிக் கொள்வோம். கட்டுப்பாட்டுடன் வாழ்வோம். தேவையற்ற ஆபத்துக்களை வாழ்விலிருந்து நீக்குவோம். இவைகள் எல்லாருக்குமே நல்லதுதானே. இயேசு இவைகளைத்தான் கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாக, கோபமாகச் சொல்லியிருக்கிறார். அவர் கோபமாக சொல்கிறாரோ, சாந்தமாகச் சொல்கிறாரோ என்பதல்ல மாறக அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்வது, அதன் படி வாழ்வது நமக்கு நல்லதுதானே.

Tuesday, September 18, 2012

எம்மைப் பற்றியும், எம் வாழ்வின் இலக்கு பற்றியும் தெளிவாக இருப்போம்

23.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

கத்தோலிக்க நம்பிக்கைகளை வாழ்வில் கடைப்பிடித்து, அதைப் பிறருக்கு அறிவிக்கின்றவர்கள் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் திரிபுக்கதைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது வரலாறு.  இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறியது அவருடைய சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. அவருடைய சீடர்கள் 'துன்புறும் மெசியா" வை ஏற்க மறுத்தார்கள். தங்களுக்கும் அதிகாரப் பொறுப்புகள் வழங்கப்படும் என இயேசுவின் சீடர்கள் கனவு கண்டார்கள். இயேசு துன்புறப் போகிறாரே என கவலைப்படாமல் சீடர்கள் மட்டும் 'தங்களுள் யார் பெரியவர்" என்னும் வாதத்தில் ஈடுபட்டார்கள்.

உலகத்தின் கண்களுக்குப் பெரியவர் என்றால் எல்லாராலும் போற்றப்பட்டு, புகழப்பட்டு, உயர்நிலையில் வைக்கப்படுகின்ற ஒருவர்.இயேசுவின் பார்வையில் பெரியவர் அனைவரிலும் சிறியவராக மாற வேண்டும். உலகப் பார்வையில் சிறப்பு மிக்கோர் பிறரிடமிருந்து பணிவிடை பெறுவார்களே தவிர பிறருக்குப் பணிவிடை செய்பவர்கள் அல்ல. இக்கருத்தையும் இயேசு புரட்டிப் போடுகின்றார். இயேசு இவ்வாறு உலகப் பார்வைக்கு நேர்மாறான கருத்தை ஏன் கூறுகிறார்: மனிதர் எப்போதுமே சிறப்பான நிலையை அடைய விரும்புகிறார்கள்.ஆனால் சிறப்புநிலை எதில் அடங்கியிருக்கிறது என்பதுதான் கேள்வி. பிறருக்குத் தொண்டுசெய்வதும் பிறரைத் தமக்கு உயர்ந்தவராகக் கருதுவதும் உண்மையான சிறப்புக்கு அடையாளம்.

இயேசுவின் வாழ்வில் துலங்கிய மதிப்பீடுகளை அவருடைய சீடர்களும் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் நடுவே யார் பெரியவர் என்னும் கேள்வி எழுவதே சரியல்ல என இயேசு உணர்த்துகிறார். உண்மையான சிறப்பு பிறருக்குப் பணிசெய்வதிலே அடங்கும் என்று போதித்த இயேசு அதை முழுமையாகத் தம் வாழ்வில் கடைப்பிடித்தார். அவர் தம் சீடருடைய காலடிகளைக் கழுவினார்.எனவே, இயேசுவைப் பின்செல்வோருக்குத் தரப்படுகின்ற வழிமுறை இவ்வுலகப் பார்வையைப் புரட்டிப்போடுகின்ற வழிமுறை. அவ்வழியே நாம் நடந்தால் நாமும் கடவுளின் பார்வையில் சிறப்புடையோர் ஆவோம்.

இயேசு குழந்தையை ஏன் சீடர்கள் மத்தியில் வைத்தார்? என்றால் சென்ற வாரம் இயேசு சீடர்களிடம் இரு முக்கிய கேள்விகளைக் கேட்டார். மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்? சீடர்கள் மத்தியில் இது ஒரு தேடலை ஆரம்பித்து வைத்திருக்கும். இயேசு, தன் கேள்விகளுக்கு'மெசியா"என விடையளித்த பேதுருவைப் புகழ்ந்தார். பேதுரு கொடுத்த அந்த  பட்டத்தில் மமதை கொண்டு இயேசு மயங்கிப் போகவில்லை. மாறாக அந்த பட்டத்தின் பின்னணியில் இருக்கும் துன்பம், சிலுவை பற்றி இயேசு பேசினார். இயேசுவின் இந்த பேச்சு சீடர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே,பேதுரு அவரைத் தனியே அழைத்து அறிவுரைச் சொல்ல ஆரம்பித்தார். தன்னைப் பற்றியும், தன் வாழ்வின் இலக்கு பற்றியும் இயேசு தெளிவாக இருந்ததால், பேதுருவைக் கோபமாகக் கடிந்து கொண்டார். சீடர்களிடம் மீண்டும் தன் சிலுவையைப் பற்றி ஆணித்தரமாக பேசுகிறார். சீடர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை. இயேசுவின் பாடுகள் அவர்களுக்கு விளங்காமல் போனதற்கு ஒரு காரணம் - அவர்கள் வேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். தங்களில் யார் பெரியவன்? என்பது அவர்களுக்கு இப்போது முக்கியம்.

இயேசு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓரளவு கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. தான் இவ்வளவு சொல்லியும் இவர்களின் எண்ண ஓட்டம் இப்படி இருக்கிறதே என்ற அதிர்ச்சி. மற்றொரு பக்கம் ஒரு நெருடல்.ஒருவேளை அவர்கள் பேசிக் கொண்டதை சரியாகக் கேட்காமல், அவர்களைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது என்று நினைத்து, 'வழியில் என்ன பேசினீர்கள்?" என்று கேட்கிறார். பதில் வரவில்லை. அவர்கள் பேசிக் கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது. தாங்கள் பேசியதை அவரிடம் சொல்ல முடியவில்லை.

அதற்கு இயேசுவின் பதில், 'ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்". இந்த கருத்தை வலியுறுத்தவே, ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். குழந்தைகளைப் போல் மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது என ஏற்கனவே அவர்களுக்கு சொல்லியிருந்தார். இப்போது மீண்டும் அந்த சிந்தனையை மற்றொரு வழியில் வலியுறுத்துகிறார். 

குழந்தைகளை குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை உங்களைப் போல் மாற்றாதீர்கள், முடிந்த அளவு, நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார். 'எந்த ஒரு குழந்தையும் பிறக்கும் போது இரு இறக்கைகளுடன் சம்மனசாய் பிறக்கிறது. அனால், கால்கள் வளர, வளர, இறக்கைகள் குறைந்து மறைந்து விடுகின்றன." என்பது பிரெஞ்சு மொழியில் ஒரு அறிஞர் சொன்ன அழகான வார்த்தைகள். கால்கள் மட்டுமல்ல, நமது எண்ணங்கள், கருத்துக்களெல்லாம் வளரும்போது, சம்மனசுக்கான இறக்கைகள் மறைந்து விடுகின்றன. குழந்தைகளைக் குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்வோம்.அவர்களை நம்மைப் போல் மாற்றாமல், முடிந்த அளவு, நாம் குழந்தைகளாக மாறுவோம்.

Wednesday, September 12, 2012

நான் யார் என்று தெரிகின்றேன்


16.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையா ளர்

'நான் யார்?"இந்தக் கேள்வியைச் சிந்திக்காதவர்களே இல்லை எனலாம். இன்று நம்மில் பலருக்கு இது எப்;போது எழும் ஒரு கேள்வியாக இருக்கலாம். ஆனால்இ அறிஞர்களும் ஞானிகளும் 'நான் யார்?" என்றத் தேடலில் வாழ்க்கை முழுவதும் ஈடுபட்டுள்ளனர். நான் யார் என்ற இந்தக் கேள்விக்குள் பல கேள்விகள் உள்ளன: என் குடும்பத்தினருக்கு நான் யார்? என் நண்பருக்கு நான் யார்? என் பணியிடத்தில் நான் யார்? நான் வாழும் சமுதாயத்தில் நான் யார்? இவர்களுக்கெல்லாம் நான் என்னவாகத் தெரிகிறேன்? அடிப்படையில் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பது இன்று நம் வாழ்வின் ஒரு முக்கிய கேள்வியாகிறது.

இயேசுவூக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. 21நூற்றாண்டுகளாக மனிதர்கள் 'யார் இந்த இயேசு?" என்னும் கேள்விற்கு விடைதேடுகின்றனா;. இக்கேள்விக்குப் பதில் என்ன?. இயேசு மக்களும் சீடர்களும் தம்மை யார் என்று கூறுகிறார்கள் என்னும் கேள்வியைக் கேட்கிறார். இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் தருகின்றது. இன்றைய நற்செய்தியின் இயேசுவின் இந்த இரு கேள்விகள் நாம்  கவனிப்போம். 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" 'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"

21நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் அதிகமான ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம் அல்லது முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. மனித வரலாற்றை இத்தனை நீண்ட காலம். ஈராயிரம் ஆண்டுகள் இத்தனை ஆழமாகப் பாதித்துள்ளவர்கள் ஒரு சிலரே. மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? என்று நோக்கினால் என்னென்னவோ சொல்லி விட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள். நல்லதும் பொல்லாததும். உண்மையூம் பொய்யூம். விசுவாசச் சத்தியங்களும் கற்பனைக் கதைகளும். ஓர் இறைவாக்கினர் எனவூம் அளவூக்கதிகமாகவே சொல்லி விட்டார்கள். ஆனால் இவ்வளவூ சொல்லியூம் இயேசுவைப் பற்றி முழுமையாக நம் மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இயேசு இவர்தான் இப்படித்தான் என்று இலக்கணம் சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை வரையறைகளை வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். இயேசுவின் அழகு. யோவான் தன் நற்செய்தியின் இறுதியில் எழுதியூள்ள வரிகள் நாம்; நினைத்துப் பார்க்கலாம்: இயேசு செய்தவை வேறு பலவூம் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன். சிறு வயது முதல் நாம் பயின்றவைகளை எல்லாம் பட்டியலிட்டு இயேசு கேட்ட அந்த முதல் கேள்விக்குப் பதில் ஒப்பித்து விடலாம்.

'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" இந்தக் கேள்வி நமக்குத் தான் தரப்படுகின்றது. ஆனால்இ இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. நாம் படித்தவைகளை விட பட்டுணர்ந்தவைகளே இந்தக் கேள்விக்குப் பதிலாக வேண்டும். நாம் மனப்பாடம் செய்தவைகளை விட மனதார நம்புகிறவைகளே இந்தக் கேள்விக்கான பதிலைத் தரமுடியூம். இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு சங்கடங்களை உருவாக்குகின்றன என உணர்ந்தால் அது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. 'என்னைப் பற்றிப் புரிந்து கொள். என்னைப் பற்றிக் கொள்" என்று இயேசு விடுக்கும் அழைப்பு. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க அவரைப் போல் நடக்க இரவானாலும் புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு மனதின் ஆழத்திலிருந்து வரட்டும் நம் பதில்கள்.

இயேசுவை அறிந்துகொள்ளும் இரு வழிகளை இன்றைய நற்செய்தி நமக்கு வழங்குகிறது. சொந்த ஈடுபாடு எதுவூம் இல்லாமல் இயேசுவைப் பற்றிய கருத்துக்களைத் திரட்டுவது முதல் வழி. 'மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று இயேசு கேட்டபோது இந்த முதல் வழியில் திரட்டிய பதில்களைச் சீடர்கள் இயேசுவிடம் கூறினர். பின்னர் இயேசு தன் சீடர்களிடம் 'ஆனால் நீங்கள்இ நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். சீமோன் பேதுருஇ 'நீர் மெசியா வாழும் கடவூளின் மகன்" என்கின்றார்;. பேதுருவின் பதில் வெறும் கருத்துக்களைத் தாண்டி விசுவாசத்தின் அறிக்கையாக இங்கு ஒலிக்கிறது.

இன்று எங்களிடம் இயேசு 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?"என்ற இதே கேள்வியைக் கேட்கிறார் என வைத்துக்கொண்டால்: இயேசுவின் கேள்விக்கு தாராள மனதோடும் துணிவோடும் பேதுருவின் விசுவாச அறிக்கைக்குப் பதிலாக நாம் உலகிற்கு இயேசு மெசியா வாழும் கடவூளின் மகன்" என எமது வாழ்வால் காட்டுவோமா?

Thursday, September 6, 2012

கனல் கக்கும் எம் மணல்பரப்பை நீர்த் தடாகமாக்குவோம்

09.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசு தன்னை தேடிவந்த நோயாளர்களைக் பல்வேறு வழிமுறைகளில் குணமாக்கியுள்ளார். சிலரைத் தொலைவிலிருந்தே குணமாக்கினார்.சிலரைத் தொட்டுக் குணமாக்கினார்.சிலரைத் தொடாமல் 'உம் நம்பிக்கை உம்மைக் குணமாக்கிற்று"என்று சொல்லிக் குணமாக்கினார். ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் பார்க்கும் காது கேளாத, திக்கிப்பேசும் மனிதரை இயேசு குணப்படுத்திய முறை வித்தியாசமானது.'இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று,தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு,உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டு, பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி,'எப்பத்தா"அதாவது 'திறக்கப்படு" என்றார்." உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன் நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.இந்த மனிதரைக் குணமாக்க இயேசு கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறார் என கருதலாம்.

செவிடர்களும் வாய்பேச முடியாதவர்களும் நம்மிடையே இல்லையா?  இன்று நாம் வாழும் சூழலில் பலபாழ்பட்ட விடயங்கள் நடந்தாலும் யாரும் தட்டிக் கேட்க முன்வருவதில்லையே. இங்கு ஏன் யாருமே தட்டிக் கேட்கவில்லை. ஏன் யாருக்கும் காது கேட்கவில்லையா? அல்லது எல்லோருமே ஊமைகளா? ஏன்னும் கேள்விக் விடைகளை தேடி அலைகின்றன. இன்று இதுபோன்ற நிகழ்சிகளைக் கண்டும் காணாமலும் கேட்டும் கேளாமலும் சென்றால், இயேசுவின் வைத்தியம் நமக்குத் தேவைப்படுகிறது. நாம்தான் காது கேளாதவர். நாம்தான் திக்கு வாயுள்ளவர்கள். வாய்பேச இயலாதவர்கள். நம் காதுகளுக்குள் இயேசுவின் சில அதிரடி வைத்தியம் தேவைப்படும். நாம் நம் காதுகளைத் திறந்தால், நம் வாயைத் திறந்தால், வாய் பொத்தி,காதுகளை பொத்தி வாழும் எத்தனையோ குரல் இழந்த அடித்தள மக்களுக்கு குரலும் வாழ்வும் கொடுத்த இயேசுவைபோல் புதிய மனிதர்களாக மாறுவோம். எங்களைப் பார்த்து, இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார் என்பார்கள்.

இயேசு ஆற்றிய புதுமைகள் அக்கால மக்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் ஒரு நல்ல செய்தியைக் தருகின்றன. அவற்றை நன்குணர்து வாழ்வாக்கினால். நம் காதுகள் திறக்கப்பட்டு, நாவு கட்டவிழும் அதிசய செயல்களை நம் வழியாகச் இயேசு செய்வார். தன்பணிவாழ்வில் இயேசு புரட்சிகரமாகப் பேச வேண்டும் அதனால் மக்களை தன் வயப்படுத்த வேண்டும் என்று முயன்றதில்லை. தான் ஆழ்மனதில் நம்பியவைகளை மக்களுக்குச் சொன்னார். வாழ்ந்தும் காட்டினார். அவரது போதனைகளும், எடுத்துக்கொண்ட நிலைப்பாடும், வாழ்ந்த வாழ்வும் யூதர்களுக்கு ஒரு சவாலாக இருந்தன. இன்றைய நற்செய்தி வழியாக இயேசு இப்படி ஒரு சவாலை இன்று நமக்கும்  விடுக்கிறார்.

இயேசு வாய் பேசாத, காது கேளாத ஒருவனை குணமாக்கியப் புதுமையை, தன் வல்லமையை வெளிப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சியாக பார்க்காமல், இன்று நமக்கும் காட்டும் ஒரு மாற்றுப் பாதையாக பார்க்க வேண்டும். தன் குறைகளைப் பார்த்து இயேசுவையும் இந்த சமுதாயத்தின் ஒரு ஆளாக நினைத்து அவன் அவரை அணுக தயங்கியிருக்க வேண்டும். தயக்கம், குழப்பம், தன் மீது தனக்கே ஏற்பட்ட வெறுப்பு என்று பல சிறைகளுக்குள் தன்னையே பூட்டிக்கொண்டவனாக அவன் இருந்திருக்கவேண்டும். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு குணமாக்கினார்.இயேசுவின் இந்த செயல்களில் இருந்து ஒரு சில பாடங்கள்: இயேசு அவர் காதுகளில் கையை வைக்கும் போது, அவரிடம் இயேசு சொல்லாமல் சொல்லியது: 'உன்னை இதுவரை அல்லது இனியும் மனம் தளரச் செய்யும் வண்ணம் இந்த உலகம் சொல்வைதைக் கேளாதே. உன் காதையும், நாவையும் நல்ல செய்திகளுக்காகத் திறந்து விடு. வேதனையில், விரக்தியில், நீ வாழ்ந்தது போதும். உன் சிறைகளைத் திறந்து வெளியே வா. உன் சிறைகள் திறக்கபடுக."என கூறிவிடலாம். எனவே நாமும் தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக நமது காந்தி கற்றுத்தந்த பாடத்தை வாழ்வாக்குவோம்.

இயேசுவிடம் குறையுள்ள அந்த மனிதனை மற்றவர்கள் கொண்டு வந்தனர். அந்த மனிதன் தானாக இயேசுவிடம் வரவில்லை. அவனுடைய ஒரு சில நண்பர்கள் அவனுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயேசுவிடம் அவனை கொண்டு வந்தனர்.  இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களாக நாம் இன்று மாறுவோம். இயேவைப்போல் நாமும் எம் செவிகளையும், நாவையும், எல்லா புலன்களையும் தொட்டு இதே வார்த்தைகளைச் சொல்லுவோம். நல்லவைகளைப் பார்ப்போம், நல்லவைகளைப் பேசுவோம், நல்லவைகளைக் கேடபோம். கனல் கக்கும் எம் மணல்பரப்பு நீர்த் தடாகமாக்குவோம்

கிளாலி புனித கண்மணி மாதா ஆலயத்தில் 15 வருடங்களின் பின் முதல் நன்மை அருட்சாதன திருப்பலிக் கொண்டாட்டம்.





























01.9.2012 அன்று மேற்படி ஆலயத்தில் அருள் தந்தையர்கள் டியுக் வின்சன், பங்குத்தந்தை பத்தினாதர் தலைமையில் 10 சிறார்களுக்கு முதல் நன்மை அருட்சாதனம் வழங்கப்பட்டு திருப்பலி கொண்டாடப்பட்டது. இத் திருப்பலியில் மறையுரை அற்றிய அருள் தந்தை டியுக் வின்சன், இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே என்று தன்னை அறிவித்தார். அவரை நாம் இன்று முதல் முதலில் அருந்தபோகின்றோம். எனவே இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்று தன்னை அறிவித்த போது, அதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம் என்று சொல்லி அவரைப் பின்சென்றவர்களில் பலர் அவரை விட்டு விலகினர், அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. அப்போது இயேசு பன்னிரு சீடரிடம், நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார். அதே கேள்வியை எம்மையும் பார்த்துக் கேட்கின்றாh.; விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து நமக்கு வாழ்வு வழங்க காத்திருக்கும் இயேசுவை நாமும் உட்கொண்டு அவரோடு இருப்போம். அவரைப்போல் வாழ்வோம்; என தெரிவித்தார்.

இப்பகுதி மக்கள் நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்து தற்போது 15 வருடந்களுக்குப் பின்பு மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆலயம் முற்றக சேதமாக்கப்பட்டிருந்தாலும் அம்மக்களின் அயராத உழைப்பாலும் உதவியாலும் புனரமைக்கப்பட்டு அந்த அலயத்தில் பங்குத்தந்தை  மடுத்தீன் பத்தினாதர் தலைமையில் இவ்வருடம் வழமைபோல் திருப்பலி கொண்டாடப்பட்டுவருகின்றது. இன்னிலையில் மறைஆசிரியர் செல்வன் கிறிஸ்ரி கொண்சலஸ் அவர்களின் வழிநடத்தலில் 10 சிறர்களுக்கு முதல் நன்மை அருட்சாதனம் வழங்கப்பட்ட திருப்பலி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Sunday, September 2, 2012

Catholic Dog

 A joke to enjoy

Catholic Dog
-------------

A farmer named Muldoon lived alone in the Irish countryside with a pet dog he doted on. The dog finally died and Muldoon went to the parish priest and asked, "Father, the dog is dead. Could you be saying a mass for the creature?"

Father Patrick replied, "No, we cannot have services for an animal in the church, but there's a new denomination down the road, no telling what they believe, but maybe they'll do something for the animal."

Muldoon said, "I'll go right now. Do you think $50,000 is enough to donate for the service?"

Father Patrick asked, "Why didn't you tell me the dog was Catholic?"

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff