Sunday, February 24, 2013

இறைவனிடம் வருந்தி மன்னிப்பு கோருவோம். பிறரின் மனமாற்றத்தில் மகிழ்வோம்

10.03.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்று நமக்கு தரப்படும் பைபிள் பகுதி ஊதாரி மைந்தனின் உவமைக்கதையை சிந்திப்பதற்கு அழைக்கின்றது:“ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். இளையவர் தந்தையை நோக்கி, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் என பெற்று தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்;. அங்குத் ஊதாரித்தனமாக தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். எதுமின்றி பின்பு பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் யாருமில்லை. கடவுளுக்கும் தந்தைக்கு எதிராக நான் பாவம் செய்தேன் என தவற்றை உணர்ந்து தந்தையிடம் திரும்பி வரும்போது தொலையில் வந்து கொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். தன் தம்பி வந்திருக்கிறார் என்று தந்தை கொழுத்த கன்றை அடித்து விருந்து வைப்பதில் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதவராக மூத்த புதல்வர் வெளியே நிற்கிறார். தந்தை அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்கிறார். அவர் மறுக்கிறார்." ஊதாரி மகன் எந்த அளவுக்குத் தன் சொத்துக்களை அழிப்பதில் ஊதாரியாக இருந்தானோ, அந்த அளவுக்கு அன்பு காட்டுவதிலும், இரக்கம் அளிப்பதிலும் ஊதாரியாக இருந்தார் தந்தை.

இந்த கதையில் வருகிற தந்தை, ஊதாரி மைந்தன், அவனது சகோதரன் மூன்று பேருமே மூன்று மனநிலைகளைச் சித்தரிக்கிறார்கள் என்பது எமக்கு நன்கு புலப்படுகின்றது: தந்தை அன்பின், பரிவின், நிபந்தனையற்ற மன்னிப்பின் மனநிலையைப் பிரதிபலிக்கிறார். ஊதாரி மைந்தன் வறுமையில் வாடி, தன்மானம் இழந்து, மீண்டும் தந்தையைத் தேடி வருவதைப் பார்க்கிறோம். அவன் நேர்மையான மனத்துயரைப் பிரதிபலிக்கிறான். அறிவுத் தெளிவு பெற்றதும் தந்தையிடம் திரும்பி வந்தான். அத்துடன், மகனாக அல்;ல, வேலையாளாகப் பணி செய்ய முன்வந்தான். அந்த மகன் தந்தைக்கு எதிராக திரும்பினாலும், தந்தை நிபந்தனையற்ற அன்பை தன் மகன் மேல் வைத்திருந்தார், அவர் தனது அன்பளிப்பாக தன்மகனுக்கு அளவற்ற அன்பை கொடுத்தார். மகனோ தனது தந்தைக்கு கொடுத்த அன்பளிப்பு என்னவென்றால், தந்தையின் அன்பை, திறந்த மனதோடு ஏற்று கொள்ள தயாராக வந்தது தான். மூத்த மகன் குறைகாணும் மனநிலையை, பொறாமையை, நன்மையை ஏற்றுக்கொள்ளாத மனதை, தீர்ப்பிடும் மனநிலையைப் பிரதிபலிக்கிறான்.

வறுமையும் பஞ்சமும் செலவோடு மிக நெருங்கிய தொடர்புடையது என்பதை இக்கதை காட்டுகின்றது  வீணாகச் செய்யும் ஒவ்வொரு செலவும் உலகில் கொடுமையான வறுமையையும் பஞ்சத்தையும் உண்டாக்குகிறது. மனிதன் விரயம் செய்யும் ஒவ்வொரு பொருளும் எங்கோ, யாருக்கோ, ஏதோ ஒரு விதத்தில் ஒருபஞ்சத்தையும் வெற்றிடத்தையும் உண்டாக்குவதை; பொருளாதாரம் மறுப்பததற்கில்லை. பகுத்தறிவாளரான நுகர்வோர் இதை நன்கறிவர்.

அந்த இளைய மகன் தந்தையின் அன்பு, பாசம், உறவு அனைத்தையும் அலட்சியப்படுத்தினான். வாரிச்சென்ற பொன், பொருளையும் தாறுமாறாக வாழ்ந்து அழித்தான். சொத்தையும் பணத்தையும் பயன்படுத்தி, உழைத்ததாகவோ, உழைத்து நட்டமடைந்ததாகவோ கதையில் சொல்லப்படவில்லை. மாறாக, நெடும் பயணம், தாறுமாறான வாழ்க்கை, பாழாக்கும் பழக்கம், கெட்டநட்பு, சூழல் இவற்றில் அனைத்தையும் செலவழித்துள்ளான். விழைவு, பஞ்சம். வறுமை. இழப்பு. தனிமை. மிருகங்களோடு வாழ்க்கை. அவனுக்கு மட்டுமா இந்த நிலைமை. அவன் வாழ்ந்த சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது. பன்றிகள் தின்னும் நெற்றுக்குக்கூட அங்கு பஞ்சம். அந்த நாடு முழுவதும் வறட்சி, பஞ்சம். வீணாக்க வேண்டாம், விரயம் செய்ய வேண்டாம். பஞ்சத்திற்கு நாங்கள் ஒரு சிறிய காரணமாகவும் இருக்க வேண்டாம். ஆண்டவன் தந்த உறவையும் பாசத்தையும் பரவலாக்குவோம். பொன்னையும் பொருளையும் இல்லாரோடு பகிர்வோம்.

தந்தை தம் இளைய மகனுக்குத் தனிக்கவனம் செலுத்திவிட்டு, தன்னை மட்டும் ஒரு பொருட்டாக எண்ணவில்லையே என்னும் சிந்தனையில் புழுங்குகின்ற மூத்த மகனும் நம் கவனத்தை இன்று ஈர்க்கிறார். சினம் கொண்டு, விருந்தில் கலந்துகொள்ளாமல் வெளியேநின்கின்றான் மூத்த மகன். 'இளைய மகன் கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்"என்று ஒத்துக்கொள்கிறான். ஆனால், மூத்த மகனோ வெளிப்படையாக எந்தப் பாவமும் செய்யவில்லை. மாறாக, தந்தையின் பரிவைக் கண்டு சினமுற்று உள்ளே போகவிருப்பம் இல்லாது வெளியே நிற்கிறார். தந்தை வந்து உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டும் உள்ளே செல்லவில்லை. மாறாக, தந்தையின் மன்னிப்பில் குறைகாண்கிறார், குற்றம்சாட்டுகிறார். இந்தமூத்த மகன் தண்டிக்கப்பட்டதாகவோ, தந்தையால் கடிந்து கொள்ளப்பட்டதாகவோ உவமைக்கதையில் சொல்லப்படவில்லை. இருப்பினும், பொறாமை, சினம், தந்தைக்கு அவமதிப்பு, தம்பியின் மனமாற்றத்தில் மகிழாமை, தந்தையையே குறைகாணும் மனநிலை எனப் பல்வகைப் பாவங்கள் இவர் செய்துள்ளார் என்பது வெளிப்படை. நாமும் சில வேளைகளில் இறைவனின் இரக்கத்தில் எரிச்சல் கொள்கிறோம், மனமாற்றம் அடைவோரைக் கண்டு கேலி செய்து இறைவனையே அவமதிக்கிறோம். இங்கு கடவுளின் நிபந்தனையற்ற மன்னிப்பையும், அளவற்ற அன்பையும் ஏற்றுகொள்வதற்கு நாம் தகுதியானவர்களா? இத்தவக்கலத்தில்  இறைவனிடம் வருந்தி மன்னிப்பு கோருவோம். பிறரின் மனமாற்றத்தில் மகிழ்வோம்
 

துன்பங்களைப் புரிந்து கொள்வதற்கு உண்மையான ஞானம் தேவைப்படுகின்றது


03.03.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

பாவிகள் மனம் மாறாவிடால் அழிவர் என்று கூறுகின்றார். அத்துடன் இயேசு அத்திமரம் பற்றி ஒரு கதை கூறுகின்றார்:'ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் உள்ள அத்திமரத்தி கனியைத் தேடியபோது எதுவுமில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், பாரும் மூன்று ஆண்டுகளாக இந்த மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?" என்றார். தொழிலாளர் ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்" என்று அவரிடம் கூறினார்."

இந்த அத்திமர கதையில்;, உரிமையாளர் தொழிலாளியிடம் ஒருபுகார் சொல்லுகின்றார்: இம்மரத்தை வெட்டிவிடும். அவாறாறே கனிதராத ஒவ்வொரு கத்தோலிக்கரும்,இந்த உலகில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வாழ்விலும் அப்படியே. எத்தனையோ ஆண்டுகள் நாம் கனி தராமல் இருந்தால்,இறைவன் ஏமாற்றமேஅடைவார். எனவே,இந்தத் தவக்காலத்தில் நாம் மனமாற்றம் பெறுவோம். நம்முடைய வாழ்வு கனி தருவதாக அமையட்டும். நம்முடைய வாழ்வில் நற்செயல்கள் பெருகட்டும். நம்முடைய வாழ்வு இறைவனுக்கும், பிறருக்கும் கனி தருவதாக அமைய வேண்டும்.

நம்மை விட மற்றவர்கள் பெரிய பாவிகள் என்று நம்மால் உறுதியாக கூற முடியாது. மனிதர், சாத்தானின் தூன்டுதலால், தவறான வழியில் செல்பவர்கள். நமக்காகவே உடைந்த இயேசுவின் பாவமற்ற மனம், பாவ வழியில் செல்பவர்களை புனிதமாக்கும், என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லை. ஒரு மனிதனின் ஆன்மா அழிவு பாதையில் செல்வதை நினைத்து நாம் வருத்தப்படவில்லை என்றால், நாம் பாவம் செய்கிறோம். எங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் அனைவரும், அத்தி மரத்தை போன்றவர்கள். எங்களால் அவர்களை கேட்க வைக்க முடியும். நாங்கள் அவர்களுக்கு உரம் போட வேன்டும். எங்கள் நடவடிக்கைகள் மூலமும், எங்கள் வார்த்தைகள் மூலமும், அவர்களுக்கு நாங்கள் உரமாக இருக்கவேன்டும். சரியான திசையில் அவர்களை செலுத்த நாங்கள் பணிவுடனும், கனிவுடனும் அறிவுறுத்த வேண்டும். இயேசு கனிகொடாத மரத்தை அதிக நாட்கள் வைத்திருக்க விரும்பவில்லை. நம்மால் செய்ய முடிந்த்தெல்லாம் செய்தும், தீயவர்கள் மனம்திரும்பவில்லை என்றால், அந்த மரத்தை வெட்டிவிடுவது தான். அதாவது அவர்களை விட்டு விலகி விடுவது அல்லது, சரியான் அதிகாரத்தில் இருப்பவரிடம், இந்த பிரச்சினைகளை காட்டி அவர்களின் தீமைகளுக்கு சரியான தன்டனை கிடைக்க ஏற்பாடு செய்யதலே ஆகும். இதனையும் மிகவும் கனிவுடனும், பொருமையுடனும் செய்ய வேன்டும். உரம் கொடுத்தும், நல்ல கனிகளை தரவில்லையென்றால், அந்த மரம் கீழே விழுந்து, மக்கி மற்ற புதிய மரங்களுக்கு உரமாக இருக்கட்டும்

பாவிகள் மனம் மாறாவிடால் அழிவர் என்று கூறுகின்றார். மனமாற்றத்திற்கான அழைப்பை விடக்கும் தவக்காலம் மக்கள், வரலாற்றை வாசிக்கவும், துன்பங்களை, விசுவாசக் கண்கொண்டு நோக்கவும் வலியுறுத்துகின்றது. இன்றைய நாமக்குத் தரப்படும் பைபிள் பகுதியிலிருந்து இந்தப் பாடத்தையே நாம் கற்றுக் கொள்கிறோம்.'சிலர் இயேசுவிடம், தீமை, இறைவன் அனுப்பும் தண்டனை என்ற கோணத்தில், பிலாத்துவின் கட்டளையின் பேரில் சில கலிலேயர்கள் ஆலயத்தினுள் கொல்லப்பட்டது, சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேர் இறந்தது பற்றிய பைபிள் பகுதியை மேற்கோள் காட்டி கேள்வி கேட்டபோது இயேசு கடவுள் நல்லவர், யார்மீதும் தீமை வருவதை அவரால் விரும்ப முடியாது" என்று  பதில் கூறியதையும் காட்டுகின்றது.'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப்பாவிகள் என நினைக்கிறீர்களா? என்று குருக்குக் கேள்வி கேட்கிறார். அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். ஒருவர் எதிர்கொள்ளும் துயரச்சம்பவங்கள், அவர்தனது சொந்தத் தவறுகளுக்காக உடனடியாக அனுபவிக்கும் தண்டனைகள்" என்ற கருத்தை இயேசு எச்சரிக்கிறார். அடுத்தவனைப்பற்றி பேசும்போது அவனது பெருமை,திறமை, நன்மைகளைப் பேசவேண்டும். எம்;மைப்பற்றி பேசும்போது எம் பலவீனங்கள்,தவறுகள், குறைகளை மனதில் கொள்ளவேண்டும்.இரண்டையும் செய்யும்முன் இறைவனை எம் முன் நிறுத்திக்கொள்ளவேண்டும்.இயேசு சொன்ன சொற்கள், எல்லோரும் பாவிகள், எல்லோரும்; குற்றவாளிகள். மனமாற்றம் பெறுதலே அழிவிலிருந்து காத்துக்கொள்ள சிறந்த வழி.

'இயேசு, இந்த நிகழ்வுகளை வித்தியாசமான கண்ணோட்டத்தில் வாசிக்கவும் அவற்றை மனமாற்றத்தின் பொருளில் நோக்கவும் அழைப்பு விடுக்கிறார்". இறைவன் இன்றி நாம் வாழ முடியும் என்ற மாயையை வெற்றிகொள்ளவும் கடவுளின் துணையோடு அதுகுறித்து நாம் சிந்திப்பதற்கும் இச்சம்பவங்கள் வாய்ப்பளிக்கின்றன எனநாம் உணரவேண்டும். பாவிகள் தீமையை விட்டுவிலகி அவரன்பில் வளரவும் மற்றவர்கள் அருளின் மகிழ்வில் வாழ நாம்உதவவும் இறைவன் விரும்புகிறார்.'தனது மக்களுக்கு எப்பொழுதும் நல்லதையே விரும்பும் இறைவன், அம்மக்கள் மேலான நன்மைகளை கண்டுபிடிக்கும் வண்ணம் வேதனைகளை அனுபவிப்பது தமது அன்பின் நமது அறிவுக்கு எட்டாத திட்டத்தின் ஓர் அங்கமாக சிலவேளைகளில் அனுமதிக்கிறார்"இத்தவக்காலத்தில் இத்தகைய இச்சம்பவங்கள், இறைவன் இன்றி நாம் வாழ முடியும் என்ற மாயையை வெற்றிகொள்ளவும் கடவுளின் துணையோடு அது குறித்து நாம் சிந்திப்பதற்கும்; வாய்ப்பளிக்கின்றன.


Friday, February 22, 2013

சிறைச்iசாலைக்கு செல்லும் முகச்சாயலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்

24.02.2013 '" 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசு உயர்ந்த மலையில் உரு அல்லது தோற்றம் மாறிய நிகழ்வை குறிக்கும்; பைபிள்; பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. டீடீஊ நிறுவனம் தயாரித்த 'மனித உடல்" எனும் ஒரு அறிவியல் திரைப்படதை பற்றி இங்கு குறிப்பிடுவது நல்லது.:'காலையில் எலாம் அடிக்கிறது. தூங்கிக்கொண்டிருந்த ஓர் இளைஞனின் காதுகளைத் தாக்கிய அந்த ஒலி அலைகளால் அவன் காதுக்குள் இருந்த செல்களில் மாற்றங்கள். எலாம் கேட்டு கண் விழித்தான். கண்ணிமை உரசியதால் விழியின் மேல் படலத்தில் இருந்த செல்களில் மாற்றங்கள். அந்த இளைஞனின் அன்றைய வாழ்வுக்கான மாற்றங்கள் துவங்கி விட்டன." என்ற  வரிகளுடன் அப்படம் ஆரம்பமாகிறது. மாற்றம் என்பது மனிதனுக்கு அடிப்படையாக தேவையானது. 

குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என்று மனித உடலிலும், மனதிலும், அறிவிலும் எத்தனை மாற்றங்கள்? பருவ மாற்றங்கள், கலாசார மாற்றங்கள், எண்ணங்களில் மாற்றங்கள், மாற்றங்கள் என்று நினைக்கும் போது. பட்டியல் மிகவும் நீளுகின்றன. மாற்றங்கள் மனித வாழ்வின் மையம். அது இல்லையெனில் மரணம் தான். மாற்றங்கள் நேரும் போது போராட்டங்களும் இருக்கும். ஒவ்வொரு மாற்றமும் குழந்தை பெறுவது போன்றது. துன்பம், போராட்டம் இவற்றினின்று பிறப்பது மாற்றம். நம்மைச் சுற்றி எழும் மாற்றங்கள் ஒரு கனவுலகை உருவாக்கினாலும், அந்தக் கனவுகளின் நடுவிலும் வாழ்வின் குறிக்கோளை, இலட்சியத்தை நினைவில் கொள்வது நமக்கு நல்லது.

உருமாற்றம் என்றால் என்ன? ஏன், எப்படி, அது உண்டாகிறது? மாற்றம் தேவையா, இல்லையா? மாற்றம் நல்லதா, கெட்டதா? கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த இடத்தில் முன்பு வாசித்த ஒரு கதையை சொல்லித்தன் ஆகவேண்டும்: 'இறுதி இரவுணவு" என்ற உலகப் புகழ் மிக்க ஓவியத்தை லியோனார்டோ டா வின்சி வரையும் போது நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் இது. லியோனார்டோ டா வின்சி; ஓவியம் வரைவதற்கு ஆட்களைத் தேடுகிறார் என்று அறிந்ததும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அவரது இல்லம் நோக்கி படையெடுத்தனர். அந்தக் கூட்டத்தில் அமைதியாக, கொஞ்சம் ஒதுங்கியே நின்ற ஒரு 20 வயது இளைஞனை டா வின்சி முதலில் தெர்தேடுத்தார். அவரை வைத்து, இயேசுவை வரைந்தார். பின்னர் ஒவ்வொரு சீடரை வரைவதற்கும் ஆட்களைத் தேர்ந்தெடுத்து, வரைந்து கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகளாய்த் தீட்டப்பட்ட இந்த ஓவியத்தின் இறுதி கட்டத்தில் யூதாஸை வரைந்தார். உரோமையச் சிறையிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு இளைஞனை வைத்து யூதாஸை வரைந்துகொண்டிருந்த போது அவன் அழுதான். ஏன் ஆழுகின்றாய் என விவரம் கேட்டார் டா வின்சி. 'ஆறு வருடங்களுக்கு முன் நீங்கள் இயேசுவை தீட்டுவதற்கு பயன்படுத்திய இளையனும் நான்தான்" என்று அவன் சொன்னான். ஒரு இளைஞன் ஒரு சில ஆண்டுகளில் உருவம், பழக்க வழக்கம் இவற்றில் பெரும் மாற்றங்கள் அடைவதை எல்லாருமே பார்த்திருக்கிறோம், உணர்ந்திருக்கிறோம்.

கூட்டுப் புழு கூட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீண்டதொரு போராட்டம் செய்யவேண்டியுள்ளது. அனால், அந்த போராட்டத்தின் போது அதன் இறக்கைகளைப் பெரிதாகும். போராட்டத்தின் இறுதியில் அழகான வண்ணத்துப் பூச்சி வெளியேறி பறக்கும். கூட்டுப் புழு பார்க்க அழகில்லாதது. வண்ணத்துப் பூச்சி அழகுக்கு இலக்கணமாகிறது. இந்த மாற்றம் உருவாக, போராட்டம் தேவை.  போராட்டம், துன்பம் இவை ஈன்றெடுக்கும் குழந்தைதான் மாற்றம்.

உயர்ந்த மலையில் இயேசுவின் உருமாற்றம் சீடர்களிடம் உருவாக்கிய மாற்றங்கள்: பேச்சிழந்தனர், பயந்தனர், பின்னர் அவர்களுள் பேதுரு மட்டும் என்ன பேசுகிறோம் என்பதை உணராது எதையோ பேசினார். 'நாம் இங்கேயே தங்கி விடலாம்" என்கிறார். உடனே மேகங்களின் வழி இறைவன் சொன்ன பதில்: 'என் அன்பு மகன் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்."பேசுவதைக் குறைத்துக் கொண்டு, கேட்க வேண்டும். இறைவார்த்தையைக் கேட்க வேண்டும். அந்த இறைவன், இறை மகன் இயேசு என்ன கூறுகிறார். இங்கே தங்கியது போதும். வாருங்கள் மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம் என்று கூறுகிறார். 

கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கோவில்களிலேயே தங்கி விடமுடியாது,கூடாது. இறைவனைக் கண்ட, தரிசித்த அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் உலகிற்குள் செல்ல வேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம். உருமாறிய கடவுளைக் கண்ணாரக் கண்ட சீடர்களை அழைத்துக் கொண்டு இறை மகன் இயேசு மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? அந்த மக்களை உருமாற்றவே 
 
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாற்றங்களை எதிர் கொள்ள நாம் மேற்கொள்ளும் போராட்டங்கள் இவை நம்மையும், நமது சூழ்நிலைகளையும் மாற்றும், புரட்டிப் போடும்.
 
இந்த நாட்களில் பலர் 'என்னடா வாழ்க்கை, எல்லம் நரகமாக இருக்கிறது. ரோட்டில நாட்டில இருக்க முடியவில்;லை. இந்த இளைஞர்கள் அட்டகாசம் கொஞ்ச நஞசமல்ல நாம் இங்கே இருப்பது நல்லது என்று சொல்லவோ நினைத்துப் பார்க்கவோ முடியவில்லை என அழுகிறார்கள். எனவே நாம் நல்லவராவோம். சிறைச்iசாலைக்கு செல்லும் முகச்சாயலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இயேவின் முகச்சாயலை எம்மில் கொண்டுவருவோம். மக்களை உருமாற்றும் பணியில் நாமும் இணைவோம்.

Saturday, February 16, 2013

'எம் சோதனைகளுக்கு எம் பதில் என்ன"

17.02. 2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
இயேசு தூயஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யூதேயாவின் பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்னும் பைபிள்; பகுதி இன்று எமக்கு தரப்படுகின்றது. யூதேயாவின் பாலைவனம் மயில்கணக்ளில் விரிந்திருக்குமிடம். அது பிரியேசனமற்ற மணல் குன்றுகள், பாறைகள்,ஒடுங்கிய கூரிய பள்ளத்தாக்குகள் நிறைந்த நீரற்ற இடம். மக்கள் யாருமற்ற வேடிக்கைகளின் சத்தகள் அற்ற கிரம நகர் புறங்களில் இருந்த வெகு தொலைவில் உள்ள ஒரு தனிமையான இடம்.

'இவரே என் அன்பார்ந்த மகன்" என தந்தையால் அறிவிக்கப்பட்ட உடனே ஏன் பரிசுத்த ஆவி இயேசுவை இப்டிப்பட்ட ஒரு இடத்திற்கு அழைத்து செல்லவேண்டும். இங்கு குடும்ப உறவினர்களின் தொடர்புகள் கூட இல்லை. இயேசு மட்டுமே அங்கு நாற்பது நாள் தனிமையாக செபம்,உண்ண நோன்பில் இருந்தார். கடவுள் மோசே, எலியா இருவரையும் தெரிந்தெடுத்தபோது உருவாக்கி கொடுத்த அதே படிமுறையை இயேசுவும் பின்பற்றினார் என்பதை நிருபிக்வே அவ்வாறு அழைத்து செல்லப்படுகின்றார் என்றும் கூறப்படுகின்றது. மோசே, எலியா இறைவனை சந்திப்பதற்கும் மக்களை பரிசுத்த வழியில் வழிநடத்துவதற்கு, திடம் பெறுவதற்கும் நாற்பது நாள் செபமும், உண்ண நோன்பும் சீனாய் பாலைவனத்தில் மேற்கொண்டனர் என்பது எமக்கு நன்கு தெரியும்.

இயேசு பாலைவனத்தில் மூன்று சோதனைகளை சந்திக்கின்றார். சாத்தான் முதல் சோதனையை ஆரம்பித்த விதமே அழகானது.'நீர் இறைமகன் என்றால், இந்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்" இயேசுவிடம் இப்படி ஒரு சவாலை முன் வைக்கிறது சாத்தான். 'நீர் இறை மகன் என்றால்" என்று சாத்தான் சொல்வதைக் கேட்கும்போது, மற்றொரு ஆழமான எண்ணமும் எழுகிறது. இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது சாத்தான். இறைமகனுக்கு சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இந்த இலக்கணத்தின்படி, இறைமகன் புதுமைகள் நிகழ்த்த வேண்டும், அதுவும் தன்னுடைய சுயத்தேவைகளை நிறைவு செய்ய, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள புதுமை செய்ய வேண்டும். தன் சுயதேவைகளுக்கு, சுய விளம்பரத்திற்குப் புதுமைகள் செய்வது புதுமைகள் செய்யும் சக்தியை அழுக்காக்கும், அர்த்தமில்லாததாய் ஆக்கும்.

இயேசு சாத்தானுக்குச் சொன்ன பதிலில் பாடங்கள் பல உண்டு. இயேசு தன் உடல் பசியை விட, ஆன்ம பசி தீர்க்கும் இறைவார்த்தை என்ற உணவைப் பற்றி பேசினார். மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை. தன் சொந்த பசியைத் தீர்த்துக் கொள்ள மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகளை, திறமைகளை எதற்காகப் பயன்படுத்துகிறோம்?சுயத்தேவைகளை நிறைவு செய்வதற்காகவா? சிந்திக்கலாம். இயேசுவிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

இரண்டாவது சோதனையில் ஒரு கூடுதல் சிந்தனை உண்டு. இறை வார்த்தையைப் பயன்படுத்தி அலகை ஆலோசனை வழங்குகிறது. இன்று வேதங்கள், வேதநூல்கள் உட்பட நல்லவைகள் பலவும் பொல்லாத இடங்களில், பொல்லாத காரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது வேதனைக்குரிய ஓர் உண்மை.
மூன்றாவது சோதனையில் உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகத்தைத் தன் வசமாக்கத்தானே இயேசு மனு உருவானார்? இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே. அப்படி இயேசு உலகை தன் மயமாக்க வேண்டுமானால், சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்டவட்டமாக மறுத்தார்.

இறுதி 3 மணி நேரங்கள் சிலுவையின் கொடூரச் சித்ரவதை. இது எதுவும் இயேசுவுக்குத் தேவையில்லை. ஒரு சில நிமிடங்கள் போதும். எருசலேம் தேவாலய சாகசம் ஒன்று போதும். உலகம் இயேசுவின் காலடியில் கிடந்திருக்கும். சுருக்கமான வழி. எளிதான முயற்சி. எக்கச்சக்கமான வெற்றி. கிடைத்திருக்கம். சாத்தான் முன் சரணடைந்திருந்தால் குறுக்கவழிகளை மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது, தந்தையே, உமது கைகளில் என் ஆன்மாவை ஒப்படைக்கிறேன் என்று இறைவனிடம் சரணடைந்தார். உலகைத் தன் வசமாக்கினார். தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை இவைகள் முன் சரணடைந்திருக்கிறோம்? நல்லது ஒன்று நடக்க வேண்டுமென்று தீமைகளைச் சகித்துக் கொள்வதும், தீமைகள் நடக்கும் போது கண்களை மூடிக் கொள்வதும். இப்படி நடப்பதற்குக் காரணம், ஊரோடு ஒத்து வாழ்தல் என்று உபதேசம் செய்வதும். நாம் வாழ்க்கையில் அடிக்கடி, பார்த்து, பழகி வந்துள்ள எதார்த்தங்கள். இப்படி சமரசம் செய்வதே நம் வாழ்க்கையாகி விட்டதா என்று சிந்திப்பது நல்லது.


சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ் மனதில் உள்ள தீய நாட்டங்கள், சக்தி மிகுந்தவைதான். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. நமது சொந்த சக்திக்கு மீறியதாய்த் தோன்றும் சோதனைகள் வரும்போது, இறைவனின் சக்தி நமக்குத் துணை வரும் என்ற நம்பிக்கையும் நம்மில் வளர வேண்டும். சின்ன வயதில் நமக்குச் சொல்லித் தந்த 'காவல் சம்மனசு' கதைகள் வெறும் கற்பனைக் கதைகளா? கட்டுக் கதைகளா? அல்லது நம்மைக் காப்பதற்கு இறைவன் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தும் அடையாளங்களா? சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், குறுக்கு வழிகளில் பலன் தேடுதல், சுயவிளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீயச் சக்திகளோடு சமரசம் செய்தல் என்று நம்மை வந்தடையும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து ஏதாவது பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியுமா? கற்றுக் கொண்டதை செயலாக்க விருப்பமா? பரிசுத்த ஆவி இத்தவக்கலத்தின் நாற்பது நாளும் எமக்கு விசேட வழி காட்ட வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேட இத்தவக்காலம் நல்லதொரு நேரம்.

Wednesday, February 6, 2013

சவுதி அரேபியாவில் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ரிசானா நஃபீக் என்ற இளம்பெண்ணிற்காக இறைவனிடம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட செபித்தார்


செய்தி: ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

திருத்தந்தை 16ம் பெனடிக்ட தமது மாசிமாதச் செபக் கருத்தில் அண்மையில் சவுதி அரேபியாவில் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ரிசானா நஃபீக் என்னும் இளம்பெண்ணிற்காக செபித்தார். அத்துடன் எம் அனைவரையும் அவருக்காக செபிக்கும் படி வேண்டியும் உள்ளார்;;.  அவர் தொடர்ந்தும்  செபிக்கும் போது போர்ப் பகுதிகள் அல்லது ஆயுதம் தாங்கிய மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அமைதியின் தூதுவர்களாக மாறுவதற்கு அவர்களுக்கு உதவிகள் வேண்டும் என்று வேண்டினார். குடியேற்றதாரக் குடும்பங்கள், உள்நாட்டு மோதல்கள், வறுமை காரணமாக வேறு நாடுகளில் பிழைப்பு தேடிக் குடியேறியிருப்பவர்கள், சிறப்பாக, தங்களது கணவன், பிள்ளைகளைச் சொந்த ஊர்களில் விட்டுவிட்டு, வெளிநாடுகளில் வீட்டுவேலைகள் செய்யும் தாய்மார்களுக்காகச் செபித்தார். இவர்கள் வீட்டுவேலைசெய்யும் குடும்பங்களில் பலவகையான, வெளிப்படையாகச் சொல்ல முடியாத துன்பங்களை எதிர்கொள்கிறார்கள். ஓய்வின்றி வேலை, தனிமை உட்பட பல கஸ்;டங்களை தினம் அனுபவிக்கின்றார்கள். அண்மையில் சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த ரிசானா நஃபீக் என்ற இளம்பெண் பொது இடத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது உலகம் அறிந்த செய்தி. எனவே அப்பெண்ணிற்காக நாம் அனைவரும் இறைவனிடம் பிராத்திப்போம் என கேட்டுக்கொண்டார்.
இன்று உலகில் 19 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளிநாடுகளில் வாழ்கின்றனர். தங்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் பாதுகாப்பதற்குத் தாய்மார் எதிர்கொள்ளும் துன்பங்கள் கணக்கிலடங்காது நீளுகின்றன. எனவே இம்மாதத்தில் குடியேற்றதாரத் தாய்மார்களுக்காகச் செபிப்போம். எம் தாயும் தந்தையுமான பரம்பொருளே இறைவா, நீர் அநாதைகளுக்குத் தஞ்சம். நோயாளிகளின் மருத்துவர். வீடற்றவர்களுக்குப் புகலிடம். பசியால் வாடுவோருக்குப் பசிதீர்க்கும் உணவு. இறைவா, உம் பிள்ளைகளின் கவலைகளையும் கஸ்டங்களையும் போக்கியருளும். போர் இடம்பெறும் சூழல்களிலும், ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் இடங்களிலும் வாழும் மக்களை இவ்வேளையில் நினைக்கின்றோம். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பசியாலும் நோயாலும் தினம் தினம் சொத்து வாழும் மக்களை நினைவுகூரும். சொந்த ஊரை, உறவகளை விட்டுவிட்டு, வெளிநாடுகளில் வீட்டுவேலைகள் செய்யும் தாய்மார்களுக்காக வேண்டுவோம். எம் நல்ல தந்தையே, இவர்கள் தங்களின் கசப்பான அனுபவங்களிலிருந்து அமைதியின் மேன்மையை உணரச் செய்யும். இவர்களை அமைதியின் தூதுவர்களாக மாற்றும் என செபித்தார்.
உலகில் போர்கள் நீங்கி அமைதி நிலவச் செபிப்போம். உலகில் ஆயுதங்கள் களையப்படட்டும். அணுஉலைகள் மூடப்படட்டும். மக்கள் மத்தியில் சண்டைகள் நீங்கி அமைதி ஏற்படட்டும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், பிணக்குகள் நீங்கி சமாதானம் ஏற்படவும் செபிப்போம் என அனைவரையும் கேட்டுக்கொண்டார்.


கள்ளம் கபடமற்றவர்களாக கடவுளைத் தேடுவோம்

10.02.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

முன்பு ஒரு முறை கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது: 90 வயதைத் தாண்டிய பேதுரு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த சமயத்தில் லொத்தரில் அவருக்கு 10 கோடி  ரூபாய் பரிசு விழுந்ததாகச் செய்தி வருகிறது. அந்தச் செய்தியை அவரிடம் எப்படி சொல்வதென்று குடும்பத்தினர் திகைத்தனர். அந்தச் செய்தியைக் கேட்டு பேதுரு மயங்கி அவருக்கு ஏதாவது ஆகிவிடக் கூடாதுதென்ற கரிசனை. பக்குவமாக பேதுருவிற்கு அந்தச் செய்தியைச் சொல்ல வயதில் முதிர்ந்த தமது பங்கு தந்தையை கேட்டுக் கொண்டனர். பங்கு தந்தை,குடும்பத்தினர் சுற்றி இருக்க பேதுருவிடம்; பல விடயங்களைப் பேசுகிறார். லொத்தர் ரிக்கற்றுக்களைப் பற்றி, அதில் பலருக்குக் கிடைக்கும் அதிஸ்டங்களைப் பற்றி இருவரும் கதைக்கத் தொடங்கினர். குதைத்துக்கொண்டிருக்கும் போது பங்கு தந்தை பேதுருவிடம், சரி, உங்களுக்கு திடீரென லொத்தரில் 10 கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கிறார். படுத்திருந்த பேதுரு சுற்றிலும் பார்க்கிறார். பிறகு, ஒரு புன்சிரிப்புடன் பேதுரு சும்மா சொல்லவேண்டாம் பாதர் என்று சொல்லிவிட்டு மற்ற விடயங்களைப் கதைக்க ஆரம்பிக்கிறார். பங்கு தந்தை விடுவதாகவில்லை. ஒரு பேச்சுக்கு அப்படி நினைப்போமே. உங்களுக்கு லொத்தரில் பத்து கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?" என்று மீண்டும் கேட்கிறார். கொஞ்ச நேர அமைதிக்கு பின், பேதுரு அதில் ஒரு 5 கோடியை பங்கு ஆலயத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் என்றார். இதைக் கேட்கும் பங்கு தந்தை மயங்கி விழுகிறார். மயக்கம் தெளிந்தெழுந்ததும் பாதரிடம் ஏன் பாதர் விழுந்தநீர்கள் என்று பேதுரு கேட்டார். இன்று எமது ஆலயங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு புனரமைப்பு தேவையில் இருக்கின்றனவே அதற்கு உதவ யாரும் வருவதில்லை. உமது தாராள தன்மையை எண்ணியிபோது அதிர்ச்சியில் விழுந்துவிட்டேன் என்றார் பாதர். 

பரிசுகள், அதுவும் எதிபாராத விதமாக கிடைக்கும் பரிசுகள் எதையும் செய்து விடும் என்று கூறுவர்  இயேசுவின் சீடர்களுக்கு, அவர்கள் சீடர்களாவதற்கு முன்னால், இப்படி பரிசு மழையில் மூழ்கிய ஒரு அனுபவம் ஏற்பட்டது. மீன்கள் வலைகள் கிழியுமளவிற்கு கிடைப்பதை கண்கின்றார் சீமோன் போதுரு.  அவர் மயங்கி விழவில்லை நான் பாவி இயேசுவே என இயேசுவின் கால்களில் விழுகிறார். சீமோன் பேதுருவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான ஒரு நிகழ்வாக நாம் இதை பார்கின்றோம். இது அவரது வாழ்வையே புரட்டிப் போட்ட ஒரு நிகழ்வு என்றும் கூறலாம்.

ஆழத்தில் வலைகளைப் போடுங்கள் என்று இயேசு அவரிடம் சொன்னார். மீன்பிடிக்கும் தொழிலில் பல ஆண்டுகள் ஊறி, அந்தத் தொழிலில் தேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களது திறமையையும், அனுபவத்தையும் கேலி செய்வது போல் இருந்தது இயேசுவின் கட்டளை. சீமோன் நினைத்திருந்தால், இயேசுவிடம் இப்படி(கற்பனை) சொல்லியிருக்கலாம். ஐயா, மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்ததால், படகில் அமர்ந்து போதிக்க நினைத்தீர்கள். நீங்கள் சொன்னதைக் கேட்டோம். நீர் வந்தது மக்களுக்குப் போதிக்கவே. அதை முடித்து விட்டீர். இந்தப் பகல் நேரத்தில் நாங்கள் வலை வீசினால், எம்பகுதியில் எங்களை பார்ப்பவர்கள் பைத்தியக்காரர்கள் என்பார்கள். மீன் பிடிப்பு பற்றி நன்கு அறிந்துகொண்டபின் எங்களை அதிகாரம் செய்யலாம். இப்போதைக்கு, நீர் உம் வழியே போகலாம்."

மாறாக, சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் என்றார். கள்ளம் கபடமற்ற சீமோன் பேதுரு தன் மனதில் பட்டதைச் சொல்கிறார். நல்ல பாடங்கள் இந்தக் கூற்றில் புதைந்துள்ளன. உண்மையை எந்த வித பூச்சும் இல்லாமல் சொல்வது. ஒருவரது பின்னணியைப் பார்ப்பதிலும், அவர் சொல்வதற்கு மதிப்பு கொடுப்பது. மீன்பிடிப்பைக் கண்டதும், சீமோன் பேதுருவின் செயல் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. உணர்ச்சிகள் மேலிடும்போது, வார்த்தைகள் வருவது அபூர்வம். சீமோன் பேதுருவழற்கும் அப்படி ஓர் உணர்வு மேலோங்கியதால் நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் என்று பேசியிருக்கலாம். உண்மையை உரைத்தவருக்கு உன்னத பரிசு உலகத் திருச்சபையின் முதல் திருத்தந்தை ஆக்கப்படுகின்றார்.

ஆழத்தில் வலைகளைப் போடுங்கள் என்று இயேசு அவரிடம் சொன்னபோது, சீமோன் பேதுருவின் பதில் மொழி: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது.  நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய அனுபவங்கள் நிச்சயம் உண்டு. பாடுபட்டுப் படித்தும் தேர்வில் தோல்வி அடைவோர், பாடுபட்டு வேலை தேடியும் வேலை இன்றித் தவிப்போர், பாடுபட்டுப் பணம் சேர்த்தும், அதை ஒரே நாளில் இழந்துவிடுவோர், பாடுபட்டு ஏற்பாடுகள் செய்து பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைத்தும், அவர்கள் மகிழ்ச்சியின்றி வாழ்வதைக் கண்டு கலங்கும் பெற்றோர், பல மருத்துவர்களிடம் சென்றும் நலம் பெறாதோர் எனப் பல தரப்பட்ட மக்கள் சீமோன் பேதுருவின் வரிசையில் நிற்கின்றனர்.

அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் சீமோன்  பேதுருவின் பதில் மொழியிலுள்ள இரண்டாம் பகுதி எடுத்துச் சொல்கிறது: ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன். அதாவது, இறையாற்றலில், இறைவனின் பேரன்பில், இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு செயல்படுவது. அவ்வாறு, சொல்லி, செயல்பட்ட உடனே பேதுருவின் வாழ்வில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. வலைகள் கிழியும் அளவுக்கு மீன்பாடு கிடைத்தது. மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை. கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது என்னும் இறைமொழியை நினைவில் கொள்வோம். அத்துடன் விசுவாசம் என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் அர்ப்பணம் மட்டுமல்ல, மாறாக கடவுளைத் தேடும் அனைவர் உள்ளத்திலும் விதைக்கப்பட்டுள்ள ஓர் ஆவல் என்று அறிந்து வாழ்வோம்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff