Friday, August 31, 2012

உதட்டையும், உள்ளத்தையும் இணைத்தே இறைபுகழ் பாடுவோம்.


02.09.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

நம்முடைய வழிபாடு,இறைப்பற்று பற்றிக் கொஞ்சம் ஆய்வு செய்ய இன்றைய ஞாயிறு அழைப்பு விடுக்கிறது. பலதடவைகள் நாம் இறைவனை மேலோட்டமாக வழிபட்டிருக்கின்றோம்;. இதுதான் உதட்டால் செய்யும் வழிபாடு. இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது என்று எசாயா வழியாக இறைவன் முன் அறிவித்ததை இயேசு யூதர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. தம் காலத்தில் வாழ்ந்த யூதர்களிடம் இருந்த வழிபாட்டு, ஆன்மீக முரண்பாடுகளை இயேசு இதன்மூலம் சுட்டிக்காட்டுகிறார்.

ஆன்மீகத்தைப் பல வழிகளில் வரையறை செய்யலாம். முரண்பாடற்ற வாழ்வு என்பது அவற்றுள் ஒன்று.யாரெல்லாம் தங்கள் வாழ்விலும், பேச்சிலும் முரண்பாடற்று வாழ்கிறார்களோ, அவர்களெல்லாம் சிறந்த வகையில் தங்கள் ஆன்மீகத்தை வாழ்கின்றனர் என்று சொல்லலாம். செபம், வழிபாடு, இறைவார்த்தை இவற்றில் அதிக ஆர்வம் காட்டிவிட்டு, அதே வேளையில் வாழ்வில் நேர்மையற்ற தன்மை, பணிகளில் குறைபாடு, உறவுகளில் போலித்தனம் கொண்டவர்களாக வாழ்ந்தால், எசாயா குறிப்பிடும் கூட்டத்தில் நாமும் சேர்ந்துவிடுவோம். 

ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளைஞனிடம் அதிகாரி சொன்னார்:“இங்கு இரண்டு முக்கியமான விதிகள் உள்ளன. முதலில் 2-வது விதியைச் சொல்கிறேன். தூய்மை என்பது இங்கு மிக முக்கியம்.” பிறகு அவனிடம் நீ இங்கு உள்ளே நுழையும்போது உன் கால்களை மிதியடியில் தேய்த்துத் துடைத்துக்கொண்டு வந்தாயா? என்று கேட்டார். அவன், “ஆம், நிச்சயமாக,” என்றான். “நல்லது”என்று சொன்ன அவர் தொடர்ந்தார்: “இங்குள்ள முதலாவது முக்கிய விதி உண்மை பேசுதலாகும்.” “ஆனால் இங்கே மிதியடியே கிடையாது” என்றார். வெளித் தூய்மையை மட்டுமே நாம் போற்றினால் நம்மிடம் அகத்தூய்மை இல்லாதுபோகும். அகத்தூய்மை இல்லாத தூய்மை, தூய்மையேயில்லை. அப்படியானால் நம்மிடம் உண்மையே இல்லை. அப்போது நம்முடைய வழிபாடு உதட்டினால் மட்டுமே கடவுளைப் போற்றுவதாக அமைந்துவிடும். சொற்களால் கடவுளைப் போற்றிவிட்டு, செயல்களால் அவரைப் பழித்தால் அதுவும் ஒரு பெரிய முரண்பாடாகிறது. நேர்மையான நடத்தை இல்லாத இடத்தில் வெளிவேடம்தான் மிஞ்சும். இயேசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர் யூதர்களின் வெளிவேடத்தை நாம் பலதடவை பார்த்திருக்கின்றோம். ஆனால் இயேசுவோடு மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்று அவரது அன்பை அருகிலிருந்து சுவைத்த யூதாஸ் இயேசு நம்பிக்கை வைப்பதை நிறுத்திய பின்னரும் அவரைத் தொடர்ந்து பின்செல்வதற்கு எடுத்த தீர்மானத்தில் வெளிப்படுவது வெளிவேடமே, நேர்மைக்குறைவே.இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான யூதாஸின்  போலித்தனம் இங்கு வெளிவேடமாகிறது.

இயேசு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்று தன்னை அறிவித்த போது, இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம் என்று சொல்லி அவரைப் பின்சென்றவர்களில் பலர் அவரை விட்டு விலகினர், அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. அப்போது இயேசு பன்னிரு சீடரிடம்,நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார். அதற்கு புனித பேதுரு, ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன என உண்மையாக தன் உள்ளக்கிடக்கையை உதட்டினால் உரைத்தார். ஆனால் யூதாஸ் விதிவிலக்காக இருந்தார், யூதாஸ் நேர்மையாளராய் இருந்திருந்தால், வெளிவேடமற்றவனாக இருந்திருந்தால், அவனும் இயேசுவை விட்டு விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் இயேசுவோடு இருக்கவே முடிவு செய்தார், இது, யூதாஸ் இயேசு மீது கொண்டிருந்த பற்றுறுதியாலோ அல்லது அன்பாலோ அல்ல, மாறாக, தனது போதகர் மீதி பழிவாங்கும் இரகசிய ஆசையாலே இயேசுவோடு இருந்தார். இது வெளிவேடமே. இறுதியில் யூதாஸ் இயேசுவை விட்டு இறந்துபோனான். வெளிவேடம் எம்மை அழிவிக்கே இட்டுசெல்லும.; வெள்ளை உள்ளம் இறைவன்பால் எம்மை இட்டுச்செல்லும். யூதாஸ் உள்ளத்தல் உண்மையாகவே இறைபற்றற்றவனாக இருந்தான். புனித பேதுரு வெள்ளை உள்ளம் கொண்டிருந்தார். இயேசுவில் வாழ்வடைந்தார். எனவே புனித பேதுரு செய்தது போல நாமும் இயேசுவில் பற்றுறுதி கொண்டு உள்ளத்தில் வெளிவேடமற்று வாழ்வோம். இயேசுவோடும் அனைத்து மக்களோடும் எப்போதும் நேர்மையாய் வாழ உறுதிபூணுவோம்  

இன்று எம் தடுமாறும் வாழ்க்கையிலே தறிகெட்டலைந்து தடுக்கிவீழ்ந்தாலும் நாம் வெளிவேடத்துடன் வாழாது இறைவனே எம் வாழ்வினிலே ஆணி வேராய் ஆழப் பதிந்திருக்கிறார். எனவே நமது வாழ்வு இறைவனுக்கு ஏற்றதாக அமையவேண்டும். விழிப்பாய் இருப்போம். நம் உதடுகளும், நம் உள்ளமும் இணைந்தே இறைபுகழ் பாடட்டும். நம் வாழ்வும், வழிபாடும் முரணின்றி அமையட்டும் 

Saturday, August 25, 2012

நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா? இயேசு பதிலை எதிர்பார்த்த இந்தக் கேள்விக்கு விடைபகிர்வோம்.


26.08.2012 

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசுவின் சீடரில் பலரும் இயேசுவின் போதனைகள் சிலவற்றைப் பற்றி, குறிப்பாக தமது உடலை உணவாகத் தருவது பற்றி இயேசு குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம் என்று பேசிக் கொண்டது ஒரு வியப்பான தகவல்தான். தமது போதனையை இயேசு இன்னும் அழுத்தத்துடன் எடுத்துரைத்தபோது, அந்தப் போதனையை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் பிரிந்து சென்றனர் என்பதை “அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்” என்று என்பதைத் இன்றைய நற்செய்தி வாசகம்; பதிவு செய்திருக்கிறது.

நற்கருணை என்னும் அருள்சாதனத்தை நம்பாமல், ஏற்றுக்கொள்ளாமல் அதன் காரணமாகத் திருச்சபையை விட்டுப் பிரிந்து செல்லும் ஏராளமான கத்தோலிக்கர்களின் முதல் முன்னோடிகள் இவர்களே என்றும் கூறிவிடலாம். இவர்களின் பிரிவு குறித்து, இயேசு கவலைப்படவில்லை, தமது போதனையை மாற்றிக்கொள்ளவுமில்லை. நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? இயேசு தன் சீடர்களிடம் கேட்ட இந்தக் கேள்வியை இன்று நம்மை நோக்கிக் கேட்பதாக எடுத்துக் கொண்டால் தற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக இறைவனைவிட்டு, ஆலய வழிபாடுகளைவிட்டு, இறைமதிப்பீடுகளை விட்டுப் எம்முள்ளிருந்து பிரிந்துபோகும் மனிதரின் எண்ணிக்கை பெருகி வருகிறதை நாம் காணலாம். இறைபக்தி இல்லாமல், செபம் இல்லாமல், இறைவழிபாட்டில் பங்கேற்கும் இளையோரின் எண்ணிக்கை குறைவதை காணலாம்.  உலக நாட்டங்களில் ஈடுபட்டு வாழும் மனிதர் அனைவரும் இயேசுவை விட்டுப் பிரிந்து செல்கின்றனர் என்றுதான் இன்று கூறத்தோன்றுகின்றது. எனவே எம்மைப்பார்த்து இயேசு கேட்கிறார்: நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” எனவே நாம் ஆண்டவரையே என்றும் பற்றிக்கொள்வோம் “நானும் என் வீட்டாருமோ, ஆண்டரையே என்றும் வழிபடுவோம்” என்று யோசுவா துணிவுடன் அறிக்கையிட்டதுபோல, நாமும் ஆண்டவரையே பற்றிக்கொண்டு விடைபகர்வோம்.

நாம் வாழும் இக்காலத்தில் கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்  வாழ்வது எளிதான காரியம் அல்ல, இது, கிறிஸ்துவின் காலத்திலும் எளிதாக இருக்கவில்லை. கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றும் பொழுது எதிர்படும் இடையூறுகளிலிருந்து நீந்திச் செல்லுமாறு இயேசு தம்மைப் பின்செல்லுவோரைக் கேட்கின்றார். இயேசு தன்சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள் என்று உறுதியாக  உரைத்ததைக் கேட்டு அவரைப் பின்சென்ற பலர் அவரை விட்டு விலகிச் சென்றதை படம்பிடித்துகாட்டுனின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

எனினும் இயேசு தமது போதனைகளை கைவிடவில்லை;. உண்மையில் இயேசு தமது பன்னிரண்டு திருத்தூதர்கள் பக்கம் திரும்பி நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார். பதிலை எதிர்பார்த்த இந்தக் கேள்வி இயேசுவின் பன்னிரு அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு காலத்தின் விசுவாசிகளுக்கும் முன்வைக்கப்படுகிறது.  இன்றும்கூட கிறிஸ்தவ விசுவாசத்தின் புரிந்து கொள்ள முடியாத உண்மைகளால் பலர் துர்மாதிரிகை அடைகிறார்கள். இயேசுவின் போதனை கடினமாகத் தோன்றுகிறது, செயல்படுத்துவதற்கு அது மிகவும் கடினமாக இருக்கின்றது என்பது, கிறிஸ்துவைக் கைவிடுபவர்களும் அவரது போதனையைப் புறக்கணிக்கிறவர்களும் சொல்வது. இவர்கள் காலத்தின் அமைப்புகளுக்கு ஏற்ப வார்த்தையை வடிவமைத்து அவற்றின் அர்த்தத்தையும் மதிப்பீட்டையும் சிதைப்பவர்கள். இயேசு தம்மைப் பின்செல்லுவோரின் மேலோட்டமான வாழ்க்கையில் திருப்தி கொள்ளவில்லை, மாறாக அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அவரின் சிந்தனைகளிலும் அவரது திட்டத்திலும் பங்கு கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். இந்த மாதிரியான வாழ்வே நமது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பும், நம் இருப்புக்கு முழு அர்த்தத்தைக் கொடுக்கும், எனினும் இயேசுவைப் பின்செல்லும் இவ்வாழ்வு இன்னல்களையும் சுயமறுப்புக்களையும் கொண்டு வரும், ஏனெனில் இதில் அடிக்கடி தற்போதைய உலகின் போக்கிற்கு எதிராகச் செல்ல வேண்டியிருக்கும். 

ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன என்று இயேசுவிடம் அறிக்கையிட்ட தூய பேதுருவின் பதிலையும் கருத்தில் கொள்ளவேண்டும். நமது மனிதப் பலவீனங்களைப் புரிந்து கொள்ளும் அதேவேளை, தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைத்து பேதுரு போல நாமும் இயேசுவிடம் சொல்வோம். ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம். கடினமானதாக இருந்தாலும், உமது வார்த்தைகள்தான் எங்களை வாழவைக்கும் என்று கூறி அவரிடமே அடிபணிவோம். 

Friday, August 17, 2012

Cell Phone vs... Bible

"Cell Phone vs... Bible"
கைத்தொலைபேசியை  எதிர் வேதாகமத்தை

1. I wonder what would happen if we treated our Bible like we treat our cell phones?
வேதாகமத்தை எங்கiளுடைய கைத்தொலைபேசியை நாம் பயன்படுத்துவதுபோல் பயன்படுத்தினால் எவ்வாறு இருக்கும் என் அறிய எண்ணினால் :


2. What if we carried it around in our purses or pockets?

 எமது பயணப்பையிலோ அல்லது சட்டைப்பையிலோ வேதாகமத்தை போகுமிடமெங்கும் எடுத்து சென்றால் எப்டியிருக்கும்?

3. What if we turned back to go get it if we forgot it?

வேதாகமத்தை எம்முடன் எடுத்துச்செல்ல மறந்திருந்தால் திரும்பிசென்று எம்முடன் எடுத்து சென்றால் எப்டியிருக்கும்?

4 What if we flipped through it several times a day?

ஒருநாளைக்கு பலதடவை வேதாகமத்தை திறந்து திறந்து பார்த்தால் எப்டியிருக்கும்?

5.What if we used it to receive messages?

(குறுகிய) செய்திகளை பெறுவதற்கு வேதாகமத்தை பயன்படுத்தினால் எப்டியிருக்கும்?

6. What if we treated it like we couldn't live without it?

வேதாகமம் இல்லாவிட்டால் எம்மால் வாழமுடியாது என்னும் நிலைக்கு வந்தால் எப்டியிருக்கும்?

7.What if we gave it to kids as gifts?

எமது சிறாருக்கு பரிசாக வேதாகமத்தை வழங்கினால் எப்டியிருக்கும்?

8.What if we used it as we travelled?
பிரயாணம் போகுமிடமெங்கும் வேதாகமத்தை பயன்படுத்தினால் எப்டியிருக்கும்?

9 What if we used it in case of an emergency?

மிக அவசரவேளைகளில் வேதாகமத்தை  பயன்படுத்தினால் எப்டியிருக்கும்?


10. What if we upgraded to include 24/7 tech service from the Holy Spirit?
பரிசுத்த ஆவியிடமிருந்து பெற்ற புதிய தொழில்நுட்பங்களை (27ஃ7) பயன்படுத்தி வேதாகமத்தை  மேம்படுத்தினால் எப்டியிருக்கும்?

11. This is something to make you go...hmmm...where is my Bible?

இவை அனைத்தும் உங்களை வேதாகமத்தை நோக்கி செல்வதற்கான ஒரு முயற்சியே… எங்கே என்னுடைய  வேதாகமம்? விடைதேடுவோமா?.


12.Oh, and one more thing. Unlike our cell phones, we don't ever have to worry about our Bible being disconnected because Jesus already paid the bill!

ஓம் இன்னுமெரு முக்கிய விடையம் எமது கைதொலைபேசிபோல் நாம் ஒருபோதும் கவலைப்படதேவையில்லை. வேதகமம் -ஒருபோதும் தொடர்பு துண்டிக்கப்படமாட்டது ஏனெனில் ஏற்கனவே இயேசு அதற்கான பில்லை- சிட்டையை  கட்டிவிட்டார்

Monday, August 13, 2012

The picture was taken by me-M.Francisk when  Rev.Fr.Paul Robinson was in a healing service at Thumpalai St Lourdes’ Grotto in Point Pedro, Jaffna, Sri Lank.

வாழும் உணவாகிய இயேசுவை உண்பதன் மூலம் புதிய மனிதராக மாறுவோம்

19.08.2012

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

மாணவிகள் மட்டுமே தங்கியிருக்கும் ஒரு விடுதிக்கு இளைஞன் ஒருவன் செவ்வாய்க்கிழமை வந்திருந்தான். அங்கு சனிக்கிழமை மட்டுமே மாணவிகளை சந்திக்க அனுமதி உண்டு. நடுத்தர வயதுள்ள ஒரு பெண் பொறுப்பாளராக இருந்தார். அவரிடம்; அவன் குறி;ப்பிட்ட ஒரு மாணிவியின் பெயரைக் கூறி அவளைத் தான் பார்க்கவேண்டும் என்றான். அவளுக்கு ஓர் ஆச்சரியமாக இருக்கட்டுமே என்று தான் செவ்வாய்க்கிழமை வந்ததாகவும் தான் அவளுடைய சகோதரன் என்றும் சொன்னான். அப்போது அந்தபொறுப்பாளர் அவனிடம் நிச்சயமாக அவள் உன்னைப் பார்த்ததும் ஆச்சரியப்படுவாள். ஆனால் எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாய் இருக்கிறது. ஏனெனில் நான் அவளுடைய அம்மா என்றார்.

நம் வாழ்வில் சில காரியங்கள் நம்பமுடியாத ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. எனது சதை உண்மையான உணவு எனது இரத்தம் உண்மையான பானம் என்று இயேசு சொன்னது யூதர்களுக்கு நம்பமுடியாத ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் அவருடைய சதையும் இரத்தமும் ஓர் அடையாளத்தைத் தருகின்றன. இவ்வாறு, இயேசு தமது உடலையும் இரத்தத்தையும் நற்கருணை எனும் அருள்சாதனமாகச் சித்தரிக்கிறார். எனவே இது யூதர்களுக்குப் புரிந்துகொள்ளமுடியாத ஆச்சரியத்தை அளித்தது. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது நமக்கு நம்புகிற ஆச்சரியம், அற்புதம். இது விண்ணினின்று இறங்கிவந்த உணவு, மன்னாவை உண்டவர் இறந்தனர். இதை உண்ணும் நாம் இறப்பதில்லை மாறாக, இயேசுவோடும் தந்தையோடும் இணைந்து விடுதலையும் வாழ்வும் பெறுவோம்.



ஐந்து அப்பங்களை பலுகச் செய்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு, நிலைவாழ்வு தரும் உணவைப் பற்றி இயேசு பேசுவதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. இறைவனால் வாக்களிக்கப்பட்ட நாட்டைநோக்கிச் செல்லும் பாதையில், இஸ்ரயேல் மக்களுக்கு வானிலிருந்து மன்னா எனும் உணவு வழங்கப்பட்டதை நாம் அறிந்திருக்கின்றோம். தன்னிடம் வந்த பெருந்திரளான மக்களுக்கு மன்னாவைத் தாண்டி இன்று முடிவற்ற உணவு தானே என்பதை இயேசு எடுத்துரைக்கின்றார். நிலையாக நிறைவு தரும் விண்ணக உணவாகிய தன்னை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறார். யூதமக்கள்; பாலைநிலப் பயணத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை அடையும் வரை அவர்களுக்கு மன்னா வாழ்வளித்தது. இப்பொழுது இயேசு, விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழ்வளிக்கும் உணவாகிய தன்னைப் பற்றி பேசுகிறார். அவரே நிலைவாழ்வு தரும் உணவு, தந்தையின் அன்புக்குரிய அவரில் மனிதரின் வாழ்வு முழுமையைக் காண்கிறது. இங்குகடவுளின் வாழ்வில் மனிதருக்கு அறிமுகம் கிடைக்கிறது.

கடவுளின் திருவுளத்தை அறிந்து, வாழ்வின் சரியான பாதையை கண்டுகொள்ள உதவும் மோசேயின் சட்டத்தில் இருந்த கடவுளின் வார்த்தையே வானிலிருந்து இறங்கி வந்த உண்மையான உணவு என்பது யூதர்களின் எண்ணம். இப்பொழுது இயேசு, விண்ணக உணவாக வருகின்றார். தானே கடவுளின் வார்த்தை, மனித உடலெடுத்த வார்த்தை என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். இன்றைய நற்செய்தி பகுதியில் காணப்படும் யூதர்களைப் போல இயேசுவின் இறைத்தன்மையில் சந்தேகம் கொள்வது கடவுளின் செயலை எதிர்ப்பதாகும். மனித தோற்றங்களைத் தாண்டிச் சென்று, மனித உடலெடுத்த கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுக்கிறார்கள். புனித அகுஸ்தீன் இவ்வாறு விளக்குகிறார்: அவர்கள் அந்த விண்ணக உணவில் இருந்து தூரமாக இருந்தார்கள், அவர்களால் அதற்கான பசியை உணரமுடிய வில்லை. அவர்களது இதயத்தின் வாயில் நோய் உள்ளது... உண்மையில், இந்த உணவு மனிதனின் உள்ளார்ந்த பசியைப் போக்கும்.

உண்மையாகவே நாம் கடவுளின் வார்த்தைக்கானப் பசியை உணர்கிறோமா என்று நம்மையே நாம் கேட்க வேண்டும். அகுஸ்தீன் மேலும் கூறுகிறார்: வாழும் உணவாகிய இயேசுவை உண்ண வேண்டும். அவரை உண்பதன் மூலம், காண முடியாத மறுபிறப்பை அடைந்து, புதிய மனிதராக மாற முடியும். விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழும் உணவாகிய இயேசுவால் நாம் ஆழமாகப் புதுப்பிக்கப்படுவோம். நற்கருணை, மனிதனை இயேசுவின் இறைவாழ்வில் ஐக்கியமாக்குகிறது. அவன் இயேசுவின் அடிச்சுவடுகளை மிக நெருக்கமாகப் பின்செல்லவும் பிறருக்குக் கொடையாக மாறவும் உதவுகிறது. இது விண்ணக அரசை நமக்குத் திறந்து வைக்கின்றது. மனிதருக்கு முழு நிறைவான வாழ்வை வழங்கவும், மனிதரை இறைவாழ்வுக்கு அறிமுகம் செய்யவும் இறைமகன் வானிலிருந்து உணவாக மண்ணுலகுக்கு இறங்கிவந்தார். நாம் இயேசுவிற்;காகவும் பிறருக்காகவும் வாழ்வதற்கு நற்கருணை உதவுகிறது. இந்த மாற்றம் தற்போதைய உலகுக்கு மிகவும் தேவைப்படுகிறது. மாறுவோம் மனுவுருவான இறைவார்த்தையை எம் வாழ்வாக்குவோம்.

Thursday, August 9, 2012

பலியாக இறந்து மற்றவரக்கு வாழ்வாக மாறுவோம்.

12.08.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
வாழ்வுதரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர் என்கிறார் இன்றைய நற்செய்தியில் இயேசு. வாழ்வு தரும் உணவாக வருகின்ற இயேசு தம்மையே பலியாக்குகிறார். அவர் பலியாக இறப்பதுதான் நமக்கு வாழ்வாக மாறுகிறது. இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தபின்புதான்,முடிவில்லாத வாழ்வு ஒன்று உண்டு, அவ்வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு வழியும், ஊற்றும் இயேசுவே என வெளிப்பட்டது.  தந்தையாம் இறைவன் தமது ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பியதன் நோக்கம் நாம் நிலைவாழ்வு பெறுவதற்காகத்தான் என்று நற்செய்தியாளர் புனித யோவான் கூறுகிறார்.

இன்றைய நவீன உலகின் பெரும் பகுதி கடவுளைவிட்டுத் தூரமாகச் செல்வது போன்றும் விசுவாசம் கடந்த காலத்தின் ஒரு பொருளாக நோக்கப்படுவது போல் தெரிந்தாலும் வாழ்வுதரும் உணவான இயேசுவை உட்கொள்ள ஏங்குவோரையும் காண முடிகின்றது. எனவே புதிய, முடிவற்றவாழ்வைப் பற்றி இறைவன் அளித்துள்ள வாக்குறுதியை நாம், உலக இன்பங்கள் அனைத்திற்கும் மேலானதாக கொள்ளவேண்டும். இவ்வுலகத் தேவைகளில் அதிகக் கவனம் செலுத்துவதை விடுத்து, அதையும் தாண்டி நாம் செல்வதற்கு உதவ இயேசு விரும்புகிறார். வாழ்வுக்கு முழு அர்த்தத்தையும் நம்பிக்கையையும் வழங்கும் நம் இருப்பின் மையம் இயேசு கிறிஸ்துவில் நாம் கொள்ளும் விசுவாசமே. புனித யோவான் நற்செய்தியில் காணப்படும் வாழ்வின் அப்பம் குறித்த உரையாடலை நோக்கினால் , வாழ்வுதரும் உணவு நானே. என்னிடம் வருபருக்கு பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது என்ற இயேசுவின் வார்த்தைகளை நாம் இவ்வுலகத் தேவைகளைத் தாண்டிச் செல்லவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார் என்பது தெளிவாகும். இஸ்ராயேலர்களுக்கு வானிலிருந்து வழங்கப்பட்ட மன்னாவைக்காட்டிலும் மேலான ஒன்றால் விசுவாசிகள் ஊட்டம் பெற்றுள்ளார்கள், அதுவே இயேசு, ஏனெனில் அவர் ஏதாவது ஒன்றை வழங்குபவராக மட்டுமல்ல, தன்னையே பலியாக்கி வழங்குபவராக வருகின்றார். நாம் இயேசுவில் விசுவாசம்கொண்டு, அவர் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ளும்போது வாழ்வை நிறைவாகப் பெறுவோம்.

நாம் பிறருக்கு வாழ்வு தர வேண்டும் என்றால் நாமும் நம்மைப் பலியாக அர்ப்பணிக்க வேண்டும். நம் உயிரை இழக்கும்போதுதான் நாம் பிறருக்கு வாழ்வு அளிக்க இயலும். இயேசு அவ்வாறே செய்தார். சிலுவையில் அவர் தம் உயிரை நமக்காகப் பலியாக ஒப்புக்கொடுத்து நமக்கு நிலைவாழ்வை அவர் வழங்கினார். இயேசுவின் சீடராக வாழ விரும்புவோரும் இயேசுவைப் பின்பற்றித் தம் உயிரையே காணிக்கையாக்கும்போதுதான் பிறருக்கு அவர்கள் வாழ்வு தரும் ஊற்றாக அமைந்திட இயலும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அதிகம் முக்கியத்துவம் பெறாத இன்னொரு அந்த செய்தியைப் பற்றி சற்று நோக்குவோம். தாமே உயிர் தரும் உணவு என்று இயேசு கூறியதால், யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். இயேசுவும் அவர்களைப் பார்த்து உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம் என்று கூறுகிறார். முணுமுணுப்பு என்பது என்ன? ஒரு செய்தியை, ஒரு நபரை ஏற்றுக்கொள்ள முடியலவில்லை. அதே வேளையில் அந்த செய்தியை, அந்த நபரைத் தள்ளவும் முடியாது என்ற இக்கட்டன நிலையில் சில மனிதர்கள் செய்வதுதான் முணுமுணுப்பு. இவர்களுக்கு உண்மையை உரக்க பேச தையிரியமில்லை. காரணம், தாங்கள் உண்மையின் பக்கம் இல்லை என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதே வேளையில், உண்மையை ஏற்றுக்கொள்கிற நேர்மையும், மனத் துணிவும் இவர்களுக்கு இல்லை. எனவே, ஒரே வழி மனம் புழுங்கி முணுமுணுப்பது. இது ஒருவகையான உளவியல் நோய்தான். யூதர்களுக்கு இயேசுவுடன் வாதிட்டு வெல்லவும் முடியவில்லை. அவர் சொல்லும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. எனவேதான் முணுமுணுத்தனர்.
 
நம்முடைய வாழ்விலும் பல நேரங்களில் நம் இல்லத்தில், பணியிடத்தில், பயண நேரங்களில் உண்மையை உரத்தப் பேசவும் முடியாமல், அநீதியைத் துணிவுடன் தட்டிக்கேட்கவும் முடியாமல் நாம் செய்வதெல்லாம் மெல்ல முணுமுணுப்பதுதான். இன்று இயேசு நம்மிடம் சொல்கிறார்; எங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். எனவே முணுமுணுப்பதை விடுத்து உண்மையின் வறுமையிலிருந்து மக்களை விடுவிக்கும் உண்மையின் ஒளிக்கு அவர்களை அழைத்து வரும்  பணிக்கு தயாரவோம். கடவுள்தாமே கற்றுத் தருவார். கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார் என்னும் இறைவாக்கை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மேற்கோள் காட்டுவதைக் காண்கின்றோம். நாம் நடக்க வேண்டிய பாதையைக் கடவுளே நமக்குக் காட்டுவார். நாம் பேச வேண்டிய சொற்களைக் கடவுளே நமக்குச் சொல்லித் தருவார். நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மதிப்பீடுகளைக் கடவுளே நமக்குக் கற்றுத் தருவார். இதுவே நமது நம்பிக்கையாகட்டும். இதுவே நமது பட்டறிவாகட்டும். எனவே, கடவுளைச் சார்ந்தே வாழ்வோம். அவரே நம்மை வழிநடத்துவார்.

Thursday, August 2, 2012

வாழ்வு தரும் வார்த்தைக்காக தேடி வருவோம்.

05.08.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது என்று இயேசு கூறியதை கேட்ட ஒரு குடிகாரன் அவரது குடிப்பழக்கம் காரணமாக அவனருடைய குடும்பம் மிக்க பிரச்சினைக்குள் இரும்பதை அறியாமல் தொடர்ந்தும் அதே நிலையில் வாழ்ந்துவந்தான். தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் குடிப்பதில் செலவிட்டு வந்தார். அவர்ஒரு நாள் கேரளத்தில் உள்ள தியான மடம் சென்று திரும்பினார். இயேசுவின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டார். இயேசுவின்மீது கொண்ட பக்தி காரணமாக அவன் குடிப்பதை நிறுத்திவிட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னர் அவரோடு குடித்துக் கொண்டிருந்த ஒருவரை சந்தித்தார். நண்பா நீ இப்போதெல்லாம் குடிப்பதற்கு வருவதில்லையே என்று கேட்டார். நான் இயேசுவைச் சந்தித்தேன். அவரை நான் நம்புகிறேன். இப்போது குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றார். ஓ நீ இயேசுவை நம்புகிறாயா. அவர் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதாக சொல்லப்படுவதையெல்லாம் நம்புகிறாயா எனக் கேட்டார். இயேசு தண்ணீரை இரசமாக மாற்றியதை நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் பீரையும் விஸ்கியையும் என் குடும்பத்தில் அனைவருக்கும் உணவாகவும் உடையாகவும் மாற்றியுள்ளார் என்பதை நம்புகின்றேன் என்றார். நான் இப்பொது அழிந்து போகும் உணவுவை அல்ல  அழியா வாழ்வு தரும் உணவை அன்றாடம் அருந்த ஆவலாய் இருக்கின்றேன் என்றார்.

நாம் இரு விதமான உணவுகளைக் காண்கிறோம். அழிந்து போகும் உணவு. இந்த உணவுக்காகத்தான் நாம் அனைவரும் ஆர்வத்துடன் உழைக்கின்றோம். இடையூறுகளைச் சகித்துக்கொள்கின்றோம்.அழியாத வாழ்வு தரும் உணவாக இறைமகன் இயேசு இருக்கிறார். அவரது மொழியும், உடலும் நிலைவாழ்வைத் தருகின்றன. ஆனால், இவற்றின்மீது ஆர்வமற்றவர்களாக,  நம்மில் பலரும் வாழ்கிறோம். மெல்ல, மெல்ல நாம் இறைப்பற்றை, ஆன்மீகத்தின் அடிநாதத்தை இன்று இழந்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இறைவன் தரும் அமைதி, ஆற்றல், மகிழ்ச்சியைவிட உலக இன்பங்கள், உணவு, உல்லாசங்கள் பெரிய மதிப்பீடுகளாக மாறி வருகின்றன. நாம் வயிறே நிஜம், வயிறே வாழ்வு, வயிறே தெய்வம், என்பதைப் போல அற்ப வயிற்றுப் பசிக்காக, உண்மையான வாழ்வு தரும் கடவுளை ஏற்க மறுக்கின்றோம். போதைப் பொருட்களில் சுற்றிச் சுற்றி வந்து சுகம் அடைந்தவன் போல, திருட்டுப் பழக்கத்தில் திருடித் திருடி மகிழ்ந்தவன் போல பிறரைப் பற்றிக் குறைகூறிக் குறைகூறி மீள முடியாதவன் போல நாம் செற்ப வாழ்வு கிடைத்தும் அற்ப வயி;றறுப் பசிக்காக அற்ப உணவிற்காக அண்டவரை அவமதிக்கின்றோம். எனவே, இன்று நற்செய்தியில் இயேசு நமக்கு ஓர் எச்சரிக்கை அழைப்பு விடுக்கின்றார்; போலும். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் தருவார். எனவே, நம் அன்றாட வாழ்வில் இறைவார்த்தைக்கும், நற்கருணைக்கும், இறைத் திருவுளத்துக்கும் நேரமும், ஆற்றலும் செலவழிக்க முன்வருவோம். அப்போது மற்ற அனைத்தையும் இறைவன் நமக்கு நிறைவாகத் தருவார்.
 
அனைத்தும் அளித்த இறைவன், மரத்தை நட்டவன் தண்ணீர் ஊற்றுவது போல, பெற்றெடுத்தவர்கள் பேணி வளர்ப்பது போல அழைத்து வந்த இறைவன் எமக்கு  நிலைவாழ்வு தரும் உணவை அளிக்க காத்திருக்கின்றார். அழிகின்ற உடலை அதிகம் பேணும் போதும், அதிகம் பராமரிக்கின்ற போதும் அழியாத ஆன்மா நினைவுக்கு வருவதில்லை. இன்றையச் சமுதாயத்தில் தேடல்கள் பலவாயுள்ளன. சிலர் வேலைக்காக அலைகின்றார்கள். வேலை கிடைத்தால் பணத்துக்காக அலைகின்றார்கள் பணம் கிடைத்தால் புகழுக்ககாக அலைகின்றார்கள். தேடுவது அனைத்தும் நல்லவை தான். ஆனால் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். வாழ்வு தரும் வார்த்தைக்காக தேடி ஓடுவோம்.  பல மைல்கள் கடந்து வாழ்வு தரும் வார்த்தைக்காக அவரிடம் தேடி ஓடி வருவோம். இயேசு, அங்கே உண்மையான வார்த்தைகளை அள்ளிக் தாருவார் அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். அழியாத நிலையான உணவிற்காகவே உழைப்போம்.
 
அமெரிக்கா அதிபராக நிக்சனின் இருந்தகாலத்தில் அவரது  அலுவலகத்தில் பணிபுரிந்த சார்லஸ் கோல்சன் கொடிக்கட்டி பறந்தவர். அவருக்கு இருந்த அணையாத தாகம் கடவுள் இல்லாமையே. இறைவனைத் தவிர்த்த எந்த மகிழ்தச்சியும் உண்மை மகிழ்ச்சியாகது என உணர்ந்தார். அன்றிரவே தனியாகச் செபிக்க ஆரம்பித்தார். அவர் மனமாற்றம் பெற்றார். அவர் தனது பணியை உதறிவிட்டு இயேசுவின் பக்தராக மாறினார்.அமெரிக்கா முழுவதும் ஆச்சரியப்பட்டது. அமெரிக்காவின் செய்தி ஏடுகள் சார்லஸ் கோல்சன் மனம் மாறி கிறிஸ்துவின் சீடரானார் என அவரை வர்ணித்தன.
 
இறைவனைத் தவிர்த்த எந்த மகிழ்தச்சியும் உண்மை மகிழ்ச்சியன்று. இவையாவும் இன்றிருந்து நாளை மறையக் கூடியன. அழிந்து போகும் உணவுக்கு ஒப்பானவை. அழியும் இன்பங்களில் அமிழ்ந்து அழிந்துவிடாது நாம் சாதுரியாமாக வாழ்வோம். இயேசுவில் நிலைவாழ்வை, நிறைவாழ்வைப் பெறுவோம்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff