Thursday, December 22, 2011

முகவரி அழிந்தவர்களுக்கு முகமானவரை எம் உள்ளங்களில் பிறக்கச் செய்வோம்

 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
ஆண்டவரின் பிறப்பை ஆன்மீகப் பலன் தரும் வகையில் கொண்டாட உங்களுக்கும் என் செபம் நிறைநல் வாழ்த்துக்கள். மானிடரின் முழு விடுதலைக்காகத் தன்னையே கையளித்த இறைமகன் இயேசு உண்மையாகவே மானுடத்திற்கு விடுதலை அளிக்க, மனிதரின் மாண்பினை மீட்டெடுக்க வந்துள்ளார் என்பதை உணர்ந்து மகிழ்வோம். கிறிஸ்மஸ் தன்னையும் தாண்டி சுட்டிக்காட்டுவது, சிலுவையிலும் உயிர்ப்பின் மகிழ்விலும் வெற்றியாக பெறப்பட்ட மீட்பையே. கடவுள் நம்மருகே வந்துள்ளார், நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மருகே இருக்கிறார் என்ற உணர்வில் பெறும் மகிழ்வால் இந்த கிறிஸ்மஸ் பெருவிழா நம்மை நிறைப்பதாக அமையவேண்டும்.

ஓவியத்திற்கும் காவியத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேட்டபோது: எனது வேலை நண்பா:; ஆறறிவு படைத்த மனிதன் வரைவது ஒவியம் மாறாக ஏழாம் அறிவு படைத்த புதுமனிதன் படைக்ககூடியது காவியம். பள்ளி மானவன்: எங்கள் ஆசிரியர்; கரும்பலகையில் எழுதுவது புரியாத ஒரு ஓவியம் அதைப்பார்த்து படித்து தேர்ச்சியடைவது நாங்கள் படைக்கும் காவியம். கல்லூரி மாணவன்: கற்பனைகோட்டையில் வரைவது நிஜமில்லா நிழலான ஒரு ஓவியம். மாறாக வாலிப பருவத்தில் படித்து சாதனைபடைப்பது நிஜமான ஒரு காவியம். பத்திரிகையாளர்: அரசியல்வாதியின் பல்வேறு வாக்குறுதிகள் கவர்ச்சி ஓவியங்கள். ஆனால் இதற்காக அவர் வாங்கிய வாக்குக்கள் அனைத்தும் எண்ணக்கூடிய காவியங்கள். மதகுரு: ஆலயத்திற்கு வருவோரின் பக்தி நிறமில்லா ஓவியம். அன்றாடம் இறைவன் பிரசன்னத்தில் வாழ்வைத்தொடங்கும் சிலரின் முயற்சி சாட்சி பகரும் காவியம். சுருக்கமாக சொன்னால் ஓவியம் கற்பனை உலகம் - காவியம் நிஜ உலகம். ஓவியமான மீட்பின் வரலாறு உண்மையான காவியமானதே இயேசு பிறப்பு விழா. ஆபிரகாம் முதல் இறைவாக்கினர் வரை இறைவன் பேசினார் அந்த குரலிருந்து இறைவனை பல்வேறுவிதத்தில் ஓவியம் தீட்டினர். அது கற்பனையளவில் ஒரு வரையறையோடு இருந்தது. இவர்கள் தொடர்ந்து கேட்ட வார்த்தை நான் உங்களோடு இருக்கின்றேன். ஆனால் இதை பொய்யென நினைத்து பிரிந்து பாதைமாறி பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டடிருந்த பொழுது இருப்பதை உறுதிப்பபடுத்தி மனிதம் வாழும் சூழலில் காவியம் ஆனதே கிறிஸ்துவின் பிறப்பு.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கி.பி8ம் நூற்றாண்டில் தாவீது அரசர் இணைத்த இஸ்ராயேல் அரசு மீண்டும் பிரிந்து இருளில் இருந்தபொழுது மெசியாவின் பேரோளியைநோக்கி வர அழைக்கின்றார். நம்பிக்ககையிழந்த நிஜமில்லா ஒவியமான வாழ்க்கையிலிருந்து நிஜமான ஒளியான இறைவன் வருகிறார் வாருங்கள் என அழைக்கிறார். அவர் தாவீதின் வழிமரபில் வருவார். நம் முன்னோரிடம் பேசி நம்மிடம் பேசி நம் கற்பனையில் ஓவியமாய் இருக்கும் இறைவன் நமக்கு அருகாமையில் நம் மத்தியில் நம்மில் மனிதமாக வருவார் என அழைக்கின்றார். அவர் வியத்தகு ஆலோசகர் வலிமைமிகுஇறைவன் என்றுமுள்ள தந்தை அமைதியின் அரசர் என்ற அடைமொழிகள் அவரின் நிரந்தர நிஜமான இருக்கபோகின்ற பிரசன்னத்தை எடுத்துரைக்கின்றன.
நற்செய்தியில் லூக்கா இயேசுவின் பிறப்பை உரோமை ஆளுநர் செசார் அகுஸ்து ஆட்சி பின்னனியில் அமைக்கின்றார். மற்றும் இயேசுவை பெத்தலேகமின் மையமாகவும் அழகுசெய்கிறார். அங்கு மறைமுகமாக யார் தாவீதின் வழிமரபில் அரியணையில் யூதர்களின் அரசராக வருவார் என கண்டெறியவும் கணக்கெடுப்பு நடந்தது. இது இயேசுவின் குடிசை காவியத்தின் முதல்படி.

யோசேப்பும்-மரியாவும் நாசரேத்திலிருந்து பெத்தலேகமைநோக்கி 80மைல் தொலைவு கடந்துசென்றனர். அவர் இங்கு பிறந்து வளர்ந்ததினால் அவர் அதற்கு மையமாக இருந்தார். இயேசு இறைவன் மனிதமாக பெத்லேகேமின் மையமானர் காவியமானார். முறைக்கல்வி வகுப்பு ஒன்றில் கிறிஸ்துபிறப்பின் நிகழ்வை எடுத்துரைத்து அனைவரையும் அதனை ஒவியப்படமாக வரையும்படி ஆசிரியர் கேட்டார். சறு மானவன் வித்தியாசமாக குடிவில் இரண்டு குழந்தை வரைந்திருந்தான். ஏன் என்று ஆசிரியர் கேட்டபொழுது. “நான் வரைந்தபொழுது பாலன் இயேசு உன்னோட நான் வரலாமா என்றுகேட்டர். நான் ஒரு யாருமில்லா யாருமறியா அனாதை. வெறுப்பையும் மறுப்பையுமே சம்பாதித்தவன். எப்படி வாழ்வது என தெரியாமல் தத்தளிப்பவன். ஏன்னுடன் நீ வாழ வரவேண்டாம் என்றேன்.” அப்போது இயேசு “நீ என்னோடு வா. நான் உன்னோடு உனக்காக எந்நாளும் பிறந்து கொண்டேயிருப்பேன்.” என்று கூறினார். எனவே நான் தனிமையல்ல அனாதையல்ல என்னிடம் இனிமேல் வெறுப்பு மறுப்பு இல்லை. எந்நாளும் புதுபிறப்பு ஆகவே இவ்வாறு வரைந்தேன் என்றான். இஸ்ராயேல் மக்கள் கற்பனையில் நிழலாடிய இறைவன் இவ்வுலகில் நிஜமானார் குடிசையில். முகவரி அழிந்தவர்களுக்கு முகமாய், உறவை இழந்தவர்களுக்கு உடன்பிறப்பாய், ஏழ்மையில் மூழ்கிபோனவர்களுக்கு ஏற்றமாய், வாழ்வில் தோற்றுப்போனவர்களுக்கு தோளானய், அனாதைகளுக்கு அன்பனாய்.  நாதியற்றோரக்கு நட்பனாய் நம்முன் நம்மோடு நமக்கருகில் நடக்கின்றார். ஓவியம் காவியமாகிவிட்டது நம்மில் கலந்துவிட்டது. குடிசையில் காவியமான கிறிஸ்து மக்கள் நடுவேயுள்ள குறைபாடுகளை அகற்றும் பணி நம்மால் நடைபெறவேண்டும். உலகில் மாந்தர் உள்ளவரை இக்குறைபாடுகள் இருக்கும். அதுவரையிலும் இப்பணிகள் நடைபெற வேண்டும். காலங்களைக் கடந்தவர் கால எல்லைக்குள் வந்து இப் பணிகளை எல்லாரும் எல்லாருக்கும் செய்யவேண்டும் என உணர்த்தனார். இன்று விழா கொண்டாடும் நாம் நம்மால் இயன்ற அளவில் உலகம் முடியும் வரை இப்பணியைச் செய்யவேண்டும். இந்தப்பணிகளை நாம் செய்து ஆண்டவர் முன் நிற்போம் அப்போது நாம் கொள்ளும் மகிழ்வு அளவிட முடியாதாக இருக்கும். இயேசுவுடன் இணைந்து நின்று புதிய இயேசுவாக நாம் மாறுவோம்-பிறப்போம். நாம் பெற்ற பெருவாழ்வை நம்மைச் சுற்றி வாழ்வோரும் பெறச் செய்து புதிய சமுதாயமாக அவர்களையும் பிறக்கச் செய்வோம். இந்த நல்ல உணர்வுகளப் மகிமைமிகு இயேசு பிறப்பு பெருவிழாவில் பெற்றவராய் இயேசுவை நம் உள்ளங்களில் பிறக்கச் செய்வோம்.


Thursday, December 15, 2011

குட்டி ஞானி இயேசுவிடம் செல்வோம்

குட்டி ஞானி இயேசுவிடம் செல்வோம்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

பெத்லகேமில் இயேசு பிறந்துள்ளதை அறிந்த அரசன் ஏரோதும்  எருசலேமும் கலங்கினாலும் ஞானிகள் பிறந்த பாலன் இயேசுவை வணங்கச் சென்ற பயணம் இயேசுவை சென்றடையும் பாதையினை எமக்கு தெளிவாகக் காட்டுகின்றது. ஞானிகள் இயேசுவை  வணங்க வந்த நிகழ்வு பாலன் இயேசு பிறந்த நிகழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள ஒரு நிகழ்வு என்பது நமக்குத் தெரிந்த ஒருவிடயம். இவர்கள் மூன்று ஞானிகள் என்று திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டள்ள ஒருவிடமாகிறது. இவர்கள் வீண்மீன் கண்டு வீறுநடைபோட்டு இயேசுவைக்கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்த இயேசு பாலனை வணங்கினர். பரிசுகளைக் கொடுத்தது வந்தவழி விட்டு வேறுவழியில் திரும்பினர்.

யார் இந்த ஞானிகள்;?
கிரேக்க மொழியிலே “மாகோஸ்” (அயபழள) என்றால் “ஞானி” என்று பொருள். இது பன்மையில் (அயப) என்பது பொருளாகும். இவர்களை நாம் பல கூறுகளாகப் பிரித்து நோக்கலாம். பெர்சிய நாட்டுக் குருக்களின் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். இரகசிய மறைபொருளை உணர்ந்து கொள்ளும் சக்தியைக் கொண்டவர்கள். மந்திரவாதிகள். நாடோடிப் போலி மருத்துவர்கள் அல்லது அறிஞர்கள். தத்துவ அறிவில்கைதேர்ந்தவர்கள். குறி சொல்லும் முன்னறிவிப்பாளர்கள். இயற்கை மருத்துவத்தி;ல் கைதேர்ந்தவர்கள். கனவுகளுக்கு விளக்கும் அளிப்பவர்கள். வானசாஸ்திரிகள்.

இந்த ஞானிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகலாம்?
இந்த ஞானிகள எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற ஆராய்ச்சியில் முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. பெர்சிய நட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். மீதியா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். மெசபெத்தோமிய நாட்டிலிருந்து வந்திருக்கலாம். அரேபியா நாட்டிலிருந்து பயணி;திருக்கலாம் என்று மரபுகள் கூறுகையில் இந்தியாவிலிருந்து கூட யூதேயா நாட்டிற்க்கு சென்றிருக்கலாம் என்று கூறுபவர்களும் உளர்

இந்த ஞானிகள்; எத்தனை பேர்?
நற்செய்தியில் பாலன் இயேசுவைக் காணவந்த ஞானிகள் எத்தனை பேர் என்று குறிப்பிடவில்லை. மூன்று பேர் வந்தார்கள் என்ற மரபு எப்படி வந்ததென்றல், நற்செய்தியி;ல் மூன்று வகையான பரிசுகளைக் கொண்டு வந்தார்கள் என்று குறிப்பிடுள்ளதால் தான் என்கிறார்கள்.

இந்த ஞானிகள் பெயர்கள் என்ன?
இந்த ஞானிகளின் பெயர்கள்: கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது  மரபாகிறது.

இயேசுவைக் காணவந்த ஞானிகள் என்ன செய்தார்கள்?
இயேசுவைக் காணவந்த ஞானிகள் உண்மையில் வானயல் பற்றி ஞானத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வானத்தை ஆய்வு செய்பவர்களே ஒழிய எதிர் கால வீண்மீன்கள் பற்றி ஆராயவில்லை,  கூற முனையவுமில்லை. அவற்றிலிருந்து சில நன்மைகளை பெற முற்றடுபட்டார்கள். வாழ்க்கையின் வழியைக்காட்டும் உண்மை ஒளியை தேடும் மனிதர்களானர்கள். கடவுளின் முகவரியை கடவுளின் படைப்பபில் காண முற்பட்டவர்கள். மாந்தர் வாழ்விற்கு வழிகாட்டும் பாதையைக் கண்டுகொன்டார்கள். இறைவனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரை  தேடியவர்கள், அவரின் கைவண்ணத்தை படைப்பில் காண தேடியவர்கள் கடவுள் இயற்கையினூடாக தம்தை வெளிப்படுத்துவார் என்று உறுதியாக நம்பினர். இந்த உலகைப் படைத்தவரே பெத்தலேகேமில் குகையில் மனிதனாகப் பிறந்தார் என்பதை உணர்ந்தனர். இந்த ஞானிகள் வேதாகமம் கூறுவதைக் கேட்டனர். அதுவே உண்மை வழியைக் காட்டும் விண்மீனாகா தோண்றியது என்ற மிகப்பெரிய பரிசுத்த உண்மையை எமக்கு தெளிப்படுத்தி நின்றனர்.


இயேசுவைக் காணவந்த ஞானிகள் கொண்டுவந்த பரிசுகளுக்கு அர்த்தம் என்ன?
கஸ்பாhர் என்பவர் தாடி இல்லாமல் இளைஞராக ஓவியத்தில் சித்தரிக்ப் பட்டுள்ளார். இவர் சாம்பரணி கொண்டுவந்தர். சாம்பரணி குருத்துத்வதைக் குறிக்கின்றது. குருக்களை பெர்சிய நாட்டில் 'போன்தி ஃ பெக்ஸ்' அதாவது பாலமாக இருப்பவர்கள் - இறைவனுக்கும் மனிதருக்குமிடையே பரிந்து பேசி பாலமாக இருந்தவர்கள் மன்னர்கள் என்ற கருத்து நிலவியது. இறைத் தந்தைக்கும் நமக்குமிடையே உறவை வளர்க்கும் பாலமாக இருக்கும் இயேசுவுக்கு இது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்பது தெளிவு

மெல்கியேர் வயதானவராக, நீண்ட தாடியோடு சித்தரிக்கப்பட்டுள்ளார். இவர் பொன்னைக் கொண்டு வந்தர். பொன் அல்லது தங்கம் இயேசு அரசர் என்பதைக் குறிக்கின்றது. பெர்சியா நாட்டில் அந்நாட்டு அரசரையாராவது சந்திக்கச் சென்றால் கட்டாயம் தங்கத்தைக் கொண்டுச் செல்ல வேண்டுமென்பது ஒரு கட்டாயமான மரபு. ஆகவே இயேசுவை ஓர் அரசராகக் கருதி பொன்னைப் பரிசாகக் கொண்டு வருகிறார் இந்த ஞானிகள்.

பல்தாசார் ஓர் இளைஞன். குறுந்தாடியுடையவர். இவர் வெள்ளைப்போளம் கொண்டு வந்தாதகக் கூறப்படுகிறது. வெள்ளைப்போளம் பொதுவாக இறந்தவர்களின் உடலைப் பதபடுத்திப் பாதுகாப்பாக இருக்கப் பயன்படு;தப்பட்ட ஒரு பொருள். இது இயேசு இறைவன் மட்டுமல்ல, அவர் ஒரு மனிதனாகவும் இருக்கின்றார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆம் இயேசு பிறந்ததே நாம் மீட்பு பெறுவதற்காகவே. இயேசு தமது உயிரை பயணமாக வைத்துத் தமது இறப்பினால் நம்மை மீட்டார் என்பது வெள்ளிடை மலை.

இந்த ஞானிகளின் வருகையை ஒட்டிச் சில முன்னறிவிப்புக்கள் உள்ளன.
விண்மீன் - கிறிஸ்து பிறப்பதற்கு முன் 11ஆம் ஆண்டில் ஹோலிஸ் நட்சத்திரம் தோன்றியது. கி.மு. 7ஆம் ஆண்டில் மூன்று கோள்கள்-சாட்டர்ன், ஜுபிட்டர், மார்ஸ் ஒன்றாகக் கூடிவந்து வானத்தில் விந்தை நடந்தது வரலாறு. கி.மு. 5லிருந்து 2ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தில் மெசோரி, சூரியன், டாக்ஸ்டார் என்பவை பிரகாசமாகத் தோன்றின என்பதும் வரலாறு.

இவ்வெளிப்பாட்டின் வழியாக ஒரு புதிய அரசர் தோன்றுவார் என்று மக்கள் நம்பினர். இயேசு பிறப்பதற்கு முன் இஸ்ரயேல் நாட்டில் ஓர் அரசக் தோன்றுவார். அவர் மெசியா- அரசராக இருப்பார். அவர் மக்களை மீட்டு விடுதலை அளிப்பார் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். “ யூதா நாட்டுப் பெத்தலேகேமே யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை;, ஏனெனில், என் மகளாகிய இஸ்ராயெலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்து தோன்றுவார்”. ஏன் இறைவாக்கினரின் எழுத்துக்களில் நம்கிக்கை கொண்டு அவரது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர். மன்னர் பிறந்துவிட்டார் என்று வானசாஸ்திரிகள் தங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பாலன் இயேசுவைக் காணவந்தனர். உண்மையாகவே இயேசு இவ்வுலகை மீட்க வந்த மீட்பர் என்பதை எடுத்துக்காட்டினர்.

இயேசுவின் பிறப்பைப் பற்றிய மூன்று கண்ணேட்டங்கள்:
மெசியா - அரசராக இயேசு பிறப்பார் என்று இஸ்ரயேல் வானசாஸ்திரிகள் ஆய்ந்தறிந்து உறுதிப்படுத்தியவுடன் மூன்று வகையான நபர்கள் தங்களது கண்ணேட்டத்தை வெளிப்படுத்தினதை நாம் நற்செய்தியில் பார்க்கிறோம்.

ஏரோது- பகைமை உணர்வு- ஏரோது முறையான வகையில் அரசனாகப் பதலி ஏற்கவில்லை. ஆகவே வேறு ஓர் அரசன் பிறந்துள்ளார் என்று கேள்வியுற்றதும் தனக்குத் தற்காப்பின்மை என்ற உணர்வு ஏற்பட்டதால் இயேசுக் குழந்தை மீது பகையுணர்வு கொண்டான். அவரைக் கொல்லச் சதித்திட்டம் போட்டான்.

பரிசேயர்களின் பாராமுகம்- இஸ்ரயேல் நாட்டின் குருக்களும், சட்டவல்லுநர்களும் புதிய மெசியா அரசர் பிறப்பார் என்று விவிலியம் முன்னறிவித்திருந்தும் அவர்கள் இந்நிகழ்வின்மேல் எந்த அக்கறையும் கொள்ளவில்லை. மாறாக, இயேசு போதிக்கத் தொடங்கியதும் அவரை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கின்றனர்.

ஞானிகள் - பக்தி பரவசம்- இயேசு பிறந்த இடத்தை அடைந்ததும் ஞானிகளுக்கு வழிகாட்டி வந்த விண்மீன் நின்றது. அதை கண்ட அவர்கள் மட்டில்லா பெருமகிழ்ச்சி அடைந்தனர். குழந்தை இயேசுவைக் கண்டார்கள். நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். பக்தி பரவசத்தில் மூழ்கினார்கள்.

ஞானிகளின் வருகை நமக்குத் தரும் பாடங்கள்-
நாம் இயேசுவை ஆவலோடு தேடிச் சென்றால் அவரைக் கண்டு நாம் மகிழ்ச்சியில் ஆழ்வோம். இறைவனின் வழிநடத்துதல் என்றும் நம்மோடு இருக்கும். இயேசுவை ஆராதித்து வணங்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இறைவனே நமக்கு பரிசாக அமைவார். இயேசுவைக் கண்ட ஒருவர் மாற்றுப் பாதையில் தான் நடக்க வேண்டும். இயேசுவைப் பலர் தேடி வந்தனர். நாமும் அவரை தேடினோம் என்றால் அவரைக் கண்டடைவோம். பல ஆயிரக்கணக்கான கல் தூரம் பல வேதனைகளையும், துன்பங்களையும் சகித்துக் கொண்டு ஞானிகள் இயேசுவைத் தேடி வந்தனர். நாம் எமது மனங்களில் எதிர்ப்பு மனப்பான்மையை கைவிட்டு கடவளால் வழிநடத்தப்படுவதற்கு நம்மை கையளிக்கவேண்டும். உறுதியாக உண்மையானவரைக் காணவேண்டும் என்ற விசுவாசத்தின் கண்களினாலேயே தேடினால் தான் அவரைக் காணமுடியும்

இயேசுவைக் கண்டு அனுபவிப்பவர்களின் வாழ்க்கை மாற்றுப் பாதையில் தான் அமையவேண்டும். பழைய மனிதத்தை களைந்துவிட்டுப் புத்தாடை அணிந்துப் புனிதனாக மாறவேண்டும். இதைத்தான் ஞானிகளும் செய்தார்கள். வாருங்கள் நாமும் குட்டி ஞானி இயேசுவிடம் செல்வோம்.

 

தேடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம் உனது தேடல் ?

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்.

 மனித வாழ்க்கை என்பது ஒரு தேடல் தேடல் இல்லையேலர் வாழ்வில் பொருளில்லை.இலட்சியப்பாதையில் இத்தேடல் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகின்றது என்பது மாற்றிவிடமுடியாத உண்மை.  வுhழ்வை சுவையாக்கிக்கொள்ள மனிதன் தேடிக்கொண்டே இருக்கிறான். இன்று மனித வாழ்க்கையில் தேடல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என்பது கண்கூடு. 


தேடல்கள் பல விதம்:
வண்டுகளின் தேடல் மலர்களில் தேன்.; கவிஞனின் தேடல் மனதில் கற்பனை. குhதலனின் தேடல் வாழ்வில் காதலி. வேட்டைக்காரனின் தேடல் காட்டில் விலங்குளள். கலைஞனின் தேடல் பார்வையில் அழகு. புpச்சைக்காரனின் தேடல் பாத்திரத்தில் பிச்சை. விஞ்ஞானியின் தேடல் உலகில் கண்டுபிடிப்பு. உளவிலாளரின் தேடல் உள்ளத்தில் அமைதி. சுhத்தானின் தேடல் புமியில் குழப்பம். புக்தனின் தேடல் பரம்பொருள். ஆண்டவனின் தேடல் அகிலத்தில் ஆத்துpகன்.
எனவே எங்கும் தேடல் எதிலும் தேடல் என தேடலின்  விதங்களை விபரித்தக்கொண்டே போகலாம். புல்வேறுகாரணங்களுக்காக பலவிதமான தேடல்கள் மனிதனில் புதைந்து கிடக்கின்றன.

ஒவ்வொண்றும் ஒருவிதம்.
தேடல்கள் இல்லையேல் மண்ணில் மனித வாழ்க்கை இல்லை. தேடலில் மையங்கொண்ட மனித வாழ்க்கை. மனிதனுக்கு மனிதன் மாறுபட்டாலும் ஒவ்வொன்றும். ஒவ்வொரு விதத்தில் அமைகின்றது.
இங்கு இரண்டு வித்தியாசமான தேடல்கள் கிறிஸ்துவில் மையப்படுத்தப்பட்டுகின்றன. பாவத்தின் சேற்றில் அமைதியின்றி பரிதவிக்கும் பாவிக்கு நேசக்கரம் நீட்ட மண்ணுலகில் மனிதர் எவரும் தரமுடியாத அமைதியை தன்னகத்தே கொண்டு மனிதனை தேட மாட்டுக்கொட்டிலில் மன்னர் இயேசு பிறக்கின்றார். பிறந்த பாலனைத் தேடி ஞானிகள் ஒருபுறம் அரசன் ஏரோது மறுபுறம். ஆனால் இவர்களின் தேடலின் நோக்கம். இருவேறு முரண்பட்ட காரணங்களாக இருந்தன.

உண்மையானவரை உண்மையில் உண்மையாக தேடுகின்றார்கள். ஞானிகள் பாவத்தில் பாளாப் போன  உலகை மீட்க பாரெங்கும் நல்லமைதியை அருள நாயகன் பிறந்துள்ளார் என அவரைத் தேடுகின்றனர். ஆவரை வணங்கி அவரிடம் ஆசீர் பெற அவரைத் தேடினார்கள். உண்மையாகவே அவர்களின் உள்ளம். ஊலக மீட்பரைத் தேடும் உள்ளம் என்பதால் அதிசய வீண்மீன் அவர்களின் தேடலுக்கு  ஆறுதல் கொடுத்தது. 

ஆநிரைத்தோழுவில் அகிலத்திற்கும் அமைத அருள்பவரைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினர். சுயனலமற்ற தேடல் அவர்களில் சுத்தமாக இருந்ததால். தேடய தேவனை கண்டனர். வேண்டிய அமைதியை அவரில் பெற்றனர். மண்றாடிய ஆசீரும் மனமகிழக் கிடைத்தது.

எனது அரசிற்கு போட்டியாக ஒரு அரசனா? ஊலகில் அவனை வாழவிடுவதா? ஆவனைக் கொல்ல வேண்டும். கங்கணம் கொண்ட ஏரோது நாயகன் இயேசுவை நகரெங்கும் தேடப் புறப்படுகின்றான். வுள்ளல் தேவனைக்கண்டு வணங்கி இகில மீட்பரில் ஆசிர் பெற பொய்போர்வையில் உண்மையானவரைத் தேடுகின்றான். ஏரோதின் தேடலில் ஏமாற்றும் எண்ணம் இருந்தது. ஏற்றுக்கொள்ளும் உள்ளம் அவனிடம் இல்லை. பொய்மை இருந்தது. ஊண்மை இருக்கவில்லை அநீதி இருந்தது நீதி இருக்கவில்லை.  பழிவாங்கும் எண்ணம் இருந்தது. பரிவுபசாரம் இருக்கவில்லை. வஞ்சகம் இருந்தது. நேர்மை இருக்கவில்லை. இதனால் நேச இயேசுவை அவனால் கண்டு கொள்ளவில்லை. மாறா அவன் தேசமெங்கும் பச்சிழங் பாலகரின் தலைகள் உருண்டன. புச்சை இரத்தம் ஆறாகியது. இருந்தும் தேடிய இயேசுவை கண்டு அழிக்க முடியவில்லை. காரணம் அவனது தேடலில் சுயனலம் சுற்றிப்போயிருந்தது. தேவனுக்கு அவண் தேடல் உகந்ததாக் இருக்கவில்லை.

எமது மண்ணில் இன்றைய தேடல்கள் பல விதம். குhணியைத் கைப்பற்ற கணக்கற்ற தேடலகள். புணத்தை சேமிக்க பல வழித்தேடல்கள். வீட்டைக் கடட்ட வித்ம் விதமான தேடல்கள். கட்டடங்களை வாங்கி வாடகைக்கு விட வெளிநாடுகளிலிருந்து முட்டியனத்து வந்து மூலைமுடுக்கெங்கும் தேடல்கள்.

இவ்வாறு இன்றைய தேடல்கள் சுயனலத்தேடல்களாக அதிகரிக்கின்றன. இதற்கு மத்தியில் நாட்டில் நல்லமைதியைத் வேண்டி ஆட்சியாளர்கள். அதைத் தேடுகின்றார்கள். பரம எதிரிகளாக இருந்தவர்கள் பக்கத்திலிரந்து இந்த அமைதியைத் தேடுகின்றனர். இவர்க் உள்ளங்களில் ஞானிகள் தேடல் உள்ளதர்? ஏரொதின் தேடல் உள்ளதா? யுhரறிவார் இந்த மண்ணிலே.

உனது தேடல்.
   
நாம் நம்முடைய வாழ்க்கையில் சுயநலத்தை வெறுப்போம். சுத்த கருத்துடன் தேவனைத் தேடுவோம். ஆலகையின் மாயயைகளை வெறுத்து ஆண்டவரைத் தேடுவோம். புளுவும் பூச்சியும் அரிக்கும் சேல்வங்களை தேடவேண்டாம். புண்ணிய செல்வங்களை பூமியெங்கும் தேடுவோம் சுய இலாபத்தால் இருண்ட இதயத்தை இடித்து விட்டு இயேசுவின் அமைதியை தேடுவோம். இனியும் வேண்டாம் ஏரோதின் தேடல்கள். வெறுப்போம் ஏரோதின் தேடல்களை. ஏம்மில் ஏற்வோம் ஞானிகளின் தேடலை. ஆப்போதுதான் தேடிய அமைதியை தேவனில் காண்போம். அவரும் அதை எமக்கருள்வார்.  தேடுங்கள் கண்டடைவீர்கள். தேவனின் மொழி இpது. மாறவேண்டும் எம் மனங்கள் தோடவேண்டும் தேவனின் அமைதியை 

வாழ்வின் சுமைகளை மறந்து வருங்காலத்தை வசந்த காலமாக மாற்றுவோம்

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

குண்டுகள் குறிபார்ப்பதை குறைக்க தொடங்கிவிட்டன. முள்வேலிகளும் ஆமி அரண்களும் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காப்பெற் வீதிகளும் கம்பனிகளும் வரதடங்கிவிட்டன. பெண்ணிமை பேசும் பெண்களின் ஆட்சியும் ஆரம்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதேபோன்று பல விடங்கள் மண்ணிலே உதயமாகிக் கொண்டிருக்கின்றன. அமைதியின் ஒரு வடிவமாக இவை உதையமானலும் மறைத்து மூடிவிட முடியாத கேவலமான நிகழ்ச்சிகளும் உதயமாகிக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் எங்கள் வரலாற்றை மறந்துவிட்டோம். எங்களுக்காய் மண்ணோடு கலந்தவர்களை மறந்துவிட்டோம். உள்நாட்டுப் போரின் காயங்கள் இன்னும் முழுமையாக ஆறாவில்லை என்பதை மறந்துவிட்டோம். கடவுளில் நாம் வாழாததன் பிரதிபலிப்புக்கள் தான் இன்று மண்ணிலே அரங்கேறும் அசிங்கங்கள்: திரைமறைவில் அரங்கேறும் கருக்கலைப்புக்களும் விடுதிகளிளே நடத்தப்படும் விபச்சார செயற்பாடுகளும். வீதிகளில் அரங்கேறும் இளையவர்களின் சேட்டைகளும். கோஸ்ரி மோதல்களும். கஞ்சா கடைகளும் போதைபொருட்களின் விற்பனைகளும் மதுவிற்கும் மாதுவிற்கும் மண்டியிடும் மாணவர்களின் வாழ்வும். கள்வர்களிகன் கடையுடைப்புக்களும். இன்நெற்,உலக வலைப்பின்னலின் விழுந்து அழுகும் மனித மீன்ககும். வழிதவறிப்போகும் பிள்ளைகளை தட்டிக்கேட்க துணிவற்ற தாய்மாரின் தவிப்புக்களும். திசைமாறிப்;போகும் இளையவர்களை தட்டித்திருத்தாமல் தட்டிக்கொடுக்கும் தந்தையரின் பெருந்தன்மையும். ஆடைகுறைப்புக்கள் என்று அநாகரிகமாக வீதியில் அலைந்து பெண்மையை விலைபேசும் பெண்களின நாகரிகமும். இனங்களுக்கு இடையே 2009ம் ஆண்டு வரை நடைபெற்ற மோதல்கள் தீர்ந்து, அக்காயங்கள் ஆறுவதற்குள், நாட்டில் திருட்டு, வழிப்பறி, நிலங்கள் ஆக்கிரமிப்பு என்று பல்வேறு வகையான வன்முறைகள் தலையெடுத்திருப்பதும். அனைவரும் கூறும் அமைதி அரும்பிலே அழியப்போவதற்கான அறிகுறிகள். மீண்டும் எமது மண்ணிலே உருவாகப்போகும் அழிவுகளுக்கான ஆரம்பம நிலைகள்.

ஞானிகளால் ஏரோதுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தியும் அதில் குழப்பமடைந்த ஏரோதும் குழந்தைகளை கொலை செய்து இயேசுவிலிருந்து தொலைவிற்கு சென்று அகில மீட்பர் கொண்டுவந்த அமைதியை காணாது மடிந்தது எமக்கு பாடமாகிறது. இறைவனின் வானதூதர்களால் இடையருக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தியும் அதனால் அவர்கள் கண்ட சமதானமும் அமைதியான வாழ்வும் சான்றாகி எமக்கு நிற்க அந்த அமைதியை தொலைத்து நாம் எங்கே போகிறோம்.

இதற்கெல்லாம் ஒரு காரணம் சமாதானமும் அமைதியும் எங்கிருந்தோ வருவதாக நாம் ஊகித்துக் கொள்வதாகும். அமைதியின்மையின் வேர்கள் நம்மை தவிர வேறித்திலோ, வேறொருவரிலோ இருப்பதாக நினைத்து அவற்றை சரி செய்ய முயற்சிப்பதே. இதனால் நாம் எல்லோரும் தேடும் அமைதி இன்னும் நமக்கு கிட்டாமல் தூரமாகிக் கொண்டே போகிறது. நாம் நாடித்தேடும் அமைதி நமது எம் அகத்தில் உள்ள அகங்காரத்தையும் காமத்தையும் இச்சையையும் அடக்கி ஆழ்வதினால் கிடைக்கும் என்பதைத் கிருஷ்ணபரமாத்மாவும் குருஷேத்திரத்தில் போருக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு சொல்வது நாம் அறிந்திருக்கின்றோம். இயேசு அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படுவர்’ என்கிறார். இத்தகைய அமைதியை நம்முள் கண்டு பிறரிடத்தில் விதைத்து கிறிஸ்துவின் பிள்ளைகளாவோம்.

கிறிஸ்து இந்த மண்ணில் மனிதனாக வந்து பிறந்தது கிறிஸ்தவம் என்ற மதத்தை உருவாக்க அல்ல மாறக அவரைப்போல் சிந்திக்கவும், அவரைப்போல் பிறரை அன்பு செய்யவும், பிறருக்காக உயிரைக் கூட கொடுக்க முன்வரவும், அவரைப்போல் பிறரை ஏற்றுக் கொள்ள நல்ல மனம் கொண்டவராக மாறவுமே. எம்வழி சென்று பெருமை பாரட்டிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. கிறிஸ்துவும் நம்மால் பெருமை கொள்ளப் போவதில்லை. மாறாக கிறிஸ்துவின் மனம் கொண்டவர்களாய் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை வாழ்ந்து காட்டுவதில் பெருமிதம் கொள்வோம். ஏனென்றால் கிறிஸ்து இந்த மண்ணில் பிறந்தது மதத்தை உருவாக்க அல்ல மாறாக நல்ல மனங்களை உருவாக்கவே.

இறை நம்பிக்கை என்பதை இன்று நாம் எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கச் செய்யும் பகிர்தலின் தத்துவமாக்கவேண்டும். இத்தகைய இயல்புநிலையை ஏற்படுத்தும் தயாரிப்புகளில் நம்மை ஈடுபடுத்துவோம். இருப்பவர்கள் இல்லாதவர்களைத் தேடி போவோம். வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வாழ்வைத்தேடுவோரை மீட்டெடுப்போம். இருளைப் பகைத்துக் கொண்டும், பழித்துக் கொண்டும் வாழமால் இங்கு ஒளியை ஏற்றி வெளிச்சம் பரப்ப உறுதுணையாவோம். கிறிஸ்து பிறப்பு விழா என்பது மானுட விடுதலையின் விழா. இறைப் பகிர்வின் பாசத்தின் விழா. அன்பின் உன்னத அடயாளமாக உருவெடுத்த இறைமகன் இயேசு உலகில் பிறந்த நிகழ்வை மகிழ்வுடன் நினைவுகூரும் விழா. வாழ்வின் சுமைகளை மறந்து, அச்சுறுத்தும் கவலைகளை கழைந்து, சலித்துப்போன வாழ்க்கை சூழலைத் தவித்து, அண்டவனின் பிறந்த நாளை அர்த்தமுள்ளதாக்கி வாழ அழைக்கும் அன்பின் திருவிழா. நம்மீட்பரின் வருகையால் மகிழ்ச்சி எல்லோருக்கும் பொதுவாக்கப்படுகின்றது. இறைமனித உறவுக்குச் சான்றுபகிர்வதில்தான் எத்தனை மகிழ்ச்சி. இது மனித நேயத்தை வழப்படுத்தும் அன்பின் விழா. இறைவன் தரும் மகிழ்ச்சியை பிறரோடு பகிர்ந்து வாழ்வதில் தான் இந்த அன்பின் திருவிழா அர்த்தமுள்ளதாக மாறும்.

இறைவன் தன் மகன் வழியாக தன்னையே நமக்கு கொடுக்கின்றார். நாமும் கொடுப்பதில் இனு;புமு; பெறவேண்டும். கொடுத்து, பகிர்ந்து வாழத் துவங்கினால்தான் மனிதம் மலரும். அன்பு நிலவும், சமத்துவம், சமாதானம் ஓங்கும். எல்லா ஆண்டையும் போல இந்த ஆண்டையும் அணுகாமல் வருங்காலம் எல்லாருக்கும் வசந்த காலமாக மாற முயற்சிகளை மேற்கொள்வோம். இத்தகைய நமது முயற்சிகளாலும் அணுகுமுறைகளாலும் நாம் இறைவனின் சாயல் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். 

எமது மண்ணிலே பிறப்பெடுத்துக்கொண்டிருக்கும் சாத்தானின் சாக்கடைகளும் அவலங்களும் கேவலங்களும் அநாகரிகங்களும் அசிஞ்கங்களும் ஆரம்பத்தில் சிதைக்க நாம் சிற்பிகளாவோம். எம் ஒவ்வொருவருடைய வாழ்வையும் மாற்றியமைப்போம். இன்றே இதற்கான அத்திவாரம் இடுவோம். உலகிலே இயேசுவிற்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்னும் நற்செய்தி எமது மண்ணிலே ஒலிக்க செய்வோம்.


Both the question and the answer within us
M.Francisk, Catholic Freeland Journalist

The Christmas is a holy time. During this prosperous period of Advent, every one exchanges and renews their ties by sending the greeting cards in order to build an affectionate rapport among them. In this period, the birth of Christ brings a life of happiness, peace, joy, hope and prosperity to all. Even on this joyful occasion, which is the bridge for human relationships, the sorrowful crying of the innocent people can be heard.

  1. Why, this Christmas for me?
This lamentation comes from a recent prick of a conscience of a woman who indulged in pleasure by fornication and had many abortions against God’s law
     
  1. Why, this Christmas for me?
A young disheartened boy perishing by his culture and despised by his society for his addiction to drugs, blue films and politician’s alluring speeches asks this question

  1. Why, this Christmas for me?
After having been besieged with her children’s weeping for food, a poor abandoned mother who lives in the inconveniences of resettlement and in the biting cold and rain asks this question in pain.

  1. Why, this Christmas for me?
A roamer who lives in the disparity of caste and status and has no places to rest even for his weariness he is raising this voice.

  1. Why, this Christmas for me?
An orphan who lost his family in the war is craving for love raises this voice.

  1. Why, this Christmas for me?
A person who has lost his left arm in a land rights which began in seeking his own land from those who had seized it, and suffered the grudge, jealousy, envy and anger, asks this question.

  1. Why, this Christmas for me?
After having been forsaken by her relatives, an old woman in the Elders’ Home raises this painful moaning.

  1. Why, this Christmas for me?
A native of Sri Lanka who craves to experience real peace raises this question.

Like these, we can keep on counting the wretched and miserable lives of the people who are full of sorrows, pains, lamentation, anxieties and losses of lives.

However, here if we think of the life of Israel, we can notice that when they were away from God, they underwent many hardships such as invasions by kings, genocide, displacements, exiles, starvation, disparity, spite, antagonism, famine, exodus through the desert, etc. during these painful moments, they, in their hearts, felt no peace, love or harmony. They were wandering searching for a peaceful life.

They cried out their voice to God in tears “Have not we redemption, freedom, peace and happy life?” Listening to their voice, God Himself came down willingly from heaven to earth. He was born in manger to give a blissful life with peace, joy and love to His people. However, they did not allow Him to experience the joys and the delights of living. They made Him an exile in Egypt. They despised Him calling Him “Nasarean”, “The carpenter’s son”. They even gave no place to lie down and to rest. They brought disgrace on Him. He lovingly accepted this pathetic life without losing His ideal. To give the people a peaceful life, He Himself became the Prince of peace, the messenger of peace, the light of life and king of love.

When we are raising the above question: “Why, this Christmas for me?” in the same minute, we ask ourselves “why are we raising this question?” we will think and ask ourselves “what we have done to bring peace and to give peace”? Then we can clearly see that our hearts – the temple of God are with human nature- Filth, envy, jealously, anger, avarice, fornication, racism, a stubborn caste system, antagonism etc. and we realize that we have changed the temple of Holy Spirit into a den of the devil.

The humanism and human values of love, justice, and harmony, have not vanished. The Sunday preaching teaches that the helpful manner of almsgivings, affectionate sharing among the needy and charitable assistance are to be followed. We will fill our hearts with the fruits of Holy spirit- love, joy, patience, kindness, goodness, faithfulness, humility, self-control. We will change ourselves to become the messenger of peace, prince of peace, the source of light, peace and joy.  From the moment each one starts practicing  the early Christian life- ASHIPA in the parishes, no people with   Filth, envy, jealously, anger, vanity, hatred, disparity, hostility, avarice,  fornication, racism, a stubborn caste system, antagonism  will exist in our country-Sri Lanka.

The real peace we are craving for ages will take source in our hearts and fill the whole Sri Lanka. We can feel that our sorrows, worries, anxieties, and weeping will peter out from our hearts. We will experience the real peace, happiness, and love as the answer of the question we raised. Why is Christmas for me? With our eyes we can joyfully watch a new beautiful world full of love. Then this Christmas surely will put a glad indestructible impression in our hearts. Then we will peacefully celebrate the birth of Jesus Christ with cheer. 



Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff