Monday, November 26, 2012

நாம் மனம் மாறி மனம்மாற்றுவோம்.

02.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நாம் திருவருகைக் காலத்திற்குள் காலடி எடுத்து வைக்கின்றோம். திருவருகைக் காலம்'  எதிர்நோக்கிக் காத்திருக்கும்" காலம் என்று அழைக்கப்படும். ஆதனால் என்னவோ நம் வாழ்வு சார்ந்த எதிர்பார்ப்பும் திருவருகைக் காலத்தில் தெரிகிறது. மனிதரிடையே சண்டை சச்சரவும் அராஜகமும்  மறைந்து அமைதி நீதி நிலவும் புதியதொரு காலம் மலரும் என்பது நம் எதிர்பார்ப்பு. நீதிக்கு அநீதி தீர்பிடும்காலமும் ஆயுதப் பயிற்சிக்கு ஆட்களை சேர்க்கும் காலமும் இராணுவச் செலவுகள் அதிகரிக்கும் காலத்திலும்  கிறிஸ்துவின் வருகையால் அனைத்து அட்டூழியம் மறைந்து அமைதி நீதி நிகழும் என்பது நம் நம்பிக்கை.

2007ம் ஆண்டு உலகின் பல நாடுகளும் இராணுவத்திற்கென செய்த செலவு 5,850,000 கோடி ரூபாய். (1.339வசடைடழைn னுழடடயசள) அதே ஆண்டு ஐ.நா. அமைப்பு மேற்கொண்ட அத்தனை மனித சமுதாய முன்னேற்ற முயற்சிகளுக்கும் ஆன செலவு (4.2 டிடைடழைn னழடடயசள) ஆகும். எனவே உலக அரசுகள் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையில் பாதித் தொகையை, அல்லது, பத்தில் ஒரு பங்குத் தொகையை ஏழைகளுக்குச் செலவிட்டால், உலகின் வறுமையைப் பெரிதும் குறைக்கலாம்.
2007 அமெரிக்கத்தலைவர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது வாண வேடிக்கைகளுடன் அவர் வரவை கொண்டாடினர். அவரது பயணத்தின் ஒரு முக்கிய காரணம்? அமெரிக்காவின் இராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடிப்பதாகவே இருந்தது என ஊடகங்கள் சில குறிப்பிட்டன. இவ்வாறு பல பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காகக் கரியாக்கும் நிகழ்வு உலகில் இன்றும் நடந்தவண்ணம் உள்ளது. 

இன்று இராணுவத்தைப் பற்றி; பேச காரணம் முதல் வாசகத்தில். எசாயா இறைவாக்கினர் இறுதி நாட்கள் குறித்து காணும் ஒரு அழகான கனவு தரப்பட்டுள்ளது தான்: 'அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்."
வாள்கள் கலப்பை கொழுக்களாக மாறும். ஈட்டிகள் அறுவடை செய்யும் அரிவாள்கள் ஆகும். உயிர்களை அறுவடை செய்யும் படை வீரர்கள் பயிர்களை அறுவடை செய்யும் அற்புதமானப் பணியில் ஈடுபடுவார்கள். போர் பயிற்சிகளுக்குப் பதிலாக, ஏர் பிடித்து உழுகின்ற பயிற்சிகள் நடைபெறும். இந்த அற்புதமான, அழகான கற்பனை, எம்மை; நம் குழந்தைப் பருவத்திற்கு, வாலிபப் பருவத்திற்கு  அழைத்து செல்லும் கற்பனையைப் போன்றது. இவைகள் கற்பனைகளாக, கனவுகளாக மட்டுமே இருக்க முடியும். நனவாக மாறவே முடியாது என்று நம்மில் பலர் தீர்மானித்து விட்டோம். எனவே, இப்படி ஒரு காட்சியை நினைத்துப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடலாம், அல்லது ஒரு விரக்தி சிரிப்பு சிரிக்கலாம். நமது ஏக்கத்திற்கும், விரக்திக்கும் காரணம் உள்ளது. எசாயாவின் கனவில் போர் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகிறது. நாம் வாழும் சூழலில் விவசாயக் கருவிகள் போர் கருவிகளாக மாறி வருகின்றன. பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள் உயிர்களை அறுவடை செய்யும் கொடூர கருவிகளாகின்றன.

இத்த திருவருகை காலத்தில் இயேசுவின் வருகைக்கு எம்மை சரியான முறையில் ஆயத்தப்படுத்துவோம். ஆமிப்பயிற்சிக்கு ஆட்களை சேர்ப்பதை தவிர்த்து அன்பியப்பயிற்சிக்கு ஆட்களை சேர்க்க ஆயத்தமாவோம். இயேசுவின் பிறப்பு ஆயத்தங்கள் நாம் வாழும் இன்றைய காலங்களில் எமது வெளியரங்க ஆயத்தங்களோடு மட்டும் நின்று விடுவது மிகவும் மனம் வருந்துவதற்குரிய செயலாக இருக்கின்றது. இயேசுவின் பிறப்புக் கால ஆயத்தங்கள் மற்றவர்களால் வியாபார மயப்படுத்தப்படலாம். ஆனால் கத்தோலிக்கர் என்ற சொல்லும் எமது ஆயத்தம் எவ்வாறு இருக்கின்றது? போரின் வடுக்களை தினம் கண்டு வாழும் குழந்தைகள் மட்டில் எங்களது ஆயத்தம் எத்தகையது?

இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவான எச்சரிக்கையைத் தருகிறது. எமது உள்ளங்கள் மந்தம் அடைவதற்கான மூன்று காரணிகளை இயேசு சுட்டிக்காட்டுகிறார்: குடிவெறி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலைகள். இந்த மூன்றிலும் ஈடுபடுபவர்கள் இறையாட்சியில் பங்கேற்க முடியாது என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். குடிவெறி என்பது நிச்சயமான மந்தப் பொருள். அது உடலையும், உள்ளத்தையும் மட்டுமல்ல ஆன்மாவையும் மந்தப்படுத்துகிறது. களியாட்டம் என்பதோ தேவைக்கதிகமான பொழுதுபோக்கு, உல்லாசம் போன்றவற்றைக் குறிக்கிறது. எப்போது இவை இறைவனிடமிருந்து நம்மை பிரிக்கின்றனவோ, அப்போது பொழுதுபோக்குகளும், மகிழ்ச்சி;ச் செயல்பாடுகளும்கூட களியாட்டமாக மாறிவிடுகின்றன. நம் வாழ்வைக் கொஞ்சம் ஆய்வு செய்து, குடிவெறி, களியாட்டம், உலகக் கவலைகள் நம் அகவாழ்வை மந்தப்படுத்தியுள்ளனவா என கண்டறிவோம். ஆம் என்றால், இவை மூன்றிலிருந்தும் விடுபட்டு, இறைப்பாதம் சேர்வோம்.

Tuesday, November 20, 2012

பாதங்களை கழுவும் மாமன்னராய் மாறுவோம்


25.11.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்று நாம் கிறிஸ்துவை அரசராக நினைந்து விழாக்கொண்டாடுவதற்கு தரப்பட்ட வாசகம் பிலாத்து இயேசுவைச் சந்தித்தக் காட்சி. இன்நற்செய்தி 'கிறிஸ்துவை அரசர்" என்பதன் உட்பொருளை ஓரளவு உணர்துகின்றது. இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவரை அரசராக எண்ணிப் பார்த்தவர்கள், அரசராக்க முயன்றவர்கள் ஒரு சிலர்.

நற்செய்தியில் இயேசுவை அரசர் என்று கூறிய முதல் மனிதர்கள் கீழ்த்திசை ஞானிகள். இயேசு பிறந்ததும், அவரைக் காண நெடுந்தூரம் பயணம் செய்து தேடி வந்து உலக அரசரைப் போல் அவர் இருப்பார் என்று ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்றனர். ஏரோதிடம், 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்றார்கள்."  கள்ளம் கபடில்லாமல் அவர்கள் கேட்ட அந்தக் கேள்வி பல நூறு கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் உயிரைப் பலி வாங்கி விட்டது.

இரண்டாவது சம்பவம் யோவான் நற்செய்தி இயேசு அப்பத்தைப் பலுகச் செய்து, மக்களின் பசியைத் தீர்த்தார்து. இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்"

மூன்றாவது சம்பவம் எருசலேம் வீதிகளில் நடந்தது. திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், 'ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.

வயிறார உண்டதால் வந்த ஆர்வம் இயேசுவை அரசராக்கத் துடித்தது. தங்களுக்கு விடிவு வராதா என்ற ஏக்கம், எருசலேம் வீதிகளில் ஆரவாரமாய் ஓசன்னா அறிக்கையாக மாறியது. ஆனால், இப்படி அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப தோன்றி மறையும் ஆர்வம், ஆரவாரம் நிலைத்திருக்காது என்பது சில நாட்களிலேயே நிஷரூபணமானது.

நான்காவது சம்பவம் இயேசுவின் விசாரணைகளின் போது நடந்தது. இயேசுவை அரசர் என்று பிறர் கூறிய வதந்திகளால் பயம் கொண்ட பிலாத்து, இயேசுவிடமே நீர் அரசரா? என்று கேட்டார். அந்தக் கேள்வியின் உண்மையான பதிலைக் கண்டு பிடிக்கவும் பிலாத்து பயந்தார்.

ஐந்தாவது பிலாத்துவும் யூதர்களின் தலைமைக்குருக்களும் இடையில் நடந்த உரையாடல் காட்டுகின்றது: யூதரின் அரசன்  என்று எழுதவேண்டாம் மாறாக  யூதரின் அரசன் நான் என்று அவனே சொல்லிக்கொண்டதாக எழுதும்  என்று கேட்டுக்கொண்டனர்  பிலாத்து நான் எழுதியது எழுதியது தான் என்றான்.

'அரசர்" என்று இயேசு அழைக்கப்பட்ட ஆறவதான நிகழ்வு கல்வாரியில் நடந்ததாக லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இயேசுவை அரசராகப் பார்க்க முடியாத உரோமைய வீர்களின் ஏளனக் குரலும், இயேசுவை அரசர் என்று ஏற்றுக் கொண்ட குற்றவாளியின் ஏக்கக் குரலும் இன்நற்செய்தியில் ஒலிக்கின்றன.

உரோமைய வீரர்கள் இதுவரை பல அரசர்களைச் சந்தித்தவர்கள். பல அரசர்களுக்கு பணிவிடை செய்தவர்கள். அவர்களுக்குத் தெரிந்த அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலுவையில் குற்றவாளி போல் தொங்கிக் கொண்டிருந்த இயேசு ஒரு பரிதாபமான, போலி அரசனாய் தெரிந்தார். அவர்களது ஏளனத்திற்குத் தூபம் போடும் வகையில் அந்தச் சிலுவை மீது "இவன் யூதரின் அரசன்." என்று ஏக வசனத்தில் எழுதி, வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஏளனக் குரல்களுக்கு நேர் மாறாக, இயேசுவுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் ஏக்கக் குரல் இயேசுவின் அரசத் தன்மையை வெளிப்படுத்துகிறது.'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்".

சிலுவையில் தொங்கும் அந்த உருவத்தை மனிதன் என்று கூட ஏற்றுக்கொள்ள முடியாத அந்த சூழ்நிலையில், இந்தக் குற்றவாளி இயேசுவை ஓர் அரசனாக எப்படி காண முடிந்தது? அவர் இயேசுவிடம் கண்ட அரசத் தன்மை என்ன? உலக மன்னர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்ட போது, அல்லது அவர்கள் தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர்கள் காட்டிய கண்ணியம், அமைதி எதிரிகளையும் அவர்கள் மீது மரியாதை காட்ட வைத்தது என்று வரலாறு சொல்கிறது. அந்த கண்ணியத்தை, அந்த அமைதியை இயேசுவிடம் கண்டார் இந்தக் குற்றவாளி. அவர் கண்களில் இயேசு அறையுண்டிருந்த சிலுவை ஒரு சிம்மாசனமாய்த் தெரிந்தது. இயேசு தலையில் சூட்டப்பட்ட முள்முடி, மணி மகுடமாய்த் தெரிந்தது. எனவே, இயேசு அரசரிடம் தன் விண்ணப்பத்தை வைத்தார் அந்தக் குற்றவாளி.

இதுவரை நாம் சிந்தித்த மற்ற நிகழ்வுகளிலும் இயேசு தவறான முறையில் 'அரசன்" என்று கருதப்பட்டார். இவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூட சொல்லவில்லை. தன்னை வாழ்வில் அரசரென அழைத்த, அல்லது அரசராக்க முயன்ற பலருக்கும் பதில் தராத இயேசு, இந்தக் குற்றவாளிக்குப் பதில் தருகிறார். தனது உண்மையான அரசை, தனது உண்மையான அரசத் தன்மையை இந்தக் குற்றவாளி கண்டு கொண்டார் என்பதை இயேசு உணர்ந்ததனால் என்னவே அவருக்கு மட்டும் சரியான பதிலைத் தருகிறார். 'நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என உறுதிகூறுகின்றார் இயேசு.

இயேசு நமக்கும் இந்த உறுதியைத் தருகிறார். தன் பேரின்ப வீட்டில் நமக்கும் இடம் தர நம்மை அழைக்கிறார். இதுதான் அவர் நிறுவ வந்த அரசு. இதற்குதான் அவர் அரசர். இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் இந்த அரசு நிறுவப்படும். இந்த அரசில் அரசன் என்றும், அடிமை என்றும் வேறுபாடுகள் இல்லை, எல்லாரும் இங்கு அரசர்கள். இந்த மன்னர்கள் மத்தியில் இயேசு ஒரு மாமன்னராய் அமர்ந்திருப்பார் என்று தேடினால், நமக்கு ஏமாற்றமே காத்திருக்கும். ஏனெனில், இயேசு அரியணையில் அமர்ந்திருக்க மாட்டார். அவர் நம் எல்லாருடைய பாதங்களையும் கழுவிக்கொண்டு இருப்பார். எல்லாரையும் மன்னராக்கி, தானும் மன்னராகும் இயேசுவின் அரசுத்தன்மையைக் கொண்டாடத்தான் இந்த கிறிஸ்து அரசர் திருநாள். இத்திருநாள் தான் கிறிஸ்து அரசர் பெருவிழா.

Saturday, November 17, 2012

எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை எம்மில் வளர்ப்போம்.

19.11.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்றைய நற்செய்தியில், இயேசு தனது இரண்டாவது வருகையை பற்றி கூறுகிறார். ஆனால் இங்கே இயேசு இன்னும் அவரின் முதல் வருகையையின் பணியை முழுவதுமாக முடிக்கவில்லை. 'அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும் நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும் வான்வெளிக் கோள்கள் அதிரும்." இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். 

இது இன்றுவரை ஒரு முடிவில்லாதப் பிரச்சினை. இயேசு எங்கே? அவர் என்ன சொன்னார் என்பதை கவனித்தால்: 'இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார்". அவர் எந்த ஒரு தேதியையும் உறுதியாக சொல்லவில்லை. சீடர்களுக்கு எந்த ஒரு தடயமோ, அல்லது தமது இரண்டாம் வருக்கைக்கான எந்த ஒரு சரியான குறியீடும் கொடுக்கவில்லை. ஏனெனில், அவருக்கும் அது தெரியாது!
கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றுதான் இயேசுவின் இரண்டாம் வருகை. முதல் வருகையின்போது, மனித உருவெடுத்து, தொடர்ந்து பாடுபட்டு, மரித்து, உயிர்த்த இறைமகன் இயேசு  இரண்டாம் முறையாக மீண்டும் வருவார். அந்த வருகையின்போது அவர் நடுவராக உலகைத் தீர்ப்பிடுவார். என்பதுவே இரண்டாம் வருகையின் பொருள். இதை நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலியிலும், விசுவாசப் பிரமாணத்திலும், இன்னும் வேறு பல வேளைகளிலும் அறிக்கையிடுகிறோம்.

இந்த விசுவாச அறிக்கையை எப்படி வாழ்வில் பயன்படுத்துவது என வினாவினால் அது ஒரு நல்ல கேள்விதான். நடுவராக இயேசு மீண்டும் வரவிருக்கிற அந்த இரண்டாம் வருகை உலக முடிவில்தான் இருக்கும். உலக முடிவு எப்போது என்று மனுமகனுக்கே தெரியாது என்று இயேசுவும் கூறிவிட்டார். எனவே, நம்மைப் பொறுத்தவரை, உலக முடிவு என்பது நம் ஒவ்வொருவரின் முடிவுதான். அதாவது, நமது இறப்புதான். நாம் இறக்கின்றபோது நடுவராம் இயேசு நம்மைச் சந்தித்து நம்மைத் தீர்ப்புpடுவார். அந்தத் தீர்ப்பின் வேளைக்காக நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாம் இறைவனுடைய பிரசன்னத்தை உணர்ந்து வாழ்வதும், நமது பணிகளை நேர்மையாக, நேர்த்தியாக ஆற்றுவதுமே இரண்டாம் வருகைக்கான நமது தயாரிப்பு.

இயேசு தம் சீடர்களுக்கு இன்னுமொரு விடையத்தை கூறுகின்றார் அது நிறைவுக் காலம் பற்றியது. கடவுளாட்சி ஏற்கெனவே வந்துவிட்டது என்றாலும் அதன் முழுமை இன்னும் மலரவில்லை. ஆனால் இயேசு இறுதி வெற்றி உறுதியாக வரும் என நமக்குக் கற்பிக்கிறார். இந்த உலகில் நிலவுகின்ற அநீதிகளும் அட்டூழியங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும் எனவும், குறைகளும் குற்றங்களும் மலிந்த நம் வாழ்வு ஒரு நாள் ஒளிமயமானதாக விளங்கும் எனவும் நமக்கு அவர் அறிவுறுத்துகிறார். ஆனால் அந்த நிறைவுக் காலம் எப்போது வரும்? இக்கேள்விக்கு இயேசு பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்த நிறைவுகாலம் எமக்கு எதிர்காலத்தில் தான் வரும் என்கிறார் இயேசு.
இன்று நம்மில் எத்தனை பேர் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறோம்? எப்படி அதை அறிய ஆசைப்படுகின்றோம் என்பது சுவாரிசமானதுதான். கத்தோலிக்கர்கள் என மார்புதட்டிக்கொண்டும் பங்குத்தளங்களில் உள்ள பக்திக்குழுக்களில் பைபிளை தூக்கிக்கொண்டு வேதம் ஓதியபின். கையைப் பார்த்து, கிளியைக் கேட்டு, நாடி பார்த்து நல்ல சாத்திரக்காறரை நாடிச்சென்று கேட்டு தம்வாழ்வையும் மட்டுமல்லாது தம் அன்பர்களில் வாழ்வையும் பாழாக்குபவர்கள் பற்றி நாமறிவோம் அப்பப்பா இன்னும் எத்தனை வழிகளில் எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம். எதிர்காலம் முழுவதும் நல்ல காலம் பொறக்குது என்ற சொற்களையேக் கேட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலையாகக் குவிந்து கிடந்தால் ஏன் இதைத் தெரிந்து கொண்டோம் என்று பிரச்சினையில் வருத்தப்படுவோம்.
எனவே எதிர் காலத்தைத் தெரிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது அந்த எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்ப்பதில் செலவிட்டால், எவ்வளவோ பிரச்சனைகளைச் சமாளிக்கலாம், வெல்லலாம். எதிர்காலம் என்பதில் பிரச்சனை கூட்டமாக சேர்த்து வந்தாலும், அந்தக் கூட்டத்தின் மத்தியில் நல்லவைகளை, நல்லவர்களைப் பார்த்து கைகுலுக்கிக் கொள்ளும் பக்குவம் நாம் பெறவேண்டும். இதை ஒரு உருவகத்தில் சொல்ல வேண்டுமெனில், எதிர்காலம் மலைபோல் குவிந்த ஒரு குப்பையாக தெரிந்தாலும், அந்த குப்பையின் நடுவிலும் வைரங்கள் மின்னுவதை நம் கண்கள் பார்க்கும் போது, குப்பை மறைந்து விடும், வைரங்கள் மட்டும் தெரியும். குப்பைகளை விலக்கி, குண்டு மணிகளை, வைரங்களைப் பார்க்கும், வைரங்களைச் சேர்க்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள இறைவன் துணையை நாடுவோம். இந்த உலகத்தின் இறுதி காலம் பற்றி சிந்திக்க இந்த ஞாயிறு வாசகங்களான தானியேல், மாற்கு நற்செய்தியின்  இறை வார்த்தைகளைக் பகுதிகளை கேட்போம்

Wednesday, November 7, 2012

முக மலர்ச்சியைக் பெற்றுத்தரும் தான தர்மங்களைச் செய்வோம்.

11.11.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
அன்னை தெரசா ஒருமுறை  சொன்னார்: "புiஎந வடைட வை hரசவள " 'கொடுங்கள், உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் கொடுங்கள்." இதனை எண்ணும்போது நம் தமிழ் பாரம்பரியத்தில் பேசப்படும் சிபி சக்ரவர்த்தி நினைவுக்கு வருகிறார். தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்ற, தன் உடலின் சதையை அறுத்துத் கொடுத்த அந்த மன்னர் அன்னை தெரசா சொன்னது போல் உடலை வருத்தித் தந்தவர். கர்ணனும் இப்படி கொடுத்ததாக நமது மகாபாரதம் சொல்கிறது.

தன்தை வருத்தி தன்னை பாதிக்கும் அழவுக்கு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் காணிக்கையாக செலுத்திய ஏழைக் கைம்பெண்ணின் செயலை இன்று நற்செய்தி கூறுகின்றது. இதனை உற்று நோக்கிய இயேசு இதனை பாராட்டுகின்றார். ஆனால் பணம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றைத் தேடிய மனிதர்களை இயேசு பல முறை கண்டித்துப் பேசினார். அந்த கைம்பெண தன்னிடம் இருந்ததைப் போட்டார், பிழைப்புக்காக வைத்திருந்ததைப் போட்டார். நிகழ் காலம், எதிர் காலம் இரண்டையும் காணிக்கை பெட்டியில் போடுகிறார். அப்படி ஓர் ஆழ்ந்த நம்பிக்கை கடவுள் மேல்.

எம்மில் பலர் இன்று கடவுள் என் தியாகத்தைப் பார்த்து ஏதாவது செய்வார் என்று பலவெளிவேடங்களை செய்கின்றோம். இந்தக் கண்ணோட்டம் ஒரு வியாபாரம். கடவுளே நான் இவ்வளவு தருகிறேன் அல்லது செய்கின்றேன் நீ இவ்வளவு தாரும் என்று பேரம் பேசுகின்றோம்.  ஆனால் இயேசு புகழ்ந்த கைம்பெண் வியாபார பேரங்களைக் கடந்தவர். கடவுளுக்குத் தன்னிடம் இருந்தவை எல்லாவற்றையும் மகிழ்வாகத் கொடுத்தவர். எனவே தான் இயேசுவின் இந்த மனமார்ந்த பாராட்டுகளைப் அவள் பெறுகிறார். அந்தப் பெண் இந்தப் புகழுரையைக் கேட்டிருப்பாரா? காணிக்கை செலுத்திய திருப்தியுடன் காணாமல் போய்விட்டார். அந்தப் பெண்ணுக்கு பெயர் கூட இல்லை.
கடவுளுக்குக் காணிக்கை என்று கூறிவிட்டு, ஏழைகளைச் சுறண்டுகின்ற செயல் நடந்தால் அது கொடுமைதான். இதனை இயேச கண்டிக்கின்றார். இயேசு பாராட்டும் அக்கைம்பெண்ணைப் பொறுத்தமட்டில் அவருடைய உள்ளத்திலிருந்து எழுகின்ற அன்பு நம்மைக் கவர்ந்து இழுக்கிறது. 'உன் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக" என்னும் அன்புக் கட்டளையை அக்கைம்பெண் நடைமுறையில் செயல்படுத்துகிறார்.

மனிதனுக்கு விலாசம் தேவை. விளம்பரம் தேவையல்ல. விலை கொடுத்து விளம்பரப்படுத்தி பெறுவை பெயரும் புகழும். மாறாக தன்னை வருத்தி தியாகம் செய்வதால் தானாக அவை வந்து சேர வேண்டும். விளம்பரம் தேடும் விவரம் தெரிந்த படித்த பெரிய மனிதர்களையும், கொடுத்துக்கொடுத்து தன்னையும் தன் வாழ்வையும் தன் முகவரியையும் கூட இழந்து போன ஒரு பெண்ணையும் இன்று நற்செய்தியில் காண்கிறோம். இயேசு பெண்ணைப் பாராட்டுகிறார். பெரிய மனிதர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார். மறைநூல் அறிஞரின் ஆடம்பரம், செல்வாக்கு, பெருமை இவை வெளி அடையாளங்கள் கைம்பெண்ணின் ஒரு வெள்ளிக்காசு மறைவான தியாகத்தின் உச்சநிலை. தியாகச்செயல் ஆண்டவருக்கே செய்யப்பட்டப் போதிலும் அது மறைவாக இருக்க வேண்டும். தன்னை வருத்துவதாய் இருக்க வேண்டும்.

இயேசு கொடுக்கும் முக்கியத்துவம் எப்பொழுதுமே பொன்னுக்கோ பொருளுக்கோ அல்ல. மனிதனுக்கே முதலிடம், முக்கியத்துவம். ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது. மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை." பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்". பாவத்தை அல்ல, பாவியை பெரிதாக கருதுபவர். இவ்வாறு மனிதனையும் அவனது மனநிலையையும் முதன்மைப்படுத்துவதால் அவர்களிடமிருந்து வெளிப்படும் செயல்களின் எதார்த்தமும் வெளிப்படுகிறது. தியாகம், காணிக்கை, பிறருக்குக் கொடுத்தல் இவற்றின் உட்பொருள், உள் நோக்கம் இவற்றை உணரமுடிகிறது. தன்னில் ஒரு தாக்கத்தை, இழப்பை ஏற்படுத்தாத எச்செயலையும் தியாகம், காணிக்கை என்று கணிக்கமுடியாது. ஏழைக் கைம்பெண் தன்  வறுமையில் இருந்த அனைத்தையும் போட்டாள். இது தியாகம். பணக்காரன் பல கோடியில் பல இலட்ஷத்தில் பலரும் பாராட்டும் மண்டபம் கட்டுவதில் என்ன தியாகம் இருக்கிறது என்பது இயேசுவின் பாராட்டில் புதைந்திருக்கும் பூதாகாரமான கேள்வி. இந்த கேள்வியின் பதிலே சம தர்ம சமூகத்தின் வாழ்வாதாரம். இதுவே இயேசு விரும்பும் காணிக்கை, தியாகம்.

நல்ல மனதோடு செய்கின்ற சிறிய தியாகமும் தர்மமும் ஆண்டவரின் ஆசீரை அள்ளிக் கொண்டு குவிக்கும் ஆற்றல் படைத்தது. அதே வேளையில் பெருமைக்காக, விளம்பரத்திற்காகச் செய்யும் பெரிய கொடைகள் பல வேளைகளில் நமக்கு உதவாமல் போய்விடும். ஏழைக் கைம்பெண்ணிடம் விளங்கிய மன நிலையோடு தான தர்மங்களைச் செய்வோம். அது நமக்கு முகவரியைப் பெற்றுத் தரும். முக மலர்ச்சியைக் கொடுக்கும்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff