Wednesday, May 27, 2020

கேலிச்சித்திரங்களும் மட்டுப்பாடுகளும்


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




கேலிச்சித்திரங்களில் மனிதர்களின் தோற்றங்கள் அல்லது செய்கை மரபுகள் வெளிப்படுத்தப் படுகின்றன. 'இயல்பான மனிதனின் தோற்றத்தை மிகைப்படுத்திக் கேலியும் கிண்டலுமாக வரைபடத்தின் மூலம் வெளிக் காட்டுவது கேலிச்சித்திரமாகும்"  என நாம் அறிந்து கொண்டோம்  கேலிச்சித்திரம் அங்கதச்சுவையைத் தூண்டும் வகையில் வரையப்படும் சித்திரங்கள்ஆகும்.ஹிட்லர்நிலைகுலைந்துதோற்றுப்போவதற்கு டேவிட்வோ வின் கேலிச்சித்திரங்களும் ஒரு காரணம் என வரலாறறிந்தோர் கூறுகின் றனர்.

'அரசின் குறைகளை, ஆட்சியின் அவலங்களை, பொதுமக்களின் இன்னல்களை யாருமே சொல்லக்கூடாது, பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டவர்கள் பின்னர் தங்கள் நிலையில் இருந்து பின் வாங்கியதுதான் வரலாறு.

'சட்டத்தின் ஆட்சி அல்ல, காட்டாட்சி நடக்கிறது: கார்ட்டூனிஸ்ட் பாலா கைதுக்கு முன்னாள் நீதிபதி சந்துரு கண்டனம்"  இந்திய செய்தி

'ஒரு கேலிச்சித்திரம் நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய மாபெரும் மேதை அம்பேக்கார் அவர்களை அவமானப்படுத்தி விட்டது அதற்குக் காரணமானவர்கள் மீத உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்." இந்திய செய்தி

'இஸ்லாமியரின் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் என்று கூறி ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்ட தமிழகத்தின் தினமலர் பத்திரிகைமீது பல்வேறு பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன" இந்திய செய்தி

தமிழகத்தில் கார்ட்டூன்களில் அரசியல் கருத்துக்களை சொன்ன ஆங்கில, தமிழ் பத்திரிகைகள் ஏராளம். தமிழகத்தில் அரசுக்கு எதிராக கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டவர் ஆனந்தவிகடனின் ஆசிரியர் பாலசுப்ரமணியன். 1987 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் அட்டைபடத்தில் வெளியிட்ட கேலிச்சித்திரத்தை கண்டு அவரை கைது செய்ய உத்தரவிட்டார் அன்றைய வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் பி.எச்.பாண்டியன். கைதுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலையை பார்த்து பணிந்த அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் சபாநாயகரிடம் பேசி அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். 

'இன்னும் தினமலர் போன்றே இந்த இஸ்லாமியரின் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை டென்மார்க் பத்திரிகை பிரசுரித்த காரணத்தால் எழுந்த மோதலில் 150 ஆதிகமானோர் பலியானர்கள் "

'மலேசியாவினன் பிரதம மந்திரியான நஜிப் ரசாக் அவர்களை கோமாளியாகச் சித்தரித்து கேலிச்சித்தரம் வரைந்தவர் கைதுசெய்யப் பட்டார் என்றும் அவருக்கு ஒரு மாதசிறைத்தண்டனையும் 700 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது"


'டி.எஸ் சேனநாயக்கா அவர்கள் பிரதம மந்திரியாக எமது நாட்டில் இருந்த போது கொலட் அவர்களின் கேலிச்சித்திரத்தில் -கார்ட்டூனில் பல அரசியல் வாதிகள் கதிகலங்கிப் போனார்கள். அவர்கள் டி.எஸ் சேனநாயக்காவிடம் முறையிட்டார்கள். அதற்கு பிரதம மந்திரியவர்கள் நாடும் சிரிக்க வேண்டும் என சமாதானம் கூறினார்" இவ்வாறு பல செய்திகளை நாம் வாசித்திருக்கின்றோம். 


'இதனுள் இன்னும் ஒரு விடயத்தை கூறித்தான் ஆகாவேண்டும். சேர் ஜோண் கொத்தலாவல அவர்கள் மற்றய அரசியல் வாதிகளிலிருந்து சற்று வித்தியாசமானவர். தன்னை கிண்டல் செய்த படைப்புக்களை நன்றாக சுவைப்பாராம். அது மட்டுமல்லாது. ஆந்த படைப்புக்ககை பத்திரிகையா ளர்களிடமிருந்து பணம் கொடுத்து வாங்கிச் சட்டமிட்டு தன் அறையில் தங்கவைத்து இரசிப்பாராம் "

எனவே கேலிச்சித்திரத்திற்கு எதிராக மட்டுப்பாடுகள் இருக்கின்றனவா என நாம் தெரிந்து கொள்வதும் சாலப் பொருத்தம். எமது இலங்கை நாட்டில் கேலிச்சித்திரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது பற்றி எமது அறிவுக்கு எட்டிய அளவிற்கு தெரியவில்லை. ஆனால் எடுக்கப்பட முடியாது எனவும் நாம் அறிதியிட்டும் கூற முடியாது. ஆனால் எடுக்கப்படாது என்பது எழுதப்படாத ஊஜிதமே என்றால் சாலப்பொருந்தும் எனலாம். 

ஆட்சியாளர்கள் குறைகளை மக்களிடம் எடுத்துச்செல்வதும் அதை வெளிக்கொணரவும் பல வடிவங்கள் இருந்தாலும் மிகச்சிறந்த வடிவமாக இருப்பது கேலிச்சித்திரங்களே. கேலிச்சித்திரம் எல்லோராலும் வரைந்து விட முடியாது. ஏன் ஒரு ஓவியரால் கூட கேலிச்சித்திரம் வரைய முடியாது.

கேலிச்சித்திரம் ஒருவகை எழுத்தாற்றலே. பல பக்கங்கள் எழுதி சொல்ல முடியாத ஒன்றை ஒரு கருத்துப்படம், கேலிச்சித்திரம் உணர்த்திவிடும். கேலிச்சித்திரங்கள் அடுத்தவர் இரசிக்கும் படியாகவும் அதில் ஆழமாக இடித்துரைக்கும் விடயமும் இருக்கும்.


இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை- அதி விசேடமானது 2048ஃ1 ஆம் இலக்கம் - 2017 ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 04 ஆந் திகதி திங்கட்கிழமை வெளியான வர்த்தமான அறிவித்தலில்  இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பினது 104ஆ (5) (அ) என்னும் உறுப்புரையின் கீழான ஊடக வழிகாட்டு நெறிகள் எனும் திரட்டில் நான்காவது சரத்தில் 'நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கின்றவர் மற்றும் தொலைக்காட்சி அத்துடன் வானொலி அலைவரிசைகளின் அறிவிப் பாளர் ஒவ்வொருவரும், ஒரு திறத்தவருக்குப் பங்கமேற்படுத்துகின்ற அல்லது ஒரு திறத்தவரை ஊக்குவிக்கின்ற செய்தித்தாள் தலைப்புச் செய்திகளை மற்றும் கேலிச்சித்திரங்களை தொகுத்தளிக்கின்ற போது தமது தனிப்பட்ட கருத்துக்களைத் தெரிவிப்பதனைத் தவிர்த்தல் வேண்டும்." என்பதனை பார்க்க முடிகின்றது. 

கார்ட்டூனிஸ்ட் - (கேலிச்சித்திர ஓவியர்) அம்மைப்பிள்ளை யோகமூர்த்தி அவர்கள் இலங்கையிலிருந்து வெளியாகும் ஆங்கில செய்தித்தாள்-தி ஐலன் வுhந ஐளடயனெ பத்திரிகைக்கு 08.04.2019 அன்று வளங்கி செவ்வியிலிருந்து சிலபகுதியை இங்கு சுட்டிக்காட்டுவவது சாலப் பொருத்தம். 


கார்ட்டூனிஸ்ட் - (கேலிச்சித்திர ஓவியர்) அம்மைப்பிள்ளை யோகமூர்த்தி அவர்கள்:'ஒரு கார்ட்டூனிஸ்ட் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தப்படவோ அல்லது இயக்கப்படவோ கூடாது" என்று மீண்டும் வலியுறுத்தி 08.04.2019 அன்று கூறினார் என்று மேற்படி பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. 'ஒரு கார்ட்டூன் நாட்டின் உண்மையான அரசியல் நிலைமையை பிரதிபலிக்க வேண்டும். ஒரு கார்ட்டூனிஸ்ட் அரசியல் பிரச்சினைகளை நடுநிலையான மனநிலையோடு மத்தியஸ்தம் செய்ய வேண்டும். என்று மேலும் தெரிவித் தார்;" இலங்கையில், குறிப்பாக ஒரு தமிழ் கார்ட்டூனிஸ்டுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா என்று அவரிடம் கேட்டபோது, யோகமூர்த்தி, கார்ட்டூன்கள் கருத்துச் சுதந்திரத்தின் விளைவாகும் என்று சுட்டிக்காட்டி னார்."எனது ஆசிரியர் கூட எனது கார்ட்டூன்களில் தலையிடவில்லை. என்றும் தெரிவித்தார்."

தனது பதவிக்காலத்தில் ஊடக சுதந்திரம் எந்த வடிவத்திலும் தடைப்படாது என்று உறுதியளித்ததாக  இலங்கை ஜனாதிபதி கோதபய ராஜபக்~ 12.12.2019 அன்று வியாழக்கிழமை அவரது அலுவலகத்தில் இருந்து வெளியிட் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். இதுவும் கேலிச்சித்திரங்கள் சுகந்திரமாக வரையப்படலாம் என்பதற்கு ஒரு எடுத்தக்காட்டு 

எனவே ஒரு கார்ட்டூனிஸ்ட் சுய தணிக்கை செய்து தனது கேலிச்சித்திரங் களை செய்வது மிகவும் நன்றாக இருக்கும் என இங்கு கூறிக்கொள்ளத்தான் வேண்டும். 

இந்தவகையில் பின்வருவனவற்றை கருத்தில் நோக்குவோம். 


  1. இறைவனையும் புனிதம் பொருள்களையும் இழிவுபடுத்தும் வகையில் கேலிச்சித்திரங்கள் வரைவதைத் தவிர்பது நல்லது 
  2. கேலிச்சித்திரங்கள் வரையும்போது தேசியக் கொடி, தேசிய சின்னங்களின் மதிப்பை கெடுக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது
  3. தனிமனிதர்களையும் அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் கேலிச்சித்திரங்களை வரைவதைத் தவிர்ப்து நல்லது.
உசாத்துணை நின்றவை:-

  1. பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
  2. https://www.thehindu.com/news/international/gotabaya-assures-media-freedom-under-his-govt/article30288980.ece, Accessed on 21.05.2020
  3. https://www.newsfirst.lk/2019/12/12/president-gotabaya-rajapaksa-assures-media-freedom-during-his-administration/,Accessed on 21.05.2020
  4. http://island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=202388
  5. https://www.canadamirror.com/world/04/162817,Accessed on 21.05.2020
  6. http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/19917-2012-05-26-19-45-58,Accessed on 21.05.2020
  7. https://adiraiexpress.wordpress.com/2008/09/20/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%88/,Accessed on 21.05.2020


Tuesday, May 26, 2020

உலகில் பிரசித்தி பெற்ற தலைவர்கள் சிலரைக் குறிக்கம் கேலிச்சித்திரத்தில் பயன்படுத்தப்படும் சில குறியீடுகள் '"

கேலிச்சித்திரங்களில் மனிதர்களின் தோற்றங்கள் அல்லது செய்கை மரபுகள் வெளிப்படுத்தப் படுகின்றன. உதாரணமாக வின்சன் சேர்ச்சில் என்றால் வாயில் சுருட்டுப் அவருடைய அடையாள முத்திரையாக பயன்படுத்தப்படுகின்றது. பின்வரும் அட்டவணையை நோக்குவோம்.

இல.

தலைவர்கள்

கேலிச்சித்திரக் குறியிடுகள்

1.   

வின்சன் சேர்ச்சில

வாயில் சுருட்டு

2.   

ஐகவர்லால் நேரு

சட்டைப்பொத்தானில் ரோஜாப்பூ

3.   

பாரதியார்

தலைப்பாகை

4.   

நிக்சன், இந்திராகாந்தி

மூக்கு

5.   

மோரார்ஜின்

காதுகள்

6.   

ராஜாஜி

கறுப்புக்கண்ணாடி

7.   

பெரியார்

கைத்தடி

8.   

ஹிட்லர்

குறும் மீசை

9.   

எம்.ஜி.ஆர்

தொப்பியும் கறுப்புக்கண்ணாடி

 

 

மேற்கூறப்பட்டவைகள் சில பிரசித்தி பெற்ற தலைவர்களின் அடையாள முத்திரைகளாக சேலிச்சித்திரங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன.

தொடரும்

 

உசாத்துணை நின்றவை:-

1.       முனைவர்: ச.ஈஸ்வரன் மற்றும் முனைவர்: இரா. சுபாபதி, இதழியல், முதற்பதிப்பு, டிசம்பர் 2004,பாவை பப்ளிகேசன், சென்னை600004.

2.       அருள்திரு ரூபன்மரியாம்பிள்ளை, பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.


 

கருத்துப்படத்திற்கும் கேலிச்சித்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் '"

 

நாம் மேற்போர்ந்து இரு படங்களைப் பற்றியும் எழுதிய கட்டுரையிலிருந்த பல வேறு பாடுகளை நீங்கள் கண்டுணர்திருக்கக் கூடும். அவற்றில் சிலவற்றை தொகுத்து சுருக்கமாகத் தருகின்றோம்.

 

 

இல.

கருத்துப்படம்

கேலிச்சித்திரம்

1.    

கருத்திற்குத்தான் முதலிடம் கொடுக்கின் றது

தனிநபர்களின் தோற்றம் அல்லது செய்கை மரபுகளுக்கு முதலிடம்

2.    

அரசியல், சமூகக்கேடுகளை பற்றியது

தனிமனிதக் கொள்கைகள் பற்றியது

3.    

செய்தி அடிப்படையில் அமைவது

தனிநபர் நடத்தையில் அமைவது

4.    

சிந்திக்க வைப்பது

சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பது

5.    

ஆசிரியர் தலையங்கக் கருத்தினை வெளிச்சம் போட்டுக்காட்ட முக்கியத்துவம் கொடுக்கும்

அவ்வாறு அமைவுது மிகக் குறைவு மாறாக உட்பொருளை நகைச்சுவையுடன் வெளிப் படுத்தும்

6.    

கருத்துப்படம் அவ்வாறில்லை

கேலிச்சித்திரம் ஒரே ஒரு கருத்தைத்தான் கூறும்

7.    

கருத்துப்படம் எளிமையான வரைபடமாகும் பெரும்பாலும் நகைச்சுவையான விளைவை உருவாக்குகிறது

கேலிச்சித்திரம் நகைச்சுவை பாணியிலிருப் பிலும் சிலவேளைகளில் கோரமான விளை வை உருவாக்க ஒரு நபரின் சில பண்புக ளை மிகைப்படுத்தி பயன்படுத்துகிறது.

 

 

தொடரும்

உசாத்துணை நின்றவை:-

1.   முனைவர்: .ஈஸ்வரன் மற்றும் முனைவர்: இரா. சுபாபதி, இதழியல், முதற்பதிப்பு, டிசம்பர் 2004,பாவை பப்ளிகே~ன், சென்னை600004.

2.   பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.

3.       https://www.differencebetween.com/difference-between-caricature-and-vs-cartoon/

4.       https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D, Accessed on 16.05.2020

5.       http://www.shanlaxjournals.in/pdf/TS/V3N3/ts_v3_n3_i1_021.pdf, Accessed on 19.05.2020

6.       https://www.oneindia.com/photos/daily-cartoons-57493.html#photos-1, Accessed on 19.05.2020

 

Monday, May 25, 2020

கருத்துப்படம்- அவை உணர்த்தும் கருத்து வடிவங்களுக்கேற்ப ஐந்து வகையாகப் பிரிக்கலாம்


ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




ஆசிரியர் தலையங்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்தைக் கருத்துப்படங்கள் பெறுகின்றன. ஆசிரியர் தலையங்கத்தை இன்று எல்லோரும் விரும்பிப் படிப்பதில்லை. ஆனால் படத்தினை எல்லோரும் நேரமில்லதபோது அவசரம் அவசரமாகப் பார்த்துவிட்டு போகிறவர்களுக்கு பார்த்த சமயத்திலேயே புரிந்துகொள்வதற்கு கருத்துப்படம் துணைபுரிகின் றது.கருத்துப் படத்தில் கருத்துத்தான் முக்கியமானது கொடுக்கப்படு கின்றது. ஆசிரியர் தலையங்கத்திங்குப் படம் வரையப்படும்போது அது படத்தலையங்கம் எனவும் அழைக்கப்படும். 

ஆமெரிக்காவில் உலகப் புகழ்பெற்ற ஷ பலிட்சர் விருது- Pரடவைணநச தினை வழங்கும் குழுவினர் கருத்துப்படத்திற்கு விளம்கம் தரும் போது: கருத்துப்படத்தில் தெளிவான ஒரு கருத்து இருக்கவேண்டும். படம் நன்கு மனதில் பதியத் தக்கதாக அமையவேண்டும். இது ஒரு உன்னத இலச்சியத் திற்கு அல்லது கொள்கைக்கு உதவுவதாக அருத்தல் வேண்டும் கூறுகின்றனர்

ஓன்று சேருங்கள் அல்லது செத்துமடியுங்கள். என்னும் கருத்துப்படத்தை ஷபென்சில்வேனியா கசற்| என்னும் பத்திரிகை 1754 இல்  வெளியிட்டது. ஒரு பாம்மை 8 துண்டுகளாக வெட்டி அது சிதறுண்டு இருப்பதாகக் காட்டப்பட்ட படம் அமெரிக்காவில் சிதறுண்ட கொலனிகளை குறிப்பதாக காட்டப்பட் டது. 


தமிழ்நாட்டில் பெயர்போன ஆனந்தவிகடன் இக்கருத்துப் படங்களை வெளியிடுவதில் பிரபல்யம் பெற்ற ஒரு சஞ்சிகையாகும். 

கருத்துப் படம் என்பது ஏதாவது மையக்கருத்தை மக்களுக்கு எடுத்து ரைக்கும் வகையில் எளிமையான படங்களைக் கொண்டதாக இருக்கும். படத்தைப் பாப்பவர்களிடையே ஒரு கருத்தை உருவாக்குவதாகவும். சொற் குறைப்புடனும் அல்லது சொற்கள் இல்லாமலும் பொருள்செறிவுடனும் கருத்தைப் புலப்படுத்துவதாக கருத்துப்படம் அமையும் கருத்துப் படம் கேலிச்சித்திரம் (caricature) அல்ல. இரண்டுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.

தமிழ் பத்திரிகைகள் மற்றும் வாரஇதழ்களில் வெளியாகும் கருத்துப்படம் அவை வெளிப்படுத்தும் -உணர்த்தும் கருத்து வடிவங்களுக்கேற்ப ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகிறன. அவை:- 

1. தலையங்கக் கருத்துப்படம்
2. அரசியல் கருத்துப்படம்
3. கட்டத்திற்குள் கருத்துப்படம்
4. அட்டைப் பட கருத்துப்படம்
5. சமூகச் சிறப்புக் கருத்துப்படம்

தலையங்கக் கருத்துப்படம்:-

ஆசிரியர் தலையங்கத்தில் எழுப்பப்படும் கருத்தினையும் செய்தியையும் வாசகர்களுக்கு புரியவைப்பதற்கு வரையப்படும் கருத்துப்படம் படத்தலை யங்கக் கருத்துப்படம் அல்லது தலையங்கக் கருத்துப்படம் என அமைக்கப் படும்.

அரசியல் கருத்துப்படம்:- 

கருத்துப்படங்களில் அரசியல் தொடர்பான நிகழ்வுகளும் நடப்புக்களும் வரையப்பட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் அழைக்கும் போது அது அரசியல் கருத்துப்படம் எனப்படும். 

கட்டத்திற்குள் கருத்துப்படம்:-

ஒரு குறிப்பிடப்பட்ட கருத்தினை விளக்க கட்டம் கட்டி வரையப்படும் கருத்துப்படம். கட்டக் கருத்துப்படம் அல்லது கட்டத்துள் கருத்துப் படம் எனப்படும். 



தொடரும்…

உசாத்துணை நின்றவை:-

  1. முனைவர்: .ஈஸ்வரன் மற்றும் முனைவர்: இரா. சுபாபதி, இதழியல், முதற்பதிப்பு, டிசம்பர் 2004,பாவை பப்ளிகே~ன், சென்னை600004.
  2. அருள்திரு ரூபன்மரியாம்பிள்ளைபத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம்முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம்யாழ்ப்பணம்.
  3. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D, Accessed on 16.05.2020
  4. http://www.shanlaxjournals.in/pdf/TS/V3N3/ts_v3_n3_i1_021.pdf, Accessed on 19.05.2020
  5. https://www.oneindia.com/photos/daily-cartoons-57493.html#photos-1,Accessed on 25.05.2020


Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff