Sunday, December 22, 2013

களவாடப்பட்டுட மனிதவாழ்வையும், சிறைபிடிக்கப்பட்ட மனிதவாழ்வையும், வென்றெடுக்க மனுமகனின் பிறப்பில் மனிதர் நாம் மனவுறுதியெடுப்போம்.

25.12.2013   ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்.

கடவுள் பிறப்பெடுத்து உலகிற்கு வருகிறார் என்று நாம் காலம் காலமாக நம்பிவருகின்றோம். இந்த உலகுக்கும் கடவுளுக்கும் உறவு உண்டு. கடவுளுக்கு இந்த உலகின்மீது அக்கறையுண்டு என்பதைத்தான் கடவுளின் பிறப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. அப்படி கடவுள் உலகில் இயேசுவாக பிறப்புக் கொண்ட ஒரு நிகழ்வைத் தான் கிறித்தவர்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடிவருகின்றனர். பொதுவாக கடவுள் பிறந்து வருவது மக்களையும் படைப்பனைத்தையும் அழிவினின்றுகாக்கவும், அவையனைத்தும் நிறைவான நிலையான வாழ்வைக் கொண்டிருக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவுமே ஆகும்.

கடவுளின் பிறப்பும் ஒரு குறிப்பிட்ட பேருண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதாவது 'மண்ணினின்று உண்மை முளைத்தெழும்" என்னும் பைபிள் வரிகளை உண்மையில் நோக்குவோம். அவை எமக்கு வருங்காலத்தைக் காட்டுகின்றன. 'உண்மை உலகிலிருந்து முளைத்தெழுகிறது." வாக்குறுதியாய் வரும் இவ்இறை வார்த்தை ஏனைய வார்த்கைளின் வெளிப்பாடுகளுடன் இணைந்து வருகிறது: 'பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்;, நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும.;" என்பதேயாகும்.

கிறிஸ்து பிறப்பில் இந்த இறைவாக்கு இன்று நிறைவேறுகிறது. பெத்லகேமில் கன்னிமரியிடம் பிறந்த இயேசுவில் பேரன்பும் உண்மையும் சந்தித்தன, நீதியும் நிறைவாழ்வும் முத்தமிட்டன, மண்ணிலிருந்து உண்மை முளைவிட்டது, விண்ணிலிருந்து நீதி கீழ்நோக்கியது. கிறிஸ்து எங்கே பிறந்தார் என்ற கேள்வியை எழுப்பும்போதும், உண்மை இவ்வுலகில் முளைத்தது என பார்க்கும்போதும். உண்மை இவ்வுலகில் கன்னிமரியிடம் பிறப்பெடுத்ததைக் காண்கின்றோம்.
'மண்ணினின்று உண்மை முளைத்தெழுந்தது. விண்ணினின்று நீதி கீழ்நோக்கியது." இறைத்தந்தையின் இதயத்தில் இருக்கும் உண்மை. உலகிலிருந்து முளைத்தெழுந்தது, ஏனெனில் அந்த உண்மை தாயின் உதரத்திலும் இருந்தது. உலகம் முழுமையையும் தாங்கிப்பிடிக்கும் உண்மை இம்மண்ணிலிருந்து கிளம்பி வந்தது, ஏனெனில் இது ஒரு பெண்ணின் கைகளிலிருந்து எழுந்து வந்தது. ஆகாயமும் அடக்கிக்கொள்ள முடியாத இந்த உண்மை இவ்வுலகில் எழுந்தருளி ஒரு மாடடைக் கொட்டகையில் படுத்திருக்கின்றது. மேன்மைமிகு சிறப்பு வாய்ந்த ஓர் இறைவன் இவ்வளவு தாழ்மையுடன் பிறப்பெடுப்பதால் அவருக்கு என்ன பயன்? எவ்வித பயனும் பலனுமில்லை. ஆனால், நாம் நம்பினால் அது நமக்குப் பயனுள்ளதாகும் என்பதைக் காட்டுகின்றது.

'நாம் நம்பினால்" இதுவே விசுவாச சக்தி. கடவுளே அனைத்தையும் படைத்தார், அவரே இயலக்கூடாததை இயலக்கூடியதாக்கினார். ஆம். மனு உருவானார். வரம்பற்ற அவரது அன்பின் ஆற்றல் மனிதர்களின் புரிந்துகொள்ளுதலையும் தாண்டி உருப்பெற்றது. முடிவற்றவர் குழந்தையாய் உருவெடுத்து மனித சமுதாயத்தில் நுழைந்தார். இருப்பினும் நாம்; எம் இதயக்கதவுகளைத் திறக்கவில்லையெனில். அவர்; எம் இதயத்திற்குள் நுழைய இயலாது. உண்மை பிறந்துள்ளது. இறைவன் பிறந்துள்ளார். இவ்வுலகம் கனியைத் தந்துள்ளது. 
கிறிஸ்துவின் பிறப்பின் நிகழ்வுகளை உற்றுக் கவனித்தால் அவை இன்று வசதியும் செல்வமும் பணபலமும் படைபலமும் ஆயுதபலமும் அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்பத்திறனும் மிக்க நமது சமுதாயத்திற்கு தேவையான பல பேருண்மைகளை தாங்கியனவாக உள்ளன.

கிறிஸ்துவினுடைய பிறப்பு மின்விளக்குகளும் மீடியாவெளிச்சமும் நிறைந்த சூழலிலோ, படிப்பறிவு நிறைந்த அறிஞர்களின் மத்தியிலோ, செல்வம் கொழித்த வசதிகள் மலிந்த குடியிருப்பிலோ நிகழாமல், ஆள் அரவமற்ற இருளான இடத்தில், கண்டுக்கொள்ளப்படாத ஆட்டிடையர்கள் மத்தியில், அசிங்கங்கமும் அழுக்குமான மாட்டுக் குடிலில் நிகழ்ந்தது. கடவுள் இவ்வாறு பிறந்தது, வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அவர் எதிரானவர் அல்ல. மாறாக, அவற்றில் மறைந்திருக்கும் முரண்பாடுகளையும், அவலங்களையும் சுட்டிக்காட்டி வாழ்வின் அவசியங்களின் மட்டில் நமது கவனத்தைத் திருப்புவதற்காகவே எனலாம்.
புதிய பொருளாதாரப் புரட்சியாக இருக்கின்ற உலகமயமாக்குதல் பல வளர்ச்சிகளை வென்றெடுத் துள்ளது. வசதிகளையும் வருவாயையும் பெருக்கித்தந்திருக்கின்றது. ஆனால் அவற்றின் பின்னணியில் உள்ள தளர்ச்சிகள், புறக்கணிப்புகள், மறுக்கப்படுதல்கள், மறக்கப்படுதல்கள் மற்றும் வேரறுக்கப்படுதல் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. ஆடம்பரங்களும், சொகுசு சாதனங்களும், தொலைத்தொடர்பு சாதனங்களும் அக்கறைக் காட்டப்பட்டு அத்தியாவசிங்கள், இன்றியமையாதவைகள் கண்டுக்கொள்ளப்படாமல் விடப்பட்டுவிட்டன. இதற்கு எடுத்துக்காட்டு குடும்ப உறவிலும் பாதிப்பு ஏற்படுத்திவிட்டுள்ளது. கணவனும் மனைவியுமாக கை நிறைய சம்பாதிக்க முடிகிறது. ஆனால் விவாகரத்து அதிகரித்துக் கொண்டேபோகிறது. பல அறைகள் கொண்ட மாளிகைப் போன்ற வீடுகள் மலிந்துக் கொண்டிருக்கின்றன, ஆனால் அதில் வாழத்தான் போதிய மனிதர்கள் இல்லை. குழந்தைகளுக்கு கேட்டதெல்லாம் கிடைத்துவிடுகிறது, ஆனால் பெற்றோரின் உடனிருப்பு கிடைப்பதில்லை. உயரமான கட்டிடங்கள், ஆனால் தாழ்வான எண்ணங்கள். வகைவகையான உணவுகள், ஆனால் அவை ஊட்டச்சத்து குன்றிப்போனவை. தொலைத்தூரங்களை இணைக்க கம்பளம் விரித்தாற்போல நெடுஞ்சாலைகள், ஆனால் அடுத்த வீட்டார் கண்டுக்கொள்ளப்படுவதில்லை. அலைபேசிக்கொண்டு யாரோடுயெல்லாமோ எங்கங்கோ இருப்பவர்களோடு பேசமுடிகிறது, ஆனால் அடுத்திருப்பவரோட உரையாட மனமில்லை. உணர்வே இன்றி உறங்குகின்றோமா? இது உறக்கமா? அல்லது மயக்கமா? மனிதவாழ்வு களவாடப் பட்டுள்ளதே! சிறைபிடிக்கப் பட்டுள்ளதே! இதனை வென்றெடுக்கவே மனுமகன் மனிதன் ஆனார் என்னும் பெருவிழாவை கொண்டாடும் நாம் ஓர் உறுதி கொள்வோமா? கிறிஸ்துவின் பிறப்பு, சாதி, சமயம், இனம், மொழி என்பவற்றை கடந்ததென்பதை எங்கும் எடுத்துரைப்போம் தடைகளைத் தகர்த்தெறிந்து கிறிஸ்துவிற்காய் எம்மையே அடுத்தவருக்கு தாரைவார்த்து கொடுப்போம். அப்போது எம்பணிக்காய் இமயமே இறங்கி வரும். கிறிஸ்துபிறப்பு விழா எம்மில் அர்த்தம் பெறும்.

ஆழமாகக் வடுக்களைத் தந்து காயமுறவைத்த, பிரிவினைகளைச் சுமக்கவைத்த போர் போய்முடிந்துள்ளஇன்நிலையில் தற்போது மெதுமெதுவாக நம்நாட்டிற்கு அமைதி மொட்டவிழ்கிறது   இவ்வோளையில் இயேசுவின் பிறப்பால் ஆசீர்வதிக்கப்பட்டு நாட்டுமக்களாகிய நாம் அன்பை எம்மண்ணில் வளர்த்து அனைவரும் ஒன்றிணைந்து நற்சமூகங்களை கட்டியெழுப்பி உண்மை மீதான மதிப்பு, மனிதருக்கான மாண்பு தளைத்தோங்கிட செய்வோம்.

அன்பும் உண்மையும், நீதியும் அமைதியும் சந்தித்தன. பெத்லகேமில் மரியன்னையிடம் பிறந்தவர், மனுக்குலத்திற்குள் மனுவுரு எடுத்துள்ளார். மனிதனாகப் பிறந்தார் இறைமகன், கடவுள் வரலாற்றில் தோன்றினார். அவரின் பிறப்பு அனைத்து மனித குலத்திற்கும் புது வாழ்வின் முளையானது. ஒவ்வொரு நிலமும் நல்நிலமாக மாறி, அங்கு அன்பு, அமைதி, உண்மை, நீதி ஏற்கப்பட்டு, முளைவிடட்டும். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்களும் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Thursday, November 14, 2013

விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படும்போது என்ன பதில் அளிப்பது.

17.11.2013
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நமக்குத்தரப்படும் பைபிள் பகுதியின் ஆரம்பவரிகள்:கோவிலைப் பற்றிச் சிலர் கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று பேசிக்கொண்டிருந்தபோது இயேசு, இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒருகாலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் என கூறுகின்றார்.

ஆரம்ப வரிகளில் இயேசு கோவிலின் அழிவு பற்றி பேசி, அதன் பின் உலகில் நிகழப்போகும் அழிவுகளைப் பற்றி கூறுகிறார். அவர் பட்டியலிட்டுக் கூறும் அவலங்களை அலசினால், இயேசு ஏதோ நாம் வாழும் இக்காலத்து நிகழ்வுகளை கூறுகிறார் போல் தெரிகிறது. இயேசு கூறும் அந்த அவலங்கள் இவை: கடவுளின் பெயரால் உலகம் அழியப்போகிறது. மக்களை வழிமாறிப் போகச் செய்யும் நடவடிக்கைகள். போர் முழக்கங்கள், குழப்பங்கள், நாடுகள் ஒன்றை ஒன்று எதிர்த்து எழுதல்;. பெரிய நிலநடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய். அச்சுறுத்தும் அடையாளங்கள் வானில் தோன்றுதல். இவை அனைத்தும் நாம் வாழும் இன்றைய நாட்களில் நம்மைச் சுற்றி நடப்பதை நாம் பார்க்கின்றோம். இந்த அவலங்களுக்கு, அழிவுகளுக்கு மத்தியில் கலங்காமல் இருங்கள் என்றும் இயேசு உறுதி சொல்கிறார்.

இயற்கையில், பொது வாழ்வில், நடக்கும் இந்த பயங்கரங்களைக் கூறிவிட்டு, பின்னர் நமது தனிப்பட்ட வாழ்வை, குறிப்பாக, தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் இயேசு. அங்கும் அவர் சொல்பவை அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒரு பட்டியல்தான்: நீங்கள் விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்;. உங்கள் குடும்பத்தினரே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்;. உங்களுக்கு எதிராக சான்று பகர்வார்கள்;. உங்களுள் சிலரைக் கொல்வார்கள்;. என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள் என்று இயேசுவும் இந்த உலகத்தைப் பற்றிய கசப்பான உண்மைகளைச் சொல்கிறார்.

முக்கியமாக, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரவிருக்கும் சவால்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக்குகிறார் இயேசு. தனக்குச் சீடர்கள் வேண்டும், தன்னைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், கசப்பான உண்மைகளைச் சொல்லத் தேவையில்லை. தொண்டர்களைத் தவறான வழிநடத்தும் தலைவர்கள், எதிர்வரும் ஆபத்துக்களைச் சொல்லத் தயங்குவார்கள். அப்படியே ஆபத்துக்கள் வரும் போதும், உண்மைப் பிரச்சனைகளிலிருந்து அவர்களைத் திசைத் திருப்பி, வெறியூட்டும் பாகுபாட்டு உணர்வுகளை வளர்த்து, தேவையில்லாமல்உயிர்களைப் பறிக்கும் வழிகளைத் தான் காட்டுவார்கள். உறவகளை பிரிப்பார்கள். இந்தப் போலித் தலைவர்கள். இயேசுவின் வழி மாறுபட்ட வழி.

இன்று தரப்படும் பைபிள் பகுதியின் இறுதியிவரிகளில்  இயேசு அறுதல் தரும் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறார். என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது". இன்று நாம் முழு மனித வாழ்கை வாழ்வதில் பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறோம். மனித நேயத்தோடு வாழும்போது பல இழப்புக்களை சந்திக்கின்றோம். நற்செய்தி விழுமியங்களை முதன்மைப்படுத்தி வாழ்ந்தால் ஏராளம் தொல்லைகள் எமக்கு வருகின்றன. ஒதுங்கி வாழ்ந்தாலும் வாழ முடியாத நிலை. பின் வாங்கி வாழ்ந்தால் சூழ்ச்சி செய்கிறார்கள். இயேசுவை நம்பி வாழ்கிற மனிதனுக்கு துன்பங்கள் இழப்பகள் அதிகம். அவமானங்கள் ஏராளம். இயேசுவிற்காக வாழும்போது பலர் எம்மை தூற்றலாம். உறவுகள் நம்மைப் புறக்கணிக்கலாம். குடும்பமே எம்மை காட்டிக்கொடுக்கலாம். நாம் சலுகைகளை இழக்கலாம். எமக்குபதவிகள் இல்லாமல் போகலாம். காவல் நிலையமும் நீதி மன்றமும் இழுக்கப்படலாம். சிறையில் அடைக்கப்படலாம்; துன்புறுத்தப்படலாம். என்; பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் விசாரணைக்காக இழுத்துச் செல்லப்படலாம்;. 

எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.  அஞ்சவேண்டாம். கலங்க வேண்டாம். பயப்பட வேண்டாம். உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது என்கிறார் இயேசு. எனவே நமக்குத் தேவை மன உறுதி, கடவுள் நம்பிக்கை. துணிந்து செயல்படுவோம் இயேசு நம் வாழ்வை காத்துக்கொள்வார் என வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம். விசாரணைகள் விலகிப்போகும். வெற்றி உறுதி.

Thursday, September 19, 2013

தலைவர்களே, அனைவரும் வாழ்வுபெற பரந்த மனத்தோடு, பலரையும் உற்று நோக்குங்கள்.

22.09.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
இன்று நமக்குத்தரப்படும் பைபிள் பகுதியில் இயேசு மூன்று அறிவுரைகளை நமக்குத் தருகிறார் முதலாவது நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். நம்மிடத்தில் உள்ள திறமைகள், ஆற்றல்கள், குறிப்பாக பணம். இவற்றைக் கொண்டு நல்ல நண்பர்களை, குறிப்பாக மறுவுலக வாழ்வுக்கான நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். எனவே, செல்வம் சேர்த்து வைப்பதற்கல்ல. மாறாக, இறைவனுக்காகப் பயன்படத்துவதற்காக. அதை மனதில் கொள்வோம்.

இரண்டாவது நேர்மையற்ற செல்வத்தைக் கையாள்வதிலேயே நம்பத்தகாதவராய் இருந்தால், உண்மைச் செல்வத்தை யார் ஒப்படைப்பார்? எனவே, நிதியை, குறிப்பாக பொது நிதியைக் கையாள்வதில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். நிதியை நேர்மையோடு கையாள்பவர் மற்ற அனைத்தையும் கையாள்வதில் நம்பிக்கைக்குரியவராய் இருப்பார்.

மூன்றாவது ஒரு வேலையாள் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது.ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்,அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.'நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது." ஏன எடுத்துக்காட்டுகின்றார். கடவுளையும், காசையும் நாம் வழிபட முடியாது. செல்வத்தின்மீது அதிகப்பற்றுகொள்வது சிலைவழிபாட்டுக்கு ஒப்பானது. எனவே, செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக்காமல் வாழ்வோம்.

இயேசு இன்று செல்வத்திற்குப் பணிவிடை செய்வது குறித்தும் பேசியிருக்கிறார். 'கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது." என்று இயேசு கூறும் வார்த்தைகளைக் கேட்கும்  இன்றைய தலைவர்களும் தொண்டர்களும் ஏளனமாய்ச் சிரித்துக் கொள்வார்கள். 'கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது" என்று யார் சொன்னது. நாங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்கிறோம். ஏனெனில் எங்கள் கடவுளே செல்வம்தான், என்று சொல்கிறார்கள் இவர்கள். இங்கு கடவுளுக்கு இணையாக உயிரற்ற ஒரு பொருளை இயேசு முன் வைக்கிறார். இது சாத்தியமாகுமா? சாத்தியமாகியுள்ளது, சரித்திரமாகியுள்ளது. கடவுளுக்குப் பதில் செல்வத்தைக் கடவுளாக்கி, வழிபடும், பணிவிடை செய்யும் பலரை நாம் இன்று பார்க்கின்றோம். இயேசுவின் இந்தக் கூற்று செல்வத்திற்கு எதிராக, செல்வத்தைக் கண்டனம் செய்து பேசப்பட்டதாகத் தோன்றலாம். செல்வம் சேர்ப்பது, செல்வத்தைப் பகிர்வது, செலவிடுவது இவைகளை இயேசு குறை கூறவில்லை. செல்வத்திற்குப் பணிவிடை செய்வதையே அவர் தவறு என்று எச்சரிக்கிறார். செல்வம் என்ற உயிரற்றப் பொருள் நமக்குப் பணிவிடை செய்யவேண்டும். இதுதான் இயற்கை. அதற்குப் பதிலாக, உயிரற்ற செல்வத்திற்கு உயிரும், அறிவும் கொண்ட நாம் பணிவிடை செய்வது தவறு என்று இயேசு எச்சரிக்கிறார்.

'எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது" என இன்று இயேசு கூறும் இவ் வார்த்தைகளை எம் இன்றைய அரசியலுடன் கொஞ்சம் சிந்திக்க தூண்டுகிறது. எம் பகுதி இன்று தேர்தல் முடிவுகளை சந்தித்து எம்மை வழிநடத்த ஒரு தலைவரை எதிர்பாத்திருப்பதால், இவ்வரிகளை ஓரளவு சிந்திப்பது பயனளிக்கும். இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னபோது, உண்மையான தலைவன், உண்மையான பணியாளரைப் பற்றி அவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். நல்ல பண்புகள் உள்ள ஒருவரைத் தலைவராக தெரிவுசெய்து ஏற்றுக் கொள்ளும் பணியாளர், அத்தலைவன் மீது உள்ள மதிப்பினால், அன்பினால் அவருக்குப் பணிவிடை செய்வார். தலைவன் தரும் பணம்;, அல்லது பிற பயன்கள் இவைகளுக்காகச் செய்யப்படும் பணிவிடை அல்ல தொண்டரின் பணி. இவைகளை எல்லாம் தாண்டி, பணியாளரின் பணிவிடை அமைந்திருக்கும். 'எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது" என்ற இயேசுவின் கூற்று, இன்றுவரை நாம் சந்தித்த நமது அரசியல் தலைவர்கள், தொண்டர்களுக்குப் பொருந்தாது. இந்தத் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் வேறொரு தெய்வத்திற்குப் பணியாளர்கள். பணம் என்ற தெய்வத்திற்கு இவர்கள் அனைவரும் பணிவிடை செய்கிறார்கள். செல்வத்தைக் கொண்டு பிறரன்புச் செயல் புரிகின்ற தலைவர்களை மக்கள் என்றும் நிலையாக தம் உள்ள உறைவிடங்களில் உறுதியாக வைத்திருப்பார்கள் என்பது வரலாறு. எனவே தலைவர்களே, அனைவரும் வாழ்வுபெற பரந்த மனத்தோடு, பலரையும் உற்று நோக்குங்கள்.

Friday, July 12, 2013

'அடுத்திருப்பவர்" என்ற சொல்லுக்கு உயிருள்ள ஓர் எடுத்துக்காட்டைத் உருவாக்கி நல்ல சமாரியராவோம்

14.07.2013  ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
நல்ல சமாரியர் என்னும் உவமைக் கதைவழியாக இயேசு இன்று நம்முடன் பேசுகின்றார்: 'ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை கள்வர்; உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். பணிவிடை செய்தார்" இது உவமைக் கதையின் சுருக்கம்.

Good Samaritan  என்ற சொற்களை Google தேடலில் தேடும்போது,0.21நொடிப் பொழுதில் 24400000 விவரங்கள் தோன்றின. இவற்றில் பல இலட்சம் விவரங்கள் 'நல்ல சமாரியர்" என்ற பெயர்தாங்கிய மருத்துவமனைகளும்,பிறரன்பு நிறுவனங்களும்ஆகும். இத்தேடலில் குறிப்பிடத்தக்க விடயம் 'நல்ல சமாரியர்" என்ற பெயரில் பல நாடுகளில்; சட்டங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. அமேரிக்கா, கனடா,மற்றும் ஐரோப்பாவின் பலநாடுகளில்'நல்ல சமாரியர்"என்ற பெயரில் சட்டங்கள் உள்ளன.இந்நாடுகளில் பொதுவிடங்களில் யாரேனும்அடிபட்டால், என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பனவற்றை விளக்கும்விதிகள் இந்த'நல்ல சமாரியர்"சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளன.

இவ்வருடம் பிப்ரவரி 5நாள் அமெரிக்காவின் நியூயார்க், நகருக்கருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ஒரு நிகழ்வை இங்குகுறிப்பிடலாம: Pedro Lugo - பிற்றோ லூகோ என்ற 69 வயது மனிதர், கார் பழுதடைந்ததால் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தவித்துக்கொண்டிருந்த ஒரு மாற்றுத் திறனாளியான பெண்ணுக்கு உதவி செய்தார். அப்பெண்ணின் காரை சரி செய்ய உதவினார். பின்னர் பிற்றோ தன் காரில் ஏறி மீண்டும் நெடுஞ்சாலைக்குள் நுழைந்தபோது, வேகமாக வந்தஒரு பாரஊர்தி பிற்றோவின் கார்மீது மோதியது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்வழியில் பிற்றோ உயிர்துறந்தார். கனடாவின் Vancouver நகரில் குற்றம்புரிந்த ஒருவரைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க உதவியவரை 'நல்ல சமாரியர்"என்ற அடைமொழியால் குறிப்பிட்டனர். அவ்விருசெய்திகளுக்கு நாளிதழ்கள் தந்த தலைப்புக்கள்: ““Good Samaritan dies after helping disabled.”, “ Good Samaritan helped nab suspec in Vancouver…” 21 நூற்றாண்டுகள் ஆகியும் இயேசுவின் இந்த உவமை கத்தோலிக்கம் என்ற வட்டத்தைத் தாண்டி மக்கள் மனங்களில் தூண்டுதலாய் உள்ளது தெளிவாகிறது. 

இந்த உலகப் புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்" உவமை பிறந்த பின்னணி லூக்கா நற்செய்தியில் பின்வருமாற கூறப்பட்டுள்ளது: திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், 'போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். இவ்வாறு  இவ்வுவமையின் பின்னணி ஆரம்பமாகிறது. இயேசுவிடம் எவ்வகையிலாவது குறைகாண வேண்டும் என்ற ஆவலில் திருச்சட்ட அறிஞர் கேள்வியைத் தொடுத்தாலும், இயேசு அந்த வாய்ப்பை நழுவவிடாமல், அற்புதமானதொரு உலகப் புகழ்பெற்ற உவமையைக் கூறினார். தொடக்கத்தில் கேட்ட கேள்வி நிலை வாழ்வைப்பற்றியது. முடிவில் சொன்ன பதில் இரக்கம் என்று. இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் வருவது அயலான். இந்த அயலானைப்பற்றி தெழிவாக புரிந்துகொண்டால் தொடக்கமும் முடிவும் சரியாகிவிடும்.

நல்லவர்-கெட்டவர் என்ற அடையாளங்களை ஒவ்வொருவர்மீதும் பதிப்பது இயேசுவின் எண்ணம் அல்ல. 'அடுத்திருப்பவர்" என்ற சொல்லுக்கு உயிருள்ள ஓர் எடுத்துக்காட்டைத் தருவது ஒன்றே இயேசுவின் எண்ணமாக இருந்தது. சமுதாயத்தில் நல்லவர்-கெட்டவர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், படித்தவர்-படிக்காதவர்,வெள்ளை-கறுப்பு, அவர்-இவர் என்று அடையாளங்களை ஆயிரக்கணக்கில் நாம் உருவாக்கி விட்டதால் 'அடுத்தவர்" என்ற அடிப்படை அடையாளத்தைக் கண்டுபிடிக்க இயலாமல் நாம் தவிக்கிறோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு 'அடுத்தவர் " என்ற அடிப்படை அடையாளத்தை மறைக்கும் அளவுக்கு நாம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் வேறு பல அடையாளங்களை அவர்கள் மீது ஒட்டிவிடுகிறோம். பின்னர் 'அடுத்தவர் எங்கே?" என்ற தேடலில் இறங்குகிறோம். இந்த அடையாளங்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்காமல் 'மனிதர்" என்ற ஒரே காரணத்திற்காக  மற்றவர் மீது பரிவுகொண்டு உதவிகள் செய்ய முன்வருபவர்களும் 'அடுத்தவர்' அகின்றனர். அவர்களே 'நல்ல சமாரியர்"

Thursday, July 4, 2013

இயேசுவிற்காய் ஓநாய்கள் மத்தியில் நடை போடக்கூடிய ஆட்டுக் குட்டிகளாவோம்

07.07.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

'அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.  புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்" இயேசு; சீடர்களுக்கு கூறும் பைபிள் பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது.  அத்துடன் தேவ அழைத்தலுக்காக வேண்டும்படி எமக்கு சொல்லப்படுகின்றது. தேவ அழைத்தல் என்றதும், குருக்கள், துறவறிகள் என்ற குறுகிய கண்ணோட்டம் நம் மனதில் எழுவதுன்டு. 'அறுவடைக்கு வேலையாள்கள் தேவை" என்று இயேசு கூறியது குருக்கள், துறவியரைக் குறித்து மட்டும் அல்ல. மாறாக, மக்களின் மனங்களில் இறையரசின் கனவுகளை விதைத்து, அதன் பலன்களை அறுவடை செய்வதற்கு துணிவுடன் முன் வரும் அத்தனை வேலையாள்களையும் நினைத்தே இயேசு இந்த வரிகளைச் சொல்லி இருப்பார்.

இறை நற்செய்தியைப் பரப்புவதற்கு 'ஓநாய்கள் மத்தியில் செல்லக்கூடிய ஆட்டுக் குட்டிகள்" இயேசுவுக்குத் தேவை. ஆடுகள் அல்ல, ஆட்டுக் குட்டிகள். ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டிகளா?  என்ன விபரீத விழையாட்டு இது. ஆனால், வரலாற்றில் இத்தகைய விபரீதங்கள் வீரக் கதைகளாகத் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது நமக்குத் தெரியும்.

நீள, அகல, உயரம் என்று எல்லாப் பக்கங்களிலும் அளவுக்கதிகமாய் வளர்ந்திருந்தான் கோலியாத்து. அவனது தோற்றம் பற்றி நாம் படித்திருக்கின்றோம். அந்த மனித மலையோடு மோத, தன் மீது தற்காப்புக்காகப் போடப்பட்ட கவசங்களை எல்லாம் கழற்றிவிட்டு, கையில் கவணும், கல்லும் எடுத்துப் புறப்படும் தாவீதுவை நாம் எண்ணிப்பார்க்கலாம். சிறியவன்; தாவீதுக்கு எங்கிருந்து இந்த வீரம் வந்தது? தன்னையும், தன் ஆடுகளையும் இரத்த வெறி பிடித்த மிருகங்களிடம் இருந்து காத்த இறைவன், இந்த மனித மிருகத்திடமிருந்து தன்னையும், தன் மக்களையும் காப்பார் என்ற அந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான். ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டி செல்லுமா? தாவீது சென்றார். வெற்றிகொண்டான்.

'யார் இந்த அரை நிர்வாண பரதேசி?" என்று ஆங்கில அரசு ஏளனமாக விவரித்த காந்தியடிகள் பற்றி எமக்குத்தெரியும். அரை நிர்வாணமாய், நிராயுத பாணியாய் சென்று அந்த ஆட்டுக் குட்டி, அந்த ஓநாய்களின் அரசை எவ்வளவு தூரம் ஆட்டிப் படைத்ததென்பது நமக்குத் தெரிந்த வரலாறு.

ஓநாய்கள் மத்தியில் ஆட்டுக் குட்டிகள் செல்லுமா? வழக்கமாய் செல்லாது. ஆனால், அந்த ஆட்டுக் குட்டிகள் மனதில் நம்பிக்கை இருந்தால், ஓநாய்கள் மத்தியில் தலை நிமிர்ந்து வீர நடை போடும். இப்படி, நம்பிக்கையோடு ஓநாய்கள் மத்தியில் நடை போடக்கூடிய ஆட்டுக் குட்டிகள் இயேசுவுக்குத் தேவை. ஓநாய்கள் மத்தியில் போக வேண்டும் என்பது உறுதியாகி விட்டது. சரி அதற்குத் தகுந்தது போல், எல்லா ஏற்பாடுகளும் செய்து கொள்ள வேண்டாமா? கோலியாத்தை எதிர்த்துச் செல்லும் போது, ஒரு கவசம், ஒரு கேடயம், ஓர் ஈட்டி, குறைந்தது ஒரு கத்தி? ஒன்றும் வேண்டாம் என்கிறார் இயேசு. 'பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம்." என்கிறர் இயேசு.

தூங்குவதற்கும் கூட திட்டங்கள் தீட்ட வேண்டிய இக்காலகட்டத்தில் இயேசு சொல்வதை எண்ணி சிரிப்பதா? வியப்பதா? தெரியவில்லை. நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு நிபந்தனை. ஆனால், ஆர அமர, ஆழமாக சிந்தித்தால், இயேசுவின் இந்தக் கூற்றில் உள்ள உண்மைகள் புரியும். உலகத்தில் பெரும் பகுதிகளை வென்று, ஏராளமாய் பொருள்களைத் திரட்டி வைத்திருந்த மாவீரன் அலெக்சாண்டர் இதே கருத்தைத் தானே தன் இறுதி மூன்று ஆசைகளாகச் சொல்லிச் சென்றார். அதிலும் சிறப்பாக, தனது இறுதிப் பயணத்தில் தனது வெறும் கைகளைத் சவபெட்டிக்கு வெளியில் மக்கள் பார்க்கும் படி வைக்கச் சொன்னது நமக்கு ஒரு பாடம்தானே. வெறும் கையோடு செல்லுங்கள், எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கூறும் இயேசு கொடுக்கச் சொல்கிறார். நீங்கள் நுழையும் இடத்தில் எல்லாம் சமாதானம் என்ற ஆசீரைக் கொடுங்கள் என்கிறார். இயேசுவின் அழைப்பை ஏற்று, உழைக்க முன்வந்து விட்டால், அவரது அரசை விதைத்து, அறுவடை செய்ய துணிந்து விட்டால். ஓநாய்கள் நடுவிலும் துணிவோடு செல்ல வேண்டும், அந்தத் துணிவு, இறை நம்பிக்கையிலிருந்து வர வேண்டும், இந்த நம்பிக்கை ஒன்றை மட்டும் சுமந்து செல்வோம். சமாதானத்தை அனைவருக்கும் வழங்குவோம்.

பாதைமாறமல் பயணங்கள் தொடர பரமனிடம் பணிவோம் ' "

 30.06.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
1519ம் ஆண்டு ர்நசயெனெழ ஊழசவநள (கெர்நாண்டோ கோர்ரெஸ்) என்ற படைத் தளபதி க்யூபாவை விட்டுத் தன் தொண்டர்களுடன் மெக்சிகோ வந்து சேர்ந்தார். தன்னைப் பின் தொடர்ந்தவர்கள் மெக்சிகோவில் மேற்கொள்ள விருக்கும் போராட்டங்களுக்காகப் பயந்து, மீண்டும் க்யூபாவிற்குத் திரும்பக் கூடாதென, அவர்கள் வந்தக் கப்பலை எரித்து விட்டார். துணிந்த பின் மனம் திரும்பிப் பார்க்கக் கூடாதென்ற கருத்தை வலியுறுத்த, இந்த நிகழ்வைச் அன்றைய பத்திரிகைகள் சுட்டிக் காட்டின. 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல"  என்று இயேசு கூறிய இந்த வரிகளைச் அறிந்து தன் பணியின் பெற்றிக்காக அவ்வாறு செயற்பட்டிருக்கலாம் அந்த தளபதி.
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் சீடத்துவத்தைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றது .இயேசு தன் சீடர்களுக்கு விடுக்கும் அழைப்பு நிபந்தனைகள் நிறைந்தது. அனைத்தையும் துறந்து தன்னைப் பின்செல்ல வேண்டும் என்ற அழைப்பை ஏற்றுத்தான், அவரது முதல் சீடர்கள் படகுகளையும், வலைகளையும் விட்டுவிட்டுச் சென்றனர் என்று நாம் தொளிவாக அறிந்திருக்கின்றோம்.. இப்போதோ, இன்னும் சில சீடர்கள் முன் வருகின்றனர். ஆனால், இயேசு அவர்களுக்குத் தம் நிபந்தனைகளை எடுத்துரைக்கிறார்: மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடம் இல்லை. எனவே, அவரது சீடர்களும் இடம், பொருள், மனிதர்கள் மீது பற்று கொண்டிருக்கக் கூடாது. எங்கும், எப்போதும் செல்ல கூடிய மனநிலை கொண்டிருக்க வேண்டும். எளிய வாழ்வு வாழ வேண்டும். தமது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் பற்றி அதிகக் கவலை படக்கூடாது. அவர்களை இறைவன் பார்த்துக்கொள்வார். சீடரின் பணி தலைவரைப் பின்பற்றுவதே. தனது அழைத்தலை விட்டுவிட்டுக் கடந்த கால வாழ்வுக்குத் திரும்பிச் செல்லும் எண்ணம் கொண்டிருக்கக் கூடாது. எதிர்காலம் பற்றிய கவலையோ, கடந்த காலம் பற்றிய ஏக்கமோ கூடாது. நிகழ்காலத்தில் இயேசுவோடு வாழ வேண்டும். நமது அழைப்பு என்ன? நமது தடுமாற்றங்கள் எதில் இருக்கின்றன என்று ஆய்வு செய்து, நிபந்தனையற்ற விதத்தில் இயேசுவைப் பின்பற்றவேண்டும்

இன்று நற்செய்தி பார்க்கின்ற மூன்று மனிதர்கள் இயேசுவிடம் வந்து அவரது சீடராய் வாழ விருப்பம் தெரிவிக்கின்றனர். இவர்கள் மூவரும் எம்மையே பிரதிபலிக்கின்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும். நாமும் இயேசுவின் சிறந்த சீடர்களாய் வாழ விரும்புகிறோம். நமக்கும் நல்ல எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள் அவ்வப்போது எழுகின்றன. ஆனால், பல தடைகள் நம்மை ஈர்க்கின்றன. சீடராய் வாழவிடாமல் தடுக்கின்றன. எனவே, நாமும் அந்த மூன்று மனிதர்களைப் போல சாக்குபோக்குகளைக் கண்டுபிடிக்கிறோம். முதலில் என்னுடைய வீட்டுக் கடமைகள் முடியட்டும், அல்லது இந்தப் பணிகளை ஆற்றிவிட்டு அதன்பின் நான் முழு நேரமாக இறைபணியில் ஈடுபடுவேன் என்றெல்லாம் எண்ணுகின்ற நல்ல உள்ளங்கள் பல இருக்கின்றன. ஆனால், இயேசு ஒரு தெளிவைத் தருகின்றார்: அனைத்திற்கும் மேலாக ஆண்டவரைத் தேடுங்கள். அவருக்குப் பணி புரியுங்கள். மற்ற அனைத்தையும் அவரே உங்கள் பொருட்டு பார்த்துக்கொள்வார். எனவே, பல்வேறு பணிகளுக்கு மத்தியில் இயேசுவின் சீடராய் வாழ விரும்பும் நாம் அனைத்திற்கும் மேலாக இயேசுவையே முதற் கடமையாகக் கருதுவோம். மற்ற கடமைகளையெல்லாம் அவரே பார்த்துக்கொள்வார்.
நல்லது ஒன்று செய்ய வேண்டும் என்று மனதில் பட்டால், அதை உடனடியாகச் செய்து விடுவது மிகவும் நல்லது. இயேசுவைப் பின் பற்றுவது, அவரைப் போல வாழ முற்படுவது மிக, மிக நல்லதொரு எண்ணம். அந்த எண்ணம் மனதில் தோன்றினால், தாமதிக்க வேண்டாம். ஒன்றே செய்யினும், நன்றே செய்க் நன்றே செய்யினும், இன்றே செய்க என்னும் வாக்கை நாம் எமதாக்கவேண்டும்.
இன்று வாசகத்தில் இயேசுவின் பதில்கள் இரண்டு முரண்பட்ட நிலைகளைக் காட்டுகின்றன.  ஒருவருக்கு பதிலாக, தலைசாய்க்க கூட இடமில்லையென்றுறுவதும், மற்றவருக்கு உடனே என்னைப் பின்செல் என்றும் கூறுவதையும் காட்டுகின்றது. இருவேறு நிகழ்வாக இருந்தாலும், யாருக்கு என்ன பதில் என்பதனை பார்த்தால் சிறப்பு அழைப்பு அல்லது அவரவர் என்ன செய்ய பணிக்கபட்டு இருக்கிறார்களோ அதனை தான் செய்ய வேண்டும். நமக்கு அண்டவருடைய திட்டம் என்ன எதற்காய் அழைப்பு பெற்று இருக்கின்றோம் என்பதனை அறிந்து தெரிந்து செயல்படுவதுவே விவேகமானது.
நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும் என்றால், நாம் நமக்கு பிடித்த பல விடயங்களை, கெட்ட எண்ணங்களை விட்டு அவர் பின் செல்ல வேண்டும். மற்றவர்கள் மேல் உள்ள பொறாமையும், அதிருப்தியும், விருப்பமின்மையும் நாங்கள் தூக்கி எறியவேண்டும். யாரும் எங்களை ஏற்று கொள்ள வில்லையாயினும், அதனை ஏற்று கொண்டும் நாம் இயேசுவை பின் செல்ல வேண்டும். நமது எண்ணங்களை மற்றவர்கள் கட்டுபாட்டுக்குள் விட கூடாது. நமது காலணியில் உள்ள அழுக்கை துடைத்து எறிய வேண்டும் என்றால், நமது தீய எண்ணங்களை துடைத்து விட்டு, இயேசுவின் மகிழ்வில் நிலைத்திருக்க வேண்டும். இயேசுவைப் பின்தொடரும் பயணம் ஒரு கலப்பையில் கை வைத்து உழுகின்ற சிறப்பான தொழில். பின்னால் திரும்பிப் பார்த்தால் தொழிலில் சுத்தம் இருக்காது. கவனம் சிதறும். பாதை மாறும். பல சிக்கல்கள் வந்துவிடும். இயேசுவின் வழிகாட்டுதலை மனதில் கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். அது வெற்றியில், மகிமையில் முடியும்.


23.06.2013 ' " இயேசு வாழும் கடவுளின் மகன் என எமது வாழ்வால் காட்டுவோம்
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
'நான் யார்?" என்ற கேள்வியை நாம் பலதடவைகள் எம்மிடமோ, பிறரிடமோ? கேட்டிருக்கின்றோம். 
அன்று இயேசுவிற்கும் இந்தக் கேள்வி எழுந்தது. இக் கேள்வியை கேட்பதன் மூலம் தான் யார் என்பது பற்றி இயேசு ஒரு சுய ஆய்வு மற்றும் பொது ஆய்வு நடத்தி தம்மை அறிந்து கொள்ளிறார் எனலாம். 21 நூற்றாண்டுகளாக மனிதர்கள் 'இந்த இயேசு யார்?" என்னும் கேள்விற்கு விடைதேடுகின்றனர். இக்கேள்விக்குப் பதில் என்ன?. இயேசு, மக்களும் சீடர்களும் தம்மை யார் என்று கூறுகிறார்கள் என்னும் கேள்வியைக் கேட்கிறார். இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் தருகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசுவின் இந்த இரு கேள்விகள் நாம்  கவனிப்போம்: 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" 'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"

இரண்டாயிரம் வருடங்களாக மனித வரலாற்றில் அதிகமான,ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம் அல்லது முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. ஈராயிரம் ஆண்டுகளில் மனித வரலாற்றை இத்தனை ஆழமாகப் பாதித்துள்ளவர்கள் ஒரு சிலரே. மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? என்று நோக்கினால் என்னென்னவோ சொல்லி விட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள். நல்லதும் பொல்லாததும். உண்மையும் பொய்யும். விசுவாசச் சத்தியங்களும் கற்பனைக் கதைகளும். ஓர் இறைவாக்கினர் எனவூம் அளவுக்கதிகமாகவே சொல்லி விட்டார்கள். ஆனால் இவ்வளவு சொல்லியும் இயேசுவைப் பற்றி முழுமையாக மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இயேசு இவர்தான், இப்படித்தான், என்று இலக்கணம் சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை,வரையறைகளை, வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். எனவே சிறு வயது முதல் நாம் பயின்றவைகளை எல்லாம் பட்டியலிட்டு இயேசு கேட்ட அந்த முதல் கேள்விக்குப்: 'நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" பதில் ஒப்பித்து விடலாம்.

'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" இந்தக் கேள்வி நமக்குத் தான் தரப்படுகின்றது. இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. முதலில் நாம் இயேசுவை யார் என அடையாளம் காணவேண்டும். இயேசுவின் மன நிலை நமது மன நிலையாக மாற வேண்டும்;. இயேசுவின் வாழ்க்கைப் பாணி நமது வாழ்க்கைப் பாணியாக மாற வேண்டும். அப்போது நாம்: 'நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்னும் கேள்விக்கு நம் வாழ்க்கையாலே பதிலளிக்க முடியும்.  நாம் படித்தவைகளை விட பட்டுணர்ந்தவைகளே இந்தக் கேள்விக்குப் பதிலாக வேண்டும். நாம் மனப்பாடம் செய்தவைகளை விட மனதார நம்புகிறவைகளே இந்தக் கேள்விக்கான பதிலைத் தரமுடியும். இந்தக் கேள்வி நம்மில் பலருக்கு சங்கடங்களை உருவாக்குகின்றன என உணர்ந்தால் அது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. 'என்னைப் பற்றிப் புரிந்து கொள். என்னைப் பற்றிக் கொள்" என்று இயேசு விடுக்கும் அழைப்பு. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க அவரைப் போல் நடக்க பகலானாலும், இரவானாலும் மழையானலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு மனதின் ஆழத்திலிருந்து வரட்டும் நம் பதில்கள்.

இயேசுவை அறிந்துகொள்ளும் இரு வழிகளை இன்றைய நற்செய்தி நமக்கு வழங்குகிறது. சொந்த ஈடுபாடு எதுவூம் இல்லாமல் இயேசுவைப் பற்றிய கருத்துக்களைத் திரட்டுவது முதல் வழி. 'மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று இயேசு கேட்டபோது இந்த முதல் வழியில் திரட்டிய பதில்களைச் சீடர்கள் இயேசுவிடம் கூறினர். பின்னர் இயேசு தன் சீடர்களிடம் 'ஆனால் நீங்கள்இ நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். சீமோன் பேதுருஇ 'நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்" என்கின்றார்;. பேதுருவின் பதில் வெறும் கருத்துக்களைத் தாண்டி விசுவாசத்தின் அறிக்கையாக இங்கு ஒலிக்கிறது.
இன்று எங்களிடம் இயேசு, 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?"என்ற இதே கேள்வியைக் கேட்கிறார் என வைத்துக்கொண்டால்: இயேசுவின் கேள்விக்கு தாராள மனதோடும் துணிவோடும் பேதுருவின் விசுவாச அறிக்கைக்குப் பதிலாக நாம் உலகிற்கு இயேசு மெசியா வாழும் கடவுளின் மகன்" என எமது வாழ்வால் காட்டுவோமா?

16.06.2013 ' "பிறரின் குற்றங்களை மன்னித்து கடவுளின் அன்பின் பொருட்டு ஏற்றுக்கொள்வோம்.
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
பரிசேயரகிய சீமோன் வீட்டில் இயேசு விருந்து உண்பதற்கு வருகிறார். அப்போது அங்கே அழையாத ஒரு விருந்தினர் வருகிறார். அது ஒரு பெண். அப்பெண் எந்தவொரு வார்த்தைகூட பேசவில்;லை. ஆனால் அவர் செய்த செயல்களை அற்புதமானவை.

இக்காலத்தில் பரிசேயர்கள் விருந்து உண்பதற்கு ஒருமரபு  முறையை வைத்திருந்தார்கள்: 'விருந்தினர் ஒரு மேசை முன் அமர்ந்து, தலையணையில் சாய்ந்த நிலையில் இடது முட்டுக்கையை ஊன்றிக் கொண்டு வலது கையால் உணவை எடுத்து உண்பர். அப்போது விருந்தினரின் கால்கள் மடக்கப்பட்ட நிலையில் அவர்களின் காலடிகள் பின்புறம் தெரியும்" இதனால்தான் அந்தப் பாவியான பெண் இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் அழுதுகொண்டே நின்றார். தன் வாழ்க்கை பாழாகிப் போனதே என்னும் மனக் கவலையால் அவர் அழுதாரா? புதியதொரு வாழ்வைத் தொடங்கவேண்டும் எனத் தீர்மானித்து, தன் தவறுகளை நினைத்து மனம் வருந்தி அழுதாரா? தெரியவில்லை ஆனால் அவர் தேடி வந்தது இயேசுவைத்தான் அவரை கண்டுகொள்கிறார். உணவருந்திக் கொண்டிருந்த இயேசுவின் காலடிகளின் அருகில் நின்று அழுததால் கண்ணீர்த் துளிகள் இயேசுவின் பாதங்களை நனைக்கின்றன. நனைந்த இயேசுவின் காலடிகளைத் தன் கூந்தலால் துடைக்கின்றார். இயேசுவின் பாதங்களை முத்தமிடுகிறார். தன் கையிலிருந்த படிகச் சிமிழிலிருந்து நறுமணத் தைலத்தை எடுத்து இயேசுவின் காலடிகளில் கரிசனையோடு பூசுகின்றார்.

இச்சம்பவம் உண்மையிலேயே வியப்புக்குரியதுதான். விருந்து நடக்கும்போது அங்கே நுழைவதற்கு அப்பெண்ணுக்கு அனுமதி இருக்கவில்லை. அதுவும் சட்ட நுணுக்கங்களைத் துல்லியமாகக் கடைப்பிடித்த பரிசேயர் ஒருவர் அன்று பாவியான பெண்ணை வீட்டில் ஏற்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. மேலும், இறைவாக்கினர் என மக்களால் கருதப்பட்ட இயேசுவிடம் சென்று அவருடைய காலடிகளை அப்பெண் தொட்டார் என்பது நினைத்துக் கூட பார்க்கமுடியாத இன்னும் ஒரு பெரிய தவறு, எல்லை மீறல் ஆகும். ஆனால் இயேசு அப்பெண்ணின் இதயத்தில் புதைந்துகிடந்த சிந்தனைகளை நன்கறிந்திருந்தார். அப்பெண்ணின் உள்ளத்தில் எழுந்த அன்பும் நம்பிக்கையும் இயேசுவுக்கு வெளிச்சமாகிறிருந்தன். எனவே இயேசு பாவியான அப்பெண்ணைப் போற்றிப் பேசுகின்றார். இயேசுவை வீட்டுக்கு அழைத்துவிட்டு அவருக்கு உரிய மரியாதை காட்டாத சீமோன் எதையெல்லாம் செய்யாது விட்டாரோ அதையெல்லாம் அப்பெண் இயேசுவுக்குச் செய்வதை நாம் இங்கு பார்க்கின்றோம். அதாவது, வீட்டுக்குள் நுழைவதற்கு முன் காலடிகளைக் கழுவுவது வழக்கம். அப்பெண் இயேசுவின் காலடிகளைத் தன் கண்ணீரால் கழுவித் தன் தலைமுடியால் துடைக்கிறார். விருந்தினரை முத்தமிட்டு வரவேற்பது வழக்கம். ஆனால் அப்பெண்ணோ இயேசுவின் காலடிகளையே முத்தமிடுகிறார். விருந்தினரின் தலையில் எண்ணெய் பூச வேண்டும். ஆனால் அப்பெண்ணோ தன்னையே தாழ்த்திக்கொண்டு, இயேசுவின் காலடிகளைத் தொட்டு அவற்றில் நறுமணத் தைலம் பூசுகிறார். இவ்வாறு அவர் தன் அன்பை வெளிப்படுத்துகிறார். இயேசு அப்பெண்ணின் அன்பையும் நம்பிக்கையையும் பாராட்டியதோடு அவருடைய பாவங்களையும் மன்னித்து, அவருக்கு மீட்பைபும் அமைதியையும் வாக்களிக்கின்றார். அன்பு இருக்கும் இடத்தில் கடவுளின் அருள் தோன்றும் என்பதற்குப் பாவியான பெண் சிறந்த எடுத்துக்காட்டாகிறாள்.

மனித இதயத்தில் பல ஏக்கங்கள் உண்டு. பிறர் நம்மை ஏற்று, மனிதராக நம்மை மதிக்க வேண்டும் என்பது அடிப்படையான ஏக்கம். ஏதாவது தவறுகள் நேர்ந்துவிட்டால் அவற்றைப் பிறர் மன்னித்துவிட வேண்டும் என்பதும் மனித எதிர்பார்ப்புக்கில் ஒன்று. அதுபோலவே,கடவுளுக்கு நாம் ஏற்புடையவர்களாக இருக்கவேண்டும் என்பதும் நம் உள்ளத்தின் அடிப்படையான வேட்கை. நாமாகவே முயன்று நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற்ற இயலாது. ஏனென்றால் நாம் பாவத்தின் விளைவாகக் கடவுளிடமிருந்து பிரிந்து போய்விட்டோம். தவறிச் சென்ற நம்மை மீண்டும் கண்டுபிடித்து, நம்மைத் தம்மோடு உறவுகொண்டாட அழைத்து, அதைச் செயல்படுத்தும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உண்டு. எனவே, நம்மைத் தமக்கு உகந்தவர்களாக மாற்றுகின்ற கடவுளிடமிருந்து நாம் இரக்கத்தையும் மன்னிப்பையும் கொடையாகப் பெறுகிறோமே தவிர நமது சொந்த சக்தியில் நம்பிக்கை கொண்டு அதைப் பெறுவதில்லை. கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற மன்னிப்பு என்னும் அருளைவிடப் பெரிய கொடை இல்லை. இயேசுவை அணுகிவந்து, அவருடைய காலடிகளில் நறுமனத் தைலம் பூசித் தன் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்திய பெண்ணைப் பார்த்து இயேசு அமைதியில் செல்க என்கிறார். அப்பெண்ணுக்குக் கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் கிடைத்ததால் அவர் அமைதியில் செல்லலாம். மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவது இயல்பு. மன்னித்து ஏற்கும் பண்பு இல்லாவிட்டால் அந்த விரிசல்கள் விரிந்துகொண்டே போகும். பிறரிடம்தான் குறைகள் எல்லாம் உள்ளன, நம்மிடம் யாதொரு குறையும் இல்லை என நாம் நினைத்தால் முறிந்த உறவுகள் ஒருநாளும் சரியாகிட இயலாது. மாறாக, நம்மை மன்னித்து ஏற்கின்ற கடவுளின் இரக்கத்தை நாம் அனுபவிக்கும்போது, அதே முறையில் பிறரின் குற்றங்களை மன்னித்து அவர்களையும் கடவுளின் அன்பின் பொருட்டு ஏற்றுக்கொள்வோம். அப்போது நம் உள்ளத்தில் அமைதி ஏற்படும். அன்பு இருக்கும் இடத்தில் மன்னிப்புக்கு இடம் உண்டு.

02.06.2013 'மனநிலை மாற்றம் பெற்று பகிர்தல் வாழ்வை வளப்படுத்துவோம்"
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இயேசு தம் திருவுடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருகிறார்.அவரது பேரன்பைப் போற்றி இன்று அதை எண்ணி நாம் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம். உடல் என்பது ஒருவரது ஆளுமையின் மிக வெளிப்படையான கூறாகும். மனம்,  ஆன்மா, உணர்வுகள் என்பவை வெளியில் தெளிவாகக் காணக் கிடைக்காத ஆளுமையின் தளங்கள். ஆனால், உடல் மட்டுமே அனைவருக்கும் அறிமுகமான, வெளிப்படையான தளம். அது மட்டுமல்ல, உடல்தான் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யத்தகுந்த மிகச் சிறந்த தளமும்கூட. அதனால்தான், இயேசு தம் உடலை இறைவனுக்காகவும், நமக்காகவும் கையளித்தார். இரத்தம் உயிரின் ஆதாரம். இரத்தம் சிந்துதால் தியாகத்தின் அடையாளம். 'இரத்தம் சிந்துதல் இன்றி பாவ மன்னிப்பு இல்லை".  எனவே, எமக்காக தன்னை கையளித்த இயேசுவின் உடலுக்காக, இரத்தத்துக்காக நாம் பிரதியுபகாரமாக  நமது உடலை இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றக் கையளிப்போம். நாம் இரத்தத்தைச் சிந்தாவிட்டாலும், பிறர் வாழ தியாகங்கள் செய்ய முன்வருவோம்.

நாம் கற்றறிந்த ஒரு வரலாற்று உண்மையை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும் 'இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவிற்கு ஒரு வரலாற்று உண்மை உண்டு. 1263ல் பிராகுவேயைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க குருவானவர் தன் அழைத்தலைப்பற்றி பல்வேறு கேள்விகளோடு திருப்பயணியாக உரோமை நகர் நோக்கி பயணமானார். பயணத்தின் பாதிவழியில் உரோமையிலிருந்து 70கி.மீ தொலைவிலுள்ள போல்சேனா என்ற இடத்தில் புனித கிறிஸ்தினால் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலுள்ள பீடத்தில் திருப்பலியாற்றினார். அப்பொழுது அர்ச்சிப்பு வார்த்தையை சொல்லி அப்பத்தை உயர்த்தியவுடன் அது சதையாக மாறி இரத்தம் கசிய துவங்கியது. இரத்தம் பீடத்தில் மேலுள்ள கார்ப்பரோல் என்ற விரிப்புதுணிமீது படிந்தது. இந்த நற்கருணை அற்புததிற்கு பிறகு 1264ல் திருத்தந்தை நான்காம் அர்பன் இயேசுவின் திருஉடல் திருஇரத்த திருவிழாவை தொடங்கி கொண்டாட கட்டளை பிறப்பித்தார். அன்றிலிருந்து இவ்பெருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது

இதனைவிட இன்னும் சில உண்மைகளை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். 1431ல் இங்கிலாந்தில் புனித ஜேர்ன் ஆப் ஆர்க் சிறையில் நெருப்பில் இடப்படுவதற்கு முன்பாக அவரது ஆசைக்கு என்ன வேண்டும், கடைசி உணவாக விருந்தாக என்ன வேண்டும் என்று அவரிடம்  கேட்;கப்பட்டபோது அவர் கூறியது 'நற்கருணை வேண்டும்" என்றதுடன் காரணம் எந்த திருவிருந்து எனக்கு தொடர்ந்து பலம் தந்து என்னோடு இருந்து என்னைத் தொட்டதோ அதுவே நிரந்தர துணை, பலம் பிரசன்னம் என்றார்.

பாத்திமாவிலிருந்து சிறி தொலைவிலுள்ள பலசார் என்ற இடத்தில் 1904ல் பிறந்து 1955ல் இறந்த அலெக்சாண்டிரியா என்ற பெண் ஒரு விபத்தான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு படுக்கையிலிருந்து 13 ஆண்டுகள் நற்கருணை மட்டுமேபெற்று வாழ்ந்தது மருத்துவர்களை ஆச்சரியத்துள்ளாக்கியது என்பதும் வரலற்றுப் பதிவாகியுள்ளது. விசுவசித்தால் திருவிருந்து தொடரும் என்றும் நம்மை தொடும்.

அண்மையில் மரியா என்ற 14வயது இளம்பெண் 8மாதங்களாக காத்திருந்து இருதயமாற்று அறுவைசிகிச்சைவழியாக புதிய இதயம் பெற்றாள். அவள் பல நாட்கள் பெற்றோரோடு நற்கருணை திருவிருந்தை தேடிவரக்காரணம் என்ன என்று கேட்டபொழுது அவர்கள் சொன்னது இதுதான் எங்களின் தொடர்விருந்து எங்களை இப்புதிய இதயத்தின் வழியாக தொடும் நற்கருணை இயேசு எங்களுக்கு தினமும் வேண்டும் அவர் தான் நிரந்தர சக்தி என்றார்கள்.
புனித பீட்டர் ஜீலியன் நாம் நற்கருணை இயேசுவால் ஆட்கொள்ளப்படவேண்டும் நாம் திருவிருந்தில் அவரை ஆட்கொள்ள வேண்டும் என்றார்.
இப்படி எண்ணற்ற நற்கருணையின் அற்புதங்களை நாம் அறிந்திருக்கின்றோம். இவைகளெல்லாம் இது ஒரு தொடரும் திருவிருந்து என வெளிப்படுத்துகின்றன. அந்த குருவானவரின் சந்தேகத்திற்கு அவரை தொட்டு ஆழப்படித்தியதுபோல நம்மையும் அந்த தொடர் மற்றும் தொடும் உணர்வுக்கு அழைக்கின்றது. இயேசு தமது இறுதி இராப்போசனத்தின்போது அப்பத்தையும் இரசத்தையும் தமது உடலும் இரத்தமும் எனக்கூறி அதனை தம் சீடர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அப்பம் ஏந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பகிர்தலின் ஞாபகம் நமக்கு உணர்த்தப்படுகிறது. எனினும் அப்போது எம் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதே நாம் சிந்திக்கவேண்டியது. ஏனெனில் பகிர்தல் வாழ்வுக்கு மனநிலை மாற்றம் மிக அவசியம். கல்மனம் படைத்தவர்களால் பகிர்ந்து வாழமுடியாது. அப்பத்தின் வடிவில் இயேசுவின் உடலையும் இரசத்தின் வடிவில் அவரது இரத்தத்தையும் பகிர்ந்து உண்ணும் நாம் அவரது திருவுளப்படி வாழ முற்படுகிறோமா? நம்மில் அதற்கான மனமாற்றம் ஏற்படுகிறதா என்பதையும் சிந்திக்க வேண்டும.; இத்தகைய சிந்தனைகள் ஏற்படுத்தும் மாற்றமே இப்பெருவிழாவை அர்த்தமுள்ளதாக்கும்.


Thursday, May 30, 2013

'மனநிலை மாற்றம் பெற்று பகிர்தல் வாழ்வை வளப்படுத்துவோம்"

02.06.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இயேசு தம் திருவுடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருகிறார்.அவரது பேரன்பைப் போற்றி இன்று அதை எண்ணி நாம் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம். உடல் என்பது ஒருவரது ஆளுமையின் மிக வெளிப்படையான கூறாகும். மனம்,  ஆன்மா, உணர்வுகள் என்பவை வெளியில் தெளிவாகக் காணக் கிடைக்காத ஆளுமையின் தளங்கள். ஆனால், உடல் மட்டுமே அனைவருக்கும் அறிமுகமான, வெளிப்படையான தளம். அது மட்டுமல்ல, உடல்தான் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யத்தகுந்த மிகச் சிறந்த தளமும்கூட. அதனால்தான், இயேசு தம் உடலை இறைவனுக்காகவும், நமக்காகவும் கையளித்தார். இரத்தம் உயிரின் ஆதாரம். இரத்தம் சிந்துதால் தியாகத்தின் அடையாளம். 'இரத்தம் சிந்துதல் இன்றி பாவ மன்னிப்பு இல்லை".  எனவே, எமக்காக தன்னை கையளித்த இயேசுவின் உடலுக்காக, இரத்தத்துக்காக நாம் பிரதியுபகாரமாக  நமது உடலை இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றக் கையளிப்போம். நாம் இரத்தத்தைச் சிந்தாவிட்டாலும், பிறர் வாழ தியாகங்கள் செய்ய முன்வருவோம்.

நாம் கற்றறிந்த ஒரு வரலாற்று உண்மையை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும் 'இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவிற்கு ஒரு வரலாற்று உண்மை உண்டு. 1263ல் பிராகுவேயைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க குருவானவர் தன் அழைத்தலைப்பற்றி பல்வேறு கேள்விகளோடு திருப்பயணியாக உரோமை நகர் நோக்கி பயணமானார். பயணத்தின் பாதிவழியில் உரோமையிலிருந்து 70கி.மீ தொலைவிலுள்ள போல்சேனா என்ற இடத்தில் புனித கிறிஸ்தினால் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலுள்ள பீடத்தில் திருப்பலியாற்றினார். அப்பொழுது அர்ச்சிப்பு வார்த்தையை சொல்லி அப்பத்தை உயர்த்தியவுடன் அது சதையாக மாறி இரத்தம் கசிய துவங்கியது. இரத்தம் பீடத்தில் மேலுள்ள கார்ப்பரோல் என்ற விரிப்புதுணிமீது படிந்தது. இந்த நற்கருணை அற்புததிற்கு பிறகு 1264ல் திருத்தந்தை நான்காம் அர்பன் இயேசுவின் திருஉடல் திருஇரத்த திருவிழாவை தொடங்கி கொண்டாட கட்டளை பிறப்பித்தார். அன்றிலிருந்து இவ்பெருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது

இதனைவிட இன்னும் சில உண்மைகளை இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். 1431ல் இங்கிலாந்தில் புனித ஜேர்ன் ஆப் ஆர்க் சிறையில் நெருப்பில் இடப்படுவதற்கு முன்பாக அவரது ஆசைக்கு என்ன வேண்டும், கடைசி உணவாக விருந்தாக என்ன வேண்டும் என்று அவரிடம்  கேட்;கப்பட்டபோது அவர் கூறியது 'நற்கருணை வேண்டும்" என்றதுடன் காரணம் எந்த திருவிருந்து எனக்கு தொடர்ந்து பலம் தந்து என்னோடு இருந்து என்னைத் தொட்டதோ அதுவே நிரந்தர துணை, பலம் பிரசன்னம் என்றார்.

பாத்திமாவிலிருந்து சிறி தொலைவிலுள்ள பலசார் என்ற இடத்தில் 1904ல் பிறந்து 1955ல் இறந்த அலெக்சாண்டிரியா என்ற பெண் ஒரு விபத்தான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு படுக்கையிலிருந்து 13 ஆண்டுகள் நற்கருணை மட்டுமேபெற்று வாழ்ந்தது மருத்துவர்களை ஆச்சரியத்துள்ளாக்கியது என்பதும் வரலற்றுப் பதிவாகியுள்ளது. விசுவசித்தால் திருவிருந்து தொடரும் என்றும் நம்மை தொடும்.

அண்மையில் மரியா என்ற 14வயது இளம்பெண் 8மாதங்களாக காத்திருந்து இருதயமாற்று அறுவைசிகிச்சைவழியாக புதிய இதயம் பெற்றாள். அவள் பல நாட்கள் பெற்றோரோடு நற்கருணை திருவிருந்தை தேடிவரக்காரணம் என்ன என்று கேட்டபொழுது அவர்கள் சொன்னது இதுதான் எங்களின் தொடர்விருந்து எங்களை இப்புதிய இதயத்தின் வழியாக தொடும் நற்கருணை இயேசு எங்களுக்கு தினமும் வேண்டும் அவர் தான் நிரந்தர சக்தி என்றார்கள். புனித பீட்டர் ஜீலியன் நாம் நற்கருணை இயேசுவால் ஆட்கொள்ளப்பட வேண்டும் நாம் திருவிருந்தில் அவரை ஆட்கொள்ள வேண்டும் என்றார்.
இப்படி எண்ணற்ற நற்கருணையின் அற்புதங்களை நாம் அறிந்திருக்கின்றோம். இவைகளெல்லாம் இது ஒரு தொடரும் திருவிருந்து என வெளிப்படுத்துகின்றன. அந்த குருவானவரின் சந்தேகத்திற்கு அவரை தொட்டு ஆழப்படித்தியதுபோல நம்மையும் அந்த தொடர் மற்றும் தொடும் உணர்வுக்கு அழைக்கின்றது.
 
இயேசு தமது இறுதி இராப்போசனத்தின்போது அப்பத்தையும் இரசத்தையும் தமது உடலும் இரத்தமும் எனக்கூறி அதனை தம் சீடர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அப்பம் ஏந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பகிர்தலின் ஞாபகம் நமக்கு உணர்த்தப்படுகிறது. எனினும் அப்போது எம் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதே நாம் சிந்திக்கவேண்டியது. ஏனெனில் பகிர்தல் வாழ்வுக்கு மனநிலை மாற்றம் மிக அவசியம். கல்மனம் படைத்தவர்களால் பகிர்ந்து வாழமுடியாது. அப்பத்தின் வடிவில் இயேசுவின் உடலையும் இரசத்தின் வடிவில் அவரது இரத்தத்தையும் பகிர்ந்து உண்ணும் நாம் அவரது திருவுளப்படி வாழ முற்படுகிறோமா? நம்மில் அதற்கான மனமாற்றம் ஏற்படுகிறதா என்பதையும் சிந்திக்க வேண்டும.; இத்தகைய சிந்தனைகள் ஏற்படுத்தும் மாற்றமே இப்பெருவிழாவை அர்த்தமுள்ளதாக்கும்.

Friday, May 24, 2013

அன்பின் ஐக்கியத்தில் புதிய வாழ்வை பிறக்கசெய்வோம்

26.05.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். என இயேசு தம் சீடரை நோக்கிக் கூறும் வேதகமப்பகுதி மூவொரு கடவுளின் திருவிழாவாகிய இன்று எமக்குத் தரப்படுகின்றது. திருச்சபையில் விழாக்களின் ஒரு சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். இத்திருவிழா பாஸ்கா மறைபொருள்களிலுள்ள தந்தை, மகன், தூய ஆவி குறித்த கடவுளின் வெளிப்பாட்டை நினைவுபடுத்துகின்றது. இறைவனின் இந்த இயல்பு அதிபுனித திரித்துவம் எனப்படுகிறது.
 
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இறையியல் வல்லுனர் பெக்குலியனால் இந்த மூவொரு கடவுள் என்ற மறையுண்மை கொண்டுவரப்பட்டது. இத்திருவிழா 1334 ஆம் ஆண்டில் திருத்தந்தை 22 ஆம் யோவானால் தொடங்கப்பட்டது. நைசீயா-காண்ஸ்டாண்டி நோபிள் திருச்சங்கங்கத்தில் உறுதி செய்யப்பட்ட இந்த விழா திருச்சபையின் அடித்தளமாக உள்ளது.

மூவொரு இறைவன் நம் கடவுள். இது எப்படி? மூன்றா? ஒன்றா? ஒன்று ஆனால் மூன்று. மூன்றுதான் ஆனால் ஒன்று. யாரும் அறிய முடியா மறைபொருள். தமத்திரித்துவத்தின் மகத்துவம் கூறும்; ஒரே கடவுள், மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்ற மறையுண்மைகளை மனித அறிவால், எண்ணத்தாலும் மொழியாலும் போதுமான அளவு விளக்க முடியாமல் இருந்த போதிலும், திருச்சபைத் தந்தையர், தங்களது வாழ்வு மற்றும் ஆழமான விசுவாசத்தின் வழியாக விளக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பது உண்மையே. மூவொரு இறைவனுள் தந்தை யாரு? மகன் இயேசு யாரு? தூயஆவி யாரு? இவர்ளுக்குள் என்ன உறவு, இவர்கள் தமக்குள்  என்ன பேசிகிறார்கள். இவர்;களைப் பற்றி மக்கள், அறிஞர்கள், இறைவாக்கினர்கள், என்ன பேசுகிறார்கள்? இவர்;களை நாம் புரிந்துகொள்ள முடியுமா? இவர்;ககளைப்பற்றிய விளக்கங்களும் விடையற்ற ஒரு புதிர்தானா? என்று அறிவின் தேடலை இன்று முடக்கிவிட்டிருக்கின்றோம்.
 
நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த நுஎநபசரைள  (இவக்றியஸ்) என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது: 'கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது.' என்பதாகும். ஒருமுறை புகழ் பெற்ற அறிவியலார் டாக்டர் ஹென்றி மோரிஸ் கூறுகிறார்– உலகம் பருப்பொருள், இடம், காலம் ஆகியவற்றால் ஆனது. இவை மூன்றும் இல்லையேல், ஏதேனும் ஒன்றுகூட இல்லாதிருந்தாலும் இந்த உலகு இல்லை. அதே போல மூவொரு கடவுளும் இருப்பது அவசியமாகிறது என்கிறார் அவர். இவை ஒவ்வொன்றுமே மூன்றில் ஒன்றாக இருக்கின்றன.

'இந்த உலகில் மிக அழகான, ஆழமான அனுபவங்கள் எல்லாமே நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மறையுண்மைகள். இந்த ஆழமான அனுபவங்களை இதுவரை தங்கள் வாழ்வில் பெறாதவர்களை குறைந்தபட்சம் பார்வை இழந்தவர்கள் என்றாகிலும் சொல்லலாம்.' என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லிச்சென்றார். நாம் காணும் இந்த உலகின் பல உண்மைகளுக்கு அறிவியல் விளக்கங்களைக் கண்டு பிடித்த அந்த மாமேதையே வெகு ஆழமான உண்மைகளைச் சந்தித்தபோது மௌனம் காத்தார்.'

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. கடவுளை ஒரு கூட்டுக் உறவாய் அறிமுகம் செய்தவர் இயேசு. நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம். உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம். நாம் வாழும் இன்றைய உலகில், நம் அன்பு உறவுகளே மிக அதிகமாகப் பழுதடைந்திருக்கிறது. பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய இன்று உறவாக வாழும், மூவொரு இறைவனின் திருநாள் அழைக்கின்றது. மூன்று ஆளாகிய கடவுளில் நிகழ்கின்ற அன்புப் பரிமாற்றம் கடவுள் அன்புமயம் என்று நாம் கூறுவதற்கு அர்த்தம் தருகிறது. இன்று உறவுகள் சிதறுவதற்கு அன்புறவின் விரிசலே காரணம். உறவுகள் முறிந்து சிதைந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நிலையை நம் சமுதாயத்தில் கண்கூடாகப் பார்க்கமுடியும். முரட்டு மனிதர்களையும் பாசத்தால் கட்டிப் போட முடியும் என்பது அன்றாட வாழக்கை நமக்கு உணர்த்தும் பாடம். அன்புக்காகவும் உறவுகளுக்காகவும் ஏங்கும் மனிதர்களை நாம் பார்க்க முடியும். கடவுளுக்குள் உறவின் ஒற்றுமையை நாம் தரிசிக்கின்றோம். கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார், அவர் அன்பின் குழுமம் ஆகும் இதனை முதலில் தெளிவாக வெளிப்படுத்துவது குடும்பமே. கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒரே உடலாக ஆகின்றார்கள், இந்த அன்பு ஐக்கியமானது புதிய வாழ்வை பிறப்பிக்கிறது. இவ்வாறு மனிதக் குடும்பத்தில் விளங்கும் ஒருவர் ஒருவர் மீதான அன்பு வாழ்வைப் பிறப்பிப்பதற்கான அதன் பணியை முன்னிட்டு அது மூவொரு கடவுளின் வெளிப்பாடாக இருக்கின்றது என்று உணர்ந்து இப்பெருவிழாவின் விழுமியங்களை வாழ்வாக்குவோம் 

வாழ்க்கையில் எம் வெற்றிக்குப் ஏணியாக உதவிய கரங்களை நாம் மறந்துவிடலாமா?

19.05.2013'"  ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்" என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்…என்றார். வேதகமத்தின் இப்பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது. ஆணிகளால் துளையிடப்பட்டு காயப்பட்ட பகுதியை காட்டினான் என்னும் பகுதியை நோக்குவோம்.

ஷஎங்கள் மூச்சுக்குள்ளே உண்டு பாட்டுச்சந்தம் என்றும் பாட்டுக்கள் தான்  எங்கள் சூரியோதயம்| தருண் ஹீரோவாக நடத்த புன்னகைதேசம் படத்தில் இருந்து எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட பாடல் வரிகள் இவை. பெற்றெடுத்த பெற்றோரும் துரத்திவிட ஒட்டி உறவாடியவர்களும் ஏழனம் செய்ய வாழ்கையின் விழிம்புக்கு சென்ற மூன்று இளைஞர்களை தருண் நண்பர்களாக்கி அவர்களுக்காக தன்னை கரைத்து மாடய் வேலைசெய்து அவர்களுக்காக மற்றவர்களிடம் பரிந்துபேசி அவர்களுக்காக மற்றவர்களிடம் ஏளனம் பெற்று அவர்களை இசையில் சாதனை புரியவைத்து நட்புக்கு பாடம் புகட்டியவர்.அந்த நண்பர்களின் பணயம் பைகளையே கூலியாளாகத் தன் கைகளால் தூக்கிகாட்டியவர். இவ்வாறு படம் நகர்கின்றது. எமக்காக தன் கைகளில் ஆணிகளை ஏற்றவர் தம் கைகளை இன்று எமக்கும் காட்டுகின்றார். எமது பதில் என்ன?   

1492 கலப்பகுதியில்  ஜெர்மனி நாட்டில் ஆர்வம் மிக்க ஆல்பிரட் ட்ரூரர் மற்றும் பிரான்ஸ் க்னிக்ஸ்டெயின் ஆகிய இரண்டு நண்பர்கள் சிறந்த ஓவியர்களாக வேண்டும் எனத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓரளவு ஓவியம் வரைய தெரிந்திருந்தார்கள். ஆனால் ஓவியப் கல்லூரிக்கு சென்று கற்பதற்குத் தேவையான பணமில்லை. அவர்கள், ஒருவர் வேலை செய்து மற்றவர் படிப்பதற்குப் பண உதவி செய்வதென்றும், அவ்வாறு படித்தவர் மற்றவருக்குப் பிறகு உதவி செய்வதென்றும் உறுதி செய்துகொண்டனர்.
யார் முதலில் கற்கச்; செல்வது என்பதைக் கண்டறிய அவர்கள் ஒரு காசைப் பூவா, தலையா எனப் போட்டுப் பார்த்து முடிவெடுத்துக் கொண்டனர். முதலில ட்ரூரர் முதலில் படிக்கச் சென்றார் . க்னிக்ஸ்டெய்ன் வேலை செய்யச் சென்றார். ட்ரூரர் மிகத் திறமையான ஓவியரானார். தம் ஓவியங்களை நிறைய விலைக்கு விற்கத் தொடங்கினார். தம்முடைய ஒப்பந்தப்படி ஊருக்குத் திரும்பி தம் நண்பர் க்னிக்ஸ்டெய்ன் படிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வந்தார். அப்பொழுதுதான் தம் நண்பர் தமக்காகச் செய்திருந்த தியாகத்தை அவர் உணர்ந்தார். தம் நண்பரின் கடுமையான உழைப்புக் காரணமாக அவரது விரல்கள் விறைத்துப் போய் மென்மையான ஓவியம் தீட்டுவதற்குத் தகுதியில்லாதவைகளாக இருந்ததை கண்டார். க்னிக்ஸ்டெய்ன் ஓவியராவதற்கன தன் கனவுகளை மறந்தாலும் வருத்தப்படவில்லை. தம் நண்பருடைய வெற்றியில் இவரும் பெருமகிழ்ச்சி கொண்டார். ஒரு நாள் ஆல்பிரட் ட்ரூரர்;, தம் நண்பர்; க்னிக்ஸ்டெய்ன் கைகளைக் கும்பிட்டபடி செபித்துக் கொண்டிருந்த காட்சியை அவர் காணாத போது ஓவியமாகத் தீட்டினார். அந்த ஓவியம் விலை மதிப்பில்லாத மிகச் சிறந்த ஓவியமாக மதிக்கப்பட்டது. தம் வாழ்வையும் கைகளின் உழைப்பையும் தானமாகத்தந்த நண்பரின் கும்பிட்ட கைகள் இன்று காலமெல்லாம் மறக்கமுடியாத மிகச் சிறந்த ஓவியமாக உலகெங்கும் போற்றப்படுகிறது. இன்று ஓவியக் காட்சி சாலைகளில் ட்ரூரர்;, பல சிறந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு கண்களையும் மனத்தையும் கொள்ளையடிக்கின்றன . ஆனால் எல்லோர் உள்ளத்தையும் கண்டிப்பாகக் கவர்வது கும்பிட்ட கைகள் என்ற அவருடைய நண்பருடைய கரங்களாகும். அந்த ஓவியம் பல லட்சம் பிரதிகள் உலகெங்கும் பிரதி எடுக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் அந்தக் கைகளின் தியாகத்தை, நிபந்தனையில்லாத பேரன்பை, கடுமையான உழைப்பை, நன்றிப் பெருக்கை நினைவு படுத்துகின்றது .

இயேசுவின் கைகள் இன்னும் மிகப்பெரிய கதையை நமக்குச் சொல்கின்றன. இதோ, என் கைகளைப் பாருங்கள் என இன்றைய நற்செய்தியில் இயேசு கூறுகிறார். நம் நெஞ்சைத் தொடும் இந்தக் காட்சியை சாட்சியாக்கி உயிரோடு வாழ்வதாகக் காட்டுகிறார். எம் மனதில் இயேசுவின் தழும்புகளும் சிலுவைச் சாவும் அழியாது பதிந்திருக்கின்றன. இயேசு நமக்கு நல்லதொரு நண்பராக உள்ளார். வாழ்க்கையில் எம் வெற்றிக்குப் படியாக, ஏணியாக பின்புலத்திலிருந்து உதவிய கரங்களை நாம் மறந்துவிடுகின்றோம். நம் வாழ்க்கையில் நாம் முன்னேற தம் கைகளைக் காயப்படுத்தி நமக்கு அன்பைப் பொழிந்து உதவியவர்களை நினைத்துப் பார்க்கிறோமா. நம்முடைய வருங்கால வெற்றிகளும் நமக்காக தன்னுயிரைச் சிலுவையில் தந்து ஆணிகள் துளைத்த அந்தக் கரங்களைக் காட்டும் இயேசுவின் கரங்களில் தியாகத்திற்கு எமது சமர்ப்பணம் என்ன?

எம் செயல்கள் நாம் விண்ணகம் நோக்கிப்; செல்பவர்கள் என்னும் எண்ணத்தைப் பிறருக்கு வழங்கவேண்டும்

12.05.2013'"
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
நாம் ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்த திருவிழமவை நாம் இன்று கொண்டாடுகின்றோம்.   இயேசு இவ்வுலகில் தனக்கு நேர்ந்த பல துன்பங்களை இறைசித்தத்தை நிறைவேற்ற பொறுமையோடு தாங்கினார். ஆண்டவர் மேல் அவர் வைத்த நம்பிக்கையே அவருக்கு ஆற்றல் கொடுத்தது. இதனால் இறைவன் இயேசுவை உயர்த்தினார். இயேசுவும் விண்ணேற்படைந்தார். இயேசுவின் விண்ணேற்பு ஆண்டவன் பார்வையில் நாமும் இயேசுவைப் போல் உண்மைக்காக நீதிக்காக அன்பிற்காக நம்பிக்கையுடன் வாழும்போது உயர்த்தப்படுவோம் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. உண்மைக்கு சாட்சியம் பகிர்வதே எனது பணி என்று கூறிய இயேசு தான் உயிர்தெழுந்தபின் தான் உயிர்த்தெழுந்ததை உலகிற்கு அறிவிக்கவும் அதற்கு சாட்சியம் பகிரவும் அழைப்பு விடுக்கிறார். உலகில் நற்செய்தியையும் மீட்பையும் அறிவிப்பதற்காக நாம் அனுப்பப்படுகின்றோம். நாம் சமுதாயத்தில் புளிக்காரமாகவும் ஒளியாகவும் இருந்து புத்துணர்ச்சியுடனும்; செயல்படவேண்டும். அப்போதுதான் சமுதாயம் கிறிஸ்தவ விழுமியங்களால் உரம் பெற்று உறுதியுடன் உயிர்த்துடிப்புள்ள அங்கமாக கடவுளின்பக்கம்; தடம் பதிக்கும்.

ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்பு விழா நமது வாழ்வின் இலக்கை ஆய்வு செய்ய அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் விண்ணேற்பு நமக்கெல்லாம் ஒரு முன் மாதிரி. இயேசுவைப் போலவே நாமும் விண்ணேற்படைந்து, கடவுளின் வலப்புறம் அமரவேண்டும் என்பதே இறைவனின் திருவுளம். அதுவே நம் வாழ்வின் இலக்காகவும் வேண்டும். இவ்வுலக வாழ்வு நமக்கொரு இடைப் பயணமே. நமது கண்களோ விண்ணகம் நோக்கியே அமையவேண்டும். இவ்வுலக இன்பங்களில் நமது காலத்தைக் கடத்தாமல், விண் நோக்கி நமது கண்களும், இதயமும் எழும்பட்டும். இவ்வுலகில் வாழ்ந்தாலும், நாம் இவ்வுலகைச் சாராதவர்களாக, விண்ணகம் சார்ந்தவர்களாக நம் வாழ்வு அமையவேண்டும். நமது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் நாம் விண்ணகம் நோக்கிப் பயணம் செய்பவர்கள் என்னும் எண்ணத்தைப் பிறருக்கு வழங்கவேண்டும்.

கடவுள் நம்மை அன்புசெய்கிறார்;. நாம் கடவுள் காட்டும் வழியில் நடந்து சென்று அவரிடத்தில் நிலையான அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள வேண்டும்; எனும் நற்செய்தியை இயேசு கொண்டுவந்தார். கடவுள் உலகின்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தன் ஒரே மகனை நமக்கு மீட்பராக அளித்தார்;. அவரிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். உண்மைக்கு சாட்சியம் பகிர்ந்து இயேசு உயிர்தெழுந்ததை உலகிற்கு அறிவித்து அதற்கு சாட்சியம் பகிரவேண்டும் என்பதே இயேசு கொண்டுவந்த நற்செய்தியின் சுருக்கம். உலகில் வாழ்கின்ற அனைவருக்கும் இந்நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். இயேசு உலகில் ஆற்றிய அதே பணியைத் தொடர்ந்து ஆற்றுவதே எமக்கு தரப்பட்ட பொறுப்பு. 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் இயேசுவின் சீடர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி 'நற்செய்தி அறிவித்தலே. இதை நாம் வெறும் வார்த்தைகளால் வடித்துவிடக்கூடாது. மாறாக, நற்செய்தி என்பது ஒரு வாழ்க்கை முறை. இயேசுவின் போதனையை உள்ளத்தில் ஏற்று, அதை வாழ்வில் சான்று பகிர்தலே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம். இவ்வாறு நாம் நற்செய்திக்கு நம் வாழ்வின் வழியாகச் சான்று பகிர்ந்தால் அனைவரும் நற்செய்தியை அன்னியமாகப் பார்க்கமாட்டார்கள்.

நீதியில், நேர்மையில் உருவாகும் விடுதலையும், வெற்றியும் தன் மக்களுக்கு உண்டு என்று இறைவன் உறுதி அளிக்கிறார். இன்றைய உலகையும், நாளைய உலகையும் குறித்து நம்பிக்கை இழந்திருக்கும் நமக்கு, பிளவுகள், பிரிவுகள், ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றால் நிறைந்து வெறுப்பை உமிழ்ந்து வரும் இன்றைய உலகிற்கு  நீதியை நிலைநாட நேர்மையைக் கடைபிடிக்க இயேசுவின் விண்ணேற்பு எமக்கு வாழிகாட்டட்டும்
 
சிலுவைப்பாடுகளின்; கொடூரமான நிலையிலும் தந்தை தன்னை காப்பாற்றி உயிர்த்தெழச் செய்வார் என உறுதியாக இயேசுநம்பினார். சிலுவைப் பாடுகளே இயேசுவின் மாட்சியின் வெளிப்பாடுகளாயின. அதுவே உன்னதமான மகிமைபெற வழிவகுத்தது. அதுவே இன்று நாம் கொண்டாடும் விண்ணேற்பு விழா. இயேசு மாட்சிமையடைதலின் முழுமை இன்றைய விண்ணேற்பு நிகழ்விலே நிறைவடைகின்றது. இயேசு அடைந்த மாட்சியிலும் மகிமையிலும் மதிமயங்கி இருக்க நாம் அழைக்கப்படவில்லை. மாறாக நமக்கு தரப்பட்ட பணியை நிறைவேற்றவே அழைக்கப்படுகின்றோம். இவ்வுலகை அன்பு நிலவும் ஓர் இடமாக, நீதி தவழ்கின்ற தளமாக நம்பிக்கை முளைத்திடும் திடலாக மாற்றியமைத்திட நாம் உழைக்கவேண்டும் என்பதே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சமாகும். நாம் தூயஆவியால் உந்தப்பட்டு நற்செய்தியின் தூதுவர்களாக மாறி நற்செய்திப் பணியில் முழுமையாக நம்மை ஈடுபடுத்தினால் இவ்வுலகில் கடவுளின் ஆட்சி இன்னும் தெளிவாகத் துலங்கும். நற்செய்தியால் நம் வாழ்வு உருமாற்றம் பெறும். இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா எம்மில் அர்த்தம்பெறும்.

Thursday, May 2, 2013

இயேசு எங்களுக்குத் தரும் அமைதியை உலகிற்கு வாரி வழங்குவோம்

05.05.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசு,'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல" எனக் கூறும் பைபிள் பகுதியை நாம் காண்கின்றோம். எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்பது மனிதனின் தனக்கு அமைதி தேடும் முயற்சியின் பின்னணிப் பாடல் என்று கூறிவிடலாம். துன் வாழ்வில் பொன் இருந்தும், பொருள் இருந்தும், பெண் இருந்தும், பெயர் இருந்தும், மனதிலும் குடும்பத்திலும் அமைதி இல்லாது இந்த பாடலை அன்று தொட்டு இன்றுவரை முனகிக் கொண்டிருக்கிறான் மனிதன். அமைதியைத் தேடி மதுவிலும் மாதுவிலும் புகையிலும் போதையிலும் மூழ்கிக்கொண்டிருக்கிறான் மனிதன். இவற்றில் அமைதி தேடும் மனிதன் இவையெல்லாம் தமக்கு அமைதி தருவதாகப் படம் காட்டி, படுகுழிக்கு பாதை அமைக்கும் கானல்நீர் என்பதை மனிதன் அறிவதில்லை.

வாழப் பிடிக்காமல், வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கக்கூடாது நம்முடைய வாழ்க்கை. தவறான, அர்த்தமிழந்த நம் வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்க நம்மால் முடியும். எப்படி?  இயேசுவின் அன்பு நம் வாழ்வில் கடந்து வரும்போது, உருக்குலைந்த நம் வாழ்வு உயிர் பெறும். அந்த இறையன்பை நாம் சுவைத்து, அவரை வழியும் உண்மையுமாக ஏற்று வாழத் தொடங்குவதே அர்த்தமுள்ள வாழ்வுக்கான ஒரே வழி.  வாழ்க்கைப் போராட்டங்களிலும் வறுமையின் கோரப்பிடியிலும் கைதிகளாக இருந்த சூழ்நிலைகளிலும் அமைதியை இழக்காமல் வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு, மகிழ்ச்சியோடு வாழ்ந்து இவ்வுலகிலிருந்து விடைபெற்றவர்கள் ஏராளம்.  அவர்களுடைய வெற்றியின் ரகசியம் யார்? இயேசுதான். எங்கள் வாழ்விலும் நிறைவான, முழுமையான அமைதியைத் தர அவரால் மட்டுமே முடியும்.  இயேசு கூறுகிறார்: 'நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்"

அமைதிதேடி அலைமோதி நிலைகுலையும் மனித சமுதாயத்திற்கு இயேசு பதிலாக தீர்வாக இருக்கிறார். 'என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல" இவ்வாறு தன் தெய்வீக அமைதியில் நமக்குப் பங்கு தருகிறார். எதைப்பற்றியும் கலங்கவோ மருளவோ அவசியம் இல்லா அமைதி இந்த இறை அமைதி. இறைவன் தரும் இந்த அமைதி சற்று வித்தியாசமானது முற்றிலும் புதுமையானது. இது வேதனையில் கிடைக்கும் அமைதி. இழப்பில் குவியும் அமைதி. பாரங்கள் சுமப்பதில் புதைந்திருக்கும் அமைதி. குழப்பங்களின் ஆழத்தில் அமிழ்ந்திருக்கும் அமைதி. வெறுமையில் வெற்றிடத்தில் பரவியிருக்கும் அமைதி. கொடுப்பதில் சேரும் அமைதி. உள்ளுக்குள் இருந்து உயிரூட்டி, உரமூட்டி, உற்சாகப்படுத்தி வாழவைக்கும் அமைதி. இந்த அமைதியைத் தேடுவோம்

உயிர்த்த ஆண்டவர் தருகின்ற அமைதி உலகு சார்ந்த அமைதி அல்ல, போர்களுக்குப் பின் வருகின்ற அமைதி அல்ல, இயற்கை சீற்றங்களுக்குப் பின் வருகின்ற அமைதி அல்ல, நமது உள்ளம் சார்ந்த அமைதி. அதையே இறைவன் நமக்குக் கொடையாக வழங்குகின்றார். ஆண்டவர் கொடுத்த அமைதியின் மூலம் நமது வாழ்வை அச்சங்களற்றதாக ஐயங்களற்றதாக வாழ முனைவோம்

தனி மனிதர்களும், சமூகங்களும், நாடுகளும் நாடித் தேடும் ஒன்று அமைதி. பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், பல நாடுகளும் போர்களாலும், உள்நாட்டுக் குழப்பங்களாலும் அமைதியின்றி தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆயுதங்களால் உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியாது. உறவால்தான் முடியும். குடும்பங்களிலும் இன்று அமைதியற்ற சூழல். கணவன்-மனைவிக்கிடையே, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே அமைதியின்றி வாழும் நிலை காண்கிறோம். பணமோ, பொருள்களோ அமைதியைத் தர இயலாது. உறவுதான் அமைதியைத் தரும்.முதலில், இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது, உலகம் தர இயலாத அமைதியை அவர் நமக்குத் தருவார்.

ஹெலன் கெல்லர் என்பவர் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் அரசியல் ஆர்வலராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண். பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண்பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இவர் இழந்தார். எனினும், உலகில் இளங்கலைப்பட்டம் பெற்ற, பார்க்கவும் கேட்கவும் முடியாத முதல் மாற்றுத்திறனாளி என்ற பெருமைக்கு உரித்தானவர் இவர். ஒருநாள் ஹெலன் கெல்லரை பார்க்கச் சென்ற அவரது நண்பர் ஒருவர் அவரிடம் “உங்களுக்கு விருப்பமான ஒன்று தரப்படுகிறது என்றால் அது என்னவாக இருக்க வேண்டும்? என்று கேட்டார். பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் தனக்குத் தேவை என்று சொல்வார் என அந்த நண்பர் எதிர்பார்த்தார். ஆனால் ஹெலன் கெல்லரோ அமைதியாகப் பதில் சொன்னார்: ஷஇந்த உலகத்தில் அமைதி மலர வேண்டுமென்று கேட்பேன்| என்று. இயேசு எங்களுக்குத் தரும் அமைதியை உலகிற்கு அள்ளி வழங்குவோம்

Friday, April 26, 2013

அன்பு எப்படிப்பட்டது, ஏன் ஏற்பட்டது என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் அந்த அன்பு அனுபவிப்போம்.

28.04.2013 
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நாம் பிறரின் பால் செலுத்தும் அன்பு வழியாக இறைவன் மாட்சிமை அடையவேண்டும் என்றும், அன்பிலிருந்தே பிறர் நம்மை இயேசுவின் சீடர்களாக அடையாளம் காண்பர் என்றும் கூறும் இறைமொழி கேட்கின்றோம். 'நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்று இயேசு புதிய கட்டளை பற்றிப் பேசுகிறார். அனைத்து எதிர்நிலைச் சூழல்களையும் தடைகளையும் வாய்ப்புக்களாக மாற்றுவதே வரையறையற்ற அன்பின் சிறப்பாகும்.

'நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" இறைமக்களை வழிநடத்தும் குருக்களிடம் முன் உதாரணமான சகோதரத்துவமும் அன்பும் விளங்க வேண்டும் என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகின்றது. ஒரு குருவானவர் வரையறையற்ற அன்பின் மகுடமாக வாழ்ந்து காட்டவோண்டும் என்று கூறப்படுகின்றது. அப்போதுதான்  இறைமக்கள் அதனை பின்பற்ற உதவியாக இருக்கும். எனவே இறைமக்கள் பிறரின் பால் செலுத்தும் அன்பு வழியாக இறைவன் மாட்சிமை அடைமுடியும் என்றும், அந்த அன்பிலிருந்தே பிறர் நம்மை இயேசுவின் சீடர்களாக அடையாளம் காண்பர் என்றும் கூறிவிடலாம். திருத்தந்தை இரண்டாம் ஜோன் பவுல் ஒருமுறை கூறும்போது. 'குருவினுடைய வாழ்வு இறைமக்களுக்காக அவருடைய திருச்சபைக்கும் ஆற்றும் சாட்சியத்துடன் கூடிய அன்புப் பணிநிறைந்ததாக இருக்கவேண்டும் " என்றார்.

எனவே இங்கு மக்களை அன்பு செய்து பணிபுரிந்து இயேசுவின் சீடர்களாக இனம் காணப்பட்ட குருக்களில் ஒரு சிலரது அன்பு வாழ்வை பற்றி இங்கு குறிப்பிடுவது சாலம் பொருத்தம்: இயேசு சபை அருள்தந்தை பேத்ரோ அருப்பே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அணுகுண்டு ஹிரோசிமாவை அழித்தபோது ஜப்பானில் பணி புரிந்தவர். 80000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்த கொடுமையின்போது, அந்த நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை நவதுறவியர் இல்லம் பெரும் சேதமின்றி தப்பித்தது. அந்த இல்லம் ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும் காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள் அந்த இல்லத்தின் கோவிலில் அருள்தந்தை; பேத்ரோ அருப்பே திருப்பலி நிறைவேற்றினார். அந்தத் திருப்பலி நேரத்தில் அவர்அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்:'நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்று சொல்ல கைகளை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச் சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கைகள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்த பலிபீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத திருப்பலி அது" என்றார் அவர். அருள்தந்தை பேத்ரோ அருப்பே மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோசிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்ல, வெளியிலும் சென்று தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார்.
17ம் நூற்றாண்டில் கனடாவில் மனித உடலை, உடலின் பாகங்களை உண்ணும் பழக்கம் கொண்ட பழங்குடியினரிடையே பணி புரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை குருக்களில் Isaac Jogues ஒருவர். இவர் தொடர்ந்து அன்பு செய்து பணிபுரிந்த அந்த மக்களால் சித்ரவதைகள் செய்யப்பட்டார். இந்தச் சித்ரவதைகளால் தன் கை விரல்களையெல்லாம் அவர் இழந்திருந்தார்.
இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் 21 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட பேராயர் Dominic Tang காற்று வசதி சிறிதும் இல்லாத ஒரு சிறு அறையில் ஐந்து ஆண்டுகள் தனித்து அடைக்கப்பட்டிருந்தார். பேராயர் தன் சிறு அறையை விட்டு ஒரு சில மணி நேரங்கள் வெளியே வர உத்தரவு கிடைத்தபோது சிறை அதிகாரிகள் அவரிடம், 'இந்த சில மணி நேரங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?" என்று கேட்டபோது, பேராயர் Dominic Tang அன்புக்கு இலக்கணம் சொல்லிதந்த இயேசுவின் பெயரால் திருப்பலி நிகழ்த்த விரும்புகிறேன் என கூறினாராம்.
வியட்நாமில் சிறைபடுத்தப்பட்டு கடின உழைப்பு முகாமில் ஒன்பது ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தார் இயேசு சபை குரு Joseph Nguyen-Cong Doan. அந்த முகாமில், அவரோடு சிறைப்படுத்தப்பட்டிருந்த மற்றொரு குரு சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கொண்டு வந்திருந்த அப்பம் இரசம் இவைகளை இயேசு சபை குருவுடன் பகிர்ந்து கொண்டார். இரவில் மற்றவர்கள் படுத்து உறங்கியபின், துழளநிh தன் நெஞ்சை ஒரு பீடமாக பயன்படுத்தி, தன் சிறை உடுப்புக்களை தன் பூசை உடுப்புக்களாகக் கருதி அவர் ஆனந்த கண்ணீர் பொங்க அன்பே உருவான இயேசுவின் பெயரால் ஆற்றிய அந்தத் திருப்பளிகளைப்ப் பற்றி பின்னர் மற்றவர்களுக்குச் சொன்னார்.

இயேசுவின் அன்பு இப்படி பல கோடி மக்களின் மனதில் நம்பிக்கையை, வீரத்தை, தியாகத்தை, விதைத்துள்ளது. ஒருவரது அன்பு வெளிப்படும்போது, அதை அனுபவிப்பதே மேல். அதற்குப் பதிலாக, அந்த அன்பு எப்படிப்பட்டது, ஏன் ஏற்பட்டது என்ற ஆராய்ச்சிகளில் இறங்கினால், அங்கு அன்பு காணாமல் போகும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. அன்பு மனித குலத்தின் உயிர்நாடி. மனித குலம் இன்னும் உயிர் வாழ்வதே அன்புடையவர்கள் இருப்பதால் தான். இந்த அன்பைக் கொடுக்கவும், பெறவும் விரும்புவதே மனித இயல்பு. இந்தப் பரிமாற்றம் நம்மிலும் நிகழவேண்டும். இயேசுவின் அன்பு கரை காணாதது. அனைவரையும் அரவணைக்கக் கூடியது. அவருடைய நிறை அன்புக்கு நாம் சாட்சிகளாக வாழவேண்டுமென்றே விரும்புகிறார். இயேசுவின் அன்பு வாழ்வு நம்மில் பிரதிபலிக்கிறதா? தீர்மானங்களுடன் எம்மை திரும்பிப்பார்த்து முன்நகர்வோம்


Friday, April 19, 2013

தன்னைப் பின் தொடர்பவர்களின் துன்பங்களிலும் தன்னை இணைத்துக் கொள்பவரே தலைவர்

21.04.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள மாட்டார். என இயேசு கூறும் பைபிள் பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது. இங்கு ஆயன் ஆடுகள் கதை தெளிவாகின்றது. இயேசு தனது மந்தைய சேர்ந்த ஆடுகளுக்கும்  பிற ஆடுகளுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகின்றார். அவரது ஆடுகள் அவரது குரலை அடையாளம் கண்டுகொள்ளுகின்றன. அவரது குரலுக்கு செவிகொடுக்கின்றன. அவரை பின்தொடர்கின்றன. இப்போது ஆடுகள் யார் ஆயான் யார் என்ற கேள்வி எமக்குள் எழலாம்.

இறைவனை ஆயனாக, பராமரிப்பவராக, வழிநடத்துபவராக முற்காலத்திலிருந்தே மனித இனம் அழைத்து மகிழ்ந்துவருகின்றது. எனவே இறைமக்கள் தான் இங்கு ஆடுகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். அவர்கள்; ஆண்டவரே என் ஆயர் என்று  அழைக்க இயேசு நானே நல்லாயன்  என்றும் ஆடுகளுக்கு வாயில் நானே. என் வழியாய் நுழைபவர்களுக்கு ஆபத்தில்லை என்றும் கூறுகின்றார்.  ஆடுகளுக்காக ஓர் ஆயனின் பணிகள் இயேசு வாழ்ந்த காலத்தில் பல: பராமரித்தல், பாதுகாத்தல், உணவளித்தல், தாகம் தணித்தல், குணமாக்கல், வழிநடத்தல், தன் உயிரையேத் தருவது. நல்ல ஆயன் நானே. இறைதந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் அவரை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் என்ற இயேசு, தம்புவதற்கு வழிஇருந்தபோதும் ஆடுகளாகிய எமக்காக சித்திரவதையால் சிலுவையில் கொலைசெய்யப்படதன் மூலம் வாழ்க்கை பாடம் கற்பித்தவர்.

எந்த ஒரு சூழலிலும் தன்னைப்பற்றி சிந்திக்காமல், மற்றவர்களையே எண்ணி வாழ்வதைப்போன்ற ஓர் உயர்வான வாழ்வு உலகில் இல்லை. ஆபத்து, துன்பம் என்று வரும்போது தன்னைக்குறித்து ஒருவர் கவலைகொள்வதும், தன்னைக் காத்துக்கொள்ள முயல்வதும் வெகு சாதாரண மனித இயல்பு. அந்த இக்கட்டானச் சூழல்களிலும் தன்னைப்பற்றிய கவலை இல்லாமல், அடுத்தவரைப்பற்றி கவலைப்படும் மனம், மலைபோல் உயர்ந்த மனம். மனித வரலாற்றில் தங்களையே மறந்து, பிறருக்காக வாழ்ந்த பலரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்: 1912ம் ஏப்ரல் 15 டைட்டானிக் கப்பல் விபத்திற்குள்ளாகி மூழ்கியது நாமறிந்ததே. ஆயினும், இந்த விபத்தின்போது வெளிப்பட்ட ஒரு சில தியாகச் செயல்கள் நாம்மில் பலருந்கு தெரியாமலிருக்கலாம். அவற்றில் ஒன்று வுhழஅயள டீலடநளஇ துரழணயள ஆழவெஎடையஇ டீநநெனமைவ Pநசரளஉhவைணஇ என்ற மூன்று கத்தோலிக்க குருக்களைப் பற்றியது. கப்பல் மூழ்கிக்கொண்டிருந்தபோது, இம்மூன்று குருக்களுக்கும் உயிர்காக்கும் படகுகளில் தப்பித்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை மறுத்துவிட்டு, மரணத்தை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கியபடி, அம்மக்களுடன் இணைந்து செபித்தபடி அவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் இவர்கள் பெயர்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. தன்னைப் பின் தொடர்பவர்களின் இன்ப, துன்பங்களில். தன்னையே இணைத்துக் கொள்பவரே உண்மைத் தலைவர்.
 
மாவீரன் அலெக்சாண்டர் தன் படையுடன் மக்ரான் என்ற பாலைநிலத்தை ஒருமுறை கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். அவர் தாகத்தைத் தணிக்க, இரு தளபதிகள் நீண்டதூரம் நடந்து, சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அவர்களிடம், வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது என்று சொன்னார்கள். என் வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, எனக்கும் தண்ணீர் தேவையில்லை என்று நீரை மணலில் ஊற்றினாராம். துன்பம் என்று வந்தால், தங்களுடன் தலைவனும் சேர்ந்து துன்புறுவார் என்பதை உணர்ந்த வீரர்கள், தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி ஆர்ப்பரித்தனர். நல்லாயன் ஞாயிறென்று என்று அழைக்கப்படும் இந்த ஞாயிறில் நாம் இன்றையத் தலைவர்களைப பற்றி எண்ணிப் பார்க்கவும், வருங்காலத் தலைவர்களுக்காகச் செபிக்கவும் கடமைப்பட்டிருக்கின்றோம்.
 
இயேசுவை மட்டும் நம்பி அவர் கையில் எம்மை ஒப்படைத்து வாழ்ந்தால் இயேசுவும் நமக்கு  நல்ல ஆயனுக்கரிய பணிகளை நமக்குச் செய்வார். நாங்கள் யாருடைய கையில் இருக்கின்றோம், யாருடைய கையைப் பிடித்திருக்கின்றோம், யார் எங்கள் கையைப் பிடித்திருக்கின்றார் என்பதைப் பொறுத்துத்தான் எங்கள் வாழ்க்கைக்கு  நல்லவைகளும் அல்லது கெட்டவைகளும் வந்துசேரும். அன்பின் உச்சிக்கே சென்று தாமே அன்பாகி, நம்மேல் அளவு கடந்த அன்பைப் பொழியும் அன்பாம் ஆயனுக்கு அவருடைய அழைப்புக்கு அவருடைய படிப்பினைகள் மதிப்பீடுகளுக்கு, அவருடைய கட்டளைகளுக்கு நாம் செவிமடுக்கிறோமா?. என் ஆடுகள் என் குரலுக்குச் செவிசாய்க்கும் என்பார் இயேசு. நாம் இயேசுவால் என் ஆடுகள் என்று அழைக்கப்படும் நிலையில் உள்ளோமா? நம்முடைய வாழ்வைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff