Thursday, December 22, 2011

முகவரி அழிந்தவர்களுக்கு முகமானவரை எம் உள்ளங்களில் பிறக்கச் செய்வோம்

 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
ஆண்டவரின் பிறப்பை ஆன்மீகப் பலன் தரும் வகையில் கொண்டாட உங்களுக்கும் என் செபம் நிறைநல் வாழ்த்துக்கள். மானிடரின் முழு விடுதலைக்காகத் தன்னையே கையளித்த இறைமகன் இயேசு உண்மையாகவே மானுடத்திற்கு விடுதலை அளிக்க, மனிதரின் மாண்பினை மீட்டெடுக்க வந்துள்ளார் என்பதை உணர்ந்து மகிழ்வோம். கிறிஸ்மஸ் தன்னையும் தாண்டி சுட்டிக்காட்டுவது, சிலுவையிலும் உயிர்ப்பின் மகிழ்விலும் வெற்றியாக பெறப்பட்ட மீட்பையே. கடவுள் நம்மருகே வந்துள்ளார், நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மருகே இருக்கிறார் என்ற உணர்வில் பெறும் மகிழ்வால் இந்த கிறிஸ்மஸ் பெருவிழா நம்மை நிறைப்பதாக அமையவேண்டும்.

ஓவியத்திற்கும் காவியத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்ற கேட்டபோது: எனது வேலை நண்பா:; ஆறறிவு படைத்த மனிதன் வரைவது ஒவியம் மாறாக ஏழாம் அறிவு படைத்த புதுமனிதன் படைக்ககூடியது காவியம். பள்ளி மானவன்: எங்கள் ஆசிரியர்; கரும்பலகையில் எழுதுவது புரியாத ஒரு ஓவியம் அதைப்பார்த்து படித்து தேர்ச்சியடைவது நாங்கள் படைக்கும் காவியம். கல்லூரி மாணவன்: கற்பனைகோட்டையில் வரைவது நிஜமில்லா நிழலான ஒரு ஓவியம். மாறாக வாலிப பருவத்தில் படித்து சாதனைபடைப்பது நிஜமான ஒரு காவியம். பத்திரிகையாளர்: அரசியல்வாதியின் பல்வேறு வாக்குறுதிகள் கவர்ச்சி ஓவியங்கள். ஆனால் இதற்காக அவர் வாங்கிய வாக்குக்கள் அனைத்தும் எண்ணக்கூடிய காவியங்கள். மதகுரு: ஆலயத்திற்கு வருவோரின் பக்தி நிறமில்லா ஓவியம். அன்றாடம் இறைவன் பிரசன்னத்தில் வாழ்வைத்தொடங்கும் சிலரின் முயற்சி சாட்சி பகரும் காவியம். சுருக்கமாக சொன்னால் ஓவியம் கற்பனை உலகம் - காவியம் நிஜ உலகம். ஓவியமான மீட்பின் வரலாறு உண்மையான காவியமானதே இயேசு பிறப்பு விழா. ஆபிரகாம் முதல் இறைவாக்கினர் வரை இறைவன் பேசினார் அந்த குரலிருந்து இறைவனை பல்வேறுவிதத்தில் ஓவியம் தீட்டினர். அது கற்பனையளவில் ஒரு வரையறையோடு இருந்தது. இவர்கள் தொடர்ந்து கேட்ட வார்த்தை நான் உங்களோடு இருக்கின்றேன். ஆனால் இதை பொய்யென நினைத்து பிரிந்து பாதைமாறி பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டடிருந்த பொழுது இருப்பதை உறுதிப்பபடுத்தி மனிதம் வாழும் சூழலில் காவியம் ஆனதே கிறிஸ்துவின் பிறப்பு.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கி.பி8ம் நூற்றாண்டில் தாவீது அரசர் இணைத்த இஸ்ராயேல் அரசு மீண்டும் பிரிந்து இருளில் இருந்தபொழுது மெசியாவின் பேரோளியைநோக்கி வர அழைக்கின்றார். நம்பிக்ககையிழந்த நிஜமில்லா ஒவியமான வாழ்க்கையிலிருந்து நிஜமான ஒளியான இறைவன் வருகிறார் வாருங்கள் என அழைக்கிறார். அவர் தாவீதின் வழிமரபில் வருவார். நம் முன்னோரிடம் பேசி நம்மிடம் பேசி நம் கற்பனையில் ஓவியமாய் இருக்கும் இறைவன் நமக்கு அருகாமையில் நம் மத்தியில் நம்மில் மனிதமாக வருவார் என அழைக்கின்றார். அவர் வியத்தகு ஆலோசகர் வலிமைமிகுஇறைவன் என்றுமுள்ள தந்தை அமைதியின் அரசர் என்ற அடைமொழிகள் அவரின் நிரந்தர நிஜமான இருக்கபோகின்ற பிரசன்னத்தை எடுத்துரைக்கின்றன.
நற்செய்தியில் லூக்கா இயேசுவின் பிறப்பை உரோமை ஆளுநர் செசார் அகுஸ்து ஆட்சி பின்னனியில் அமைக்கின்றார். மற்றும் இயேசுவை பெத்தலேகமின் மையமாகவும் அழகுசெய்கிறார். அங்கு மறைமுகமாக யார் தாவீதின் வழிமரபில் அரியணையில் யூதர்களின் அரசராக வருவார் என கண்டெறியவும் கணக்கெடுப்பு நடந்தது. இது இயேசுவின் குடிசை காவியத்தின் முதல்படி.

யோசேப்பும்-மரியாவும் நாசரேத்திலிருந்து பெத்தலேகமைநோக்கி 80மைல் தொலைவு கடந்துசென்றனர். அவர் இங்கு பிறந்து வளர்ந்ததினால் அவர் அதற்கு மையமாக இருந்தார். இயேசு இறைவன் மனிதமாக பெத்லேகேமின் மையமானர் காவியமானார். முறைக்கல்வி வகுப்பு ஒன்றில் கிறிஸ்துபிறப்பின் நிகழ்வை எடுத்துரைத்து அனைவரையும் அதனை ஒவியப்படமாக வரையும்படி ஆசிரியர் கேட்டார். சறு மானவன் வித்தியாசமாக குடிவில் இரண்டு குழந்தை வரைந்திருந்தான். ஏன் என்று ஆசிரியர் கேட்டபொழுது. “நான் வரைந்தபொழுது பாலன் இயேசு உன்னோட நான் வரலாமா என்றுகேட்டர். நான் ஒரு யாருமில்லா யாருமறியா அனாதை. வெறுப்பையும் மறுப்பையுமே சம்பாதித்தவன். எப்படி வாழ்வது என தெரியாமல் தத்தளிப்பவன். ஏன்னுடன் நீ வாழ வரவேண்டாம் என்றேன்.” அப்போது இயேசு “நீ என்னோடு வா. நான் உன்னோடு உனக்காக எந்நாளும் பிறந்து கொண்டேயிருப்பேன்.” என்று கூறினார். எனவே நான் தனிமையல்ல அனாதையல்ல என்னிடம் இனிமேல் வெறுப்பு மறுப்பு இல்லை. எந்நாளும் புதுபிறப்பு ஆகவே இவ்வாறு வரைந்தேன் என்றான். இஸ்ராயேல் மக்கள் கற்பனையில் நிழலாடிய இறைவன் இவ்வுலகில் நிஜமானார் குடிசையில். முகவரி அழிந்தவர்களுக்கு முகமாய், உறவை இழந்தவர்களுக்கு உடன்பிறப்பாய், ஏழ்மையில் மூழ்கிபோனவர்களுக்கு ஏற்றமாய், வாழ்வில் தோற்றுப்போனவர்களுக்கு தோளானய், அனாதைகளுக்கு அன்பனாய்.  நாதியற்றோரக்கு நட்பனாய் நம்முன் நம்மோடு நமக்கருகில் நடக்கின்றார். ஓவியம் காவியமாகிவிட்டது நம்மில் கலந்துவிட்டது. குடிசையில் காவியமான கிறிஸ்து மக்கள் நடுவேயுள்ள குறைபாடுகளை அகற்றும் பணி நம்மால் நடைபெறவேண்டும். உலகில் மாந்தர் உள்ளவரை இக்குறைபாடுகள் இருக்கும். அதுவரையிலும் இப்பணிகள் நடைபெற வேண்டும். காலங்களைக் கடந்தவர் கால எல்லைக்குள் வந்து இப் பணிகளை எல்லாரும் எல்லாருக்கும் செய்யவேண்டும் என உணர்த்தனார். இன்று விழா கொண்டாடும் நாம் நம்மால் இயன்ற அளவில் உலகம் முடியும் வரை இப்பணியைச் செய்யவேண்டும். இந்தப்பணிகளை நாம் செய்து ஆண்டவர் முன் நிற்போம் அப்போது நாம் கொள்ளும் மகிழ்வு அளவிட முடியாதாக இருக்கும். இயேசுவுடன் இணைந்து நின்று புதிய இயேசுவாக நாம் மாறுவோம்-பிறப்போம். நாம் பெற்ற பெருவாழ்வை நம்மைச் சுற்றி வாழ்வோரும் பெறச் செய்து புதிய சமுதாயமாக அவர்களையும் பிறக்கச் செய்வோம். இந்த நல்ல உணர்வுகளப் மகிமைமிகு இயேசு பிறப்பு பெருவிழாவில் பெற்றவராய் இயேசுவை நம் உள்ளங்களில் பிறக்கச் செய்வோம்.


No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff