Tuesday, September 30, 2025

கோடி பெற்ற கேடி

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியான தர்ணங்களில் அன்புக்குரியவர்கள் பரிசில்கள் தருவார்கள். ஏன் இங்கு இது என எண்ணலாம். போகப்போகப் புரியும். அப்படிக் கோடிப் பெறுமதியானப் பரிசைப் பெற்ற கேடி ஒருவர் இருப்பதான செய்தியை அறியமுடிந்தது. அந்த பரிசை பெற்றவர் வேறு யாருமல்ல, நன்கு பரீசையமான சம்பத் மனம்பேரி என்னும் இலங்கையர்தான். 

யார் இந்த சம்பத் மனம்பேரி

சுருக்கமாகச் சொன்னால் ஒரு காலத்தில் முன்நாள் சனாதிபதி மஹிந்தஇராஜபக்சையின் பாதுகாப்புப் பிரிவில் கன்ஸ்டபிள். அத்துடன் முன்நாள் பிரதேசசபை உறுப்பினரும்கூட. இலங்கையின் 75மூ பாதாளஉலக நிழற் காரியங்களிலும் 50மூமேற்பட்ட போதை வினையோகத்திலும் சம்மந்தப்பட்டிருந்து இந்தோனேசியாவில் கைதான ஹெகல் பத்திர பத்மே, பக்கோசமனக் கும்பலுடன் மிகநெருக்கமான தொடர்புகளைப் பேணியவர். மனம்பேரிக்கு அந்த பரிசு வண்டியை வழங்கிய பாரி வள்ளல் யார் என்று நீங்கள் அறிய ஆவலாக இருக்கலாம். சம்பத் மனம்பேரி ஒரு வீடு கட்டினாராம். அந்த வீட்டினுடைய திறப்பு விழாவிற்குப் பல முக்கிய அரசியல்வாதிகள் சென்று விதம்விதமான பரிசுப் பொருள்களை வழங்கியிருக்கிறார்கள். மனம்பேரியினுடைய வீட்டுக்கு வருகை தந்திருந்த ஒரு பிரபல அரசியல் பிரமுகருடைய வாகனம் அங்கே உள்ளவர்களின் கண்களை உறுத்தியருக்கிறது.

மனம்பேரியின் வீட்டுக்குச் சமமான கவனக்குவிப்பை அந்த வாகனம் பெற்றுள்ளது. அந்த அளவுக்குச் சொகுசாய் இருந்திருக்கிறது அந்த வண்டி. இந்த அரசியல் பிரமுகர் பிரியாவிடைபெறும்போது, அந்த கார் சாவிவை மனம்பேரியிடம் கொடுத்து, வைத்துக்கொள்ளப்பா என்றாராம். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனராம். இந்த அரசியல்வாதி யார் என்பதை காலமும் நிகழ்வுகளும் இன்னும் சில நாள்களில் சொல்லிவிடும். அப்போது நாம் உத்தியோகபூர்வமாக இதனை அறியத்தரலாம். மனம்பேரியின் தடாலடி கார்க் காட்சியுடன் இந்த கட்டுரையை ஆரம்பிப்பதன் நோக்கம் கிளைமக்சில் தெரிந்துவிடும். 

ஏ.எஸ்.பி. ரோஹான் ஒலுகல்ல விசாரணை

ஹெகல் பத்திர பத்மேயிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டுப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்படி விளக்கமறியலில் மேல்மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். மனம்போரியை விசாரிப்பது ஏ.எஸ்.பி. ரோஹான் ஒலுகல்ல. இன்று இலங்கையில் துணிச்சலான, மிடுக்கான, கீர்த்திமிகு பொலிஸ் அதிகாரிகளுள் ஒலுகல்லவும் ஒருவர். அவர்தான் இந்தோனேசியாவிலிருந்து ஹெகல் பத்திர பத்மே குழுவினரை அள்ளிக்கொண்டு இலங்கைக்குக் வந்தவர்.  

சரி ஆரம்பிக்கலாமா?| என்று எல்லா அட்டூளியங்களுடனும் கூட இருந்த தோஸ்தான சம்பத் மனம்பேரியின் ஷகைத்தொலைபேசிக்கு என்ன நடந்தது| என்றுதான் விசாரணை தொடங்கப்பட்டதாம். அண்மையில் மனம்பேரி பாவித்த கைத்தொலைபேசி பொலிசாரிடம் சிக்கியது. ஆனால் அதன் பின்புலம் மனம்பேரியிடம் இருந்தது அவர் வருடக்கணக்கில் பாவித்த தொலைபேசி அல்ல.  ஏ.எஸ்.பி. ரோஹான் ஒலுகல்ல ஷதொலைபேசிக்கு என்ன நடந்தது| என்று கேட்டு நின்றபோது, தான் வெள்ளவத்தையில் ஒரு ரயில் தண்டவாளத்தில் அதனை வைத்ததாகவும் ஒரு ரயில் அதன்மீது ஏறியதால் அது தூள்தூளாகச் சிதறியதாகவும் தனக்கு அந்த தொலைபேசியை வைத்த இடத்தைக் காட்ட முடியும் என்றும் மனம்பேரி சொல்லியிருக்கிறார். மித்தனியாவில் இருக்கும் மனம்பேரி குறிப்பாய் ஓர் இடத்தில் தங்கியிருக்கவில்லை என்பது பரிகிறது. இப்படிப் பல வருடங்களாய்ப் பாவித்த கைத்தொலைபேசி ஆயுளை இழந்துபோனதும், மித்தனியவில் இருக்கும் அதாவது மனம்பேரி பேரழிவாயுதங்களை மறைத்து வைக்க உதவிபுரிந்த அவருடையதோழி கொடுத்த கைத்தொலை பேசியைத்தான் பாவித்திருக்கிறார். அந்த கைத்தொலைபேசிதான் பொலிஸ் வசம் இருக்கின்றது. இதுதவிர மனம்பேரிபாவித்த நான்கு வங்கி அட்டைகளும் சுங்கத் திணைக்களத் திலிருந்த ஐஸ் இரசாயண மாதிரிகளை விடுவிக்கச் சமர்ப்பித்த ஆவணங்களும் அவற்றுக்குக் கட்டிய சிட்டைகளும் மனம்பேரியின் தோழிவீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. மனம்பேரிக்குப் பாதுகாப்பும் தங்குமிடமும் கொடுத்ததுகாக மின்சாரசபையில் வேலைபார்த்து வந்த ஒருவரைக் கைது செய்தது பொலிஸ்.

சிக்கிய தொலைபேசிகள்  

மனம்பேரியின் கைதும் இன்று அவர் பொலிஸ் அதிகாரி ஒலுகல்லவிடம் ஒப்படைக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் அதிர்வலைகளும் எக்கச்சக்கம். நாம் மிச்சம் மீதி வைக்காமல் இந்தப்பாதாள சாம்பராச்சியத்தை ஒழிப்போம். அனைவரையும் சட்டத்தின் பிடியில் நிறுத்துவோம் என்கிறார் பொது மக்கள்பாதுகாப்பு மற்றும் நாடாளமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால. இந்த விசாரணைகள் வேகம் எடுத்திருப்பதற்கும் பலகைதுகள் நடப்பதற்கும் ஹெகல் பத்திர பத்மே குழுவினரிடமிருந்த 32 கையடக்கத் தொலைபேசிகள்தான் காரணமாம். இதில் சில தொலைபேசிகள் உயிர்ப்புடன் இருந்தன. சிலவற்றில்  உரையாடல்கள் அழிக்கப்பட்டு இருந்தன. மனம்பேரியும் ஹெகல் பத்தர பத்மே குழுவும் நடத்திய வாட்சப்குழு உரையாடல்கள் எல்லாம் வெட்டவெளிச்சமானதும் இத்தொலைபேசிகளால்தான்.


மனம்பேரியினுடைய வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 50,000 கிலோ ஐஸ் இரசாயண மாதிரிகளை துறைமுகத்துகுச் சென்று விடுவிக்குமாறு பக்கோசமான் இந்தோனேசியாவிலிருந்து அனுப்பிய தகவல்கள் எல்லாம் ஆதாரங்களுடன் வசமாய் சிக்கியதும் இதே தொலைபேசிகளால்தான். இந்தோனேசியாவில் ஒரு ஹோட்டேலில் தங்கியிருந்த ஹெகல் பத்திர பத்மே தலைமையிலான ஒரு குழு ஹோட்டேலை காலி செய்துவிட்டு அவசர அவசரமாய்த் தப்பி ஓடியபோது, ரோஹான் ஒலுகல்லவின் அணியும் இந்தோனேசியாவின் குற்றப்புலனாய்வுப் பிரிவிநரும் 70கி.மீ துரத்திச் சென்றுதான் மடக்கிப் பிடித்திருக்கின்றார்கள்.  

காவற்துறைக்குள் கறுப்பு ஆடு 

ஹோட்டேலிலேயே கைது செய்து அழைத்து வர வேண்டிய இந்த விவகாரத்தை அனாவசியமாக சிக்கலாக்கியது யார் என்ற கேள்விக்குப் பதில் ஒரு பொலிஸ் அதிகாரி என்பதுதான். ரோஹான் ஒலுகல்ல உங்களைத் தேடி வந்துகொண்டு இருக்கிறார் என்று பொலிஸ் திணைக்களத்திருந்த ஒரு கறுப்பு ஆடுதான் போட்டுக் கொடுத்திருக்கிறது. இங்கே ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. ரோஹான் ஒலுகல்லவின் இந்தோனேசியா ஒப்பரேன் விரல் விட்டு எண்ணக் கூடி ஒரு சில பொலிஸ் உயர் ஆதிகாரிகள் மட்டுமே அறிந்திருந்த ஒன்று. ஆனால் தருண் எனப்படும் இலங்கை அரசு இப்போது தேடிக்கொண்டிருக்கும் - இப்போது வெளிநாடு ஒன்றில் வாழும் பாதாள உலகக் கேடியிடம் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார் குறித்த பொலிஸ் அதிகாரி. அத்தோடு நின்றுவிடாமல் இன்ரப்போல் வழியாக இவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு ஆணை தொடர்பான ஆவணங்களை அனுப்பியிருக்கிறார் குறித்த பொலிஸ் அதிகாரி. இவை அனைத்தும் ஹெகல் பத்திர பத்மே தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறன. இந்த அளவுக்குத் தைரியமாய் உள்வீட்டு இரகசியங்களை எல்லாம் அனுப்பிய பொலிஸ் அதிகாரியும் இந்தோனேசியாவில் சிக்கிய பாதாளக் கோஷ;டியும் இப்படி ஆகிவிடும் என்று என்றைக்குமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

சம்பத் மனம்பேரி, ஒலுகல்லவிடம் வழங்கிய வாக்குமூலம்

அதில் தாம் இதே தருணின் துணையுடன் படகுமூலம் இந்தியாவுடாக வேறோர் நாட்டுக்குச் செல்ல இருந்ததாகவும் சொல்லியிருந்தார். இந்தோனேசியாவில் இந்தக்கும்பல் கைதுசெய்யப்பட்ட செய்தி வந்ததும் மனம்பேரி குறித்தக் கொள்கலன்களை அவசரம் அவசரமாகப் புதைக்கத் தொடங்கினார். இந்த கைதுகள் இலங்கை அரசியலின் ஒரு திருப்பு முனை என்றும் சொல்லலாம். இல்லாவிட்டால் மனம்பேரி என்ற நபரும் மித்தனியவில் வாழ்ந்து மடியும் சாமானியமான ஒருவர்போல் கடைசிவரை இருந்திருக்கும். வெள்ளை வெளேர் என்ற ஆடையில் புனிதவேடம் போடும் எட்டப்பர்களுடைய அசுத்தங்களும் காலத்தோடு கரைந்துபோயிருக்கும். இந்த நிகழ்வுகள் எல்லாம் உணர்த்துவது என்ன?;: பொலிஸ் கறுப்பு ஆடு கம்பஹாவில் போதை மாபியாவுடன் சம்பந்தப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி கைதாகிறார். மித்தனியவில் நடந்த ஒரு கொலைக்கு மற்றொரு பொலிஸ் அதிகாரி கைதாகிறார். இந்த வருடத்தில் இதுவரை போதைவஸ்துடன் தொடர்புபட்டிருந்தக் குற்றங்களுக்காக 68பொலிஸ் அதிகரிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.இதெல்லாம் இலங்கையில் உத்தியோகப்பூர்வ அரசுக்கு மேலதிகமாய் இயங்கிய பாதாளவுலக அரசின் குரூர முகத்தைத்தான் துள்ளியமாய் கட்டம் போட்டுக் காட்டுகிறது. 

சனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் உரை

சனாதிபதி அனுர குமார திசாநாயக்கா நியுயோக்கில் வாழும் இலங்கையர்களை அண்மையில் சந்தித்தபோது ஆற்றிய உரை மிக முக்கியமான ஒன்று. அவர் இந்தப் பாதாள அரசின் பயங்கரத்தை விபரித்துச் சொல்லியிருந்தார். பேர்போன கிருமினல் ஒருவருக்கு மூன்று பாஸ்போட்டுகளை செய்து கொடுத்திருக்கிறார்கள். எப்படி இது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம். புறக்கோட்டையில் புத்தகம் விற்கும் ஒருவரை அழைத்துவந்து குறித்த கிருமினலுக்குப் பதிலாகக் கை விரல் அடையாளத்தைப் பதித்திருக்கிறார்கள். நீதிமன்ற விசாரணைகளின்போது குறித்த குடிவரவு அதிகாரிகள் சொன்னது: குற்றவாளியின் முகமும் இந்தப் புத்தகக் கடைகாரரின் முகமும் ஒரே மாதிரி இருந்தது என்று. இதேபோல 2008ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை 2003ஆண்டுக்குப் பதிவுசெய்கிறது மோட்டார்த் திணைக்களம். கல்கிசையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் வு-56 துப்பாக்கிகளைக் களவாடி விற்றுவிட்டு நாட்டை விட்டுத் தப்பி ஓடி இருக்கிறார்.

ஒரு பாதால உலக தாதா தன்னை தடுப்புக் காவலிலிருந்து சிறைக்கு மாற்றப் போவதாகவும், இனி தான் சுதந்திர மனிதன் என்றும் சொல்லுகிறார். அதாவது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்போது தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டால் தன்னால் செய்யமுடியாதது எதுவுமில்லை என்றுதான் அர்த்தம். மாத்தறை சிறைச்சாலையில் புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள இருந்ததால் அங்குணுக்குள்ள பலச சிறைக்கு மாற்றப்பட்டனர். அப்போது மாத்தறைச் சிறைச்சாலையில் இருந்த பொருள்களைக் கண்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஏராளமான கைத்தொலைபேசிகள், சாஜர்கள், ரவுட்டர்களோடு பொலிசார் கைதுசெய்தால் மாட்டும் ஏழு கைவிலங்குகள். இதை யாரிடம் போய்ச்சொல்வது. சிறைக் கைதிகள் கை விலங்குகள் வைத்திருக்கும் அதிசயத்தைக் கண்டிருக்கிறீர்களா? இப்படித்தான் இராணுவ முகாமொன்றிலிருந்து வு-56 துப்பாக்கிகள் 73 கடந்தகாலத்தில் மாயமாகின. இவற்றில் 38 கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 35துப்பாக்கிகளைக் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருக்கின்றன.

கமாண்டோ ஒருவர் ஓர் இலட்சம் தோட்டாக்களைப் பாதால உலகுக்குக் களவாக விற்பதற்குப் பேரம் பேசியிருக்கிறார். 350 விற்றபோது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு என்று பாஸ்போட் பெறுவதற்கு இமிக்ரேசன் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆயுதங்கள் வழங்கக் காவல்துறைகளில் ஆள்கள் இருக்கிறார்கள். வாகனங்களைப் பதிவுசெய்து கொடுக்க மோட்டார்த் திணைக்களத்தில் அதிகாரிகள் இருக்கிறார்கள். சில காலம் இப்படியே நாடு போயிருந்தால் உத்தியோகப் பூர்வ அரசு கலைந்துபோய் இந்தப்பாதாள உலக அரசே ஆண்டிருக்கும். அவர்களின் நீதிமன்றங்களில்தான் வழக்குகளும் நடந்திருக்கும். நாம் இதை மாற்றிக் கொண்டிருக்கிறோம். இப்போது இவர்களின் இந்த காட்டு தர்பார் ஆட்டம் கண்டு இருக்கிறது. இன்னும் தோண்டத் தோண்ட இந்த நாசகாரத்தினுடைய பருமன் வெளிப்படும் என்று பலத்தக் கரகோசத்துகு மத்தில் சொல்லிக்கொண்டு போனார் சனாதிபதி அனுர குமார திசாநாயக்கா. உண்மையில் இவர்கள் கறுப்புப் பொருளாதாரம் ஒன்றை உருவாக்கினார்கள். அரசியல்வாதிகளுக்குக் கோடிகளில்பணம் வழங்கினார்கள்.சில அரசியல்வாதிகள் இவர்களின் வீடுகளுக்குப் போய் வரி வசூலிப்பதுபோல மாதாமாதம் பணம் பெற்றிருக்கிறார்கள். முக்கியமான அரச திணைக்களங்களில் தமக்குத் தோதான சில அதிகாரிகளுடன் நட்புப் பேணிக் கொண்டு தாராளமாய் இலஞ்சமும் கொடுத்திருக்கிறார்கள். 


முடிவு

மனம் பேரியின் கார் பற்றி ஆரம்பத்தில் சொன்னோம் அல்லவா இவ்வளவு பெரிய கறுப்பு இராச்சியத்தில் மனம்பேரி போன்ற ஒருவருக்கு அரசியல் பிரமுகர்கள் நவீன ஹெலிக்கொப்டர் ஒன்றை வழங்கி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. இந்த கறுப்பு இராச்சியத்தை ஒரே நாளில் அழித்து ஒழிக்க முடியாது. ஆனால் ரோஹான் ஒலுகல்ல, ஷhனி அபேசேகர போன்ற மிகச்சிறந்த பொலிஸ் அதிகாரிகளும் ஒட்டுமத்த அரசு முறைமையும் இந்த வேகத்தில் இயங்கினால் இந்த பாதாள அரசின் எச்சசொச்சங்கள் கழை எடுக்கப்பட்டு இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசு மட்டுமே எஞ்சி இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. ரோஹான் ஒலுகல்ல, ஷhனி அபேசேகர அவர்களின் அடுத்த அதிரடி ஆட்டம் சனத் ஜெயசூரியா களுவித்தாரணவின் 96யின் அதிரடி ஆட்டத்தை மீண்டும் நிற்சயம் நினைவுபடுத்தும். ( compiled from S.K. Kiruththikan tiynahspg; gjptpypUe;Jk; https://tamilwin.com, https://thaainews.com, https://www.dailymirror.lk,  https://island.lk, https://www.newswire.lk, https://adaderana.lk/ https://www.newsfirst.lk,https://colombotimes.lk,

Wednesday, September 24, 2025

கோட்டாபாய இராஜபக்ஸவினால் தூக்கி எறியப்பட்ட ஷhனி அபேசேகர மஹிந்தவின் மாளிகைக்குள் நுழைந்த கதை

 கோட்டாபாய இராஜபக்ஸவினால் தூக்கி எறியப்பட்ட ஷhனி அபேசேகர மஹிந்தவின் மாளிகைக்குள் நுழைந்த கதை

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

ஷhனி அபேசேகரவைக் கைது செய்தார்கள். சிறையில் அடைத்தார்கள், ஓய்வுதியத்தைப் பறித்தார்கள். பதவி இறக்கினார்கள். இலங்கையின் மிகத் திறமையானப் புலனாய்வு அதிகாரி ஒரு குப்பையைப்போல் தூக்கி எறியப்பட்டார்.

இவ்வாறு கொடுமைகள் புரிந்ததன்மூலம் இராஜபக்சைகளின் சாம்ராஜியம், ஷhனி அபேசேகர (ளூயni யுடிநலளநமயசய) என்ற அத்தியாயத்தை முற்றிலுமாக அழித்து விட்டதாக நினைத்தது. ஆனால் எந்த இராஜபக்சைக்கள் ஷhனி அபேசேகர அவர்களைப் பழிவாங்கினார்களோ அதே இராஜபக்சைக்களின் கதையை முடிக்க அதே ஷhனி அபேசேகர திரும்பி வந்திருக்கிறார். திகில் நிறைந்த இந்தக்கதையை ஆரம்பிக்கலாம். மீண்டும் அதிகாரத்திற்கு வந்திருக்கக் கூடிய ஷhனி அபேசேகரவிற்கு முன்னால் இரண்டு பிரமாண்டமான சவால்கள் காத்திருக்கின்றன:-

காத்திருக்கும் சவால்கள்:-

முதலாவது: இந்துனேசியாவில் கைதாகி இப்போது ஊஐனு காவலில் இருக்கும் பாதாள உலகக்கும்பல் - அரசியல் வாதிகளினுடைய ஏவல் நாய்களாக இருந்த இவர்கள் - இப்போது தாங்கள் யாருக்காக வேலைசெய்தோம் என்ற உண்மைகளைக் கக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களின் வாக்குமூலம் இலங்கையின் பழம்பெரும் தலைகளின் முகத்திரையைக் கிழிக்கப்போகிறது. இவர்களோடு சம்பந்தம் வைத்திருந்த அரசியல் வாதிகளும் ஓடி ஒழிந்துகொண்டு இருப்பதால் இவர்கள் தமக்குள்ளேயே அடித்துச் செத்துகொண்டு இருக்கிறார்கள். மொத்தமாய் எல்லாரையும் கூண்டோடு அள்ள ஊஐனு விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றது. 

யார் இந்த மௌலானா:-

இரண்டாவது: இதைவிட பெரிய சவால்: ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலின் முக்கிய சாட்சியான ஹசீர் அசாத் மௌலானாவை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவது. 270 அப்பாவிகளின் உயிரைப் பறித்த ஈஸ்ரர்த் தாக்குதல் ஓர் அரசியல் சதி என்கிற மௌலானாவின் வாக்குமூலம் இலங்கையின் சரித்திரத்தையே மாற்றக்கூடியது. அசாத் மௌலானா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இப்போது பல்வேறு சட்டச்சாட்டுகளின் நிமிதம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பவருமான பிள்ளையானின் இணைப்புச் செயலாளராயிருந்தவர். மௌலானா இலங்கையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக்கூறி சுவிஸ்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார். அரசியல் தஞ்சம் கோரியிருப்பவரினுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வழங்கப்படும் பாஸ்போட்டில் அச்சுறுத்தல் உள்ள நாட்டைத் தவிர மற்ற நாடுகளுக்குச் செல்ல முடியும். ஆகவே சற்றுச்சிக்கலான விவகாரம் இது. மௌலானாவை மீண்டும் எந்த வழியிலேயேனும் நாட்டுக்குள் கொண்டுவரும் ஏற்பாடுகளையும் ஊஐனு செய்து கொண்டிருக்கிறது. மௌலானா எப்படியும் அழைத்து வரப்படுவார் என்று அமைச்சர் விமல் இரத்நாயக்கவும் கடந்த வாரம் அறிவித்திருந்தார். 

ஷhனி அபேசேகரவின் திரும்பி வருகை:-

ஷhனி அபேசேகர் திரும்பி வந்திருக்கிறார். ஆனால் அவருடைய முதல் அடி எங்கே விழுந்திருக்கிறது தெரியுமா? இராஜேபக்சைக்களின் கோட்டையிலேயே விழுந்திருக்கிறது. மஹிந்த இராஜேபக்சையினுடைய ஏக்கர் கணக்கான ஆடம்பரபங்களா இனி இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊஐனுக்கு உடையதாக மாறியிருக்கிறது. இது ஒரு மிக தெளிவான செய்தி. இனி உங்களின் கோட்டைக்குள் இருந்தே உங்களை வேட்டையாடுவோம் என்கிற ஒரு ஸ்மார்ட்டான இராஜதந்திரம். ஆனால் ஒரு சாதாரண மனிதரால் இப்படி இவ்வளவு பெரிய சத்திகளை எதிர்க்க முடிகிறது. கையே வைக்க முடியாது என்று இலங்கையில் உள்ள 99மூ நம்பப்பட்ட முன்னாள் சனாதிபதி ரணிலின் மீதும் கை வைத்தார். சிறையிலடைக்கப்பட மூளையானவர் ஷhனி அபேசேகர எனலாம். எனவே முதல் பந்திலிருந்தே சனத் ஜெயசூரியாவின் சிக்சர்களை நாம் மிக நீண்ட நாள்களுக்குப் பின்பு கண்டுகளிக்கலாம் போலவும். சனத்தாட்டம் சல்லடைபோடும். போடவேண்டும்.

யார் இந்த ஷhனி அபேசேகர:-

இலங்கை பொலீஸ் திணைக்களத்தில் ஹொலக் ஹோம்ஸ் என்று அழைக்கப்படும் கீர்த்திமிகு பொலீஸ் அதிகாரியான ஷhனி அபேசேகர, அனுர குமார திசாநாயக்கா சனாதிபதி அவர்களால் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பொலீஸ் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவருக்குக் குற்றப் புலனாய்வு, பகுப்பாய்வு மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மிகத்திறன்படத் தன்னுடைய பணியைமுடித்த ஷhனி அபேசேகர மீண்டும் தனக்குத் தோதான காக்கிச் சட்டையைப் போட்டுக்கொண்டு ஊஐனு பணிப்பாளராய் அனுர குமார திசாநாயக்காவுக்குச் சல்லூட் அடித்து நடந்தபோது ஷhனி அபேசேகரவின் இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விசிலடித்து கொண்டாடினார்கள். ஷhனி அபேசேகர திரைப்படக் கதாப்பாத்திரம் அல்ல. அவர் நிஜ சாதனையாளர்;.

1986ஆண்டு சப்;பின்ஸ்பெக்டராய் பொலீஸ் திணைக்களத்தில் சேர்ந்த ஷhனி அபேசேகர பொலீஸ் விசேட அதிரடிப்படையிலும் சனாதிபதி பாதுகாப்புப் படையிலும் பணிபுரிந்தார். அவரின் துணிச்சல்மிகு சேவை அவரை 1999ஆண்டு ஊஐனுக்கு உள்ளீர்க்க வைத்தது. ஷhனி அபேசேகர என்றால் எம் நாட்டு மக்களுக்கு யார் என்று புரிய வைக்கும் அளவுக்கு அடுத்து வரும் குற்றங்களும் சம்பவங்களும் விசாரணைகளும் அமைந்தன. 

சட்டண பத்திரிகையின் எழுத்து:-

ஷhனி அபேசேகர 1999ஆண்டு முதல் இலங்கையில் மெல்ல பிரபல்யமடையத் தொடங்கினர். அப்போதைய சனாதிபதி சந்திரிக்காவுக்கும் நடிகர் சனத் குணத்திலக்காவுக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சிங்கள வாசகர்கள் மத்தியில் பிரபலமான விடயத்தைச் சட்டண பத்திரிகை எழுதியது. அந்நாளில் சனத் குணத்திலக்காதான் சந்திரிக்காவுக்கு எல்லாமே. மனேஜர், இணைப்புச் செயலாளர், பி.ஏ மாதிரி. சட்டண சந்திரிக்கா அரசினுடைய ஒவ்வொரு ஊழலையும் அச்சமின்றி எழுதித் தள்ளியது. அவுஸ்ரேலியாவில் இருக்கும் குருபரன் என்ற கோடிஸ்வரர் சனல்-9என்ற தொலைக்காட்சி சேவையை இலங்கையில் தொடங்க சனத் குணத்திலக்காவை அணுகியதாகவும் அனுமதிப்பத்திரம் பெற்றுத்தந்தால் பதிலுக்கு 20மில்லியன் டொலர் இலஞ்சம் தர குருவரன் ஒப்புக் கொண்டதாகவும் சந்திரிக்காவும் அத்தொலைக்காட்சி சேவையில் காமினி இராஜனாயகம் என்ற பினாமி பெயரில் பங்குதாரராக விருப்பியதாகவும் சட்டண அப்போது எழுதியது. இதன் விழைவுகள் மிகப் பயங்கரமாக அமைந்தன.

கொலைகளும்  ஷhனி அபேசேகர மேற்கொண்ட நடவடிக்கைகளும்  

பர்த்தகானே சஞ்சிவ என்ற அரச அனுசரணை பெற்ற அந்நாளின் பாதாள உலக தாதவால்  சட்டண பத்திரிகை ஆசிரயர் ரோஹன குமார படுகொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய அந்த படுகொலையின் சூத்திரதாரி பத்தகானே சஞ்சிவ என்று, இளம் உப பொலீஸ் பரிசோதகரான ஷhனி அபேசேகர கண்டுபிடித்தபோது உடனே விசாரணை நிறுத்தப்பட்டது. இதே போல ஒன்றுதான் 2005ஆண்டு ராஜிகிரிய ரோயல் பார்க்கில் நடந்த சுவீடன் யுவதியான ஈமான் யோன்ஸ் படுகொலை. சாட்சியே இல்லாமல் நடந்தேறிய அந்த பயங்கரத்தினுடைய பின்னணியை விசாரித்தவரும் ஷhனி அபேசேகர தான். ஆங்காங்கே பதிந்திருந்த கைரேகைகள் மூலம் குற்றவாளி யூட் மஹாவின் கையில் விலங்கைப் பூட்டினார் ஷhனி அபேசேகர. பம்பலபிட்டி கோடிஸ்வர வர்த்தகர் சியாம் படுகொலையில் னு.ஐ.பு.வாஸ் குணவர்த்தனவை உள்ளேதள்ளிய பெருமையும் ஷhனி அபேசேகரவுக்கே. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமத்துங்கவின் கொலை, நாடாளமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் கொலை, அங்குலானய இரட்டை கொலை, உடத்தலவின முஸ்லீம் இளைஞர்கள் கொலை, பார்தலக்ஸ்மன் கொலை, 11தமிழ் மாணவர்கள் கொலை - 2007-2009காலத்தில்11 இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், றக்கி வீரர் வசீன் தாஜுதீன் கொலை, குடிதண்ணீர் கேட்டுப் போராடிய ரத்துப் பஸ்வல மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் பின்னணி, ஊடகவியலாளர்களான போத்தல ஜாயந்த, பிறகீத் எக்யெலிகொடா மற்றும் கேய்த் நோயர் போன்றோரின் மீதான தாக்குதல்கள் என்று  இலங்கையினை ஒரு பாதாள தேசமாக்கிய அத்தனை குற்றங்களின் பையில்களையும் ஷhனி அபேசேகர திறந்தவைத்தார். 

வெளியே போ கழுதை| என்ற ரணிலின் கோசம்:-

2015-2019கால ஆட்சியில் ஷhனி அபேசேகர ஊஐனுபணிப்பாளராய் நியமிக்கப்பட்ட போதிலும் அன்றைய ஆட்சியாளர்கள் கடமையைச் செய்ய ஒத்துழைக்கவில்லை. மத்திய வங்கி கொள்ளை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப் போனபோது ஷவெளியே போ கழுதை| என்று பிரதமர் ரணிலினால் விரட்டப்பட்டார் ஷhனி அபேசேகர. இப்படித்தான் அன்று கள்ளன் பிடிப்பதாய் ஆட்சியைக்கோரிய கோமாளிகளின் தர்பார் அமைந்தது.

கோட்டாபாய இராஜபக்ஸ சனாதிபதியும் அவரது செயலும்:- 

ஷhனி அபேசேகர 2019ஆண்டு நடந்த ஈஸ்ரர் குண்டுவெடிப்பானது அரசியல் அதிகாரத்தை மேற்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஒரு சதி வலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். கோட்டாபாய தேருதலில் வெற்றிகொண்டவுடன் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடாத்திய பொலீஸ் உயர் அதிகாரிகள் தூக்கிப் பந்தாடப்பட்டார்கள். கோட்டாபாய சனாதிபதியாகி பதவிப்பிரமானம் எடுத்ததும் பிரதமரையும் கபினெட்டையும் நியமிப்பதை ஒத்திப் போட்டுவிட்டு செய்த முதல் காரியமே ஷhனி அபேசேகரவை அப்படியே தூக்கிக் காலிக்கு இடம்மாற்றம் செய்து காலி செய்தார். ஆயினும் ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை மிகவேகமாகப் இனங்கண்டு கைதுசெய்தமைக்காக சர்வதேசரீதியில் ஷhனி அபேசேகர புகழப்பட்டார். இன்ரப்போலிடமிருந்தும் புகழினைப் பெற்றுக்கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்

கெத்தாய் இருந்த ஷhனி அபேசேகர கடிதம் பிரிக்கும் ஒரு பியோன் தரத்துகு மிதித்து எறியப்பட்டார். ஷhனி அபேசேகர மற்றும் சி.ஐ.டி அதிகாரிகளின் இடமாற்றங்களால் ஈஸ்ரர் தாக்குதல் உட்பட மொத்தக் குற்ற விசாரணைகளும் நிலைகுலைந்த போயின. அனைத்து வழக்குகளிலுமிருந்து இராஜபக்சைகளும் எடுப்பிடிகளும் விடுதலையானார்கள். வேறுவழியின்றி பணி ஓய்வு பெற்றார் ஷhனி அபேசேகர. அனாலும் கோட்டாபாய விடுவதாகவில்லை. வாஸ் குணவர்தனவின் கேசை மையமாக வைத்து சேவையிடை நிறுத்தம். மூன்று வருடம், ஆறுமாதம், ஓய்வுதியம் இடை நிறுத்தம், பத்துமாதச்சிறை என்று தொடந்து பழிவாங்கல்கள். கோட்டாபாய மக்கள் எழுச்சியால் தப்பி ஓடியபிறகு, ரணில் சனாதிபதியான போதும் ஷhனி அபேசேகர விடயத்தில் பாராமுகமாகவே இருந்தார். அதுமட்டமல்ல கோட்டாபாய காலத்தில் மூடப்பட்ட எந்த ஒரு பையிலும் திறக்கப்படவே இல்லை. ரணில் மொத்தத்தில் இராஜபக்சைகளின் ஏஜன்ராய்ப்பணி செய்துவிட்டு, சனாதிபதித் தேருதலில் தோற்றுப்போனார். கடைசியில் பூமரம் மீண்டும் ஷhனி அபேசேகர பக்கம் வந்தது.

ஷhனி அபேசேகர அவர்களின் அதிரடி முடிவு:-

யாரோடு சேர்ந்தால் கணக்குத் தீர்க்கமுடியுமோ அவர்களோடு சேரத் தீர்மானித்தார் ஷhனி அபேசேகர. சனாதிபதி தேருதலின் ஓய்வு பெற்ற பொலீஸ் அதிகாரிகள் என்ற விசேட மாநாட்டைக் கூட்டி அதற்குத் தலைமையும் தாங்கி, அனுரவிற்குத் ஆதரவளித்தார் ஷhனி அபேசேகர. அவர் எந்த ஒரு தலைவருடனும் சமரசம் செய்து கொண்டதில்லை. இது ஷhனி அபேசேகர அவர்களின் முறை. இனித்தானே பார்க்போறாய் காலியின் ஆட்டத்தை என்ற விறுவிறுப்பு இரகம் அந்தமுறை எந்த இராஜபக்சைக்களால் ஷhனி அபேசேகர பழிவாங்கப்பட்டாரோ அந்த இராஜபக்சைக்கள் நாடாளமன்றத் தேருதல் போட்டியிட முடியாத அளவுக்கு ஓடி ஒழிந்துகொண்டு இருக்கும் நிலையில் ஷhனி அபேசேகர வேலையை ஆரம்பித்திருக்கிறார். என்ன ஒரு பவபுல்லான கர்ம வினை. இந்தத் தடவை எந்த அரசியல் தலையீடும் இருக்காது. ஷhனி அபேசேகர இராஜபக்சைகளுக்குச் சவால் விடத்தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பதையே அவரது நடவடிக்கைகள் கட்டியம் கூறுகின்றன. 

முடிவு:

இராஜபக்சைக்கள் பிறைவேட் லிமிடட். ரணில் உட்பட 90மூ அரசியல்வாதிகளை ஈரேழு ஜென்மத்திற்கும் பகைத்து கொள்ளவேண்டிய நிற்பந்தம் ஷhனி அபேசேகரவுக்கும் அவர் வழியில் செல்லப்போகும் நேர்மையான பொலீஸ் அதிகாரிகளுக்கும் ஏற்படலாம். ஷhனி அபேசேகரவின்  சேவையில் இதுதெல்லாம் புதிய விடயம் அல்ல. ஷhனி அபேசேகர எப்படி அடித்தாடப்போகிறர் என்பதை அவருடைய அடுத்தடுத்த நகர்வுகள் தீர்மானிக்கும். (S.K. Kiruththikan வலையொளிப் பதிவிலிருந்தும் www.lankaenews.com , Daily FT, News 1st  பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)



Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff