ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்,
மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியான தர்ணங்களில் அன்புக்குரியவர்கள் பரிசில்கள் தருவார்கள். ஏன் இங்கு இது என எண்ணலாம். போகப்போகப் புரியும். அப்படிக் கோடிப் பெறுமதியானப் பரிசைப் பெற்ற கேடி ஒருவர் இருப்பதான செய்தியை அறியமுடிந்தது. அந்த பரிசை பெற்றவர் வேறு யாருமல்ல, நன்கு பரீசையமான சம்பத் மனம்பேரி என்னும் இலங்கையர்தான்.
யார் இந்த சம்பத் மனம்பேரி
சுருக்கமாகச் சொன்னால் ஒரு காலத்தில் முன்நாள் சனாதிபதி மஹிந்தஇராஜபக்சையின் பாதுகாப்புப் பிரிவில் கன்ஸ்டபிள். அத்துடன் முன்நாள் பிரதேசசபை உறுப்பினரும்கூட. இலங்கையின் 75மூ பாதாளஉலக நிழற் காரியங்களிலும் 50மூமேற்பட்ட போதை வினையோகத்திலும் சம்மந்தப்பட்டிருந்து இந்தோனேசியாவில் கைதான ஹெகல் பத்திர பத்மே, பக்கோசமனக் கும்பலுடன் மிகநெருக்கமான தொடர்புகளைப் பேணியவர். மனம்பேரிக்கு அந்த பரிசு வண்டியை வழங்கிய பாரி வள்ளல் யார் என்று நீங்கள் அறிய ஆவலாக இருக்கலாம். சம்பத் மனம்பேரி ஒரு வீடு கட்டினாராம். அந்த வீட்டினுடைய திறப்பு விழாவிற்குப் பல முக்கிய அரசியல்வாதிகள் சென்று விதம்விதமான பரிசுப் பொருள்களை வழங்கியிருக்கிறார்கள். மனம்பேரியினுடைய வீட்டுக்கு வருகை தந்திருந்த ஒரு பிரபல அரசியல் பிரமுகருடைய வாகனம் அங்கே உள்ளவர்களின் கண்களை உறுத்தியருக்கிறது.
மனம்பேரியின் வீட்டுக்குச் சமமான கவனக்குவிப்பை அந்த வாகனம் பெற்றுள்ளது. அந்த அளவுக்குச் சொகுசாய் இருந்திருக்கிறது அந்த வண்டி. இந்த அரசியல் பிரமுகர் பிரியாவிடைபெறும்போது, அந்த கார் சாவிவை மனம்பேரியிடம் கொடுத்து, வைத்துக்கொள்ளப்பா என்றாராம். இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனராம். இந்த அரசியல்வாதி யார் என்பதை காலமும் நிகழ்வுகளும் இன்னும் சில நாள்களில் சொல்லிவிடும். அப்போது நாம் உத்தியோகபூர்வமாக இதனை அறியத்தரலாம். மனம்பேரியின் தடாலடி கார்க் காட்சியுடன் இந்த கட்டுரையை ஆரம்பிப்பதன் நோக்கம் கிளைமக்சில் தெரிந்துவிடும்.
ஏ.எஸ்.பி. ரோஹான் ஒலுகல்ல விசாரணை
ஹெகல் பத்திர பத்மேயிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டுப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்படி விளக்கமறியலில் மேல்மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். மனம்போரியை விசாரிப்பது ஏ.எஸ்.பி. ரோஹான் ஒலுகல்ல. இன்று இலங்கையில் துணிச்சலான, மிடுக்கான, கீர்த்திமிகு பொலிஸ் அதிகாரிகளுள் ஒலுகல்லவும் ஒருவர். அவர்தான் இந்தோனேசியாவிலிருந்து ஹெகல் பத்திர பத்மே குழுவினரை அள்ளிக்கொண்டு இலங்கைக்குக் வந்தவர்.
சரி ஆரம்பிக்கலாமா?| என்று எல்லா அட்டூளியங்களுடனும் கூட இருந்த தோஸ்தான சம்பத் மனம்பேரியின் ஷகைத்தொலைபேசிக்கு என்ன நடந்தது| என்றுதான் விசாரணை தொடங்கப்பட்டதாம். அண்மையில் மனம்பேரி பாவித்த கைத்தொலைபேசி பொலிசாரிடம் சிக்கியது. ஆனால் அதன் பின்புலம் மனம்பேரியிடம் இருந்தது அவர் வருடக்கணக்கில் பாவித்த தொலைபேசி அல்ல. ஏ.எஸ்.பி. ரோஹான் ஒலுகல்ல ஷதொலைபேசிக்கு என்ன நடந்தது| என்று கேட்டு நின்றபோது, தான் வெள்ளவத்தையில் ஒரு ரயில் தண்டவாளத்தில் அதனை வைத்ததாகவும் ஒரு ரயில் அதன்மீது ஏறியதால் அது தூள்தூளாகச் சிதறியதாகவும் தனக்கு அந்த தொலைபேசியை வைத்த இடத்தைக் காட்ட முடியும் என்றும் மனம்பேரி சொல்லியிருக்கிறார். மித்தனியாவில் இருக்கும் மனம்பேரி குறிப்பாய் ஓர் இடத்தில் தங்கியிருக்கவில்லை என்பது பரிகிறது. இப்படிப் பல வருடங்களாய்ப் பாவித்த கைத்தொலைபேசி ஆயுளை இழந்துபோனதும், மித்தனியவில் இருக்கும் அதாவது மனம்பேரி பேரழிவாயுதங்களை மறைத்து வைக்க உதவிபுரிந்த அவருடையதோழி கொடுத்த கைத்தொலை பேசியைத்தான் பாவித்திருக்கிறார். அந்த கைத்தொலைபேசிதான் பொலிஸ் வசம் இருக்கின்றது. இதுதவிர மனம்பேரிபாவித்த நான்கு வங்கி அட்டைகளும் சுங்கத் திணைக்களத் திலிருந்த ஐஸ் இரசாயண மாதிரிகளை விடுவிக்கச் சமர்ப்பித்த ஆவணங்களும் அவற்றுக்குக் கட்டிய சிட்டைகளும் மனம்பேரியின் தோழிவீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. மனம்பேரிக்குப் பாதுகாப்பும் தங்குமிடமும் கொடுத்ததுகாக மின்சாரசபையில் வேலைபார்த்து வந்த ஒருவரைக் கைது செய்தது பொலிஸ்.
சிக்கிய தொலைபேசிகள்
மனம்பேரியின் கைதும் இன்று அவர் பொலிஸ் அதிகாரி ஒலுகல்லவிடம் ஒப்படைக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் அதிர்வலைகளும் எக்கச்சக்கம். நாம் மிச்சம் மீதி வைக்காமல் இந்தப்பாதாள சாம்பராச்சியத்தை ஒழிப்போம். அனைவரையும் சட்டத்தின் பிடியில் நிறுத்துவோம் என்கிறார் பொது மக்கள்பாதுகாப்பு மற்றும் நாடாளமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால. இந்த விசாரணைகள் வேகம் எடுத்திருப்பதற்கும் பலகைதுகள் நடப்பதற்கும் ஹெகல் பத்திர பத்மே குழுவினரிடமிருந்த 32 கையடக்கத் தொலைபேசிகள்தான் காரணமாம். இதில் சில தொலைபேசிகள் உயிர்ப்புடன் இருந்தன. சிலவற்றில் உரையாடல்கள் அழிக்கப்பட்டு இருந்தன. மனம்பேரியும் ஹெகல் பத்தர பத்மே குழுவும் நடத்திய வாட்சப்குழு உரையாடல்கள் எல்லாம் வெட்டவெளிச்சமானதும் இத்தொலைபேசிகளால்தான்.
மனம்பேரியினுடைய வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 50,000 கிலோ ஐஸ் இரசாயண மாதிரிகளை துறைமுகத்துகுச் சென்று விடுவிக்குமாறு பக்கோசமான் இந்தோனேசியாவிலிருந்து அனுப்பிய தகவல்கள் எல்லாம் ஆதாரங்களுடன் வசமாய் சிக்கியதும் இதே தொலைபேசிகளால்தான். இந்தோனேசியாவில் ஒரு ஹோட்டேலில் தங்கியிருந்த ஹெகல் பத்திர பத்மே தலைமையிலான ஒரு குழு ஹோட்டேலை காலி செய்துவிட்டு அவசர அவசரமாய்த் தப்பி ஓடியபோது, ரோஹான் ஒலுகல்லவின் அணியும் இந்தோனேசியாவின் குற்றப்புலனாய்வுப் பிரிவிநரும் 70கி.மீ துரத்திச் சென்றுதான் மடக்கிப் பிடித்திருக்கின்றார்கள்.
காவற்துறைக்குள் கறுப்பு ஆடு
ஹோட்டேலிலேயே கைது செய்து அழைத்து வர வேண்டிய இந்த விவகாரத்தை அனாவசியமாக சிக்கலாக்கியது யார் என்ற கேள்விக்குப் பதில் ஒரு பொலிஸ் அதிகாரி என்பதுதான். ரோஹான் ஒலுகல்ல உங்களைத் தேடி வந்துகொண்டு இருக்கிறார் என்று பொலிஸ் திணைக்களத்திருந்த ஒரு கறுப்பு ஆடுதான் போட்டுக் கொடுத்திருக்கிறது. இங்கே ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. ரோஹான் ஒலுகல்லவின் இந்தோனேசியா ஒப்பரேன் விரல் விட்டு எண்ணக் கூடி ஒரு சில பொலிஸ் உயர் ஆதிகாரிகள் மட்டுமே அறிந்திருந்த ஒன்று. ஆனால் தருண் எனப்படும் இலங்கை அரசு இப்போது தேடிக்கொண்டிருக்கும் - இப்போது வெளிநாடு ஒன்றில் வாழும் பாதாள உலகக் கேடியிடம் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார் குறித்த பொலிஸ் அதிகாரி. அத்தோடு நின்றுவிடாமல் இன்ரப்போல் வழியாக இவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு ஆணை தொடர்பான ஆவணங்களை அனுப்பியிருக்கிறார் குறித்த பொலிஸ் அதிகாரி. இவை அனைத்தும் ஹெகல் பத்திர பத்மே தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறன. இந்த அளவுக்குத் தைரியமாய் உள்வீட்டு இரகசியங்களை எல்லாம் அனுப்பிய பொலிஸ் அதிகாரியும் இந்தோனேசியாவில் சிக்கிய பாதாளக் கோஷ;டியும் இப்படி ஆகிவிடும் என்று என்றைக்குமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
சம்பத் மனம்பேரி, ஒலுகல்லவிடம் வழங்கிய வாக்குமூலம்
அதில் தாம் இதே தருணின் துணையுடன் படகுமூலம் இந்தியாவுடாக வேறோர் நாட்டுக்குச் செல்ல இருந்ததாகவும் சொல்லியிருந்தார். இந்தோனேசியாவில் இந்தக்கும்பல் கைதுசெய்யப்பட்ட செய்தி வந்ததும் மனம்பேரி குறித்தக் கொள்கலன்களை அவசரம் அவசரமாகப் புதைக்கத் தொடங்கினார். இந்த கைதுகள் இலங்கை அரசியலின் ஒரு திருப்பு முனை என்றும் சொல்லலாம். இல்லாவிட்டால் மனம்பேரி என்ற நபரும் மித்தனியவில் வாழ்ந்து மடியும் சாமானியமான ஒருவர்போல் கடைசிவரை இருந்திருக்கும். வெள்ளை வெளேர் என்ற ஆடையில் புனிதவேடம் போடும் எட்டப்பர்களுடைய அசுத்தங்களும் காலத்தோடு கரைந்துபோயிருக்கும். இந்த நிகழ்வுகள் எல்லாம் உணர்த்துவது என்ன?;: பொலிஸ் கறுப்பு ஆடு கம்பஹாவில் போதை மாபியாவுடன் சம்பந்தப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி கைதாகிறார். மித்தனியவில் நடந்த ஒரு கொலைக்கு மற்றொரு பொலிஸ் அதிகாரி கைதாகிறார். இந்த வருடத்தில் இதுவரை போதைவஸ்துடன் தொடர்புபட்டிருந்தக் குற்றங்களுக்காக 68பொலிஸ் அதிகரிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.இதெல்லாம் இலங்கையில் உத்தியோகப்பூர்வ அரசுக்கு மேலதிகமாய் இயங்கிய பாதாளவுலக அரசின் குரூர முகத்தைத்தான் துள்ளியமாய் கட்டம் போட்டுக் காட்டுகிறது.
சனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் உரை
சனாதிபதி அனுர குமார திசாநாயக்கா நியுயோக்கில் வாழும் இலங்கையர்களை அண்மையில் சந்தித்தபோது ஆற்றிய உரை மிக முக்கியமான ஒன்று. அவர் இந்தப் பாதாள அரசின் பயங்கரத்தை விபரித்துச் சொல்லியிருந்தார். பேர்போன கிருமினல் ஒருவருக்கு மூன்று பாஸ்போட்டுகளை செய்து கொடுத்திருக்கிறார்கள். எப்படி இது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம். புறக்கோட்டையில் புத்தகம் விற்கும் ஒருவரை அழைத்துவந்து குறித்த கிருமினலுக்குப் பதிலாகக் கை விரல் அடையாளத்தைப் பதித்திருக்கிறார்கள். நீதிமன்ற விசாரணைகளின்போது குறித்த குடிவரவு அதிகாரிகள் சொன்னது: குற்றவாளியின் முகமும் இந்தப் புத்தகக் கடைகாரரின் முகமும் ஒரே மாதிரி இருந்தது என்று. இதேபோல 2008ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார் ஒன்றை 2003ஆண்டுக்குப் பதிவுசெய்கிறது மோட்டார்த் திணைக்களம். கல்கிசையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் வு-56 துப்பாக்கிகளைக் களவாடி விற்றுவிட்டு நாட்டை விட்டுத் தப்பி ஓடி இருக்கிறார்.
ஒரு பாதால உலக தாதா தன்னை தடுப்புக் காவலிலிருந்து சிறைக்கு மாற்றப் போவதாகவும், இனி தான் சுதந்திர மனிதன் என்றும் சொல்லுகிறார். அதாவது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்போது தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டால் தன்னால் செய்யமுடியாதது எதுவுமில்லை என்றுதான் அர்த்தம். மாத்தறை சிறைச்சாலையில் புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள இருந்ததால் அங்குணுக்குள்ள பலச சிறைக்கு மாற்றப்பட்டனர். அப்போது மாத்தறைச் சிறைச்சாலையில் இருந்த பொருள்களைக் கண்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஏராளமான கைத்தொலைபேசிகள், சாஜர்கள், ரவுட்டர்களோடு பொலிசார் கைதுசெய்தால் மாட்டும் ஏழு கைவிலங்குகள். இதை யாரிடம் போய்ச்சொல்வது. சிறைக் கைதிகள் கை விலங்குகள் வைத்திருக்கும் அதிசயத்தைக் கண்டிருக்கிறீர்களா? இப்படித்தான் இராணுவ முகாமொன்றிலிருந்து வு-56 துப்பாக்கிகள் 73 கடந்தகாலத்தில் மாயமாகின. இவற்றில் 38 கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 35துப்பாக்கிகளைக் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருக்கின்றன.
கமாண்டோ ஒருவர் ஓர் இலட்சம் தோட்டாக்களைப் பாதால உலகுக்குக் களவாக விற்பதற்குப் பேரம் பேசியிருக்கிறார். 350 விற்றபோது கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு என்று பாஸ்போட் பெறுவதற்கு இமிக்ரேசன் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆயுதங்கள் வழங்கக் காவல்துறைகளில் ஆள்கள் இருக்கிறார்கள். வாகனங்களைப் பதிவுசெய்து கொடுக்க மோட்டார்த் திணைக்களத்தில் அதிகாரிகள் இருக்கிறார்கள். சில காலம் இப்படியே நாடு போயிருந்தால் உத்தியோகப் பூர்வ அரசு கலைந்துபோய் இந்தப்பாதாள உலக அரசே ஆண்டிருக்கும். அவர்களின் நீதிமன்றங்களில்தான் வழக்குகளும் நடந்திருக்கும். நாம் இதை மாற்றிக் கொண்டிருக்கிறோம். இப்போது இவர்களின் இந்த காட்டு தர்பார் ஆட்டம் கண்டு இருக்கிறது. இன்னும் தோண்டத் தோண்ட இந்த நாசகாரத்தினுடைய பருமன் வெளிப்படும் என்று பலத்தக் கரகோசத்துகு மத்தில் சொல்லிக்கொண்டு போனார் சனாதிபதி அனுர குமார திசாநாயக்கா. உண்மையில் இவர்கள் கறுப்புப் பொருளாதாரம் ஒன்றை உருவாக்கினார்கள். அரசியல்வாதிகளுக்குக் கோடிகளில்பணம் வழங்கினார்கள்.சில அரசியல்வாதிகள் இவர்களின் வீடுகளுக்குப் போய் வரி வசூலிப்பதுபோல மாதாமாதம் பணம் பெற்றிருக்கிறார்கள். முக்கியமான அரச திணைக்களங்களில் தமக்குத் தோதான சில அதிகாரிகளுடன் நட்புப் பேணிக் கொண்டு தாராளமாய் இலஞ்சமும் கொடுத்திருக்கிறார்கள்.
முடிவு
மனம் பேரியின் கார் பற்றி ஆரம்பத்தில் சொன்னோம் அல்லவா இவ்வளவு பெரிய கறுப்பு இராச்சியத்தில் மனம்பேரி போன்ற ஒருவருக்கு அரசியல் பிரமுகர்கள் நவீன ஹெலிக்கொப்டர் ஒன்றை வழங்கி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. இந்த கறுப்பு இராச்சியத்தை ஒரே நாளில் அழித்து ஒழிக்க முடியாது. ஆனால் ரோஹான் ஒலுகல்ல, ஷhனி அபேசேகர போன்ற மிகச்சிறந்த பொலிஸ் அதிகாரிகளும் ஒட்டுமத்த அரசு முறைமையும் இந்த வேகத்தில் இயங்கினால் இந்த பாதாள அரசின் எச்சசொச்சங்கள் கழை எடுக்கப்பட்டு இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசு மட்டுமே எஞ்சி இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை உண்டு. ரோஹான் ஒலுகல்ல, ஷhனி அபேசேகர அவர்களின் அடுத்த அதிரடி ஆட்டம் சனத் ஜெயசூரியா களுவித்தாரணவின் 96யின் அதிரடி ஆட்டத்தை மீண்டும் நிற்சயம் நினைவுபடுத்தும். ( compiled from S.K. Kiruththikan tiynahspg; gjptpypUe;Jk; https://tamilwin.com, https://thaainews.com, https://www.dailymirror.lk, https://island.lk, https://www.newswire.lk, https://adaderana.lk/ https://www.newsfirst.lk,https://colombotimes.lk,
No comments:
Post a Comment