Friday, January 23, 2026

ஐந்து மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா?

 ம.பிரான்சிஸ்க்- சுதந்திர பத்திரிகையாளர், 

இருள் சூழத்தொடங்கிய நேரம் ஏழு இளைஞர் திருகோணமலை கடற்கரையின் காந்தி சிலை அருகே 20 ஆண்டுகளுக்கு முதல் 2006.01.02 அன்று உரையாடிக் கொண்டிருந்தனர். நடக்கப் போகும் விவரிதத்தைப் பற்றி எதுவும் தெரியாத கடலலைகள் கரையோடு சரசமாடிக் கொண்டிருந்தன. திடீரென்று கோனேஸ்வரம் ஆலயத்துகுச் செல்லக்கூடிய கடலோடு அண்டிய வீதியால் வந்த பச்சை நிற முச்சக்ர வண்டியில் இருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இவர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டு தப்பியோடினர். திகைத்துப் போன இளைஞர்கள் பெரும் பதட்டத்து உள்ளாக்கித் தம்மை திடப்படுத்திக்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து போனார்கள்.



அப்போதுதான் அது நடந்தது. திக்கமுக்காடிப் போயிருந்த அந்த இளைஞர்களை டோக்கியாட் வீதிக்குப் பக்கத்திலிருந்து ஓடி வந்த சீருடைத் தரித்த துப்பாக்கிதாரர்கள் அப்படியே சுற்றி வளைத்தார்கள். இவர்கள் அனைவரும் மாணவர். அவர்கள் இந்த நாட்டில் தமிழராக பிறந்ததை தவிர வேறு ஒரு குற்றமும் அன்று செய்திருக்கவில்லை. அந்த ஏழு பேரையும் துப்பாக்கிதாரர்கள் நெருங்கிக் கொண்டிருந்தபோது கிடைத்த சிறிது நோத்தைப் பயன்படுத்திய மாணவன் ரஜீகர் தனது கையடக்கத் தொலைபேசியிலிருந்து அவசரமாக தன்னுடைய தந்தை வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரரைத் தொடர்புகொண்டார். அருகில் உள்ள புனித மரியாள் வீதியில் குடியிருக்கும் வைத்தியர் விரைவாகத் தலத்திற்கு விரைந்தார். வைத்தியர் மனோகருக்கு எதுவும் புரியவில்லை. அவரது இதயம் அங்கே நொறுங்கிப்போனது. அவர் மகனோடு உரையாடும்போது பெரும் ஒப்பாரியோடு மகனும் நண்பர்களும் மண்டியிட்டு உயிர்பிச்சை கேட்டு ஓலம் எழுப்பிக்கொண்டிருந்தது அவரது மனதை உலுக்கிக்கொண்டிருந்தது. அந்தக் கடற்கரை அருகே போனதும் அவர் அதிகாரிகாளால் தடுக்கப்பட மனம் பதறியது. எதுவுமே செய்யமுடியாத அபலையாய்க் கலங்கிய படி நிற்கிறார். 


பின்னாளில் வைத்தியர் சப்பவத்தை விபரித்தபோது நான் தடுப்புக் கவலரண் அருகே படையினருடன் உரையாடியும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தேன் அப்போது எங்களுக்கு உதவுங்கள் என்ற அழுகுரல் எனக்குக் கேட்டது. ஆனால் என் மகன் அமர்ந்திருந்த காந்தி சிலையருகில் விளக்குகள் வேண்டும் என்றே அணைக்கப் பட்டிருந்த காரணத்தால் அங்குள்ள நிலைமையை என்னால் தெளிவாகப் பார்க்க முடியாதிருந்தது. இருட்டில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட சத்தம் கேட்டது. அப்பகுதியிலிருந்த அனைத்து விளக்குகளும் அணைந்தன என்றார் வைத்தியர் மனோகர். ஒரு தந்தையாக இதனை கூறுவதென்பது எவ்வளவு கொடுமையானது என்று எல்லாரும் புரிந்துகொள்ள முடியும். சுத்திவளைத்த துப்பாக்கிதாரர்கள் பிடித்த அந்த ஐந்து பேரையும் நடுவீதியில் குப்பறப்படுக்கவைத்து காதுவழியே துப்பாக்கித் தோட்டாக்களை சரமாரியாகத் தீர்த்துகட்டினர். 



வன்னியார் வீதியைச் சேர்ந்த தங்கதுரை சிவனந்தா, புனித மரியாள் வீதி மனோகரன் ரஜிகர், வித்தியாலயம்வீதி சண்முகராஜா சஜேந்திரன், சிவன்வீதி லொஜிதரறாஜா ரொகான்; மற்றும் யோகறாஜா ஹேமச்சந்திரன் ஆகிய ஐந்து மாணவர் அந்த இடத்திலே கொல்லப்பட்டார்கள். இதில் திருகோணமலை இந்துக் கல்லூரியில் கல்விபயின்று 2025-06 ஆண்டுக்கான கல்வியாண்டில் பல்கலைக்களகத்திற்கு அனுமதி பெற்றிருந்த நான்கு மாணவர்  அவர்களுடைய நண்பர் ஒருவரும் அடக்குவர். ஆரம்பத்தில் காந்தி சிலை அருகில் ஏழு பேர் இருந்ததாக நாம் சொன்னோம் அல்லவா. ஐந்து பேர் இறந்து போயிருக்க மற்ற இருவருக்கு என்ன நடந்தது என்று நீங்கள் அறிய ஆவலாகலாம்: காந்திசிலை அருகில் இருந்த விளக்குகள் அணைக்கப்பட்டபோது கும்மிருட்டைப் பயன்படுத்திக் கொண்டு தப்பியோட முயற்சிசெய்த இரு மாணவரை நோக்கிப் துப்பாக்கிப் பிரியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் எப்படியோ தப்பி திருகோணமலை மருத்துவமலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார். மற்றைய மாணவர் படுகாயங்களுடன் தட்டுத் தடுமாறியப்படி தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று பின்னர் பாதுகாப்புக் கருதி ஊரை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அவர்கள்: பூங்குளலோன் மற்றும் பரறாஜசிங்கம் கோகுலராஜ் இருவரும் தெய்வாதீரமாக உயிர்தப்பினார்கள்.  இவ்வருடம் 02.01.2026 திகதி திருகோணமலையில் இந்த மாணவர்களின் 20ஆவது நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நீதிதான் கிடைக்கமில்லை.


இவர்கள் பல்கலைக் கழகத்துக்குத் தேரிவான மாணவர். எதிர்காலத்தைப் பற்றி எத்தனை ஆயிரம் கனவுகள் சுமந்திருப்பர். கடக்காற்று வீசிக்கொண்டிருந்த அந்த இதமான இரவில் காந்தி சிலை அருகில் நிச்சயமாக தம் உயர்கல்வியை,தம் எதிர்காலத்திட்டங்களைப் பற்றி உரையாடியிருப் பார்கள். ஆனால் இந்த மாணவர்களின் கனவுகள் மட்டுமல்ல அவர்களும் பொதிசெய்து புதைக்கப் பட்டிருக்கிறார்கள்.


இலங்கை ஒரு தோல்விகண்ட தேசமாக வார காரணமே அதன் சரித்திரத்தில் பாதி அத்தியாயங்களை இன முறுகலும் வன்முறையும் ஆக்கிரமித்திருந்தமைதான். 1957 நடந்த இனக் கலவரத்திலிருந்து ஒவ்வொன்றாக விவரித்துக்கொண்டு போகலால். 1981 நடந்த யாழ் நூலக ஏரிப்பு, 83 நடந்த யூலை வன்முறைகள் எனப்பட்டியல் நீளும். இந்த மாணவர் விவகாரம் உள்ளாட்டிலும் வெளிநாட்டிலும் பரவலான கவனத்தையும் ஈற்றது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள்,சர்வதேச மன்னிப்பு சபை,(Amnesty International,) ஐ.நா.சபை எல்லாம் மிகவும் வன்மையாகக் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்கள். இந்த அளவுக்கு இந்த கொடூரத்தின் பின்னரான நிகழ்வுகள் இருந்தது என்று சொன்னால் மேலும் பயங்கிரமாக இருக்கும். துப்பாக்கி வேட்டுகளை எல்லாம் காதால் கேட்ட ஒரே சாட்சியான தன் மகனின் கடைசி தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேசிய வைத்தியர் மனோகரனையும் குடும்பத்தையும் இலக்குவைத்து பலமாதங்களாக அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருந்தனவாம். முடிவில் இலண்டனுக்குத் தப்பிச்சென்று வைதியர் மனேகரனின் குடும்பம் அகதி அந்தஸ்துகோரினர்.

இந்த மிலேச்சத்தனத்துகு எந்தத் தயக்கமும் இன்றிக் குரல் கொடுத்த நல்லிணக்கத்தின் உருவமாக இருந்த ஹந்தூங்கமுவே நந்தரத்தின தேரரின் உயிர் ஒரு துப்பாக்கிதாரியால் பறிக்கப்பட்டது எத்தனை வேதனைநிறைந்த சம்பவம். இதைப்போல்தான் சுடரொளி பத்திரிகையின் ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகீர்தராஜனுக்கு நடந்த அவலமும் கூட. மாணவர்களுக்கு நடந்த கொடுமைகளையும் துணை இராணுவக் குழுகளின் மனித உரிமை மீறல்களைப் பற்றி கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார்.  அப்போதைய அரசு சர்வதேச அழுத்தத்தை திசைத்திருப்ப மாணவர் தங்களுக்குள் வைத்திருந்த கைக்குண்டு வெடித்ததால் இறந்து போனார்கள் என்று கட்டுக்கதை அளந்து கொண்டு இருந்தது. ஆனால்  ஊடகவியலாளர் சுகீர்தராஜனும் ஐந்து மாணவர் மீது மிக அருகிலிருந்து துப்பாக்கி சன்னங்கள் தீர்க்கப்பட்டதை வெளிப்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டார். இதன்மூலம் அவர்கள் கைக்குண்டுவெடிப்புமூலம் இறந்தார்கள் என்ற பொய்ப்பிரசாரம் கிழிந்தது. ஆனால் இதுவெளியாகிய மறுதினம் 2026.01.24 திகதி சுகீர்தராஜனுக்கு எமனாக மாறியது. இரண்டுசிறு குழந்தைகளின் தந்தையான சுகீர்தராஜனின் உயிரும் திருகோணமலை நகரில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாதவர்களால் பறிக்கப்பட்டது. இதெல்லாம் நடந்தபோது அன்றைய அரசாங்கம் ஆழ்ந்த துயிலில் சொப்பணம் கண்டுகொண்டிருந்தது. பலமான ஊடகங்களும் தனி நபர்களும் அரசியல் வாதிகளும் இதைப் பற்றிப் பேச முன் வரவில்லை. ஆனால் சர்வதேசத்திலுடைய நெருக்குவாரம் இலங்கைமீது தொடர்தது. 

இந்த காட்டு மிராண்டி தனங்கள் அரங்கேறிக்கொண்டு இருந்தது 2006 சனவரி. அது யுத்தம் நடக்காத ஒரு காலம். சமாதானம் மூலம் இனப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா என்று ஆராயப்பட்டுக்கொண்டு இருந்த காலம். இதனால்தான் யுத்தம் என்ற பாரிய மனித உரிமை மீறல்களை  பின்னாளில் இந்த சம்பவங்களை அரசால் மறைக்க முடியாமல் போனது. 2009 ஆண்டு யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னரும் திருகோணமலை மாணவர் படுகொலையை யாருமே மறக்கவில்லை. 2013 ஆண்டில் இவ்விவகாரம் ஜெனிவா வரை சென்றது. மருத்துவர் மனோகர் ஜெனிவாவுக்குப் போய் தனது மகன் ரஜீகரின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கேட்டு கதறி அழுதார். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தன் மகனின் நண்பர் என்றும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துகாகவே அவர்கள் கொல்லப்பட்டார்கள். தன் பிரியமிகு மகனின் மரணத்தை  நேரிலேயே தான் பார்த்ததாகவும் சாட்சியமளித்தார். இதனால் அப்போதைய அரசுக்கு உள்ளூரில் ஏதாவது செய்ய வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே ஐரோபிய யூனியன் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு வழங்கப்படும் ஜீஸ்பி ப்லஸ் என்ற வரிச்சலுகையை நிறுத்தியிருந்தது. ஆகவே சிக்கல் மேலும் தீவிரமாகும்போல இருந்தது. கண்துடைப்புக்கேனும் ஏதாவது செய்யவேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டது அரசு. முடிவில் பொலீஸ் உத்தியோகத்தர் உப்பட 13விசேர அதிரடி படையினர் கைது செய்யப்பட்டார்கள். 2014 ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் இந்த சம்பவமானது மேலும் தீவிரமாக ஆராயப்பட்டது. அன்று ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளர் ணுநனை சுய'யன யுட ர்ரளளநin வெளியிட்ட 20பக்கங்கள் கொண்டதும்74 விடயங்களை உள்ளடக்கியதுமான  அந்த அறிக்கையில் திருகோணமலை கடற்கரையில் நடந்த படுகொலைகளுக்குச் சாட்சியம் வழங்க முன் வந்தவர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் என்றும்; கொலைகளுக்குப் பாதுகாப்புப் படையினரே காரணம் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஐ.நா.சபையும் சர்வதேசமும் என்னதான் சொன்னபோதிலும் இலங்கை அரசு அதன் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை. 

முடிவில் 2019.07.03 இந்த வழக்கில் ஒரு தீர்ப்பு வந்தது. அதாவது 2013ஆண்டு முதல் ஆறு வருடங்களாக சிறைப்படுத்தப்பட்டிருந்த அனைவரும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டார்கள். திருகோணமலை நீதவான் நீதிமன்றம் வழக்கை தள்ளுவடி செய்துவிட்டது. 2006 ஆம் ஆண்டு நடந்த இந்த நாசகாரத்தின் சூத்திரதாரிகள் யார்? ஒரு தந்தை தன் கண் முன்னே வளர்ந்த பிள்ளை சுடப்பட்டு விழுவதைக் காண்கிறார். பின்னர் மிரட்டப்படுகிறார். சாட்சி சொல்ல தயாராகும்போது கொழும்பில் வீடும் மற்றைய பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலமும் வழங்கப்படும் என்ற இலஞ்சம் வழங்கவும் அதிகாரத்தின் எச்சசொச்சங்கள் அன்று முன்டியடித்தன.  ஆனால் அவற்றை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு நீதிக்காகப் போராடினார் தந்தை. அவரது பத்தென்பது வருடப் போராட்டம் 2025 ஆண்டு செப்டம்பர் மாதம் நிரந்தரமாக முடிவுற்றது. மருத்தவர் மனோகரன் இறந்து போனார். வசீன் தாஜுதின், லசந்த விக்ரமத்துங்க, பிரகீத் எக்னலிகொட வழக்குகளையெல்லாம் மீண்டும் விசாரிக்கப்போவதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் அரசு 2026 ஆண்டு திருகோணமலையில் நடந்த இந்த படுபாதகத்தையும் விசாரித்து சூத்திரதாரிகளை இனம் காட்டி இறந்து போன அந்த ஐந்து மாணவர்களுக்கும் வைத்தியர் மனோகரனுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நிற்சயம் நீதிகிடைக்க வழிஅமைக்கும் என்பது எமது நம்பிக்கை. இத்தனை உணர்வுபூருமான விவகாரத்தில் யாருக்கும் இந்த நியாயமும் கிடைக்காமல் போனால் வாய்மையே வெல்லம் என்று கூறுவதில் பலனில்லை. ஆனால்  வாய்மையும் சில சமயங்களில் வெல்லும் என்று தான் பழமொழியை மாற்ற வேண்டியிருக்கும். 

Hisham.M.Vlogஎன்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் 

https://www.hrw.org/news, https://en.wikipedia.org/wiki/2006_Trincomalee_massacre_of_students, https://www.tamilguardian.com/content/still-searching-justice-19-years-trinco-5-killings, https://www.amnesty.org/en/documents/asa37/0862/2019/en/,https://www.tamilnet.com/art.html?artid=35900&catid=13, பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)



No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff