ம.பிரான்சிஸ்க்- சுதந்திர பத்திரிகையாளர்
அம்பலாங்கொட பிரதேசத்தில் ஒரு வர்த்தக நிலையத்துகுள்ள 22.12.2025 காலை 8:30 மணியளவில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்மநபர்கள் கடையினுள் சென்று துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிசென்று விட்டனர். சுடப்பட்டு உயிரிழந்திருக்கிற நபர் ஓர் அரசியல்வாதி என்று தெரிய வந்திருக்கிறது. அவர் இறந்த பின்பு அவரது கையடக்கத் தொலைபேசி காணமால் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எலிப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியான எஸ்.எஸ்.பி. மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அதைக் ஹிரன் கோசலவின் உறவினர் ஒருவர் எடுத்து ஒழித்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த அரசியல் வாதியின் கையடக்கத் தொலைபேசியைப் பொலிசார் பரிசோதித்தபோது அவருக்குப் பின்னாலே இருக்கிற பல மர்மங்கள் வெளிச்சமாகின.
அம்பலாங்கொட நகரத்தில் உள்ள இந்தக் கடையினுள் மோட்டார் வண்டியில் வந்து இரண்டு பேரில் ஒருவர் போய் அந்த கடையிலிருந்த நபருடன் கதைத்து கொண்டிருக்கும்போதே திடீரென துப்பாக்கியை எடுத்து அந்த நபர்மீது துப்பாக்கிச்சூடு நடத்துகின்றார். ஆனால் துப்பாக்கி இயங்கவில்லை. உடனே அந்த இடத்திலிருந்து துப்பாக்கிசுட வந்த நபர் வெளியிலே ஓடுகின்றார். ஆனால் இப்போது சுடப்பபட்டு உயிரிழந்திருக்கிற நபர் துப்பாக்கிதாரி ஓடுவதை வெளியில் வந்து எட்டிப்பார்க்கின்றார். அப்படி ஓடிப்போன அந்த துப்பாக்கிதாரி ஒரு சில நிமிடங்களுக்குள் மோட்டார் வண்டியில் இருந்து இன்னும் ஒரு துப்பாக்கியை எடுத்து வந்து தாம் முதலில் சுடமுனைந்த நபரைச் சரமாரியாகச் சூடுகின்றார். சுடப்பட்ட அந்த நபர் அந்த இடத்திலயே கொல்லப்படுகின்றார். மோட்டார் வண்டியில் வந்த இரண்டுபேரும் அந்த இடத்திலிருந்து தப்பிப் போய்விடுகின்றார்கள். இவை அனைத்தும் CCTV காட்சியில் தெளிவாகப் பதிவாகியூள்ளன. பின்னர் மோட்டார் வண்டி அப்பிரதேசத்தில் இன்னோர் இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூடுநடத்திய இரண்டு பேரும் கண்டியின் அம்பிட்யப் பகுதியில் உள்ள ஒரு தென்னக்கூன் என்பவருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் தங்கி இருந்ததாகவூம் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவூம் அவர்கள் தங்கிய ஓர் அறையில் பல சந்தேகத்துகுரிய சிம்கள் கட்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
ஒரு பெண் உட்பட எட்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். பிரதான சந்தேகநபரான றம்புக்கண கமகே ஜனத் காஞ்சனா-36 அகவை குலியப்பிட்டியாவில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். விசாரணைகளின் பின்பு கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொலையாளி ரொயாட்டா கொறொலா WP KJ - -2760 வாகனத்தில் அம்பலாங்கொடக்குப் பயனம் செய்துள்ளார். கொலையை நிகழ்த்திய பின்னர் பொய்யான இலக்கத் தகட்டினை கொண்ட WP BFQ–5853 –5853 மேட்டார் சைக்கிளை ஓர் இடத்தில் விட்டுவிட்டுப் போக்குவரத்து பஸ்சில் ஏறி மௌன்ரவய லெவினியா சென்று அங்கிருத்து தாம் வந்த வகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்திருக்கும் நபர் ஸ்ஸ்ரீறன் ஹிரன் கோசல டீ சில்லா ((Shriran Hiran Kosala de Silva)) என்றும் அவருக்கு அகவை 47 என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அம்பலாங்கொட வித்யால மாவத்தைப் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஐக்கிய மக்கள் சக்தியைச் - சஜித்த பிரேமதாசாவின் கட்சியைச் - சேர்ந்த ஓர் அரசியல் வாதியாவார். அம்பலாங்கொட உள்ளூராட்சி மன்றத் தேருதலில் அந்தக் கட்சி சார்பாகப் போட்டியிட்டுள்ளார். ஆனால் வெற்றிபெறவில்லை. இவர் 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கின்றார் என புலனாய்வின்மூலம் வெளிப்பட்டிருக்கின்றது என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆயூதங்கள் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் பொலிசாரால் முன்பு ஒருமுறை கைதுசெய்யப்படுள்ளார் என்று பொலிசார் வெளிப்படுத்தகின்றனர். விசாரணைகளின் படி பார்க்கும்போது இவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன: போதைப்பொருள் கடத்தல் குழுவூடனும் பாதாளக் குழுவூடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணியிருக்கிறார் என்பதற்கான பல ஆதாரங்கள் தற்போதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்மீது ஒரு சில கொலைக் குற்றச்சாட்டுக்களும் உள்ளன.
பொலிசார்இ ஹிரன் கோசலவின் கையடக்கத் தொலைபேசியைத் ஆய்வூசெய்தபோது அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது: ஹிரன் கோசல சுட்டுக்கொல்லப்படுவதற்கு முதல்நாள் இரவூம் பூஸ்சா சிறைச்சாலையில் உள்ள ஒரு நபருடன்இ தொலைபேசியில் உரையாடியூள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூஸ்சா சிறைச்சாலை பாதாள உலகக் கும்பல் வெளித்தொடர்புகள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஓர் அதியூயர் பாதுகாப்புச் சிறைச்சாலை. அந்த நபர் வேறு யாரும் கிடையாது. போதைப்பொருள் கடத்தல் மன்னன் - பாதாள உலகச் செயற்பாட்டு வீரன் - லொக்குப் பெட்டிதான் (Loku Patti) இந்த லொக்குப் பெட்டி இப்போது பிரபல போதைப்பொருள் குற்றவாளி. அண்மையில் பெலறூசில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர். இப்போது பூஸ்சா அதியூயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
லொக்கு பெட்டி கிளப் வசந்த எனச் சொல்லப்படுகின்ற சுரேந்திர வசந்த பெரேரா எனச் சொல்லப்படுகின்ற - போதைவஸ்து கடத்துலுடன் தொடர்புடையவர் என அடையாளப்படுத்தப் பட்டிருந்த ஒரு நபர் கஞ்சிப்பானை இம்ரானின் பணத்தை வாங்கித் திரும்பிக்கொடுக்கத் தவறியிருக்கிறார். இதனால் பழிவாங்குகிற மாதிரி கிளப் வசந்தவை லொக்குப் பெட்டிதான் சுட்டுக் கொன்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஹிரன் கோசலமீது பாரிய ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. 2017 ஆண்டு இலங்கையை உலுக்கிப்போட்ட ஒரு சம்பவம் பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் சர்வதேச ஊடகங்களிலும் சக்கை போடுபோட்டது. ஒரு ஹொலிவூட் சினிமா பாணியில் இந்த சம்பவம் நடத்தப்பட்டிருந்தது: களுத்துறையிலிருந்து சிறைச்சாலைக் கைதிகளை ஏற்றியவாறு அந்த சிறைச்சாலை பஸ்வண்டி பயணம் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேஇ எத்தினமடல என்னும் இடத்திலே வைத்து சரமாரியான துப்பாக்கிச்சூடு அந்த பஸ்வண்டிமீது நடத்தப் பட்டிருந்தது. அந்த சம்பவத்தில் சமயன் (ளுயஅயலயn) என்று சொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். அவருடன் சேர்த்து இன்னும் ஒரு சில கைதிகளும் கொலை செய்யப்பட்டிருனர். கொல்லப் பட்டிவர்களின் சதைகள் எல்லாம் சிதறி போய்க்கிடந்த காட்சிகள் அந்த காலகட்டங்களில் அந்த இடத்துகுப் சென்று செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களால் பதிவூ செய்யப்பட்டிருந்தன. அந்த பஸ்வண்டியின்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கும் இப்போது கொலை செய்யப்பட்டி ருக்கின்ற இந்த கோசலவூக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றன என புலன்விசாரணை யாளர்களும் தெரிவிக்கின்றனர். இந்தமாதிரி ஏராளமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கின்ற ஒரு நபர்தான் இவ்வாறு அம்பலாங்கொடயில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கும் ஹிரன் கோசல. இப்போது கொலை செய்யப்பட்டிருக்கின்ற இந்த நபர் பூஸ்சா சிறைச்சாலையில் உள்ள லொக்குபெட்டியூடன் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாளும் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியிருக்கின்றார். அதுமட்டுமல்ல லொக்கு பெட்டியின் முக்கிய எதிர்க்குழுவின் உறுப்பினரான கறந்டெனிய சுட்டா; - மற்றுமொரு போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்பவருடனும் - தொடர்பு கொண்டு உரையாடி வந்திருக்கின்றார்.
இதைத் தவிர கொஸ்கொட சுஜி என்று சொல்லப்பட்டும் இன்னுமொரு போதைப்பொருள் கடத்தல் நபருடனும் மற்றும் கொஸ்கொட சுஜியின் பிரதான எதிரியான உறகாஹ இன்டிகாவூடனும் இந்த நபர் தொடர்புகளைப் பேணிவந்து கொண்டிருக்கின்றார் என்ற விடயம் விசாரணைகளில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த கிருமினல் குற்றவாளி களுக் கெல்லாம் பணப்பணிமாற்றங்களை இவர் முகாமைசெய்து வந்துகொண்டிருந்தார் எனவூம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. விசாரணைகள் மேற்கொள்ளும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இருக்கும் ஒரு மிகப் பெரிய சவால்: இதில் எந்த குழு இந்த ஹிரன் கோசல என்னும் நபரைச் சுட்டு கொலை செய்திருக்கும் என்பதுதான். கறந்டெனிய சுட்டாவின் குழுவா? அல்லது கொஸ்கூட சுஜி குழுவா? அல்லது லொக்குபெட்டியின் குழுவா? என குழப்பம்தான். இதில் இருக்கும் இன்னுமொரு முக்கியமான விடயம் பூஸ்சா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக் குள்ளிருந்து லொக்குபெட்டி இப்போதும் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சில கிருமினல் சம்பவங்களை வழி நடத்திக்கொண்டிருக்கின்றார் என்னும் அதிர்ச்சிதான். இதைப்பற்றி என்னவென்று நாம் கூறுவது.
இந்த கொலைச் சம்பவத்தற்கு ஒருசில நாள்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமான தரவூகள் உள்ளடக்கிய ஒரு முக்கியமான - இரகசியமான கட்டமைப்பு ((VMS) வி.எம் எஸ். ஏன்னும் - தகவற் களஞ்சியம். உள்ளது. இது பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டமைப்பாகும். இது ஓர் மிகஇரகசியமான தகவல் களஞ்சியமா இருக்கின்றது. கடல் மார்க்கமாகவூம் உட்பட போதைப்பொருள் கடத்தப்படும் முழு தரவூகளும் இருக்கக்கூடிய ஓர் இரகசியமான தகவல் களஞ்சியம். இதன் கடவைச்சீட்டு (பாஸ்வேட்டை அண்மையில் வெளியில் போயிருக்கின்றது. கிட்டத்து 57 ஐபி (IP) முகவரிகளிலிருந்து வெளி நபர்கள் இந்த களஞ்சியக் கட்டமைப்புக்குள்ள உடுருவி இருக்கிறார்கள். பல தகவல்கள் அதனுள் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய இந்த கட்டமைப்புக்குள்ள வெளி நபர்கள் எப்படி உடுருவி இருக்கின்றார்கள் என விசாரணையூம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது பாஸ்வேட் மாற்றப்பட்டு பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளருக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினுடைய 05 பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சம்பவத்துகுப் பிறகு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்னும் தகவல் வெளி வந்துள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினுடைய 400க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளினுடைய சொத்துகள் சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. இவர்கள் பாதாள உலகக் குழுவூடன் சம்பந்தப்பட்டிருந்தால் கடுமையான சட்ட நடவடிக்குகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவருடம் கிட்டத்தட்ட 111 துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. அவற்றில் 59 நபர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர் 55 நபர்கள் காயமடைந்திருக்கின்றனர். இவ்வருடம் என்ன நடக்கும் எனப் பார்ப்போம்
.https://english.gossiplankanews.com/,https://tamil.gossiplankanews.com, https://srilankamirror.com/, https://srilankabrief.org, https://dailynews.lk/2025/12/23, https://adaderanatamil.lk/news, https://pagetamil.com, Ceylon Today., மற்றும் கிறிசாந் றாஜ் என்னும் வலைஒளிப்பதிவிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment