Saturday, November 17, 2012

எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை எம்மில் வளர்ப்போம்.

19.11.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்றைய நற்செய்தியில், இயேசு தனது இரண்டாவது வருகையை பற்றி கூறுகிறார். ஆனால் இங்கே இயேசு இன்னும் அவரின் முதல் வருகையையின் பணியை முழுவதுமாக முடிக்கவில்லை. 'அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும் நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும் வான்வெளிக் கோள்கள் அதிரும்." இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். 

இது இன்றுவரை ஒரு முடிவில்லாதப் பிரச்சினை. இயேசு எங்கே? அவர் என்ன சொன்னார் என்பதை கவனித்தால்: 'இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார்". அவர் எந்த ஒரு தேதியையும் உறுதியாக சொல்லவில்லை. சீடர்களுக்கு எந்த ஒரு தடயமோ, அல்லது தமது இரண்டாம் வருக்கைக்கான எந்த ஒரு சரியான குறியீடும் கொடுக்கவில்லை. ஏனெனில், அவருக்கும் அது தெரியாது!
கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றுதான் இயேசுவின் இரண்டாம் வருகை. முதல் வருகையின்போது, மனித உருவெடுத்து, தொடர்ந்து பாடுபட்டு, மரித்து, உயிர்த்த இறைமகன் இயேசு  இரண்டாம் முறையாக மீண்டும் வருவார். அந்த வருகையின்போது அவர் நடுவராக உலகைத் தீர்ப்பிடுவார். என்பதுவே இரண்டாம் வருகையின் பொருள். இதை நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலியிலும், விசுவாசப் பிரமாணத்திலும், இன்னும் வேறு பல வேளைகளிலும் அறிக்கையிடுகிறோம்.

இந்த விசுவாச அறிக்கையை எப்படி வாழ்வில் பயன்படுத்துவது என வினாவினால் அது ஒரு நல்ல கேள்விதான். நடுவராக இயேசு மீண்டும் வரவிருக்கிற அந்த இரண்டாம் வருகை உலக முடிவில்தான் இருக்கும். உலக முடிவு எப்போது என்று மனுமகனுக்கே தெரியாது என்று இயேசுவும் கூறிவிட்டார். எனவே, நம்மைப் பொறுத்தவரை, உலக முடிவு என்பது நம் ஒவ்வொருவரின் முடிவுதான். அதாவது, நமது இறப்புதான். நாம் இறக்கின்றபோது நடுவராம் இயேசு நம்மைச் சந்தித்து நம்மைத் தீர்ப்புpடுவார். அந்தத் தீர்ப்பின் வேளைக்காக நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நாம் இறைவனுடைய பிரசன்னத்தை உணர்ந்து வாழ்வதும், நமது பணிகளை நேர்மையாக, நேர்த்தியாக ஆற்றுவதுமே இரண்டாம் வருகைக்கான நமது தயாரிப்பு.

இயேசு தம் சீடர்களுக்கு இன்னுமொரு விடையத்தை கூறுகின்றார் அது நிறைவுக் காலம் பற்றியது. கடவுளாட்சி ஏற்கெனவே வந்துவிட்டது என்றாலும் அதன் முழுமை இன்னும் மலரவில்லை. ஆனால் இயேசு இறுதி வெற்றி உறுதியாக வரும் என நமக்குக் கற்பிக்கிறார். இந்த உலகில் நிலவுகின்ற அநீதிகளும் அட்டூழியங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும் எனவும், குறைகளும் குற்றங்களும் மலிந்த நம் வாழ்வு ஒரு நாள் ஒளிமயமானதாக விளங்கும் எனவும் நமக்கு அவர் அறிவுறுத்துகிறார். ஆனால் அந்த நிறைவுக் காலம் எப்போது வரும்? இக்கேள்விக்கு இயேசு பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்த நிறைவுகாலம் எமக்கு எதிர்காலத்தில் தான் வரும் என்கிறார் இயேசு.
இன்று நம்மில் எத்தனை பேர் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறோம்? எப்படி அதை அறிய ஆசைப்படுகின்றோம் என்பது சுவாரிசமானதுதான். கத்தோலிக்கர்கள் என மார்புதட்டிக்கொண்டும் பங்குத்தளங்களில் உள்ள பக்திக்குழுக்களில் பைபிளை தூக்கிக்கொண்டு வேதம் ஓதியபின். கையைப் பார்த்து, கிளியைக் கேட்டு, நாடி பார்த்து நல்ல சாத்திரக்காறரை நாடிச்சென்று கேட்டு தம்வாழ்வையும் மட்டுமல்லாது தம் அன்பர்களில் வாழ்வையும் பாழாக்குபவர்கள் பற்றி நாமறிவோம் அப்பப்பா இன்னும் எத்தனை வழிகளில் எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம். எதிர்காலம் முழுவதும் நல்ல காலம் பொறக்குது என்ற சொற்களையேக் கேட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலையாகக் குவிந்து கிடந்தால் ஏன் இதைத் தெரிந்து கொண்டோம் என்று பிரச்சினையில் வருத்தப்படுவோம்.
எனவே எதிர் காலத்தைத் தெரிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது அந்த எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்ப்பதில் செலவிட்டால், எவ்வளவோ பிரச்சனைகளைச் சமாளிக்கலாம், வெல்லலாம். எதிர்காலம் என்பதில் பிரச்சனை கூட்டமாக சேர்த்து வந்தாலும், அந்தக் கூட்டத்தின் மத்தியில் நல்லவைகளை, நல்லவர்களைப் பார்த்து கைகுலுக்கிக் கொள்ளும் பக்குவம் நாம் பெறவேண்டும். இதை ஒரு உருவகத்தில் சொல்ல வேண்டுமெனில், எதிர்காலம் மலைபோல் குவிந்த ஒரு குப்பையாக தெரிந்தாலும், அந்த குப்பையின் நடுவிலும் வைரங்கள் மின்னுவதை நம் கண்கள் பார்க்கும் போது, குப்பை மறைந்து விடும், வைரங்கள் மட்டும் தெரியும். குப்பைகளை விலக்கி, குண்டு மணிகளை, வைரங்களைப் பார்க்கும், வைரங்களைச் சேர்க்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள இறைவன் துணையை நாடுவோம். இந்த உலகத்தின் இறுதி காலம் பற்றி சிந்திக்க இந்த ஞாயிறு வாசகங்களான தானியேல், மாற்கு நற்செய்தியின்  இறை வார்த்தைகளைக் பகுதிகளை கேட்போம்

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff