Wednesday, November 7, 2012

முக மலர்ச்சியைக் பெற்றுத்தரும் தான தர்மங்களைச் செய்வோம்.

11.11.2012 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
அன்னை தெரசா ஒருமுறை  சொன்னார்: "புiஎந வடைட வை hரசவள " 'கொடுங்கள், உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் கொடுங்கள்." இதனை எண்ணும்போது நம் தமிழ் பாரம்பரியத்தில் பேசப்படும் சிபி சக்ரவர்த்தி நினைவுக்கு வருகிறார். தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்ற, தன் உடலின் சதையை அறுத்துத் கொடுத்த அந்த மன்னர் அன்னை தெரசா சொன்னது போல் உடலை வருத்தித் தந்தவர். கர்ணனும் இப்படி கொடுத்ததாக நமது மகாபாரதம் சொல்கிறது.

தன்தை வருத்தி தன்னை பாதிக்கும் அழவுக்கு தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் காணிக்கையாக செலுத்திய ஏழைக் கைம்பெண்ணின் செயலை இன்று நற்செய்தி கூறுகின்றது. இதனை உற்று நோக்கிய இயேசு இதனை பாராட்டுகின்றார். ஆனால் பணம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றைத் தேடிய மனிதர்களை இயேசு பல முறை கண்டித்துப் பேசினார். அந்த கைம்பெண தன்னிடம் இருந்ததைப் போட்டார், பிழைப்புக்காக வைத்திருந்ததைப் போட்டார். நிகழ் காலம், எதிர் காலம் இரண்டையும் காணிக்கை பெட்டியில் போடுகிறார். அப்படி ஓர் ஆழ்ந்த நம்பிக்கை கடவுள் மேல்.

எம்மில் பலர் இன்று கடவுள் என் தியாகத்தைப் பார்த்து ஏதாவது செய்வார் என்று பலவெளிவேடங்களை செய்கின்றோம். இந்தக் கண்ணோட்டம் ஒரு வியாபாரம். கடவுளே நான் இவ்வளவு தருகிறேன் அல்லது செய்கின்றேன் நீ இவ்வளவு தாரும் என்று பேரம் பேசுகின்றோம்.  ஆனால் இயேசு புகழ்ந்த கைம்பெண் வியாபார பேரங்களைக் கடந்தவர். கடவுளுக்குத் தன்னிடம் இருந்தவை எல்லாவற்றையும் மகிழ்வாகத் கொடுத்தவர். எனவே தான் இயேசுவின் இந்த மனமார்ந்த பாராட்டுகளைப் அவள் பெறுகிறார். அந்தப் பெண் இந்தப் புகழுரையைக் கேட்டிருப்பாரா? காணிக்கை செலுத்திய திருப்தியுடன் காணாமல் போய்விட்டார். அந்தப் பெண்ணுக்கு பெயர் கூட இல்லை.
கடவுளுக்குக் காணிக்கை என்று கூறிவிட்டு, ஏழைகளைச் சுறண்டுகின்ற செயல் நடந்தால் அது கொடுமைதான். இதனை இயேச கண்டிக்கின்றார். இயேசு பாராட்டும் அக்கைம்பெண்ணைப் பொறுத்தமட்டில் அவருடைய உள்ளத்திலிருந்து எழுகின்ற அன்பு நம்மைக் கவர்ந்து இழுக்கிறது. 'உன் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக" என்னும் அன்புக் கட்டளையை அக்கைம்பெண் நடைமுறையில் செயல்படுத்துகிறார்.

மனிதனுக்கு விலாசம் தேவை. விளம்பரம் தேவையல்ல. விலை கொடுத்து விளம்பரப்படுத்தி பெறுவை பெயரும் புகழும். மாறாக தன்னை வருத்தி தியாகம் செய்வதால் தானாக அவை வந்து சேர வேண்டும். விளம்பரம் தேடும் விவரம் தெரிந்த படித்த பெரிய மனிதர்களையும், கொடுத்துக்கொடுத்து தன்னையும் தன் வாழ்வையும் தன் முகவரியையும் கூட இழந்து போன ஒரு பெண்ணையும் இன்று நற்செய்தியில் காண்கிறோம். இயேசு பெண்ணைப் பாராட்டுகிறார். பெரிய மனிதர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறார். மறைநூல் அறிஞரின் ஆடம்பரம், செல்வாக்கு, பெருமை இவை வெளி அடையாளங்கள் கைம்பெண்ணின் ஒரு வெள்ளிக்காசு மறைவான தியாகத்தின் உச்சநிலை. தியாகச்செயல் ஆண்டவருக்கே செய்யப்பட்டப் போதிலும் அது மறைவாக இருக்க வேண்டும். தன்னை வருத்துவதாய் இருக்க வேண்டும்.

இயேசு கொடுக்கும் முக்கியத்துவம் எப்பொழுதுமே பொன்னுக்கோ பொருளுக்கோ அல்ல. மனிதனுக்கே முதலிடம், முக்கியத்துவம். ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது. மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை." பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்". பாவத்தை அல்ல, பாவியை பெரிதாக கருதுபவர். இவ்வாறு மனிதனையும் அவனது மனநிலையையும் முதன்மைப்படுத்துவதால் அவர்களிடமிருந்து வெளிப்படும் செயல்களின் எதார்த்தமும் வெளிப்படுகிறது. தியாகம், காணிக்கை, பிறருக்குக் கொடுத்தல் இவற்றின் உட்பொருள், உள் நோக்கம் இவற்றை உணரமுடிகிறது. தன்னில் ஒரு தாக்கத்தை, இழப்பை ஏற்படுத்தாத எச்செயலையும் தியாகம், காணிக்கை என்று கணிக்கமுடியாது. ஏழைக் கைம்பெண் தன்  வறுமையில் இருந்த அனைத்தையும் போட்டாள். இது தியாகம். பணக்காரன் பல கோடியில் பல இலட்ஷத்தில் பலரும் பாராட்டும் மண்டபம் கட்டுவதில் என்ன தியாகம் இருக்கிறது என்பது இயேசுவின் பாராட்டில் புதைந்திருக்கும் பூதாகாரமான கேள்வி. இந்த கேள்வியின் பதிலே சம தர்ம சமூகத்தின் வாழ்வாதாரம். இதுவே இயேசு விரும்பும் காணிக்கை, தியாகம்.

நல்ல மனதோடு செய்கின்ற சிறிய தியாகமும் தர்மமும் ஆண்டவரின் ஆசீரை அள்ளிக் கொண்டு குவிக்கும் ஆற்றல் படைத்தது. அதே வேளையில் பெருமைக்காக, விளம்பரத்திற்காகச் செய்யும் பெரிய கொடைகள் பல வேளைகளில் நமக்கு உதவாமல் போய்விடும். ஏழைக் கைம்பெண்ணிடம் விளங்கிய மன நிலையோடு தான தர்மங்களைச் செய்வோம். அது நமக்கு முகவரியைப் பெற்றுத் தரும். முக மலர்ச்சியைக் கொடுக்கும்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff