Friday, May 24, 2013

அன்பின் ஐக்கியத்தில் புதிய வாழ்வை பிறக்கசெய்வோம்

26.05.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். என இயேசு தம் சீடரை நோக்கிக் கூறும் வேதகமப்பகுதி மூவொரு கடவுளின் திருவிழாவாகிய இன்று எமக்குத் தரப்படுகின்றது. திருச்சபையில் விழாக்களின் ஒரு சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். இத்திருவிழா பாஸ்கா மறைபொருள்களிலுள்ள தந்தை, மகன், தூய ஆவி குறித்த கடவுளின் வெளிப்பாட்டை நினைவுபடுத்துகின்றது. இறைவனின் இந்த இயல்பு அதிபுனித திரித்துவம் எனப்படுகிறது.
 
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இறையியல் வல்லுனர் பெக்குலியனால் இந்த மூவொரு கடவுள் என்ற மறையுண்மை கொண்டுவரப்பட்டது. இத்திருவிழா 1334 ஆம் ஆண்டில் திருத்தந்தை 22 ஆம் யோவானால் தொடங்கப்பட்டது. நைசீயா-காண்ஸ்டாண்டி நோபிள் திருச்சங்கங்கத்தில் உறுதி செய்யப்பட்ட இந்த விழா திருச்சபையின் அடித்தளமாக உள்ளது.

மூவொரு இறைவன் நம் கடவுள். இது எப்படி? மூன்றா? ஒன்றா? ஒன்று ஆனால் மூன்று. மூன்றுதான் ஆனால் ஒன்று. யாரும் அறிய முடியா மறைபொருள். தமத்திரித்துவத்தின் மகத்துவம் கூறும்; ஒரே கடவுள், மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்ற மறையுண்மைகளை மனித அறிவால், எண்ணத்தாலும் மொழியாலும் போதுமான அளவு விளக்க முடியாமல் இருந்த போதிலும், திருச்சபைத் தந்தையர், தங்களது வாழ்வு மற்றும் ஆழமான விசுவாசத்தின் வழியாக விளக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பது உண்மையே. மூவொரு இறைவனுள் தந்தை யாரு? மகன் இயேசு யாரு? தூயஆவி யாரு? இவர்ளுக்குள் என்ன உறவு, இவர்கள் தமக்குள்  என்ன பேசிகிறார்கள். இவர்;களைப் பற்றி மக்கள், அறிஞர்கள், இறைவாக்கினர்கள், என்ன பேசுகிறார்கள்? இவர்;களை நாம் புரிந்துகொள்ள முடியுமா? இவர்;ககளைப்பற்றிய விளக்கங்களும் விடையற்ற ஒரு புதிர்தானா? என்று அறிவின் தேடலை இன்று முடக்கிவிட்டிருக்கின்றோம்.
 
நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த நுஎநபசரைள  (இவக்றியஸ்) என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது: 'கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது.' என்பதாகும். ஒருமுறை புகழ் பெற்ற அறிவியலார் டாக்டர் ஹென்றி மோரிஸ் கூறுகிறார்– உலகம் பருப்பொருள், இடம், காலம் ஆகியவற்றால் ஆனது. இவை மூன்றும் இல்லையேல், ஏதேனும் ஒன்றுகூட இல்லாதிருந்தாலும் இந்த உலகு இல்லை. அதே போல மூவொரு கடவுளும் இருப்பது அவசியமாகிறது என்கிறார் அவர். இவை ஒவ்வொன்றுமே மூன்றில் ஒன்றாக இருக்கின்றன.

'இந்த உலகில் மிக அழகான, ஆழமான அனுபவங்கள் எல்லாமே நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மறையுண்மைகள். இந்த ஆழமான அனுபவங்களை இதுவரை தங்கள் வாழ்வில் பெறாதவர்களை குறைந்தபட்சம் பார்வை இழந்தவர்கள் என்றாகிலும் சொல்லலாம்.' என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லிச்சென்றார். நாம் காணும் இந்த உலகின் பல உண்மைகளுக்கு அறிவியல் விளக்கங்களைக் கண்டு பிடித்த அந்த மாமேதையே வெகு ஆழமான உண்மைகளைச் சந்தித்தபோது மௌனம் காத்தார்.'

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. கடவுளை ஒரு கூட்டுக் உறவாய் அறிமுகம் செய்தவர் இயேசு. நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம். உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம். நாம் வாழும் இன்றைய உலகில், நம் அன்பு உறவுகளே மிக அதிகமாகப் பழுதடைந்திருக்கிறது. பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய இன்று உறவாக வாழும், மூவொரு இறைவனின் திருநாள் அழைக்கின்றது. மூன்று ஆளாகிய கடவுளில் நிகழ்கின்ற அன்புப் பரிமாற்றம் கடவுள் அன்புமயம் என்று நாம் கூறுவதற்கு அர்த்தம் தருகிறது. இன்று உறவுகள் சிதறுவதற்கு அன்புறவின் விரிசலே காரணம். உறவுகள் முறிந்து சிதைந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நிலையை நம் சமுதாயத்தில் கண்கூடாகப் பார்க்கமுடியும். முரட்டு மனிதர்களையும் பாசத்தால் கட்டிப் போட முடியும் என்பது அன்றாட வாழக்கை நமக்கு உணர்த்தும் பாடம். அன்புக்காகவும் உறவுகளுக்காகவும் ஏங்கும் மனிதர்களை நாம் பார்க்க முடியும். கடவுளுக்குள் உறவின் ஒற்றுமையை நாம் தரிசிக்கின்றோம். கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார், அவர் அன்பின் குழுமம் ஆகும் இதனை முதலில் தெளிவாக வெளிப்படுத்துவது குடும்பமே. கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒரே உடலாக ஆகின்றார்கள், இந்த அன்பு ஐக்கியமானது புதிய வாழ்வை பிறப்பிக்கிறது. இவ்வாறு மனிதக் குடும்பத்தில் விளங்கும் ஒருவர் ஒருவர் மீதான அன்பு வாழ்வைப் பிறப்பிப்பதற்கான அதன் பணியை முன்னிட்டு அது மூவொரு கடவுளின் வெளிப்பாடாக இருக்கின்றது என்று உணர்ந்து இப்பெருவிழாவின் விழுமியங்களை வாழ்வாக்குவோம் 

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff