Friday, July 12, 2013

'அடுத்திருப்பவர்" என்ற சொல்லுக்கு உயிருள்ள ஓர் எடுத்துக்காட்டைத் உருவாக்கி நல்ல சமாரியராவோம்

14.07.2013  ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
நல்ல சமாரியர் என்னும் உவமைக் கதைவழியாக இயேசு இன்று நம்முடன் பேசுகின்றார்: 'ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை கள்வர்; உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். பணிவிடை செய்தார்" இது உவமைக் கதையின் சுருக்கம்.

Good Samaritan  என்ற சொற்களை Google தேடலில் தேடும்போது,0.21நொடிப் பொழுதில் 24400000 விவரங்கள் தோன்றின. இவற்றில் பல இலட்சம் விவரங்கள் 'நல்ல சமாரியர்" என்ற பெயர்தாங்கிய மருத்துவமனைகளும்,பிறரன்பு நிறுவனங்களும்ஆகும். இத்தேடலில் குறிப்பிடத்தக்க விடயம் 'நல்ல சமாரியர்" என்ற பெயரில் பல நாடுகளில்; சட்டங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. அமேரிக்கா, கனடா,மற்றும் ஐரோப்பாவின் பலநாடுகளில்'நல்ல சமாரியர்"என்ற பெயரில் சட்டங்கள் உள்ளன.இந்நாடுகளில் பொதுவிடங்களில் யாரேனும்அடிபட்டால், என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பனவற்றை விளக்கும்விதிகள் இந்த'நல்ல சமாரியர்"சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளன.

இவ்வருடம் பிப்ரவரி 5நாள் அமெரிக்காவின் நியூயார்க், நகருக்கருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ஒரு நிகழ்வை இங்குகுறிப்பிடலாம: Pedro Lugo - பிற்றோ லூகோ என்ற 69 வயது மனிதர், கார் பழுதடைந்ததால் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தவித்துக்கொண்டிருந்த ஒரு மாற்றுத் திறனாளியான பெண்ணுக்கு உதவி செய்தார். அப்பெண்ணின் காரை சரி செய்ய உதவினார். பின்னர் பிற்றோ தன் காரில் ஏறி மீண்டும் நெடுஞ்சாலைக்குள் நுழைந்தபோது, வேகமாக வந்தஒரு பாரஊர்தி பிற்றோவின் கார்மீது மோதியது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்வழியில் பிற்றோ உயிர்துறந்தார். கனடாவின் Vancouver நகரில் குற்றம்புரிந்த ஒருவரைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க உதவியவரை 'நல்ல சமாரியர்"என்ற அடைமொழியால் குறிப்பிட்டனர். அவ்விருசெய்திகளுக்கு நாளிதழ்கள் தந்த தலைப்புக்கள்: ““Good Samaritan dies after helping disabled.”, “ Good Samaritan helped nab suspec in Vancouver…” 21 நூற்றாண்டுகள் ஆகியும் இயேசுவின் இந்த உவமை கத்தோலிக்கம் என்ற வட்டத்தைத் தாண்டி மக்கள் மனங்களில் தூண்டுதலாய் உள்ளது தெளிவாகிறது. 

இந்த உலகப் புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்" உவமை பிறந்த பின்னணி லூக்கா நற்செய்தியில் பின்வருமாற கூறப்பட்டுள்ளது: திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், 'போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். இவ்வாறு  இவ்வுவமையின் பின்னணி ஆரம்பமாகிறது. இயேசுவிடம் எவ்வகையிலாவது குறைகாண வேண்டும் என்ற ஆவலில் திருச்சட்ட அறிஞர் கேள்வியைத் தொடுத்தாலும், இயேசு அந்த வாய்ப்பை நழுவவிடாமல், அற்புதமானதொரு உலகப் புகழ்பெற்ற உவமையைக் கூறினார். தொடக்கத்தில் கேட்ட கேள்வி நிலை வாழ்வைப்பற்றியது. முடிவில் சொன்ன பதில் இரக்கம் என்று. இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் வருவது அயலான். இந்த அயலானைப்பற்றி தெழிவாக புரிந்துகொண்டால் தொடக்கமும் முடிவும் சரியாகிவிடும்.

நல்லவர்-கெட்டவர் என்ற அடையாளங்களை ஒவ்வொருவர்மீதும் பதிப்பது இயேசுவின் எண்ணம் அல்ல. 'அடுத்திருப்பவர்" என்ற சொல்லுக்கு உயிருள்ள ஓர் எடுத்துக்காட்டைத் தருவது ஒன்றே இயேசுவின் எண்ணமாக இருந்தது. சமுதாயத்தில் நல்லவர்-கெட்டவர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், படித்தவர்-படிக்காதவர்,வெள்ளை-கறுப்பு, அவர்-இவர் என்று அடையாளங்களை ஆயிரக்கணக்கில் நாம் உருவாக்கி விட்டதால் 'அடுத்தவர்" என்ற அடிப்படை அடையாளத்தைக் கண்டுபிடிக்க இயலாமல் நாம் தவிக்கிறோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு 'அடுத்தவர் " என்ற அடிப்படை அடையாளத்தை மறைக்கும் அளவுக்கு நாம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் வேறு பல அடையாளங்களை அவர்கள் மீது ஒட்டிவிடுகிறோம். பின்னர் 'அடுத்தவர் எங்கே?" என்ற தேடலில் இறங்குகிறோம். இந்த அடையாளங்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்காமல் 'மனிதர்" என்ற ஒரே காரணத்திற்காக  மற்றவர் மீது பரிவுகொண்டு உதவிகள் செய்ய முன்வருபவர்களும் 'அடுத்தவர்' அகின்றனர். அவர்களே 'நல்ல சமாரியர்"

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff