Thursday, October 9, 2014

இறையரசுக்குத் தயர்படுத்த தெருக்களுக்கும் சாலையோரங்களுக்கும் செல்வோம்


12.10.2014 ' " 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

மன்னர் மகனின் திருமணம் இயேசு விண்ணரசை விளக்குவதற்கு பயண்படுத்திய ஒர் உவமையாகும். இது பைபிளில் மத்தேயு 22:1-14 இல் எழுதப்பட்டுள்ளது. இது இன்று நமக்கு பைபிள்பகுதியாக தரப்படுகிறது. இயேசு இதில் விண்ணரசைப் இளவரசனின் திருமணத்துக்கு ஒப்பிட்டுகிறார். இத்த உவமை மேலும் பல படிப்பிணைகளையும் கொண்டுள்ளது. இதன் மூலகருத்தாக 'அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப் பட்டவர்களோ சிலர்" என குறிப்பிடலாம். இங்கு கடவுளை அரசராகவும், இயேசு தன்னை இளவரசனாகவும் விண்ணரசை திருமண வீடாகவும் ஒப்பிட்டு இந்த உவமையை கூறினார். விண்ணரசிற்கு வருமாறு கடவுளின் மக்களுக்கு ஆதவாது யூதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள அவ்வழைப்பை புறக்கனிக்கவே கடவுள் அவ்வரசை யூதரல்லாதோருக்கு கொடுத்தார். இருப்பினும் யூதரல்லதவரும் ஆயத்தமற்றிருந்தால் ஆதவாது திருமண ஆடையின்றி திருமணத்தில் பங்கேற்க முடியாது.

அன்றைய காலத்தில் யூதர்களின் வழக்கப்படி தம் விழாக்களுக்கு உறவினர்களுக்கு அழைப்பு கொடுக்கின்றபோது, விழா நடைபெறும் நாள் சொல்லப்படுவதில்லை. முதலில் உறவினர்களுக்கு விழா பற்றிய அழைப்பு மட்டும்தான் கொடுக்கப்படுகின்றது. விழாவுக்கான விருந்து, நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்ட பின்னர் இரண்டாவது கொடுக்கின்ற அழைப்புதான் விருந்திலே கலந்துகொள்வதற்கான அழைப்பு.

இன்றைய நற்செய்தியிலே அரசர் விழா பற்றிய அழைப்பை ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இரண்டாவதாக, விருந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டபின், அவர்களை அழைத்துவர, பணியாளர்களை அனுப்புகிறார். இந்த உவமையை இயேசு யூதர்களை மனதில் வைத்து சொல்லியிருக்க வேண்டும். யூதர்களுக்கு அழைப்பு இருந்தும், அவர்கள் அதை உதாசினப்படுத்தினார்கள். எனவே, அழைப்பு மற்றவர்களுக்கு- புறவினத்தார்க்கு செல்கிறது. அழைப்பு வந்துவிட்டது என்பதற்காக தகுதியற்ற நிலையில் நாம் பங்கேற்க முடியாது.

இயேசு கூறும் இந்த உவமையைக் கொஞ்சம் கூர்ந்து கவனிப்போம் அரசனுடைய மகனுக்குத் திருமணம். எம்மைப் பொறுத்தவரை அந்தத் திருமணத்தில் பங்கேற்பது மிகவும் பெருமை வாய்ந்த ஒரு செயல். ஆனால், அழைக்கப்பெற்றவர்கள் வர விரும்பவில்லை என்று உவமை கூறுகிறது. இருந்தும் மீண்டும் அரசர் தன் பணியாளர்களை அனுப்பி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். வாருங்கள் என்று அழைக்கிறார். அவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. இறையாட்சியின் பார்வையில் இத்தகைய மனிதர்களாக நம்மில் பலர் இருக்கிறோம் என்பதையே இந்த உவமை வழியாக இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

இறைவன் தருகிற நிறைவான மகிழ்ச்சி, ஆறுதல், நிறைவு இவற்றை வேறு யாரும், எதுவும் தரப்போவதில்லை. ஆனால், நாம் இறைவனின் அழைப்பை பொருட்படுத்தாமல் இருக்கிறோம். அவர் தரும் விருந்துக்கு வர விரும்பாமல் இருக்கிறோம். காரணம், இந்த உலகம் காட்டும் ஈர்ப்புகள். அன்றாட வாழ்வின் கடமைகள், பணிகள். இந்த உவமையில் வரும் மனிதர்களைப் பார்த்து வியக்கும் நாம், இப்போது நம்மைப் பார்த்தே கொஞ்சம் வியப்போம்.

இன்றைய உவமையில் வரும் சம்பவத்தில் 'நீங்கள் சாலையோரம் செல்லுங்கள். காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்" என்னும் பகுதியை எடுத்துக்கொண்டு  நாம் தெருக்களில் நடந்துசெல் நல்ல நட்பு கிடைக்கும்;. தெருக்களுக்கு, வீதிகளுக்கு, சாலையோரத்துக்கு செல்லுவோம், அன்பை இழந்து, நட்பை சுவாசிக்காத, முன்பின்தெரியாத, முகவரியில்லா மனிதர்;கள் இருக்கும் இடம் இது. இவர்களோடு இணைவது, முழு சமூக, சகோதர, மகிழ்ச்சிநிறை விருந்து கொண்டாட்டம் தினம் செய்வோம். இதைத்தான் அன்னை தெரேசா அவர்கள் செய்தார், வெளியே தெருக்களுக்கும்  சாலையோரத்திற்கும் சென்று அங்குள்ள நோயாளிகள், பாவிகள், ஏழைகள் மற்றும் அன்பு கொடுக்கப்படாதவர்களுக்கு வாழ்வு கொடுத்தார். ஆசிர்வதிக்கப்பட்டவர் ஆனார்.  எனவே இயேசு இன்று எமக்குத் தரும் அழைப்பை நான் பொருட்படுத்தி தெருக்களுக்கும் சாலையோரத்திற்கும் சொல்வோம். இறையரசுக்கு தயாராக நாமும் மற்றவர்களும் வாழ வழி அமைப்போம். 

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff