Thursday, September 27, 2012

“மற்றவருக்கு வெட்டும்”-தினமும் தினத்தாளில் இடம்பிடிக்கும் இந்த செய்தியை இனிநாமகற்றுவோம்

30.09.2012.
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசுவின் உளவியல் முதிர்ச்சியையும், பரந்த மனநிலையையும் இன்று நற்செய்தி நம்மை வியக்கவைக்கின்றது. இயேசுவை சாந்திராத, சீடர் என வரையறுக்கப்படாத ஒருவர் இயேசுவின் பெயரால் பேய்கள் ஓட்டினார் என்பதே மிகவும் வியப்பான ஒரு செய்திதான். இயேசுவின் பெயருக்கு எத்தகைய ஆற்றல் இருக்கிறது என்பதற்கு இது சிறந்த சான்று. அவரைத் தடுக்கப் பார்த்தோம் என்று சீடர்கள் சொன்னபோது இயேசுவின் நம்பிக்கை பதில் எல்லாரையும்; வியக்க வைக்கிறது. தடுக்க வேண்டாம். என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார்.

இயேசு இத்தகு பொறாமையை நிராகரிக்கிறார். “நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்”. இயேசுவின் செய்திக்குத் தாங்கள் மட்டுமே உரிமையாளர்கள் என்னும் சீடர்களின் உணர்வுக்கு இந்த அகன்ற அடிப்படைத் தத்துவம் ஒரு சவாலாக அமைந்துள்ளது. இயேசுவைத் தாங்கள் மட்டுமே பின்பற்றவேண்டும் என்று சீடர்கள் பேராசைப்படுவது ஒரு தடைக்கல்லாகும். அது இயேசுவை தூரத்தில் இருந்து பின்பற்றுவேரை துரத்திவிடும். நற்செய்திக்கு விளக்கமளிக்கத் தங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு என எண்ணும் உட்கட்சியினரை இயேசு கண்டிக்கின்றார். குறுகிய மனம், பொறாமை, தன்னம்பிக்கையின்மை, இவற்றை அடித்து நொறுக்கிவிட்டு, நன்மையை ஏற்பிசைவு செய்யும் பரந்த மனதையும், தன்னம்பிக்கையையும் இயேசு வெளிப்படுத்துகிறார். நமது திறமைகளை, கொடைகளைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளத் தயங்கும் நமக்கு இயேசு பாடம் கற்றுத் தருகிறார். பிறரும் நம்மைப் போல நல்ல பணிகள் ஆற்றட்டும், நற்பெயர் வாங்கட்டும் என்று நினைப்பவரெல்லாம் இயேசுவின் நல்ல சீடர்கள் ஆகின்றனரே.

இன்றைய சிந்தனைளை இன்ஒரு பார்வையில் நோக்கினால் இன்றைய நற்செய்தியை “நற்செய்தி” என்று சொல்வதற்கே கொஞ்சம் பயமாயிருக்கின்றது என்றும் கூறலாம்.  ஏனெனில், இயேசு கையை, காலை வெட்டி கண்ணை பிடுங்கி எறிந்து விடுங்கள் என் கடுமையாப் பேசியிருக்கார். ஆனால் இங்கு நல்லவேளை, இயேசு ஒருவர் தம்முடைய கண்ணையோ, கையையோ, காலையோ வெட்டச்செல்கிறாரே தவிர மற்றவர்களுடையதையல்ல. ஆனால் இன்று நாம்வாழும் இந்த மண்ணிலே மற்றவர்களை வெட்டும் செய்தி தினமும் தினத்தாளில் இடம்பிடிக்கும் செய்தியாகின்றது.

இன்றுபோல் இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சமுதாயம் எளிதாக கையை, காலை வெட்டுகின்ற சமுதாயம். பழிக்குப் பழி வாங்குவதில் அதிகத் தீவிரமாய் இருந்தவர்கள் யூதர்கள். இதனால்தான், இயேசுவே அவர்களைப் பார்த்து “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வலது கன்னத்தில் அறைபவனுக்கு இடது கன்னத்தைக் காட்டு". என்று முற்றிலும் மாறுபட்ட பாடங்களைச் கற்பிக்க ஆரம்பித்தார்.

இப்படி சொல்லும் இயேசுவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் யூதர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கோபமாக, கடுமையாகப் பேசும் இயேசுவைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான். சாட்டையடிபட்டு சிலுவையில் தொங்கும் இயேசுவைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு, கோவிலிலிருந்து வியாபாரிகளை விரட்டினாரே, அப்போது இயேசுவைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்தான். அப்படி ஒரு சவாலை இன்றைய நற்செய்தி தருகிறது. இயேசுவைப் புரிந்து கொள்ள, அவர் சொல்லும் வார்த்தைகள் எந்த பின்னணியிலிருந் சொல்லுகின்றார் என உணர்வது அவசியமாகிறது.  ஒருகன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கூறும் இயேசு, தலைமை குருவின் ஊழியன் அவரை அறையும் போது, மறு கன்னத்தைக் காட்டவில்லையே. மாறாக, அவனிடம், என்னை ஏன் அறைகிறாய் என்று கேள்வி கேட்டார். சூழ்நிலை, பின்னணி இவற்றோடு இயேசுவின் வாழ்க்கையையும், அவரது கூற்றுக்களையும் பார்ப்பது பயனளிக்கும்.

இன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகளுக்குப் பின்னணி என்ன?  சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அங்கம் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும். அப்படி மாற்றுவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்க வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கண்ணைப் பிடுங்கி விடுங்கள், கை, கால்லை வெட்டி போடுங்கள் என்று கோபமாகச் சொல்வது போல் தெரிகிறது.

எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக வாழும் போது, மருத்துவ மனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். பழக்கங்களை மாற்றிக் கொள்வோம். கட்டுப்பாட்டுடன் வாழ்வோம். தேவையற்ற ஆபத்துக்களை வாழ்விலிருந்து நீக்குவோம். இவைகள் எல்லாருக்குமே நல்லதுதானே. இயேசு இவைகளைத்தான் கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாக, கோபமாகச் சொல்லியிருக்கிறார். அவர் கோபமாக சொல்கிறாரோ, சாந்தமாகச் சொல்கிறாரோ என்பதல்ல மாறக அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்வது, அதன் படி வாழ்வது நமக்கு நல்லதுதானே.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff