Friday, April 19, 2013

தன்னைப் பின் தொடர்பவர்களின் துன்பங்களிலும் தன்னை இணைத்துக் கொள்பவரே தலைவர்

21.04.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள மாட்டார். என இயேசு கூறும் பைபிள் பகுதி இன்று எமக்குத் தரப்படுகின்றது. இங்கு ஆயன் ஆடுகள் கதை தெளிவாகின்றது. இயேசு தனது மந்தைய சேர்ந்த ஆடுகளுக்கும்  பிற ஆடுகளுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குகின்றார். அவரது ஆடுகள் அவரது குரலை அடையாளம் கண்டுகொள்ளுகின்றன. அவரது குரலுக்கு செவிகொடுக்கின்றன. அவரை பின்தொடர்கின்றன. இப்போது ஆடுகள் யார் ஆயான் யார் என்ற கேள்வி எமக்குள் எழலாம்.

இறைவனை ஆயனாக, பராமரிப்பவராக, வழிநடத்துபவராக முற்காலத்திலிருந்தே மனித இனம் அழைத்து மகிழ்ந்துவருகின்றது. எனவே இறைமக்கள் தான் இங்கு ஆடுகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். அவர்கள்; ஆண்டவரே என் ஆயர் என்று  அழைக்க இயேசு நானே நல்லாயன்  என்றும் ஆடுகளுக்கு வாயில் நானே. என் வழியாய் நுழைபவர்களுக்கு ஆபத்தில்லை என்றும் கூறுகின்றார்.  ஆடுகளுக்காக ஓர் ஆயனின் பணிகள் இயேசு வாழ்ந்த காலத்தில் பல: பராமரித்தல், பாதுகாத்தல், உணவளித்தல், தாகம் தணித்தல், குணமாக்கல், வழிநடத்தல், தன் உயிரையேத் தருவது. நல்ல ஆயன் நானே. இறைதந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் அவரை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் என்ற இயேசு, தம்புவதற்கு வழிஇருந்தபோதும் ஆடுகளாகிய எமக்காக சித்திரவதையால் சிலுவையில் கொலைசெய்யப்படதன் மூலம் வாழ்க்கை பாடம் கற்பித்தவர்.

எந்த ஒரு சூழலிலும் தன்னைப்பற்றி சிந்திக்காமல், மற்றவர்களையே எண்ணி வாழ்வதைப்போன்ற ஓர் உயர்வான வாழ்வு உலகில் இல்லை. ஆபத்து, துன்பம் என்று வரும்போது தன்னைக்குறித்து ஒருவர் கவலைகொள்வதும், தன்னைக் காத்துக்கொள்ள முயல்வதும் வெகு சாதாரண மனித இயல்பு. அந்த இக்கட்டானச் சூழல்களிலும் தன்னைப்பற்றிய கவலை இல்லாமல், அடுத்தவரைப்பற்றி கவலைப்படும் மனம், மலைபோல் உயர்ந்த மனம். மனித வரலாற்றில் தங்களையே மறந்து, பிறருக்காக வாழ்ந்த பலரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்: 1912ம் ஏப்ரல் 15 டைட்டானிக் கப்பல் விபத்திற்குள்ளாகி மூழ்கியது நாமறிந்ததே. ஆயினும், இந்த விபத்தின்போது வெளிப்பட்ட ஒரு சில தியாகச் செயல்கள் நாம்மில் பலருந்கு தெரியாமலிருக்கலாம். அவற்றில் ஒன்று வுhழஅயள டீலடநளஇ துரழணயள ஆழவெஎடையஇ டீநநெனமைவ Pநசரளஉhவைணஇ என்ற மூன்று கத்தோலிக்க குருக்களைப் பற்றியது. கப்பல் மூழ்கிக்கொண்டிருந்தபோது, இம்மூன்று குருக்களுக்கும் உயிர்காக்கும் படகுகளில் தப்பித்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை மறுத்துவிட்டு, மரணத்தை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கியபடி, அம்மக்களுடன் இணைந்து செபித்தபடி அவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் இவர்கள் பெயர்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. தன்னைப் பின் தொடர்பவர்களின் இன்ப, துன்பங்களில். தன்னையே இணைத்துக் கொள்பவரே உண்மைத் தலைவர்.
 
மாவீரன் அலெக்சாண்டர் தன் படையுடன் மக்ரான் என்ற பாலைநிலத்தை ஒருமுறை கடக்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். அவர் தாகத்தைத் தணிக்க, இரு தளபதிகள் நீண்டதூரம் நடந்து, சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அவர்களிடம், வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது என்று சொன்னார்கள். என் வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, எனக்கும் தண்ணீர் தேவையில்லை என்று நீரை மணலில் ஊற்றினாராம். துன்பம் என்று வந்தால், தங்களுடன் தலைவனும் சேர்ந்து துன்புறுவார் என்பதை உணர்ந்த வீரர்கள், தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி ஆர்ப்பரித்தனர். நல்லாயன் ஞாயிறென்று என்று அழைக்கப்படும் இந்த ஞாயிறில் நாம் இன்றையத் தலைவர்களைப பற்றி எண்ணிப் பார்க்கவும், வருங்காலத் தலைவர்களுக்காகச் செபிக்கவும் கடமைப்பட்டிருக்கின்றோம்.
 
இயேசுவை மட்டும் நம்பி அவர் கையில் எம்மை ஒப்படைத்து வாழ்ந்தால் இயேசுவும் நமக்கு  நல்ல ஆயனுக்கரிய பணிகளை நமக்குச் செய்வார். நாங்கள் யாருடைய கையில் இருக்கின்றோம், யாருடைய கையைப் பிடித்திருக்கின்றோம், யார் எங்கள் கையைப் பிடித்திருக்கின்றார் என்பதைப் பொறுத்துத்தான் எங்கள் வாழ்க்கைக்கு  நல்லவைகளும் அல்லது கெட்டவைகளும் வந்துசேரும். அன்பின் உச்சிக்கே சென்று தாமே அன்பாகி, நம்மேல் அளவு கடந்த அன்பைப் பொழியும் அன்பாம் ஆயனுக்கு அவருடைய அழைப்புக்கு அவருடைய படிப்பினைகள் மதிப்பீடுகளுக்கு, அவருடைய கட்டளைகளுக்கு நாம் செவிமடுக்கிறோமா?. என் ஆடுகள் என் குரலுக்குச் செவிசாய்க்கும் என்பார் இயேசு. நாம் இயேசுவால் என் ஆடுகள் என்று அழைக்கப்படும் நிலையில் உள்ளோமா? நம்முடைய வாழ்வைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff