Wednesday, May 16, 2012

காயங்களை மணலிலும் நன்மைகளை கற்களிலும்; எழுதக் கற்றுக்கொள்வோம்.

13.05.2012

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மோடு நட்பாக, நண்பனாக இருக்க ஆசைப்படுவதைப் பார்க்கின்றோம். உலகில் உறவின் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது நட்பு. நண்பர்கள்;தான் ஒவ்வொருடைய வாழ்க்கையையும் செதுக்கும் சிற்பிகள் என்பார்கள். நட்பின் சிறப்பை உணர்ந்த “இயேசு, தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்றார். தன்னைக் காட்டிக்கொடுத்தவரையும் 'தோழா, எதற்காக வந்தாய்?” என்ற இயேசுவின்  உயிரை உறைய வைத்த அந்த வார்த்தைகள் பகைவனையும் பதற வைத்துவிட்டது. இவ்வாறு இயேசு, பகையைக்கூட நட்பாக மாற்றவேண்டும். இருக்கின்ற நட்பை, உயிரைக்கொடுத்தேனும்; வளர்க்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

இன்று எங்கள் வாழ்க்கையை உடைத்து உருக்குலைப்பதும் நண்பர்களே என்பவர்களும் உண்டு. கவிஞன் ஒருவன்: இறiவா, என் பகைவனை நான் பார்த்துக்கொள்கிறேன். நண்பனிடமிருந்து என்னை நீ காப்பாற்று என்று கதறியதையும் கேட்டிருக்கின்றோம். உயிரை வாங்குகின்ற நட்பு பல வடிவங்களில் மாறுவேடங்களில் அலைவதைப் பார்க்கின்றோம். சுயநலம் என்ற போர்வையில், பணம் பதவி ஆசையில் காட்டிக் கொடுக்கும் துரோகங்கள் நட்பில் நடத்தேறுகின்றன. அத்துடன் நயவஞ்சகம் காட்டி நண்பனை கொலைசெய்வோரையம் நாம் இன்று காண்கின்றோம்.

இந்த இடத்தில் ஒருமுறை நான் நட்பு  பற்றி வசித்த ஒரு கதையை சொல்லித்தான் ஆகவேண்டும்:  இரண்டு நண்பர்கள் பலைவனத்திற்கூடாக பயணித்துக் கொண்டிருந்தனர். பாதிவழியில் இருவருக்கு மிடையில் வாக்குவாதம் பலமாகிசெல்ல திடிரென ஒருவர் மற்றவரது கன்னத்தில் பளாரென அறைந்தார். அப்பொழுது தாக்கப்பட்டவர்: “இன்று எனது உற்ர நண்பன்  எனது கன்னத்தில் அறைந்துவிட்டான்” என்று மணலில் எழுதினார். பின்னர் இருவரும் பலைவனத்தில் நீர் பகுதியை காணும் வரை தொடந்து நடந்து கொண்டே சென்றனர். இறுதியில் நீர் பகுதிக்குள்  இறங்கி குழித்துக் கொண்டிருக்கும்போது அடிவேண்டியவர் சேத்துக்குள் திடிரென மூழ்கத்தொடங்கினார். உடனே அறைந்தவர் அவரை மிகுந்த கஸ்ரத்துடன் இழுத்தெடுத்து காப்பாற்றினார். அப்போது “இன்று எனது உற்ர நண்பன்  எனது உயிரை காப்பாற்றினார் என்று எழுதினார். இதையும் கண்ணுற்ற அறைந்த நண்பன் “நான் உன்னை காயப்படுத்தியபோது மணலில் எழுதினாய். இப்போழுது  கற்பறையில் எழுதினாய். இது ஏன் என வினாவினார்”. அதற்கு மறுமொழியாக மற்றவர்கள் எம்மை காயப்படுத்தும் போது நாம் மணலில் எழுதவேண்டும். அதனை மன்னிப்பு என்னும் காற்று அங்கே தடயமில்லாது அழ்த்துவிடும். ஆனால் மற்றவர்கள் எமக்கு நன்மை செய்யும் போது கற்பாறையில் செதிக்கிவிடவேண்டும் அதனை எந்த புயல்காற்றும் அழித்துவிடாது என்று பதில்கூறினார். மன்னித்து ஏற்கும் பண்பும் நட்பின் அடையாளம்தானே. நாம் இயேசுவை காயக்படுத்தும்போதெல்லாம்  அரவணைத்திட முன்வந்தார். நம்மைத் தேடி வந்துகொண்டே இருக்கிறார். தேடி வரும் கடவுளை நாம் நாடிச் செல்லும்போது அங்கே நட்பும் அன்பும் உருவாகும். பாசக் கயிற்றினால் நாம் பிணைக்கப்படுவோம். காயங்களை மணலிலும் நன்மைகளை கற்களிலும்; எழுதப்பழகுவோம்.

இன்றைய நற்செய்தி இயேசுவோடு ஒருவர் கொண்டுள்ள உறவை இரண்டு வடிவங்களில் காட்டுகின்றது எனலாம். “பணியாளர்”; - “நண்பன்”. எம் விசுவாசப்பயணத்தில் இந்த வடிவத்தில் ஏதாவது ஒன்று முன்னிலைபெறும் என்பது உண்மையே. அது தலைவன் - பணியாளர் உறவு அல்லது நண்பன் - நண்பன் உறவாகும். இயேசு நம்மோடு நண்பனாக இருக்கவே ஆசைப்படுவதை நற்செய்தியில் பார்க்கின்றோம்: “இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்”. நட்பை வளர்ப்போம். உயிரைக்கொடுத்தும் நண்பனைக் காப்போம்.

தலைவன் - பணியாளர் உறவை முன்னிலைப்படுத்துவோர் நாம் இயேசுவின் முன்பு தகுதியற்றவர்கள் என்று கூறுகின்றனர். இதற்குத் தான் இயேசு “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” என்கின்றார். நமது கிறித்தவ வாழ்வும், நமது பணியும், நமக்கு இறைவன் தந்திருக்கிற தனிப்பட்ட அழைப்பு அனைத்தும் இறைவனின் கொடை. எனவே, இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாய் வாழக் கடமைப்பட்டிருக்கிறோம். அத்துடன், இறுதியாக எதற்காக இறைவன் நம்மை அழைத்திருக்கிறார் என்பதையும் நாம் சிந்திக்கவும் இன்றைய வாசகம் அழைக்கிறது. “நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்”. இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டதன் நோக்கம். நாம் பிறருக்குப் பயனுள்ள வகையில் கனி தரவேண்டும் என்பதற்காகவே. எனவே நேர்மையோடு, பிறருக்குப் பயன்தரும் வகையில் நாம் வாழ்வோம். பகைவரைகூட நட்பனாக மாற்றவோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff