Wednesday, May 16, 2012

நம்பிக்கையில் நம்பிக்கை வைப்போம். நற்செய்தியில் நம் வாழ்வை உருமாற்றுவோம்.

20.05.2012 
 ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்.
உயிர்ப்பின் மேன்மை உணர்ந்தவர்களாக நாம் இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவை இன்று கொண்டாடுகின்றோம். இயேசு விண்ணேற்பு அடைந்ததை கண்டவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நாயகன் மீண்டும் வருவார் என நம்பிக்கை தளாரமல் இருந்தனர். இங்கு நம்பிக்கை நனவானதைபற்றி நான்வாசித்த ஒருகதையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்: “இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது நாசி முகாம்களில் பல கைதிகளுக்கு சரிவர உணவோ உடையோ வழங்கப்படவில்லை. ஆனால் அவர்கள் அதிகக் கடுமையான வேலைகள் செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இக்கைதிகளில் நேர்மையாளரான விக்டர் பிராங் என்பவரும் ஒருவர். இந்தக் கொடூரமான நிலையில்; சோர்ந்து பலவீனத்தில் விழுகின்ற கைதிகளை நாசி வீரர்கள் இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்றார்கள். விக்டர் பிராங் தன்னைச் சுற்றியிருந்த கைதிகள் பலர் இவ்வாறு கொல்லப்படுவதை கண்கூடாகப் பார்த்தார். ஆனால் அவர் மனம் தளரவில்லை. என்றைக்காவது போர்முடிந்து தனக்கு விடுதலை கிடைக்கும். தனது குடும்பத்தை சந்திக்க முடியும் என்கிற நம்பிக்கையில் அவர் வாழ்ந்தார். எனவே அவர் அந்த நிலையிலும் உற்சாகத்தோடு காணப்படுவதற்காக உடைந்துபோன கண்ணாடித் துண்டுகளை வைத்து முகச்சவரம் செய்தார். கிழிந்துபோன உடைகளை துவைத்து சுத்தமாய் அணிந்து காணப்பட்டார். கடுமையான வேலைகள் கொடுக்கப்பட்டபோது முகமலர்ச்சியோடு செய்தார். அவர் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆயிரக்கணக்கான கைதிகள் இந்த முகாம்களில் இறந்து போனார்கள். ஆனால் விக்டர் பிராங் இறுதிவரை உயிரோடு இருந்து விடுதலையாகி தனது குடும்பத்தை சந்தித்தார்.”

இக்கதை உண்மைக்கு முடிவில்லை. நேர்மைக்கு அழிவில்லை நம்பிக்கைக்கு இறப்பில்லை. என எடுத்துகாட்டுகின்றது. இயேசு இவ்வுலகில் தனக்கு நேர்ந்த பல துன்பங்களை இறைசித்தத்தை நிறைவேற்ற பொறுமையோடு தாங்கினார். ஆண்டவர் மேல் அவர் வைத்த நம்பிக்கையே அவருக்கு ஆற்றல் கொடுத்தது. இதனால் இறைவன் இயேசுவை உயர்த்தினார். இயேசுவும்விண்ணேற்படைந்தார். இயேசுவின் விண்ணேற்பு ஆண்டவன் பார்வையில் நாமும் இயேசுவைப் போல் உண்மைக்காக நீதிக்காக அன்பிற்காக நம்பிக்கையுடன் வாழும்போது உயர்த்தப்படுவோம் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. உண்மைக்கு சாட்சியம் பகிர்வதே எனது பணி என்று கூறிய இயேசு தான் உயிர்தெழுந்தபின் தான் உயிர்த்தெழுந்ததை உலகிற்கு அறிவிக்கவும் அதற்கு சாட்சியம் பகிரவும் அழைப்பு விடுக்கிறார். உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். உலகில் நற்செய்தியையும் மீட்பையும் அறிவிப்பதற்காக நாம் அனுப்பப்படுகின்றோம். நாம் சமுதாயத்தில் புளிக்காரமாகவும் ஒளியாகவும் இருந்து புத்துணர்ச்சியுடனும்; செயல்படவேண்டும். அப்போதுதான் சமுதாயம் கிறிஸ்தவ விழுமியங்களிலிருந்து உரம் பெற்று உறுதியுடன் உயிர்த்துடிப்புள்ள அங்கமாக கடவுளின்பக்கம்; தடம் பதிக்கும். 
இயேசு கொண்டுவந்த நற்செய்திதான் என்ன?:கடவுள் நம்மை அன்புசெய்கிறார்;. நாம் கடவுள் காட்டும் வழியில் நடந்து சென்று அவரிடத்தில் நிலையான அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள வேண்டும்;. கடவுள் உலகின்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தன் ஒரே மகனை நமக்கு மீட்பராக அளித்தார்;. அவரிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். உண்மைக்கு சாட்சியம் பகிர்ந்து இயேசு உயிர்தெழுந்ததை உலகிற்கு அறிவித்து அதற்கு சாட்சியம் பகிரவேண்டும் என்பதே இயேசு கொண்டுவந்த நற்செய்தியின் சுருக்கம்.  உலகில் வாழ்கின்ற அனைவருக்கும் இந்நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். இயேசு உலகில் ஆற்றிய அதே பணியைத் தொடர்ந்து ஆற்றுவதே எமக்கு தரப்பட்ட பொறுப்பு. 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” இயேசுவின் சீடர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி 'நற்செய்தி அறிவித்தலே.” இதை நாம் வெறும் வார்த்தைகளால் வடித்துவிடக்கூடாது. மாறாக, நற்செய்தி என்பது ஒரு வாழ்க்கை முறை. இயேசுவின் போதனையை உள்ளத்தில் ஏற்று, அதை வாழ்வில் சான்று பகிர்தலே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம். இவ்வாறு நாம் நற்செய்திக்கு நம் வாழ்வின் வழியாகச் சான்று பகிர்ந்தால்அனைவரும் நற்செய்தியை அன்னியமாகப் பார்க்கமாட்டார்கள்.
சிலுவைப்பாடுகளின்; கொடூரமான நிலையிலும் தந்தை தன்னை காப்பாற்றி உயிர்த்தெழச் செய்வார் என உறுதியாக இயேசுநம்பினார். சிலுவைப் பாடுகளே இயேசுவின் மாட்சியின் வெளிப்பாடுகளாயின. அதுவே உன்னதமான மகிமைபெற வழிவகுத்தது. அதுவே இன்று நாம் கொண்டாடும் விண்ணேற்பு விழா. இயேசு மாட்சிமையடைதலின் முழுமை இன்றைய விண்ணேற்பு நிகழ்விலே நிறைவடைகின்றது. இயேசு அடைந்த மாட்சியிலும் மகிமையிலும் மதிமயங்கி இருக்க நாம் அழைக்கப்படவில்லை. மாறாக நமக்கு தரப்பட்ட பணியை நிறைவேற்றவே அழைக்கப்படுகின்றோம். இவ்வுலகை அன்பு நிலவும் ஓர் இடமாக, நீதி தவழ்கின்ற தளமாக நம்பிக்கை முளைத்திடும் திடலாக மாற்றியமைத்திட நாம் உழைக்கவேண்டும் என்பதே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சமாகும். நாம் தூயஆவியால் உந்தப்பட்டு நற்செய்தியின் தூதுவர்களாக மாறி நற்செய்திப் பணியில் முழுமையாக நம்மை ஈடுபடுத்தினால் இவ்வுலகில் கடவுளின் ஆட்சி இன்னும் தெளிவாகத் துலங்கும். நற்செய்தியால் நம் வாழ்வு உருமாற்றம் பெறும். இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா எம்மில் அர்த்தம்பெறும்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff