Thursday, May 31, 2012

இறைத் தன்மையுடன் மனிதத்தன்மை கலந்து மனிதர் மண்னில் முழுமையாக மலரவேண்டும்

03.06.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
விழாக்களின் ஒரு சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். மூவொரு கடவுளின் திருவிழா திருச்சபையில் மிக முக்கியமான ஒரு திருவிழா. இத்திருவிழா பாஸ்கா மறைபொருள்களிலுள்ள தந்தை, மகன், தூய ஆவி குறித்த கடவுளின் வெளிப்பாட்டை நினைவுபடுத்துகின்றது. இறைவனின் இந்த இயல்பு அதிபுனித திரித்துவம் எனப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இறையியல் வல்லுனர் பெக்குலியனால் இந்த மூவொரு கடவுள் என்ற மறையுண்மை கொண்டுவரப்பட்டது. இத்திருவிழா 1334 ஆம் ஆண்டில் திருத்தந்தை 22 ஆம் யோவானால் தொடங்கப்பட்டது. நைசீயா-காண்ஸ்டாண்டி நோபிள் திருச்சங்கங்கத்தில் உறுதி செய்யப்பட்ட இந்த விழா திருச்சபையின் அடித்தளமாக உள்ளது. தமத்திரித்துவத்தின் மகத்துவம் கூறும்; ஒரே கடவுள்,மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்ற மறையுண்மைகளை மனித அறிவால், எண்ணத்தாலும் மொழியாலும் போதுமான அளவு விளக்க முடியாமல் இருந்த போதிலும்,திருச்சபைத் தந்தையர்,தங்களது வாழ்வு மற்றும் ஆழமான விசுவாசத்தின் வழியாக விளக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பது உண்மையே.

நாம் இன்று  நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த நுஎநபசரைள  (இவக்றியஸ); என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது: 'கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது.' என்பதாகும். ஒருமுறை புகழ் பெற்ற அறிவியலார் டாக்டர் ஹென்றி மோரிஸ் கூறுகிறார்– உலகம் பருப்பொருள், இடம், காலம் ஆகியவற்றால் ஆனது. இவை மூன்றும் இல்லையேல், ஏதேனும் ஒன்றுகூட இல்லாதிருந்தாலும் இந்த உலகு இல்லை. அதே போல மூவொரு கடவுளும் இருப்பது அவசியமாகிறது என்கிறார் அவர். இவை ஒவ்வொன்றுமே மூன்றில் ஒன்றாக இருக்கின்றன.

'இந்த உலகில் மிக அழகான, ஆழமான அனுபவங்கள் எல்லாமே நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மறையுண்மைகள். இந்த ஆழமான அனுபவங்களை இதுவரை தங்கள் வாழ்வில் பெறாதவர்களை இறந்தவர்கள் என்று சொல்லலாம். அல்லது, குறைந்தபட்சம் பார்வை இழந்தவர்கள் என்றாகிலும் சொல்லலாம்.' என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லிச் சென்றார். நாம் காணும் இந்த உலகின் பல உண்மைகளுக்கு அறிவியல் விளக்கங்களைக் கண்டு பிடித்த அந்த மாமேதையே வெகு ஆழமான உண்மைகளைச் சந்தித்தபோது மௌனம் காத்தார். ' '

புனித அகுஸ்தின் தன் வாழ்வின் ஆழத்தில் உய்த்துணர வேண்டிய ஓர் உண்மையை தன் அறிவுத்திறன் கொண்டு அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள முயன்றார். எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் தனக்குள் எழுப்பி, விடைகள் தேட முயன்றார்.
புனித அகுஸ்தின் 'எப்படி' என்ற கேள்விக்குப் பதில் 'ஏன்' என்ற கேள்வியை எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் கண்டறிந்தருக்கலாம். நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டி, நம் மனதைத் தொடாமலேயே சென்றுவிடும். எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம்: நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? 'அவரைப் பற்றி ஒரு சில அழகான உண்மைகளை, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளை நமக்குச் சொல்லித் தர நம் இறைவன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்'.
நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை கோபத்தில் ஆழ்த்தியது. கடவுளை ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித் தரும் பாடம்: நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுத அந்தப் பாடம்.உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தர வேண்டுவோம்;. 
அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்' என்று புனித அகுஸ்தின் ஒருமுறை  சொன்னார்

நாம் வாழும் இன்றைய உலகில், நம் அன்பு உறவுகளே மிக அதிகமாகப் பழுதடைந்திருக்கிறது. பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய இன்று உறவாக வாழும், மூவொரு இறைவனின் திருநாள் அழைக்கின்றது. மூன்று ஆளாகிய கடவுளில் நிகழ்கின்ற அன்புப் பரிமாற்றம் கடவுள் அன்பு மயம் என்று நாம் கூறுவதற்கு அர்த்தம் தருகிறது. தமத்திரித்துவம் என்பதே ஒரு குழுமம். கடவுளே அன்பு என்று சொல்லும் போது மூன்று ஆட்களாகிய கடவுளுக்குள் நிகழ்கின்ற அர்த்தமுள்ள அன்பின் அனுபவத்தையே குறிக்கிறது.
இன்று குடும்பம் என்ற அமைப்பு சிதறுவதற்கு அன்புறவின் விரிசலே காரணம். இந்நிலை சுயநலத்தை ஆழமாக வளர்த்து விடுகின்றது. சமூகத்தோடு இணக்கம் கொள்ளாநிலை, ஊரோடு ஒத்துவாழும் நிலையை பண்பினை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இந்நிலையில் வளர்ந்தால் பல்வேறு மனநிலை பாதிப்புக்களை உள்ளாக்கிவிட்டு தன்னைத்தானே சமூகத்திலிருந்து பிரித்து விடுகின்ற போக்கை அதிகரித்துவிடும்.

ஓன்றிப்பின் அன்புறவில் வாழ வேண்டிய ஒரு மனிதரின் திருமண வாழக்கையைப் பற்றி நான் அறிந்த சப்பவம் இது. 'திருமணமான முதல் ஆண்டில் மனைவி பேசினாள் கணவர் கேட்டார். இரண்டாம் ஆண்டில் கணவர் பேசினர் மனைவி; கேட்டாள். மூன்றாம் ஆண்டில் இருவரும்; ஒரே நேரத்தில் பேசினர்; ஊரே கேட்டது' இறுதியில் கணவர் இன்நொரு பெண்னுடன் குடும்பம் நடத்த சென்றுவிட்டார். மனைவியும் பிள்ளைகுளும் தந்தையின் அன்புறவை இழந்தனர். இவ்வாறாக குடும்ப வாழ்வு நடத்துபவர்கள் ஏராளம். உறவுகள் முறிந்து சிதைந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நிலையை நம் சமுதாயத்தில் கண்கூடாகப் பார்க்கமுடியும். முரட்டு மனிதர்களையும் பாசத்தால் கட்டிப் போட முடியும் என்பது அன்றாட வாழக்கை நமக்கு உணர்த்தும் பாடம். அன்புக்காகவும் உறவுகளுக்காகவும் ஏங்கும் மனிதர்களை நாம் பார்க்க முடியும். கடவுளுக்குள் உறவின் ஒற்றுமையை நாம் தரிசிக்கின்றோம். 'என் மீது அன்பு கொண்டுள்ளவர் நாம் சொல்வதைக் கடைப்பிடிப்பார் என்பதை வாசிக்கின்றோம்.

இறைவன் தமக்குள் ஒன்றாய் இருப்பது போல் அவரில் நம்பிக்கை வைத்து குடும்பஉறவில் இணைவோரும் இருக்க வேண்டும் என்பது இக்கதை உணர்த்தும் உண்மை. இறைத் தன்மையுடன் மனிதத்தன்மை கலந்து மனிதர் முழுமையாக வேண்டும் என்பதை கடவுள் விரும்புகிறார். கடவுள் தம்மோடு கலந்திட நம்மை அழைப்பதற்கு ஆதாரமாய் நிற்பது மனிதர் மீது அவர் கொண்ட அளவற்ற அன்பு. மனிதரோடு உறவுகொள்ள இயேசுவும் தம்மையே தாழ்த்திக் கொண்டார். கடவுள் தன்மை கொண்ட மூன்று ஆட்கள் ஒரே கடவுளாக அன்புற்று வாழ்வது போன்று நாமும் நம் குடும்பங்களில் அன்புடன் வாழ வேண்டும். பாசமும் பரிவும் மன்னிக்கும் தன்மையும் மேலோங்கியிருக்கவேண்டும். அன்புற்று ஒன்று பட்டு ஓர் உயிரும் ஓர் உடலுமாக நாம் அனைவரும் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். மூவொரு கடவுள் நம் குடும்ப வாழ்வின் ஒற்றுமைக்கு மாதிரி. நம் குடும்பத்திலும் மற்றனைவரோடும் நாம் பாசத்தோடு பழகி வாழ வேண்டும்

எனவே தம்மையே நமக்குத் தந்த திரித்துவ உறவுகளை வலுப்படுத்த உறவுகளின் ஆழம் மனித மனங்களை ஒன்றிணைக்கும். கடின உள்ளத்தாரையும் இளகிய உள்ளத்தினராக்கும். குடும்ப உறவுகளை சீராக்க மூவொரு இறைவன் அழைக்கின்றார். சகோதர பாசத்தை ஆழப்படுத்த அழைக்கின்றார். அயலாரோடான உறவை சரி செய்ய அழைக்கின்றார்.
'என் மனதிற்கு பிடித்தமானவை மூன்று அவை ஆண்டவன் முன்னும் மனிதர் முன்னும் அழகுள்ளவை: அவை உடன்பிறப்புக்களிடையே காணப்படும் ஒற்றுமை, அடுத்திருப்பவரோடு ஏற்படும் நட்பு, தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவன் மனைவியர்' எனக் கூறும் சீராக் ஆகமம் வார்த்தைகளை மனதில் நிறுத்தி கடவுள் முன்னும் மனிதர் முன்னும் அழகுடையவர் ஆகுவோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff