Thursday, July 12, 2012

தடைகளை தகர்த்தெறிந்து பாரினில் பணியாளனாய் என்றும் வாழ்வோம்.

15.07.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இறைவாக்கினரின் அழைப்பு என்பது ஒரு விசித்திரமான விடயமாக விவிலயத்தில் விளங்கப்படுத்தப்படுகின்றது. இறைவாக்கினர்கள் எதிர்பாராத விதமாக, சில சமயங்களில் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இறைவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தரப்பட்ட இறைவாக்குப் பணி ஒரு சுமையாகவே அவர்கள் கண்டாலும் அது இறைவனின் அழைப்பு என அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தரப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தனர் என்பது கண்கூடு.

தம் திருத்தூதரை நற்செய்திப் பணிக்கு அனுப்பும் முன்னர் இயேசு அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகளை இன்று நற்செய்தி  கூறுகின்றது. இயேசு பன்னிரு சீடரையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இருவர் இருவராக நற்செய்திப் பணியாற்ற அனுப்புகிறார். அப்படியே அவர்களும் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம்மாற வேண்டுமென்று தமது வாழ்வாலும் போதனையாலும் இறைவாக்குப்பனியை பறைசாற்றினார்கள்;.

அனுப்பப்டும்போது எந்த வல்லரசும் தன் பணியாளர்களுக்கு இவ்வளவு சலுகைகள், பாதுகாப்புக்கள் வழங்கியதாக வரலாறு இல்லை,இனிமேலும் இருக்கப்போவதில்லை: குணமாக்கும் வல்லமை, இறந்தோரை உயிர்தெழச் செய்யும் ஆற்றல், பேய் ஓட்டும் வரம், மனிதனை மனிதனோடும் சமூகத்தோடும் ஆண்டவரோடும் உறவாக்கும் ஒப்பற்ற கொடை, பணத்தை நம்பியோ, பொன்,பொருளை நம்பியோ செல்லவேண்டாம், என்னை மட்டும் நம்பிச் செல்லுங்கள். உணவு, உடை,இடம் தேடி அலைய வேண்டாம். இவை உங்குளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். எந்த அரசு தன் பணியாளர்களுக்கு இப்படிப் பராமரிப்புக் கொடுக்கும்? செல்லும் இடமெங்கும், நாட்டிலும் வீட்டிலும் அமைதியை வாழ்த்தாக, வழங்குங்கள். உங்களை ஏற்றுக் கொள்ளாமலும், உபசரிக்காமலும், உங்களுக்குச் செவிகொடுக்காமலும், உங்களை எதிர்ப்பவர்களை நாம் கடைசி நாளில் கடுந்தண்டனைக்கு உள்ளாக்குவோம். என்னே பாதுகாப்பு. கடவுள் வளங்கும் இந்த பதுகாப்பு

அதன் இறுதிப் பகுதியில் உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள் என்னும் கருத்து இன்று நம் கவனத்தைக் கவர்கிறது. நற்செய்தி அறிவிக்கப்படும்போது அனைவரும் அதை ஏற்றுக்கொள்வர் என்று எதிர்பார்க்கஇயலாது. ஒருசிலர் அதை ஏற்க மறுப்பர். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் நேரத்தையும், ஆற்றலையும் அதிகமாகச் செலவழிக்காமல்  அவர்களுடைய நகரை விட்டுப் புறப்படலாம். அவ்வாறு புறப்படும்போது கால்களிலுள்ள தூசியை உதறிவிடலாம் அதாவது, அவர்களுடைய ஏற்றுக்கொள்ளாமையைப் பொருள்படுத்தாமல்; புறக்கணிக்கலாம் என்கிறார்.

நமது வாழ்வுக்கு இந்த செய்திகள் அவசியமானவை. நமது இல்லத்தில், பணியிடத்தில் நமது சொல்லாலும், செயல்பாடுகளாலும் நல்ல மதிப்பீடுகளை, நல்ல செய்திகளை, நியாயங்களை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமை. ஆனால், எல்லாரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவர்களிடம் அதிக வாக்குவாதங்கள் செய்து நேரத்தைப் பாழாக்க வேண்டாம். அவர்களைப் புறக்கணித்துவிட்டு, தொடர்ந்து பிறருக்கு நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஈடுபடுவோம். இறைவாக்குப் பணி செய்பவர்களின் எளிமையைப் பற்றி நற்செய்தி பேசுகிறது. எனவே பணத்துக்கோ, பொருளுக்கோ, உலக இன்பங்களுக்கோ அடிமையாகாதபடி, இறைவன்மீது மட்டுமே நம் நம்பிக்கையை வைப்போம்.

திருத்தூதர் அனுப்பப்பட்டது போன்று நாமும் இந்தஅழைப்பை ஒவ்வொரு திருப்பலியின் முடிவில் மீன்டும் மீன்டும் பெறுகின்றோம். குருக்களின் மூலம், நற்கருணையின் மூலமும், திருப்பலியில் கடைசியில் கொடுக்கப்படும் ஆசிர்வாதத்தின் மூலம், இயேசு நமக்கு அதிகாரம் கொடுத்து, கடவுளின் நற்செய்தியை நாம் சந்திக்கும் அனைவரிடமும் அறிவிக்க அனுப்புகின்றார். அழைப்பை ஏற்போம். கடவுள் பணியிலிருந்து நம்மைப் பிரிக்கின்ற அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு, அவரது பணியை நம்பிக்கையோடு பறைசாற்றிட நாம் முன்வருவோம். நம் உள்ளத்திலும் வாழ்விலும் மாற்றம் ஏற்படும்போது நாம் பிறருடைய வாழ்விலும் மாற்றம் நிகழ வேண்டும் என்னும் குறிக்கோளைச் செயல்படுத்த ஊக்கத்தோடு ஈடுபடுவோம். இந்த உலகத்தில் ஒரு வித்தியாசத்தை கொண்டுவருபவர்களாக இருக்கமுனைவோம். நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் தந்த அழைப்பை மறுக்காமல் பணியை நமது வாழ்வில், சான்று பகர்தலில், உலகப் பொருள்களின்மீது அதிக பற்று கொள்ளாமையில், நம் வாழ்வின் எளிமையில் வெளிப்பட பணியாளராவோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff