Friday, July 20, 2012

இயேசுவோடு தனிமையில் கலந்து ஆலோசிப்போம்;. எல்லாம் நன்றாக நடக்கும்

22.07.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பணிப் பயிற்சிக்கு அனுப்பிய இயேசு, இப்பொழுது அவர்கள் கற்றுக்கொடுத்தவை, செய்த செயல்கள் அனைத்தையும் கவனமுடன் கேட்கிறார். இங்கு இயேசுவின் உளவியலும், ஞானமும் நம்மை மலைக்க வைக்கின்றன. இன்றைய நற்செய்தி வாசகம் அத்தகைய ஓர் அனுபவத்தை நமக்குத் தருகிறது. இயேசுவின் சீடர்கள் நற்செய்தி அறிவிப்புப் பணியைச் செய்துவிட்டுத் திரும்பிவந்து, தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் இயேசுவிடம் பகிர்ந்துகொண்டபோது, இயேசுவின் பதிலுரையைப் பாருங்கள். களைத்த அவர்களை சற்றே ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொல்கிறார். அத்துடன், தாமே அவர்களை ஓய்விடத்துக்கு அழைத்துக்கொண்டு செல்கிறார். இயேசுவின் பரிவும், ஞானமும் இந்த அழைப்பில் நன்கு வெளிப்படுகின்றன. இந்த உபசரிப்பை பெற்ற அவர்கள் உடன் இருப்பவர்கள் உறுதியாக அன்போடும் ஆர்வத்தோடும் மிகுந்த அர்ப்பணத்தோடும் பணிசெய்வார்கள். உயிரையும் கொடுப்பார்கள் என்பது தெளிவு.

இயேசுவின் இந்த மனிதாபிமானம் சீடர்களின் மேல் மட்டுமல்ல காட்டப்பட்டதல்ல. எங்களிடத்திலும் அதே மனிதாபமானத்தை எப்பொழுதும் இயேசு காட்டுகின்றார். அன்று மட்டுமல்ல இன்றும் நம் இயேசு அதே மனிதாபம் உள்ளவர். நாம் நன்றாக உழைக்க வேண்டும். ஓய்வு எடுக்க வேண்டும், தனிமையில் சிந்திக்கவும் வேண்டும.; கூட உள்ளவரோடு கலந்து ஆலோசிக்கவும் வேண்டும் என விரும்புகிறார். இயேசுவோடு தனிமையில் கலந்து ஆலோசிக்கும்போது  எல்லாம் நன்றாக எமக்கமையும்.

பெருந்திரளான மக்களைக் கண்ட இயேசு அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார் என இன்றைய நற்செய்தி முடிகின்றது. இதனை சற்று கூர்ந்து கவனித்தால் மக்கள்மீது இரக்கம் கொண்ட இயேசு அவர்களுக்கு உணவுகொடுக்கவில்லை, அவர்களின் நோய்களைக் குணப்படுத்தவில்லை. எந்த அருங்குறியும் அவர்கள்நடுவில் செய்யவில்லை. மாறாக, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். இயேசு மனிதர் மீது எதையும் திணிக்க வரவில்லை. அவர் மனித சுதந்திரத்தை எப்போதும் மதிக்கிறவர். மக்கள் கடவுளிடமிருந்து வருகின்ற உண்மையைத் தெரிந்துகொள்ளவேண்டும், அவ்வாறு தெரிந்துகொண்ட உண்மையை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் - இதுவே இயேசு மக்களிடமிருந்து எதிர்பார்த்தது. ஆகவே, அவர் மக்களுக்குக் கற்பித்தார். இயேசுவின் இச்செயல் நம் கண்களைத் திறக்க வேண்டும். பசியாயிருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடு என்னும் சீனப் பழமொழியை நாம் அறிவோம். மக்கள்மீது பரிவுகொண்ட இயேசு, அவர்களின் பசியை, பிணியை நோக்காமல், அவர்களின் பசிக்கும், பிணிக்குமான காரணத்தைப் பற்றி எடுத்துரைத்தார், அவர்களது ஆன்மீக வெறுமையைப் பற்றிப் பேசினார்;. தந்தை இறைவனின் பேரன்பையும், அருள்காவலையும் பற்றிப் பேசினார். அவர்களின் அகக் கண்களைத் திறந்தார். எம்மாவு நோக்கிச் சென்ற சீடர்களின் கண்களைத் திறந்ததுபோல, ஆயரில்லா ஆடுகள்போல் இருந்த அடிமட்ட மக்களின் வாழ்வுச் சிக்கலையும், அதைத் தீர்ப்பதற்கான வழிகளையும் எடுத்துரைத்தார். இயேசுவிடமிருந்து கற்றதை நாம் வாழ்வில் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறோம். அவரைப் போல நாமும் பரிவுடைய மக்களாக மாறுவதே நாம் அவருடைய சீடர்களாக வாழ்கிறோம் என்பதற்கு அடையாளம் ஆகும்.

இதுதான் மிகச் சிறந்த அறப்பணி. இதுதான் சிறந்த அன்புப் பணி. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்கு உதவி செய்தது நன்று. ஆனால், அதனினும் நன்று, அவர்களை விழிப்படையச் செய்வது. இதே அழைப்பை இயேசு இன்றும் நமக்குத் தொடர்ந்து தருகிறார். நமது பல்வேறு பரபரப்பான பணிகளுக்கு இடையில் இன்றைய விரைவுக் கலாசார உலகில்; மன அழுத்த்திற்கும் சுமைகளுக்குமிடையில் நாம் நற்செய்திப் பணியாற்றல், அன்புச் சேவைகள் செய்தல். அவர்களுக்குக் கல்வி கற்பித்து, புதிய வாழ்வுக்கு வழிகாட்டுவது. அத்தகைய பரிவுச் செயல்களைச் செய்ய முன்வருவேண்டும்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff