Sunday, July 1, 2012

மன்றாட்டுக்கள் 02.07.2012



1.“என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணிலிருந்து இறங்கி வந்தேன்” என்று கூறிய நற்கருணை நாதரே.

புரட்சிகர புதிய கண்டு பிடிப்புக்கள், கவர்ச்சியை காசாக்கும் காரியங்கள், மானிடத்தை மாயைக்குள் அழைத்து செல்ல, மனித மாண்பற்ற தன்மைகளால், பண்பற்ற கலாசார நிலைகளால் ஆன்மீகத்தை அழிவு நிலைக்குள்ளாக்கும் எமக்கு அருள் வழிகாட்டி நிறைவாழ்வை நோக்கி எம்மை அழைத்துச் செல்லும் பாப்பானவர் ஆயார்கள் அருள்பணியாளர்கள் மற்றும் அனைவரையும் ஆசிர்வதித்து அவர்கள் நாளும் பயனிக்கும் சறுக்கான பாதைவழியே வழுக்காமல் உம்மை நோக்கி சென்று  என்றும் உம் திருவுளத்தை நிறைவேற்ற நீரே அவர்களுக்கு துணையாக இருந்தருள வேண்டு என்று நற்கருணை நாதர் ஊடாக இ.உ.ம

2.  “என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்” என்று திருவாய் மொழிந்த இயேசுவே

இன்றைய நிகழ்காலப் பேரழிவுகளால் பெரும் துயருற்று எதிர் கால ஏக்கங்களை உள்ளங்களில் சுமந்துகொண்டு வீங்கிய இதயத்துடன் விரக்தியின் விழிம்பில் இருந்து கொண்டு கற்பனைகளையும் கனவுகளையும் காற்றிலே பறக்க விட்டு வாடி நிற்கும் எம் இளைஞர்களை ஒருகணம் கண்நோக்கிபாரும். ஆண்டவரே நாம் உம்மையே நாடி வருகின்றோம். எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் விரக்திகளை  மகிழ்வாக்கியருளும்  எம் கனவுகளை கனிகளாக்கியருளும் கடவுளே என்றும் உம்; பணியில் எம் கால்கள் நடந்து வாழ்வை கண்டடைய வரமருள வேன்டும் என்று நற்கருணை நாதர் ஊடாக இ.உ.ம.

3.சுமைசுமந்து சோர்ந்திருப்போரே எல்லாரும் என்னிடம் வாருங்கள் உங்களை நான் இளைப்பாற்றுவேன்;” என்று கூறிய இயேசுவே.

மரத்துப்போன மனதுடனே, மனிதங்கள் மட்டும் வாழ அதிகார வெறியில் ஆணவம் பாடுகின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள். இதனால் இனியும் இழக்க ஏதுமின்றி விழியோரத்தில் முடிவில்லா சுமைகளை சுமந்தபடி வழியோரம் வருகின்றன எம் வாழ்க்கை. வேறேங்கும் கிட்டாத மன ஆறுதல் உமது இல்லத்தில் கிட்டும் என்ற நம்பிக்கையுடன் உம் அண்டை ஓடோடி வருகின்றோம் நாம்.  எம் மனவேதனைகள் மகிழ்சியாகமாற்றும், இழப்பால் இடிந்து போன எம் இதயங்களுக்கு இன்றைய உம் இனிமைகள் எல்லாம் நிரந்தரமாக கிடைக்க துணைபுரிய வேண்டும் என்று நற்கருணை நாதர் ஊடாக இ.உ.ம.

4.“ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்” என்று திருவாய் மொழிந்த கடவுளே.
உரிமைகள் இழந்து நாம் இன்று வேடர் கண்ணியின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம். அதிகார வாதிகளால் அலைக்களிக்கப் படுகின்றோம். ஒடுக்கப்பட்ட ஒரினமாக நாம் தவிக்கின்றோம் ஏறெடுத்துப் பார்க்க யாருமின்றி, ஏக்கங்கள் மத்தியில் ஏன் இந்த வாழ்க்கை என எம் இதயம் கேட்கிறது. எனினும் எம் வாழ்விற்கு ஒளி தரும் விடிவெள்ளியாக உம்மையே எண்ணி வருகின்றோம்  எம் ஏக்கங்களை துடைத்தருளும் எம் தவிப்புக்களை  மகிழ்வாக்கியருளும். இவற்றினூடாக நாம் நிரந்தர நிம்மதியான வாழ்வை கண்டடைய வரமருள வேன்டும் என்று நற்கருணை நாதர் ஊடாக இ.உ.ம.

5.  உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க என்று கூறிய நற்கருணை நாதரே

நிஜத்தைத் தேடி இளைஞர்கள் நாம்  ஒருகணம் உம் கரங்களில் குழந்தைகளாகின்றோம். பிறர் வாழ எம்மையும் கொடுத்திட, பகிர்வதில் நாம் பறைசாற்றிட, உண்மையின் வழிகளை உலகிற்கு காட்டிய உமது வழியில் நாம் பயணிக்க, நீர் எமக்கு வழியாகும். உலகம் எம்மை வெறுத்தாலும், சோகம் எமக்கு சொத்துக்களானலும், தோல்விகள் எமக்கு தொடர்கதையானாலும், எழுந்து நடக்கின்றோம் நீர் காட்டும் பாதையில்  உம்மை நோக்கி சோர்ந்து போகமல், எம் ஆற்றலை ஆண்டவர் பாதையில் ஆக்கப் பணிகளுக்கு பயன்படுத்தி, அகிலம் என்றும்; அன்பு சிறக்க, மகிழ்ச்சி எங்கும் மண்ணில் மலர, எம் இதயம் துறந்து, உதயம் காண வருகின்றோம், உனதருள் தாரும் இறiவா என நற்கருணை நாதரே ஊடாக இ.உ.ம.

6.“சின்னம் சிறியவர்களுக்கு செய்தபோது அவற்றை எனக்கே செய்தாய்;” என்று கூறிய அன்பரே.

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி கால் வயிற்றுக் கஞ்சிக்கே உழைப்பின்றி உழலும் இதயங்களுடன், இருப்பதைப் பகிர்ந்து அவர்கள் இதயக் காயத்தை ஆற்றுவோம். உருகும் விழிகளின் விழிநீர் துடைத்து  அவர்களுக்கும் விடியும் பொழுதுகள்  எல்லாம் இனிமைகளை தாங்கி வரும்  விடிவெள்ளிகளாக  மாறி  தினமும் மகிழ வேண்டிய மனங்கள் மகிழ்வினில் திகழ நாமும் கருவிகளாக மாற வரம் தரவேண்டும் என்று நற்கருணை நாதர் ஊடாக இ.உ.ம.

7.  “வாழ்வு தரும் உணவு நானே” எனக்கூறிய நற்கருணை நாதரே

உலகின் பலபாகங்களிலும் வசிக்கும் எமது பங்கு மக்களை உமது கரங்களில் ஒப்படைக்கின்றோம். அவர்களின் உள்ளக்கிடக்கைகளை ஏக்கத்தவிப்புக்களை நீரே பூர்த்தி செய்தருளும். அவர்கள் அனைவரும் வாழ்வுதரும் உணவாகிய உம்மையே  பெற்றுக்கொள்ளவும்  உம்மையே ஆர்வத்தோடு தேடவும் உலகில் பசியோடு தம்மைசுற்றி தவிப்பவர்களுக்கு பசிபோக்கும் கருவியாக மாறவும் நீர் வழித்துணையாக வேண்டும் என்று நற்கருணை நாதர் ஊடாக இ.உ.ம

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff