Friday, January 23, 2026

ஐந்து மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா?

 ம.பிரான்சிஸ்க்- சுதந்திர பத்திரிகையாளர், 

இருள் சூழத்தொடங்கிய நேரம் ஏழு இளைஞர் திருகோணமலை கடற்கரையின் காந்தி சிலை அருகே 20 ஆண்டுகளுக்கு முதல் 2006.01.02 அன்று உரையாடிக் கொண்டிருந்தனர். நடக்கப் போகும் விவரிதத்தைப் பற்றி எதுவும் தெரியாத கடலலைகள் கரையோடு சரசமாடிக் கொண்டிருந்தன. திடீரென்று கோனேஸ்வரம் ஆலயத்துகுச் செல்லக்கூடிய கடலோடு அண்டிய வீதியால் வந்த பச்சை நிற முச்சக்ர வண்டியில் இருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இவர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டு தப்பியோடினர். திகைத்துப் போன இளைஞர்கள் பெரும் பதட்டத்து உள்ளாக்கித் தம்மை திடப்படுத்திக்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து போனார்கள்.



அப்போதுதான் அது நடந்தது. திக்கமுக்காடிப் போயிருந்த அந்த இளைஞர்களை டோக்கியாட் வீதிக்குப் பக்கத்திலிருந்து ஓடி வந்த சீருடைத் தரித்த துப்பாக்கிதாரர்கள் அப்படியே சுற்றி வளைத்தார்கள். இவர்கள் அனைவரும் மாணவர். அவர்கள் இந்த நாட்டில் தமிழராக பிறந்ததை தவிர வேறு ஒரு குற்றமும் அன்று செய்திருக்கவில்லை. அந்த ஏழு பேரையும் துப்பாக்கிதாரர்கள் நெருங்கிக் கொண்டிருந்தபோது கிடைத்த சிறிது நோத்தைப் பயன்படுத்திய மாணவன் ரஜீகர் தனது கையடக்கத் தொலைபேசியிலிருந்து அவசரமாக தன்னுடைய தந்தை வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரரைத் தொடர்புகொண்டார். அருகில் உள்ள புனித மரியாள் வீதியில் குடியிருக்கும் வைத்தியர் விரைவாகத் தலத்திற்கு விரைந்தார். வைத்தியர் மனோகருக்கு எதுவும் புரியவில்லை. அவரது இதயம் அங்கே நொறுங்கிப்போனது. அவர் மகனோடு உரையாடும்போது பெரும் ஒப்பாரியோடு மகனும் நண்பர்களும் மண்டியிட்டு உயிர்பிச்சை கேட்டு ஓலம் எழுப்பிக்கொண்டிருந்தது அவரது மனதை உலுக்கிக்கொண்டிருந்தது. அந்தக் கடற்கரை அருகே போனதும் அவர் அதிகாரிகாளால் தடுக்கப்பட மனம் பதறியது. எதுவுமே செய்யமுடியாத அபலையாய்க் கலங்கிய படி நிற்கிறார். 


பின்னாளில் வைத்தியர் சப்பவத்தை விபரித்தபோது நான் தடுப்புக் கவலரண் அருகே படையினருடன் உரையாடியும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தேன் அப்போது எங்களுக்கு உதவுங்கள் என்ற அழுகுரல் எனக்குக் கேட்டது. ஆனால் என் மகன் அமர்ந்திருந்த காந்தி சிலையருகில் விளக்குகள் வேண்டும் என்றே அணைக்கப் பட்டிருந்த காரணத்தால் அங்குள்ள நிலைமையை என்னால் தெளிவாகப் பார்க்க முடியாதிருந்தது. இருட்டில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட சத்தம் கேட்டது. அப்பகுதியிலிருந்த அனைத்து விளக்குகளும் அணைந்தன என்றார் வைத்தியர் மனோகர். ஒரு தந்தையாக இதனை கூறுவதென்பது எவ்வளவு கொடுமையானது என்று எல்லாரும் புரிந்துகொள்ள முடியும். சுத்திவளைத்த துப்பாக்கிதாரர்கள் பிடித்த அந்த ஐந்து பேரையும் நடுவீதியில் குப்பறப்படுக்கவைத்து காதுவழியே துப்பாக்கித் தோட்டாக்களை சரமாரியாகத் தீர்த்துகட்டினர். 



வன்னியார் வீதியைச் சேர்ந்த தங்கதுரை சிவனந்தா, புனித மரியாள் வீதி மனோகரன் ரஜிகர், வித்தியாலயம்வீதி சண்முகராஜா சஜேந்திரன், சிவன்வீதி லொஜிதரறாஜா ரொகான்; மற்றும் யோகறாஜா ஹேமச்சந்திரன் ஆகிய ஐந்து மாணவர் அந்த இடத்திலே கொல்லப்பட்டார்கள். இதில் திருகோணமலை இந்துக் கல்லூரியில் கல்விபயின்று 2025-06 ஆண்டுக்கான கல்வியாண்டில் பல்கலைக்களகத்திற்கு அனுமதி பெற்றிருந்த நான்கு மாணவர்  அவர்களுடைய நண்பர் ஒருவரும் அடக்குவர். ஆரம்பத்தில் காந்தி சிலை அருகில் ஏழு பேர் இருந்ததாக நாம் சொன்னோம் அல்லவா. ஐந்து பேர் இறந்து போயிருக்க மற்ற இருவருக்கு என்ன நடந்தது என்று நீங்கள் அறிய ஆவலாகலாம்: காந்திசிலை அருகில் இருந்த விளக்குகள் அணைக்கப்பட்டபோது கும்மிருட்டைப் பயன்படுத்திக் கொண்டு தப்பியோட முயற்சிசெய்த இரு மாணவரை நோக்கிப் துப்பாக்கிப் பிரியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் எப்படியோ தப்பி திருகோணமலை மருத்துவமலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார். மற்றைய மாணவர் படுகாயங்களுடன் தட்டுத் தடுமாறியப்படி தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று பின்னர் பாதுகாப்புக் கருதி ஊரை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அவர்கள்: பூங்குளலோன் மற்றும் பரறாஜசிங்கம் கோகுலராஜ் இருவரும் தெய்வாதீரமாக உயிர்தப்பினார்கள்.  இவ்வருடம் 02.01.2026 திகதி திருகோணமலையில் இந்த மாணவர்களின் 20ஆவது நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நீதிதான் கிடைக்கமில்லை.


இவர்கள் பல்கலைக் கழகத்துக்குத் தேரிவான மாணவர். எதிர்காலத்தைப் பற்றி எத்தனை ஆயிரம் கனவுகள் சுமந்திருப்பர். கடக்காற்று வீசிக்கொண்டிருந்த அந்த இதமான இரவில் காந்தி சிலை அருகில் நிச்சயமாக தம் உயர்கல்வியை,தம் எதிர்காலத்திட்டங்களைப் பற்றி உரையாடியிருப் பார்கள். ஆனால் இந்த மாணவர்களின் கனவுகள் மட்டுமல்ல அவர்களும் பொதிசெய்து புதைக்கப் பட்டிருக்கிறார்கள்.


இலங்கை ஒரு தோல்விகண்ட தேசமாக வார காரணமே அதன் சரித்திரத்தில் பாதி அத்தியாயங்களை இன முறுகலும் வன்முறையும் ஆக்கிரமித்திருந்தமைதான். 1957 நடந்த இனக் கலவரத்திலிருந்து ஒவ்வொன்றாக விவரித்துக்கொண்டு போகலால். 1981 நடந்த யாழ் நூலக ஏரிப்பு, 83 நடந்த யூலை வன்முறைகள் எனப்பட்டியல் நீளும். இந்த மாணவர் விவகாரம் உள்ளாட்டிலும் வெளிநாட்டிலும் பரவலான கவனத்தையும் ஈற்றது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள்,சர்வதேச மன்னிப்பு சபை,(Amnesty International,) ஐ.நா.சபை எல்லாம் மிகவும் வன்மையாகக் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்கள். இந்த அளவுக்கு இந்த கொடூரத்தின் பின்னரான நிகழ்வுகள் இருந்தது என்று சொன்னால் மேலும் பயங்கிரமாக இருக்கும். துப்பாக்கி வேட்டுகளை எல்லாம் காதால் கேட்ட ஒரே சாட்சியான தன் மகனின் கடைசி தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேசிய வைத்தியர் மனோகரனையும் குடும்பத்தையும் இலக்குவைத்து பலமாதங்களாக அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருந்தனவாம். முடிவில் இலண்டனுக்குத் தப்பிச்சென்று வைதியர் மனேகரனின் குடும்பம் அகதி அந்தஸ்துகோரினர்.

இந்த மிலேச்சத்தனத்துகு எந்தத் தயக்கமும் இன்றிக் குரல் கொடுத்த நல்லிணக்கத்தின் உருவமாக இருந்த ஹந்தூங்கமுவே நந்தரத்தின தேரரின் உயிர் ஒரு துப்பாக்கிதாரியால் பறிக்கப்பட்டது எத்தனை வேதனைநிறைந்த சம்பவம். இதைப்போல்தான் சுடரொளி பத்திரிகையின் ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகீர்தராஜனுக்கு நடந்த அவலமும் கூட. மாணவர்களுக்கு நடந்த கொடுமைகளையும் துணை இராணுவக் குழுகளின் மனித உரிமை மீறல்களைப் பற்றி கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார்.  அப்போதைய அரசு சர்வதேச அழுத்தத்தை திசைத்திருப்ப மாணவர் தங்களுக்குள் வைத்திருந்த கைக்குண்டு வெடித்ததால் இறந்து போனார்கள் என்று கட்டுக்கதை அளந்து கொண்டு இருந்தது. ஆனால்  ஊடகவியலாளர் சுகீர்தராஜனும் ஐந்து மாணவர் மீது மிக அருகிலிருந்து துப்பாக்கி சன்னங்கள் தீர்க்கப்பட்டதை வெளிப்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டார். இதன்மூலம் அவர்கள் கைக்குண்டுவெடிப்புமூலம் இறந்தார்கள் என்ற பொய்ப்பிரசாரம் கிழிந்தது. ஆனால் இதுவெளியாகிய மறுதினம் 2026.01.24 திகதி சுகீர்தராஜனுக்கு எமனாக மாறியது. இரண்டுசிறு குழந்தைகளின் தந்தையான சுகீர்தராஜனின் உயிரும் திருகோணமலை நகரில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாதவர்களால் பறிக்கப்பட்டது. இதெல்லாம் நடந்தபோது அன்றைய அரசாங்கம் ஆழ்ந்த துயிலில் சொப்பணம் கண்டுகொண்டிருந்தது. பலமான ஊடகங்களும் தனி நபர்களும் அரசியல் வாதிகளும் இதைப் பற்றிப் பேச முன் வரவில்லை. ஆனால் சர்வதேசத்திலுடைய நெருக்குவாரம் இலங்கைமீது தொடர்தது. 

இந்த காட்டு மிராண்டி தனங்கள் அரங்கேறிக்கொண்டு இருந்தது 2006 சனவரி. அது யுத்தம் நடக்காத ஒரு காலம். சமாதானம் மூலம் இனப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா என்று ஆராயப்பட்டுக்கொண்டு இருந்த காலம். இதனால்தான் யுத்தம் என்ற பாரிய மனித உரிமை மீறல்களை  பின்னாளில் இந்த சம்பவங்களை அரசால் மறைக்க முடியாமல் போனது. 2009 ஆண்டு யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னரும் திருகோணமலை மாணவர் படுகொலையை யாருமே மறக்கவில்லை. 2013 ஆண்டில் இவ்விவகாரம் ஜெனிவா வரை சென்றது. மருத்துவர் மனோகர் ஜெனிவாவுக்குப் போய் தனது மகன் ரஜீகரின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கேட்டு கதறி அழுதார். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தன் மகனின் நண்பர் என்றும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துகாகவே அவர்கள் கொல்லப்பட்டார்கள். தன் பிரியமிகு மகனின் மரணத்தை  நேரிலேயே தான் பார்த்ததாகவும் சாட்சியமளித்தார். இதனால் அப்போதைய அரசுக்கு உள்ளூரில் ஏதாவது செய்ய வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே ஐரோபிய யூனியன் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு வழங்கப்படும் ஜீஸ்பி ப்லஸ் என்ற வரிச்சலுகையை நிறுத்தியிருந்தது. ஆகவே சிக்கல் மேலும் தீவிரமாகும்போல இருந்தது. கண்துடைப்புக்கேனும் ஏதாவது செய்யவேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டது அரசு. முடிவில் பொலீஸ் உத்தியோகத்தர் உப்பட 13விசேர அதிரடி படையினர் கைது செய்யப்பட்டார்கள். 2014 ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் இந்த சம்பவமானது மேலும் தீவிரமாக ஆராயப்பட்டது. அன்று ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளர் ணுநனை சுய'யன யுட ர்ரளளநin வெளியிட்ட 20பக்கங்கள் கொண்டதும்74 விடயங்களை உள்ளடக்கியதுமான  அந்த அறிக்கையில் திருகோணமலை கடற்கரையில் நடந்த படுகொலைகளுக்குச் சாட்சியம் வழங்க முன் வந்தவர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் என்றும்; கொலைகளுக்குப் பாதுகாப்புப் படையினரே காரணம் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஐ.நா.சபையும் சர்வதேசமும் என்னதான் சொன்னபோதிலும் இலங்கை அரசு அதன் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளவில்லை. 

முடிவில் 2019.07.03 இந்த வழக்கில் ஒரு தீர்ப்பு வந்தது. அதாவது 2013ஆண்டு முதல் ஆறு வருடங்களாக சிறைப்படுத்தப்பட்டிருந்த அனைவரும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டார்கள். திருகோணமலை நீதவான் நீதிமன்றம் வழக்கை தள்ளுவடி செய்துவிட்டது. 2006 ஆம் ஆண்டு நடந்த இந்த நாசகாரத்தின் சூத்திரதாரிகள் யார்? ஒரு தந்தை தன் கண் முன்னே வளர்ந்த பிள்ளை சுடப்பட்டு விழுவதைக் காண்கிறார். பின்னர் மிரட்டப்படுகிறார். சாட்சி சொல்ல தயாராகும்போது கொழும்பில் வீடும் மற்றைய பிள்ளைகளுக்கு வளமான எதிர்காலமும் வழங்கப்படும் என்ற இலஞ்சம் வழங்கவும் அதிகாரத்தின் எச்சசொச்சங்கள் அன்று முன்டியடித்தன.  ஆனால் அவற்றை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு நீதிக்காகப் போராடினார் தந்தை. அவரது பத்தென்பது வருடப் போராட்டம் 2025 ஆண்டு செப்டம்பர் மாதம் நிரந்தரமாக முடிவுற்றது. மருத்தவர் மனோகரன் இறந்து போனார். வசீன் தாஜுதின், லசந்த விக்ரமத்துங்க, பிரகீத் எக்னலிகொட வழக்குகளையெல்லாம் மீண்டும் விசாரிக்கப்போவதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் அரசு 2026 ஆண்டு திருகோணமலையில் நடந்த இந்த படுபாதகத்தையும் விசாரித்து சூத்திரதாரிகளை இனம் காட்டி இறந்து போன அந்த ஐந்து மாணவர்களுக்கும் வைத்தியர் மனோகரனுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நிற்சயம் நீதிகிடைக்க வழிஅமைக்கும் என்பது எமது நம்பிக்கை. இத்தனை உணர்வுபூருமான விவகாரத்தில் யாருக்கும் இந்த நியாயமும் கிடைக்காமல் போனால் வாய்மையே வெல்லம் என்று கூறுவதில் பலனில்லை. ஆனால்  வாய்மையும் சில சமயங்களில் வெல்லும் என்று தான் பழமொழியை மாற்ற வேண்டியிருக்கும். 

Hisham.M.Vlogஎன்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் 

https://www.hrw.org/news, https://en.wikipedia.org/wiki/2006_Trincomalee_massacre_of_students, https://www.tamilguardian.com/content/still-searching-justice-19-years-trinco-5-killings, https://www.amnesty.org/en/documents/asa37/0862/2019/en/,https://www.tamilnet.com/art.html?artid=35900&catid=13, பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)



யார் இந்த ஹிரன் கோசல?

ம.பிரான்சிஸ்க்- சுதந்திர பத்திரிகையாளர் 

அம்பலாங்கொட பிரதேசத்தில் ஒரு வர்த்தக நிலையத்துகுள்ள 22.12.2025 காலை 8:30 மணியளவில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்மநபர்கள் கடையினுள் சென்று துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிசென்று விட்டனர். சுடப்பட்டு உயிரிழந்திருக்கிற நபர் ஓர் அரசியல்வாதி என்று தெரிய வந்திருக்கிறது. அவர் இறந்த பின்பு அவரது கையடக்கத் தொலைபேசி காணமால் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எலிப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியான எஸ்.எஸ்.பி. மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அதைக் ஹிரன் கோசலவின் உறவினர் ஒருவர் எடுத்து ஒழித்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த அரசியல் வாதியின் கையடக்கத் தொலைபேசியைப் பொலிசார் பரிசோதித்தபோது அவருக்குப் பின்னாலே இருக்கிற பல மர்மங்கள் வெளிச்சமாகின. 


அம்பலாங்கொட நகரத்தில் உள்ள இந்தக் கடையினுள் மோட்டார் வண்டியில் வந்து இரண்டு பேரில் ஒருவர் போய் அந்த கடையிலிருந்த நபருடன் கதைத்து கொண்டிருக்கும்போதே திடீரென துப்பாக்கியை எடுத்து அந்த நபர்மீது துப்பாக்கிச்சூடு நடத்துகின்றார். ஆனால் துப்பாக்கி இயங்கவில்லை. உடனே அந்த இடத்திலிருந்து துப்பாக்கிசுட வந்த நபர் வெளியிலே ஓடுகின்றார். ஆனால் இப்போது சுடப்பபட்டு உயிரிழந்திருக்கிற நபர் துப்பாக்கிதாரி ஓடுவதை வெளியில் வந்து எட்டிப்பார்க்கின்றார். அப்படி ஓடிப்போன அந்த துப்பாக்கிதாரி ஒரு சில நிமிடங்களுக்குள் மோட்டார் வண்டியில் இருந்து இன்னும் ஒரு துப்பாக்கியை எடுத்து வந்து தாம் முதலில் சுடமுனைந்த நபரைச் சரமாரியாகச் சூடுகின்றார். சுடப்பட்ட அந்த நபர் அந்த இடத்திலயே கொல்லப்படுகின்றார். மோட்டார் வண்டியில் வந்த இரண்டுபேரும் அந்த இடத்திலிருந்து தப்பிப் போய்விடுகின்றார்கள். இவை அனைத்தும் CCTV காட்சியில் தெளிவாகப் பதிவாகியூள்ளன. பின்னர் மோட்டார் வண்டி அப்பிரதேசத்தில் இன்னோர் இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். துப்பாக்கிச் சூடுநடத்திய இரண்டு பேரும் கண்டியின் அம்பிட்யப் பகுதியில் உள்ள ஒரு தென்னக்கூன் என்பவருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் தங்கி இருந்ததாகவூம் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவூம் அவர்கள் தங்கிய ஓர் அறையில் பல சந்தேகத்துகுரிய சிம்கள் கட்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

ஒரு பெண் உட்பட எட்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். பிரதான சந்தேகநபரான றம்புக்கண கமகே ஜனத் காஞ்சனா-36 அகவை குலியப்பிட்டியாவில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். விசாரணைகளின் பின்பு கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொலையாளி ரொயாட்டா கொறொலா WP KJ - -2760 வாகனத்தில் அம்பலாங்கொடக்குப் பயனம் செய்துள்ளார். கொலையை நிகழ்த்திய பின்னர் பொய்யான இலக்கத் தகட்டினை கொண்ட WP BFQ–5853 –5853 மேட்டார் சைக்கிளை ஓர் இடத்தில் விட்டுவிட்டுப் போக்குவரத்து பஸ்சில் ஏறி மௌன்ரவய லெவினியா சென்று அங்கிருத்து தாம் வந்த வகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.  

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இறந்திருக்கும் நபர் ஸ்ஸ்ரீறன் ஹிரன் கோசல டீ சில்லா ((Shriran Hiran Kosala de Silva)) என்றும் அவருக்கு அகவை 47 என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அம்பலாங்கொட வித்யால மாவத்தைப் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஐக்கிய மக்கள் சக்தியைச் - சஜித்த பிரேமதாசாவின் கட்சியைச் - சேர்ந்த ஓர் அரசியல் வாதியாவார். அம்பலாங்கொட உள்ளூராட்சி  மன்றத் தேருதலில் அந்தக் கட்சி சார்பாகப் போட்டியிட்டுள்ளார். ஆனால் வெற்றிபெறவில்லை. இவர் 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கின்றார் என புலனாய்வின்மூலம் வெளிப்பட்டிருக்கின்றது என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆயூதங்கள் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் பொலிசாரால் முன்பு ஒருமுறை கைதுசெய்யப்படுள்ளார் என்று பொலிசார் வெளிப்படுத்தகின்றனர். விசாரணைகளின் படி பார்க்கும்போது இவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன: போதைப்பொருள் கடத்தல் குழுவூடனும் பாதாளக் குழுவூடனும் நெருக்கமான தொடர்புகளைப் பேணியிருக்கிறார் என்பதற்கான பல ஆதாரங்கள் தற்போதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்மீது ஒரு சில கொலைக் குற்றச்சாட்டுக்களும் உள்ளன.

பொலிசார்இ ஹிரன் கோசலவின் கையடக்கத் தொலைபேசியைத் ஆய்வூசெய்தபோது அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது: ஹிரன் கோசல சுட்டுக்கொல்லப்படுவதற்கு முதல்நாள் இரவூம் பூஸ்சா சிறைச்சாலையில் உள்ள ஒரு நபருடன்இ தொலைபேசியில் உரையாடியூள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூஸ்சா சிறைச்சாலை பாதாள உலகக் கும்பல் வெளித்தொடர்புகள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஓர் அதியூயர் பாதுகாப்புச்  சிறைச்சாலை. அந்த நபர் வேறு யாரும் கிடையாது. போதைப்பொருள் கடத்தல் மன்னன் - பாதாள உலகச் செயற்பாட்டு வீரன் - லொக்குப் பெட்டிதான் (Loku Patti) இந்த லொக்குப் பெட்டி இப்போது பிரபல போதைப்பொருள் குற்றவாளி. அண்மையில் பெலறூசில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர். இப்போது பூஸ்சா அதியூயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

லொக்கு பெட்டி கிளப் வசந்த எனச் சொல்லப்படுகின்ற சுரேந்திர வசந்த பெரேரா எனச்  சொல்லப்படுகின்ற - போதைவஸ்து கடத்துலுடன் தொடர்புடையவர் என அடையாளப்படுத்தப் பட்டிருந்த ஒரு நபர் கஞ்சிப்பானை இம்ரானின் பணத்தை வாங்கித் திரும்பிக்கொடுக்கத் தவறியிருக்கிறார். இதனால் பழிவாங்குகிற மாதிரி கிளப் வசந்தவை லொக்குப் பெட்டிதான் சுட்டுக் கொன்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.  

இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஹிரன் கோசலமீது பாரிய ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. 2017 ஆண்டு இலங்கையை உலுக்கிப்போட்ட ஒரு சம்பவம் பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் சர்வதேச ஊடகங்களிலும் சக்கை போடுபோட்டது.  ஒரு ஹொலிவூட் சினிமா பாணியில் இந்த சம்பவம் நடத்தப்பட்டிருந்தது: களுத்துறையிலிருந்து சிறைச்சாலைக் கைதிகளை ஏற்றியவாறு அந்த சிறைச்சாலை பஸ்வண்டி பயணம் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேஇ  எத்தினமடல என்னும் இடத்திலே வைத்து சரமாரியான துப்பாக்கிச்சூடு அந்த பஸ்வண்டிமீது நடத்தப் பட்டிருந்தது. அந்த சம்பவத்தில் சமயன் (ளுயஅயலயn)  என்று சொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். அவருடன் சேர்த்து இன்னும் ஒரு சில கைதிகளும் கொலை செய்யப்பட்டிருனர். கொல்லப் பட்டிவர்களின் சதைகள் எல்லாம் சிதறி போய்க்கிடந்த காட்சிகள் அந்த காலகட்டங்களில் அந்த இடத்துகுப் சென்று செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களால் பதிவூ செய்யப்பட்டிருந்தன. அந்த பஸ்வண்டியின்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கும் இப்போது கொலை செய்யப்பட்டி ருக்கின்ற இந்த கோசலவூக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றன என புலன்விசாரணை யாளர்களும் தெரிவிக்கின்றனர். இந்தமாதிரி ஏராளமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கின்ற ஒரு நபர்தான் இவ்வாறு அம்பலாங்கொடயில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கும் ஹிரன் கோசல. இப்போது கொலை செய்யப்பட்டிருக்கின்ற இந்த நபர் பூஸ்சா சிறைச்சாலையில் உள்ள லொக்குபெட்டியூடன் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாளும் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியிருக்கின்றார். அதுமட்டுமல்ல லொக்கு பெட்டியின் முக்கிய எதிர்க்குழுவின் உறுப்பினரான கறந்டெனிய சுட்டா; - மற்றுமொரு போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்பவருடனும் - தொடர்பு கொண்டு உரையாடி வந்திருக்கின்றார்.  

இதைத் தவிர கொஸ்கொட சுஜி என்று சொல்லப்பட்டும் இன்னுமொரு போதைப்பொருள்  கடத்தல் நபருடனும் மற்றும் கொஸ்கொட சுஜியின் பிரதான எதிரியான உறகாஹ இன்டிகாவூடனும்  இந்த நபர் தொடர்புகளைப் பேணிவந்து கொண்டிருக்கின்றார் என்ற விடயம் விசாரணைகளில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த கிருமினல் குற்றவாளி களுக் கெல்லாம் பணப்பணிமாற்றங்களை இவர் முகாமைசெய்து வந்துகொண்டிருந்தார் எனவூம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. விசாரணைகள் மேற்கொள்ளும் பொலிஸ் அதிகாரிகளுக்கு இருக்கும் ஒரு மிகப் பெரிய சவால்: இதில் எந்த குழு இந்த ஹிரன் கோசல என்னும் நபரைச் சுட்டு கொலை செய்திருக்கும் என்பதுதான். கறந்டெனிய சுட்டாவின் குழுவா? அல்லது கொஸ்கூட சுஜி குழுவா? அல்லது லொக்குபெட்டியின் குழுவா? என குழப்பம்தான். இதில் இருக்கும் இன்னுமொரு முக்கியமான விடயம் பூஸ்சா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக் குள்ளிருந்து லொக்குபெட்டி இப்போதும் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சில கிருமினல் சம்பவங்களை வழி நடத்திக்கொண்டிருக்கின்றார் என்னும் அதிர்ச்சிதான். இதைப்பற்றி என்னவென்று நாம் கூறுவது. 

இந்த கொலைச் சம்பவத்தற்கு ஒருசில நாள்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமான தரவூகள் உள்ளடக்கிய ஒரு முக்கியமான - இரகசியமான கட்டமைப்பு ((VMS) வி.எம் எஸ். ஏன்னும் - தகவற் களஞ்சியம். உள்ளது. இது பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டமைப்பாகும். இது ஓர் மிகஇரகசியமான தகவல் களஞ்சியமா இருக்கின்றது. கடல் மார்க்கமாகவூம் உட்பட  போதைப்பொருள் கடத்தப்படும் முழு தரவூகளும் இருக்கக்கூடிய ஓர் இரகசியமான தகவல் களஞ்சியம். இதன் கடவைச்சீட்டு (பாஸ்வேட்டை அண்மையில் வெளியில் போயிருக்கின்றது. கிட்டத்து 57 ஐபி (IP) முகவரிகளிலிருந்து  வெளி நபர்கள் இந்த களஞ்சியக் கட்டமைப்புக்குள்ள உடுருவி இருக்கிறார்கள். பல தகவல்கள் அதனுள் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய இந்த கட்டமைப்புக்குள்ள வெளி நபர்கள் எப்படி உடுருவி இருக்கின்றார்கள் என விசாரணையூம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது பாஸ்வேட் மாற்றப்பட்டு பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளருக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினுடைய 05 பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சம்பவத்துகுப் பிறகு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்னும் தகவல் வெளி வந்துள்ளது.  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினுடைய 400க்கும்  அதிகமான பொலிஸ் அதிகாரிகளினுடைய சொத்துகள் சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. இவர்கள் பாதாள உலகக் குழுவூடன் சம்பந்தப்பட்டிருந்தால்  கடுமையான சட்ட நடவடிக்குகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவருடம் கிட்டத்தட்ட 111 துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. அவற்றில் 59 நபர்கள் கொல்லப் பட்டிருக்கின்றனர் 55 நபர்கள் காயமடைந்திருக்கின்றனர். இவ்வருடம் என்ன நடக்கும் எனப் பார்ப்போம் 

.https://english.gossiplankanews.com/,https://tamil.gossiplankanews.com, https://srilankamirror.com/, https://srilankabrief.org, https://dailynews.lk/2025/12/23, https://adaderanatamil.lk/news, https://pagetamil.comCeylon Today., மற்றும்    கிறிசாந் றாஜ் என்னும் வலைஒளிப்பதிவிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது. 




Friday, December 19, 2025

அயர்லாந்து நாட்டில் காலநிலை தூதுவர் (Climate Ambassador) விருது பெற்ற இலங்கைத் தமிழர்


யாழ்மாவட்டத்தின் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக்கொண்ட இலங்கை தமிழரான ஜெயால்ட் அன்ரனி இராசரத்தினம் அவர்களுக்கு அண்மையில் அயர்லாந்து நாட்டில் அவரது காலநிலை மாற்றம் (Climate change) மற்றும் காலநிலை நீதி (Climate Justice) தொடர்பான பணிகளை அங்கீகரித்து. The National Trust for Ireland (An Taisce)அமைப்பு காலநிலை தூதுவர் Climate Ambassador  என்ற விருதை வழங்கியுள்ளார்கள். 

யாழ் சென்ஜோண் கல்லூரியில் க.பொ.த உயர்தர கல்விபயின்ற ஜெயால்ட் அன்ரனி தனது முகமைத்துவப் பட்டத்தினை யாழ்பல்கலைக் கழகத்தில் பெற்றுக்கொண்டவராவார். வணிக நிர்வாகம் மற்றும் இணையவழி சந்தைப்படுத்தல் துறையில் முதுமானி பட்டதாரியூம் ஆவார். ஜெயால்ட் அன்ரனி அவர்கள் ‘‘Turning poultry waste into Rural Wealth   மற்றும் Local Voices Drive Circular Transformation’ தொடர்பான ஆய்வூக் கட்டுரைகளையூம் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் உயரிய விருதினைப் பெற்று ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்தவர் ஓர் இலங்கைத் தமிழர் என்பதே எமது சமூகத்திற்கு மிகுந்த பெருமையும் ஊக்கத்தையும் அளிக்கின்றது. 

இந்த விருது காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைத்த சமூக வளர்ச்சிக்காக செய்த முயற்சிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச அளவிலான பங்களிப்பு அத்துடன் Local Tidy Towns  குழுக்களுடன் இணைந்து செய்த தொண்டு மற்றும் சமூக ஈடுபாட்டு பணிகள் Organic Farms and Community Gardens  ஆகியவற்றை ஊக்குவித்து இந்த விருது வழங்கப்பட்டது.

ஓர் இலங்கைத் தமிழர் இவ்வாறு உலக அரங்கில் குறிப்பாக ஐரோப்பிய அயர்லாந்தது  நாடு போன்ற முன்னேற்ற நாடுகளில் மதிப்புமிக்க விருதைப் பெறுவது புலம்பெயர் தமிழர்களின் அறிவுத் திறன் சமூகப் பொறுப்பு உணர்வு  உலகளாவிய பிரச்சினைகளில் எங்களின் பங்களிப்பு மற்றும் முன்னணியில் செயல்படுகிறார்கள் என்பவற்றை வெளிப்படுத்துகிறது என்பது எமக்குப் பெருமையாகும். இந்த சாதனை தனிநபரின் வெற்றியைத் தாண்டி முழு இலங்கையரின் பெருமையாக கருதப்பட வேண்டும்.

இது இளம் தலைமுறைக்குக் குறிப்பாக மாணவர்களுக்கு சுற்றுச்சூழலைக் காக்கும் பொறுப்புணர்வையும் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடும் ஊக்கத்தையு ம் அளிக்கிறது. 

இது தமிழர்களும் உலகத்தை வழிநடத்த முடியூம்  என்பதற்கான உறுதியான சான்றாகும். இந்த சாதனைமூலம் திரு. ஜெயல்ட் அன்ரனி அவர்கள் காலநிலை மாற்றம் என்பது அரசுகள் மட்டுமே கவனிக்க வேண்டிய விடயமல்ல். ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க வேண்டிய ஓர் உலகளாவிய சவால் என்ற எண்ணத்தை சமூக மட்டத்தில் வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகளை இணைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அவரது முயற்சிகள் பாராட்டுக்குரியவையாக அமைந்துள்ளன.

பூமியை பாதுகாப்போம் - எதிர்காலத்தை காப்போம். -சுற்றுச்சூழலைக் காப்போம் - மனிதகுலத்தின் எதிர்காலத்தை பாதுகாப்போம்.

(இதனை கீழ் உள்ள இணைய முகவரியில் பாரவையிடமுடியும்:) 

https://www.virakesari.lk/article/233858



வேட்டையாடி விளையாட இரும்புக் கரம் வேண்டும்

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் 

இலங்கையின் பிரபல பாதாளத் தாதாக்களில் ஒருவரும்இ 19 கொலை வழக்குகளுடன் தொடர்புடையவருமான  கனேமுள்ள சஞ்சிவ புதுக்கட நீதிமன்றத்தில் கடந்த மாசி19 அன்று  சட்டத்தரணி வேடத்தில் வந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டமை எமக்குத் தெரியூம். சமிது தில்சான் என்ற இந்த துப்பாக்கிதாரியூம் இசாரா செவ்வந்தியூம் குற்றவியல்களின் ஒழுக்கக் கோவைச் செயன்முறைச் சட்டப்புத்தகத்திற்குள்(Code of Criminal Procedure) துளைப் போட்டு துப்பாக்கியை மறைத்து மிக தந்திரமான முறையில் நீதிமன்றத்தின் வளாக்கத்திற்குள் வந்து இந்தக் கொலையினை செய்திருக்கின்றனர். இந்தக் கொலையினுடைய பங்குதாரர்களாக இவர்களுடன் பலர் சம்மந்தப்பட்டது நாம் அறிந்ததே. சமிது தில்சானைச் செவ்வந்தி வழி நடத்தஇ செவ்வந்திக்குக் கெகல் பத்திரப் பத்மே மூலையாய் இருந்தார். கெகல் பத்திரப் பத்மேஇ பக்கோசமன்இ பானந்துர நிலங்கஇ தெம்பிலி லகிருஇ குடு சலிந்த போன்றௌர் இந்தோனேசியாவிலும் அதேபோல் இசாரா செவ்வந்திஇ கம்பஹா பபாஇ நுகேகொட பவிஇ ஜே.கே பாய்இ ஜப்னா சுரேஸ்இ செவ்வந்தி டம்மிஇ நந்தக்குமார் ஆகியோகியோர் நேபாளத்திலும் கைதாகிஇ அழைத்து வரப்பட்டபின்னர்இ விசாரணைகள் வேகப்படுத்தப்பபட்டிருக்கின்றன. 

செவ்வந்தியைச் சட்டத்தரணி என்று நினைத்துஇ ஒரு பெண் வந்து தன்னுடைய வழக்கை ஒப்படைக்கமுன் வந்ததாகவூம். அவர் வேறொரு சட்டத்தரணியை கை காட்டியதாகவூம் பலதரப்பட்ட பாட்டிக் கதைகள் ஊடகங்களில் பரப்பப்பட்டன. எது எப்படியோஇ செவ்வந்தியின் சட்டத்தரணிக் கதாபாத்திரம் சறுக்காமல்; பொருந்திருயிருக்கிறது. ஒரு குற்றத்தைச் செய்யப் போகிறௌம் என்ற எந்தவித பதட்டமும் இல்லாமல் அவருக்கு இத்தனை தத்துரோபமாகக் கறுப்புக் கோட்டணிந்து நடிக்க ஒரு சட்டத்தரணியால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்.  செவ்வந்திக்கும் சமிது தில்சான் என்ற சூட்டருக்கும் வாகனத்தில் செல்லும்போது தடங்கள் இல்லாமல் செல்ல சட்டத்தரணி அனுமதிப்பத்திரம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.   பிரச்சினை இல்லாமல் நீதிமன்றத்திற்குள் வந்து கொலையை அரங்கேற்றிவிட்டுச் செல்ல சட்டத்தரணி அடையாள அட்டை செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் சட்டத்தரணிகளுக்கே உரிய இரு கழுத்துப் பட்டிகளையூம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த நாசகாரத்தின் ஆணிவேராக இருந்த 55வயதான கடவத்தையைச் சேர்ந்த ஒரு பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்ல செவ்வந்திக்கு குற்றவியல்களின் ஒழுக்கக் கோவை செயன்முறைச் சட்டப்புத்தகத்தையூம் இரண்டை இந்தச் சட்டத்தரணிதான் வழங்கியிருக்கிறார். எதற்கு இரண்டு புத்தகங்களை வழங்கினார் என்று தெரியவில்லை. ஆனால் இருப்பதிலேயே தனக்குப் பாதுகாப்பான புத்தகத்தை செவ்வந்தியே தேர்வூ செய்து கொள்ளட்டும் என்று அந்த இரண்டு புத்தகங்களையூம் வழங்கியிருக்கக்கூடும். விசாரணைகள்தான் இதன்னுடைய பின்னணியையூம் உண்மையையூம் வெளிப்படுத்தவேண்டும். 

சட்டத்தரணியருடைய பாதாள தொடர்புகள் இப்படி இருக்க இன்னுமொரு மிகச்சுவாரிசமான செய்தி அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும்  சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் மிக கூருணர்வானஇ இரகசியமான பொலிஸ் நடவடிக்கை களை எல்லாம் வலையயொளி ஒருவருக்கு வழங்கி இருப்பதாகவூம் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜயசூரியவிற்கு எதிராக அபதூறு பரப்ப முன்னின்று செயற்பட்டதற்கும் எதிராக சிஐடியில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜயசூரிய பொலிஸ் கமிசனிடமும் சிஐடியிடமும் இந்த சிரேஸ்ட டி.ஐ.ஜிக்கு எதிராக முறைப்பாடு செய்திருக்கிறார். அதிகாரியை இடமாற்றம் செய்து உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு கோரியிருக்கிறார். இதேவளை வலையொளியாளருக்கும் சிரேஸ்ட டி.ஐ.ஜிக்கும் இடையில் நடக்கும் தொலைபேசி உரையாடல்களும் சமூக ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. குருநாகல் பகுதியைச் சேர்ந்த வலையொளி யாளரிடம் சி.ஐ.டி வாக்கு மூலங்களை எடுத்திருக்கிறது. இந்தநிலையில் சிரேஸ்ட டி.ஐ.ஜியிடம் முறையான விசாரணைகளை தொடர இருக்கிறது.


பொலிஸ்மா அதிபர் தன்னுடிய காத்திரமான நடவடிக்கைகளின்மூலம் மக்கள் மத்தியில் பொலிஸ் திணைக்களத்தின்மீது கீர்த்தியையூம் மதிப்பையூம் ஏற்படுத்த பெரும் பங்காற்றியவர். அவரைச் சுற்றி இப்படி ஒரு சதி முயற்சி நடந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில்தான் ஒரு விடயம் ஞாபகத்துகு வருகிறது. இந்தோனேசியாவில் கெகல் பரத்திர பதமைக் குழுவை வேட்டையாடி விளையாட ஏ.எஸ்.பி ரோஹான் ஒலுகல்ல தலைமையிலான குழு மிகுந்த கவனத்துடனும் நிதானத்துடனும் இந்தோனேசியாவூக்குப் புறப்பட்டுச் சென்றபோது அதுவூம்  ரோஹான் ஒலுகலை யப்பானுக்கு ஒரு கற்கைக்குச் செல்வாதாகச் சொல்லிவிட்டுச் சென்ற போதும் உள்ளிலிருந்த கறுப்பாடுகள் மூலமாக பொலிஸ் நடவடிக்கை வெளியே கசிந்து விட்டது. இதனால்தான் கெகல் பத்திர பத்மே குழு ஓடித்தப்ப முயன்றது. ஆனால் இந்தோனேசியா பொலிஸ்இ மற்றும் சர்வதேசப் பொலிசாரின் உதவியூடன் அவர்களை ரோஹான் ஒலுகலை குழுவினரால் மடக்கிப் பிடிக்க முடிந்தது. 

இதேபோல ஒன்று தான் பாதாள உலக பேர்வழி ஒருவருக்கு ஆயிதம் கொடுத்த விவகாரம். ஜப்பனா என்று அழைக்கப்படும் பாதாள உலக அடியாள் ஒருவர் கடந்த ஐப்பசி 17 திகதி விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு களுத்துறை தெற்;குப் பொலிஸ் நிலையத்தில் ஒப்பிடைக்கப்பட்டார். ஜப்பனாவின் படுக்கையறையில் ஒழித்து வைக்கப்பட்டு இருந்த உள்@ர் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள்இ தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலதிக விசாரணைகளின்போது அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியையூம் அவமானத்தையூம் ஏற்படுத்தியது. களுத்துறைத் தெற்குப் பொலிஸ் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஒருவர் வழங்கிய ஆயிதங்கள்தான் இவை என்றார் ஜப்பனா. இந்த முன்னாள் பொறுப்பதிகாரியூடன் உமக்கு என்ன தொடர்பு என்று கேட்டு அவருடைய கைத்தொலை பேசியைச் சோதனை செய்தபோது நம்பவே முடியாத அதிர்ச்சி காத்திருந்தது. வெறுமனவே ஒரு பாதாள அடியாளான ஜப்பனாவூடன் சேர்த்துகொண்டு இந்த பொறுப்பதிகாரி உண்டு குடித்து மகிழ்ந்து மது மயக்கத்தில் இருக்கும் விதம்விதமான புகைப்படங்கள் தொலை பேசியில் நிறைத்திருந்தன.  இது தொடர்பாக இப்போது விசாரணைகள் நடந்து வருகின்றன.  

இங்கு வேடிக்கையை நாம் நோக்கினால் ஒரு பொலிஸ் அதிகாரி தன்னுடிய நண்பரான நிழல் உலக தாதாவூக்குத் துப்பாக்கி வைக்கும் களஞ்சியத்திலிருந்து துப்பாக்கிகளை எடுத்துக் கொடுக்கிறார்இ ஒரு சட்டத்தரணி பாதாள ஜோடி ஒன்றை ஹொலிவூ+ட் படம் ஒன்றிற்குத் தயார் செய்வதுபோல சட்டத்தரணி வேடம் அணிவித்து ஒப்பனை செய்து சட்டப் புத்தகத்தையூம் வழங்கி அச்சமூட்டுகிறார். இராணுவ முகாமொன்றில் இருந்த 73 ரீ-56 துப்பாக்கிகளில் 35 துப்பாக்கிகள் மாயமாகியிருக்கின்றன. கொமாண்டோ ஒருவன் ஓர் இலட்சம் தோட்டாக்களை பாதாள உலகத்துகு வழங்க பேரம் பேசுகிறார். பெயர்போன கிரிமினல் ஒருவருக்கு புறக்கோட்டையில இருக்கும் புத்தகம் விற்பனை செய்யூம் ஒருவருடைய கை விரல் அடையாளத்தை வைத்து மூன்று பாஸ்போட்டுகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். 2008 ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார் ஒன்று 2003ஆண்டில் பதிவூ செய்யப்பட்டிருக்கறது. இதெல்லாம் உணர்த்துவது என்ன? பாதாள உலகத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெறும் முட்டாள் கூட்டம் கிடையாது. இவர்களில் பெருமளவனவர்கள் கல்வியில் சாதாரணதரம்கூட சித்தி அடையாத வர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு நாடாளமன்றத்தில் ஆள்கள் இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் ஆள்கள் இருக்கிறார்கள். பொலிசில்இ இராணுவத்தில்இ சிறைச்சாலையில்இ போதைப்பொருள் தடுப்புபிரிவில்இ இமிக்ரேசனில்இ மோட்டார்வாகனப் பதிவூ திணைக்களத்தில் என்று செல்வாக்கான நபர்கள்; இருக்கிறார்கள். இவர்களும் ஒரு பாதாள அரசை நிறுவி இருக்கிறார்கள். இந்தப் பாதாள அரசானது நிஜ அரசைவிட வேகமாக இத்தனை காலமும் இங்கியது. இப்போது நிஜ அரசு இவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கப்போக இந்த கறுப்பு பொறிமுறை தாறுமாறாய் சிதறுண்டு போயிருக்கிறது. ஆனால் இன்னமும் முழுமையாய் ஒழிக்கப்படவில்லை. அப்படி ஒழிக்க முற்;படும்போதுதான் எண்ணற்றபல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. 

இதனால்தான் தோல்வி அடைந்த ஒரு கும்பல் நம்பம்பர் மாதம் 21-ஆம் திகதி நிகழ்வை அரங்கேற்றியிருந்தது. கடந்த காலங்களில் நாட்டில் எங்கே அதிகம் போதைப்பொருள் பிடிப்பட்டன என்றும் எந்தக் கட்சியின் உறுப்பினர்களின் பெயர்கள் இதில் அதிகம் பேசப்பட்டன என்றும் எல்லாருக்கும் தெரியூம். அவர்கள்மிகுந்த அதிர்ச்சிக்குளாகி பதட்டத்தில் இருக்கிறார்கள். இப்படியே இந்தப்போதை மற்றும் பாதாளமாப்பியாவூக்கு எதிரான நடவடிக் கைகள் தொடர்ந்து மொத்த தேசமும் துப்பரவானால்இ தம் அரசியல் இருப்பு நாறிப்போய்விடும் என்று அஞ்சுகிறார்கள். இதனால்தான் இத்தனை நாள்களாய் மூர்ச்சையாகியிருந்த இனவாதிகளும் கூட மெல்ல மெல்ல தலையெடுக்கப் பார்க்கிறார்கள். ஞானசாரதேரர்இ ஊடக சந்திப்பு என்ற பெயரில் பழையபடி வதந்திப்பரப்பத் தொடங்கிருக்கார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ரங்கத் திசானாயக்கவை எப்போது பார்த்தாலும் கடிந்து கொள்கிறார்கள். வாய்க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமல் பேசுவதில் விற்பன்னராக இருக்கும் உதய கம்பன்பில தன்னை கைது செய்யக்கூடும் என்று அஞ்சி பாங்கொக்கில் போய் ஒழிந்துவிட்டு வந்து எந்தவித மனச்சாட்சியூம் இல்லாமல் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின்மீது தாக்குதல்தொடுத்து அதில் பணியாற்றக்கூடிய நேர்மைமிகு அதிகாரிக ளிடத்தில் ஒருவித அழுத்தத்தை பிரையோகிக்கின்றார். விமல்விரவன்ச இலங்கையினுடைய பொருளாதார விழிம்பில் அரும் தொண்டாற்றிய மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் விரசிங்கமீது சொத்தக்குவிப்புக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இதே விமல் விரவன்சவிற்கு எதிராகச் சொத்துகுவிப்பு வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில்தான் நந்தலால்மீது இவர் பழிபோடுகின்றார். எப்போதும் இனவாத மாயைக்குள் நாட்டைத்தள்ளி கற்பனைக்கதைகள் சொல்லிவாழும் விமல் விர வன்சவின் வரலாற்றை நாம் அறிவோம். 

முஸ்லீம் தாதியருக்குப் பணியாற்றுவதில் எந்தவித சிக்கலும் இல்லைஎன்றும் அவர்கள் தலைமூடிய நிலையில் தாதியர் ஆடைகளுடன் பணிசெய்யலாம் என்றும் அமைச்சர் விஜித்த கேரத் சொன்னதை வைத்து ஒர பிரளயமே மூண்டிருக்கிறது. கடந்த காலத்தில் மகிந்த இராஜபக்சையின் வலக்கரமாக இருந்த ஆனந்த தேரர் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்க சமூகவலைத்தளங்களில் மிகத் துவோசமான கருத்துகள் எழுப்பப்படுகின்றன. பொலிஸ்மா அதிபருக்கு எதிராகஇ சிஐடி பணிப்பாளர் சானி அபயசேகரவிற்கு எதிராகஇ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிற்கு எதிராகஇ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்தினவிற்கு எதிராகப் பொய்யூம் புரளிகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதை எல்லாம் பார்க்கும்போது கடந்த காலங்களைப்போல இனத்துவேசத்தையூம் புனைவூகளையூம் பரப்பி அரச இயந்திரங்களை மௌனித்துப் போகச்செய்யூம் ஒரு சதிமுயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறதா என்று நாம் சந்தேகம் எழுப்பலோம்.  பாதாளக் கும்பலின் குருநாதர்கள் போதை வலையமைப்புக்களை வழிநடத்தக்கூடிய சர்வதேச- சுதேச தாதாக்கள் இலங்கைகைஇ போதையற்ற குற்றச்செயல்கள் அற்ற சுபிட்சம் நிறைந்த நாடாக மாறுவதற்கு ஒருபோதும் விடப்போவதில்லை. அவர்களுக்கு இந்தநாடு சுடுகாடாய்ப் போனாலும் பரவாயில்லை. தங்களுடைய போதைப் பாதாளச்  சாம்பிராட்சியம் தளைக்கவேண்டும் என்றே எப்போதும் விரும்புவார்கள். இதனால் இந்த நாட்டில் மறுமலர்சிக்கு எதிராக பொறிமுறை மாற்றத்திற்கு எப்போதும் நிரந்தர முட்டுக்கட்டையாக இருக்கப்போகிறார்கள். இதனால்தான் குற்ற நிழல்படிந்த தங்களுடைய சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தி என்னவிலை கொடுத்தாகிலும் இதை நிர்மூலமாக்க முயல்வார்கள். ஆகவே இனவாதத்தையூம் மதவாதத்தையூம் பொய்யான பரப்புரைகளையூம் கையில் எடுத்து தாராளமாய் வளங்களைச் செலவூசெய்தாகிலும் தமக்குத் தோதான ஓர் ஆட்சியைக் கொண்டுவருவதற்கு அவர்கள் என்றும் பின் நிற்கப்போவதில்லை. போதைப் பொருளும் பாதாள உலகமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.  ஒன்று இல்லாமல் இன்னொன்று இல்லை. சனாதிபதி போதைப்பொருள் மாபியவிற்கு எதிரான போரை  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தள்ளார். ஆகவே இனிவரும் காலங்களில் சவால்கள் பலமடங்கு பெருகி வரலாம். மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க உயர் அதிகாரிகள்மீது சேறு பூசப்படலாம். இனங்களுக்கிடையே முறுகலை எற்படுத்த விசமிகள் முனையலாம். இதுதொடர்பாக அரசு மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். மக்களின் இயல்புவாழ்க்கையை குழப்பி துண்டாட முயலும் அத்தனை தீயசத்திகளையூம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் அரச எதிர்பார்த்த பெறுபேறுகளை அடையமுடியூம். 

Hisham.M.Vlog என்னும் வலையொளிப் பதிவிலிருந்து பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)






Wednesday, November 19, 2025

பாதாள உலகக் கும்பலுக்குத் துப்பாக்கி விற்ற பொலிஸ்

 ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 


பாதால உலகக் கும்பலுக்கு ஆயிதம் விற்க ஒரு பொலிஸ் அதிகாரியால் முடிந்திருக்கிறது. அது இலங்கையில்தான் அண்மையில் நிகழ்ந்திருக்கிறது. இதற்கு இலங்கைக் களுத்துறையில் நடந்த ஒரு சம்பவம் மிகச் சரியான உதாரணமாயிற்று. கடந்த ஐப்பசி 11ஆம் திகதி களுத்துறை தெற்கு பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்துக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அன்றைய தினமே களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் கிடைபெற்ற தகவல்களின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் விசாரணையை மேற்கொண்டனர். களுத்துறை தெற்கு முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி பாதாளஉலக குழுவினருக்கு பொலிஸ் துப்பாக்கியை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசேட அதிரடிப்படையினர் கடந்த ஐப்பசி 17 திகதி ருசிர கவிசன் எதிறிசிங்கே- ஜாபான (“Japana” )  என அழைக்கப்படுபவரை கழுத்துறையில் உள்ள நாகோடா பகுதியில் கைது செய்தார்கள் இதனைத்தொடர்ந்து இலங்கைக் காவற்துறையில் மிகப்பெரிய அபகீர்தியான ஒரு சம்பவம் அரங்கேறியது கண்டுபிடிக்கப்பட்டது. ஜாபான என்ற அழைக்கப்படும் இவர் ஒரு பாதால உலகப் பேர்வழி. இவர் இப்போது காவல்துறையிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறார். ஜாபானவின் படுக்கை அறையில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் தயரிப்பான 12- bore  சொட்கண், ஒரு பிஸ்ரல், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள், பலவகையான தோட்டாக்கள், கைவிலங்கு ஒன்று உட்பட இன்னும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன 



பின்னர் அவர் களுத்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, இந்த துப்பாக்கிகள் எங்கு கிடைத்தது என விசாரிக்கப்பட்டபோது, அவர் அளித்த வாக்கும்மூலம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஜாபான அப்படி என்ன சொன்னார்: முன்னாள் பிரதான பொலிஸ் பரிசோதகர் றுவான் விஜேசிங்கே -அவர் முன்பு களுத்துறை தெற்குப்பொலிஸ் நிலையத்தில் பொறுப்பாளரகப் பணிபுரிந்தவராவார்- தனக்குத் துப்பாக்கிகளையும் மற்றும் ஆயுதங்களையும் தந்தார் என உரிமை கொண்டாடினார். இப்போது இந்த பொலீஸ் அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு இரத்தினபுரி காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார், ஆனால் அவர் தனது புதிய பதவியில் பணிக்கு வரத் தவறிவிட்டார் என்பதும் தெரியவந்தது.



குறித்த இந்தப் பொலிஸ் அதிகாரியுடன் உனக்கு என்ன தொடர்பு என்று கேட்டு அவருடைய கையடக்கத் தொலைபேசியைப் பரிசோதனை செய்தபோதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. பொலிஸ் பொறுப்பதிகாரி ஜாபானவுடன் இருந்தமை மற்றும் அவருடன் விருந்துகளில் கலந்து கொண்டமை, பொலிஸ் பொறுப்பதிகாரியின் துப்பாக்கியை 'ஜாபான' பாவித்த அனைத்தும் புகைப்படங்களும் இருந்துள்ளன. இந்த ஜாபான அந்த பொலிஸ் அதிகாரியுடன் மிக நெருக்கமாகப் புகைப்படத்தில் இருக்கிறார். அந்த பொலிஸ் அதிகாரியின் தொழில்முறை அதிகார கைத்துப்பாக்கியை தனது இடுப்பில் அணிந்தவாறு பல படங்கள் உள்ளார். ஒரு பாதால அடியாளான ஜாபானவுடன் அந்தப் பொலிஸ் அதிகாரி உண்டு குடித்து மகிழ்ந்து மது மயக்கத்தில் மதியிழந்து விதவிதமான புகைப்படங்கள் எடுத்திருப்பது அங்கு காணப்பட்டன. 



இந்த பொலிஸ் அதிகாரி பாதாள குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இந்த 'ஜாபான' களுத்துறை பொலிஸ் நிலையத்தில் பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் நிலைய அதிகாரியின் அறையில் விசாரணைகள் நடைபெறும்போது இவரும் விசாரணைகள் நடத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போதைய களுத்துறைத் தெற்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நாடகா குணசேகரா உடநடியாக ஓர் உள்ளக விசாரனையை ஆரம்பித்தார். களுத்துறை தெற்கு ஆயுதக் களஞ்சியத்தின் பொறுப்பாளர் சாஜன் மற்றும் ஹண்டபங்கொடவிலிருந்து நாகோடாவிற்கு ஆயுதத்தை கொண்டுசெல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனத்தின் சாரதியிடமும்  பொலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கி களஞ்சியச் சாலைக்குப் பொறுப்பான பொலிஸ் சாஜன் தெரிவிக்கையில்;: தன்னிடம் அந்த பிரதம பொலீஸ் பரிசோத அதிகாரி பின்னர் திருப்பித்தருகிறேன் என உறுதியளித்துத் துப்பாக்கியை களஞ்சியத்திலிருந்து எடுத்துச் சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்தத் துப்பாக்கிக்கு 2012 ஆண்டிலிருந்து எந்த பதிவுகளும் ஆவணத்தில் இருந்திருக்கவில்லை என்பதும். இந்த துப்பாக்கி பொலிஸ் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என 2002 நீதிமன்றத்தின் ஒரு கட்டளை உள்ளதும் இப்போது கண்டு பிடிக்கப்படுகின்றது. அதாவது அந்த அதிகாரி பொலிஸ் களஞ்சியத்திலிருந்து துப்பாக்கிகளைக் கொண்டுபோய் ஒரு பாதாள அடியாளிடம் பத்திரமாய் ஒப்படைத்திருக்கிறார்.



குற்றப்பிரிவின் கூற்றுப்படி, ஹன்டபன்கொடை பகுதியில் துப்பாக்கி ஒப்படைக்கப்பட்ட தருணத்தைப் பதிவுசெய்ததாகக் கூறப்படும் புகைப்படங்கள் உட்பட, பெறுநரின் மொபைல் தொலைபேசியில் ஆதாரங்களை புலனாய்வாளர்கள் ஐப்பசி 29 அன்று கண்டறிந்தனர்.

தற்போது துப்பாக்கி கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் உள்ள ஆயுதக் களஞ்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

குறிப்பிடத்தக்க அளவில், இந்த வழக்கு தொடர்பாக மேலதிகமாகத் தெரியவருவது: 9 மிமீ வெடிமருந்துகளின் 51றவுன்சுகள் மற்றும் 38 வெடிமருந்துகளின் 16 றவுன்சுகளும் பொலீஸ் காவலில் இருந்து காணாமல் போயுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



எப்படி இந்தக்கதை இருக்கிறது? இதேவேளை தான் கைதாவதைத் தடுக்குமுகமாகக் களுத்துறை நீதவான் நீதிமன்றதில் முன்பிணை கோரினார் அந்த பொலிஸ் அதிகாரி. இருப்பினும், காவல்துறையினர் முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிபதி அனுமதி அளித்தார், மேலும் கைது நடவடிக்கையைத் தொடர்வதற்கு எந்த சட்டத்தடையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். களுத்துறை நீதவான் நீதிமன்றம் பொலிஸ் அதிகாரி அந்தக் கோரிக்கை  நிராகரிக்கப்பட்டு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் களுத்துறை மாவட்ட சிஐடி விசாரணைகளை மேற்;கொண்டு வருகிறது: களுத்துறை குற்றப்பிரிவு இயக்குநர் கமல் கிரியெல்ல மற்றும் ழுஐஊ இன்ஸ்பெக்டர் நிலங்க சஞ்சீவ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.


சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, பொது மக்களுக்குப் பாதுகாப்பையும் நம்பிக்கையும் வழங்க வேண்டிய நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தவர்கள் கடமை தவறும்போது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் மக்கள் அவநம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பிப்பார்கள். இப்போது மக்களே முன்வந்து போதைப்பொருள்களுடன் சம்மந்தப்பட்ட நபர்கள் பற்றிய விவரங்களை பொலிஸ் திணைக்களத்துகு வளங்குகிறார். ஆனால் என்னதான் மாற்றங்கள் வந்திருந்தாலும்100மூ மறுமலர்ச்;சியைக் காண இன்னும் பெரும் தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. களுத்துறையில் ஒரு பொலிஸ் அதிகாரியின் பொறுப்பற்ற செயல்; பொலிஸ் திணைக்களத்துகுக் கிடைத்திருக்கும் மாபெரும் அவமானம். 



ஒரு தேசமாக ஒன்றிணைதல் - தேசிய இயக்கம்' என்ற தலைப்பில் அரசாங்கத்தின் புதிய போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்க விழாவில் பேசிய சனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளையும், இந்த நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்த கண்டுபிடிப்புகளையும் முன்வைத்தார். அவற்றில், இராணுவ முகாம்களில் இருந்து ரீ-56 தாக்குதல் துப்பாக்கிகள் குற்றவாளிகளின் கைகளில் சிக்கியதாகவும், 73 துப்பாக்கிகள் காணாமல் போனதாகவும், 35ஏற்கனவே மீட்கப்பட்டதாகவும் செய்திகள் இருப்பதாக தெரிவித்தி ருக்கிறார். வெடிமருந்துகளை வழங்கிய குற்றச்சாட்டில் ஒரு மூத்த இராணுவ கேணல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,அந்த அதிகாரியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்ட தாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், ஒரு பொலிஸ் அதிகாரி தனது சேவை ஆயுதத்தை விற்று நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும், விசாரணைகள் அதிகாரிகளுக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். 


மோட்டார் போக்குவரத்துத் துறை, வாகனங்கள் இல்லாமல் எண் தகடுகளை வழங்கியுள்ளன. மேலும் கம்பஹாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டதில் ஒரு பொலீஸ் அதிகாரி இரண்டு சட்டவிரோத வாகன எண் தகடுகளை வைத்திருப்பது அம்பலமானது என்றார். குடியேற்ற அதிகாரிகள் பாதாள உலக நபர்களுக்கு பாஸ்போர்ட்டுகளை எளிதாக்கியதாகவும், ஒரு புத்தக விற்பனையாளர் ஒரு குற்றவாளியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்காக கைரேகைகளை வழங்கிய வழக்கு இருப்பதையும் தெரிவித்தள்ளார். குற்றவியல் நலன்களுக்குச் சேவை செய்வதற்காக ஒரு கறுப்பு அரசு உருவாக்கப்பட்டுள்ளதுபோல் தென்படுகின்றது. இந்த குற்றங்களுக்கு உதவும் அனைத்து அரசு அதிகாரிகளும் உடனே மனம்மாற வேண்டும். எனவே காவல்துறையை சுத்திகரிப்பதன் மூலம் 80 வீதமான குற்றங்களை தடுத்துவிடலாம் என்பது எமது கருத்து. இந்த நாட்டில் பாதாள உலக கறுப்பு அரசு என்றும் இரண்டு அரசுகள் இருக்கூடாது. மக்களால் இயக்கப்படும் சனநாயக அரசு மட்டுமே இருக்கவேண்டும். எனவே கீளீன் ஸ்ரீறிலங்க தொடரட்டும் சனநாயக அரசு மலரட்டும்.

Hisham.M.Vlog என்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் https://www.lanka4.com https://battinaatham.net/?p=154034 https://article.wn.com/  https://www.virakesari.lk/article/179874 https://likedtamil.lk/kalutara-4/, https://www.tamilguardian.com  பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)


நவம்பர் 21

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

நாமல் ராஜபக்சே ஆட்சிபிடிக்க திருகுதாளம் போடத் திட்டமிட்டிருக்கும் தினம் 21.11.2025 என்று ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த கபட நாடகம் கொழும்பில் எங்கோர் இடத்தில் நடைபெற இருக்கின்றது. இந்நாள் எமக்கு ஒரு முக்கிய நாளின் தொடக்கம். வரலாற்றை நோக்கினால் அவருக்கு அது அடி சறுக்கும் நாளாகத்தான் அமையப்போகிறது என்பது எமது கருத்துகணிப்பு. அதுமட்டுமல்ல அகிம்சையின் வெற்றிவீரர் எமது மண்ணுக்கு வந்த நாளும் இந்த மாதம் 27திகதிதான். அதாவது மாகாத்மாகாந்தி இம்மாதம் எமது பிரதேசத்திற்கு வந்த நாளாகும் என வாரலாறு கூறுகின்றது. எனவே அட்டுழியங்கள் செய்தவர்கள் வெல்ல மாட்டார்கள் என்பதை நாம் ஊகிக்கலாம். இந்த ஆட்சி பிடிக்கும் கபட நாடகம் அரசு சொல்லும் எந்த இடத்திலும் தம்மால் கூட்டத்தை திரட்டி அரங்கேற்ற முடியும் என்பது பொதுஜன பெரமுனவின் கூற்று.

2019 ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தல், 2020 ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் தமக்குக் கிடைத்த 69மூ வாக்குகளும் அப்படியே சிந்தாமல் சிதறாமல் இன்னமும் பத்திரமாக இருக்கின்றன என்பதுதான் பொதுஜன பெரமுனவின் அபிப்பிராயம். 2022ஆண்டு நடந்த மக்கள் புரட்சிபற்றியோ, அதன் பின்னர் பாதையில் இறங்க முடியாதவாறு நிலைமை சறுக்கியது  பற்றியோ, 2024ஆண்டு நடந்த சனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் மொத்த இருப்பும் ஆடிப்போகும் அளவுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு பற்றியோ, அவர்களின் மூளையில் எந்த ஒரு நினைவு மீட்டல்களுமே இல்லை. உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கங்கள் எல்லாம் தட்டி எழுப்பப்பட இருப்பதாகவும் இம்மாதம் 21ஆம்திகதி நடைபெறப்போவதைப் பார்க்க முடியும் என்றும் வீராவேசமாகச் சொல்கிறார்கள் பொதுஜன பெரமுனவின் எண்கணித வித்துவான்கள். இந்த இடத்தில் அறிந்த ஒரு கதையை நினைவூட்டித்தான் ஆகவேண்டும்:- 2008 ஆண்டு மகிந்த ராஜபக்சே இந்தியா சோதிடவாதிகளை நம்பி தேர்தல் ஒன்றை நடத்தி கவுண்டதாகப் பலர் கூறினர். ஆரம்பத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் மாபெரும் எதிர்ப்பு என்று இதற்கு நாமம் சூட்டப்பட்டது.




ஆனால் பொதுஜன பெரமுனவுக்கு ஒரு காலத்தில் ஜீவநாடியாக இருந்த வாயாலேயே வங்காளம் போகும் விமால் வீரவன்ஸ இந்த ஆட்சி கவிழ்ப்பு கபட நாடகத்தில் பங்கு பெறப்போவதாய் அறிவிக்கவில்லை. அவருக்கு ஏதோ கொள்ளைப் பிரச்சினை இருக்கிறதாம். மகிந்த ராஜபக்சே, கோட்டாபாய ராஜபக்சே என்று ராஜபக்சேக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் முகவர்களில் ஒருவராகவிருந்த திலித் ஜயவீரவுக்கு நாமலை 21திகதி சனாதிபதியாக்க  ஆசை இல்லை. தாம் ஒருமுறை சனாதிபதியாகிப் பார்ப்போம் என்று அவர் சூறாவளிச் சுற்றுப் பயணத்தை எப்போதோ ஆரம்பித்துவிட்டார்.

கடந்த சனாதிபதி தேர்தலில் திலித் ஜயவீர போட்டியிட்டபோது அவருக்கு வீரவஞ்சவும் பிள்ளையானின் திடீர் சட்டதரணி கம்மான் பிலவும் பக்கவாத்தியம் வாசித்தார்கள். இந்த கோஷ;டி ஊர்களில் உள்ள ஒரு ரொட்டிக் கடையையும் விட்டு வைக்கவில்லை. ஒரு நேர்சையை நிறைவேற்றுவது போல ரொட்டிகளை ஓடர் செய்துகொண்டே இருந்தார் திலித். இந்த கூட்டணிக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. விமால் வீரவன்ஸ நாடாளுமன்றத் தேர்தலின்போது மெல்ல விலகிக்கொண்டு தன் பழைய ஜேவிபி உரிமைக்கதை எல்லாம் சொல்லி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார் ஆனால் கம்மான்பிலவோ தொடர்ந்தும் ரொட்டி தின்று வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் கம்மான்பிலவின் உடைய வாக்குகளை ரோச்சடித்துத் தேடமுடியாத நிலைமை ஏற்பட்ட பிறகு திலித் ஜெவீரவின் சர்வஜன வலையவிலிருந்து கம்மான்பிலவு வெளியேறி பிள்ளையானினுடிய உத்தியோபூரவச்; சட்டத்தரணியானார். கடைசியில் வீரவான்ச, திலித் ஜெவீர, கம்மான்பிலவு என்ற முக்கூட்டுக்களும் சிதறின. அதாவது ஒரு காலத்தில் சிங்களத் தேசியவாதம் என்ற பெயரில் இனவாதத்தின் மறைப்படத்தைப் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு பொதுஜன பெரமுனவின் கூட்டிலிருந்து விட்டு, 2024ல் தனிக் கூட்டணியாய் இங்கத் தொடங்கி, இந்த மூவரும் இன்று வௌ;வேறான பாதையில் குப்புறவிழ்ந்து கிடக்கிறார்கள். உதே கம்மான்பில மட்டும் நாமலை சனாதிபதியாக்கும் சீராட்டு விழாவில் பங்கேற்க இருக்கிறார். கம்மான்பில வெறும் நான்காவது வரிசை, பாடாவதி பங்கேற்பாளர் அல்ல, அவர் இந்த வேள்வியின் முக்கிய பாத்திரம். 

சனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்குள் இருக்கும் ஹிட்லர் வெளியே வரத் துடிக்கிறான் என்பது, கம்மான்பில அண்மையில் ஆய்வு செய்து வெளியிட்ட மற்றொரு கண்டுபிடிப்பு. வால் அறுப்பட்ட பல்லிப்போல, சதா நேரமும் ஓடிக்கொண்டு, கண்டதெல்லாம் பேசும் கம்மான்பில, கோட்டாபாய ராஜபக்சே சனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு வழங்கிய சான்றிதழ், ஒருவேளை ஞாபகம் இருக்கும். புரவலர் கம்மான்பில என்ன சொன்னார் தெரியுமா?: அதிகாரம் இல்லாத சனாதிபதி பதவியால் எந்தப் பயனுமே இல்லை. நாட்டைக் கட்டி எழுப்ப விளாடிமிர் புட்டின் போன்ற ஒரு தலைவர் தேவை. கோட்டாபாய ராஜபக்சேவிடம் புட்டினின் சகல குணங்களும் அம்சமாய் பொருந்தியிருக்கின்றன. ஆனாலும், வெறும் விளாடிமிர் புட்டின் மட்டும் இலங்கையைக் காக்கச் சரிவராது. மஹாதீர் மொஹமட் போன்ற அறிவுக் கூர்மையும், லீ குவான் யூ போன்ற நிர்வாகத்திறனும், ஜவஹர்லால் நேரு போன்ற நேர்மையான பண்புகளும், ஃபிடல் கஸ்ட்ரோவின் தேசப்பற்றும் கோட்டாபாய ராஜபக்சே மேலதிக பகேஜ்யாக இருக்கிறது என்று உலகத்தில் யாரும் கொடுக்காத ஒரு சான்றிதழை வழங்கினார் கம்மான்பில. 




அது எப்படி ஒரு மனிதனுக்குள் சர்வாதிகார புட்டினின் குணமும் இந்தியாவின் உடைய சுதந்திரத்தில் மகத்தான பங்களிப்புச் செய்த ஜவஹர்லால் நேருவின் குணமும் இருக்க முடியும் என்று யாருமே அப்போது கேள்வி கேட்கதில்லை. சரி இத்தனை குணங்களையும் அமையப்பெற்றவர் பல்பரிமான ஆளுமை ஒழுங்கற்ற தன்மையால் (அரடவipடந Pநசளழயெடவைல னளைழசனநச) அவதிப்படும் அன்னியன் படத்தில் வரும் அம்பியாகத்தான் இருக்கக்கூடும் என அப்போது அன்னாருக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு ஏனோதோன்றவில்லை. இது வீட்டில் செலவின்றி கோட்டாபாய ராஜபக்சேயைத் தயாரிப்பது எப்படி என்ற கம்மான்பிலவின் சமையல் குறிப்பு என்று புரிந்துகொண்டவர்கள் மட்டும் சிரித்துக்கொண்டு கடந்துபோனார்கள். சானாதிபதி அனுரவிற்குள் இருக்கும் ஹிட்லர் பற்றிப்பேசும் கம்மான்பில, இங்கே உதாரணமாய் சொன்னவர்களில் நேருவைத் தவிர மற்றவர்களைப் பாருங்கள் அத்தனை பேரும் எதோ ஒரு விதத்தில் சர்வாதிகார அலங்காரங்களைச் சூடிக்கொண்டவர்கள். 20, 30, ஏன் 50 வருடங்கள் என்று ஆண்டவர்கள். ஆக கம்மான்பிலப் போன்ற ஒரு நபரை இப்படி முன்பந்தியில் வைத்துக்கொண்டு நடத்தும் நவம்பர் -21 தோறணம் எங்கே போய் எப்படி முடியப் போகிறது என்றுதான் கேள்வியாய் இருக்கிறது. பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று ஏற்கனவே உத்தியோகப்பூரமாக அறிவித்து விட்டது. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மார்கழி மாதம் சனாதிபதியாகுவார் என்று கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் அமுதவாக்கு வழங்கியிருப்பதால் அவர் அதற்கான முன்னேற்பாடுகளில் மூழ்கியிருக்கிறார்.


மிக அண்மையில் இந்தியா சென்ற சஜித் பிரேமதாச  பிரதமர் மோடியனுடைய அமைச்சரவை பிரபலங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் என்று பெரிய பெரிய கொப்புகளாய்ப் பார்த்துத்தான் பிடித்திருக்கிறார். கண்ணு கெட்டிய தூரம் நாட்டில் தேர்தல் ஒன்று இல்லாத நிலையில் அதிகம் வெளிநாட்டு பயணங்கள் எதுவும் மேற்கொள்ளாத சஜித் இப்படி தீடிர்என்று இந்தியா போயிருப்பதற்கான காரணம்தான் மர்மமாகிறது. ஒருவேளை மாகாணசபைத் தேர்தலை நடத்த இந்தியாமூலம் அழுத்தம் கொடுக்கும் நோக்கமாகக்கூட இருக்கலாம். எது எப்படியோ சஜித் பிரிமதாச தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் எடுத்த மிக முக்கியமான ஒரு தரமான முடிவுதான் பொது எதிரணி என்ற பெயரில் கூடி நாமலை சனாதிபதியாக்கும் பேரணியில் பங்கேர்க்காமல் இருப்பது. பொதுஜன பெரமுனவிற்குத்தான்  இந்நாள்களில் சேதாரம் அதிகம். ராஜபக்சேக்களின் முன்னைய கோட்டையான தென் பிராந்தியங்கள் எல்லாம் போதை மாப்பியாவினதும் பாதாள உலகத்தினதும் சொர்கபுரி என்று ஒரு விம்பம் உருவாகி இருக்குக்கூடிய நிலையில், தம் கட்சிமீது படிந்திருக்கக்கூடிய கறையைக் கழுவ பகீரத பிரியத்தனத்தின் ஓர் ஏற்பாடாகவே நவம்பர்-21 கோலாகலங்கள் பார்க்கப்படுகின்றன. இந்த அமளித்துமளியில் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்துகொண்டால் அதற்குக் கிடைக்கப்போகும் பட்டம் என்னவென்று தெரியும். இதனால்தான் சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டது ஐக்கிய மக்கள் சக்தி. ஆனால் இப்படி கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தாலும் ஒருசிலர் தனிப்பட்ட ரீதியில் கலந்துகொள்ள இருப்பதாகவும் இன்னும் சிலர் பெரிய மாகன்களாக ஆசிர்வாதப் பூக்களாக ஆசிர்வாதங்களைத் தூவ இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுனவினுடைய பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இப்போது கடும் அழுத்தத்தில் இருக்கிறார். சஜித் ஏன் வரமாட்டார் என்று கேட்டால் சனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்கிறார். ரணில் கலந்து கொள்வாரா என்று கேட்டால் அரசியல் சாசன சர்வாதிகாரம் முறியடிக்கப்பட வேண்டும் என்கிறார்.  அனுர குமார் திசானாயாக்க இப்படி போதைப்பொருள் மாப்பியாவை ஒழிக்கப்போவதாய் முன்னர் சொல்ல வேயில்லை என்கிறார். ஒரு செயலாளராய் சாகர காரியவசவின் சம்பந்தம் இல்லாத பதில்களையும் தடுமாற்றங்களையும் பார்க்கும்போது வாழ்க்கையில் தொழில் விரக்தி அடைந்தவர்களுக்குப் படிப்பினை பெற நல்லதொரு பாடம் இருக்கிறது. பொதுஜன பெரமுனவின் செயலாளராய் இருப்பது என்பது ஒரு துன்பியல் நிகழ்வு. எப்படி எல்லாம் உருட்ட வேண்டி இருக்கிறது. சறுக்கிவிழ வேண்டி இருக்கிறது என்று பாருங்கள். அந்த அளவுக்கு சமாளிக்க திராணி என்று விழி பிதிங்கியிருக்கிறார் காரியவசம். பிரதான எதிர்கட்சியும் தலைவரும் பங்கோற்காமாற்போவதை சாகர காரியவசமால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அனுர அரசுடன் சஜித் தரப்புக்குக் கொடுக்கல் வாங்கல் இருக்கக்கூடும் என்று சொல்ல தலைப்பட்டிருக்கிறார் காரியவசம். டீல் கதை சொல்வதில் பொதுஜன பெரமுனவிற்கு நிகர் யாரும் இல்லை. 2015கும் 2019கும் இடைப்பட்ட காலத்தில் எதிர்கட்சியில் இருந்து கொண்டு ஜேவிபிக்கும் ரணிலுக்கும் டீல் இருப்பதாகவும் ஜேவிபி என்பது சிவப்பு யானைகள் என்று நன்மாராயம் வழங்கியது பொதுஜன பெரமுன. அண்மையில் ரணிலை கைது செய்தபோது அதே ரணிலோடு சேர்ந்துகொண்டு எல்லாரும் ஓடிவாருங்கள் சனநாயகம் ஆபத்திலிருக்கிறது என்று புலம்பகிறது பொதுஜன பெரமுன. இப்படித்தான் சஜித் பிமேதாசவும்  சனாதிபதித் தேர்தல்சமயம் தனது வெற்றியை ரணில் தடுத்துக் கொண்டிருப்ப தாகவும் ரணிலுக்கும் அனுரவிற்கும் இடையில் டீல் இருப்பதாகவும் அடித்துவிட்டார். ஆனால் ரணில் கைதானதும் ரணிலின் மனைவியை விட சிறப்பாய்  ரணிலை கவனித்துக் கொண்டார். தினமும் காலையிலும் மாலையிலும் மருத்துவமனைக்குப் போய் ரணிலை விடாப்பிடியாய் சந்தித்து மருத்துவமனை வளாகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்தினார்.  உண்மையில் சனநாயகத்துகு இங்கே என்ன பாதிப்பு இருக்கிறது. தேர்தலை நடத்தாமல் இருந்தால் அல்லது வாக்குச் சீட்டுகளை எண்ணும்போது மின்சாரத்தைத் துண்டித்து மோசடி செய்தார். ஊடக நிறுவனங்களை தீயிட்டார். அரசுக்கு எதிராக தீர்ப்புச் சொல்லக் கூடிய நீதிபதிகளின் வீடுகளுக்கு கல்லெறிந்தார். ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டார். அல்லது எதிர்கட்சி தலைவர்கள் தேர்தலில் நின்ற ஒரே ஒரு குற்றதுகாகத் தறதறவென்று இழுத்துக் கொண்டுபோய் சிறைப்படுத்தப்பட்டார். சனநாயகம் செத்துவிட்டது என்று அழுது ஒப்பாரி வைக்கலாம். அப்படி எதுவும் இங்கே இல்லை. ஆனால் கடந்த ஆட்சிகளில் இதெல்லாம் இலங்கை அரசியலில் அங்கலாவணியங்களாக மாறியிருந்த அம்சங்கள். ஊடக சுதந்திரம் எந்தளவிற்கு இருந்தது என்று ஓர் இலத்திரனியல் ஊடகம் சாட்சிபகர்ந்தது. காலையிலிருந்து இரவு வரை அந்த ஊடகத்தின் வானொலி, தொலைக்காட்சி,  வலைய மைப்புக்கள் எல்லாம் அரசை கழுவி ஊற்றக்கொண்டு இருக்கிறது. யாராவது ஏதாவது சொன்னார்களா? அவர்கள் மேல் ஒரு கீறல் விழுந்ததா, இல்லை. ஆகவே அந்த சனநாயகம் மரித்துவிட்டது. அரசியல் சாசன சர்வதிகாரம் போன்ற கற்பனைக் கதைகளை கட்டிக்கொண்டு வீதியில் இறங்கினால் அதைப்போல நகைச்சுவை எங்குமே இல்லை. புதிய போரட்ட சுலோகங்கள் எதையும் உருவாக்கத்திராணி இன்றி நவம்பர்-21 வீதியில் இறங்கி சனநாயகத்தைத் தேடினால் காலியான பெருங்காய டப்பாமாதிரித்தான் இருக்கும்.  கடைசியாக இந்த பேரணியின் உருவாக்கத்தில் கம்மான்பில போன்ற அதி புத்திசாலி ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதால் இதுமுழுக்க முழுக்க நாமல் கம்மான்பில சங்கமமாகப் போகிறது. போவதற்கு வேறு போக்கிடம் இன்றியிருக்கிற ஐக்கிய தேசிய கட்சியின் ஒருசிலர் இணைந்து கொள்ளக்கூடும். கம்மான்பிலவின் நாடோடிக் கதைகளும் நாமலினுடைய பதட்டங்களும் மட்டும்தான் இங்கே பேசுபொருளாகவும் மாறும். உங்களுக்கு நினைவிருக்குமோ தெரியாது நவம்பர்-21 என்பது, 11வருடங்களுக்கு முன்பு 2014ஆண்டு சிறிசேன பொது வேட்பாளராய் அறிவித்தக்கொண்ட நாள். எல்லாவற்றிற்கும் காலம் நேரம் நாள் நட்சத்திரம் கிரகம் எல்லாம் பார்ப்பவர்கள் ஒரு சொதப்பல் சனாதிபதியின் அச்சொட்டான திகதியை பேரணி நடத்த ஏன் தெரிந்தெடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை. 




Thursday, November 6, 2025

காடினலும் கத்தோலிக்க சமூகமும் நம்பிக்கை கொள்ளும் விசாரணைகள் -முடிச்சுக்கள் அவிழ்க்கப்படுமா? '' Æ


ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாய் இருந்தவர்களை அடையாளம் கண்டு கொண்டதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தன. விசாரணை நடந்து கொண்டிருக்கும் -இலங்கையை உலுக்கிய மிலேச்சத்தான் ஒரு கோரத்தைப் பற்றி நாடாளமன்றத் தெரிவுக் குழுவுக்குள் நடந்த ஓர் உரையாடலை வெளியே கசியவிட்ட பெருமை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பரையேச் சார்ந்தது. விமல் ரத்நாயக்க, தயாசிறி ஜயசேகர, சவிந்திராணி கிரியால, நிஜாம் காரியப்பர் என்ற அந்த நாடாளமன்றத் தெரிவுக்குழு அங்கத்தவர்கள் அப்போது பிரசன்னமாகி இருந்திருக்கிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி உறுதிப்படுத்தும் பொருட்டு ரவி செனவிரத்ன குழுவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். ரவி செனவிரத்னவின் புகைப்படம் தாங்கிய வண்ணம் ஈஸ்ரர் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர் என விசேட செய்திகள் வெளிவந்திருந்தன. இதுபற்றி நிஜாம் காரியப்பரை தவிர வேறுயாரும் வாயே திறக்கவில்லை. நிலைமையின் விபரீதம் வீரியமடைந்திருந்த நிலையில் ஊடகங்கள் இந்தச் செய்தியை ஊடக விஸ்தீரணமாக்கியிருந்தன.  தெரிவுக் குழுவுக்குள் நடந்த உரையாடலை நிஜாம் காரியப்பர் வெளியே கசியவிட்டது தவறு என்று அப்போதே தயாசிறி ஜயசேகரவே ஒப்புக்கொண்டார். 

ரவி செனவிரத்ன ஒரு புகழ்மிகு பொலீஸ் அதிகாரி. ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் நடந்தபோது சிஐடிக்குப் பொறுப்பாய் இருந்தவரும் அவர். அளவாகத்தான்; பேசுவார். தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குத்தான் அவர் பதிலளித்தாரே ஒழிய அவர் ஒன்றும் அநாவசியமாய் போய் உளறிக் கொண்டிருக்கவில்லை:ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம் என்பது மட்டும்தான் அத்தகவல். 

ரவி செனவிரத்னவினுடைய கூற்று இந்தப்பயங்கரத்தின் மூளையாய் இருந்தவர்கள் யார் என்று எமக்குத் தெரியும். காலக்கிரமத்தில் ஆதாரங்களுடன் அனைத்தும் வெளிவரும் என்பதுதான். இதை உடனடியாக ஊடக சந்திப்பு ஒன்றைக் கூட்டி நிலைமையை பகிரங்கப் படித்தியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி எதையும் செய்யவில்லை. ஏதோ ஒன்றுக்குத் தருணம் பார்த்து காத்திரு ப்பது போலதான் தெரிகிறது. இந்த நிலையில்தான் நாடாளமன்றத்தினுடைய தெரிவுக்குழுவில் ரவி செனவிரத்ன இது பற்றிப் பேசியிருந்தார். தான் பேசுவது விகாரமாகி வதந்தியாகும் என்று அவர் எதிர்பாத்திருக்கமாட்டார். இன்னமும் அரசாங்கம் உத்தியோக பூர்வமானக அறிவிக்காத மிகஉணர்ச்சி தூண்டக்கூடிய இனவர்க்க முரண்பாடுகளை உருவக்கிய- ஒரு சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய ஒரு பயங்கரத்தின் சூத்திரதாரிகளைப் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. 

ஓர் உயர் அதிகாரியினுடைய தனிப்பட்டப் பாதுகாப்புப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் இப்படி அவர் சொன்னார். ஈஸ்ரர் விடயம் சரி என்னும் பொருள்பட சமூக ஊடகத்தில் பரப்பி ஒரு நேர்காணலைப்  பகிரங்கப்படுத்துவது எந்த விதத்தில் சரியாக இருக்கமுடியும். நாடாளமன்றத்தில் இதுதொடர்பாக விவதம்நடந்து கொண்டிருக்கும்போது ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் அடையளம் காணப்பட்டுள்ளதாக ரவி செனவிரத்ன தெரிவித்திருப்பதாக நிஜாம் காரியப்பர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுப் பதட்டத்தை ஏற்படுத்தினார். இதனால் விடயம் மேலும் சிக்லானது. யார் அந்த சூத்திரதாரி என்று ஆளாளுக்குச் கேள்விகேட்கத் தொடங்க சமூக ஊடங்களில் பொய்வதந்திகள் வேகமாகப்பரவின. இந்த சதியின்பின்னணியில் இந்தியா இருப்பதாக ரவி செனவிரத்ன தெரிவித்ததாக சமூக ஊடங்களில் பரவிவும் இந்த செய்தி பொய்யனவை என பொலிஸ் ஊடகப்பிரிவு மறுப்பறிக்கை விடுத்தது. ரவி செனவிரத்ன அவர்களும் சமூகஊடகங்களில் சுற்றிவரும் இந்தச் செய்தி இடுகைகள் முற்றிலும் பொய்யனவை. தவறுக்கு வழிவகுக்கின்றன. தவறான தகவலைப்பரப்புவதற்கு இட்டுச்செல்கின்றன என தெரிவித்தார். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கியங்களுடன் இருந்தப் பொலிஸ் ஊடக அறிக்கையில் எந்த இடத்திலும் ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டார்கள் என ரவி செனவிரத்ன சொன்னதை மறுத்திருக்கவில்லை. பிரதான சூத்திரதாரி இந்தியா என்று தாம் எந்த இடத்திலும் சொல்லவில்லை என்றே அதன் சுருக்கம் இருந்தது. ஈஸ்ரர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இப்போது வேகம் எடுத்திருக்கின்றன. எல்லா விசாரணைகளையும் கம்மன்பிலத்தனமாகவோ அல்லது காரியப்பர்த்தனமாகவோ கடத்திவிடவும் முடியாது. 250பேருக்கு மேற்பட்ட மரணத்தோடு தொடர்புடைய அரசியல் சதியாக இருக்கக்கூடும் என்று சமூகத்தில் பேசப்படுகின்ற மிககோரவன்முறை அது. ஆகவே குற்றவாளிகளைச் சகல ஆதாரங்களுடன் பிடித்துத்தான கோப்பபுக்களை கையாளவேண்டும். 

இங்கே ரவி செனவிரத்ன சொன்ன விடயங்கள் ஒன்றும் புதுமையானவை அல்ல. ரவி செனவிரத்ன ஆரம்ப நாள்களில் இந்த விசாரணைகளை நடத்தியவர் ஆவார். சிஐடிக்கு அவர் பொறுப்பாக இருந்தபோது ஷhனி அபயசேகர சிஐடியின் பணிப்பாளராக இருந்தவர். ரவி செனவிரத்ன 2019-ஆம் பணி ஓய்வுபெற்றுச் செல்ல இருந்தபோது அப்போதைய ரணில் -மைத்திரி அரசு ரவி செனவிரத்ன ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலின் விசாரணைகளில் மும்மூரமாய்க் கவணம் செலுத்தியிருந்ததால் அவருக்குச் சேவை நீடிப்பை வழங்கியிருந்தது. ஆனால் 2019இல் நடந்த சனாதிபதித் தேருதலில் கோட்டாபாய ராஜபக்சே வென்றதும் பிரதமரையும் கபினற்றையும் நியமிக்கமுன்னர். ஷhனி அபயசேகரவை காலிமாவட்டத்திற்கு இடம்மாற்றி பதவியிறக்கியிருந்தார். அவரது தொழில்முறை வாழ்க்கையை காலிசெய்தார். மேலும் 100 அதிகமான சிஐடி அதிகாரிகள் கலைந்துபோன சீட்டுக்கட்டுக்களாக இடமாற்றம் செய்யப்பட்டார்கள். அவர்கள் வெளிநாடு செல்லமுடியாதவாறு பாஸ்போட்டுக்கள் முடக்கப்பட்டன. இதனால் ஈஸ்ரர் உட்பட முக்கிய விசாரணைகள் முடங்கிப்போயிருந்தன.  


ரவி செனவிரத்னவின் பதவியும் 31.12.2019ஆண்டு முடிவுக்கு வந்தது. கோட்டாபய அரசு அமைத்த சனாதிபதி விசாரணைக் குழுவுக்கு ரவி செனவிரத்ன 20.11.2020ஆண்டு அழைக்கப்பட்டார். ரவி செனவிரத்ன அன்று வழங்கிய வாக்குமூலம் மட்டுமே 163 பக்கங்களுக்கு மேல் இருக்கும். அப்போது நடந்த விசாரணைகள்தான் மிக முக்கியமானவை. இந்த விசாரணை அறிக்கையை படித்தால் பலவிடயங்கள் புரியும். ரவி செனவிரத்ன ஐந்து வருடங்களுக்கு முன்பே இது ஒரு சதி என்றும், இந்த சதியினுடைய முக்கியமானவர்களை நெருங்க உத்வேகத்துடனும் இருந்தார் என்றும் புரிந்து கொள்ள முடியும். 

'சஹ்ரான் குழுவுக்கும், ஐஎஸ் அமைப்புக்கும் பொருளாதார ரீதியிலான கொடுக்கல் வாங்கல்களோ அல்லது வேறு எந்த வடிவிலான கொடுக்கல் வாங்கல்களோ இருந்ததாக உங்கள் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டதா?' என்று ரவி செனவிரத்னவிடம் கேட்டார் அப்போதைய அரசு சட்டத்தரணி சஞ்சீவ திஸாநாயக்க. 'இல்லை. எனக்கு அப்படி எந்த விவரமும் கிடைக்கவில்லை. நான் 2019கடைசிவரை இந்த விசாரணைகளை நடத்தியிருந்தேன். தற்கொலைக் குண்டுதாரிகளான இப்ராஹிமின் புதல்வர்களிடமிருந்து பணப்பரிமாற்றம் நடந்த 41 இளைஞர்களின் வங்கிக் கணக்குகளை தடை செய்ய நடவடிக்கை எடுத்தேன். வெளிநாடுகளில் உள்ள இயக்கங்களின் மற்றும் நபர்களிடமிருந்து அப்படி ஏதும் வந்ததாக நாம் விசாரணை செய்யும்வரை எதுவும் பதிவாகவில்லை' என்றார் ரவி செனவிரத்ன. அப்போது சஞ்சீவ திஸாநாயக்க ஒரு தாளில் பெயரொன்றை எழுதி ரவி செனவிரத்னவிடம் காட்டினார். பின்னர் கேள்வியைத் தொடுத்தார். 'நான் இங்கே காட்டிக் கொண்டிருக்கும் பெயருக்கும் சஹ்ரானுக்கும் இடையில் ஏதாவது சம்பந்தம் இருப்பதாக உங்கள் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டதா?' என்று ரவி செனவிரத்னவிடம் கேட்டார் சஞ்சீவ திஸாநாயக்க. 'இப்படி சம்பந்தம் இருப்பதாக எங்களுக்கு தகவல்கிடைத்தது உண்மை. நாம் இதுபற்றி நீண்ட விசாரணை ஒன்றை நடத்தியி ருந்தோம். இதன்போது நீங்கள் சொல்லும், எமக்கு அண்மையில் இருக்கும் நாட்டிற்குள் உள்ள இந்தப் பெயருடன் சஹ்ரான் தொடர்புகளை வைத்திருந்ததற்கான எந்தவொரு ஆதாரத்தையும் எம்மால் உறுதி செய்யமுடியவில்லை', என்று பதிலளித்திருந்தார் ரவி செனவிரத்ன. இதன்போது சனாதிபதி கமிசனின் தலைவர் ஜனார்த்தன சில்வா, ரவி செனவிரத்னவிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார். ரவி செனவிரத்ன அந்த கேள்விக்கு அன்று கொடுத்த பதிலுக்குப் பலரும் தலைசுற்றி விழாத நிலைமைதான். அப்படி என்ன கேள்வி -பதில், ஈஸ்ரர்அன்று தாக்குதல் நடத்த ஏதாவது ஒரு காரணத்தால் இந்த குரூரர்களுக்கு முடியாது போயிருந்தால் இவர்களுக்கு முறையாய்ப் பாதுகாப்பு வழங்கி சம்பவ இடங்களிலிருந்து இவர்களை அப்புறப்படுத்தி வதிவிடங்களை வழங்க ஏற்பாடு இருந்ததா அன்று ஜனார்த்தன சில்லா கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளிக்க ரவி செனவிரத்ன ஒரு பேப்பரும் பேனாவும் கேட்டார். ஒரு பெயரை எழுதினார். ரவி செனவிரத்ன அப்படி யாருடைய பெயரை எழுதினார். மிகப்பெரிய கேள்வி இது. 

காலம் ஒரு விசித்திரமான வாத்தியார். கோட்டாபாய ராஜபக்சே அரசு இனி 25,30 வருடங்களுக்கு ஆட்சிசெய்யும் என்று கோட்டபாயவினுடைய பிரியமிகு வழக்கறிஞரும் முன்னாள் அமைச்சருமான அலி சப்ரி அடித்துவிட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதே அலி சப்ரியைப் பற்றித்தான் சொல்கிறோம். கடைசியில் என்ன நடந்தது இரண்டரை வருடங்களுக்கு மேல் அவராகளால் சமாளிக்க முடியவில்லை. துரத்தி அடிக்கப்பட்டார்கள். கோட்டபாய அரசு, ரவி செனவிரத்ன, ஷhனி அபயசேகர போன்றோர் எனித் தலைஎடுக்க முடியாது என்று அலட்சியமாக நினைத்திருந்தது. ஆனால் ரவி செனவிரத்ன இன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கிறார். ஷhனி அபயசேகர சிஐடி பாணிப்பார் நாற்காலியில் இருந்துகொண்டு விட்ட விசாரணை கோப்புக்களை தூசுதட்டிக் கொண்டிருக்கிறார். ரவி செனவிரத்னவிற்கும், ஷhனி அபயசேகரவிற்கும் இந்த பதவிகள் வழங்கப்பட்டபோது கலவரமடைந்து சத்தம் போட்டவர்களை எல்லாம் நிறுத்தி ஒரு வட்டம்போட்டுப் பார்த்தால் வட்டத்தின் மையப்புள்ளி சட்டத்தில் பிடிபடும். அந்தவட்டத்தின் மையப்புள்ளியில்தான் சதித்திட்டமிட்டவர்களின் மர்மங்களும் மறைந்திருக்கிறன. 

ரவி செனவிரத்ன யார் அவரது பின்புலம் என்ன எதுவும்தெரியாத காரியப்பர் இதைப் பகிரங்கப்படுத்தி மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் ரவி செனவிரத்ன இதைஎல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சனாதிபதி ஆணைக்குழுவில் பேசிவிட்டார் என்பதே நிஜம். இப்போது பலகோணங்களில் விசாரைணை நடக்கிறது. சில அனுமானங்கள் சரியாகுகின்றன. சில சந்தேகங்கள் தீர்ந்திருக்கின்றன. பிள்ளையானின் கட்சியின் இணைப்பாளராக இருந்த அசாத் மௌலான சனல் 04 இற்கு வழங்கிய சர்ச்சைக்குரிய நேர்காணல் தொடர்பாக நடக்கும் விசாரணைகளும் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளன. காடினலும் கத்தோலிக்க சமூகமும் இந்த விசாரணைகள் தொடர்பாக இப்போது நம்பிக்கையோடு பேசிக்கொண்டிருக்கின்றனர். ரவி செனவிரத்ன அன்று பேப்பரில் எழுதிக் கொடுத்த பெயருடன் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களுடன் கோர்த்துப் பார்த்தால் ஒன்று மட்டும் சொல்லமுடியும். அதுதான் இன்று சிலருக்கு இதைஎல்லாம் பார்க்கும்போது இருப்புக் கொள்ளவில்லை. ரெம்பவே பதட்டம் அடைந்திருக்கிறார்கள். இதனால்தான் ரவி செனவிரத்ன எந்த இடத்திலும் சொல்லாத இந்தியாவை இழுத்து பொய்க்கதை பரப்புகிறார்கள். இதுவரை நடந்துகொண்டிருக்கக்கூடிய இந்த விசாரணைகளின் பெறுபேறுகளைப் பார்க்கும்போது- கோட்டை நீதிமன்ற விசாரணையின் போக்கைப் பார்க்கும்போது ஒன்றை மட்டம் சொல்லமுடியும். உச்சக் காட்சி நடக்கிறது வேடம் கலையும் நேரமிது.

Hisham.M.Vlogvdஎன்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் https://www.dailymirror.lk/, https://www.adaderana.lk/, https://www.newswire.lk, https://www.parliament.lk, https://www.newsfirst.lkபதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)



Friday, October 31, 2025

வசீம் தாஜ{தீனின் மரண விசாரணையும் சிறுநீர் போன வைத்தியர் ஆனந்த சமரசேகரவும்

ம.பிரான்சிஸ்க்- கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர், 

சட்ட வைத்தியர் பேராசிரியர் ஆனந்த சமரசேகரஇ வசீம் தாஜுதீன் மரண அறிக்கையைத் திரிபுபடுத்தி எழுதியூள்ளார்.இலங்கை அரச நிர்வாகத்தின் படுமோசமான துஸ்பிரயோகம் இது. வசீம் தாஜுதீன் மரணத்தைப்பற்றி நாம் கடந்தவாரம் இதேபகுதியில் எழுதியிருந்தோம். தாஜுதீனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியர் ஆனந்த சமரசேகர பொலீஸ் விசாரணைகளுக்குச் சரியாய் ஒத்துழைக்கவில்லை என்று அறியமுடிந்தது. இன்று ஆனந்த சமரசேகரவினுடைய இந்தச் செயலை விரிவாகப்பார்ப்போம். மே17இ2012ஆண்டு வசீம்தாஜுதீன் சென்றவாகனம் நாரஹேன்பிட்டிய சாலக்கா மைதானத்துகுகருகில் ஒரு மதிலில் விபத்துகுள்ளாகி அவர் இறந்துபோனதாக மறுநாள் இலங்கைப் பத்திரிகைகளில் செய்திகள் மூலையோரமாக வெளியாகியிருந்தன. 

மே18. மற்றும் மே19.என்பது ராஜபக்சை அரசுக்கு விடுதலைப்புலிகளை வென்றௌம் என்னும் போர் வெற்றிவிழாத்தினங்கள்;. மிகக்கோலாகலமாக அந்த அரசு காலிமுகத்திடலில் கொண்டாடும்போது அந்தநிகழ்வூ ஓர் ஊடக விஸ்திரணமாகிப்போனது. தனிநபர்கள் கார் ஓட்டிக்கொண்டுபோய் விபத்துகுள்ளாகி இறந்துபோன துன்பியலுடன் ஒப்பிடும்போது வசீம் தாஜுதீனின் மரணம் மிகவித்தியாசமாகிருந்தது. அவர் காரின் பயணிகள் ஆசனத்தில் சீற் பெல்ட் அணிந்த நிலையில் இறந்து கிடந்தார். இந்த அவலத்தைப் பூதாகரமாக்கி மே18-19 நாள்களில் செய்திகளை வெளியிட்டிருக்க முடியூம். ஆனால் பெருமளவான ஊடகங்கள் அன்றைய ராஜபக்சை அரசு சொல்லும் கேவலங்களைச் செய்திகளாக வாந்தி எடுத்துக்கொண்டிருக்கு மளவூக்குத்தான் அன்று ஊடக சுதந்திரமும் இருந்தது. 

பொய்யான அறிக்கை

மே18இ வசீம்தாஜுதீனின் உடலைப் பரிசோதித்த வைத்தியர் ஆனந்த சமரசேகரஇ காலை11 மணிக்கு தன்னுடைய இளையவர்களான வைத்தியர்கள் ஸ்ரீயந்த அமரசேன மற்றும் ராஜகுருவிடம் உடலை ஒப்படைத்து இது விபத்து அல்ல. இதில் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதுபோல தெரிகிறது. இந்தப் பிரேதப் பரிசோதனையைக் கச்சிதமாகச் செய்யூங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே போனாராம். இரண்டு வைத்தியர்களும் பரிசோதனைகளை ஆரம்பித்த சில நொடிகளில் அவர்களுக்கு இந்தமரணம் விபரீதமானது என்று புரிந்துபோனது. தாஜுதீனின் தொண்டைப் பகுதியிலும் நெஞ்சுப்பகுதியிலும் துவாரங்கள் இருந்தன. தொடைஎலும்புகள் முழங்காலுடன் இணையூம் இடங்கள் மோசமாக நொறுக்கப்பட்டிருந்தன. பற்கள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் தாஜுதீனின் ஆணுறுப்பும் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தது. எல்லாவற்றையூம் தம்பரிசோதனை அறிக்கைகளில் குறித்துக் கொண்ட வைத்தியர்களும் பிரேதத்தை பிரீசரில் போட்டுவிட்டு போய்விட்டார்கள். எங்கோ சென்றிருந்த வைத்தியர் ஆனந்த சமரசேகர பகல் 12:30அளவில் அவசரமாகத் திரும்பிவருகிறார். ஸ்ரீயந்தவூம் ராஜகுருவூம் எழுதியிருக்கக்கூடிய அறிக்கையைப் படித்துவிட்டு தாஜுதீனின் பிரேதத்தை மீண்டும் தனியாகப் பிரேதப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தார். இந்தமரணத்தில் ஏதோ ஒரு விடயம் இருகிறது. கவனமாய்ப் பார்த்து வேலை செய்யூங்கள் என்று சகாக்களிடம் சொல்லிவிட்டுபோன அதே ஆனந்த சமரசேகர மொத்தமாக தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இது ஒரு விபத்தால் ஏற்பட்ட மரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை வழங்கியிருந்தார்.

ஊடக அடக்குமுறை

ஆரம்பத்தில் பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியர்களான ஸ்ரீயந்தவூம் ராஜகுருவூம் ஆனந்த சமரசேகரவின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குக் கூடவிருந்த சாட்சிகளாக கையொப்பமிட்டு இருந்தனர். அத்தோடு தாஜுதீன் விவகாரம் விபத்து என்ற பொய்ப்போர்வையால் மூடி மறைக்கப் பட்டது. ஆனால் இப்படி மூடப்பட்ட பொய்யில் விரிசல்கள் விழத்தொடங்கின. டுயமெய ஈ நியூ+ஸ் போன்ற இணையத்தளங்கள்இ ராவய போன்ற பத்திரிகைகள் கேள்வி எழுப்பிக் கொண்டு கட்டுரைகள் எழுதினாலும் முகநூலில் தங்களுடைய அடையாளத்தை மறைத்தபடி சில முகநூல் பக்கங்கள் இது ஒருகொலை என்று சத்தியம் செய்து கொண்டிருந்ததாலும் இராட்சதத் தனமான ராஜபக்சை அரசின் ஊடக ஒடுக்குமுறையை மீறி சாதாரணமக்களிடம் இவைபோய்ச் சேரவில்லை. 

உதவமறுத்த ரணில்-மைத்திரி அரசு

சனவரி 08இ 2015ஆண்டு சனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சை தோற்கடிக்கப்பட்டுஇ நல்லாட்சி குழுபதவிக்கு வருவதற்கு தாஜுதீன் மரணம் தேர்தல் மேடைகளில் வாக்கள்ளும் இயந்திரமாக்கப் பட்டது. ராஜித சேனாரத்னஇ வசீம் தாஜுதீன் கொலைக்கு ராஜபக்சைவினுடைய மனைவி சிரந்தி ராஜபக்சை சம்பந்தப்பட்ட இருப்பதாகவூம்இ அலரிமாளிகையில் இருந்து தாஜூதீனைச் சித்திரவதை செய்த இடத்தில் இருந்த நபர்களுக்கு 42 தொலைபேசி அழைப்புகளை வழங்கியிருந்ததாகவூம்இ மக்களை அச்சத்தில் உறையச்செய்யூம் உரைகளை அந்த காலத்தில் ஆற்றியிருந்தார். பின்னாளில் சிரந்தியினுடைய கால்ட்டன் இல்லத்துகுச் சொந்தமான டிபண்டர்வாகனம் தாஜுதீனை பின்தொடர்ந்தது சிஐடியால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அன்றைய கோமாளி அரசு விசாரணை மேற்கொண்ட சிஐடி பணிப்பாளர் ~hனி அபேசேகர போன்றௌருக்கு எந்த ஒத்துழைப் பையூம் வழங்கவில்லை. சிரந்தி மற்றும் யோசித்தவின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த படைவீரர்களின் விபரங்கள் மற்றும் குறித்தத் தினங்களில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பற்றிய எந்த ஒரு விபரத்தையூம் வழங்க ரணில்-மைத்திரி அரசு மறுத்துவிட்டது.

வசீம்தாஜுதீனின் உடல் யூலை2015ஆண்டு நாடாளாமன்றத் தேர்தலுக்குமுன் மீண்டும் தெகிவளை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இருந்து எடுக்கப்பட்டு இரண்டாவது தடவையாகப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்நாள்களில் இலங்கையில் மிகப்பிரபலமான வைத்தியர்களான அஜித் தென்னக்கோன் ஜீ.பெரேரா மற்றும் கொலம்பகே ஆகியயோர் பிரேதப் பரிசோதனை நடத்தினார்கள். தாஜுதீனின் சடலத்தின் தொடைஎலும்புகளும்இ நெஞ்சு எலும்புகளும்இ தொண்டைக் குழிஎலும்புகளும் காணாமல்போயிருப்பதைகண்டு பேரதிர்ச்சிக்குள்ளானர். இப்போது என்ன செய்வது? தாஜுதீனின் சடலத்தை ஆரம்பத்தில் பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் ஸ்ரீயந்த அமரசேன மற்றும் ராஜகுரு ஆகியோர் பிரேதப்பரிசோதனை செய்த சம்பூரணமான அறிக்கையைக் கண்டுபிடிக்கிறார்கள். தொண்டைக்குழி எலும்புகளும் நெஞ்சு எலும்புகளும் தொடைஎலும்புகளும் சேதமாக்கப்பட்ட இருப்பதாக ஸ்ரீயந்தவூம் ராஜகுருவூம் அப்போது எழுதிய அறிக்கைக்குச் சான்றுபகரும் விதமாக அன்றைய எக்ஸ்ரே அறிக்கை எல்லா எலும்புகளும் பத்திரமாகவிருப்பதையூம் விபரிக்கிறது. ஆனால் அவை சேதமாக்கப்பட்டிருந்தன. ஆகவே வைத்தியர் ஸ்ரீயந்த மற்றும் ராஜகுருவின் பிரேதப்பரிசோதனைக்குப்பிறகு தாஜுதீனின் எலும்புகளை களவாடியது யார்?என்று விசாரணைகள் ஆரம்பமாகின. விடை தெரியாத கேள்விகள் இங்கும் ஆக்கிரமித்திருந்த நிலையில் விசேட வைத்தியர் குழு தாஜுதீன் கொடூரமாய் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக முடிவூக்கு வந்தனர்.

வதைசெய்யப்பட்ட தாஜுதீன்

தாஜுதீனை எங்கோ கொன்றுவிட்டு ஒரு விபத்தாய் நாடகமாடி இருக்கிறார்கள் என்று முடிவூ செய்தார் சானி அபேசேகர. சிஐடி 2012 தாஜுதீனின் பிரேதப் பரிசோதனையோடு சம்பந்தப்பட்ட வைத்தியர் ஆனந்த சமரசேகரவையூம் உதவியாளர்களாயிருந்த ஸ்ரீயந்த மற்றும் ராஜகுருவையூம் விசாரணைக்குள் கொண்டுவருகிறார்கள். எலும்புகளுக்கு என்ன நடந்தது என்று ஆனந்த சமரசேகரவிடம் விசாரித்தபோதுஇ தனக்கு எதுவூம் தெரியாது என்று முதலில் கைவிரித்தார். ஸ்ரீயந்த மற்றும் ராஜகுருவிடம் விசாரரித்தபோது. நாங்கள் பிரேதப் பரிசோதனை செய்தோம். நாங்கள் இன்று காணாமற்போய் இருப்பதாகச்சொல்லப்படும் எலும்புகள் தொடர்பாக அறிக்கையூம் எழுதி வைத்தோம். அது மட்டுமல்ல தாஜுதீன் உடலில் ஏற்பட்டிருந்த அசாதாரண காயங்கள் பற்றி ஆனந்த சமரசேகரவிடமும் முறையிட்டோம் என்றார்கள். மேலும் இந்த எலும்புகளை வைத்தியர் ஆனந்த சமரசேகர வேறாக எடுத்து கொண்டார் என்று வைத்தியர் ராஜகுரு மேலும் ஒரு அறிக்கையில் எழுதியிருந்தார். உடனே மீண்டும் சிஐடி ஆனந்த சமரசேகரவை நெருங்கியது. எலும்புகளை நீங்கள் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அறிக்கையூம் இங்கே இருக்கிறது. எங்கே எலும்புகள் என்று எகிறினார்கள் சிஐடி. அதுவா? நான் மேலதிகப் பரிசோதனைகளுக்காக எடுத்தேன். அதை ஒரு ரொலியின் மீது வைத்தேன். அதன் பின்னர் எனக்கு மறந்துவிட்டது. அந்த எலும்புகளுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை என்றார். ஆனந்த சமரசேகர பதில் கொடுத்த எழுகோலத்தை வைத்தே சாட்சிகளை அழிப்பதில் அவர் துணைபோயிருக்கிறார் என்ற முடிவூக்கு வந்தது சிஐடி. 

மீண்டும் ஆனந்த சமரசேகர ஸ்ரீயந்த அமரசேன மற்றும் ராஜகுரு ஆகியோரை ஒன்று சேர்த்து விசாரணைகள் ஆரம்பமாகின. பிரேதப் பரிசோதனையை நீங்களா மேற்கொண்டீர்கள் என்று ஆனந்த சமரசேகரவிடம் கேட்டபோது எந்த தயக்கமும் இன்றி ஆம் நான்தான் என்றார். ஆனால் ஸ்ரீயந்தவூம் ராஜகுருவூம் அதனை மறுத்த விட்டனர். நாங்கள்தான் முதலில் பிரேதப் பரிசோதனை செய்தோம். எங்களுக்குத் தாஜுதீனின் உடலில் காயங்கள் இருந்த இடங்கள் தொடர்பாகச் சந்தேகங்கள் ஏற்பட்டது. நாங்கள் ஒன்றும் விடாமல் எல்லாவற்றையூம் குறித்துவைத்திருக்கிறௌம். இந்த நிலையில் ஆனந்த சமரசேகர மீண்டும் வந்தார். அவர் தனியே பிரேதப் பரிசோதனை மேற்கொண்டார். இது ஒரு விபத்து என்று தனது கடைசி அறிக்கையை எழுதினார். எம்மிடம் பலவந்தமாகத்தான் கையொப்பங்களை வாங்கினார். நாம் கையொப்பம் வழங்காவிட்டால் எமது மேற்படிப்புக்கு அனுமதிக்கப்போவதில்லை என்று மிரட்டினார். எமக்கு வேறுவழியில்லாமல் கையொப்பங்கள் வைத்தோம் என்றனர். ஒரு பிரேதப் பரிசோதனை நடக்கும்போது அது எந்த வகையான மரணம் என்றாலும் நீதிமன்ற விவகாரம் என்றபடியல் அந்தப் பிரேதப்பரிசோதனை நடக்கும் நிகழ்வைப் புகைப்படம் எடுப்பார்கள். தாஜுதீனின் மரணப்பரிசோதனை நடந்தநேரம் 79 புகைப்படங்கள் எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தது சிஐடி. ஆனால் எந்தவொரு புகைப்படத்திலும் ஆனந்த சமரசேகர இல்லை. நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்தால் இந்த புகைப்படங்களில் இருக்கவேண்டுமே. நீங்கள் ஒருபுகைப்படங்களிலும் இல்லையேஎன சீஐடி கேட்டபோது என்னைக் காட்சிப்படுத்தாமல் மற்றவர்களை வைத்துப் புகைப்படங்களை எடுக்கச்சொல்லி நான்தான் சொன்னேன் என்று மீண்டும் ஓர் அபூர்வமான காரணம் சொன்னார் அவர்.

புகைப்படப்பிடிப்பாளின் அறிக்கை

உடனே புகைப்படப்பிடிப்பாளர் அழைக்கப்படுகின்றார். இவர் என்ன சொல்லுகிறார். இவரை எடுக்காமல் ஏன் புகைப்படம் எடுத்தீர் என்று கேட்டபோதுஇ இது என்ன பைத்தியக்காரக் கதை. இவர் அகப்படாது புகைப்படம் எடுப்பதா எனதுவேலை. நான் மரணவிசாரணைகளுக்கான உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளர். துல்லியமாக அனைத்தையூம் ஆவணப்படுத்துவது எனது கடமை என்றார் அவர். ஆனந்த சமரசேகர ஒரு குற்றத்தை தாழ்ப்பாழ்போட்டு மூடி மறைக்க முனைவது நிருபணமானது. ஆனந்த சமரசேகர வசமாய் இறுகி ஒரு கட்டத்தில் நிதானமிழந்து இனிமேல் என்னவாகும் எல்லாம் முடிந்துவிட்டதுதானே என்று கேட்டார். அதற்கு சிஐடி இனிமேல்தான் ஆரம்பமாகப்போகிறது உங்களுக்கு வந்த தொலைபோசி அழைப்புகள் பற்றிய விசாரணைகள் என்றனர். அவ்வளவூதான் ஆனந்த சமரசேகர அந்த இடத்திலே சிறுநீர் போய்விட்டாராம். சிஐடி காரியலையத்தில் ஆனந்த சமரசேகரவிற்கு எற்பட்ட இந்த நிலைமை தொடர்பாக அப்போது ராவைய பத்திரிகை ஒரு விரிவான கட்டுரையையூம் எழுதியிருந்தது. இதேவேளை காணமல்போன வசீம்தாஜுதீனின் எலும்புகள் நெவில் பெனாண்டோ மருத்துவ மனையில் இருக்கலாம் என்று சந்தேகம் எழும்பவே சிஐடி அங்கு விரைந்தது.

சைரம் மருத்துவமனையில் நடந்தது என்ன

சைரம் என்று அன்று அழைக்கப்பட்ட நெவில் பெனாண்டோ மருத்துவமனையில் மற்றும் மருத்துவக் கல்லூரியில் ஆனந்த சமரசேகர பணிபுரிந்து கொண்டிருந்தார். சிஐடி அங்கிருந்த ஆய்வூகூடங்களைப் பரிசோதித்தபோது மற்றும் ஓர்அபூர்வ மேசடியைக் கண்டிறிந்தது. மே 01இ 1993ஆண்டு ரணசிங்கப் பிறேமதாசவூடன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்வர்களின் எலும்புகளை எல்லாம் ஆனந்த சமரசேகர இலாவகமாக அங்கு கொண்டுவந்திருப்பது தெரியவந்தது. வசீம் தாஜுதீனின் விவகாரத்தில்; சாட்சிகளை அழித்தக் குற்றச்சாட்டிற்காகவூம் அரச பகுப்பாய்வூத் திணைக்களத்தில் இருக்கவேண்டிய எலும்புகளைத் தாம் பணிபுரியூம் மருத்துவனைக்குக் கொண்டு சென்றதால் பொதுச்சொத்துகளைத் துஸ்பிரையோகம் செய்தக் குற்றச்சாட்டுக்காகவூம் கைது செய்யப்பட்டார் ஆனந்த சமரசேகர. முன்பிணைகோருவதும் கைதுசெய்யப்பட்டு பிணையில் வருவதுமாக மூன்று-நான்கு ஆண்டுகள் இப்படியே கழிந்தன. ஆனந்த சமரசேகர எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2020ஆண்டு அவர் இறந்துபோனபோது கொழும்பு மேல்நீதிமன்றம் இந்த வழக்கு முடிவூக்கு வருவதாக அறிவித்தது. ஒரு மருத்துவர் தனது கடைமையைச் செய்யாது தவறவிட்டு ஒரு குற்றத்தை யாருக்காகவோ மறைக்கப்போனதன் விளைவூகள் பாதாள உலகக் கும்பல்போல ஆட்சிக்கு உடந்தையாக இருந்த ஆனந்த சமரசேகரபோன்ற வைத்தியர்களும் அனுர சேனநாயக்க போன்ற டிஐஜிக்களும் வசீம் தாஜுதீனின் மரணத்திற்குப் பங்குதாரர் ஆகிப்போனார்கள். இன்று வசீம்தாஜுதீனைப் பின்தொடர்ந்த வாகனத்தில் இருந்ததாக உறுதிசெய்யப்பட்டிருக்கும் கஜ்ஜா எல்லாம் சும்மா ஏவலர்கள். படிப்பறிவில்லாத பாதாளப் பெயர்வழிகள். ஆனால் போரசிரியர் ஆனந்த சமரசேகரவூம் இந்தக் கொலைக்கு ஏதோவொருவிதத்தில் துணைபேயிருக்கிறார். என்ன படித்து என்ன பலன். மெத்தப் படித்த அவரையூம் சம்பத் மரம்போரி கஜ்ஜா குழுமத்துடன்தான் சேர்க்கவேண்டி இருக்கிறது. 

Hisham.M.Vlog என்னும் வலையொளிப் பதிவிலிருந்தும் https://www.colombotelegraph.com, https://lankanewsweb.net, https://economynext.com, https://dbsjeyaraj.com/dbsj, https://www.themorning.lk,https://www.dailymirror.lk, https://www.adaderana.lk பதிவிலிருந்தும் தொகுக்கப்பட்டது)


Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff