Monday, August 13, 2012

வாழும் உணவாகிய இயேசுவை உண்பதன் மூலம் புதிய மனிதராக மாறுவோம்

19.08.2012

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

மாணவிகள் மட்டுமே தங்கியிருக்கும் ஒரு விடுதிக்கு இளைஞன் ஒருவன் செவ்வாய்க்கிழமை வந்திருந்தான். அங்கு சனிக்கிழமை மட்டுமே மாணவிகளை சந்திக்க அனுமதி உண்டு. நடுத்தர வயதுள்ள ஒரு பெண் பொறுப்பாளராக இருந்தார். அவரிடம்; அவன் குறி;ப்பிட்ட ஒரு மாணிவியின் பெயரைக் கூறி அவளைத் தான் பார்க்கவேண்டும் என்றான். அவளுக்கு ஓர் ஆச்சரியமாக இருக்கட்டுமே என்று தான் செவ்வாய்க்கிழமை வந்ததாகவும் தான் அவளுடைய சகோதரன் என்றும் சொன்னான். அப்போது அந்தபொறுப்பாளர் அவனிடம் நிச்சயமாக அவள் உன்னைப் பார்த்ததும் ஆச்சரியப்படுவாள். ஆனால் எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாய் இருக்கிறது. ஏனெனில் நான் அவளுடைய அம்மா என்றார்.

நம் வாழ்வில் சில காரியங்கள் நம்பமுடியாத ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. எனது சதை உண்மையான உணவு எனது இரத்தம் உண்மையான பானம் என்று இயேசு சொன்னது யூதர்களுக்கு நம்பமுடியாத ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் அவருடைய சதையும் இரத்தமும் ஓர் அடையாளத்தைத் தருகின்றன. இவ்வாறு, இயேசு தமது உடலையும் இரத்தத்தையும் நற்கருணை எனும் அருள்சாதனமாகச் சித்தரிக்கிறார். எனவே இது யூதர்களுக்குப் புரிந்துகொள்ளமுடியாத ஆச்சரியத்தை அளித்தது. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது நமக்கு நம்புகிற ஆச்சரியம், அற்புதம். இது விண்ணினின்று இறங்கிவந்த உணவு, மன்னாவை உண்டவர் இறந்தனர். இதை உண்ணும் நாம் இறப்பதில்லை மாறாக, இயேசுவோடும் தந்தையோடும் இணைந்து விடுதலையும் வாழ்வும் பெறுவோம்.



ஐந்து அப்பங்களை பலுகச் செய்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்த பிறகு, நிலைவாழ்வு தரும் உணவைப் பற்றி இயேசு பேசுவதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. இறைவனால் வாக்களிக்கப்பட்ட நாட்டைநோக்கிச் செல்லும் பாதையில், இஸ்ரயேல் மக்களுக்கு வானிலிருந்து மன்னா எனும் உணவு வழங்கப்பட்டதை நாம் அறிந்திருக்கின்றோம். தன்னிடம் வந்த பெருந்திரளான மக்களுக்கு மன்னாவைத் தாண்டி இன்று முடிவற்ற உணவு தானே என்பதை இயேசு எடுத்துரைக்கின்றார். நிலையாக நிறைவு தரும் விண்ணக உணவாகிய தன்னை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறார். யூதமக்கள்; பாலைநிலப் பயணத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை அடையும் வரை அவர்களுக்கு மன்னா வாழ்வளித்தது. இப்பொழுது இயேசு, விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழ்வளிக்கும் உணவாகிய தன்னைப் பற்றி பேசுகிறார். அவரே நிலைவாழ்வு தரும் உணவு, தந்தையின் அன்புக்குரிய அவரில் மனிதரின் வாழ்வு முழுமையைக் காண்கிறது. இங்குகடவுளின் வாழ்வில் மனிதருக்கு அறிமுகம் கிடைக்கிறது.

கடவுளின் திருவுளத்தை அறிந்து, வாழ்வின் சரியான பாதையை கண்டுகொள்ள உதவும் மோசேயின் சட்டத்தில் இருந்த கடவுளின் வார்த்தையே வானிலிருந்து இறங்கி வந்த உண்மையான உணவு என்பது யூதர்களின் எண்ணம். இப்பொழுது இயேசு, விண்ணக உணவாக வருகின்றார். தானே கடவுளின் வார்த்தை, மனித உடலெடுத்த வார்த்தை என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். இன்றைய நற்செய்தி பகுதியில் காணப்படும் யூதர்களைப் போல இயேசுவின் இறைத்தன்மையில் சந்தேகம் கொள்வது கடவுளின் செயலை எதிர்ப்பதாகும். மனித தோற்றங்களைத் தாண்டிச் சென்று, மனித உடலெடுத்த கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுக்கிறார்கள். புனித அகுஸ்தீன் இவ்வாறு விளக்குகிறார்: அவர்கள் அந்த விண்ணக உணவில் இருந்து தூரமாக இருந்தார்கள், அவர்களால் அதற்கான பசியை உணரமுடிய வில்லை. அவர்களது இதயத்தின் வாயில் நோய் உள்ளது... உண்மையில், இந்த உணவு மனிதனின் உள்ளார்ந்த பசியைப் போக்கும்.

உண்மையாகவே நாம் கடவுளின் வார்த்தைக்கானப் பசியை உணர்கிறோமா என்று நம்மையே நாம் கேட்க வேண்டும். அகுஸ்தீன் மேலும் கூறுகிறார்: வாழும் உணவாகிய இயேசுவை உண்ண வேண்டும். அவரை உண்பதன் மூலம், காண முடியாத மறுபிறப்பை அடைந்து, புதிய மனிதராக மாற முடியும். விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழும் உணவாகிய இயேசுவால் நாம் ஆழமாகப் புதுப்பிக்கப்படுவோம். நற்கருணை, மனிதனை இயேசுவின் இறைவாழ்வில் ஐக்கியமாக்குகிறது. அவன் இயேசுவின் அடிச்சுவடுகளை மிக நெருக்கமாகப் பின்செல்லவும் பிறருக்குக் கொடையாக மாறவும் உதவுகிறது. இது விண்ணக அரசை நமக்குத் திறந்து வைக்கின்றது. மனிதருக்கு முழு நிறைவான வாழ்வை வழங்கவும், மனிதரை இறைவாழ்வுக்கு அறிமுகம் செய்யவும் இறைமகன் வானிலிருந்து உணவாக மண்ணுலகுக்கு இறங்கிவந்தார். நாம் இயேசுவிற்;காகவும் பிறருக்காகவும் வாழ்வதற்கு நற்கருணை உதவுகிறது. இந்த மாற்றம் தற்போதைய உலகுக்கு மிகவும் தேவைப்படுகிறது. மாறுவோம் மனுவுருவான இறைவார்த்தையை எம் வாழ்வாக்குவோம்.

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff