Saturday, August 25, 2012

நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா? இயேசு பதிலை எதிர்பார்த்த இந்தக் கேள்விக்கு விடைபகிர்வோம்.


26.08.2012 

ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசுவின் சீடரில் பலரும் இயேசுவின் போதனைகள் சிலவற்றைப் பற்றி, குறிப்பாக தமது உடலை உணவாகத் தருவது பற்றி இயேசு குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம் என்று பேசிக் கொண்டது ஒரு வியப்பான தகவல்தான். தமது போதனையை இயேசு இன்னும் அழுத்தத்துடன் எடுத்துரைத்தபோது, அந்தப் போதனையை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் பிரிந்து சென்றனர் என்பதை “அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர்” என்று என்பதைத் இன்றைய நற்செய்தி வாசகம்; பதிவு செய்திருக்கிறது.

நற்கருணை என்னும் அருள்சாதனத்தை நம்பாமல், ஏற்றுக்கொள்ளாமல் அதன் காரணமாகத் திருச்சபையை விட்டுப் பிரிந்து செல்லும் ஏராளமான கத்தோலிக்கர்களின் முதல் முன்னோடிகள் இவர்களே என்றும் கூறிவிடலாம். இவர்களின் பிரிவு குறித்து, இயேசு கவலைப்படவில்லை, தமது போதனையை மாற்றிக்கொள்ளவுமில்லை. நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா? இயேசு தன் சீடர்களிடம் கேட்ட இந்தக் கேள்வியை இன்று நம்மை நோக்கிக் கேட்பதாக எடுத்துக் கொண்டால் தற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக இறைவனைவிட்டு, ஆலய வழிபாடுகளைவிட்டு, இறைமதிப்பீடுகளை விட்டுப் எம்முள்ளிருந்து பிரிந்துபோகும் மனிதரின் எண்ணிக்கை பெருகி வருகிறதை நாம் காணலாம். இறைபக்தி இல்லாமல், செபம் இல்லாமல், இறைவழிபாட்டில் பங்கேற்கும் இளையோரின் எண்ணிக்கை குறைவதை காணலாம்.  உலக நாட்டங்களில் ஈடுபட்டு வாழும் மனிதர் அனைவரும் இயேசுவை விட்டுப் பிரிந்து செல்கின்றனர் என்றுதான் இன்று கூறத்தோன்றுகின்றது. எனவே எம்மைப்பார்த்து இயேசு கேட்கிறார்: நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?” எனவே நாம் ஆண்டவரையே என்றும் பற்றிக்கொள்வோம் “நானும் என் வீட்டாருமோ, ஆண்டரையே என்றும் வழிபடுவோம்” என்று யோசுவா துணிவுடன் அறிக்கையிட்டதுபோல, நாமும் ஆண்டவரையே பற்றிக்கொண்டு விடைபகர்வோம்.

நாம் வாழும் இக்காலத்தில் கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள்  வாழ்வது எளிதான காரியம் அல்ல, இது, கிறிஸ்துவின் காலத்திலும் எளிதாக இருக்கவில்லை. கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றும் பொழுது எதிர்படும் இடையூறுகளிலிருந்து நீந்திச் செல்லுமாறு இயேசு தம்மைப் பின்செல்லுவோரைக் கேட்கின்றார். இயேசு தன்சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள் என்று உறுதியாக  உரைத்ததைக் கேட்டு அவரைப் பின்சென்ற பலர் அவரை விட்டு விலகிச் சென்றதை படம்பிடித்துகாட்டுனின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

எனினும் இயேசு தமது போதனைகளை கைவிடவில்லை;. உண்மையில் இயேசு தமது பன்னிரண்டு திருத்தூதர்கள் பக்கம் திரும்பி நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா என்று கேட்டார். பதிலை எதிர்பார்த்த இந்தக் கேள்வி இயேசுவின் பன்னிரு அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு காலத்தின் விசுவாசிகளுக்கும் முன்வைக்கப்படுகிறது.  இன்றும்கூட கிறிஸ்தவ விசுவாசத்தின் புரிந்து கொள்ள முடியாத உண்மைகளால் பலர் துர்மாதிரிகை அடைகிறார்கள். இயேசுவின் போதனை கடினமாகத் தோன்றுகிறது, செயல்படுத்துவதற்கு அது மிகவும் கடினமாக இருக்கின்றது என்பது, கிறிஸ்துவைக் கைவிடுபவர்களும் அவரது போதனையைப் புறக்கணிக்கிறவர்களும் சொல்வது. இவர்கள் காலத்தின் அமைப்புகளுக்கு ஏற்ப வார்த்தையை வடிவமைத்து அவற்றின் அர்த்தத்தையும் மதிப்பீட்டையும் சிதைப்பவர்கள். இயேசு தம்மைப் பின்செல்லுவோரின் மேலோட்டமான வாழ்க்கையில் திருப்தி கொள்ளவில்லை, மாறாக அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அவரின் சிந்தனைகளிலும் அவரது திட்டத்திலும் பங்கு கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். இந்த மாதிரியான வாழ்வே நமது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பும், நம் இருப்புக்கு முழு அர்த்தத்தைக் கொடுக்கும், எனினும் இயேசுவைப் பின்செல்லும் இவ்வாழ்வு இன்னல்களையும் சுயமறுப்புக்களையும் கொண்டு வரும், ஏனெனில் இதில் அடிக்கடி தற்போதைய உலகின் போக்கிற்கு எதிராகச் செல்ல வேண்டியிருக்கும். 

ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன என்று இயேசுவிடம் அறிக்கையிட்ட தூய பேதுருவின் பதிலையும் கருத்தில் கொள்ளவேண்டும். நமது மனிதப் பலவீனங்களைப் புரிந்து கொள்ளும் அதேவேளை, தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைத்து பேதுரு போல நாமும் இயேசுவிடம் சொல்வோம். ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம். கடினமானதாக இருந்தாலும், உமது வார்த்தைகள்தான் எங்களை வாழவைக்கும் என்று கூறி அவரிடமே அடிபணிவோம். 

No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff