Wednesday, February 6, 2013

சவுதி அரேபியாவில் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ரிசானா நஃபீக் என்ற இளம்பெண்ணிற்காக இறைவனிடம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட செபித்தார்


செய்தி: ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

திருத்தந்தை 16ம் பெனடிக்ட தமது மாசிமாதச் செபக் கருத்தில் அண்மையில் சவுதி அரேபியாவில் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ரிசானா நஃபீக் என்னும் இளம்பெண்ணிற்காக செபித்தார். அத்துடன் எம் அனைவரையும் அவருக்காக செபிக்கும் படி வேண்டியும் உள்ளார்;;.  அவர் தொடர்ந்தும்  செபிக்கும் போது போர்ப் பகுதிகள் அல்லது ஆயுதம் தாங்கிய மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அமைதியின் தூதுவர்களாக மாறுவதற்கு அவர்களுக்கு உதவிகள் வேண்டும் என்று வேண்டினார். குடியேற்றதாரக் குடும்பங்கள், உள்நாட்டு மோதல்கள், வறுமை காரணமாக வேறு நாடுகளில் பிழைப்பு தேடிக் குடியேறியிருப்பவர்கள், சிறப்பாக, தங்களது கணவன், பிள்ளைகளைச் சொந்த ஊர்களில் விட்டுவிட்டு, வெளிநாடுகளில் வீட்டுவேலைகள் செய்யும் தாய்மார்களுக்காகச் செபித்தார். இவர்கள் வீட்டுவேலைசெய்யும் குடும்பங்களில் பலவகையான, வெளிப்படையாகச் சொல்ல முடியாத துன்பங்களை எதிர்கொள்கிறார்கள். ஓய்வின்றி வேலை, தனிமை உட்பட பல கஸ்;டங்களை தினம் அனுபவிக்கின்றார்கள். அண்மையில் சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த ரிசானா நஃபீக் என்ற இளம்பெண் பொது இடத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது உலகம் அறிந்த செய்தி. எனவே அப்பெண்ணிற்காக நாம் அனைவரும் இறைவனிடம் பிராத்திப்போம் என கேட்டுக்கொண்டார்.
இன்று உலகில் 19 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளிநாடுகளில் வாழ்கின்றனர். தங்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் பாதுகாப்பதற்குத் தாய்மார் எதிர்கொள்ளும் துன்பங்கள் கணக்கிலடங்காது நீளுகின்றன. எனவே இம்மாதத்தில் குடியேற்றதாரத் தாய்மார்களுக்காகச் செபிப்போம். எம் தாயும் தந்தையுமான பரம்பொருளே இறைவா, நீர் அநாதைகளுக்குத் தஞ்சம். நோயாளிகளின் மருத்துவர். வீடற்றவர்களுக்குப் புகலிடம். பசியால் வாடுவோருக்குப் பசிதீர்க்கும் உணவு. இறைவா, உம் பிள்ளைகளின் கவலைகளையும் கஸ்டங்களையும் போக்கியருளும். போர் இடம்பெறும் சூழல்களிலும், ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்றுவரும் இடங்களிலும் வாழும் மக்களை இவ்வேளையில் நினைக்கின்றோம். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பசியாலும் நோயாலும் தினம் தினம் சொத்து வாழும் மக்களை நினைவுகூரும். சொந்த ஊரை, உறவகளை விட்டுவிட்டு, வெளிநாடுகளில் வீட்டுவேலைகள் செய்யும் தாய்மார்களுக்காக வேண்டுவோம். எம் நல்ல தந்தையே, இவர்கள் தங்களின் கசப்பான அனுபவங்களிலிருந்து அமைதியின் மேன்மையை உணரச் செய்யும். இவர்களை அமைதியின் தூதுவர்களாக மாற்றும் என செபித்தார்.
உலகில் போர்கள் நீங்கி அமைதி நிலவச் செபிப்போம். உலகில் ஆயுதங்கள் களையப்படட்டும். அணுஉலைகள் மூடப்படட்டும். மக்கள் மத்தியில் சண்டைகள் நீங்கி அமைதி ஏற்படட்டும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், பிணக்குகள் நீங்கி சமாதானம் ஏற்படவும் செபிப்போம் என அனைவரையும் கேட்டுக்கொண்டார்.


கள்ளம் கபடமற்றவர்களாக கடவுளைத் தேடுவோம்

10.02.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

முன்பு ஒரு முறை கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது: 90 வயதைத் தாண்டிய பேதுரு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த சமயத்தில் லொத்தரில் அவருக்கு 10 கோடி  ரூபாய் பரிசு விழுந்ததாகச் செய்தி வருகிறது. அந்தச் செய்தியை அவரிடம் எப்படி சொல்வதென்று குடும்பத்தினர் திகைத்தனர். அந்தச் செய்தியைக் கேட்டு பேதுரு மயங்கி அவருக்கு ஏதாவது ஆகிவிடக் கூடாதுதென்ற கரிசனை. பக்குவமாக பேதுருவிற்கு அந்தச் செய்தியைச் சொல்ல வயதில் முதிர்ந்த தமது பங்கு தந்தையை கேட்டுக் கொண்டனர். பங்கு தந்தை,குடும்பத்தினர் சுற்றி இருக்க பேதுருவிடம்; பல விடயங்களைப் பேசுகிறார். லொத்தர் ரிக்கற்றுக்களைப் பற்றி, அதில் பலருக்குக் கிடைக்கும் அதிஸ்டங்களைப் பற்றி இருவரும் கதைக்கத் தொடங்கினர். குதைத்துக்கொண்டிருக்கும் போது பங்கு தந்தை பேதுருவிடம், சரி, உங்களுக்கு திடீரென லொத்தரில் 10 கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கிறார். படுத்திருந்த பேதுரு சுற்றிலும் பார்க்கிறார். பிறகு, ஒரு புன்சிரிப்புடன் பேதுரு சும்மா சொல்லவேண்டாம் பாதர் என்று சொல்லிவிட்டு மற்ற விடயங்களைப் கதைக்க ஆரம்பிக்கிறார். பங்கு தந்தை விடுவதாகவில்லை. ஒரு பேச்சுக்கு அப்படி நினைப்போமே. உங்களுக்கு லொத்தரில் பத்து கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?" என்று மீண்டும் கேட்கிறார். கொஞ்ச நேர அமைதிக்கு பின், பேதுரு அதில் ஒரு 5 கோடியை பங்கு ஆலயத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் என்றார். இதைக் கேட்கும் பங்கு தந்தை மயங்கி விழுகிறார். மயக்கம் தெளிந்தெழுந்ததும் பாதரிடம் ஏன் பாதர் விழுந்தநீர்கள் என்று பேதுரு கேட்டார். இன்று எமது ஆலயங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு புனரமைப்பு தேவையில் இருக்கின்றனவே அதற்கு உதவ யாரும் வருவதில்லை. உமது தாராள தன்மையை எண்ணியிபோது அதிர்ச்சியில் விழுந்துவிட்டேன் என்றார் பாதர். 

பரிசுகள், அதுவும் எதிபாராத விதமாக கிடைக்கும் பரிசுகள் எதையும் செய்து விடும் என்று கூறுவர்  இயேசுவின் சீடர்களுக்கு, அவர்கள் சீடர்களாவதற்கு முன்னால், இப்படி பரிசு மழையில் மூழ்கிய ஒரு அனுபவம் ஏற்பட்டது. மீன்கள் வலைகள் கிழியுமளவிற்கு கிடைப்பதை கண்கின்றார் சீமோன் போதுரு.  அவர் மயங்கி விழவில்லை நான் பாவி இயேசுவே என இயேசுவின் கால்களில் விழுகிறார். சீமோன் பேதுருவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான ஒரு நிகழ்வாக நாம் இதை பார்கின்றோம். இது அவரது வாழ்வையே புரட்டிப் போட்ட ஒரு நிகழ்வு என்றும் கூறலாம்.

ஆழத்தில் வலைகளைப் போடுங்கள் என்று இயேசு அவரிடம் சொன்னார். மீன்பிடிக்கும் தொழிலில் பல ஆண்டுகள் ஊறி, அந்தத் தொழிலில் தேர்ந்தவர்கள் அவர்கள். அவர்களது திறமையையும், அனுபவத்தையும் கேலி செய்வது போல் இருந்தது இயேசுவின் கட்டளை. சீமோன் நினைத்திருந்தால், இயேசுவிடம் இப்படி(கற்பனை) சொல்லியிருக்கலாம். ஐயா, மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்ததால், படகில் அமர்ந்து போதிக்க நினைத்தீர்கள். நீங்கள் சொன்னதைக் கேட்டோம். நீர் வந்தது மக்களுக்குப் போதிக்கவே. அதை முடித்து விட்டீர். இந்தப் பகல் நேரத்தில் நாங்கள் வலை வீசினால், எம்பகுதியில் எங்களை பார்ப்பவர்கள் பைத்தியக்காரர்கள் என்பார்கள். மீன் பிடிப்பு பற்றி நன்கு அறிந்துகொண்டபின் எங்களை அதிகாரம் செய்யலாம். இப்போதைக்கு, நீர் உம் வழியே போகலாம்."

மாறாக, சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் என்றார். கள்ளம் கபடமற்ற சீமோன் பேதுரு தன் மனதில் பட்டதைச் சொல்கிறார். நல்ல பாடங்கள் இந்தக் கூற்றில் புதைந்துள்ளன. உண்மையை எந்த வித பூச்சும் இல்லாமல் சொல்வது. ஒருவரது பின்னணியைப் பார்ப்பதிலும், அவர் சொல்வதற்கு மதிப்பு கொடுப்பது. மீன்பிடிப்பைக் கண்டதும், சீமோன் பேதுருவின் செயல் நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. உணர்ச்சிகள் மேலிடும்போது, வார்த்தைகள் வருவது அபூர்வம். சீமோன் பேதுருவழற்கும் அப்படி ஓர் உணர்வு மேலோங்கியதால் நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் என்று பேசியிருக்கலாம். உண்மையை உரைத்தவருக்கு உன்னத பரிசு உலகத் திருச்சபையின் முதல் திருத்தந்தை ஆக்கப்படுகின்றார்.

ஆழத்தில் வலைகளைப் போடுங்கள் என்று இயேசு அவரிடம் சொன்னபோது, சீமோன் பேதுருவின் பதில் மொழி: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது.  நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய அனுபவங்கள் நிச்சயம் உண்டு. பாடுபட்டுப் படித்தும் தேர்வில் தோல்வி அடைவோர், பாடுபட்டு வேலை தேடியும் வேலை இன்றித் தவிப்போர், பாடுபட்டுப் பணம் சேர்த்தும், அதை ஒரே நாளில் இழந்துவிடுவோர், பாடுபட்டு ஏற்பாடுகள் செய்து பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைத்தும், அவர்கள் மகிழ்ச்சியின்றி வாழ்வதைக் கண்டு கலங்கும் பெற்றோர், பல மருத்துவர்களிடம் சென்றும் நலம் பெறாதோர் எனப் பல தரப்பட்ட மக்கள் சீமோன் பேதுருவின் வரிசையில் நிற்கின்றனர்.

அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் சீமோன்  பேதுருவின் பதில் மொழியிலுள்ள இரண்டாம் பகுதி எடுத்துச் சொல்கிறது: ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன். அதாவது, இறையாற்றலில், இறைவனின் பேரன்பில், இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு செயல்படுவது. அவ்வாறு, சொல்லி, செயல்பட்ட உடனே பேதுருவின் வாழ்வில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. வலைகள் கிழியும் அளவுக்கு மீன்பாடு கிடைத்தது. மனிதர் விரும்புவதாலோ, உழைப்பதாலோ எதுவும் ஆவதில்லை. கடவுள் இரக்கம் காட்டுவதாலேயே எல்லாம் ஆகிறது என்னும் இறைமொழியை நினைவில் கொள்வோம். அத்துடன் விசுவாசம் என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் அர்ப்பணம் மட்டுமல்ல, மாறாக கடவுளைத் தேடும் அனைவர் உள்ளத்திலும் விதைக்கப்பட்டுள்ள ஓர் ஆவல் என்று அறிந்து வாழ்வோம்.

Sunday, January 27, 2013

உண்மையை என்றும் உரைப்பவர்களில் நாமும் ஒருவராவோம்


03.02.2013 
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று இயேசு கூறும் இறைவார்த்தை பகுதி இன்று நற்செய்தியில் நமக்கு தரப்படுகின்றது. 32ஆண்டுகளுக்கு முன், எல் சால்வதோர் நாட்டில் சான் சால்வதோர் நகரில் பேராயராய் இருந்த ஒஸ்கார் ரொமேரோ 1980ஆம்ஆண்டு மார்ச் 24 காலை7 மணியளவில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, படை வீரன் ஒருவன் குறிவைத்து சுட்டான். ஒரே ஒரு குண்டு. பேராயரின் இதயத்தில் பாய்ந்தது. திருப்பலியை நிறைவு செய்யாமலேயே, பீடத்தின் மீது சாய்ந்து பலியானார் அவர். ஒஸ்கார் ரொமேரோ இறந்த பத்து ஆண்டுகளில் திருத்தந்தையாக இருந்த இரண்டாம் ஜான் போல்; ஒஸ்கார் ரொமேரோ இறைவனின் அடியார் என்ற நிலைக்கு உயர்த்தினார்

ஒஸ்கார் ரொமேரோ பேராயர் கொலைசெய்யப்படுவதற்கு என்ன காரணம்? என கூர்ந்துநோக்கினால் கொலை செய்யப்படுவதற்கு முந்திய நாள், பேராயர் ஒரு பொதுக் கூட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வண்ணம் சுற்றி வளைத்து ஆயுதம் தாங்கி நின்றிருந்த வீரர்களைப் பார்த்து: சகோதரர்களே, இங்கு நீங்கள் சூழ்ந்திருக்கும்  இந்த மக்கள் மத்தியில் தான் நீங்கள் பிறந்து வளர்ந்தீர்கள். இவர்கள் உங்கள் சகோதரர்கள். உங்கள் சகோதரர்களையே நீங்கள் கொன்று வருகிறீர்கள். மக்களைக் கொல்லும் படி உங்களுக்குத் தரப்படும் எந்த ஆணையும் இறைவன் தந்துள்ள 'கொலை செய்யாதே' என்ற அந்த கட்டளைக்கு உட்பட்டதே. இறை கட்டளையை மீறி உங்களுக்குத் தரப்படும் நெறியற்ற ஆணைகளுக்கு நீங்கள் கீழ்படியத் தேவையில்லை. இந்த நெறியற்ற ஆணைகளுக்கு கீழ்படிவதைவிட, உங்கள் மன சாட்சிக்குக் கீழ்படியுங்கள். இந்த அராஜகத்தைப் பார்த்துக் கொண்டு திருச்சபை மௌனமாய் இராது. கடவுளின் பெயரால், தினமும் விண்ணை நோக்கிக் குரல் எழுப்பும் இந்த மக்கள் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்கள் ஆயர் என்ற முறையில் ஆணை இடுகிறேன், உங்கள் அராஜகத்தை நிறுத்துங்கள். என்று கூறினார்.

ஆயர் எடுத்துரைத்த உண்மைகள் மிகவும் கசந்திருக்க வேண்டும். அதனால், அடுத்த நாள் காலை அந்தப் படைவீரர்களில் ஒருவன் ஆயரது உயிரைப் பறித்தான். இன்று உலக அரங்கில் பல்வேறு நிலைகளில் அவரை உண்மைக்காக, நீதிக்காக உயிர் துறந்த ஒரு தலைவராகப் போற்றுகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் மனித சமுதாயத்தை நல் வழி நடத்திய பல தலைவர்களில் ஒருவராக பேராயர் ரொமேரோவைக் கருதுகின்றனர். பேராயர் ரொமேரோ ஓர் இறைவாக்கினர். இறைவனின் வார்த்தையை, அது கூறும் உண்மைகளைக் கலப்படமில்லாமல், எந்த வித அலங்காரமும் இல்லாமல் எடுத்துச் சொன்னவர். இறைவாக்கினர்கள் சராசரி மனிதர்கள் அல்ல. தனித்து நின்று, இறைவனின் வார்த்தையைத் தைரியமாக முழங்குபவர்கள். ஒஸ்கார் ரொமேரோ 80களில் இறைவார்த்தையை முழங்கினார். சுடப்பட்டு இறந்தார். மார்ட்டின் லூத்தர் கிங் 60களில் அமெரிக்காவில் இறைவாக்கை எடுத்துரைத்தார். குண்டடிபட்டு இறந்தார். இறைவாக்கினர் பேசுவது பொதுவாக எல்லாரையும் சங்கடப்படுத்தும் என்பதால், அவருக்கு வரவேற்பு இருக்காது. இந்த எண்ணத்தை இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகச் சொல்கிறார்.

இயேசு தான் வளர்ந்த ஊரான நாசரேத்துக்கு ஒரு சில உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தார். வளர்ந்த ஊர் என்பதால், சிறு வயதிலிருந்து இயேசு அங்கு நிகழ்ந்த பல காரியங்களைப் பார்த்து, உணர்ந்து வந்தவர். அவர்கள் எல்லாருக்குமே தெரிந்த பல நெருக்கமான, அதேநேரம் சங்கடமான, உண்மைகளைச் சொன்னார் இயேசு.

உண்மை உள்ளத்தை ஊடுருவிய போது, பலர் மனம் திருந்துகிறார். ஆனால், உண்மைகள் உரைக்கப்பட்ட பல நேரங்களில் இவ்வாறு நன்மைகள் நடப்பதில்லை. பெரும்பாலும் உண்மைகள் கோபத் தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளன. பல இடங்களில் உண்மைகள் சொல்லப்பட்ட போது, அந்த உண்மைகளை ஊமையாக்க, உண்மை சொன்னவர்களை ஊமையாக்க, அவர்கள் உயிரைப் பறித்த சம்பவங்கள் பல உண்டு. இன்று நற்செய்தியிலும் இயேசுவுக்கு அந்த நிலைதான். இயேசு சொன்ன உண்மைகளைக் கேட்க முடியாமல், அவர்கள் கோபம் கொலை வெறியாகிறது. இந்த முறை இயேசு தப்பித்துக் கொள்கிறார். அவர் நம்மைப் போல் ஒரு சராசரி மனிதராய் இருந்திருந்தால், இந்த ஒரு அனுபவம் எனக்குப் போதும். நான் ஏன் இந்த ஊருக்கு உண்மைகளைச் சொல்லி ஏச்சும், பேச்சும் பெற வேண்டும்? விட்டிருந்தால், இவர்கள் நம்மை இன்று கொன்றிருப்பார்கள். தேவையில்லை இவர்கள் சகவாசம் என்று இயேசு ஒதுங்கி இருக்கலாம். ஆனால், அன்று இறைவாக்குரைக்கத் தொடங்கிய அவரது பணி, கல்வாரி பலியில் தான் முடிந்தது.

மனித வரலாற்றில் பல்லாயிரம் இறைவாக்கினர்கள் இதையேச் செய்தனர். உண்மையைச் சொன்னார்கள், உயிரைத் தந்தார்கள். உண்மைக்கும், உயிர்பலிக்கும் அப்படி ஒரு நெருங்கிய உறவு. உண்மை கசக்கும், உண்மை எரிக்கும், உண்மை சுடும் என்று உண்மையின் பல விளைவுகளைச் சொல்கிறோம். உண்மை பல வேளைகளில் நம்மைச்  சங்கடப்படுத்தும். உலகத்தின் கண்களைக் கட்டிவிட்டதாய் நினைத்துக் கொண்டு, நம் கண்களை நாமே கட்டிக்கொண்டு தவறுகள் செய்யும்போது, உண்மை வந்து நம் கண் கட்டை அவிழ்க்கும். கட்டவிழ்க்கப்பட்டதும் அந்த ஒளியை, உண்மையைக் காண முடியாமல் நம் கண்கள் கூசி நிற்கும். உண்மை நம்மைத் தோலுரித்துக் காட்டும். உண்மையின் பின் விளைவுகளை இப்படி நாம் பட்டியலிடும் போது, ஒரு முக்கியமான அம்சத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும். உண்மை விடுவிக்கும். உண்மை மீட்பைத்  தரும். எனவே உண்மையின் ஒளியில் எம் வாழ்வை மீட்பின் பாதையில் நகர்த்துவோம்



03.02.2013 cz;ikia vd;Wk; ciug;gth;fspy; ehKk; xUtuhNthk; 
k.gpuhd;rp];f; - fj;Njhypf;f Rje;jpu gj;jpupifahsh;
ehd; cWjpahf cq;fSf;Fr; nrhy;fpNwd;. ,iwthf;fpdu; vtUk; jk; nrhe;j Cupy; Vw;Wf; nfhs;sg;gLtjpy;iy vd;W ,NaR $Wk; ,iwthh;j;ij gFjp ,d;W ew;nra;jpapy; ekf;F jug;gLfpd;wJ. 32Mz;LfSf;F Kd;> vy; rhy;tNjhu; ehl;by; rhd; rhy;tNjhu; efupy; Nguhauha; ,Ue;j x];fhu; nuhNkNuh 1980Mk;Mz;L khu;r; 24 fhiy7 kzpastpy; jpUg;gyp epiwNtw;wpf; nfhz;bUf;Fk; NghJ> gil tPud; xUtd; Fwpitj;J Rl;lhd;. xNu xU Fz;L. Nguhaupd; ,jaj;jpy; gha;e;jJ. jpUg;gypia epiwT nra;ahkNyNa> gPlj;jpd; kPJ rha;e;J gypahdhu; mth;. x];fhu; nuhNkNuh ,we;j gj;J Mz;Lfspy; jpUj;je;ijahf ,Ue;j ,uz;lhk; [hd; Nghy;; x];fhu; nuhNkNuh ,iwtdpd; mbahu; vd;w epiyf;F cau;j;jpdhu;

x];fhu; nuhNkNuh Nguhau; nfhiynra;ag;gLtjw;F vd;d fhuzk;? vd $h;e;JNehf;fpdhy; nfhiy nra;ag;gLtjw;F Ke;jpa ehs;> Nguhau; xU nghJf; $l;lj;jpy; kf;fis mr;RWj;Jk; tz;zk; Rw;wp tisj;J MAjk; jhq;fp epd;wpUe;j tPuu;fisg; ghu;j;J: rNfhjuu;fNs> ,q;F ePq;fs; R+o;e;jpUf;Fk;  ,e;j kf;fs; kj;jpapy; jhd; ePq;fs; gpwe;J tsu;e;jPu;fs;. ,tu;fs; cq;fs; rNfhjuu;fs;. cq;fs; rNfhjuu;fisNa ePq;fs; nfhd;W tUfpwPu;fs;. kf;fisf; nfhy;Yk; gb cq;fSf;Fj; jug;gLk; ve;j MizAk; ,iwtd; je;Js;s 'nfhiy nra;ahNj' vd;w me;j fl;lisf;F cl;gl;lNj. ,iw fl;lisia kPwp cq;fSf;Fj; jug;gLk; newpaw;w MizfSf;F ePq;fs; fPo;gbaj; Njitapy;iy. ,e;j newpaw;w MizfSf;F fPo;gbtijtpl> cq;fs; kd rhl;rpf;Ff; fPo;gbAq;fs;. ,e;j muh[fj;ijg; ghu;j;Jf; nfhz;L jpUr;rig nksdkha; ,uhJ. flTspd; ngauhy;> jpdKk; tpz;iz Nehf;fpf; Fuy; vOg;Gk; ,e;j kf;fs; ngauhy; ehd; cq;fisf; nfQ;rpf; Nfl;fpNwd;> cq;fs; Mau; vd;w Kiwapy; Miz ,LfpNwd;> cq;fs; muh[fj;ij epWj;Jq;fs;. vd;W $wpdhh;.

Mau; vLj;Jiuj;j cz;ikfs; kpfTk; fre;jpUf;f Ntz;Lk;. mjdhy;> mLj;j ehs; fhiy me;jg; giltPuu;fspy; xUtd; MauJ capiug; gwpj;jhd;. ,d;W cyf muq;fpy; gy;NtW epiyfspy; mtiu cz;ikf;fhf> ePjpf;fhf capu; Jwe;j xU jiytuhfg; Nghw;Wfpd;wdu;. ,Ugjhk; E}w;whz;by; kdpj rKjhaj;ij ey; top elj;jpa gy jiytu;fspy; xUtuhf Nguhau; nuhNkNuhitf; fUJfpd;wdu;. Nguhau; nuhNkNuh Xu; ,iwthf;fpdu;. ,iwtdpd; thu;j;ijia> mJ $Wk; cz;ikfisf; fyg;glkpy;yhky;> ve;j tpj myq;fhuKk; ,y;yhky; vLj;Jr; nrhd;dtu;. ,iwthf;fpdu;fs; ruhrup kdpju;fs; my;y. jdpj;J epd;W> ,iwtdpd; thu;j;ijiaj; ijupakhf Koq;Fgtu;fs;. x];fhu; nuhNkNuh 80fspy; ,iwthu;j;ijia Koq;fpdhu;. Rlg;gl;L ,we;jhu;. khu;l;bd; Y}j;ju; fpq; 60fspy; mnkupf;fhtpy; ,iwthf;if vLj;Jiuj;jhu;. Fz;lbgl;L ,we;jhu;. ,iwthf;fpdu; NgRtJ nghJthf vy;yhiuAk; rq;flg;gLj;Jk; vd;gjhy;> mtUf;F tuNtw;G ,Uf;fhJ. ,e;j vz;zj;ij ,NaR ,d;iwa ew;nra;jpapy; njspthfr; nrhy;fpwhu;.

,NaR jhd; tsu;e;j Cuhd ehrNuj;Jf;F xU rpy cz;ikfisr; nrhy;y Muk;gpj;jhu;. tsu;e;j Cu; vd;gjhy;> rpW tajpypUe;J ,NaR mq;F epfo;e;j gy fhupaq;fisg; ghu;j;J> czu;e;J te;jtu;. mtu;fs; vy;yhUf;FNk njupe;j gy neUf;fkhd> mNjNeuk; rq;flkhd> cz;ikfisr; nrhd;dhu; ,NaR.

cz;ik cs;sj;ij CLUtpa NghJ> gyh; kdk; jpUe;Jfpwhu;. Mdhy;> cz;ikfs; ciuf;fg;gl;l gy Neuq;fspy; ,t;thW ed;ikfs; elg;gjpy;iy. ngUk;ghYk; cz;ikfs; Nfhgj; jPia nfhOe;Jtpl;L vupar; nra;Js;sd. gy ,lq;fspy; cz;ikfs; nrhy;yg;gl;l NghJ> me;j cz;ikfis Cikahf;f> cz;ik nrhd;dtu;fis Cikahf;f> mtu;fs; capiug; gwpj;j rk;gtq;fs; gy cz;L. ,d;W ew;nra;jpapYk; ,NaRTf;F me;j epiyjhd;. ,NaR nrhd;d cz;ikfisf; Nfl;f Kbahky;> mtu;fs; Nfhgk; nfhiy ntwpahfpwJ. ,e;j Kiw ,NaR jg;gpj;Jf; nfhs;fpwhu;. mtu; ek;ikg; Nghy; xU ruhrup kdpjuha; ,Ue;jpUe;jhy;> ,e;j xU mDgtk; vdf;Fg; NghJk;. ehd; Vd; ,e;j CUf;F cz;ikfisr; nrhy;yp Vr;Rk;> Ngr;Rk; ngw Ntz;Lk;? tpl;bUe;jhy;> ,tu;fs; ek;ik ,d;W nfhd;wpUg;ghu;fs;. Njitapy;iy ,tu;fs; rfthrk; vd;W ,NaR xJq;fp ,Uf;fyhk;. Mdhy;> md;W ,iwthf;Fiuf;fj; njhlq;fpa mtuJ gzp> fy;thup gypapy; jhd; Kbe;jJ.

kdpj tuyhw;wpy; gy;yhapuk; ,iwthf;fpdu;fs; ,ijNar; nra;jdu;. cz;ikiar; nrhd;dhu;fs;> capiuj; je;jhu;fs;. cz;ikf;Fk;> capu;gypf;Fk; mg;gb xU neUq;fpa cwT. cz;ik frf;Fk;> cz;ik vupf;Fk;> cz;ik RLk; vd;W cz;ikapd; gy tpisTfisr; nrhy;fpNwhk;. cz;ik gy Ntisfspy; ek;ikr;  rq;flg;gLj;Jk;. cyfj;jpd; fz;fisf; fl;btpl;ljha; epidj;Jf; nfhz;L> ek; fz;fis ehNk fl;bf;nfhz;L jtWfs; nra;Ak;NghJ> cz;ik te;J ek; fz; fl;il mtpo;f;Fk;. fl;ltpo;f;fg;gl;lJk; me;j xspia> cz;ikiaf; fhz Kbahky; ek; fz;fs; $rp epw;Fk;. cz;ik ek;ikj; NjhYupj;Jf; fhl;Lk;. cz;ikapd; gpd; tpisTfis ,g;gb ehk; gl;baypLk; NghJ> xU Kf;fpakhd mk;rj;ijAk; epidj;Jg;ghu;f;f Ntz;Lk;. cz;ik tpLtpf;Fk;. cz;ik kPl;igj;  jUk;. vdNt cz;ikapd; xspapy; vk; tho;it kPl;gpd; ghijapy; efh;j;JNthk;


Monday, January 21, 2013

வரலாற்றை நாமும் மாற்ற மனம்மாறுவோம்


25.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
கத்தோலிக்க திருச்சபை பவுலின் மனமாற்றத்தை இன்று கொண்டாடுகின்றது. பவுல் பென்யமின் குலத்தைச் சேர்ந்த யூதக் குடும்பத்தில் கி.பி-10ம் ஆண்டில் பிறந்தவர். இவரது யூதப் பெயர் சவுல். இவர் தர்சு நகரத்தை சேந்தவர். இவர் யூதச் சட்டம் நெறிமுறைகளையும் கற்றவர். அன்றைய உலகப் பொது மொழியாம் கிரேக்கம் கற்றவர். கமாலியேல் என்பவரிடம் கல்வி பயின்றார். இவர் கி.பி. 60இல் கைது செய்யப்பட்டு நீரோ மன்னன் காலத்தில் மரண தண்டனை பெற்றார் என மரபு கூறுகிறது. இவர் யூத கோட்பாடுகளையும் நன்கறிந்து பரிசேயர் சமயப் பிரிவின் உறுப்பினராகவும் இருந்தவர். இப்பிரிவினர் தொடக்க காலத்தில் கிறிஸ்துவர்களை துன்புறுத்தி வந்தனர் அவர்களுடன் சேர்ந்து இவரும் அவர்களை துன்புறுத்தி வந்தார்.

சவுலாகிய இவர் சீறி எழுந்து திருத்தொண்டு செய்யும் முடியப்ரை கல்லெறிந்து கொல்வதற்காகவும், இயேசுவினுடைய சீடர்களை கொன்று விடுவதாகவும் கிறிஸ்துவர்களை துன்புறுத்துவதாகவும் தமஸ்கு நகர் சென்றுகொண்டிருந்தார் அந்த வழியில் இவரை இயேசு தடுத்து ஆட்கொள்கின்றார். தீடீரென வானத்தில் ஓர் ஒளி அவரை ஆட்கொண்டது. அவர் தரையில் விழ சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகின்றாய்? என்று ஒர் குரல் தொடர்ந்து கேட்டது. அதற்கு அவர் ஆண்டவரே நீர் யார்? எனக் கேட்டார். இயேசு மறுமொழியாக நீ துன்புறுத்தும் இயேசு, நானே! உடனே நீ நகருக்குள் செல்! நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு அறிவிக்கப்படும் இவ்வாறு ஆண்டவரின் மீட்பு பணியை உலகெங்கும் பறைசாற்றிட தாம் தேர்ந்து கொள்ளப்பட்டார் என உணர்ந்து.  ஆண்டவரின்  கருவியாக செயல்ப்பட்டார். இயேசுவை யார் சிலுவையில் அறைந்து கொன்றார்களோ, அவர்களிடையே பிறந்த சவுல் பவுலாக மாற்றி இயேசுதான் உண்மை மெசியா  என்பதை அவர் நாவினாலே அறிக்கையிடும் விதமாக அமைந்தது அவரது இந்த மனமாற்றம். பவுலில் வாழ்க்கையின் இந்த நாள் வரலாற்றை மாற்றி அமைத்த நாள்.

தன்னை அருளால் ஆண்டவன் இயேசு நிரப்பியபோது மனமாற்றம் வந்தது நிஜத்தில் கால்பதித்த நெஞ்சத்தின் உயிர்த்தவிப்பு அது. கிறிஸ்தவர்களை எதிர்த்துச் சென்றார் சவுல். எதிர்ப்பட்ட கிறிஸ்துவை  சந்தித்து பவுலாகி இனி வாழ்பவன் நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் என்று கூறக்கூடிய நிலையை அடைகிறார். இதுதான் மனமாற்றம். மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்குத் திரும்புதல். பாறைக்குள் பதுங்கியிருந்த புதுமையைப் பக்குவமாய் தட்டி எடுக்கும் அதிசயம். முள்ளில் விழுந்த சேலையைக் கிழிபடாமல் எடுக்கும் கலை. எல்லாம் இழந்து இறைவனை மட்டும் பற்றிக்கொள்ளும் இரகசியம்.

நீ துன்புறுத்தும் நாசரேத்தூர் இயேசு நானே என்ற சொற்கள் பவுலுக்கு மட்டுமன்று நமக்கும் பாடமாய் அமைகின்றன. கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்டு அவரை நேசிப்போமாயின் எல்லோரையும் நாம் நேசிக்க வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு எதிராகவே சாதி, குலம், ஏழ்மை முதலிய அடிப்படையில் வேறுபாடுகள் காட்டுவோமாயின் கிறிஸ்துவையே எதிர்த்துப் போராடுகிறோம் என்பதை உணர்கிறோமா. மனமாற்றம் ஒருவரது வாழ்வின் உயர் குறிக்கோளை சரியான பாதையில் மாற்றி அமைக்கிறது. அதனால் பழக்கவழக்கத்திலும் பண்பாட்டிலும், நடத்தையிலும முழுமையான மாற்றம் உண்டாகிறது.

மனமாற்றம் அறிவு சார்ந்ததல்ல. கொள்கை சார்ந்ததல்ல. கோட்பாடுகளின் மாற்றம் அல்ல. உடலில், உடையில், உணவில் உள்ள மாற்றம் அல்ல. இயேசுவோடு உண்டான தனிப்பட்ட நெருக்கமான உறவில் விளைந்த ஒன்று. இந்த உறவை மறுக்க முடியாது. அதன் கவர்ச்சி எந்த ஈர்ப்பையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது. அப்படித்தான் பவுல் மாட்டிக்கொண்டார். இத்தகைய மனமாற்றம் எவருக்கும் எப்பொழுதும் எந்த நேரத்திலும் ஏற்படலாம். அதற்கென தகுதி, நேரம் காலம் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலை அவசியமில்லை. அந்தஸ்து, அறிவு முக்கியமில்லை.

பவுலின் மனமாற்றம், அவர் புதிய ஞானத்தை வழங்கி திருச்சட்டம், இறைவாக்கினர்கள் பற்றிய உண்மையை புதிய வழியில் விளக்கவும் தனது விண்ணக போதகரைப் பின்பற்றி அனைவருடனும் உரையாடல் நடத்தவும் உதவியது. இக்கால மனிதராகிய எமக்கு கிறிஸ்துவும் அவரது மீட்புச் செய்தியும் இன்னும் தேவைப்படுகின்றது. இக்கால மனிதராகிய நாம் எமது கதிக்குத் நாமே தலைவர் என்று உணர்வதால் எமது தீர்மானங்களிலும் செயல்களிலும் கடவுளை புறம்பாக்கிவிடுகின்றோம். புனித பவுலின் மனமாற்றம் அவர் உயிர்த்த கிறிஸ்துவை சந்தித்ததில் முதிர்ச்சியடைந்தது, அதுவே அவரது வாழ்வை அதிரடியாக மாற்றியது. பவுல் நற்செய்தியை நம்பியதால் மனம்மாறினார். பவுலது மற்றும் நமது மனமாற்றம், இறந்து உயிர்த்த இயேசுவை நம்புவதிலும், சுடர்விடும் அவரின் இறையருளுக்கு நம்மைத் திறந்து வைப்பதிலும் அடங்கியுள்ளது. கிறிஸ்தவர்களை துன்புறுத்திய தனக்காகவும் இயேசு இறந்தார், இப்பொழுது அவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்ற உண்மையைத் தனது மீட்பு சார்ந்துள்ளது என்பதை பவுல் புரிந்து கொண்டார். எனவே ஒருவரின் மனமாற்றம் என்பது, இயேசு சிலுவையில் எனக்காக இறந்தார் என்றும், உயிர்த்தெழுந்த அவர் என்னில் என்னோடு வாழ்கிறார் என்றும் நம்புவதாகும். இயேசுவின் உறவில் மகிழ்ந்து வாழவும், பிறரை வாழ்விக்கவும் நம்மையும் எதிர்பாராத வேளையில் இயேசு அழைக்கலாம். எனவே வரலாற்றை நாமும் மாற்ற மனம்மாறுவோம்

Thursday, January 17, 2013

பலனை எதிர்பார்க்காமல் செயல்படும் அன்பு உள்ளங்களுடன் நாமும் இணைந்துகொள்வோம்

20.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

 
கானாவூர் என்னுமிடத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. இயேசுவும் அங்கிருந்தார். அங்கு திருமண வைபவங்களில் விருந்தோடு நல்ல திராட்சை இரசமும் தாராளமாகப் பரிமாறப்படுவது வழக்கமாக இருந்தது. எதிர்பாராதவிதமாக அவ்விருந்தில் இரசம் தீடிரென திருமண விழாவில் தீர்ந்து போய்விட்டது. திருமண வீட்டார் குழம்பியிருக்க இNசுவின் தாய் அன்னைமரியா அவர்களின் அவமானத்தை போக்க தம் மகன் இயேசுவிடம் பரிந்துபேசினார். புதுமை நிகழ்த்தக்கூடிய நேரம் இன்னும் வரவில்லையென்று இயேசு தம் தாயிடம் கூறுகிறார். இருப்பினும் தாய் சொல்லைத் தட்டாத மைந்தன் இயேசு தண்ணீரை சுவைமிக்க திராட்சை ரசமாக மாற்றிக் கொடுத்தார். இதுவே இயேசுசெய்த முதல் புதுமை. இயேசுவின் புதுமைகள் நம்பிக்கைக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள். விசுவாசத்துக்கு அளிக்கப்பட்ட விருதுகள். இயேசுவின் புதுமைகள், உறுதியை வளர்க்கப் பவனி வந்த அவனியின் ஆச்சரியங்கள்.

“உங்களை எது அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது?” என்று ஒரு முறை ஒரு குருவானவரிடம் கேட்டபோது. “மனிதர்களே” என்று அவர் சொன்ன பதில் எம்மை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது: மனிதர்கள்; தங்கள் உடல்நலனைத் தியாகம் செய்து பணம் திரட்டுகிறார்கள். பின்னர் திரட்டிய பணத்தைத் தியாகம் செய்து உடல்நலனை மீண்டும் பெற முயற்சி செய்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் சுமைசுமந்து போகிறார்கள். அவர்கள்; நிகழ்காலத்தை அனுபவிக்காமல் போகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை. எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. இறக்கவே போவதில்லை என்ற கற்பனையில் மனிதர்கள் வாழ்கிறார்கள். இறுதியில் வாழாமலேயே இறந்து விடுகிறார்கள். மிகவும் ஆழமான வார்த்தைகள். இயேசுவிடம் வந்துவிட்டால், சுமைகளைத் தூக்கி குப்பையில் எறிந்து விடலாம். சுமைகளைச் சுமந்து, அல்லது, சுமைகளைப் பிறர் மீது சுமத்தி வாழ்ந்து வரும் நாம், நமது சுமைகள் தீர இயேசுவை நாடி வருவோம். அவர் நமது சுமைகளை நீக்குவார். சுகம் தருவார். புதுமைகள் நம்வாழ்விலும் நிகழும்.

நம்மில் சிலர் புதுமைகளை, அதுவும் நற்செய்தியில் வரும் புதுமைகளை நம்புவதுமில்லை. ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆனால் இன்றும் ஆலயங்களிலும் மருத்துவ மனைகளிலும் பலரின்; உருக்கமான நம்பிக்கை மிக்க வேண்டுதல் காரணமாகவும் கடவுள் புதுமைகளை நிகழ்த்தி வருவது கண்கூடாக இருப்பதாக பல அறிவியலார் தெரிவிக்கின்றனர். முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மன நிறைவைத் தருவதோடு வாழ்வில் மாற்றங்கள் பலவற்றையும் உருவாக்கும்.

தன்னலம் கருதாது திருமணவீட்டாரின் அவமானம் போக்க செயற்பட்ட அன்னை மரியாவை எண்ணிப்பார்க்கும்போது ஒரு கதை நினைவில் நிழலாடுகிறது: பக்தர் ஒவ்வொருநாளும் கடவுளையே நினைத்து, தியானித்து வாழ்ந்துவந்தார். அவர் முன் கடவுள் தோன்றி அவருக்கு ஏதாவது ஒரு வரம் தருவதகக் கூறினார். “இறைவா, உம்மைத் தியானிக்கும் ஒரு வரம் எனக்குப் போதும், வேறு வரம் எதுவும் வேண்டாம்” என்று பக்தர் கூறினார். ஏதாவது ஒரு வரம் கேள் என்று அவரைக் கடவுள் கட்டாயப்படுத்தினார். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், பக்தர் சொன்னார். கடவுளே, தரையில் விழும் என் நிழலைத் தொடும் அனைவரும் நலம் பெற வேண்டும். அனால், ஒரு நிபந்தனை. எப்போதெல்லாம் என் நிழல் எனக்குப் பின்னே விழுகிறதோ, அந்த நிழலைத் தொடும் மக்களே குணமாக வேண்டும். எனக்கு முன் விழும் நிழலுக்கு அந்த சக்தி இருக்கக் கூடாது." என்று வரம் கேட்கிறார்;.

தனது சக்தியால் நன்மை நடக்க வேண்டும், ஆனால், அது தனக்குத் தெரியாமல் நடக்க வேண்டும் என்பதில் அந்த பக்தர் மிகத் தெளிவாக இருந்தார் என்று கதையை கவனமாக ஆராய்தால் நமக்கு புலப்படும். தன்னலத்தை அறவே துறந்த பக்தனின் ஒட்டுமொத்த உருவாக, அவர்களுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக மரியா வாழ்ந்தார் என்பதற்கு கானாவூர் திருமண நிகழ்வு மற்றொரு எடுத்துக்காட்டு. அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தி தன் மகனிடம் இருப்பதை அவர் உணர்ந்திருந்தாலும், அந்த சக்தி மற்றவருக்கு மட்டுமே பயன்பட வேண்டுமேயொழிய, தன் நலனுக்காக அல்ல என்பதில் மரியா தெளிவாக, தீர்க்கமாக இருந்தார். மரியாவின் இந்த வேண்டுகோளுக்கிணங்க, இயேசு ஆற்றிய புதுமையை தனிச்சிறப்புப் பெறுகின்றது.

வீடு தீப்பற்றி எரியும்போது, தண்ணீர் ஊற்றி அணைப்பதற்குப் பதில், தண்ணீர் ஊற்றுபவர்களைத் தடை செய்யவேண்டும் என்று கூறும் நாட்டில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரு நல்ல காரியம், மிக நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன், வேறு எந்த நோக்கமும் இல்லாமல், வேறு எந்த பலனையும் எதிர்பார்க்காமல் அன்னை மரியா செயற்பட்டார். இவ்வாறு செயல்படும் அன்பு உள்ளங்கள் உலகத்தில் இன்றும் நடமாடுகிறார்கள். அவர்களுடன் நாமும் இணைந்துகொள்வோம்

Saturday, January 12, 2013

நல்ல செயல்களை நாம் எங்காவது ஒரு இடத்தில், என்றாவது ஒரு நாள், எப்போதாவது ஒரு நேரம் ஆரம்பித்தாலே போதும்.


13.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா இன்று. பாவ வாழ்விலிருந்த விடுவித்து ஒளியின் பாதையில் மக்களை நடத்திச்சென்று, புதுவாழ்வை அவர்களில் தொடங்கிவைக்க, இயேசுவிற்கு சொந்த மானவர்கள் எனும் முத்திரையை அவர்களுக்கு கொடுக்க திருச்சபை வழங்கும் ஓர் அடையாளமே திருமுழுக்கு ஆகும். உலகின் பாவங்களை போக்கும் கடவுளின் செம்மறியாக இவ்வுலகிற்கு வந்த  இயேசு தன்னுடைய பாடுகள் மரணத்தின் மூலம் மனுக்குலத்தின் பாவங்களைப் போக்கி உயிர்ப்பின் மூலம் மக்களுக்கு புதுவாழ்வு தந்தார். எனவே ஒருவன் கிறிஸ்துவோடு பாவத்துக்கு இறந்து, தன்னுடைய பழைய மனித இயல்பை அடக்கம் செய்துவிட்டு, கிறிஸ்துவோடு புதுவாழ்வுக்கு உயிர்த்தெழுவதே உண்மையான திருமுழுக்காகும் என பவுல் உரோமையருக்குக் கூறுகின்றார்.

இயேசுவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அவரது திருமுழுக்கு அமைந்தது. மனிதனை மீட்க மனிதனாகத் தோன்றிய இயேசு தன்னுடைய பணி வாழ்வைத் தொடங்கிபோது பாலஸ்தீனத்தின் அவலங்களையும் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் அடித்தட்டு மக்களின் அழுகுரல்களையும் அன்றாடம் கண்டு கொண்டார். புறந்தள்ளப்பட்ட அடித்தட்டு மக்களின் விடுதலை, நம்பிக்கை தான் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு வித்திட்டது எனலாம். இறைவனின் செயல்திட்டத்தில் தாமும் அழைக்கப்பட்டிருப்பதை ஆழமாக இயேசு உணர்ந்திருந்தார். அத்தகைய ஓர் உந்து சக்திதான் அவரை யோர்தான் நோக்கி பயணிக்க வழிவகுத்தது.

மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்று யோர்தான் நதியோரம் வீரமுழக்கமிட்ட திருமுழுக்கு யோவானின் குரலொலி இயேசுவைக் கவர்ந்தது. சட்டங்களையும் சடங்குகளையும் உயர்த்திப் பிடிக்காமல் அன்பையும் நீதியையும் சமர்த்துவத்தையும் பகிர்வையும் வலியுறுத்திய யோவானின் புரட்சிக்கருத்துக்கள் இயேசுவின் கருத்துக்களோடு ஒருமித்து இருந்தன. அத்தகைய உண்மையை எத்திசையும் பறை சாற்ற தந்தையின்; விருப்பத்திற்குப் பணிந்து இயேசு வரிசையில் காத்திருந்து மக்களோடு மக்களாக திருமுழுக்கு யோவானிடம் யோர்தானில் திருமுழுக்குப் பெற்றார். இங்கு வானதூதர்களோ நட்சத்திரமோ இயேசுவை அறிவிக்கவில்லை. மாறாக இறைந்தந்தையே தனது மகன் இயேசு வெளிப்படுத்துகின்றார். 'இவரே என் அன்பார்ந்த மகன், இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று தந்தையின் குரல் வானத்தில் இருந்து ஒலித்தது.

இயேசுவின் திருமுழுக்கு அவரது வாழ்வின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது. இயேசு பெற்ற திருமுழுக்கு மாந்தர் அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் ஓர் அடையாளச் செயல். இயேசுவின் திருமுழுக்கு பாவிகள் தொழு நோயாளிகள், அடித்தட்டு மக்கள் இவர்களுடன் நெருக்கமான உறவையும் தோழமையையும் எடுத்துக் காட்டும் செயல். இயேசுவின் திருமுழுக்கு எமது திருமுழுக்கு, கிறிஸ்தவ வாழ்வு பற்றிசிந்தித்துப் பார்க்க அழைக்கிறது. இயேசு தனது அர்ப்பணம்,பணி வாழ்விற்கான இசைவின் மூலமாக இறைத்தந்தைக்கு பூரிப்பைஏற்படுத்துகின்றார். தன் மகனோ, மகளோ அர்த்தமுள்ள, பெருமை சேர்க்கும் செயல்களைச் செய்யும் போது, நெற்றியில் முத்தமிட்டு, ஆசீர்வதிக்கும், அரவணைக்கும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம்.நாமும் இந்த ஆசீர்,அரவணைப்பை அனுபவித்திருப்போம். அதுதான் அன்று யோர்தானில் நடந்தது. திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் இறைவனின் குடும்பத்தில் அங்கத்தவராக மாறி விண்ணகப் பேரின்ப முத்திரையாக மாறுவோமாக. இதுவே இயேசுவின் திருமுழுக்கு எமக்குத் தரும் செய்தியாகும். இன்று நாமும் திருமுழுக்கு மூலமாக இறைவனின் ஊழியராக வாழ நம்மைகளை நானிலமெங்கும் ஆற்ற முன்வர வேண்டும். அப்போது நாமும் இறைவனை மகிழ்விக்கலாம்.

ஒரு நாள் மாலை, கடற்கரையில் நடந்து கொண்டிருந்த ஓர் அறிவாளி இந்த உலகத்தை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார். உலகத்தின் பிரச்சனைகள் உச்சநிலையில் தெரிந்ததால் எங்கு எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பிப் போயிருந்தார். அவருக்கு முன் ஓர் ஏழை மீனவன் கடற்கரையில் ஒதுங்கிக்கிடந்த சின்னச் சின்ன நட்சத்திர மீன்களை எடுத்து கடலில் எறிந்ததைப் பார்த்தார். 'என்ன செய்கிறீர் நண்பரே?" என்று கேட்டார் அறிவாளி. 'இவை இங்கேயே தங்கிவிட்டால், இறந்துவிடும். அதனால், இவைகளை மீண்டும் கடலுக்குள் அனுப்பிவைக்கிறேன்." என்றார். 'அது தெரிகிறது. ஆனால், நீர் இப்படி செய்வதால் என்ன பயன்? இது போல் உலகத்தின் பல கடற்கரைகளில் மீன்கள் கிடக்கின்றனவே. உமது இந்த செயலால் எத்தனை மீன்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டபோது, அந்த மீனவன், 'எல்லா மீனையும் காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இதோ, இந்த மீனை என்னால் காப்பாற்ற முடியும்." என்று சொன்னபடி, ஒரு மீனை எடுத்து கடலில் எறிந்தாராம். நல்ல செயல்களை நாமும் எங்காவது ஒரு இடத்தில், என்றாவது ஒரு நாள், எப்போதாவது ஒரு நேரம் ஆரம்பித்தாலே போதும். நல்ல செயல்களால் நானிலம் நிறையும் நாமனைவரும் நல்லமைதியில் வாழ்வோம்.

எம் திருமுழுக்கு வாழ்வு எம்மை இறைவனின்பால் புரட்டிப் போடட்டும்.

13.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா. மக்களை பாவ இருளில் இருந்து விடுவித்து அவர்களை ஒளியின் பாதையில் நடத்தி, புதுவாழ்வை அவர்களில் தொடங்கிவைக்கவும், கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள் எனும் முத்திரையை அவர்களுக்கு கொடுக்கவும் திருச்சபை வழங்கும் ஓர் அடையாளமே திருமுழுக்கு. இதனை இயேசு தனது 30 வயதில் யோர்தான் நதியில் பெற்றுக்கொண்டார்.  அப்போது கடவுளின் குரல் வானிலிருந்து வந்து இயேசு தம் அன்புமிக்க மகன்; தாம் அவரைக் குறித்து மகிழ்ச்சியடைகின்றோம் என்ற பேருண்மையை வெளிப்படுத்தியது. இத்திருமுழுக்கு இயேசுவின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்து. அவரது வாழ்வை புரட்டிப்போட்டது.

17 ஆண்டுகளுக்கு முன் புத்தாண்டுகாலை நடந்த ஒரு சம்பவத்தை சற்று பகிர்வது இங்கு நல்லது: சென்னையில் நள்ளிரவு, காலைத் திருப்பலிகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இயேசு சபையைச் சார்ந்த ஒரு குருவானவர் அன்று காலை சாலை விபத்தில் இறந்து விட்டார். அவரது உடலை வெற்றுவர இரு இயேசு சபையைச் சார்ந்த குருக்கள் புத்தாண்டு தினத்தன்று சென்னை அரசு மருத்துவ மனைக்குச் சென்றனர். பிரேத அறையில் பல உடல்கள், பலவாறாக சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அத்தனை உடல்களின்; மத்தியில் தங்கள் குருவை அடையாளம் காட்டி எடுத்தனா.; அங்கு அடைந்த அதிர்ச்சி: வாழ்க்கை இவ்வளவு தானா? என்ற ஒரு கேள்வியை எழுப்பத் தெடங்கியது என்றும் வாழ்வைப் பற்றிய ஏதோ ஒரு தெளிவு கிடைத்ததை தான் உணர்ந்தேன் என்றும் அவர்களில் ஒரு குரு தெரிவித்தார். அந்த புத்தாண்டு அனுபவம் தமக்குக் கிடைத்த மற்றொரு திருமுழுக்கு என்கின்றார் அவர். அந்த அனுபவம் தன் வாழ்க்கை புரட்டிப் போட்டது என்கின்றார் அவர்.

இப்படி எத்தனையோ பேருடைய வாழ்வைப் புரட்டிப் போட்ட சம்பவங்களை நாம் பார்க்கலாம். தங்களுடன் இரவு உணவருந்தி விட்டு தங்களுக்கு முன்பு மோட்டார் வண்டியில் சென்றுகொண்டிருந்த யாழ்மறைமாவட்ட இளங்குரு லக்;ஸ்மன் அண்மையில் சட்டென்று வீதியேலே விழுந்து இறந்தபோது இரத்தத்தில் தோய்ந்த அவரது தலையை முதலாவதாக தூக்கிய அனுபவம் தன் வாழ்;வை  புரட்டிப்போட்டது என்கின்றார் மிருசுவில் பங்குத்தந்தை பத்திநாதர்.

பூனைத்தொடுவாயில் தம்மை மோட்டார் வண்டியில் தள்ளிவந்து பங்குமனையில் வீட்டுவிடு 'வரும் ஞாயிறு எங்கள் ஆலயத்திற்கு வருவீர்கள் தானே" என்று கேட்டு சென்ற சிறுவன் செற்பநேரத்தில் கிபிர் தாக்குதலில் தலை துண்டிக்கப்பட்டு தன் சிறிய சகோதரியுடன் இறந்து இரத்த வெள்ளத்தில் மிதத்தபோது அதை பார்த்த தற்போதைய பாசையூர் பங்குத்தத்தை றோய்பேடினன் வாழ்வு இவ்வளவு தானா? என்ற அனுபவம் தன் வாழ்வை புரட்டிப்போட்டது என்கின்றார்.

இன்னும் பிணி, முதுமை, சாவு இவற்றைப் பார்த்த புத்தரின் அகக்கண்கள் திறக்கப்பட்டன. அது அவரது வாழ்க்கை புரட்டிப் போட்டது.

கொலை வெறியோடு கிறிஸ்தவர்களைக் கைது செய்து எருசலேமுக்குக் கொண்டுவர தமஸ்கு நகர்நோக்கிச் சென்ற சவுலைப் பார்வை இழக்கச் செய்து, பின்னர் மறுபார்வை கொடுத்த இறைவனின் செயல் சவுலின் வாழ்வைப் புரட்டிப் போட்டது.

தென்னாப்பிரிக்காவில், புகைவண்டியிலிருந்து பலவந்தமாய் வெளியேற்றப்பட்ட ராஜ் மோகனின் அந்த பயணம், அவரது வாழ்வைப் புரட்டிப் போட்டது. அவரை மகாத்மாவாக்கியது

கொல்கத்தாவின் சாக்கடைகளும், சேரிகளும் அன்னை தெரசாவின் வாழ்வைப் புரட்டிபோட்டன. ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால், இவர்களுக்குக் கிடைத்த இந்த அனுபவங்கள் எல்லாம் இவர்களுக்குக் கிடைத்த ஒரு திருமுழுக்கு அனுபவமெனலாம். இறைமகன் இயேசுவின் வாழ்வைப் புரட்டிப் போட்ட அவரது திருமுழுக்கை நாம் சிந்தித்து அது நமக்கு தரும் செய்தியின்  ஒளியில் தம்மை புடமிடுவோம்.

இரு நண்பர்களில் ஒருவர்: நான் கடவுளைப் பார்த்தால், கடவுளே, இன்று இவ்வுலகில் இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பார்க்கின்றாயே. ஒன்றும் செய்ய மாட்டியோ? என்று ஒரே ஒரு கேள்வியை  கேட்பேன். என்றார். மற்றவர் நல்ல கேள்வி. கேட்கவேண்டியது தானே? அதே கேள்வியை கடவுள் என்னிடம் திருப்பி கேட்டால்?...சிரிப்புகள் பலநேரங்களில் சிந்தனைகளைத் தூண்டிவிடும் சீனவெடிகள் ஆகுகின்றன இல்லையா?

இந்தக் கேள்வியைப் பலகோடி மக்கள் இதுவரை கேட்டிருப்பர். இனியும் கேட்பார்கள். பலர் இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்ததுண்டு. கேட்டதில்லை. இந்தக் கேள்வியை விண்ணை நோக்கி மிசையிலாக ஏவி விட்டால், அது மீண்டும் ஒரு மின்னலாக, இடியாக, எதிரொலியாக தம்மை தாக்குமோ என்ற பயம்.

சாதாரண மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசுவுக்கும் இந்தக் கேள்வி கட்டாயம் உள்ளத்தில் எழுந்திருக்கும். 30 ஆண்டுகள் அமைதியாக, நாசரேத்தூரில், தன் பெற்றோரோடு வாழ்ந்து பழகி விட்டாலும், அவ்வப்போது இயேசுவைச் சுற்றி நடந்த பல அநியாயங்கள் அவர் மனதில் பூகம்பங்களாய் வெடித்திருக்கும். இந்த அநியாயங்களுக்கு விடை தேடி தன் நண்பர்கள், தெரிந்தவர்கள் பலரும் புரட்சிக் குழுக்களை உருவாக்கியதையும், அந்தக் குழுக்களில் சேர்ந்ததையும் இயேசு கட்டாயம் அறிந்திருந்தார். குழப்ப புரட்சிகளும் தீவிரவாதமும், வன்முறையும் தான் தீர்வுகளா? வேறு வழிகள் என்ன? என்று இயேசு கட்டாயம் சிந்தித்திருப்பார். இந்த சிந்தனைகளின் விடையாக அவர் எடுத்த முதல் முடிவு மக்களோடு மக்களாகத் தன்னைக் கரைத்துக் கொள்ள வேண்டும். அந்த முடிவோடு, அந்த முனைப்போடு யோர்தான் நதியில் இயேசு இறங்கினார்.

இயேசுவைக் கண்டு, அவருக்குத் திருமுழுக்கு அளிக்க இருந்த யோவான் திகைத்திருப்பார். அவரை இயேசு அமைதிபடுத்தி, திருமுழுக்கு பெறுகிறார். இயேசுவின் இந்த பணிவு, மக்களோடு மக்களாய் கரைந்து விட அவர் கொண்ட ஆர்வம் ஆகியவை விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்விக்கிறது. மக்களோடு மக்களாகத் தன்னை முழுவதும் இணைத்துக் கொண்ட இயேசுவைக் கண்டு ஆனந்த கண்ணீர் பொங்க தந்தை சொன்ன வார்த்தைகள்: 'என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்."

உள்ள பூரிப்புடன், உன்னத இறைவன் இந்த வார்த்தைகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லக் காத்திருக்கிறார். நம்மையும் வாரி அணைத்து உச்சி முகந்து இந்த அன்பு மொழிகளை அவர் சொல்லக் காத்திருக்கின்றார். தீவிரவாதமும், வன்முறையும் கொலைகளும் களவுகளும் கற்பளிப்புக்களும் கருவறுப்புக்களும் தானா இன்றைய தீர்வுகள்? வேறு வழிகள் என்ன? என என்ணுவோம். 'வேறு வழி என்ன" என்று என்ணி இயேசு யோர்தான் நதிக்கு சென்று திருமுழுக்கு பெற்றார். தந்தையின் பணியை தொடர்ந்தார். இயேசு திருமுழுக்கு பெற்றபோது   தந்தையாம் கடவுளின் பணியில் வாழ வாக்குறுதி எடுத்தார். சாத்தான் அவரை சோதித்தபோதும் சற்றும் சறுக்காமல் மக்களை நல்வழியில் நடத்தி தன் இலக்கை அடைந்தார். கத்தோலிர்கராகிய நாமும் ஆண்டு தோறும் கிறிஸ்து உயிர்ப்பு திருவிழிப்பு பூசையில் எம் திருமுழுக்கை புதுப்பிக்கின்றோம்: சாத்தானையும் அதன் மாயதீய செயல்களை எல்லாம் விட்டுவிடுகின்றோம் என வாக்குறிதி எடுக்கின்றோம். எனவே நம் திருமுழுக்கு வாழ்வு எம்மை இறைவனின் பால் புரட்டிப் போட்டு நம்முடன் வாழ்பவர்கள்; நல்வழியில் நடந்து நானிலமெங்கும் நல்லமைதியை உருக்கும் கருவிகளாக்கட்டும்.

Friday, January 4, 2013

விண்மீனாக வாழிகாட்டிய இறைவார்த்தை எம்மையும் வழிகாட்ட இடமளிப்போம்

06.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவாகிய இன்று, குழந்தை இயேசுவைத் தேடி கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து வணங்கிய நிகழ்வைக் கொண்டாடி, மெசியாவாம் இயேசு புற இனத்தாருக்கும் தம்மை வெளிப்படுத்தியதை நினைவுகூர்கிறோம். இயேசுவை தேடி வணங்க வந்த ஞானிகளின் பயணம்; இயேசுவை சென்றடையும் பாதையினை எமக்கு தெளிவாகக் காட்டுகின்றது. பெத்லகேமில் இயேசு பிறந்துள்ளதை அறிந்த அரசன் ஏரோதும்  எருசலேமும் கலங்கினாலும் ஞானிகள் பிறந்த பாலன் இயேசுவை வணங்கச் சென்ற பயணம் இயேசுவை சென்றடையும் பாதையினை எமக்கு தெளிவாகக் காட்டுகின்றது. ஞானிகள் இயேசுவை  வணங்க வந்த நிகழ்வு பாலன் இயேசு பிறந்த நிகழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள ஒரு நிகழ்வு என்பது நமக்குத் தெரிந்த ஒருவிடயம். இவர்கள் மூன்று ஞானிகள் என்று திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டள்ள ஒருவிடைமாகிறது. இவர்கள் வீண்மீன் கண்டு வீறுநடைபோட்டு இயேசுவைக்கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்த இயேசு பாலனை வணங்கினர். பரிசுகளைக் கொடுத்தது வந்தவழி விட்டு வேறுவழியில் திரும்பினர்.

யார் இந்த ஞானிகள்?

கிரேக்க மொழியிலே “மாகோஸ்” (magos) என்றால் “ஞானி” என்று பொருள். இது பன்மையில் (mag) என்பது பொருளாகும். இவர்களை நாம் பல கூறுகளாகப் பிரித்து நோக்கலாம். பெர்சிய நாட்டுக் குருக்களின் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். இரகசிய மறைபொருளை உணர்ந்து கொள்ளும் சக்தியைக் கொண்டவர்கள். மந்திரவாதிகள். நாடோடிப் போலி மருத்துவர்கள் அல்லது அறிஞர்கள். தத்துவ அறிவில்கைதேர்ந்தவர்கள். குறி சொல்லும் முன்னறிவிப்பாளர்கள். இயற்கை மருத்துவத்தி;ல் கைதேர்ந்தவர்கள். கனவுகளுக்கு விளக்கும் அளிப்பவர்கள். வானசாஸ்திரிகள்.

இந்த ஞானிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகலாம்?

இந்த ஞானிகள எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற ஆராய்ச்சியில் முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. பெர்சிய நட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். மீதியா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். மெசபெத்தோமிய நாட்டிலிருந்து வந்திருக்கலாம். அரேபியா நாட்டிலிருந்து பயணி;திருக்கலாம் என்று மரபுகள் கூறுகையில் இந்தியாவிலிருந்து கூட யூதேயா நாட்டிற்க்கு சென்றிருக்கலாம் என்று கூறுபவர்களும் உளர்.

இந்த ஞானிகள்; எத்தனை பேர்?
நற்செய்தியில் பாலன் இயேசுவைக் காணவந்த ஞானிகள் எத்தனை பேர் என்று குறிப்பிடவில்லை. மூன்று பேர் வந்தார்கள் என்ற மரபு எப்படி வந்ததென்றல், நற்செய்தியி;ல் மூன்று வகையான பரிசுகளைக் கொண்டு வந்தார்கள் என்று குறிப்பிடுள்ளதால் தான் என்கிறார்கள்.

இந்த ஞானிகள் பெயர்கள் என்ன?
இந்த ஞானிகளின் பெயர்கள்: கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது  மரபாகிறது.

இயேசுவைக் காணவந்த ஞானிகள் என்ன செய்தார்கள்?
இயேசுவைக் காணவந்த ஞானிகள் உண்மையில் வானயல் பற்றி ஞானத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வானத்தை ஆய்வு செய்பவர்களே ஒழிய எதிர் கால வீண்மீன்கள் பற்றி ஆராயவில்லை,  கூற முனையவுமில்லை. அவற்றிலிருந்து சில நன்மைகளை பெற முற்றடுபட்டார்கள். வாழ்க்கையின் வழியைக்காட்டும் உண்மை ஒளியை தேடும் மனிதர்களானர்கள். கடவுளின் முகவரியை கடவுளின் படைப்பபில் காண முற்பட்டவர்கள். மாந்தர் வாழ்விற்கு வழிகாட்டும் பாதையைக் கண்டுகொன்டார்கள். இறைவனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரை  தேடியவர்கள், அவரின் கைவண்ணத்தை படைப்பில் காண தேடியவர்கள் கடவுள் இயற்கையினூடாக தம்தை வெளிப்படுத்துவார் என்று உறுதியாக நம்பினர். இந்த உலகைப் படைத்தவரே பெத்தலேகேமில் குகையில் மனிதனாகப் பிறந்தார் என்பதை உணர்ந்தனர். இந்த ஞானிகள் வேதாகமம் கூறுவதைக் கேட்டனர். அதுவே உண்மை வழியைக் காட்டும் விண்மீனாகா தோண்றியது என்ற மிகப்பெரிய பரிசுத்த உண்மையை எமக்கு தெளிப்படுத்தி நின்றனர்.

இயேசுவைக் காணவந்த ஞானிகள் கொண்டுவந்த பரிசுகளுக்கு அர்த்தம் என்ன?
கஸ்பாhர் என்பவர் தாடி இல்லாமல் இளைஞராக ஓவியத்தில் சித்தரிக்ப் பட்டுள்ளார். இவர் சாம்பரணி கொண்டுவந்தர். சாம்பரணி குருத்துத்வதைக் குறிக்கின்றது. குருக்களை பெர்சிய நாட்டில் 'போன்தி ஃ பெக்ஸ்' அதாவது பாலமாக இருப்பவர்கள் - இறைவனுக்கும் மனிதருக்குமிடையே பரிந்து பேசி பாலமாக இருந்தவர்கள் மன்னர்கள் என்ற கருத்து நிலவியது. இறைத் தந்தைக்கும் நமக்குமிடையே உறவை வளர்க்கும் பாலமாக இருக்கும் இயேசுவுக்கு இது எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது என்பது தெளிவு

மெல்கியேர் வயதானவராக, நீண்ட தாடியோடு சித்தரிக்கப்பட்டுள்ளார். இவர் பொன்னைக் கொண்டு வந்தர். பொன் அல்லது தங்கம் இயேசு அரசர் என்பதைக் குறிக்கின்றது. பெர்சியா நாட்டில் அந்நாட்டு அரசரையாராவது சந்திக்கச் சென்றால் கட்டாயம் தங்கத்தைக் கொண்டுச் செல்ல வேண்டுமென்பது ஒரு கட்டாயமான மரபு. ஆகவே இயேசுவை ஓர் அரசராகக் கருதி பொன்னைப் பரிசாகக் கொண்டு வருகிறார் இந்த ஞானிகள்.

பல்தாசார் ஓர் இளைஞன். குறுந்தாடியுடையவர். இவர் வெள்ளைப்போளம் கொண்டு வந்தாதகக் கூறப்படுகிறது. வெள்ளைப்போளம் பொதுவாக இறந்தவர்களின் உடலைப் பதபடுத்திப் பாதுகாப்பாக இருக்கப் பயன்படு;தப்பட்ட ஒரு பொருள். இது இயேசு இறைவன் மட்டுமல்ல, அவர் ஒரு மனிதனாகவும் இருக்கின்றார் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆம் இயேசு பிறந்ததே நாம் மீட்பு பெறுவதற்காகவே. இயேசு தமது உயிரை பயணமாக வைத்துத் தமது இறப்பினால் நம்மை மீட்டார் என்பது வெள்ளிடை மலை.

இந்த ஞானிகளின் வருகையை ஒட்டிச் சில முன்னறிவிப்புக்கள் உள்ளன. விண்மீன்-கிறிஸ்து பிறப்பதற்கு முன் 11ஆம் ஆண்டில் ஹோலிஸ் நட்சத்திரம் தோன்றியது. கி.மு. 7ஆம் ஆண்டில் மூன்று கோள்கள்-சாட்டர்ன், ஜுபிட்டர், மார்ஸ் ஒன்றாகக் கூடிவந்து வானத்தில் விந்தை நடந்தது வரலாறு. கி.மு. 5லிருந்து 2ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தில் மெசோரி, சூரியன், டாக்ஸ்டார் என்பவை பிரகாசமாகத் தோன்றின என்பதும் வரலாறு.

இவ்வெளிப்பாட்டின் வழியாக ஒரு புதிய அரசர் தோன்றுவார் என்று மக்கள் நம்பினர். இயேசு பிறப்பதற்கு முன் இஸ்ரயேல் நாட்டில் ஓர் அரசக் தோன்றுவார். அவர் மெசியா- அரசராக இருப்பார். அவர் மக்களை மீட்டு விடுதலை அளிப்பார் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். “ யூதா நாட்டுப் பெத்தலேகேமே யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை;, ஏனெனில், என் மகளாகிய இஸ்ராயெலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்து தோன்றுவார்”. ஏன் இறைவாக்கினரின் எழுத்துக்களில் நம்கிக்கை கொண்டு அவரது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர். மன்னர் பிறந்துவிட்டார் என்று வானசாஸ்திரிகள் தங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பாலன் இயேசுவைக் காணவந்தனர். உண்மையாகவே இயேசு இவ்வுலகை மீட்க வந்த மீட்பர் என்பதை எடுத்துக்காட்டினர்.

இயேசுவின் பிறப்பைப் பற்றிய மூன்று கண்ணேட்டங்கள்:
மெசியா - அரசராக இயேசு பிறப்பார் என்று இஸ்ரயேல் வானசாஸ்திரிகள் ஆய்ந்தறிந்து உறுதிப்படுத்தியவுடன் மூன்று வகையான நபர்கள் தங்களது கண்ணேட்டத்தை வெளிப்படுத்தினதை நாம் நற்செய்தியில் பார்க்கிறோம்.

ஏரோது-பகைமை உணர்வு- ஏரோது முறையான வகையில் அரசனாகப் பதலி ஏற்கவில்லை. ஆகவே வேறு ஓர் அரசன் பிறந்துள்ளார் என்று கேள்வியுற்றதும் தனக்குத் தற்காப்பின்மை என்ற உணர்வு ஏற்பட்டதால் இயேசுக் குழந்தை மீது பகையுணர்வு கொண்டான். அவரைக் கொல்லச் சதித்திட்டம் போட்டான்.

பரிசேயர்களின் பாராமுகம்- இஸ்ரயேல் நாட்டின் குருக்களும், சட்டவல்லுநர்களும் புதிய மெசியா அரசர் பிறப்பார் என்று விவிலியம் முன்னறிவித்திருந்தும் அவர்கள் இந்நிகழ்வின்மேல் எந்த அக்கறையும் கொள்ளவில்லை.மாறாக, இயேசுபோதிக்கத் தொடங்கியதும் அவரை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கின்றனர்.

ஞானிகள் - பக்தி பரவசம்- இயேசு பிறந்த இடத்தை அடைந்ததும் ஞானிகளுக்கு வழிகாட்டி வந்த விண்மீன் நின்றது. அதை கண்ட அவர்கள் மட்டில்லா பெருமகிழ்ச்சி அடைந்தனர். குழந்தை இயேசுவைக் கண்டார்கள். நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். பக்தி பரவசத்தில் மூழ்கினார்கள்.
ஞானிகளின் வருகை நமக்குத் தரும் பாடங்கள்-
நாம் இயேசுவை ஆவலோடு தேடிச் சென்றால் அவரைக் கண்டு நாம் மகிழ்ச்சியில் ஆழ்வோம். இறைவனின் வழிநடத்துதல் என்றும் நம்மோடு இருக்கும். இயேசுவை ஆராதித்து வணங்க நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இறைவனே நமக்கு பரிசாக அமைவார். இயேசுவைக் கண்ட ஒருவர் மாற்றுப் பாதையில் தான் நடக்க வேண்டும். இயேசுவைப் பலர் தேடி வந்தனர். நாமும் அவரை தேடினோம் என்றால் அவரைக் கண்டடைவோம். பல ஆயிரக்கணக்கான கல் தூரம் பல வேதனைகளையும், துன்பங்களையும் சகித்துக் கொண்டு ஞானிகள் இயேசுவைத் தேடி வந்தனர். நாம் எமது மனங்களில் எதிர்ப்பு மனப்பான்மையை கைவிட்டு கடவளால் வழிநடத்தப்படுவதற்கு நம்மை கையளிக்கவேண்டும். உறுதியாக உண்மையானவரைக் காணவேண்டும் என்ற விசுவாசத்தின் கண்களினாலேயே தேடினால் தான் அவரைக் காணமுடியும்

இயேசுவைக் கண்டு அனுபவிப்பவர்களின் வாழ்க்கை மாற்றுப் பாதையில் தான் அமையவேண்டும். பழைய மனிதத்தை களைந்துவிட்டுப் புத்தாடை அணிந்துப் புனிதனாக மாறவேண்டும். இதைத்தான் ஞானிகளும் செய்தார்கள். வாருங்கள் நாமும் ஞானிகள் வழிசெல்வோம்.

விண்மீனாக வாழிகாட்டிய இறைவார்த்தை எம்மையும் வழிகாட்ட இடமளிப்போம்

06.01.2013
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவாகிய இன்று, குழந்தை இயேசுவைத் தேடி கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து வணங்கிய நிகழ்வைக் கொண்டாடி, மெசியாவாம் இயேசு புற இனத்தாருக்கும் தம்மை வெளிப்படுத்தியதை நினைவுகூர்கிறோம். இயேசுவை தேடி வணங்க வந்த ஞானிகளின் பயணம்; இயேசுவை சென்றடையும் பாதையினை எமக்கு தெளிவாகக் காட்டுகின்றது. இவர்கள் மூன்று ஞானிகள் அல்லது அரசர்கள் என்று திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டள்ளது. இவர்கள் வீண்மீன் கண்டு வீறுநடை போட்டு இயேசுவைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து இயேசு பாலனை வணங்கினர். பரிசுகளைக் கொடுத்தது வந்தவழி விட்டு வேறுவழியில் திரும்பினர்.

இந்த ஞானிகளின் வருகையை ஒட்டிச் சில முன்னறிவிப்புக்கள் உள்ளன என்று வரலாறு கூறுகின்றது. விண்மீன்: கிறிஸ்து பிறப்பதற்கு முன் 11ஆம் ஆண்டில் ஹோலிஸ் நட்சத்திரம் தோன்றியது. கி.மு. 7ஆம் ஆண்டில் மூன்று கோள்கள்: சாட்டர்ன், ஜுபிட்டர், மார்ஸ் ஒன்றாகக் கூடிவந்து வானத்தில் விந்தை நடத்தியது வரலாறு. கி.மு. 5லிருந்து 2ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தில் மெசோரி, சூரியன், டாக்ஸ்டார் என்பவை பிரகாசமாகத் தோன்றின என்பதும் வரலாறு.
இவ்வெளிப்பாட்டின் வழியாக ஒரு புதிய அரசர் தோன்றுவார் என்று மக்கள் நம்பினர். இயேசு பிறப்பதற்கு முன்னர்  இஸ்ரயேல் நாட்டில் ஓர் அரசக் தோன்றுவார். அவர் மெசியா- அரசராக இருப்பார். அவர் மக்களை மீட்டு விடுதலை அளிப்பார் என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். யூதா நாட்டுப் பெத்தலேகேமே யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை;, ஏனெனில், என் மகளாகிய இஸ்ராயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்து தோன்றுவார். என் இறைவாக்கினரின் எழுத்துக்களில் நம்கிக்கை கொண்டு அவரது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தனர். மன்னர் பிறந்துவிட்டார் என்று வானசாஸ்திரிகள் வீண்மீன்கண்டு தங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பாலன் இயேசுவைக் காணவந்தனர். உண்மையாகவே இயேசு இவ்வுலகை மீட்க வந்த மீட்பர் என்பதை எடுத்துக்காட்டினர்.

வேதாகமத்தில் கூறப்பட்ட மெசியாவை தேடிக் காணச்சென்ற இந்த மூன்று அரசர்கள் உண்மையில் வானயல் பற்றி ஞானத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வானத்தை  ஆய்வு செய்பவர்களே ஒழிய எதிர் கால வீண்மீன்கள் பற்றி ஆராயவில்லை, கூற முனைபவர்கள் அல்லர். இறுதியாக அவற்றிலிருந்து சில நன்மைகளை பெற முற்றடுபவர்கள்.  வாழ்க்கையின் வழியைக்காட்டும் உண்மை ஒளியை தேடும் மனிதர்கள் அவர்கள். கடவுளின் முகவரியை கடவுளின்படைப்பபில் காண முற்பட்டவர்கள். மாந்தர் வாழ்விற்கு வழிகாட்டும் பாதையைக் கண்டுகொள்கிறார்கள்.

இறைவனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரை  தேடியவர்கள், அவரின் கைவண்ணத்தை படைப்பில் காண தேடியவர்கள். கடவுள்  இயற்கையினூடாக தம்தை வெளிப்படுத்தூவார் என்று அவர்கள் உறுதியாக நம்பினர். நாம் எமது மனங்களில் எதிர்ப்பு மனப்பான்மையை கைவிட்டு கடவுளால் வழிநடத்தப்படுவதற்கு நம்மை கையளிக்கவேண்டும். படைப்பில் கடவுளிக் கையெழுத்து உள்ளது என்றும் மனிதராகிய நாம்  படைப்பில் கடவுளைக் காணவேண்டும். அந்த அரசர்கள் உண்மையானவரைக் காணவேண்டும் என்ற விசுவாசத்தின் கண்களினாலேயே தேடினால் தான் அவரைக் காணமுடியும் என்று நம்பினார்கள். நாமும் கடவுளின் ஞானத்தை, அவரது வல்லமையை, எல்லையற்ற அன்பை உணர அழைக்கப்பட்டவர்கள்.

நாம் எமது அறிவை வெறும் கோட்பாடுகளினால் புடமிடுவதற்கு அனுமதிக்க கூடாது. இந்த கோட்பாடுகளை நாம் கூர்ந்து கவனித்தால் இறை நம்பிக்கைக்கு முரணானவையாக தென்படும். அவற்றை வைத்துக் கொண்டு வாழ்வின் இறுதி அர்த்தத்தை கண்டடைய முடியாது. உலனின் அழகையும் அதன் வியப்பையும், உள்ளர்த்தத்தையும், தோற்றத்தையும்  தோற்றத்தின் காரண தன்மையையும் கண்டுணரமுடியாது. ஆனால் நாம் இத்த உலகில்- வானத்தையும் பூமியையும் படைத்த கடவுளினால் வாழிநடத்தப்படவே முடியும். இதனை நாம் கருத்தில் கொண்டால் இந்த உலகைப் படைத்தவரே பெத்தலேகேமில் குகையில் மனிதனாகப் பிறந்தார் என்பதை உணர முடியும். அவரே  நற்கருணையில் தொடர்ந்தும் எம்முடன் வாழ்கின்றார். அவரே எம்மை என்றும் அன்பு செய்து முடிவில்லா வாழ்விற்கு அழைத்துச் செல்லும் உயிர் உள்ள கடவுளாவார்.


இந்த மூன்று அரசர்களுக்கு பரிசுத்த வேதாகமம் கூறுவதைக் கேட்பது இன்றியமையாததாக இருந்தது. அதுவே அவர்களுக்குரிய உண்மை வழியைக் காட்டுபவையாக இருந்தது. நிச்சயமற்ற மனித வார்த்ததைப் பிரசங்கத்தில் விழங்கப்படுத்த முடியாதவாறு இறைவார்தைதையே விண்மீனாகா தோண்றியது. இதுவே மிகப்பெரிய பரிசுத்த உண்மையை எமக்கு தெளிப்படுத்தியது. எனவே நாம் ஒவ்வாரும் இறைவார்த்தையான இந்த வீண்மீன்ளினால் வாழிநடத்தப்பட எம்மை அற்பணிப்போம். திருச்சபையுடன் இணைந்து வழிநடப்போம். உலகின் எந்த விழக்கினாலும் ஒளி கொடுக்கமுடியாத உண்மையானவரின் ஒளியால் எமது பாதைகள் வழிநடத்தப்பட வேண்டுவோம். நாமும் எமக்க அடுத்திருப்பவர்களுக்காக பிரகாசிக்கும் விண்மீன்களாக மாறுவோம். கிறிஸ்து எம்மீது ஒளிhவித்த அதே ஒளியை நாமும் மற்றவர்களில் ஒளிர விடுவோம்.


Tuesday, January 1, 2013

புதிய வரலாற்றுக்குள் பயணம் செய்வோம். புதிய வரலாற்றைப் பயணம் செய்யவைப்போம்.

01.01.2013  
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
என் வாசகர்கள் அனைவருக்ககும் வழ்த்துக் கூறி இன்று தொடங்கும் இந்தப் புதிய ஆண்டில் நலமும் வளமும் பெருகி இறை ஆசீரை நிறைவாகப்பெற்று வாழ நாம் செபக்கின்றோம். இன்று நாம் மூன்று பெரும் விழாக்களை கொண்டாடுகின்றோம் என்று கூறலாம்: அன்னைமரியா இறைவனின் தாய் என அறிவிப்பு விழா, இயேசுவுக்கு பெயர் சூட்டப்பட்ட விழா, 2013ண்டு தொடக்கநாள் விழா.

திருச்சபை கன்னிமரியாவைக் கடவுளின் தாயாகப் போற்றிச் சிறப்பிக்கிறது. இன்று சிறப்பான வகையில் சாதாரண மனிதப் பெண்ணான மரியா இயேசுவின் தாயானதால் இறைவனின் தாயான மாண்பினை பெருமையுடன் நினைவு கூர்ந்து விழா கொண்டாடுகின்றது. தாய்மை என்பது கடவுளின் முக்கிய பண்புகளில் ஒன்று. மனிதருக்கு உயிரளித்து, அவர்களைப் பேணிக்காத்து, வளர்த்து மேம்படுத்தும் செயலைக் கடவுள் செய்வதால் அவரை நாம் தாய் என உரிமையோடு அழைக்கலாம். கடவுளின் தாய்மை வௌ;வேறு வழிகளில் வெளிப்பட்டாலும் மரியா வழியாக அது சிறப்பான விதத்தில் உயர்வுபெற்றது. மரியா கடவுளின் தாய் என அழைக்கப்படுவதற்குக் அவர் கடவுளின் மகனை நமக்கு ஈந்தளித்த செயலே முக்கியகாரணம் ஆகும். மரியாவின் வயிற்றில் உருவான குழந்தைக்கு இடப்பட்ட பெயர் அவருடைய பணியை அழகாகக் குறிப்பிடுகிறது. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு நாம் தொடங்குவோம்.

மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள்.  வானதூதர் செல்லியிருந்தவாறு எட்டாம் நாள் குழந்தைக்கு “இயேசு” என்னும் பெயரிட்டார்கள். இயேசு என்னும் சொல் மீட்பர் எனப் பொருள்படும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யோசுவாவும் இவ்வாறே மீட்பர் என்று அறியப்பட்டார். இஸ்ரயேல் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களிலிருந்து விடுவிக்க யோசுவா ஒரு கருவியாக இருந்தார். கடவுள் காலமாகிவிட்டார் போன்றும் கடவுள் நம்மை கைவிட்டுவிட்டது போன்றும் தோன்றும் இன்றைய நவீன உலகில், இறை அன்பிலிருந்து வெளிப்படும் மீட்புபை கொண்டுவந்து உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்கவும் அவர்களை நிலைவாழ்வில் பங்கேற்கச் செய்யவும் வல்லவராக இயேசு வருகின்றார். இயேசு கொண்டுவரும் மீட்பு நம்மைக் கடவுளோடு நெருங்கிய விதத்தில் இணைக்கின்றது. கடவுளின் வாழ்வில் நமக்குப் பங்கு வழங்குகின்றது. நம்மைப் பிரிக்கின்ற அனைத்தையும் கடவுள் இயேசுவின் வழியாக நம்மிலிருந்து அகற்றிவிடுகின்றார். தடைகள் அகலும்போது நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டு, கடவுளுடைய அருளின் வல்லமையால் புதுப் பிறவிகளாக மாறுகின்றோம். புதுப்பிறப்படைந்த மனிதர் புது வாழ்வுக்கு அழைக்கப்படுகின்றனர். அந்த வாழ்வு நம்மில் ஓர் ஆழ்ந்த மாற்றத்தைக் கொணடுவரவேண்டும். புத்தாண்டில் நாம் அந்த மற்றத்துடன் புதுமை பெற்று வாழ்ந்திட முன்வருவோம்

இறைவாக்கைக் கேட்பவர் இயேசுவின் தாய் ஆவார் என இயேசு கூறினாலும் இறைவாத்தைக்கு முழுமையாக மரியா சரணடைந்ததனால் “மகனே” என்று இயேசுவை அழைக்க இறைத்தந்தைக்கு அடுத்த நிலையில் உரிமை உள்ளவரானர் நம் தாய் மரியா என்று கூறலாம். “மகனே  ஏன் இப்படிச் செய்தாய்” என்று விளித்த மரியா கானாவூர் திருமண வீட்டாருக்காகப் பரிந்துரைத்தபோதும் “மகனே”  என்று விளித்து  “அவர்களுக்கு இரசம் தீர்ந்துவிட்டது” என்று சொல்லப்படும் வாய்ப்பைக் கொண்ட வகையில் உயரிய பரிந்துரையாளரானார் நம் தூய கன்னிமரியா. இனி இத்தாயை முன்மாதிரியாக வைத்து அவர் போல நாம் வாழ முயல்வோம். அவர் சொன்னதை மனதில் இருத்தி அவர் சொன்னதைச் செய்து இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழ்வோம். இந்த நல்ல நம்தாயின் அரவணைப்பில், வழி நடத்தலில் அவரைப் பின் செல்லலில் புதுவாழ்வு வாழ்வோம். தூய கன்னிமரியாவைப் பின்சென்று இறைவனின் மக்களாக வாழ தொடர்ந்து ஒரு புது ஆண்டைத் நமக்குத் தந்து நம்மை  இறைவன் வாழவைத்துள்ளார். இப் புதிய ஆண்டில் புது உணர்வு கொள்வோம்.  புது முயற்சிகள் மேற்கொள்வோம்   புது உறவுகள் வளர்ப்போம் இறைவனுக்கு நன்றி உள்ளவராய் வாழ்வோம். நம்மைச் சுற்றியுள்ளவரை மனதார அன்புடன் வாழ்த்தி நலமாய் வாழ ஊக்கமூட்டுவோம். அன்னைக்கு ஏற்ற பிள்ளைகளாய் ஆண்டு முழுவதும் இறை அருளிலும் அமைதியிலும் நிறைவுடன் வாழ்ந்திட வரம்வேண்டுவோம். இன்று புதிய2012ஆண்டை கொண்டாடுகின்றோம். இவ்வருடம் முழுவதும் வாழ்வை  நேர்மை என்னும் பண்பில் அடித்தளம் இடுவோம். புதிய நேர்மையான இலக்குகளை வகுப்போம். செயல்படத் தொடங்குவோம். இறைவனின் கருவியாகச் செயல்பட இப்புதிய ஆண்டில் உறுதியேற்போம். நாம்மில்; நேர்மை எனும் எந்திரத்தைப் பொருத்தி அன்மை மரி கொண்டிருந்த இறைமை, எளிமை உணர்வுகள் எனும் சக்கரங்களைக் கொண்டு புதிய வரலாற்றுக்குள் பயணம் செய்வோம். புதிய வரலாற்றை நாம் பயணம் செய்ய வைப்போம். இந்த ஆண்டு நலமான ஆண்டாக நமக்கு அமைய வேண்டும் என  புது முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். நமது ஆண்டவர் இயேசுவின் இனிய ஆசீரிலும், தாயாகிய தூய கன்னிமரியாவின் பரிந்துரையிலும் ஆசீரிலும் இந்த ஆணடில் நமக்கு நலன்கள் பொழி, வளங்கள் சேர,  பலன்கள் கிடைக்க,  பிரிந்திருக்கும் மனங்களெல்லாம் இணை, இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா கொண்டாடுவோம்.

Friday, December 28, 2012

நம் இல்லங்களும் தெய்வீக அன்பால் உருவாக்கப்பட உழைப்போம்

30.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
 
இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். குடும்ப பண்பை விழக்க படித்த கதைஒன்றை பகிர்வது இங்கு நல்லது: ஒருமுறை ஓர் அரசர் சிறந்த ஓவியத்திற்கு உயர்ந்த பரிசு அளிக்கப்படுமென அறிவித்தார். சிறந்த ஓவியமாய் எதை வரைவது என திறமை மிகு ஓவியர்கள் பலரிடையே குழப்பமாய் இருந்தது. கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியம் இதுதான். “விவசாயி ஒருவர் பகல் முழுவதும் வயலில் உழுது விட்டு மாலை நேரத்தில் களைப்படைந்த நிலையில் கலப்பையை தோழில் போட்டுக் கொண்டு வீடு திரும்புகிறார். அவரின் மனைவி அவரின் குடிசை வாயிலில் நின்று கொண்டு அன்பான முகப்பாவனையில் அவரை வரவேற்க காத்திருந்தார். அவர்களின் சிறுவயது குழந்தையோ வீட்டிலிருந்து அவரை நோக்கி இரு கைகளையும் நீட்டிய நிலையில் ஓடுகிறது”. இம்மூவரும் ஒருவரை ஒருவர் ஏற்று அன்பு செய்து அரவணைப்பதைக் ஓவியம் தெளிவாக காணமுடிகிறது. இம்மூன்று பண்புகளுமே நல்ல குடும்பத்தின் சிறப்பாகும். “ஆண்டவருக்கு அஞ்சும் மனிதனை அவர் சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார். கனிதரும் கொடி முன்திரிபோல் அவன் மனைவி அவள் வீட்டின் உட்புறத்தில் இருப்பாள். ஒலிவச் செடிகள் போல அவன் மக்கள் பந்தியில் அவளைச் சூழ்ந்திருப்பர் என நாம் திருப்பாடலில்(தி.பா.128:3-4)வாசிக்கிறோம். இது ஓவிக்கருத்தானாலும் எம்வாழ்விலும் ஒளிரவேண்டும்
 
திருச்சபை திருக்குடும்பத்தை நாம் முன்மாதிரிகையாய் வாழ வேண்டுமென இன்று நினைவுறுத்துகிறது. நல்லவர்கள் வரமுடியா நாசரேத்து ஊரில் அவர் குடியிருந்தாலும் இவர் தச்சன் மகனல்லவா? எனக் குறைத்து மதிப்பிடும் தொழில் செய்தாலும் இவரின் தாய் மரியாவல்லவா? எனப் பெயர் குறிப்பிடும் சாதாரண பெண்ணாய் மரியாள் இருப்பினும் அக்குடும்பத்தில் சூசையப்பரிடம் நீதி இருந்தது. மரியாளிடம் “இதோ ஆண்டவரின் அடிமை” எனக் கூறும் தாழ்ச்சி இருந்தது. இயேசுவிடம் பெற்றோருக்குப் பணியும் கீழ்ப்படிதல் இருந்தது. இக்குடும்பமே நம் குடும்பங்களுக்கு முன் மாதிரிகை.
இக்குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பு பளிச்சிடுகிறது. பன்னிரண்டு வயதில் மூன்று நாள்கள் காணாமல்போன மகனைத் தேடியலைந்து கண்டுகொண்ட அன்னை, மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக் கொண்டிருந்தோமே என்றார். இந்த வரிகள் அனைத்து அன்னையரின் மனநிலையை, இதய வேதனையை அருமையாக வெளிப்படுத்துகின்றன. தம் பிள்ளை மேல் தாங்கள் கொண்டிருந்த பொறுப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. நாசரேத்துக்குத் திரும்பிச் சென்ற பிறகு இயேசு இறை நம்பிக்கையிலும் ஞானத்திலும் உடலிலும் வளர வழிகாட்டினர். இவ்வாறு பொறுப்புள்ள பெற்றோருக்கு மரியாவும் சூசையும் முன்மாதிரியாய் விளங்குகின்றனர்.
 
இன்று குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களைச் சந்திப்பதை பார்க்கிறோம். மண முறிவுகள், பிளவுகள், சண்டை சச்சரவுகள், ஊடகங்களின் தாக்கத்தால் ஆன்மீகச் சிக்கல்கள் போன்றவை குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கின்றன. திருமணம் செய்யாமல், குடும்ப வாழ்வுக்குள் நுழையாமல் விருப்பம்போல் வாழலாம் என்னும் மனநிலை மெல்ல, மெல்ல பரவி வருகிறது. அத்துடன் ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைக்காக துன்புறுகிறார். தம் பிள்ளைகள் தம்மை விட்டு, தமது வாழ்வு நடைமுறைகளைவிட்டு விலகிச் செல்லும்போது தாய் பெரிதும் வேதனை அடைகின்றார். படிப்பில் கவனம் செலுத்தாமல், தொலைக்காட்சி, அலைபேசி, இணைய தள விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் போது பிள்ளைகளை எண்ணித் தாய்மார்கள் கவலைப்படுகின்றார்கள். அவர்கள் நன்முறைக்குத் திரும்ப வரவேண்டுமென்று தேடுகிறார்கள். எனவே, குடும்பங்களை உறுதிப்படுத்தும் பணியை நாம் அக்கறையுடன் ஆற்றவேண்டும். இந்த நாளில் நமது குடும்பங்கள் அனைத்தும் ஆன்மீக குடும்பங்களாகத் திகழ இறைவனை வேண்டுவோம்.
 
திருக்குடும்பத்தின் தலைவர்கள் விசுவாசம் நிறைந்தவர்களாவும் அருள் வாக்குக்குக் கீழ்படிந்தவர்களாகவும் இறை வார்த்தையை ஆழ்ந்து சிந்தித்து செயற்படுபவர்களாகவும் விளங்கினார்கள். மூவரும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் சேர்ந்து வளர்த்துக் கொண்ட மதிப்பீடுகள் மனநிலைகள், நற்பண்புகள், செயல்பாடுகள் அனைத்தையும் இன்று சிந்திப்பதோடு வாழவும் நாம் முடிவெடுக்கவும் வேண்டும்.
 
புனித அகுஸ்தினார் மனந்திரும்பி இயேசுவை பின்பற்றுவதற்கு அவரின் தாய் மொனிக்காவின் இடைவிடா செபம் தான் காரணம். புனித குழந்தை தெரசாள் தன் தந்தை மார்டினைக் குறித்து இவ்வாறு கூறுவார். “என் தந்தை இப்பூமியில் வாழும் போதே புனிதரைப் போன்று எனக்குத் தென்பட்டது. அவரின் புனிதமே நாங்கள் அனைவரும் துறவு வாழ்வில் இறைபணி செய்ய காரணம்” என்றார்.
“நல்ல குடும்பமே தேவ அழைத்தலின் விளைநிலம் என்றார் பரிசுத்த தந்தை. வீடு செங்கற்களால் கட்டப்படுகிறது. ஆனால் நல்ல இல்லமோ தெய்வீக அன்பால் உருவாக்கப்படுகிறது". எனவே, நம் குடும்பங்களும் திருக்குடும்பத்தைப் போல் வளரட்டும் வாழட்டும் வாழ்த்துகின்றோம்.

Friday, December 21, 2012

இயேசுவின் பிறப்பில் நாம் வாழ எம்மை சாத்தியாமாக்குவோம்


23.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
திருவருகைக்காலத்தில் இருக்கும் நமக்கு, இது கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முன்னான கடைசி ஞாயிறு. இது மனித உடலேற்பு மறைபொருளான கிறிஸ்து பிறப்புக்கு அழைத்துச்செல்லுகிறது.

மத்திய அமெரிக்காவின் மறைந்து போன மாயன் நாகரீக மக்களில் நடுவில் வழக்த்தில் இருந்த  கதை ஒன்று: மனிதன் ஒருநாள் காட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். காட்டு விலங்குகள் அவனைச் சுற்றி வந்து அவனிடம், ‘நீ சோகமாக இருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை. என்ன வேண்டுமானாலும் கேள். நாங்கள் உனக்குத் தருகிறோம்’ என்றன. மனிதன், ‘எனக்கு நல்ல கண்பார்வை வேண்டும்’ என்றான். கழுகு ‘என் பார்வையை உனக்குத் தருகிறேன்’ என்றது. ‘யாரும் எதிர்க்கமுடியாத வலிமை வேண்டும்’ என்றான். ஜகுவார், ‘நான் தருகிறேன்’ என்றது. ‘பாதாளங்களின் இரகசியத்தை அறிய வேண்டும்’ என்றான். பாம்பு, ‘அதை நான் உனக்குக் காட்டுகிறேன்’ என்றது. எல்லா விலங்குகளும் தன் ஆற்றலை இப்படியாக மனிதனுக்குத் தந்தது. எல்லா ஆற்றல்களையும் பெற்ற மனிதன் எழுந்து புறப்பட்டான். அப்போது மான் மற்ற விலங்குகளைப் பார்த்து, ‘மனிதன் இப்போது எல்லாவற்றையும் பெற்று விட்டான். இனி அவனிடம் சோகம், வருத்தம் இருக்காது’ என்றது. அதற்கு ஆந்தை மறுமொழியாக, ‘இல்லை, மனிதனின் மனத்தில் ஒரு துவாரத்தை, வெற்றிடத்தை நான் பார்த்தேன். அது ஒரு தணிக்க முடியாத பசி. அது அவனுக்கு சோகத்தைத் தரும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அவன் எல்லாவற்றையும் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டேயிருப்பான். ஒருநாள் இந்த பூமி சொல்லும்: ‘இதற்கு மேல் நீ எடுத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமேயில்லை’. மனிதனின் தேடலை, தேடல் தருகின்ற ஏமாற்றத்தையும், ஏக்கக்தையும், தாகத்தையும், பசியையும், விரக்தியையும் வெளிப்படுத்துகின்ற ஒரு கதை இது.

வாழ்வில் நிகழ்வுகள் எம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகச் செல்லும்போதும், வாழ்வின் நிகழ்வுகள் எம் அமைதியைக் குலைக்கும்போதும், நாம் செல்கின்ற பாதை தெளிவாக இல்லாத போதும் நாம் நினைத்துக்கொள்ளுவத கடவுள் இல்லை. ஆனால் “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது.” என்று எம்மிடம் வரும் இயேசு கூறுகின்றார். எல்லாவற்றையும் கொண்டு வெற்றிடத்தை நிரப்பத் துடிக்கும் எமக்கு ஒரு நிறைவான வழியைக் காட்டுகின்றார் இயேசு. அவரது ஒளியில் நாம் எப்போதும் நடக்க வேண்டுமெனில், இறை வார்த்தையின் வழி நடக்க வேண்டும்.

அநீதியான ஆடம்பரச்  செயல்கள், இரக்கமற்ற அதிகாரம், நியாயமற்ற பொருளாதார நெருக்கடி எனக் கூக்குரலிடும் உலகின் பல பகுதிகள், இயேசுவின் போதனையில் உண்மை அர்த்தத்தைக் காண முடியும். நீதியும்-பிறரன்பும், உண்மையும்-நேர்மையும், அதிகாரமும் - மதித்தலும் ஒன்றுக்கொன்று இணைந்து செல்ல வேண்டும். அத்துடன்  எம் வார்த்தைகள் இன்றும் நம் வாழ்வுடன் இயைந்து செல்பவைகளாக இருக்கவேண்டும். இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். இன்று அளவுக்கதிகமாக வைத்திருக்கும் நிலை, மற்றும், அளவுக்கதிகமாகத் துன்புறும் நிலை என்ற இந்த இரு நிலைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நீக்குவதற்கு நீதி எமக்கு அழைப்பு விடுக்கிறது. நேர்மையுடனும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமலும், அயலவர்மீது அன்புடனும் நடக்க வேண்டியத் தேவையில் நாம் உள்ளோம்.

நுகர்வுக் கலாச்சாரத்தில் தன் மகிழ்வைத் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில், கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் காத்திருந்து எவ்விதம் கொண்டாடப்போகின்றோம் என்பது ஏக்கம் நிறைந்த கேள்வி வருகையும், காத்திருத்தலும் நமது அன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வருகை மகிழ்ச்சியையும், காத்திருத்தல் நம்பிக்கையுடன் கூடிய சுகத்தையும் தருகிறது. நாம் பலவேளை பலரின் வருகைக்காக காத்திருந்தபோது  ஏமாற்றம்தான் எஞ்சியிருந்தது. ஆனால் இறைவாக்கினர்கள் வாயிலாக பேசிய இறைவன் இறுதியிலே மனித உரு நமக்காக நம்முடன் வாழ வருகின்றார்;. அவர் நம்மிடம் கேட்பது என்ன? அன்பு மட்டும்தான் அதைத் தர நமது மனம் ஏன் மறுக்கிறது? இறையன்பும், பிறரன்பும்தானே நாம் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள். என்னை அன்பு செய் இறையன்பு, உன்னை அன்பு செய்வதுபோல் உன் அயலானையும் அன்பு செய் பிறரன்பு இவைதானே இயேசு நமக்கு கொடுத்த கட்டளைகள். இதனை கடைபிடிக்க நாம் தவறுவது ஏன்? காரணம் சுயநலம்.

கலாசாரமும், பண்பாடும் அழியும்போது, அட்டூழியம் எங்கும் மிளிரும்போது, அரசியலும், சினிமாவும்தான் வாழ்க்கை என்றாகும் போது, குடி, போதை, சீரியலுக்கு அடிமையாகும்போது, இன்னும் பல போதுக்களோடு நாம் வாழும்போது இயேசுவின் பிறப்பு நம்மிலே எப்படி சாத்தியமாகும்.

இருளிலும் இறப்பின் பிடியில் இருப்போருக்கு ஒளிதரவும் நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும், விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது எனவே இயேசுவின் பிறப்பில் நாம் வாழ எம்மை சாத்தியாமாக்குவோம்

Thursday, December 13, 2012

உண்மை வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாவோம்

16.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

இன்று நாம் சந்திப்பு. பற்றி சிந்திக்கலாம்  சந்திப்புகள் பலவிதம். புனித பிலிப் நேரி வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம். புனித பிலிப் நேரி ஒருநாள் நண்பர்களுடன் பொழுதுபோக்காக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப் பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் அவரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்." என்றாராம். பிலிப் நேரியாரைப் போல் எந்தவித பயமும் இன்றி இறைவனைச் சந்திக்க நாம் என்ன செய்ய வேண்டும்? நல்ல கேள்வி: இதே கேள்வியைத் தான் மக்கள் திருமுழுக்கு யோவானிடம் எழுப்புகிறார்கள். இறைவனைச் சந்திக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று யோவானைச் சுற்றி இருந்த மக்கள் தேட ஆரம்பித்தனர்.

இந்தக் கேள்விக்கு நாம் பதில் தேடு முன்பு, திருமுழுக்கு யோவானைச் சுற்றி நின்ற கூட்டத்தில் இருந்தவர்கள் யாவர் என நோக்கினால்: மக்கள், வரிதண்டுவோர்;, படைவீரர் என நற்செய்தி சொல்கின்றது. ஆனால், ஒரு முக்கிய குழுவைப் பற்றி இன்றைய நற்செய்தியில் இல்லை. ஆனால், அவர்கள் கட்டாயம் அந்தக் கூட்டத்தில் இருந்திருக்க வேண்டும். யார் அவர்கள்? மதத் தலைவர்கள் தான் அவர்கள். யோவானின் புகழ் பரவி வந்ததை அவர்களும் அறிவர். யார் இந்த மனிதர்? என இவரைத் தேடி பாலைவானத்திற்கே மக்கள் போகிறார்கள் என்றால் தங்கள் கேள்விகளுக்கு விடை தேடி அந்த மதத் தலைவர்களும் அங்கு வந்திருப்பர்.

இந்த கூட்டத்தில் யோவான் இறைவனின் வரவை, இறைவன் வார்த்தையை எடுத்துக் கூறுகிறார். இடித்துக் கூறுகிறார். யோவான் சொன்னதைக் கேட்ட மக்கள், வரிதண்டுவோரும், படைவீரர் இவர்கள் நடந்து கொண்டது ஒரு விதம். மதத் தலைவர்கள் நடந்து கொண்டது வேறு ஒரு விதம். கண்ணாடியில் தெரியும் உருவம் சரியில்லை என்றால், கோபத்தில் கண்ணாடியை உடைப்போமா? உடைத்தார்கள் அந்த மதத் தலைவர்கள். யோவான் வாழ்ந்த தவ வாழ்வு, அவரது போதனை எல்லாம் மதத் தலைவர்களின் முகமூடிகளைக் கிழித்து அவர்களது உண்மை உருவைக் காட்டும் கண்ணாடியாக இருந்தது. தங்கள் வாழ்வைச் சங்கடபடுத்தும் இந்த உண்மையை ஊமையாக்க ஒரே வழி? இந்தக் கண்ணாடியை உடைக்க வேண்டும். மதத்தலைவர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். உண்மையை ஊமையாக்க வேண்டும், உண்மை வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளை உடைக்க வேண்டும் என திட்டம் போட்டனர்.

மதத் தலைவர்களுக்கு மாறாக, தங்கள் வாழ்வின் உண்மை நிலையைக் காட்டிய யோவானிடம் மக்கள், வரிதண்டுவோர்;, படைவீரர்  மீட்படையும் வழி கேட்டார்கள். ஏக்கம் நிறைந்த கேள்வி: நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் இறைவனைச் சந்திக்க என்ன செய்யவேண்டும்? சாக்குத் துணி அணிந்து, சாம்பல் பூசி, சாட்டைகளால் உங்களையே அடித்துக் கொண்டு கடும் தவம் செய்யுங்கள்." யோவான் இப்படி சொல்வார் என்று எதிர்பார்த்திருந்தனர் அந்த மக்கள். ஏனெனில் யோவானே அத்தகைய கடும் தவங்களைச் செய்து வருகிறவர். ஆனால், யோவான் கூறிய பதில் மிக எளியது:

பிரச்சனைகளுக்கான தீர்வை இயேசுகிறிஸ்துவுடன் நாம் கொள்ளும் ஒன்றிப்பிலேயேக் காணமுடியும், ஏனெனில் அதுவே அன்பு மற்றும் உண்மையை அடிப்படையாகக்கொண்ட வழிகளும் நடவடிக்கைகளும் உருவாகக் காரணமாகிறது. இறைவன் மீது கொண்டுள்ள தாகத்தை நினைவில்கொண்டு, உள்மன வாழ்வைத் தூய்மைப்படுத்தி, பலப்படுத்தவேண்டும்.

மனித குலம் அனைத்தும் ஆண்டாண்டு காலமாக எதிர்நோக்கியிருந்த ஒரு முடிவற்ற புதிய உடன்படிக்கையைக் குறித்து இறைவாக்குனர்கள் வழியாகக் கற்றுக்கொண்டனர். மனித வரலாற்றில் படிப்படியாக உணரப்பட்டு வடிவம் பெற்று வந்த இத்தெய்வீகத்திட்டம், இறைமகன் மனுவுருவெடுத்த இயேசுகிறிஸ்துவின் வருகையில் தான் உச்சநிலையை அடைந்தது. இந்த திருவருகைக்காலத்தில் இறைவனின் மீட்புத்திட்டம் படிப்படியாக வெளியிடப்பட்டதை ஆழ்ந்து தியானிப்போம், கிறிஸ்துவில் இறைவன் நம் அருகே நெருங்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வோம்;. பெத்லகேம் குடிலை நிறைத்த மகிழ்வு மற்றும் ஒளி நம் வாழ்வின் வழியாக தன் கதிர்களைப் பரப்பி, இறைபிரசன்னத்தை உணர்ந்ததன் சாட்சிகளாக விளங்குவதற்கு, இவ்வுலகின் கவனச்சிதறல்கள், மனக்கலக்கங்கள் மற்றும் மேம்போக்கான நிலைகள் போன்றவைகளின் மத்தியிலும் நம்பிக்கையையும், நற்செய்தியையும் வாழ்வாக்குவோம்.

Thursday, December 6, 2012

பண்டிகைக்கால வர்த்தகத்திலோ வலைப்பின்னலின் வழுக்கல்களுக்குள்ளோ சறுக்கிவிடாமல் ஆண்டவருக்காக நாம் காத்திருப்போம்.

09.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்

மனித உடலேற்பு மறைபொருளான கிறிஸ்து பிறப்புக்கு அழைத்துச்செல்லும்  திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இது கடவுளின் வருகையை, உலகில் அவரது உடனிருப்பைக் குறித்து நிற்கிறது. அனைத்துலகையும் வரலாற்றையும் உள்ளடக்கிய இந்த மறை பொருளில் இரண்டு அம்சங்கள் உள்ளன: இயேசு கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாம் வருகை. இறைமகன் இயேசுவின் பிறப்பு நம் இல்லங்களில் நிகழ வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பில் இல்லத்தை அலங்கரிக்கும் நிகழ்வுகள் இக்காலங்களில் இடம்பெற்று வருகின்றன. கிறிஸ்மஸ் பண்டிகைக்கால வர்த்தகம் சூடு பிடிக்க புதிது புதிதாக எதுவெல்லாமோ சந்தையில் குவிகின்றன. உறவுகளை ஊக்குவிக்கும் முடிவற்ற வலைத்தொடர்புகளும், சமூகத் தொடர்புகளும் இன்றைய உலகில் குவிந்து காணப்பட அனைத்தையும் அனுபவித்து வாழத்துடிக்கும் இன்றைய உலகின் சுயநலக் கொள்கைகள் மனிதரின் மாண்பைக் கீழ்மைப்படுத்துவதாகவே அமைய நம்; மனங்கள் அதனூடேயும் பயணிக்கின்றன. அதனால் பெரும்பான்மை நேரங்களில் நாம் தனிமையின் வெறுமையை உணர்கின்றனர்.

இத்தகைய நிகழ்வுகள் கிறிஸ்மஸ் பெருவிழாவின் உண்மைப் பொருளை உலகிடமிருந்து மறைப்பதற்குத் துணைபோகின்றன. கிறிஸ்மஸ் ஒரு களியாட்டமாக கொண்டாடவே நாம் முனைவது உண்மையாகிறது. நம் மீட்பரின் வருகையை முன்குறித்து பாலைவனத்தின் அறிவிப்புக் குரலாய் திருமுழுக்கு யோவான் செயற்பட்டார். மனந்திரும்புங்கள். கடவுளின் அரசு தெருங்கியுள்ளது என அவர் மக்களை ஆயத்தப்படுத்தினார். மனமாற்றமடைந்து இறைவனை நாடவேண்டுமென்பதே அவரது வேண்டுகோளாயிருந்தது. அவரது குரலைக் கேட்டவர்களும், அவரைப் புறந்தள்ளியவர்களும் இருந்தனர். அவரது குலைக் கேட்டு மீட்படைந்தவர்களும் உள்ளனர். இன்றைய உலக அவலங்கள், பிரச்சினைகளுக் கெல்லாம் காரணம் மக்கள் இயேசுவின் போதனைகளைக் கைக்கொண்டு நடக்காமையே எனலாம்.

ஆன்மிக வரட்சியுடனான மக்கள் மனங்கள் விசுவாசங் கொள்ளாத ஒரு காலகட்டத்தில் திருமுழுக்கு யோவானின் இச்செய்தி அக்கால மக்கள் மனதில் பசுமரத்தாணியாக பதிந்தது. இன்றும் உலகெங்கிலும் இடம்பெறும் பிரச்சினைகள், வன்முறைகள் சமூகச் சீர்குலைவுகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆன்மிக வறுமையே முக்கிய காரணம். 'என்னைத் தேடுங்கள் சகலதும் உங்களைத் தேடிவரும். கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படுமென்று" கிறிஸ்து போதித்ததை இக்காலத்தில் நாம் சிந்திப்பது அவசியம்.

கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாம் திருமுழுக்கு யோவான் போல் மனந்திரும்புதலுக்கான அறிவிப்பை இன்றைய சமுதாயத்தில் தெரிவிக்க வேண்டியது அவசியம். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: 'ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் பண்ணுங்கள், அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள். பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும். மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானவை நேராக்கப்படும், கரடுமுரடானவை சமதளமாக்கப்படும் மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்".

எனவே இறைவருகைக்கான எமது ஆயத்தம் இதய நெருடல்களாக எம்மனங்களில் பதிந்துள்ள ஏக்கம், துயரம், பாவநிலைகள் என்ற பள்ளத்தாக்குகளை இல்லா தொழித்து மன நிம்மதி, மகிழ்ச்சி, அன்பு, தாழ்ச்சி, விட்டுக்கொடுப்பு என்ற கடவுளின் அருளால் நிரப்பப்படவேண்டும். சுய நலம், வைராக்கியம் என்ற குன்றுகளும் மலைகளும் நம் மனங்களில் தலைதூக்கி நிற்கும் போது, அவை கடவுளின் அருள் நமக்குக் கிட்டுவதற்கான தடைகளாக அமையும்.

இதனால் எம் சிந்தனைகள் நேரற்ற கோணலாகவும் கடும் போக்கினால் உள்ளம் கரடுமுரடாகவும் காணப்படுகின்றது. இவற்றை எம்மிலிருந்து களைந்து தாழ்ச்சியை பொறுமையயை பிறர் அன்பை பிறருக்கு உவந்து உதவுவதை இத்திருவருகைக் காலத்தில் மேற்கொள்வோம். பண்டிகைக்கால வர்த்தகத்திலோ வலைப்பின்னலின் வழுக்கல்களுக்குள்ளோ சறுக்கிவிடமல் 'ஆண்டவருக்காக நான் காத்திருக்கிறேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். விடியலுக்காகக் காத்திருக்கும் காவலரைவிட என் நெஞ்சம் என் தலைவருக்காய்க் காத்திருக்கின்றது. கடவுள் நம்பிக்கையில் தான் உயிர்வாழ்ந்திருப்பர்." என்று கத்திருப்போம்.

அத்துடன் கிறிஸ்துவின் வருகையை நம் வாழ்வால் புதிய நற்செய்தி அறிவிப்பின் வடிவாக வாழ்வோம் அனைவரிடையேயும் அமைதியையும் வளர்க்கும் முயற்சிகளில் பங்கேற்போம் அப்போது கரடு முரடான கோணல் மிக்க நம் வாழ்வு கடவுள் அருளும் மீட்பைக் காண்பது உறுதியாகும்.

Monday, November 26, 2012

நாம் மனம் மாறி மனம்மாற்றுவோம்.

02.12.2012
ம.பிரான்சிஸ்க் - கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
இன்று நாம் திருவருகைக் காலத்திற்குள் காலடி எடுத்து வைக்கின்றோம். திருவருகைக் காலம்'  எதிர்நோக்கிக் காத்திருக்கும்" காலம் என்று அழைக்கப்படும். ஆதனால் என்னவோ நம் வாழ்வு சார்ந்த எதிர்பார்ப்பும் திருவருகைக் காலத்தில் தெரிகிறது. மனிதரிடையே சண்டை சச்சரவும் அராஜகமும்  மறைந்து அமைதி நீதி நிலவும் புதியதொரு காலம் மலரும் என்பது நம் எதிர்பார்ப்பு. நீதிக்கு அநீதி தீர்பிடும்காலமும் ஆயுதப் பயிற்சிக்கு ஆட்களை சேர்க்கும் காலமும் இராணுவச் செலவுகள் அதிகரிக்கும் காலத்திலும்  கிறிஸ்துவின் வருகையால் அனைத்து அட்டூழியம் மறைந்து அமைதி நீதி நிகழும் என்பது நம் நம்பிக்கை.

2007ம் ஆண்டு உலகின் பல நாடுகளும் இராணுவத்திற்கென செய்த செலவு 5,850,000 கோடி ரூபாய். (1.339வசடைடழைn னுழடடயசள) அதே ஆண்டு ஐ.நா. அமைப்பு மேற்கொண்ட அத்தனை மனித சமுதாய முன்னேற்ற முயற்சிகளுக்கும் ஆன செலவு (4.2 டிடைடழைn னழடடயசள) ஆகும். எனவே உலக அரசுகள் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையில் பாதித் தொகையை, அல்லது, பத்தில் ஒரு பங்குத் தொகையை ஏழைகளுக்குச் செலவிட்டால், உலகின் வறுமையைப் பெரிதும் குறைக்கலாம்.
2007 அமெரிக்கத்தலைவர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது வாண வேடிக்கைகளுடன் அவர் வரவை கொண்டாடினர். அவரது பயணத்தின் ஒரு முக்கிய காரணம்? அமெரிக்காவின் இராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பதற்கான வழிமுறைகளைக் கண்டு பிடிப்பதாகவே இருந்தது என ஊடகங்கள் சில குறிப்பிட்டன. இவ்வாறு பல பில்லியன் டாலர்களை இராணுவத்திற்காகக் கரியாக்கும் நிகழ்வு உலகில் இன்றும் நடந்தவண்ணம் உள்ளது. 

இன்று இராணுவத்தைப் பற்றி; பேச காரணம் முதல் வாசகத்தில். எசாயா இறைவாக்கினர் இறுதி நாட்கள் குறித்து காணும் ஒரு அழகான கனவு தரப்பட்டுள்ளது தான்: 'அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்."
வாள்கள் கலப்பை கொழுக்களாக மாறும். ஈட்டிகள் அறுவடை செய்யும் அரிவாள்கள் ஆகும். உயிர்களை அறுவடை செய்யும் படை வீரர்கள் பயிர்களை அறுவடை செய்யும் அற்புதமானப் பணியில் ஈடுபடுவார்கள். போர் பயிற்சிகளுக்குப் பதிலாக, ஏர் பிடித்து உழுகின்ற பயிற்சிகள் நடைபெறும். இந்த அற்புதமான, அழகான கற்பனை, எம்மை; நம் குழந்தைப் பருவத்திற்கு, வாலிபப் பருவத்திற்கு  அழைத்து செல்லும் கற்பனையைப் போன்றது. இவைகள் கற்பனைகளாக, கனவுகளாக மட்டுமே இருக்க முடியும். நனவாக மாறவே முடியாது என்று நம்மில் பலர் தீர்மானித்து விட்டோம். எனவே, இப்படி ஒரு காட்சியை நினைத்துப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விடலாம், அல்லது ஒரு விரக்தி சிரிப்பு சிரிக்கலாம். நமது ஏக்கத்திற்கும், விரக்திக்கும் காரணம் உள்ளது. எசாயாவின் கனவில் போர் கருவிகள் விவசாயக் கருவிகளாக மாறுகிறது. நாம் வாழும் சூழலில் விவசாயக் கருவிகள் போர் கருவிகளாக மாறி வருகின்றன. பயிர்களை அறுவடை செய்யும் அரிவாள் உயிர்களை அறுவடை செய்யும் கொடூர கருவிகளாகின்றன.

இத்த திருவருகை காலத்தில் இயேசுவின் வருகைக்கு எம்மை சரியான முறையில் ஆயத்தப்படுத்துவோம். ஆமிப்பயிற்சிக்கு ஆட்களை சேர்ப்பதை தவிர்த்து அன்பியப்பயிற்சிக்கு ஆட்களை சேர்க்க ஆயத்தமாவோம். இயேசுவின் பிறப்பு ஆயத்தங்கள் நாம் வாழும் இன்றைய காலங்களில் எமது வெளியரங்க ஆயத்தங்களோடு மட்டும் நின்று விடுவது மிகவும் மனம் வருந்துவதற்குரிய செயலாக இருக்கின்றது. இயேசுவின் பிறப்புக் கால ஆயத்தங்கள் மற்றவர்களால் வியாபார மயப்படுத்தப்படலாம். ஆனால் கத்தோலிக்கர் என்ற சொல்லும் எமது ஆயத்தம் எவ்வாறு இருக்கின்றது? போரின் வடுக்களை தினம் கண்டு வாழும் குழந்தைகள் மட்டில் எங்களது ஆயத்தம் எத்தகையது?

இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவான எச்சரிக்கையைத் தருகிறது. எமது உள்ளங்கள் மந்தம் அடைவதற்கான மூன்று காரணிகளை இயேசு சுட்டிக்காட்டுகிறார்: குடிவெறி, களியாட்டம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலைகள். இந்த மூன்றிலும் ஈடுபடுபவர்கள் இறையாட்சியில் பங்கேற்க முடியாது என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். குடிவெறி என்பது நிச்சயமான மந்தப் பொருள். அது உடலையும், உள்ளத்தையும் மட்டுமல்ல ஆன்மாவையும் மந்தப்படுத்துகிறது. களியாட்டம் என்பதோ தேவைக்கதிகமான பொழுதுபோக்கு, உல்லாசம் போன்றவற்றைக் குறிக்கிறது. எப்போது இவை இறைவனிடமிருந்து நம்மை பிரிக்கின்றனவோ, அப்போது பொழுதுபோக்குகளும், மகிழ்ச்சி;ச் செயல்பாடுகளும்கூட களியாட்டமாக மாறிவிடுகின்றன. நம் வாழ்வைக் கொஞ்சம் ஆய்வு செய்து, குடிவெறி, களியாட்டம், உலகக் கவலைகள் நம் அகவாழ்வை மந்தப்படுத்தியுள்ளனவா என கண்டறிவோம். ஆம் என்றால், இவை மூன்றிலிருந்தும் விடுபட்டு, இறைப்பாதம் சேர்வோம்.

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff