Monday, May 25, 2020

கருத்துப் படங்கள் வெளியிடப்படுவதன் நோக்கம்

ஆக்கம்: ம.பிரான்சிஸ்க், M.A. ஆசிரியர் - தொடர்பாடல்- ஊடகவியற்கற்கை, யா-மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை




பொதுமக்களின் எண்ணப் பிரதிபலிப்பே கருத்துப் படங்களாகும். கருத்துப் படங்கள் என்பவை படத்தலையங்கங்கள் (ஆசிரியர் தலையங்க படங்கள்) எனவும் கருதப்படுகின்றன. கருத்துப் படத்திற்கு கருத்துத்தான் முக்கிய மானது. செய்தியைப் பத்திரிகையில் வெளியிடும்போது படத்தையும் சேர்த்துக் பதிவிடுவதனால் அந்த செய்தி பற்றிய அழுத்தமானப் பதிவுகள் வாசகர்கள் மனதில் எழுகின்றன. கருத்துப் படங்கள் பெருசர்களின் (வாசகர்களின்) ஆன்மாக்களில் தொடர்ந்து நீடித்த விளைவைக் கொண் டுள்ளன. கருத்துப்படங்கள் வினைத்திறனான தகவற் தொடர்பா ளர்களாக அமைகின்றன. 

கருத்துப்படங்கள் பத்திரிகை, மற்றும் இதழ்களில் வெளியிடுவதன் நோக்கம் தலையங்கச் செய்திகளை-ஆசிரியர் தலையங்கத்தை எளிமையாக படிப்ப வர்கள் புரிந்துகொள்ளச் வைப்பதற்கே எனலாம். கடினமான செய்திகளைப் படிப்பவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் கருத்துப்படம் பாவிக்கப்படுகின்றன. 

கருத்துக்கள் வெகு விரைவில் மக்களைச் சென்றடையும் வகையிலும் வாசகர்கள் அதிகச் சிரமப்படாமல் செய்திகளை உள்வாங்கிக் கொள்ளவும் கருத்துப்படங்களை இதழ்களில் பயன்படுத்துவதன் நோக்கமாகக் கொண் டுள்ளனர் என்று கூறலாம். கருத்துக்கள் மிகவிரைவில் மக்களிடம் சென்றடை யவும், வாசகர்கள் அதிக சிரமம் எடுக்காமல் செய்தியைக் கிரகித்துக் கொள்ள கருத்துப் படங்கள் பத்திரிகைகளில், இதழ்களில் பயன்படுத்து நோக்கமாகவும் உள்ளன.  



'ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினரது கருத்துரைகளையும், அரசியல், சமூகக்கேடுகளையும் பத்திகைகளில் தலையங்கமாக வெளிவரும் செய்திகளையும் படமாகக் கருத்துப் நிறைந்ததாக மக்களுக்கு வெளிப்படுத் துவதே கருத்துப்படங்களின் நோக்கமாகும்" எனக் ஏ. ஜி. வெங்கடாச்சாரி தெளிவுபடுத்துகிறார். இதனை நிருபிக்கும் விதமாகதான் பாரதியாரின் கருத்துப்படங்கள் அக்காலத்தில் இதழ்களில் வெளிவந்தன என்பதை இங்கு குறிப்பிடுவது குறையேதுமிராது. 

கருத்துப் படங்கள் ஆசிரியர் தலையங்கக் கருத்தினை வெளிச்சம் போட்டு அதன் பக்கம் சாய்ந்ததாக அதாவது அவை வார்த்தைகளில் அல்ல, மாறாக  ஓவியங்கள் மற்றும் கோடுகள் மூலம் இருப்பதாகவும் கருதப்படுகின்றன. அவை சமூக மாற்றங்கள், தவறுகள், தோல்விகள், வெற்றி, சாதனைகள் மற்றும் முக்கிய சமகால நிகழ்வுகள் பற்றிய ஒரு வகையான வர்ணனை யாகவும் அமைகின்றன. இவை பத்திரிகையின் முதற்பக்கத்திலும் வெளி வருகின்றன.  

முக்கிய நிகழ்ச்சிகளின் படங்கள், பத்திரிகைகளில்; வெளிவருவது நாளாந்தம் நடைமுறையாகுகின்றது. நிகழ்ச்சிகளின் படங்கள், நிகழ்கின்ற சம்பவங்களை அருகிலிருந்து பார்ப்பது போன்ற ஓர் உணர்வினை ஏற்படுத்து கின்றன. அதனாலேதான் புகைப்படங்கள் மட்டுமன்றி, பல்வேறு விதமான படங்கள் நாளிதழ்கள் மற்றும் இதழ்களில் வெளிவந்து கொண்டிருகின்றன. இவ்வாறு வெளியாகிக் கொண்டிருக்கும் படங்களுள் கருத்துப்படங்களும் சிறப்பாக வெளிவருகின்றன. 



தொடரும்…

உசாத்துணை நின்றவை:-
  1. https://www.quora.com/Why-are-there-cartoons-in-newspapers,Accessed on 16.05.2020
  2. முனைவர்: ச.ஈஸ்வரன் மற்றும் முனைவர்: இரா. சுபாபதி, இதழியல், முதற்பதிப்பு, டிசம்பர் 2004,பாவை பப்ளிகே~ன், சென்னை600004. 
  3. அருள்திரு ரூபன்மரியாம்பிள்ளை, பத்திரிகை இயலுக்கு ஓர் ஆறிமுகம், முதற்பதிப்பு 26 டிசம்பர் 2001, புனித வளன் கத்தோலிக்க அச்சகம், யாழ்ப்பணம்.
  4. http://www.muthukamalam.com/essay/general/p139.html,Accessed on 16.05.2020
  5. https://prezi.com/7qlln30f99xy/why-are-cartoons-so-important/,Accessed on 16.05.2020
  6. https://askopinion.com/do-you-love-daily-cartoons-in-newspapers,Accessed on 16.05.2020


No comments:

Chistmas wish

Chistmas wish
I wish you a happy christmas

About Me

My photo
I am Mr Frank. I am a UN staff